மூன்று மாதங்களுக்கு முன்னர் விக்னேஸ்வரன் ஒரு குழப்பவாதி என்று வர்ணித்த தினக்குரல் இப்போது அவருக்கு குடைபிடிக்கிறது!

 

மூன்று மாதங்களுக்கு முன்னர் விக்னேஸ்வரன் ஒரு குழப்பவாதி என்று வர்ணித்த தினக்குரல் இப்போது அவருக்கு குடைபிடிக்கிறது!

நக்கீரன்

கொழும்பில் இருந்து வெளிவரும்  தினக்குரல் என்ற நாளேடு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு  நீலிக் கண்ணீர் வடிக்கிறது.

இது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது. மேலும்  மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் என திரனக்குரல்   புலம்புகிறது. இதை எப்படித்  தினக்குரல் கண்டு பிடித்தது?

தேர்தலின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடுநிலைமை வகிக்கப் போகிறேன் என்று சொன்னது கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகும். இதே போன்ற குற்றச் சாட்டில்தான் அனந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து Wicki2PremanandanewPremanandaphoto4அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அனந்திக்கு ஒரு நீதி  விக்னேஸ்வரனுக்கு இன்னொரு நீதி என்பது சரியாக இருக்காது. அது அநீதி!

தேர்தலில்  நடுநிலைமை வகிக்கப் போவதாக விக்னேஸ்வரன் சொன்னார்.  இதனை –

        (1) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  இருக்கும்   நான்கு கட்சிகளில் தான் ஒரு கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை எனச் சொன்னதாக பொருள் கொள்ளலாம்.

        (2) தேர்தலில் போட்டிபோடுகிற இபிடிபி, தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணி, ததேகூ ஆகிய கட்சிகளில் தான் ஒரு கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் பொருள் கொள்ளலாம்.

ததேகூ தனித்தனியாக தேர்தல் கூட்டங்களை வைக்கவில்லை. நான்கு கட்சிகளையும் உள்ளடக்கிய தேர்தல் பரப்புரைக் கூட்டங்களையே நடத்தியது. விக்னேஸ்வரன் ஒரு நேர்மையானவராக இருந்திருந்தால் – ஒரு சத்தியவானாக இருந்திருந்தால்  “மக்களே உங்கள் வாக்குகளை ததேகூ க்கு போடுங்கள். உங்கள் விருப்பு வாக்குகளை உங்களுக்குப் பிடித்த  வேட்பாளர்களுக்குப் போடுங்கள்” என்று கூறியிருக்கலாம்.  கூறியிருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர் வாக்காளர்களைத் தனது அறிக்கை மூலம் குழப்பினார்.

இது பற்றி இதே தினகரன் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஏட்டுக்கு ஒரு செவ்வி வழங்கியிருந்தார். அந்தச் செவ்வியை “தமிழ் வாக்காளர்களைக் குழப்பும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்” என்ற தலைப்பில் தமிழ்வின், லங்கா முஸ்லிம் போன்ற இணையதளங்கள்  வெளியிட்டிருந்தன. இப்போது சுமந்திரன் மீது சன்னதம் கொண்டு ஆடும் தினக்குரலின் ஆசிரியர் அப்போது என்ன சொன்னார்?

 வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வாக்காளர்களைக் குழப்பும்     வகையில் அமைந்துள்ளதாக, கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம்            தெரிவித்துள்ளார்.

 வடக்கு மாகாண முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரசுக்கு கருத்து                        வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வெற்றி பெற்ற விக்னேஸ்வரனுக்கு, அதனை ஆதரிக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு உள்ளது.

அவர் நடுநிலை வகிப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவர் குறிப்பிட்ட கட்சி ஒன்றுக்குப் பின்னால் இருப்பதாகத் தெளிவாக இருக்கிறது.

அவரது நிலைப்பாடு வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் ஆதரவு அவசியம் எனக் கருதுவதாகவும் ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், விக்னேஸ்வரனின் அறிக்கை மேற்குலக ஆதரவு தேவை என்பதை மட்டும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ஆனால் இந்தியாவைப் புறக்கணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.( https://lankamuslim.files.wordpress.com/2010/01/vic.jpg)

தேர்தல் காலத்தில்  விக்னேஸ்வரன் அவர்களது  போக்கு எப்படி  இருந்தது?

        (1)   தான் நடுநிலைமை வகித்தால் ததேகூ தேர்தலில் தோற்றுவிடும் என்று  எதிர்பார்த்தார்.

       (2)   கனடாவுக்கு நிதி சேகரிக்கச் செல்வதை தவிர்த்ததன் காரணம் அவரது உடல் நிலையல்ல. அவர்  அமெரிக்கா வரை வந்தவர்.  அங்கிருந்து சில மணித்தியாலயங்களில் கனடா சென்றுவிடலாம். ததேகூ (கனடா) திரட்டுகிற பணத்துக்குக்  கணக்குக் காட்டுவதில்லை என்று மருத்துவர் சத்தியலிங்கத்துக்குச் சொன்னது அவர் இட்டுக்கட்டிக் கூறிய பொய்.  தன்னை வைத்து ததேகூ நிதி சேகரிக்கக் கூடாது என்பதுதான் அவரது திட்டமாக இருந்தது.

       (3)   விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்துவதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. மாவை சேனாதிராசாவுக்கு எல்லாக் கட்சிகள் மத்தியிலும் ஆதரவு இருந்தது.  திரு சம்பந்தர்தான் விக்னேஸ்வரனை சம்மதிக்க வைத்தார். பிள்ளையார் பிடிக்க அது குரங்காக மாறும் என அவர் சற்றும்  எதிர்பார்க்கவில்லை.   தெருவில் போகிற சனியனை விலைக்கு வாங்குவதாகவும் அவர் நினைக்கவில்லை.

      (4)   தமிழ்அரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்திலேயே சுமந்திரன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அந்தக் கூட்டம் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலேயே நடந்தது. தினக்குரல் இப்போது அந்தச் செய்தி தலைவருக்கு தெரியாது எனக் கயிறு திரிக்கிறது.

      (5)   வட மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை தமிழ் அரசுக் கட்சிதான் வேட்பாளாராக நிறுத்தியது. தமிழரசுக் கட்சிதான் அவரது தேர்தல் செலவையும் பொறுத்துக் கொண்டது.  ஒரு கட்டத்தில் அனந்தி தன்னை முந்திவிடுவாரோ என்ற பயம் விக்னேஸ்வரனைப் பிடித்துக் கொண்டது.  அப்படி ஏதும் நடக்காது என சுமந்திரன் போன்றவர்கள்தான் அவருக்குத் தண்ணி தெளித்துத்  தேற்றினார்கள்.  விக்னேஸ்வரன் இப்போது நடுநிலைமை பற்றிப் பேசுவது அப்பட்டமான ஏமாற்று வேலை.  உண்ட வீட்டுக்குச் செய்யும் இரண்டகம். ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் ஈனத்தனம். அன்னமிட்ட கையை, அவரை உயர வைத்த கையை கடித்தது போன்றது.  செய்த உதவியைக் கொல்வதை, மறப்பதை, துறப்பதைப் போலும் பாவம் வேறு ஏதும் இல்லை.

     (6)   பிரதமர் இரணில் விக்கிரமசிங்க 45 உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு பிரதமராக இருக்கிறார். இவரது கட்சி மாமன் – மருமகன் கட்சி என்று எந்த தேவையும்  இல்லாமல்  எள்ளி நகையாடி பிரதமரின் நட்பைக் கெடுத்துக் கொண்டவர் விக்னேஸ்வரன். இதன் மூலம் அவர் (1) இராஜதந்திரம் என்பது சுத்த சூனியம் அது தன்னிடம் இல்லை என்பதை எண்பித்தார். (2) வட மாகாண மக்களுக்கு இரண்டகம்  இழைத்தார். முதலமைச்சராகப் பதவி ஏற்றபோது விக்னேஸ்வரன் என்ன சொன்னார்?

  “என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன். என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவி. தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.” கிட்டிய நோக்கும் தூரநோக்கும் என்னவாயிற்று? ஒரு நாட்டின் பிரதமரைப் பகைத்தது அவரது தன்முனைப்பையே காட்டுகிறது.

    (7)   யூஎன்டிபி கொழும்பு வதிவிடப் பிரதிநிதி சப்பினே நந்தி (Subinay Nandi) வடக்கில் ஒரு பாரிய மேம்பாட்டுத் திட்டத்துக்கு 1500 மில்லியன் டொலர்களை உதவ முன்வந்தது. ஆனால் அந்தத் திட்டத்தின் சிறப்பு அலுவலராக (Special Officer) தனது மருமகன் கார்த்திகேயன் நிர்மலனை (முதலமைச்சரின் நாட்காட்டி செயலாளர், நிறைவேற்று உதவியாளர் மற்றும் அரசியல் ஆலோசகர்)   மாதம் 5,000 டொலர் சம்பளத்தில் (செலவுகள் வேறு) நியமிக்குமாறு விக்னேஸ்வரன் அழுங்குப் பிடியாக நடந்து கொண்டார். ஐநா அப்படியான பதவிக்கு நியமிப்பதற்கு ஒரு நடைமுறையை வைத்திருக்கிறது, அதற்கு அமையவே நியமனம் செய்யப்படும் என சப்பினே நந்தி  விக்னேஸ்வரனுக்கு  தெரிவித்திருந்தார். இதனால் வெகுண்டெழுந்த விக்னேஸ்வரன் அந்த நிதியுதவியே  மேவையில்லை எனப் பதில் எழுதிவிட்டார். இது விக்னேஸ்வரனுக்கு இராஜதந்திரம் சூனியம் என்பதையும் மக்களது நலனைவிட தனது உறவினரின் நலனே பெரிது என்று நினைப்பதை உறுதிப்படுத்தியது.        (8)  விக்னேஸ்வரன் தன்னை ஒரு ஆன்மீகவாதியாகவும் சமூக மறுமலர்ச்சிக்கு பாடுபடும் ஒரு சமூக சேவையாளராகவும் சொல்லிக் கொள்கிறார். ஆனால் ஆன்மீகவாதி விக்னேஸ்வரனது  குரு யார் தெரியுமா?

13 பெண்பிள்ளைகளின் (இவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். அதில் மூவர் 16 அகவைக்கு குறைந்தவர்கள்) கற்பை தனது காமப் பசிக்கு  இரையாக்கிக் கொண்ட சுவா(ஆசா)மி பிரேமானந்தா!  இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும் பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட  பிரேமானந்தாவால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் அப்போது வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதிமன்றத்தில் அறிவியல் (டிஎன்ஏ)  ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.

     மேலும் பிரேமானந்தாவின் லீலைகளைத் தட்டிக் கேட்ட இ ரவி என்ற இளைஞனை அடித்துக் கொலை செய்த பின்னர் ஆச்சிரமத்திலேயே புதைத்தது சாட்சியங்களோடு எண்பிக்கப்பட்டது.  கொலை மற்றும் பாலியல் வழக்குகளில் சிக்கிய பிரேமானந்தா, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, அவருக்கும் ஏனைய மூவருக்கும் 1997 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நீதிமன்றத்தினால் இரட்டை ஆயுள் தண்டனை (Two consecutive life sentences)  விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்பிள்ளைகளுக்கு இழப்பீடாக பிரேமானந்தாவுக்கு 66.4 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. இவருக்கு உதவிய கமலானந்தாவுக்ககு பிரேமானந்தா போலவே அடுத்தடுத்து இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  பாலன், சதீஸ், நந்தா  ஆகிய மூவருக்கும் ஒற்றை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நால்வரும் தற்போது தமிழ்நாடு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நால்வரையும் விடுதலை செய்யுமாறு விக்னேஸ்வரன் கடந்த 14-03-2015 அன்று இந்தியப் பிரதமர் மோடிக்கு வட மாகாண சபையின் கடிதத் தலைப்பில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய  கடிதம்  இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா அப்போது  செய்தி வெளியிடடது.Premanandanew

    அந்தக் கடிதத்தில் பிரேமானந்தாவுக்கு உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய இராம் ஜெத்மாலினி  தனது நண்பர் என்றும் அவருக்கு   பிரேமானந்தாவுக்கு எதிரான வழக்கு பொய்யான வழக்கு என்பது தெரியும் என்றும்  குறிப்பிட்டிருந்தார். அதாவது புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.   பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தாலும் பிரேமானந்தாவின் மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அந்த வழக்கில் சாட்சியம் சொன்ன விக்னேஸ்வரனுக்கு நீதிபதிகள் குட்டு வைத்தனர். அவரை நீதிபதிகள் கற்பனாவாதி (Wishful thinker) என வர்ணித்தனர்.

    இதில் இருக்கும் பெரிய சோகம் என்னவென்றால்  இந்த பாலியல் சாமியார் பிரேமானந்தாவுக்கு விக்னேஸ்வரன்ஆண்டுதோறும் குரு பூசை செய்கிறார். மாங்குளத்தில் ஒரு கோயில் கட்டியிருக்கிறார். அங்கு பூசைசெய்ய ஒரு ஐயர் அமர்த்தப்பட்டுள்ளார். மேலும் விக்னேஸ்வரன் முதலமைச்சராகப் பதவி ஏற்றபின்  கடந்த ஆண்டு நொவெம்பர்  07 இல் தமிழ்நாட்டுக்குப் போனபோது அவர்  நேரே  புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை  அடுத்த பாத்திமாநகரில் உள்ள பிரேமானந்தா ஆச்சிரமத்துக்கு சென்றார்.

அவரை பிரேமானந்தா அறக்கட்டளை நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், ஆச்சிரமத்தை சுற்றிப்பார்த்த விக்னேஸ்வரன் நிர்வாகிகளிடம் ஆச்சிரமத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, பிரேமானந்தாவை அடக்கம் செய்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பிரேமானந்தா ஆச்சிரமத்தில் நடைபெறும் பௌர்ணமி பூசையில் ஆண்டுக்கு ஒருமுறை விக்னேஸ்வரன் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இலங்கையின் வடக்கு மாகாண சபையின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தற்போது முதல் முறையாக ஆச்சிரமத்துக்கு வந்துள்ளார் எனத்  தெரிவித்தனர்.  அன்றிரவு அங்கேயே தங்கி இருந்தார்.

பாலியல் சாமியார் பிரேமானந்தா உயிருடன் இருந்த காலத்தில்  பாமரர் நம்பும் இந்த  ஆச்சிரமம் பகலில்  இளித்தவாயர்களுக்கு  உபதேசம் செய்யும் மடமாகவும்  இரவில்  இன்பவல்லிகளுடன் சலக்கிரீடை செய்யும் காமதேவனின் பள்ளியறையாகவும் பயன்பட்டது. பகலில் யோகிகள்,  பாதி இராத்திரியில் போகிகள் நிறைந்திருந்தார்கள். அங்கு வரும் பெண் பக்தைகளுக்கு தீா்தத்துடன் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து கலவி இன்பத்திலும் பிரேமானந்தா ஈடுபட்டுள்ளார்.

இந்த இளித்தவாயர்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பணமுதலைகள் அடங்குவர். கழுத்திலே தங்கச் சங்கிலி, தலையிலே சடாமுடி, நெற்றியிலே குங்குமப் பொட்டு, வீபூதி, இடையிலே காவிவேட்டி, குடிக்கச் சுண்டக் காய்ச்சி கற்கண்டு கலந்த பால், தின்னப் பழங்கள், உண்ண பத்துவகைக் கறியோடு நெய்ச்சோறு  என வலம் வந்த பிரேமானந்தா பெண்கள் விடயத்தில் பலவீனமாக இருந்ததில் வியப்பில்லை.

மனிதகுல வளர்ச்சியில் ஏழ்மையும், வறுமையும் நீங்க, பணம் திரட்ட, பதவி உயர்வு பெற  சாமியார்களை நாடுவது தொன்றுதொட்டு வரும் மூடப்பழக்கமாகும். இதனை அறிஞர் அண்ணா தான் எழுதிய வேலைக்காரி என்ற நாடகத்தில் ஹரிஹரதாசும், சுந்தரகோசும் நடத்துகின்ற ஆசிரமம் வாயிலாகக் காட்சிகள் பலவற்றை உருவாக்கி  போலிச் சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை  அம்பலப்படுத்தியிருந்தார்.

பிடிபடும் மட்டும் கள்ளன் யோக்கியனே. அது போல  சாமியார்களும் பிடிபடுமட்டும் கடவுள் அவதாரங்களாக மக்கள் நம்புகிறார்கள். பிடிபட்ட பின்னர்தான்  சாமிகள்  ஆசாமிகள் என்பது தெரிகிறது.  ஆனால் விக்னேஸ்வரன் பாலியல் சாமி பிரேமானந்தா ஒரு காமுகன் என்பதை மூன்று நீதிமன்றங்கள் சொல்லி தண்டனை வழங்கிய பின்னரும் அவரை நம்புவதும்  அவர் மீதான வழக்கு பொய் என்பதும் அவருக்கு கோயில் கட்டி பூசை செய்வதும்  கண்டிக்கத்தக்கது.  பெண்குலத்துக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக விக்னேஸ்வன் விளங்குகிறார்.

இப்படிப்பட்ட கல்யாண குணங்களைக் கொண்ட விக்னேஸ்வரனுக்குத்தான் தினக்குரல் குடை பிடிக்கிறது.  தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்படவேண்டியவர் யார்? என்று கேள்வி கேட்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர் குழப்பவாதி என்று வர்ணித்த தினக்குரல் இன்று அவருக்கு  லாலி பாடுகிறது.  சாமரம் வீசுகிறது.  சுமந்திரனுக்கு கரி பூசுகிறது.

எமது மக்கள் புத்திசாலிகள்.  தினக்குரல் போன்ற ஊடகங்கள் உரக்க ஊழையிட்டாலும் மக்கள் அதற்குச் செவி சாய்க்க மாட்டார்கள். விக்னேஸ்வரன் ததேகூ க்கு வாக்களிக்காதீர்கள் என சங்கேத மொழியில் கேட்டும் மக்கள் அசையவில்லை. ததேகூ  எதிராக கூட்டணி சேர்ந்தவர்களை தேர்தலில் தோற்கடித்தார்கள். அது சாதாரண தோல்வியல்ல. விக்னேஸ்வரன் மறைமுகமாக ஆதரித்த ததேமமு போட்டியிட்ட 8 தேர்தல் மாவட்டங்களில் 7 தேர்தல் மாவட்டங்களில் கட்டுக்காசை இழந்தது. எட்டாவது மாவட்டமான யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 6 வாக்குகளால் கட்டுப்பணத்தை காப்பாற்றியது!

 விக்னேஸ்வரன் மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது அந்த அதிகாரம் சுமந்திரனுக்கு இல்லை என்று சொல்லும் சுரேஷ் பிறேமச்சந்திரனும்   செல்வம் அடைக்கலநாதனும்  தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுச் சிக்கல்களில் தலையிடக் கூடாது.  வெளியேற்றும் அதிகாரம் சுமந்திரனுக்கு இல்லை என்பது சரி. ஆனால் விக்னேஸ்வரன் மீது கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்கு நடவடிக்கை எடுத்து அவரை வெளியேற்றும் உரிமை தமிழரசுக் கட்சிக்கு    உரிமை உண்டு.

————————————————————————————————————————————————————-

It is crystal clear as day light that C.V. Wigneswaran, Chief Minister Nothern Province has become a liability to the Tamil National Alliance and an object of ridicule and a national disgrace to the Tamil community.

His latest gaffe has  ruffled the feathers of Tamil Christians and inflicted irreparable damage to the amity  between Hindus and Christians. He has compared Premananda a serial rapist  with Jesus Christ who is reverred by millions and millions of Christians. The comparison is highly irrational  bordering on insanity.  Premananda was a convicted serieal rapist who was sentenced  to two consecutive life imprisonment along with 3 other inmates of the ashram on charges of rape of 13 underaged girls.  One of them  with the permission of the court terminated her pregnancy  and the  DNA tests showed Premananda was the culprit.

(1) He ridiculed Prime Minister Wickremesinghe of belonging to the same old uncle nephew party and becoming Prime Minister with only 45 MPs.

(2) After getting elected as the Chief Minister of NPC  on the TNA platform,  Wigneswaran  called In the past Wickneswaran has acted against the interests of the TNA as well as the Northern Provincial Council.

How come? At the 2015 parliamentary elections Wigneswaran claimed he will remain neutral at the polls. In reality, he supported the Tamil National People Front led by Gajendrakumar by issuing statements couched in code language to shy away from the house symbol of ITAK/TNA. However, the TNPF lost deposits for the second time in all five districts it contested.  Wigneswaran is a typical turn coat who kicked the ladder he used to climb to the top. He suffers from uncontrollable ego.  he has the audacity to claim that he won the NPC elections on his own popularity and not because of ITAK/TNA.  He has also lambasted the TNA top leadership (Sampanthan & Sumanthiran) for moving close to the Sinhalese in the south and following a policy of appeasement. This shows Wigneswaran has no stomach for diplomacy and reconciliation.  No one in his right mind will make such outlandish statements.

 Two years ago, he turned down a funding offer by the UNDP Resident Representative and UN Resident Coordinator to the tune of USD 150 million under Peace Building Fund. He turned down this offer merely because the UNDP Resident Coordinator refused to play ball with him. The Coordinator was not willing, in fact opposed, to the request by Wigneswaran to appoint Karthikeyan Nirmalan his nephew and an Australian citizen as Special Officer of the project. Wigneswaran suggested a monthly payment of US $ 5000 (Rs. 704,675.00) plus expenses!

Nirmalan is the Diary Secretary, Executive Assistant and Political Advisor to the Chief Minister. In a harshly worded letter rebuking Chief Minister Wigneswaran, Mr. Subinay Nandy, UN Resident Coordinator and UNDP Resident Representative wrote as follows: “There was no donor willing to fund a stand alone advisory position for pre-selected candidate without following standard competitive process for recruitment. In addition the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment.” This rebuke by the UN Resident Coordinator places the Chief Minister in bad light. It shows he was only paying lip service to his crusade against nepotism and favouritism. Clearly, Wigneswaran has become a liability and a thorn in the flesh of TNA.

There is also a dark side to his complex personality. He is an admirer and follower of the notorious serial rapist and con-artist Premananda (real name Rajkumar from Mathalai) who practised black magic.   Premananda received two consecutive life sentences for murdering Ravi, an inmate of his Ashram, and raping 13 young girls. Three of them under-aged girls. One of the victims became pregnant and a DNA test proved Premananda’s paternity.

All these girls were orphans from Jaffna but taken to Thiruchi when Premananda migrated to Tamil Nadu after the 1983 riots. One of the victims Sureshkumari, in her complaint, had stated that she joined the Premananda Swami Ashram, Mathalai, when she was six years of age. He was also fined 62 lakhs.  His 5 assistants were also drew 2 consecutive life sentences.

To add insult to injury, on March 14, 2015 Wigneswaran  wrote  to Indian Prime Minister Modi to release 4 of Premananda’ s accomplices in jail.  In his letter the Chief Minister had the temerity to claim that the case against Premananda was false!

The case went right up to the Supreme Court of India, which confirmed the conviction, based on DNA evidence. Therefore, Wigneswaran is insulting the intelligence of  the judges  from the District Court of Puthukkoddai, the High Court of Chennai and the  justices of the Supreme Court of India.

Wigneswaran also gave evidence for  the defence before the Supreme Court of India. The justices after hearing his evidence described him  as a “Wishful thinker.”

Afflicted with many diseases he died on 21 February 2011 of acute liver failure. Wigneswaran who believes Premananda is an Avatar has since built a temple for him at Mankulam with a Hindu priest performing poojas three times a day! Not surprisingly Wigneswaran is also one of the Trustees for properties worth billions left by Premananda.

Those who hold public office must conduct themselves in an exemplary fashion, according to the highest ideals and standards of public moral and ethics. Wigneswaran is not.

How come? At the 2015 parliamentary elections Wigneswaran claimed he will remain neutral at the polls. In reality, he supported the Tamil National People Front led by Gajendrakumar by issuing statements couched in code language to shy away from the house symbol of ITAK/TNA. However, the TNPF lost deposits for the second time in all five districts it contested.  Wigneswaran is a typical turn coat who kicked the ladder he used to climb to the top. He suffers from uncontrollable ego. He ridiculed Prime Minister Wickremesinghe of belonging to the same old uncle nephew party and becoming Prime Minister with only 45 MPs. In short he is a national disgrace to the Tamil community. After getting elected as the Chief Minister of NPC he has the audacity to claim that he won the NPC elections on his own popularity and not because of ITAK/TNA.  He has also lambasted the TNA top leadership (Sampanthan & Sumanthiran) for moving close to the Sinhalese in the south and following a policy of appeasement. This shows Wigneswaran has no stomach for diplomacy and reconciliation.  No one in his right mind will make such outlandish statements.

 Two years ago, he turned down a funding offer by the UNDP Resident Representative and UN Resident Coordinator to the tune of USD 150 million under Peace Building Fund. He turned down this offer merely because the UNDP Resident Coordinator refused to play ball with him. The Coordinator was not willing, in fact opposed, to the request by Wigneswaran to appoint Karthikeyan Nirmalan his nephew and an Australian citizen as Special Officer of the project. Wigneswaran suggested a monthly payment of US $ 5000 (Rs. 704,675.00) plus expenses!

Nirmalan is the Diary Secretary, Executive Assistant and Political Advisor to the Chief Minister. In a harshly worded letter rebuking Chief Minister Wigneswaran, Mr. Subinay Nandy, UN Resident Coordinator and UNDP Resident Representative wrote as follows: “There was no donor willing to fund a stand alone advisory position for pre-selected candidate without following standard competitive process for recruitment. In addition the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment.” This rebuke by the UN Resident Coordinator places the Chief Minister in bad light. It shows he was only paying lip service to his crusade against nepotism and favouritism. Clearly, Wigneswaran has become a liability and a thorn in the flesh of TNA.

There is also a dark side to his complex personality. He is an admirer and follower of the notorious serial rapist and con-artist Premananda (real name Rajkumar from Mathalai) who practised black magic.   Premananda received two consecutive life sentences for murdering Ravi, an inmate of his Ashram, and raping 13 young girls. Three of them under-aged girls. One of the victims became pregnant and a DNA test proved Premananda’s paternity.

All these girls were orphans from Jaffna but taken to Thiruchi when Premananda migrated to Tamil Nadu after the 1983 riots. One of the victims Sureshkumari, in her complaint, had stated that she joined the Premananda Swami Ashram, Mathalai, when she was six years of age. He was also fined 62 lakhs.  His 5 assistants were also drew 2 consecutive life sentences.

To add insult to injury, on March 14, 2015 Wigneswaran  wrote  to Indian Prime Minister Modi to release 4 of Premananda’ s accomplices in jail.  In his letter the Chief Minister had the temerity to claim that the case against Premananda was false!

The case went right up to the Supreme Court of India, which confirmed the conviction, based on DNA evidence. Therefore, Wigneswaran is insulting the intelligence of  the judges  from the District Court of Puthukkoddai, the High Court of Chennai and the  justices of the Supreme Court of India.

Wigneswaran also gave evidence for  the defence before the Supreme Court of India. The justices after hearing his evidence described him  as a “Wishful thinker.”

Afflicted with many diseases he died on 21 February 2011 of acute liver failure. Wigneswaran who believes Premananda is an Avatar has since built a temple for him at Mankulam with a Hindu priest performing poojas three times a day! Not surprisingly Wigneswaran is also one of the Trustees for properties worth billions left by Premananda.

Those who hold public office must conduct themselves in an exemplary fashion, according to the highest ideals and standards of public moral and ethics. Wigneswaran is not.

In 1994, one of the girls living in the ashram, Arul Jyothi, escaped and reported that she had been raped and was pregnant. The All India Democratic Women’s Association provided moral support and legal aid to the victims.[3] On 15 November 1994, the police started an investigation ashram residents also reported that another, called Ravi, had been murdered for attempting to expose the happenings at the ashram.[5]

1994 இல் ஆச்சிரமத்தில் இருந்த அருள்சோதி என்ற சிறுமி  தன்னை பிரேமானந்தா கற்பழித்ததாகவும் தான் கற்பகமாக இருப்பதாகவும் காவல்துறையில் முறையிட்டார்.Premananda01

ஆச்சிரமத்தில் இருந்த  இரண்டு பேர்  ஆச்சிரமத்தில் நடப்பவற்றை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டில் இரவி என்ற ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம வளவுக்குள்ளேயே புதைக்கப்பட்டதாக தகவல் கொடுத்தார்கள்.  அருள்சோதி மட்டுமல்ல ஆச்சிரமத்தில் இருந்த பெண்பிள்ளைகளின் (இவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். அதில் மூவர் 16 அகவைக்கு குறைந்தவர்கள்) கற்பை தனது காமப் பசிக்கு  இரையாக்கிக் கொண்ட சுவா(ஆசா)மி பிரேமானந்தா!  இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும் பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட  பிரேமானந்தாவால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் அப்போது வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதிமன்றத்தில் அறிவியல் (டிஎன்ஏ)  ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.

மொத்தம் 13 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டார்கள் என காவல்துறை கண்டு பிடித்தது. பிரேமானந்தா மீதான வழக்கு புதுக்கோட்டை நீதிபதி ஆர். பானுமதி முன் விசாரணை செய்யப்பட்டது. பிரபல வழக்கறிஞர் இராம் ஜெத்மாலினி எதிரி பிரேமானந்தா சார்பாக வாதாடினார். பாலியல் உறவுக்கு சிறுமிகள் உடன்பட்டார்கள் என வாதாடினார். பிரேமானந்தாவோடு உடல் உறவு கொள்வது கடவுளுக்கு செய்கிற சேவை (“service to God”) எனச் சொல்லப்பட்டது.   இந்தச் சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட போது அவர்களது அகவை 15க்கு உட்பட்டதாக இருந்தன. கொலை செய்யப்பட்ட இரவி என்ற பொறியாளர் அவர்களது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதுவும் சாட்சியாக முன்வைக்கப்பட்டது. Preemanandapolice

அருள்சோதி மட்டுமல்ல அவரோடு இருந்த 13 சிறுமிகளும்  (இவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள்) பிரேமானந்தாவின் காமப் பசிக்கு இரையானார்கள். அதில்  16 அகவைக்கு குறைந்த மூவர்  பிரேமானந்தாவின் வன்புணர்வுக்கு  ஆளாக்கப்பட்டனர்.   பல சிறுமிகள் பருவமடைய முன்னரும் பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட  பிரேமானந்தாவால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் அப்போது வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த  அருள்சோதி  என்ற சிறுமி தனது கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை டிஎன்ஏ மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள்  அதனது தந்தைமை பிரேமானந்தாவே எனத் தெரிவித்தார்கள்.  அதனை நீதிமன்றம் சான்றாக எடுத்துக் கொண்டது.  Wigneswaranள்சோதி யின்  கலைக்கப்பட்ட கருப்பைச் சிசுவின் தந்தமை  பிரேமானந்தா என டிஎன்ஏ சோதனை மூலம்  எண்பிக்கப் பட்டது.

1997 ஓகஸ்ட் 20 அன்று பிரேமானந்தா கொலை மற்றும் பாலியல்  வன்முறை குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு   அவருக்கும் ஏனைய நால்வருக்கும் 1997 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நீதிபதி பானுமதி அவர்களால்  தொடர் இரட்டை ஆயுள் தண்டனை (Two consecutive life sentences)  விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்பிள்ளைகளுக்கு இழப்பீடாக பிரேமானந்தாவுக்கு 66.4 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. இவருக்கு உதவிய கமலானந்தாவுக்கு பிரேமானந்தா  போலவே  தொடர் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  பாலன், சதீஸ், நந்தா  ஆகிய மூவருக்கும் ஒற்றை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நால்வரும் தற்போது தமிழ்நாடு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நால்வரையும் விடுதலை செய்யுமாறு விக்னேஸ்வரன் கடந்த 14-03-2015 அன்று இந்தியப் பிரதமர் மோடிக்கு வட மாகாண சபையின் கடிதத் தலைப்பில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய  கடிதம்  இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா அப்போது  செய்தி வெளியிடடது.

இரட்டை ஆயுள் தண்டனையும் 67.3 இலட்சம்  தண்டமும் விதிக்கப்பட்டது. தண்ப்பணம் கட்டத் தவறும் பட்சத்தில் மேலும் 32.75  ஆண்டு  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேன் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. அதுபோலவே இந்தய உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இராம் ஜெத்மலானிதான் வழக்காடினார்.  பிரேமானந்தாவுக்கு ஆதரவாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாதாடினார். அவரது சாட்சியத்தை செவிமடுத்த நீதிபதிகள் அவர் ஒரு கற்பனாவாதி (wishful thinker) எனச் சொன்னார்கள்.

—————————————————————————————————————————————————————–

Trial took place in the sessions court in Pudukkottai, presided over by a woman judge, R. Banumathi. Noted criminal lawyer Ram Jethmalani[1] was among those representing the swami. The defence claimed that Premananda had divine powers and was capable of performing miracles, which included materializing vibhuti and regurgitating small Shiva lingams. To debunk this myth, an illusionist was invited into the courtroom; he performed both in court.

Ram Jethmalani argued that the women had consented to sex. The court noted that in some cases the consent was obtained by deceit, such as promising a cure for ailments such as asthma or by saying that sex with the swami was “service to God”. The court also noted that some of the girls had been threatened with dire consequences and that some of the victims were below the age of consent (16 at the time of trial) when they were raped. Jethmalani also said that the trial was unfair because witnesses and the accused had been subjected to police brutality.

The murder victim’s remains were found buried on the ashram premises and were presented as evidence.

DNA samples from Arul Jyothi, her aborted foetus, and Premananda were also introduced as evidence. The prosecution argued that the results established his paternity.[5][7] The defense hired an expert witness from the UK, Wilson Wall, who took DNA evidence back to the UK and analyzed it; his results were that Premananda was not the father and that analysis by the Indian scientists was mishandled.

On 20 August 1997, Premananda was sentenced to life imprisonment and fined ₹67.3 lakhs for 13 counts of rape, molestations of two girls and a murder. Failure to pay the fine was to carry an additional term of 32 years and 9 months. He was also convicted of cheating the residents of his ashram, which carried another one-year sentence. Six others were also found guilty of conspiracy to commit rapes and destroying evidence. Five were given life sentences. In view of the severity of the crimes, the judge denied them any future remission of their sentences or amnesty by any state or central government.[1]

Premananda appeared unperturbed by the sentences and while talking to reporters, said: “Truth will ultimately triumph”.[1]

In January 2000, the Madras High Court ordered that ₹36.4 lakhs from Premananda’s frozen accounts should be placed in a fixed deposit for three years and the resulting interest should be paid to the victims as compensation.[12] The original guilty verdict was appealed to the Madras High Court and the appeal was rejected in December 2002.

In April 2005, the Supreme Court of India rejected an appeal. On 5 February 2009, the Madras High Court rejected a habeas corpus petition, keeping in view the recommendations of the district sessions judge at the time of conviction and the previous Supreme Court order.[14] On 26 June 2010, however, the same court accepted Premananda’s petition requesting a three-month parole to undergo medical treatment.

As of 2005 a European named Doris was running the ashram who said that Premananda was innocent.

Death

Premananda died on 21 February 2011 of acute liver failure, while being held in Cuddalore Central Prison. Until his death, he continued to say he was innocent.[16]

Legacy

On 16 November 2014, Swami Premananda’s birth anniversary was observed by his devotees at the residence of C. V. Vigneswaran in Colombo, Sri Lanka.[17] On 22 February 2015, the Swami Premananda International Conference was held in Colombo. It was attended by A. T. Ariyaratne, founder of the Sarvodaya Shramadana Movement, D. M. Swaminathan, a Sri Lankan Cabinet Minister, C. V. Vigneswaran, the Chief Minister of the Northern Province, and about 50 delegates from various countries including Argentina, Belgium, France, the Netherlands, Italy, Nepal, the UK, the US, Sweden, Switzerland, India and Poland.

—————————————————————————————————————————————————-

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல் ……..

மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு முதற்கண் என் பணிவான வணக்கம் .
நீங்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ எல்லாம்வல்ல இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்.
இந்த கடிதத்தை யாராவது உங்களிடம் தருவார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
உண்மையிலேயே நான் அறிந்தவரை நீங்கள்……..
மனிதப்பண்புகள் நிறைந்த ஒரு நல்ல மனிதர்,
அப்பழுக்கற்ற ஒழுக்கசீலர்,
சிறந்த ஆன்மீகவாதி.
தமிழ் மொழிமீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டவர்.
தொழில்சார் வாழ்வில் அப்பழுக்கில்லாது கடைமையை செய்தவர்.
சட்ட நுணுக்கங்கள் மீது புலைமை கொண்டவர்.
இலங்கை அரசியலில் அடிமுதல் நுனி வரை ஆழமாக தெரிந்தவர் .
மேற்சொன்ன உயர் தகைமைகளை கருத்தில் கொண்டு எத்தனையோ விமர்சனகளுக்கு மத்தியிலும் வடக்கு மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உங்களை முதலமைச்சர் ஆக்கினார்கள்..
உங்கள் தேர்தல் பிரச்சாரங்களும் அப்படியே இருந்தது .
எங்கே நீங்கள் தமிழீழத்தை பெற்றுக் கொடுத்துவிடுவீர்களோ என தென்னிலங்கை மக்கள் அச்சம் கொண்டிருந்தனர் .
Second செல்வநாயகம் என உங்களை தென்னிலங்கை ஆய்வாளர்கள் பத்திரிகைகளில் எழுதினார்கள்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எனக்கு தாருங்கள் உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் நான் தீர்த்து வைக்கிறேன் என மேடைகளில் வீரமுழக்கம் செய்தீர்கள்.
ஒரு கணம் மகிந்த கூட தடுமாறித்தான் போனார் .
அவ்வளவுக்கு உங்கள் மேடைப்பேச்சுக்கள் இருந்தது .
நீங்கள் கேட்டதைவிட அபார வெற்றியடையச் செய்து அரியாசனம் ஏற்றினார்கள் எம்மக்கள்.
உங்கள் மூலமாக தங்களுக்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கும் என தமிழ் மக்கள் ஆழமாக நம்பினார்கள் .
அப்படி தீவிரமாக நம்பியவர்களில் நானும் ஒருவன்.
இது உங்களுக்கான எனது அறிமுகம்.

PERFORMANCE EVALUATION
அடுத்து நீங்கள் இதுவரை செய்ததது என்ன?
உங்கள் மீது மக்களின் தற்போதய அபிப்பிராயம் என்ன என்பதை சொல்ல விளைகிறேன்.
உங்கள் மீதான இந்த PERFORMANCE EVALUATION ஐ இரண்டு வகையாகப்பார்க்கலாம்.
1) மாகாண சபை மீதான உங்கள் நிர்வாகம்.
2) தமிழர் பிரச்சினை மீதான உங்கள் அரசியல் நிலைப்பாடு

மாகாண சபை மீதான உங்கள் நிர்வாகம் .

மாகாண சபையினூடாக இதுவரை நீங்கள் மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என பார்க்கலாம்.
ஆரம்பத்தில் மஹிந்த அரசாங்கம் என்னை ஒன்றுமே செய்யவிடவில்லை என்றீர்கள்.
வடமாகாண ஆளுநர் அவர்கள் உங்கள் நிர்வாகதிற்கு பெரும் தடையையாய் இருக்கிறார் என்றீர்கள்.
அதில் ஓரளவு உண்மை இருந்தது.
மைத்திரி ஜனாதிபதியானவுடன் ஓடிப்போய் சந்தித்தீர்கள்.
மைத்திரி அரசு உடனடியாக அவரை மாற்றியது .
அப்பாடா இனியொரு தடையுமில்லை .எங்கள் முதல்வர் சுதந்திரமாக இனி செயல்படுவார் என நம்பினோம்.
ஆனாலும் பழையகிழவி கதவைத்திறவடி என்றபடி ரணில் உங்களுக்கு தடையாய் இருப்பதைப்போல உங்கள் நடவடிக்கைகள் இருந்தன.
பிரச்சினைப்பட்ட புருஷன்- பெண்சாதி போல ஒரேமேடையில் ரணிலும் நீங்களும் முகத்தை திருப்பிக்கொண்டு இருந்தீர்கள்.
சரி அவர்களை விடுவோம் .
உங்கள் கட்சிக்குள்ளேயே உங்களை சுயமாக இயங்க விடவில்லை என புகார் செய்தீர்கள். .சரவணபவன் ஊடகவியலார்களை உங்களுக்கெதிராக தூண்டிவிடுகிறார் என்றீர்கள்.
சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற முன்னாள் ஆயுததாரிகள் உங்களுக்கு இடையூறு செய்வதாக சொன்னீர்கள்.
டக்லஸ் தேவானந்தா அவர்கள் உங்களுக்கெதிராக சூழ்ச்சிகள் செய்கிறார் என்றீர்கள்………
இப்படியே போனால் யாரோடுதான் நீங்கள் இணைந்து செயல் படுவீர்கள் ?
எப்போதுதான் நீங்கள் செயல்படதொடங்குவீர்கள்? .
ஒருவேளை தமிழீழம் கிடைத்தால்தான் உங்களால் ஒழுங்காக செயற்படமுடியுமா ?
சாட்டுக்களை சொல்லி கடைமையிலிருந்து தவறுவதற்கு நீங்கள் எதற்கு? ஓ -லெவல் பெயில் விட்ட ஒரு சிறுவனே முதலமைச்சராக இருந்துவிடலாமே?
சரி உங்கள் வழிக்கே வருகிறேன்.
அரசாங்கம் முதற்கொண்டு உங்கள் கட்சி உட்பட தமிழ்கட்சிகளில் உள்ளவர்கள் உங்களை சுயமாக இயங்க விடவில்லை என்பதில் உண்மையிருக்கிறது.
நான் மறுக்கவில்லை.
எல்லா விடயங்களிலும் அவர்கள் தடைகளை ஏற்படுத்துவதில்லை?
அவர்கள் தடைஏற்படுதும் விடயங்ககளை விட்டுவிடுங்கள் .
அவைமட்டுமா உங்கள் முன்னுள்ள பணிகள்? .
மாகாண சபைக்கு கீழ் எத்தனையோ திணைக்களங்கள், நிறுவனங்கள் , அமைப்புகள் நிறையவே உள்ளன.
அவையெல்லாம் உங்கள் ஆணைக்கு உட்பட்டவை.
இந்த நிறுவனங்களின் முன் எவ்வளவோ பணிகள் குவிந்து கிடக்கின்றன.
உங்கள் உத்தரவு இன்றி அவை எதுவும் செய்யமுடியாது.
உங்கள் ஆணைக்குட்பட்ட இந்த பணிகளை நீங்கள் செய்வதை மத்திய அரசு கூட தடுக்க முடியாது.
அவ்வாறு, நீங்கள் செய்யக்கூடிய நிர்வாகம் சம்பந்தமான நூற்றுக்கணக்கான பணிகள் உங்கள் முன் நிறையவே இருக்கின்றனவே .
அவற்றுள் எத்தனை பணிகளை நீங்கள் சரியாகச் செய்கிறீர்கள் ?செய்துள்ளீர்கள் ?
அவற்றுக்குகூட மகிந்தவையும் , ரணிலையும், சுரேஷ் ஐயும் , சரவணாபவனையும், டக்லஸ் ஐயும் காரணம் சொல்லப்போகிறீர்களா ?
உங்கள் நிர்வாகத்திறைமை இன்மையையும், அந்தந்த துறைசார் அறிவின்மையையும் பயன்படுத்தி உங்கள் ஆணைக்குட்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் உங்களுக்கு தெரியுமா?
இந்த தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து யாழ்பாணத்தில் ” தண்ணியடிக்கும்” போது நிறை வெறியில் எப்படியெல்லாம் உங்களையும் உங்கள் அமைச்சர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதை கேலிசெய்வது உங்கள் காதுகளுக்கு வருவதில்லையா?
இவற்றை நான் எழுந்தமானமாகவோ ,கற்பனையிலோ எழுதவில்லை.
இந்த ஊழல் திணைக்கள தலைவர்களினால் மக்களுக்கு செல்லவேண்டிய கோடிக்கணக்கான பணம் மிகவும் நுட்பமான முறையில் முடக்கப்படுவதை நீங்களோ சரி உங்கள் அமைச்சர்களோ சரி அறிவீர்களா?
எல்லா தவறுகளையும் கண்டறியும் எல்லாத் துறைசார் அறிவும் உங்களிடம் இருக்காது.
ஒரு முதலமைச்சருக்கு அது தேவையும் இல்லை.
ஆனால் அந்தந்த துறைகளின் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களை ( CONSULTANTS) நீங்கள் அணுகலாம் அல்லவா?
நான் கேட்கிறேன் உங்களிடம் எத்தனை ஆலோசகர்கள் இருக்கிறார்கள்?
உங்கள் இந்த பலவீனத்தை பயன்படுத்தி ஆழ்ந்த அறிவும் அனுபவுமும் உள்ள அந்தந்த திணைக்கள தலைவர்கள் எப்படியெல்லாம் உங்களையும் உங்கள் அமைச்சர்களையும் மிகவும் இலகுவாக ஏமாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
உங்கள் ஆணைகுட்பட்ட நிறுவனங்களில் நடக்கும் இதற்கும் மத்திய அரசாங்கதிற்கும் தமிழ் கட்சிகளுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?
இந்த நிர்வாக சீர்கேடுகளுக்கு முற்றுமுழுதாக நீங்கள் தானே பொறுப்பு?
இதனால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய எவ்வளவோ சலுகைகள் கிடைக்காமல் போகின்றன அல்லது குறைந்த தரத்தில் குறைவான எண்ணிக்கையில் கிடக்கின்றன ?
இது உங்ககளை நம்பி வாக்களித்த அப்பாவிமக்களுக்கு நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பச்சை துரோகமல்லவா?
இதுவும் பஞ்சமா பாதகங்களுள் ஒன்றெனத்தானே கருதப்படவேண்டும்.
உங்கள் ஆணைகுட்பட்ட செயக்கூடியவற்றை செய்வதற்கு தகைமையற்ற நீங்கள் சுயநிர்ணய உரிமை, சமஸ்டி தீர்வு ,தமிழர் தன்னாட்சி என்பவற்றை பெறுவதைப்பற்றி பேசுவது மலினமாக தெரியவில்லையா ?

மக்களின் நிர்வாக நிறுவனம் ஒன்றுக்கு தலைமை ஏற்பவர் மக்கள் தங்கள் பிரச்சினைகளுடன் வரும்போது அவற்றுக்கான தீர்வை சொல்லவேண்டுமே ஒழிய அவற்றை செய்யமுடியாமைக்கான காரணங்களை சொல்லக்கூடாது.
செய்ய முடியாவிடில் அந்த பதவியில் இருக்க கூடாது.
உங்களை நாடிவரும் மக்களிடம் “நானே ஒண்டும் செய்யேலாமல் இருக்கிறன், நீங்கள் வேற …….” என்று மனம் சலித்து பலரிடமும் கூறிவருகிறீர்கள்.
அண்மையில் கரவெட்டியில் இருந்து மணல் பிரச்னை சம்மந்தமாக உங்களுடன் பேச வந்த மக்களிடம் நீங்கள் இவ்வாறான பதில்களைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.
அதுமட்டுமல்லாமல் உங்களுடன் சற்று நெருங்கி பழகுபவர்களுடன் ” நான் ஏன் இதுக்குள்ள வந்தன் …..” என்ற சலிப்புடன் பேசுகிறீர்கள்.
இதுதான் ஒரு முதலமைச்சருக்கு அழகா?
உங்களை சலிப்படையச் செய்வது யார் என்று வெளிப்படையாக மக்களிடம் சொல்லுங்கள்?
தனியே மத்திய அரசாங்கத்தை குறைசொல்லி தப்பித்து கொள்ளாதீர்கள்.
உங்கள் கட்சிக்குள்ளேயேயும் வெளியேயும் உங்களை செயற்படாமல் தடுப்பவர்களை மக்களுக்கு அம்பலப்படுத்துங்கள்.
தேர்தலில் இவர்களை புறக்கணிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துங்கள்.
மக்களுக்காக முதலமைச்சர் பதவியே ஒழிய கட்சிக்கானதல்ல.
மாகாண சபை சம்பந்தமாக இறுதியாக ஒன்றை சொல்லுகின்றேன்.
மத்திய அரசாலும் தமிழ் கட்சிகளாலும் தடைகள் ஏற்படுதப்படும் விடயங்களை சரிசெய்வதற்கான முனைப்புக்களில் ஈடுபடும் அதேவேளை உங்களால் செய்யக்கூடிய, உங்கள் ஆளுகைக்குட்பட்ட, அதிகாரதிற்குட்பட்ட பணிகளை திறமையாகவும் வினைத்திறனுடனும்(EFFICENTLY AND EFFECTIVLY) செய்யுங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒருநாட்டின், ஒரு மாகாணத்தின் இயக்கதிற்கான உயிர் மூச்சான ,அடிநாதமான
“ADMINISTRATIVE MACHINERY” ஐ – “GOVERNMENT MECHANISM” த்தை “PRODUCTIVITY” யுடன் இயங்கச் செய்யுங்கள்.

இந்த விடயத்தில் இதுவரைக்கும் நீங்கள் தோல்விகண்ட ஒரு முதலமைச்சரே.

உங்கள் நிர்வாக திறன் சம்பந்தமாக பின்வரும் கேள்விகளை நான் முன்வைக்கிறேன்.

1) இதுவரைக்கும் உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட நிறுவனக்களின் எத்தனை
தலைவர்களை நீங்கள் சந்தித்து பேசியிருக்கிறீர்கள் ?

2) அந்தந்த நிறுவங்களின் தலைமை செயலகங்களுக்கு எத்தனை முறை நீங்களோ
அன்றில் உங்கள் அமைச்சர்களோ சென்றிருக்கிறீர்கள்? அங்கே எத்தனை
வினைத்திறன் மிக்க கூட்டங்களை நடத்தியிருக்கிறீர்கள்.?

3) அந்தந்த நிறுவனங்களின்/தலைவர்களின்/ அதிகாரிகளின் “PERFORMANCE
EVALUATION”ஐ அறிவதற்கான என்ன “MECHANISM” த்தை நீங்கள் கடைப்பிடிகிறீர்கள் ?

4) இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் முகாமைத்துவத்தை எப்படி நீங்கள் CROSS CHECK பண்ணுகிறீர்கள்?

5) உங்கள் தலைமைச் செயலாளரால் கையெழுத்து இடப்பட்டு இந்த
நிறுவனக்களுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு என்ன நடக்கிறது?
அதை மிக நுட்பமாக இந்த நிறுவன தலைவர்கள் சுருட்டிகொள்வதை ஏன் நீங்கள்
அறிந்திருக்கவில்லை?. Tender Procedure, Quality Assurance இவற்றில் உள்ள
ஓட்டைகளை பயன்படுத்தி யாருமே கண்டு பிடிக்காத முறையில் அந்தந்த
துறைகளில் பழம்தின்று கொட்டை போட்ட இந்த நிறுவனத்தலைவர்களால்
மக்களுக்கு போய் சேரவேண்டிய பெருமளவு பணம் அல்லது
பொருட்கள்/சேவைகள் முடக்கப்படுவதை நீங்கள் அறிவீர்களா ?

6) இவை ஒன்றும் நிகழவில்லை என்கிறீர்களா?

7) தேர்தலுக்காக உங்கள் மீது சுமப்பத்தப்படும் அபாண்ட குற்றச்சாட்டுகள்
என்கிறீர்களா?

நீதியின் பாலும் தர்மதின்பாலும் அடித்து கூறுகின்றேன் மேலே நான் சொன்னவை உண்மையென்று.
தமிழர் பிரச்சினை மீதான உங்கள் அரசியல் நிலைப்பாடு

.அடுத்து சர்ச்சைக்குரிய உங்கள் அரசியல் நிலைப்பாட்டை பற்றி எழுதுகிறேன்.
மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் வீரமுழக்கம் செய்தீர்கள்.
நாலாபக்கமும் ராணுவமும் பொலிசாரும் சூழ்ந்திருக்க பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிரசாரமேடையில் பிரபாகரன் ஒரு சுத்த மாவீரன் என நீங்கள் வீரவசனம் பேசியதைக்கேட்டு நாங்கள் எல்லோருமே மெய்சிலிர்த்துப்போனோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எனக்கு தாருங்கள் உங்கள் அனைத்து பிரச்சனைகளையும் நான் சட்டரீதியாக தீர்த்து வைக்கிறேன் என வாக்குறிதியை வழங்கினீர்கள்.
இராணுவத்தை உடனடியாக வெளியேற்றுகிறேன் என்றீர்கள் ,
மீள்குடியேற்றம் இந்தா நடைபெறப்போகிறது என்றீர்கள் ,
காணி, போலீஸ் அதிகாரங்களைஎல்லாம் சட்டரீதியாக பெறமுடியும் என்றீர்கள், எதைஎடுத்தாலும் சட்டரீதியாக சமாளிக்க முடியும் என்று வாக்குறிதி அளித்தீர்கள்..
உங்கள் பிரசார மேடையில் சலுகைகளைக்காட்டிலும், உரிமைகளைப்பற்றிதான் அதிகம் கர்ச்சித்தீர்கள்.
உண்மையிலேயே தந்தை செல்வா மீண்டும் வந்துவிட்டார் என தென்னிலங்கையே பயப்பிட்டது.
நீங்கள் முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த ஓரிரு நாட்களில் மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளீர்கள் என அறிவித்தீர்கள்.
பல்லாண்டுகால இனமுரண்பாட்டிற்கு இணக்க அரசியலே சிறந்த தீர்வாக அமையுமென அடித்து சொன்னீர்கள்.
இணக்க அரசியலுக்கான வரைவிலக்கணத்தையும் வரையறை செய்தீர்கள்.
“இணக்க அரசியல் என்று கூறும் போது இதற்கு முன்னர் இருந்தவர்கள் இணக்க அரசியலுக்குக் கொடுத்த வியாக்கியானத்தை நாங்கள் கூற முன்வரவில்லை. சரிசம உரித்துக்களையுடைய இரு மக்கட் கூட்டங்கள் என்ற அடிப்படையில் எமக்கிருக்கும் உரிமைகளை உளமாற எடுத்துரைத்து மனிதாபிமான அடிப்படையில் அவற்றை அரசாங்கத்துடன் பேசிப் பெற்றுக்கொள்வதையே நான் இணக்க அரசியல் என்று கூறுகின்றேன். இதற்கு இரு தரப்பாரிடமும் கொடுத்தெடுக்கும் அந்த மனோ பக்குவம் இருக்க வேண்டும்” என்று இணக்க அரசியலை வரையறை செய்தீர்கள்.
ஆரம்பகாலத்தில் உங்கள் நடவடிக்கைகள் நம்பிக்கைதருவதாக இருந்தது.
இணக்க அரசியல் மூலமே தமிழ்மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என ஆரம்பகாலங்களில் நீங்கள் தீவிரமாக நம்பியிருந்தீர்கள்.
உங்கள் நடவடிக்கைகள் கூட அதற்கு அமைவாகவே அமைந்தன.

பின்னர் ஏனோ தெரியவில்லை மஹிந்த அரசுடன் முரண்பட்டுக்கொண்டீர்கள்.
மஹிந்த உங்களை ஏமாற்றிவிட்டார் என அடிக்கடி சொன்னீர்கள்.
இணக்க அரசியல் என்ற உங்கள் நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகுவதைப்போல உங்கள் செயல்பாடுகள் அமையலாயின.
எதிர்ப்பு அரசியலில் மெல்ல மெல்ல இறங்குவதைப்போல ஒருபிரேமையை ஏற்படுத்தினீர்கள்.
காலங்காலமாக எதிர்ப்பு அரசியலுக்கே மூளைச்சலவை செய்யப்பட்டுபோன தமிழ் மக்களிடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் உங்களுக்கு நல்ல பெயர் வர ஆரம்பித்தது. பின்னர் மைத்திரி அரசு வந்தபின்னர் மீண்டும் இணக்க அரசியலே சிறந்தது என ஆரம்பித்துவிட்டீர்கள்.
உங்கள் அரசியல் நிலைப்பாடுதான் என்ன.?
கட்சிக்குள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் உள்ளக ,புற அழுதங்களுக்கமைய உங்கள் அரசியல் கொள்கயை நீங்கள் மாற்றிகொள்கிறீர்களா ?
அவ்வாறு உங்கள் மீது அழுத்தங்களை ஏற்படுத்துபவர்களை ஏன் உங்களை நம்பி வாக்குப்போட்ட மக்களுக்கு தெரிவிக்கவில்லை ?
சரி,அதைவிடுங்கள் அண்மையில் 20 நாட்கள் வெளிநாட்டில் இருந்து வந்த உடனேயே சூட்டோடு சூடாக நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள் என அறிக்கை விட்டீர்களே, உங்களை யார்கேட்டது நீங்கள் யாரை ஆதரிக்கின்றீர்கள் என்று.?
எவ்வளுவு ஒரு மோசமான அறிக்கை அது.
நீங்கள் நடுநிலையாக நிற்கப்போவதாக கூறியிருக்கிறீர்களே,
நடுநிலையாக நின்று தீர்ப்புசொல்ல நீங்கள் என்ன நீதவானா?
ஒருகட்சியினால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் நீங்கள்.
ஜனாதிபதி மைத்திரி அவர்கள் கூட தன் கட்சிக்காரனாக இருந்தாலும் மஹிந்த தோற்பார் எனக்கூறியதன் மூலம் தன் நிலைப்பாடை தெளிவாக வெளிப்படுத்தினார்.
தர்மத்தின் பக்கம் நின்றார்.
எல்லோரிடமும் நல்ல பிள்ளை பெயர் எடுப்பதற்கான முயற்சியா உங்கள் நடுநிலைமை நிலைப்பாடு?
உங்களின் இந்த பிழையான ” நடுநிலை”ப் பிரகடனத்தினை ஒவ்வொரு கட்சியினரும் தத்தமக்கு ஏற்றவாறு அர்த்தம் கற்பிப்பது (interpretation) எவ்வளவு ஒரு மோசமான நிலைக்கு மக்களை இட்டுச்சென்றிருக்கிறது.
உங்கள் கட்சிதான் சிறந்ததென்றால் மக்களுக்கு சொல்லி அவர்களுக்கு நல்வழியைச் காட்டுங்கள்.
உங்கள் கட்சி மக்களுக்கு துரோகம் செய்கின்றதென்றால் அதை வெளிப்படையாக மக்களுக்கு சொல்லுங்கள்.
மக்களை சரியாக வழிநடத்தக்கூடிய மாற்றுகட்சியை சுட்டி காட்டுங்கள்.
மக்களுக்கு சரியான தீர்ப்பை சொல்லுவதற்கு முதலமைச்சர் பதவி தடையாக இருந்தால் அதை தூக்கி எறிந்துவிட்டு ,மக்களை சரியாக வழிநடத்துங்கள்.
அதைவிடுத்து நடுநிலைமை என்று நாடகமாடாதீர்கள்.

உங்களின் இன்னுமொரு வரலாற்று தவறை சுட்டிக்காட்டுகிறேன்.
மேலேசொன்ன உங்களின் தேர்தல் சம்பந்தமான அறிக்கையில் தமிழ் எம்.பி கள் யாருமே அமைச்சர் பதவிகளை வகிக்கக்கூடாது என்றும் அதற்கான வியாக்கியானத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்.
இது இராஜதந்திர அறிவு கொஞ்சம் கூட இல்லாத ஒரு பாமரக்கூற்று.
போரினால் பாதிக்கப்பட்டு அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்களுக்கு கிடைக்கக்கூடிய கொஞ்ச நஞ்சத்தை கூட கிடைக்கவிடாது தடுக்கும் COLOMBO-7 சிந்தனை இது.
அரசியல் நிலைப்பாட்டுக்கு அப்பால் சரியோ பிழையோ அங்கையன் ராமநாதன்,விஜய கலா மகேஸ்வரன், டக்லஸ் தேவானந்தா போன்றோர் தம்மை சார்ந்தவர்களுக்கு செய்த நன்மைகளை விட எந்த ஒரு தமிழ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களுக்கு செய்யவில்லை.
மத்திய அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை ஏற்று மக்களுக்கான இயலுமானவற்றை செய்துகொண்டு , தமிழர் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்தலுக்கான ராஜதந்திரம், அரசியல் சாணக்கியம், மதிநுட்பம் உங்களுக்கு இல்லை என்றால் மெளனமாக இருங்கள்.
இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமிருந்து நீங்களும் நாங்களும் எவ்வளவோ கற்கவேண்டும்.
உங்கள் இறுதி இலக்கு மக்கள் சேவையையே தவிர மக்களை உசுப்பேற்றும் வீர வசனங்களல்ல.
யார் குத்தினாலும், எப்படிக்குத்தினாலும் மக்கள் பசிதீர்க்கும் அரிசியானால் சரி என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை.
மேலும் அந்த அறிக்கையில் “தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமதுமக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றையகாலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்” என்று கூறியிருக்கிறீர்கள்.
என்னதான் சொல்ல வருகிறீர்கள் ?
தமிழர்களின் பிரச்சினைக்குரிய உங்கள் உறுதியான தீர்வு என்ன ?
சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரமா?
சஷ்டி முறையிலான தீர்வா ?
வடக்குகிழக்கு இணைப்பா ?
ஒரு நாடு இருதேசமா ?.
இணக்க அரசியலா ?
ஒற்றையாட்சிக்குள் தீர்வா ?
அல்லது தமிழீழமா? ……..
என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள்.
பட்டும் படாமலுமான நீங்கள் அறிக்கை விடுவதால் ஒவ்வொருவரும் தங்களுகேற்றபடி உங்கள் அறிக்கையை அர்த்தப்படுத்துகிறார்கள் .
ஏன் இந்த ஒளிவுமறைவு?

உங்கள் அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்கின்றேன்.

1) மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தாருங்கள் ஆளுநரை மாற்றுவது முதல்கொண்டு பெரும்பாலானபிரச்சினைகளை எல்லாம் நான் சட்டரீதியாக தீர்க்கிறேன் என்றீர்களே, எத்தனை பிரச்சினைகளை சட்டரீதியாக நீங்கள் தீர்த்தீர்கள்?.தீர்க்கமுடியாது என தெரிந்துகொண்டே சொன்னீர்களா?
அல்லது சட்டம் உங்களுக்கு தெரியவில்லையா?

2) காலம்காலமா தீர்கப்பபட முடியாமல் போன தமிழர் பிரச்சினைக்கான உங்கள் தீர்வு என்ன ?

3) இணக்க அரசியலினூடாகத்தான் எம்பிரச்சினை தீர்க்கப்படமுடியுமா ?

4) எதிர்ப்பு அரசியலினூடாகத்தான் எம்பிரச்சினை தீர்க்கப்பட முடியுமா?

5) சர்வதேசம் எங்கள் பிரச்சினை தீர்த்து வைக்கும் என நீங்ககள் நம்புகிறீர்களா?

6) சிங்கள மக்களோ சரி தென்னிலங்கை அரசுகளோ சரி மாகாண சபைக்கும் மேலாக எந்த ஒரு தீர்வையாவது தரும் என்று சிங்கள மக்களின் மன நிலையை நன்குணர்ந்த,சிங்களத்தின் நண்பனான,சம்மந்தியான நீங்கள் நினைக்கின்றீர்களா ?

7) மாகாண சபையை திறம்பட நிர்வகித்து ,போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, போரினால் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றி ஒன்று பட்ட இலங்கைக்குள் கிடைக்ககூடிய நடைமுறைச் சாத்தியமான உரிமைகளைப்பெற்று எமது பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என நினைக்கிறீர்களா?

மதிப்புக்குரிய ஐயா நான் மேலே சொன்னவை உங்களை பாதித்திருந்தால் மன்னித்துவிடுங்கள்.
நான் மேலே சொன்னவை தனிப்பட்ட என் கருத்துமட்டுமல்ல பலபேரின் கண்ணீரும் கவலையும் அவை.
தயவு செய்து கிடைக்க முடியாது என உங்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயங்களை விட்டுவிட்டு உங்கள் கையிலிருக்கும் மாகாண சபையையும் அதன் நிர்வாகத்தையும் வினைத்திறனுடன் செய்து அதனால் மக்களுக்கு போய் சேரக்கூடிய உச்சக்கட்ட பலன்களை உறுதிப்படுத்துங்கள்.
மக்களை ஏமாற்றுவதை அரசியற்கட்சிகளிடம் விட்டுவிடுங்கள்.
நீங்கள் மகானாய் மட்டும் இருங்கள்,அவர்களின் மகனாய் இருக்காதீர்கள்……

முதலமைச்சர் விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவி ஏற்ற காலம் தொடக்கம் ததேகூ, குறிப்பாக தமிழ் அரசுக் கட்சியோடு முரண்பட்டே பேசிவருகிறார். 2015 ஓகஸ்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் நடுநிலமை வகிக்கப் போவதாக அறிவித்தார்.  அதையிட்டு விக்னேஸ்வரன்

I am very sceptic of what Wigneswaran says. Lately, he has been blowing hot and cold. He is lambasting the TNA top leadership (Sampanthan & Sumanthiran) for moving close to the Sinhalese in the south and ffollowing a policy of appeasement instead of confronting the government. Wigneswaran has no stomach for diplomacy and tactfulness. He is a novice, but thinks he is an all knowing pundit. In fact the TNA is having serious trouble with Wigneswaran because of his intemperate and confrontational politics. For example, he is at loggerheads with Prime Minister Ranil Wickremesinghe denigrating him as a Prime Minister with only 45 MPs. That he belongs to the same old Uncle Nephew party. This shows he is thoughtless and suffers from an uncontrollable ego.

Lately, he turned down a funding offer by the UNDP Resident Representative and UN Resident Coordinator to the tune of Rs.1,500 million under Peace Building Fund. He turned down this offer merely because the UNDP Resident Coordinator refused to play ball with him. The Coodinator was not willing, in fact opposed, to the request by Wigneswaran to appoint Karthikeyan Nimalan his nephew and an Australian citizen as Special Officer of the project. Wigneswaran even went to the extent of suggesting a monthly payment of US $ 5000 (Rs. 704,675.00) plus expenses! Nimalan is the Diary Secretary, Excutive Assistant and Political Advicor to the Cheif Minister. In a harhly worded letter rebuking Cheif Minister Wigneswaran, Mr.Subinay Nandy, UN Resident Coordinator and UNDP Residnet Representative wrote as follows: “There was no donor willing to fund a standalone advisory position for pre-selected candidate without following standard competitive process for recruitment. In addition the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment.” This rebuke by the UN Resident Coordinator places the Chief Minister in bad light. It shows he was only paying lip service to his crusade against nepotism and favouritism. Clearly, Wigneswaran has become a thorn in the flesh of the TNA. R.Sampanthan has promised to speak to him one – on – one basis. Whatever may be the outcome of the talks, Wigneswaran has clearly become a liability to the TNA.PreemanandapoliceTo assert that Wigneswaran has been ungrateful to Sambanthan and Sumanthiran is utterly ridiculous inappropriate and absurd” Uthugan.

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply