Dr.Ranjan

In all fairness to truth and reality the CTC should STOP claiming that it is the "unified voice of Tamil Canadian."

You stood and watched as a spectator during the referendum on Vaddukkoddai Referendum claiming "We're just watching it with interest," said David Poopalapillai, spokesman

for the Toronto-based Canadian Tamil Congress, the mainstream non-profit organization that bills itself as the voice of Tamil Canadians, with 11 chapters across the country.

"We have lots of other things in our basket, there are many other problems, though we welcome any democratic process."(Saturday's Globe and Mail Published on Saturday, Dec. 19, 2009)

The word Tamil Eelam has become a dirty word in the vocabulary of CTC. The word does not find a place in the constitution of the CTC.

It is the same situation with the Tamil National flag. CTC has been casting aspersions and insinuating those who carried the flag. The CTC claimed over electronic media that holding flag causes "inconvenience" (அசவுரியம்)

This is after Canada's Citizenship, Immigration and Multiculturalism Minister, Jason Kenny declared "The LTTE was listed as a terrorist organization in Canada in 2006, but flying its flag is NOT considered a criminal offence. There is a fundamental difference between expressing freedom of speech under the Charter of Rights and Freedoms and participating in, facilitating or providing material support to a terrorist group.(http://www.uktamilnews.com/?m=20091126)

The CTC failed to take a stand on the recently concluded presidential elections in Ceylon. Again like the ostrich it is burying its head regarding the National Assembly elections scheduled for March 27 and the elections to the Constituent Assembly of the TGTE.

 

Thangavelu

01-02-2010

 


 

Q1. what is Vaddukkoaddai resolution (VKR) OF 1976?

 

A1. After a continued democratic struggle (in the non-violent Gandhian style) for over 30 years, the Sri Lankan Tamils could never achieve any thing even their basic rights politically from the racist Sinhala Buddhist governments, since independence. This led the Tamil politicians under the distinguished leadership of S.J.V.Chelvanayagam Q.C. to formulate and declare the policies of the Tamil parties and its people, during the conference at Vaddukkodai in 1976. It was pronounced that a state – TamilEelam with full independence and sovereignty, is the only solution in order to achieve the Tamils-aspirations.

 

Q2. Why is this decision politically important?

 

A2. After serious research and analysis, S.J.V.Chelvanayagam had to formulate a motion which could encompass the Tamil sovereignty, Tamil nationhood, independent statehood, reversion to sovereignty, protection against genocide and right to self determination as commented by Professor A.J.Wilson.

 

Q3. Why is VKR unique and special?

 

A3. It is a resolution which achieved its validity immediately in the following election in 1977, which was contested on this principle being placed before the Tamil speaking people (in the form of a referendum) and was given the massive mandate. However, after the Prevention of Terrorism Act 1977 and the Sixth Amendment in 1983, any future proposal on Tamil Eelam was deemed illegal and hence all the avenues of taking up the Tamil’s aspiration were blocked – which left the VKR as the first and the last move the

Tamils could aspire politically.

 

Q4. How else is the VKR important?

 

A4. 1. Only during the 1977 elections, Tamils could vote freely without any intimidation by the Sri Lankan Army, major displacements and exodus of Tamils. This was the only election after the Sri Lankan Republican Constitution was passed in 1972, so that by this election, the Tamil people demonstrated how they rejected the unitary Sinhala constitution as illegal and anti-national.

2. It also endorses the rights and claims which the Tamil Diaspora would have over Tamil Eelam.

3. It formed the basis all future liberation struggles based on these goals. It induced the Tamil youth to launch their own struggle until they reached their goal of Tamil Eelam.

4. It demanded the TULF to formulate a program in order to continue towards this struggle.

5. Unfortunately, the Tamil politicians (After S.J.V.C’s death) could not fulfil their pledge, which made the Tamil youth disenchanted and frustrated. Thus, they decided to take up the “Military Option” against the Sri Lankan government.

6. VKR convinced the Tamils that there was a cultural genocide along with colonisation, the concepts of which were not properly grasped (or pretended not to be grasped) by some Tamils even today. That is the reason why they officially and legally rejected the unitary S.L. Constitution by voting for VKR in 1977 democratically.

7. VKR exposes the Sinhala Buddhists hegemony over the Tamils after the British rule. Today, the Tamil Diaspora, who are demanding justice from the International Community (IC) and pricking their conscience after the genocidal war (Fourth Eelam War), can now imagine how significant the VKR was, even though it was elected 34 years ago. In short, VKR is not just a milestone in Eelam Tamils’ history, but a mandate for the liberation of Tamils (with enormous sacrifice) from not only their enemies, but also other forces. As it is, the SLG is continuing with the propaganda that after the collapse of the war at Mullivaikaal, the Eelam Tamils have abandoned their goals of Tamil Eelam (as spelt out in the VKR) and no more interested in VKR.

 

Q5. VKR is 34 years old. So many events have taken place after this. And we are tired and exhausted. Should we renew this mandate, starting from square one?

 

A5. 1. There is a myth amongst the International Community that all the problems of Eelam Tamils can be contained in the 13th amendment.

2. The IC looks at the Tamil position as post conflict or post LTTE after the Mavillaru debacle. But now they have to look at the problem as “Post Sri Lanka” instead.

3. Traditionally, the western countries have the system whereby they reiterated and reconfirmed their policies by referendums from time to time. Hence this referendum will enhance the credibility of our demand.

4. This referendum will help to educate the present generation, who may not be acquainted with the politics or history of their earlier generations in Sri Lanka.

5. This referendum will send a tough message to those who may try to distract our national goal, particularly after a genocidal war.

6. After many decades, those born after 1959, will have an opportunity to express their democratic view on Tamil Eelam only now.

7. It has to be emphasized that all other attempts of political solutions ( forced by foreign elements) initiated from Thimpu to Oslo are only based in self determination, where as its only Tamil Eelam the sole aspiration of Eelam Tamil.

 

Q6. Do you think that the IC Who were never worried when a genocide took place at Mu’l’livaaykkaal with tens of thousands of death, will ever worry about this referendum ?

 

A6. At the time of the Vanni war, the IC had the lame excuse that SLG was fighting a war on terrorism. But, now, since SLG itself has openly declared that they have routed terrorism, the IC cannot use this excuse anymore. Also, the IC are now in a position “to realize” that the SLG has committed war crimes, human rights violations and genocide against “its own people”. Hence on the basics of the UN chapter (like the situation in KOSOVO), the claim for the Tamil Eelam has gained legitimacy. The recent decision in Dublin on human right violations, as well as the resolve by France to initiate legal proceedings against genocide etc, all indicate the changing attitude of IC. According to the proverb “Make the hay, when the sun shines”, this is the time for Tamils to win their rights.

 

Q7. Do VKR, TGTE or Peoples Committee (NCTT) all have the same agenda or are they different?

 

A7. VKR forms the base for all of them. But, these three institutions will work in a way most appropriate to them, in order to achieve the goal of Tamil Eelam without conflict amongst themselves.

Q8. Will this referendum reaffirm every clause in VKR?

A8. The referendum will reaffirm the fundamental principles that an independent sovereign Tamil Eelam is the only solution for the Tamils in the Tamil Eelam areas (North & East of Sri Lanka)

 

Q9: What is GTF Global Tamil Forum

 

A9: Global Tamils Forum in a nutshell

1. Grassroots organisation from over 15 countries in all 5 continents have joined hands to form the Global Tamil forum (GTF)

2. The inauguration Annual general meeting will be held in London with participation of many political and non-political local and international dignitaries.

3. The three main objectives of GTF:

1. To help free interned Tamils and men and women held without proper legal representation

2. To prosecute war criminals and persons who committed crimes against humanity in Sri Lanka

3. To lobby international governments and nongovernmental organisations and institutions to help to resolve the conflict in Sri Lanka on the basis of legitimate democratic mandate given by the Tamil people in Sri Lanka

4. As part of the first objective GTF has initiated a program to sponsor 1,000 orphaned and disabled Tamil children and 450 destitute families by the recent war in the Vanni.

5. As part of the second objective, GTF is in the process of collecting evidence and seeking advice to prove war crimes and crimes against humanity

6. As part of the third objective GTF, through the various country organisations, are actively engaging with senior politicians, civil servants and members of non-governmental organisations and institutions

7. Please visit www.globaltamilforum.org to find more information

Q10: Where I can learn more on Transnational Government of TamilEealm

Q10: http://govtamileelam.org/gov/ ( FAQ )

You can send your questions : http://govtamileelam.org/gov/index.php/contact-us

Q11: Where I can learn more on Peoples Committee (NCTT)

Q11: Please see the attached documents. Also as per the attached:

 

"மக்கள் கருத்தறிதலுக்காக பெப்பிரவரி 14ஆம் நாள் வரை மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் கனடியத் தமிழர் தேசிய அவைக்கான யாப்பு வருமாறு. உங்கள் கருத்துக்களை தவறாது அறியத்தரவும். இது குறித்த மக்கள் கருத்தாடல்கள் அனைத்துப்பகுதிகளிலும் வரும் நட்களில் நடைபெறும். அத்துடன் info@tamilelections.ca என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைக்கலாம்."


 

 

 ஏனென்றால், தமிழீழ மக்கள் முட்டாள்கள் அல்ல!

புதன், ஜனவரி 20, 2010 17:57 | நிருபர் கயல்விழி

 

ஏனென்றால், தமிழீழ மக்கள் முட்டாள்கள் அல்ல! பாரிசில் இருந்து சி. பாலச்சந்திரன் ('ஈழநாடு' பத்திரிகை)

அந்த நாட்டு மனிதர்கள் கூடியிருந்த அந்த மைதானத்தில் அந்த அவதார மனிதருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அந்த மனிதர் சிலுவையில் அறையப்பட்டு, மரணம் அடையும்வரை தொங்க விடப்பட்டார். அவரது விலாவில் ஈட்டியால் குத்தி இறப்பை உறுதி செய்துகொண்ட பின்னர், அவரது உடலை குகை ஒன்றினுள் வைத்து, பாறையால் மூடிவிட்டார்கள். அந்த நாட்டு அரசு அவரது மரணத்தை அறிவித்தது. அந்தக் காலத்தில், தொலைக்காட்சி வசதியோ, கணனி வசதியோ இருந்திருந்தால் அந்தக் கொடூரமான காட்சி உலகம் முழுவதும் காண்பிக்கப்பட்டிருக்கும்.  

 

 தேவகுமாரனின் மரணத்தை அவரை விசுவசித்தவர்கள் நம்பவில்லை. அவர் மீண்டும் வருவார் என்று நம்பினார்கள். அவர் மீண்டு வந்தார் என்று அவரது சீடர்கள் உறுதிபடக் கூறினார்கள். அவரது போதனைகளை உலகம் முழுவதும் கொண்டு சென்று பரப்பினார்கள். 2010 வருடங்கள் ஆகியும் அந்த மரணத்தை நிராகரித்த மக்களால் அவரது புனிதம் நிலை நிறுத்தப்பட்டது. இன்றவரை அவரது போதனைகள் வேதமாகப் பல கோடி மக்களை நெறிப்படுத்துகின்றது. இது புராணக் கதையல்ல. நிகழ்ந்தும் முடியாத வரலாறு.  

 

 கடந்த வருடம் அதே போன்று ஒரு படுகொலை அறிவிக்கப்பட்டது. அதனை யாரும் நேரடியாகப் பார்க்கவில்லை. கொலையாளிகளால் ஒரு மரணித்த உடலம் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டது. அந்தக் காட்சிகள் கணனிக் காணொளி மூலமாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. அந்தக் காட்சிகளின் உண்மைத் தன்மை கேள்விக்குரியதாக உள்ளதாக அறிவுசார் கருத்துக்கள் எழுந்தன. முதல் நாள் காண்பிக்கப்பட்ட காட்சிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் காண்பிக்கப்பட்டது. அவரை விசுவசித்த மக்கள் அந்தக் காட்சிகளை நம்ப மறுத்து நிராகரித்தார்கள். அவரது உடலம் எரியூட்டப்பட்டு, கடலில் வீசப்பட்டது என்ற கொலையாளிகளின் வார்த்தைகளையும் நம்ப மறுத்தார்கள். அவர் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது. அவரது சிந்தனையும் இலட்சியமும் உலகம்வாழ் தமிழர்களின் உணர்வுகளை மேம்படுத்தியது. அவரது இலட்சியத்தை நெஞ்சில் நெருப்பாக்கிக்கொண்டு புதிய பல போர்க் களங்களில் புகுந்து போராடுகிறார்கள்.  

 

 ஆம், தமிழீழத் தேசியத் தலைவர் குறித்த எதிரிகளின் அந்தப் பரப்புரைகளால் தமிழர்களின் எழுச்சி எந்த விதத்திலும் குறைந்து செல்லவில்லை. தங்கள் சூரியத் தேவனுக்கு மரணம் என்பது கிடையாது என்றே தமிழர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையோடு தங்களிடம் தலைவர் சுமத்தியுள்ள பணியினைத் தொடருகிறார்கள். அந்த நம்பிக்கையே அவர்களது பலம். அந்த நம்பிக்கையே அவர்களது வாழ்தலின் சுவாசம். அந்த நம்பிக்கையே அவர்களது எதிர்கால வெளிச்சம். தேவகுமாரன் உயிரோடு இருப்பதாக உலகம் நம்புவது போல், தேசியத் தலைவர் அவர்களும் ஒரு நாள் வருவார் என்று தமிழர்கள் நம்புகிறார்கள்.  

 

 இத்தனை பேரழிவு யுத்தத்தை நடாத்தி, தமிழீழ மண்ணைத் தமிழர்களின் புதைகுழிகளாக மாற்றிய எதிரிகள் விட்டு விடுவார்களா? சிங்களத்தில் சொல்வதைத் தமிழர்கள் ஏற்க மறுப்பதால் அதனைத் தமிழில் சொல்லவும் ஏற்பாடுகள் செய்தார்கள். தமிழில் சொல்லியும் தமிழர்கள் அதை ஏற்க மறுத்தே விட்டார்கள். ஆனாலும் பாலூற்றிக் கதை முடிக்கப் புறப்பட்டவர்கள் அதனை விட்டு விடுவதாக இல்லை. தலைவர் குறித்த நம்பிக்கை தமிழர்களிடம் இருக்கும்வரை தமக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பதால், முள்ளிவாய்க்கால் பேரவலம் முடியும்வரை முகம் காட்ட மறுத்தவர்கள் மீண்டும்... மீண்டும்... அதே வசனங்களோடு அரங்கிற்கு வரத் தவிக்கிறார்கள். அதற்காகத் தமிழ் மக்களை இரு துருவப்படுத்தும் முயற்சியிலும் சளைக்காமல் ஈடுபடுகிறார்கள்.  

 

 தற்போது அவர்களுக்கான அரங்கமாகவே 'நாடு கடந்த தமிழீழ அரசு' உருவாகி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ், பாரிஸ் புறநகரான சார்சேலில் நடைபெற்ற 'நாடு கடந்த தமிழீழ அரசு' அரங்கத்தில் இடம்பெற்ற உரையாடல்களும் இதையே உணர்த்தியது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இறந்துவிட்டார் என்று நிரூபிக்கும் முயற்சிகளும் அங்கே மேற்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவராக கே.பி. அவர்களே நியமிக்கப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே 'நாடு கடந்த தமிழீழ அரசு' உருவாக்கப்படுகின்றது என்றும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகளின் தற்போதைய புலம்பெயர் கட்டமைப்புக்களும் விமர்சனப்படுத்தப்பட்டது. மக்கள் பேரவைகளும் அவர்களது விமர்சனங்களிலிருந்து தப்பவில்லை.  

 

திரு. விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் மிகப் பெரிய தமிழீழ உணர்வாளர். தேசியத் தலைவர் அவர்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர். தமிழீழ மீட்பிற்கான அவரது முயற்சியும், பணியும் புனிதமானது என நாம் நம்புகின்றோம். ஆனாலும், அவரது பக்கத்தில் அமர முற்படுபவர்களது செயற்பாடுகள் அவரையும் தாழ்தும் அபாயங்கள் கொண்டதாகவே உள்ளன. தேசியத் தலைவர் அவர்களுக்குப் பாலூற்றிக் கதை முடிக்க முயற்சிப்பது, வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு வரலாற்று அவமானம் எனப் பிரகடனப்படுத்துவது, விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களை விமர்சிப்பது, மக்கள் பேரவைகள்மீது அவதூறான தாக்குதல்களைக் தொடுப்பது என்று அவரது அணியிலிருந்து சகதிகள் மட்டுமே வெளிவந்துகொண்டுள்ளன. மிகப் பெரிய தேசியக் கடமையினை நிறைவேற்றத் துடிக்கும் திரு உருத்திரகுமார் அவர்கள் காலம் தாழ்த்தாது இத்தகைய சேறடிப்புக்களை தடுத்து நிறுத்தாதுவிட்டால், அவரது முயற்சியே அதில் மூழ்கடிக்கப்பட்டுவிடும்.  

 முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்புப் பேரவலம் நடாத்தி முடிக்கப்பட்டு எட்டு மாதங்களாகிவிட்ட நிலையில், தமிழீழ மக்கள் அசைவியக்கமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அபாயகரமான தளத்தில் நின்றுகொண்டு தம்மால் முடிந்த நகர்வுகளைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. ஆக்கபூர்வமாக இயங்கக் கூடிய நிலையில் பலமாக உள்ளவர்கள் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமே. ஈழத் தமிழர்களின் எதிர்காலத்துக்கான போராடும் பொறுப்பும் தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தமிழர்களிடமே கையளிக்கப்பட்டது. அந்தப் பலத்தைச் சிதைப்பதற்கு முயலும் எவரையும் தமிழீழ மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.  

 

புலம்பெயர் தேசங்களில் உருவாகும் தமிழீழ அரசியல் சார்ந்த எந்த அமைப்பும் தனித்த பாதையில் பயணிக்க முடியாது. இது எமது இன விடுதலை சார்ந்த போராட்டம். இதில் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமே இல்லை. புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவு படுத்தி இரு துருவப்படுத்தி இலாபம் பார்ப்பதற்கு யாரும் முற்றபட முடியாது. அதற்கான அங்கீகாரத்தை புலம்பெயர் தமிழினம் வழங்கும் என்ற கற்பனாவாதம் செல்லுபடியாகாது. 

 

ஏனென்றால், தமிழீழ மக்கள் முட்டாள்கள் அல்ல! (பரிஸ் ஈழநாடு)

 


 

கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில், புலத்தில் வாழும் தமிழர்கள் பங்குபற்றுவது அவசியம்: கிழக்கு மாணவர் சமூகம்

வட்டுக்கோட்டையில் எட்டப்பட்ட வரலாற்று தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெறும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் புலத்தில் வாழும் தமிழர்கள் பங்குபற்றுவது தாயகத்தில் அல்லலுறும் எமக்கு உந்து சக்தியாக அமையும் என திருகோணமலையில் இருந்து தமிழ் மாணவர் சமூகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 

அன்பார்ந்த மக்களே!
 

கடந்து சென்ற 2009 ம் வருடம் தமிழர் வாழ்வில் கறைபடிந்த வரலாற்றை விட்டுச் சென்றுள்ளது. துன்பமும் சோகமும் நிறைந்த எம்மக்கள் எந்த இழப்புக்களை சந்தித்த போதும் தமிழ் மக்களின் முடிந்த முடிவு சுதந்திரத் தமிழீழமே என்ற முடிவில் உறுதியாகவே உள்ளனர்.

 

தமிழரின் படைப் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையிலிருந்த சிறீலங்காவின் படையை கைதூக்கிவிட்டு பக்கபலமாக தமது படைகளையும் அனுப்பிய வல்லாதிக்க சக்திகள் இன்று சிறீலங்காவில் நடைபெறும் தேர்தலின் போது தாம் செய்த துரோகத் தனங்கள் குறித்து பேசா மடந்தைகளாக இருக்குமாறு தமிழரின் ஜனநாயக பிரதிநிதிகளை எச்சரித்துள்ளனர்.

 

வட்டுக்கோட்டையில் எட்டப்பட்ட வரலாற்று தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெறும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் புலத்தில் வாழும் தமிழர்கள் பங்குபற்றுவது தாயகத்தில் அல்லலுறும் எமக்கு உந்து சக்தியாக அமையும்.

 

இன்று புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை பிரித்தாளும் தந்திரத்தை சிறீலங்காவும், இந்தியாவும் மேற்கொண்டு வருவது குறித்து புலம்பெயர்ந்து வாழும் எம்முறவுகள் புரிந்து செயல்பட வேண்டும். தமிழரின் ஆணை எது என்பதை, அதைவிட்டு நழுவ முற்படுபவர்களுக்கும், சர்வதேசத்திற்கும் புரியவைக்கும் சந்தர்ப்பம் தற்பொழுது உங்களுக்கு கிடைத்துள்ளது.

 

ஜனநாயகம் பேசுவோருக்கு அவர்களின் பாஷையிலேயே பதில் சொல்ல வேண்டும். தமிழரின் முடிந்த முடிவான தமிழீழக் கோரிக்கையின் அடிப்படையில் தெரிவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அழைத்த இந்திய வல்லாதிக்க சக்திகள் தமிழரின் அழிவின் போது தமது அரசு செய்த துரோகத்த தனங்கள் குறித்து பேசக் கூடாது என்பதுடன், த.தே. கூட்டமைப்பினரை ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வை ஏற்பதாகவும் அறிவிக்குமாறு வலியுத்தி உள்ளார்கள்.

 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

 

 


 

நம்மை நாமே திறனாய்வு செய்வோம்.

நமக்குள் நாம் கருத்தைக் கருத்தால் மோதுவோம்

கனடாவில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது 48583 மக்கள் வாக்களித்தார்கள். அவர்கள் அனைவரும் எம் தாயக மண்ணில் மானத்திற்காக பகட்டு வாழ்க்கைகளையெல்லாம் துறந்து மே 19 வரை போராடிய அந்த வீரர்கள் சிந்திய குருதிக்கு மதிப்பளித்து வாக்களித்தார்கள். அவர்கள் தான் தமிழ் தேசியத்தை எந்நிலை வந்தாலும் கைவிடாதவர்கள் தன்மானம் போனாலும் தமிழ் மானம் போகக்கூடாது. என்று நினைப்பவர்கள்.வாக்களித்த 48583 தமிழர்களும் நீடுழி வாழ்க. கனடா வாழ் மற்றைய தமிழர்கள் மே 19 2009ய் மறக்கவில்லை. தமிழ் மக்களை வழி நடத்துவதில் மே 19 பின்பு தலைவரால் அறிவிக்கப்பட்ட கேபி அண்ணருக்கும் அதனை ஏற்றுக் கொள்ளாதவர்கட்கும் இடையில் தங்கள் இருக்கைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக நடைபெற்ற சுயநலப் போட்டிகளை மக்கள் அறிவார்கள்.

நேற்றைய நண்பர்கள் இன்றைய எதிர்ப்பக்க வாதிகளாயினர் 37 வருடங்கள் உழைத்த போராளியுடன் கதைக்கவே தற்பெருமை பெருமை காட்டினார்கள். கேபியின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தொலைக்காட்சி, வானொலி கேபியின் செய்திகளை கனடாவில் இருட்டடிப்புச் செய்ததை நாம் நன்கறிவோம். முனம் திறந்து பேசினோம் மாற்றாரை மதிக்காத பண்பாளர்களுடன்.மனச்சாட்சியும் உண்மையும் தான் வெல்லும்.

பதில் - கருணாவும் 22 ஆண்டுகள் இயக்கத்தில் இருந்தவன்தான். ஆண்டை வைத்து எடைபடக் கூடாது. ஒருவரது செயலை வைத்துத்தான் எடைபோட வேண்டும்.

தலைவர் இருக்கும் போது கேபி விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளராகத்தான் நியமனம் செய்யப்பட்டார். வேறு பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்படவில்லை. கனடாவுக்கு அவர் ஒரு பொறுப்பாளரை தன்னிச்சையாக நியமித்தது சரியல்ல. அப்படிச் செய்வதானால் இருந்தவரை நீக்கிவிட்டு செய்திருக்க வேண்டும். கேபி மனம்போன போக்கில் விடுத்த அறிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நானும் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியிருந்தும் அவரது அறிக்கை, தலைவரின் வீரமரணம் வானொலி, தொலைக்காட்சியில் ஒலி, ஒளி செய்யப்பட்டது. மக்களின் எதிர்ப்பை அடுத்தே அவை நிறுத்தப்பட்டன.


பிரான்சில் 31148 மக்கள் தேர்தலில் கலந்து கொண்டார்கள் அவர்களுக்கு நாம் தலை சாய்த்து வணக்கம் தெரிவிக்கின்றோம். புpரான்சைப் போன்று 6 மடங்கு தமிழர்கள் வாழும் கனடாவில் 48583 பேர் தான் தேர்தலில் பங்கு கொண்டார்கள் என்பதை நமக்குள் நாமே ஏன் விவாதிக்க்ககூடாது?. ஆரெக்கியமற்றதா சொல்லுங்கள்?

பதில் - தாராளமாக விமர்ச்சியுங்கள். யார் வேண்டாமென்றார்கள்? இளையபாரதி போன்றோர் விமர்ச்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேபியை தலைவர் நியமித்தது உண்மை. ஆனால் எந்தப் பதவிக்கு என்பதுதான் கேள்வி. மே 17 க்குப் பின்னர் ஒரு குழப்பநிலை இருந்தது. அதன் காரணமாகவே நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி முடிவு எடுக்க முடியாது இருந்தது. ஆனால் பின்னர் அதற்கு நூற்றுக்கு நூறு விழுக்காடு ஆதரவு கொடுக்கப்பட்டது. கொடுக்கிறோம். அதற்கான தேர்தல் நிச்சயம் நடக்கும்.

கேபி அண்ணரின் நாடு கடந்த அரசுதிட்டத்தை அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர்கள் மறுத்துரைக்காமல் அதனைக் புதிய கருத்தாகக் கொண்டு விவாதிக்கத் தொடங்கிய போது தமிழ்மக்களின் மதிப்புக்குரிய நண்பர்கள் அது ஏற்றுக் கொள’ளமுடியாது என்று அறிவித்தார்கள்.தமிழ் அறிஞர் குழுக்களையே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்தார்கள். தமிழ் மக்களின் நம்பிக்குரிய வெப் சைட்டுகளும் தாங்கள் தான் முடிச+டா மன்னர்களாக(தமிழ் நெற்) நா.க தஇ அரசு பற்றி கட்டுரை வரைந்தார்கள் தமிழினத்தின் அரசியல் போராட்டங்களை தலைவர் உங்கள் கைகளில் தந்தாரா? கேபி அண்ணரிடம் கொடுத்தாரா?

பதில் - கேபிக்குக் கொடுக்கப்படவில்லை.

உண்மையை சொல்லுங்கள் . ஒன்றாக அரசியல் பாதையில் கை கோர்த்து நடப்போம்!நடக்க முடியும்! மனமிருந்தால் இடமுண்டு.இன்று குறைந்தது 100000 பேர் வாக்களித்திருக்க வேண்டிய கனடா நாடு ஏன் வாக்களிக்கவில்லை.

பதில் - ஒரு இலட்சம் வாக்குகளை எங்கிருந்து பெறுவது? 100,000 வாக்கைப் பெறவேண்டுமென்றால் மொத்த வாக்காளர்கள் நூற்றுக்கு விழுக்காடு வாக்களிக்க வேண்டும். அது சாத்தியமில்லை. ஒரு வீட்டில் உள்ள 4 பேரில் 2 பேர் வாக்களிக்க வேண்டும். அப்படிப்பார்த்தால் கனடியத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சம் வரும்.

நேரு போன்ற நண்பர்களளைத் தான் கேட்கின்றேன்.நாம் நல்ல கருத்துக்களை விமர்சித்த போது “நடவடிக்கை எடுப்போம்” என்றவர்கள் தமிழ் மக்களின் 100000 வாக்குகளை பெற்றிருந்தால் எனது கருத்துக்கள் பிழை என்பதை நான் நன்குணர்ந்திருப்பேன். பிரான்சு மக்களின் வாக்களிப்பினை தமிழ் மக்களை கனடாவில் வழி நடத்துபவர்கள் நன்கு அறிந்து,புரிந்து தான் கதைக்க வேண்டும். புpரான்சில் இயங்கும் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் அரவணைத்துக் கொண்டு போகின்றார்கள். கனடாவில் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடமில்லாமல் தனிப்பட்ட ஒருவரின் போக்குக்கு மற்றவர்கள் தலையாட்ட வேண்டும் என்று நினைத்தார்கள்.

பதில் - இதெல்லாம் விதண்டா வாதம். பிரான்சில் 32,000 பேர் வாக்களித்தார் என்கிறீர். அப்படியென்றால் ஒரு வீட்டில் 4 பேர் என்ற கணக்கில் மக்கள் தொகை 64,000. அதன் ஆறுமடங்கு 384000 கனடாவில் இருக்கிறார்களா?

கனடாவில் தமிழ்மக்களின் கருத்து என்ன? உம்மையும் உம்மைச் சுற்றி இருப்பவர்களும்தான் அந்த மக்களா? நேரு இயக்கம் அல்ல. அதன் செயற்பாட்டாளர் மட்டுமே? அவரைப் பற்றி விமர்சனம் செய்ய நினைத்தால் அவரைவிட நீங்கள் பாடுபட வேண்டும். ஒரு நாளில் 6 மணித்தியாலத்தை ஆவது செலவழிக்க வேண்டும். பேசப் போய்விட்டு கடைக்குப் போகவேண்டும் என்று அரைமணித்தியாலத்தில் புறப்பட்டுச் செல்லக் கூடாது. ஊர்ச்சங்கங்களை ஒன்று சேர்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்து சும்மா இருப்பதே சுகம் என்று இருக்கக் கூடாது. நேரு இயக்கப் பணத்தில் கடை போட்டவரா? வீடு வாசல் வாங்கியவரா? உம்மைச் சுற்றியுள்ளவர்களை சற்று உற்றும் பாரும். தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், விலக்கப்பட்டவர்கள அல்லது 20 ஆண்டுகளுக்கு மேலாக வனவாசம் சென்றவர்கள்தான் இருக்கிறார்கள்.

இது பற்றி நான் எனது நேரத்தை செலவழிக்கவில்லை. நேரிலும் எனது பக்கத்து நியாயத்தை சொல்லிவிட்டேன்.

என்னைப் பொறுத்தளவில் நான் ஒரு தொண்டன்தான். நான் பல பொறுப்பாளர்களைக் கண்டுவிட்டேன். குயுஊவு முடக்கப்பட்ட பின்னரும் எனது பங்களிப்பில் ஒரு துளிமாற்றமும் இல்லை. எந்த இடைவெளியும் இல்லை. எனக்கு தன்மானம் பெரிதல்ல. இனமானம் பெரிது.

125 000 மக்கள் புலிக்கொடி பிடித்தார்கள் வரலாறுபடைத்தார்கள். 48000 பேர் தான் வாக்களித்தார்கள். உயிர் போனாலும் மக்கள் புலிக்கொடி பக்கம் தான் கனடாவுக்கு புதிய செயற்பாட்டாளர்களை மக்கள் விரும்புகின்றார்கள். இக்கருத்தை நான் முன் வைக்கின்றேன்.

அன்புடன் கோபால் 20-12-2009

பதில் - வெறுமனே கனவு காண வேண்டாம். எந்த மக்களைச் சொல்கிறீர்? மாவீரர் விழாவுக்கு வந்த மக்களா? தலைவர் அகவை 55 எழுச்சிக்கு வந்த மக்களா? அல்லது வாக்களித்த 48583 மக்களா? இவர்களில் யார் புதிய செயற்பாட்டாளர்களை விரும்புகிறார்கள்? புலிக்கொடிக்கு எதிரானவர்தான் உமது பக்கம் இருக்கிறார்கள். அவர்களது பெயர்களைச் சொல்லச் சொன்னால் சொல்கிறேன்.

யார் எமது விடுதலைப் பயிருக்கு தண்ணீர் ஊற்றுகிறார்களோ அவர்களோடுதான் மக்கள் இருப்பார்கள். நானும் இருப்பேன்.



நக்கீரன்


 

யனவரி 21, 2010

கனடா

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துககுப் பேராதரவு அளித்து வரலாறு படையுங்கள்!  

 

நோர்வே, பிரான்ஸ், கனடா நாடுகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீது வெற்றிகரமாக  மீள் வாக்குக் கணிப்பு எடுத்ததைத் தொடர்ந்து சுவிசில் எதிர்வரும் 23, 24,  ஜெர்மனியில் 24,   நெதர்லாந்தில் 24, பிரித்தானியாவில் 30 ஆம் நாள் வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

 

தமிழீழ மக்களது அரசியல் வரலாற்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மிக முக்கிய திருப்பு முனையாகும். 1972 ஆம் ஆண்டுவரை அய்க்கிய இலங்கையில் இணைப்பாட்சி முறைமைக்கு தந்தை செல்வநாயகம் தலைமையில்  போராடி வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, அய்க்கிய இலங்கையில் ஒற்றை ஆட்சி முறைமைக்கு ஆதரவாக ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் செயற்பட்டு வந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், செளயமூர்த்தி தொண்டமானின் தலைமையில் இயங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பைத் தோற்றுவித்து வட்டுக்கோட்டையில் 1976 ஆம் ஆண்டு மே 14 இல் நடைபெற்ற அதன் முதல் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் "ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய இயல்பான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமய சார்பற்ற, சமவுடமைத் தமிழீழ அரசை மீள் எழுப்புதலும் மீள் உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ் தேசிய இனத்தின் இருப்பைப் பாதுகாப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது என இந்த மாநாடு தீர்மானிக்கிறது." 

 

(This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Tamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.)

 

தமிழ் இறைமை (Tamil Sovereignty) தமிழ்த் தேசியம் (Tamil Nationhood) அதன் அரசியல் இலக்கு (Independent Statehood) ஆகியவற்றை வரைவிலக்கணம் செய்வதுடன் இறைமை மீட்சிக்கான கோட்பாட்டையும் (Reversion to Sovereignty) இன அழிப்புக்குட்பட்ட (Genocide) ஒரு தேசிய இனத்தின் சுயாட்சி உரிமைக் கோட்பாட்டையும் (Right to Self-Determination) ஒருசேரப் பயன்படுத்தி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக அடிப்படைகளை முன்னெப்போதும் இல்லாதவாறு தெளிவாகவும், பின் எப்போதும் இதைவிடத் தெளிவாக ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்கான வினைத்திறன் ஒன்றின் தேவையை விட்டுவைக்காதவாறு நுண்மாண் நுழைபுலத்தோடு (Perspicacity)  இத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் தெளிவுற ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

1977 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்மக்களிடம் ஆணை கேட்டு 23 மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. .

 

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு பேராதரவு அளித்து வரலாறு படையுங்கள் என சுவிஸ், ஜெர்மன், நெதர்லாந்து மற்றும் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

-30-

 


 

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது 1976 மே மாதம் திகதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாக கைக்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். அதாவது "1976 மே மாதம் 14ம் திகதியன்று வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழர்கள் மங்களின் தொன்மை வாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம் பாரம்பரியம் ஆகியவற்றாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும்வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட தனித்தேசிய இனமாகவுள்ளாரென இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

மேலும் 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ்மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத்தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த்தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம் மொழி வாழ்வுடமை பொருளாதார வாழ்க்கை தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது........ ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமைபொருந்திய சமயசார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வறிவித்தல் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது."

உண்மையான பிரச்சனை யாதெனப்பார்த்தோமானால் தமிழ் மக்களது ஜனநாயக முடிவுகள் அரசபயங்கரவாதத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 இன் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாகப் பார்போமானால் - தமிழர் ஓர் தேசிய இனம் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் அவர்களது பூர்வீகத்தாயகம் அவர்கட்கு அவர்களது உரிமைகளை நிர்ணயிக்கும் உரிமையுண்டு. இலங்கை சுதந்திரம் அடைந்தபின் தமிழ்பேசும் மக்களின் உரிமைகான போராட்டங்களில் முதலாவது முப்பது வருடங்கள் அகிம்சை வழியிலும் அதைத்தொடர்ந்து அடுத்த முப்பது வருடங்கள் ஆயுதப்போராட்டத்திலும் ஈடுபட்டு பல வெற்றிகளை யுத்தத்தில் கண்டாலும் ஆயுதப்போராட்டம் பின்னடைவில்; முடிவுற்றது. இந்நிலையில் தமிழ்பேசும் மக்கள் அவர்களின் வரலாற்றில் மிகப்பெரியதோர் வெற்றிடத்தில் விடப்பட்டுள்ளனர்.

 

இச்சுழ்நிலையில் தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தையும் அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் பாதுகாக்கவேண்டிய கடமையும் அவர்களது உரிமைகட்காக ஜனநாயக முறையிலான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய பொறுப்பும் உரிமையும் கடப்பாடும் இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் அரசியற்தலைவர்களையும் தமிழ் அறிஞர்களையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் சார்ந்ததாகவே இருக்கின்றது. தற்போதைய நிலையில் தமிழ்க்கூட்டமைப்பைத்தவிர்ந்த ஏனைய தமிழ்கட்சிகள் யாவும் ஆளும் கூட்டாட்சியான மகிந்த அரசாங்கத்தோடு இணைந்தே தமது அரசியலை நடாத்துகின்றனர். சென்ற ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஆயுதப்போர் பின்னடைவு கண்டநிலையில் தமிழ்பேசும் மக்களது நிலமை மிக மோசமான நிலையிலேயுள்ளது.

 

இந்நிலையில் தமிழ்மக்களது நிலமை இலங்கை முழுவதுமே வாய்திறக்க முடியாத அளவிற்கு அராஜக ஆட்சியாகவுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மக்கள் தமது உரிமைகள் சம்மந்தமாக குரல் எழுப்பமுடியாத அளவிற்கு ஓர் சாட்சிகள் அற்ற போர் நடந்து முடிந்துள்ளது. மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் பிரச்சனைகளான அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை காட்டமுடியவில்லை. போர் வெற்றிக்களிப்பில் சிங்கள மக்களை மிதக்க விடுவதிலேயே தொடர்ந்தும் இவ்வரசாங்கம் அரசியல் தீர்வுக்கான செயல்முறைகட்கு அம்மக்களின் ஆதரவை வென்றெடுப்பதில் எவ்விதமான முயற்சியும் எடுக்கும் என்று நம்புவதற்கில்லை. ஆனால் அரசுசார்பாக இருக்கும் தமிழ்கட்சிகளும் அதன் ஆதரவாளர்களான சில புலம்பெயர்தமிழர்களும் மகிந்தாவின் ஆளும்கட்சிகளுக்கு நோகாமல் அவர்களோடு இணைந்து அவர்கள் தருவதை வாங்குவோம் அதுதான் "யதார்த்தம்" என்ற நிலையில் உள்ளனர். இந்நிலையில் புலம்பெயர் தமிழ்பேசும் மக்கள்; என்ன செய்யலாம்?

 

இராஜதந்திர முறையிலான போராட்டம் (Diplomatic War)

(இதை எமது மூனறாவது கட்டப்போராட்டமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். இதில் பலவிதமான போராட்ட முறைகள் இருக்கலாம். அதன் ஒரு கட்டமான போராட்ட நடவடிக்கைதான் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ் பேசும் மக்களால் நடாத்தப்படவுள்ள 1976 மே மாதம் 14ம் திகதி முடிவெடுக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி வடக்கு கிழக்கு இணைந்த(ஈழம்) தமிழ்பேசும் மக்களுக்கான அரசு ஒன்றை நிறுவுவதற்கான ஆணையை தாம் மீண்டும் ஜனநாயக முறையில் பெற்றுக்கொள்ள அறைகூவல் விடுவதாகவே இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடாத்தவுள்ளோம்.

 

தமிழரது நிலம் திட்டமிட்டு சிங்களமயமாகிறது.

 

ஈழப்பகுதிகளிலே தமிழ்பேசும் மக்கள் திறந்த்வெளிச்சிறைச் சாலையில் வாழ்வது போலவே வாழ்கின்றனர். வடகிழக்கு இராணுவ மயமக்கப்பட்டுள்ளது. இங்கு இராணுவ ஆட்சியில் பல இடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது. இவ்விடங்கள் தமிழ் மக்களது பூர்வீக குடியிருப்பு நிலங்களாகும். இவை நிரந்தர உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதால் அங்கு வாழ்ந்த மக்கள் அகதிமுகாம்களில் 1995ம் ஆண்டில் இருந்து வாழ்ந்து வருகின்றனர். இக்காலகட்டத்தில் ஆங்காங்கே புத்தவிகாரைகள் வரத்தொடங்கிவிட்டன, தெருக்கள் வீதிகள் சிங்களப் பெயராக மாற்றம் பெற்றுவிட்டன, நடந்த முடிந்த போரினால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தடுப்பு முகாம்களில் முட்கம்பிகளுக்கு நடுவே இராணுவக் காவலில் வைக்கப்ட்டுள்ளனர்.

 

இவர்களது நிலங்கள் பல இடங்களிள் ‘உயர்பாதுகாப்பு வலயமாக' கொண்டு வரப்பட்டுள்ளதால் இம்மக்கள் தமது நிலங்களுக்கு திரும்பப் போகவே முடியாத நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. இதோடு இப்படி அரசு திட்டமிட்டு இவற்றைச்செய்வதால் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கும் தொடற்சி துணடிக்கப்படுகிறது. இடையே இராணுவக் காவலுடன் சிங்களவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். தமிழ் மக்களின் வாழ்வாதரமாக இருந்த வன்னி நிலம் சிங்களவர்களால்; ஆக்கிரமிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கிழக்கு மாகாணம் 33 விகிதத்திற்கு மேல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தால் பறிபோய்விட்ட நிலையில் வடமாகாணம் அரச பயங்கர வாதத்தால் முற்றுகையிடபட்ட நிலையில் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களை சிந்திக்க வேண்டுகிறோம்.

 

தமிழ் மக்களது இறைமையை மீளப்பெறும் போராட்டம்

 

உலகு இலங்கையை ஓர் ஜனநாயக நாடு என்று கூறுகின்றது. ஆனால் 60 வருடங்களுக்கு மேலாக ஓர் இனப்பிரச்சினை இருப்பதை ‘உள்நாட்டுப்பிரச்சினை' என மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. 1956ம் ஆண்டின் பின்னர் ஒவ்வொரு பாராளுமன்றத்தேர்தலிலும் தமிழ்பேசும் மக்கள் சமஷ்டி முறையை ஆதரித்து வாக்களித்து வந்தனர். ஆனால் சிங்கள இனவாத அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதன் பின்னரே வட்டுக்கோட்டைத தீர்மானமும் அதனைத் தொடர்ந்து நடந்த 1977 பொதுத்தேர்தலும் அதில் மக்கள் அமோகமாக தனிநாட்டுக்காக வாக்களித்ததுமாகும். எனவே மக்கள் தமது கருத்தை மிகத்தேளிவாகவே கூறியிருந்தனர்.

 

ஆயுதப்போராட்டத்தாலும் அரசு எதையும் செய்யாத போதும் இலங்கையில் ஓர் இனப்பிரச்சினை இருக்கின்றது அங்கு அத்தமிழ்த் தேசிய இனத்துக்குரிய அரசியல் அந்தஸ்து வழங்கப்படவில்லை என்ற உண்மை உலகிற்கு நன்கு தெரியவந்துள்ளது. இப்போது இதை உணர்ந்த உலக நாடுகள் தமிழ்பேசும் மக்களுக்கு ஓர் ஜனநாயக முறையிலான அவர்கள் ஏற்கக் கூடியதான ஓர் தீர்வை முன்வைக்க வேண்டுமென இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. அண்மையில் UN,UK,USA,EU மற்றும் இந்தியா போன்றன இப்படியான அறிக்கைகள் விட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். விடுதலைபுலிகளின் பாதையில் பல பிழைகள் இருக்கலாம்.

 

ஆனால் அவர்களின் அடிப்படைப்போராட்டத்தின் பின்னணியில் ஓர் நியாயம் இருந்தது. தமிழ் மக்களுக்கு அவர்களுடைய அரசியல் அந்தஸ்து இந்நாட்டில் வழங்கப்படவில்லை என்ற உண்மை இருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் எவ்வித அரசியல் அந்தஸ்துக்களும் கிடைக்காவிட்டாலும் உலகிற்கு இலங்கையில் ஜனநாயகம் என்ற போர்வையில் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாத அராஜக ஆட்சி நடைபெறுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இலங்கையில் அமைதி திரும்பவேண்டுமானால் தமிழர் பிரச்சினை அவர்களது ஜனநாயக அபிலாஷைகளுக்கேற்ப தீர்க்கப்படவேண்டும். மகிந்த அரசு தாம் இந்த இன மோதலில் விடுதலைப்புலிகளை வென்றுவிட்டதால் தமிழர்களை அடக்கி ஆளலாம் என முடிவுகட்டிவிட்டார்கள்.

 

முல்லைத்தீவில் முள்ளிவாய்காலில் விடுதலைபுலிப் போராளிகளையும் 50'000 மக்களையும் புதைத்தது போல் தமிழர்களது உரிமைப் போராட்டத்தையும் புதைத்துவிட்டடோம் என மகிந்த ‘இந்து' பத்திரிகைக்கு கூறியிருந்ததையும் அவரது அமைச்சர்கள் இதேபோல் கூறிவருவதையும் பார்த்திருப்பீர்கள். உண்மையில் ஜனநாயகம் எப்போதோ புதைக்கப்பட்டுவிட்டது. மகிந்த ஆட்சியில் இலங்கையில் இரண்டு விதமான மக்களே வாழமுடியும். முதலாவது சிங்கள-புத்த அரசை ஏற்று அதை மதித்து நடப்பவர்கள். அவர்களே நாட்டுப்பற்றாளர்கள். இரண்டாவது- அதை எதிர்பவர்கள. இவர்கள் நாட்டின் துரோகிகளாகக் கணிக்கப்படுகின்றார்கள் என மகிந்த பல மேடைகளில் பேசி வருவதைப் பார்க்கின்றோம். இப்படியான இனவாதப் பேச்சு இலங்கையில் தமிழ்பேசும் மக்களை முற்றாக அழிக்கும் திட்டத்தில் உருவானதாகும். மகிந்த அரசின் நடவடிக்கைகளை கவனித்தீர்களானால் இதை நீங்கள் நன்கு ஊகிக்க முடியும். எனவே எம் அன்பான மக்களே சிந்தியுங்கள்.

 

இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு போராட்டத்தின் அவசியம்.

 

இலங்கை அரசின் அராஜக நடவடிக்கைகட்கு எதிராகவும் அவர்களது இரகசியத்திட்டங்கட் எதிராகவும். புலம் பெயர் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்து தொடர்பாக போராடவேண்டும். வன்னியில் நடந்த போரை நிறுத்தக் கோரி உலகளாவிய புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடாத்தினார்கள். பிரிட்டனில் 73 நாட்களாக பாராளமன்ற முன்றலில் தொடர்ந்த மறியல் போராட்டங்கள் உண்ணாவிரதம் நடாத்தினோம். அவற்றால் ஒரளவு அனுதாபம் ஏற்ப்பட்டாலும் போர் முடியும் வரை, எந்த ஒரு நாடும் உருப்படியாக எதையும் செய்யவில்லை. அவர்கள் எம் மக்களைப் பயங்கரவாதிகளாகவே பார்த்தனர்.

 

இந்நிலையில், இந்த வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டும் எமது போர் பயங்கரவாதப் போர் அல்ல. எமது சுயநிர்ணய உரிமைக்கான போர். மக்கள் அதற்காக பலதடவை வாக்களித்துள்ளனர். அதை திரும்பவும் நினைவூட்ட முனைவதுதான் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடவடிக்கை என்று கூறிவைக்கவேண்டும். இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வழி எதுவுமே இல்லை. அங்கே 1948ம் ஆண்டில் இருந்து ஓர் அராஜக ஆட்சியே நடை பெறுகின்றது. இதை மாற்றவேண்டுமானால் புலம் பெயர் தமிழர்களால் தொடர்ந்து தொடர்பாக பலவிதமான போராட்டங்களும் நடாத்தப்படவேண்டும். அதில் முக்கியமானதொன்றுதான் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு. இதன் மூலம் எமது இழந்த உரிமைகளைப் பெறும் உரிமைப்போராட்டத்தை தொடர முடியும்.

 

உண்மை நிலையை உலகிற்கு உணர்துதல்

 

எமது ஜனநாயக நிலையை உலகிற்கு உணர்த்த இப்பொது வாக்குக்கணிப்பு அவசியமாகும். அதோடு இது ஈழவரின் உண்மையான அரசியல் நிலமையை உலகறியச் செய்யும். மேலும் இலங்கையிலும் வட-கிழக்கில் அவர்களது உரிமையை நிர்ணயிக அங்கும் ஓர் பொதுமக்கள் வாக்குக்கணிப்பு நடாத்தப்படவேண்டு மென்று இலங்கை அரசை நிர்பந்திக்க முடியும். உலகில் பொது மக்கள் வாக்குக்கணிப்பு மூலம் பல இனங்கள் தமது சுயநிர்ணய உரிமையை நிர்ணயிக்க முடியுமானால் தமிழ்பேசும் மக்களால் ஏன் முடியாது. இன்று இலங்கையில் தமிழ்பேசும் மக்களுகு நியாயம் வழங்கப்படவில்லை என்பதை உலகம் உணரத்தொடங்கியுள்ளது. ஆதை மேலும் வலுப்படுத்தவே புலம்பெயர் தமிழர்களால் எடுக்கப்படும் நடவடிக்கையே இப்பொதுமக்கள் வாக்குக்கணிப்பாகும்.

 

ஒன்றுபட்டு போராடுவதின் அவசியம்

 

எமது நடவடிக்கை காலத்தின் கட்டாயமாகும. ஆகவே அன்பான பொது மக்களே கருத்துவேறுபாடுகள் (Ideology) பிரதேசவாதம் கட்சி வாதங்கள் சமயவாதங்கள் மற்றும் குரோதங்களை மறந்து ஈழவர் பிரச்சினைகள் தீர சகல புலம்பெயர் தமிழ்பேசும் மக்களும் ஒன்றிணைய வேண்டும். அத்தகைய ஒன்றிணைவதற்கான சாத்தியத்தை தடுக்கும் முயற்சிகள் எப்போதோ ஆரம்பமாகிவிட்டன என்பதனை அனைத்து தமிழ்கட்சிகளின் தலைவர்களும் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடப்பார்களாக. முன்பு பல தமிழ் அமைப்புகள் பொது எதிரியான சிறீலங்காவின் அரசுக்கு எதிராக வேலை செய்தார்கள்.

 

இப்போது இப்பொது எதிரியுடன் சிலர் இணைந்து தமிழ் பேசும் மக்களின் நலனுக்கு எதிராக வேலைசெய்கின்றார்கள். இந்நிலையை அவர்கள் மீளாய்வு செய்யுமாறு தயவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்கள் யாவும் தாம்பெரிது நீ சிறிது என்று பாகுபாடு காட்டாது இவ்வட்டுக்கோட்டடைத் தீர்மானத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வீர்களாக.தமிழ்மக்கள் கையேந்திப்பிழைப்பவர்கள் அல்லர். அவர்கள் தன்மானத்தோடு தமது தாயகத்தில் ஓர் தேசிய இனமாக சுயநிர்ணய உரிமையோடு வாழவிரும்புகின்றார்கள்.

 

அவர்களது எண்ணம் ஈடேற இப்பொழுது மக்கள் வாக்குக்கணிப்பு ஓர் பங்கை வகிக்க வேண்டும். இதை வெற்றியளிக்கச் செய்வீர்களாக. ஆகவே பிரித்தானியா வாழ் தமிழ் பேசும் மக்களே! நாமும், நமது உற்றார் உறவினர்களும், எமது சொந்த பந்தங்களினதும், ஈழ உறவுகளினதும் இறைமைக்காகவும், ஜனநாயக உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், பூர்வீக நிலத்தில் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்காகவும் வரப்போகும் வரப்போகும் தை மாதம் 30ம் திகதி நடக்கவிருக்கும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எமது பெரும்பான்மைத் தீர்வை உலகுக்கு உணர்த்த வேண்டும்.இதுவே ஈழத்தில் வாழும் உங்கள் உறவுகளுக்காக நாங்கள் செய்யும் ஒப்பற்ற கடமையும், உதவியுமாகும்.

 

தமிழ் தேசிய சபை
 

www.vkr1976.org.uk

ஸ்ரீரஞ்சன்: 07841 522514
இரகுநாதி: 07807 108318
பரமகுமரன்: 07958 507010

 


 

சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை பெறப்பட்ட அரசியல் தீர்மானம்.

 

30 வருட அமைதிவழிப் போராட்டத்தின் முடிவுக்காலத்தில்இ 1976 ஆம் ஆண்டு மே மாதம் தந்தை செல்வாவின் தலைமையில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பின் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாய்க் கூடி வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் எனும் இடத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். சுதந்திரமும் இறைமையுள்ள தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் தமிழ்த்தேசியத்தின் மீட்சிக்கு தவிர்க்கமுடியாதது என்பது மாத்திரமல்ல ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்கு தனிவேறான தமிழீழ அரசு என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பும் ஒரே ஒரு மக்களாணை பெற்ற தீர்மானமும் இதுதான்.

 

இத் தீர்மானத்தின் அரசியல் முக்கியத்துவம் என்ன?

 

தமிழ் இறைமை (Tamil Sovereignty தமிழ்த் தேசியம் (Tamil Nationhood)  அதன் அரசியல் இலக்கு  ஆகியவற்றை வரைவிலக்கணஞ்செய்வதுடன் இறைமை மீட்சிக்கான கோட்பாட்டையும் (Reversioh of Sovereignty) இன அழிப்புக்குட்பட்ட (புநழெஉனைந) ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் ; (சுiபாவ வழ ளுநடக-னுநவநசஅiயெவழைn) ஒருசேரப் பயன்படுத்தி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக அடிப்படைகளை முன்னெப்போதும் இல்லாதவாறு தெளிவாகவும்இ பின்னெப்போதும் இதைவிடத் தெளிவாக ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்கான திறமை ஒன்றின் தேவைக்கான இடைவெளியை விட்டுவைக்காத அளவு மதிநுட்பத்துடனும்இ தந்தை செல்வா அவர்களினால் இத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் தெளிவுற ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தை செல்வா அவர்களே நேரடியாக இத்தீர்மானத்தை இதன் ஒவ்வொரு சொல்லையும் பகுப்பாய்வுசெய்து இயற்றினார் என்றுயு து றுடைளழn எனும் அரசியல் வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார்.

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கென்றே சிறப்பான முக்கியத்துவம் என்ன?

 

இதன் சிறப்பு என்னவென்றால்இ அடுத்தவருடம்இ அதாவது 1977ம் ஆண்டுஇ இலங்கைத் தீவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் தமது பெருவாரியான வாக்குக்கள் மூலம் இத் தீர்மானத்திற்கு மக்களாணை வழங்கியமை. இதுவே தமிழீழத் தனியரசுக்காக இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வாக்களித்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையாக விளங்குகிறது. இதனால் தான் இதை நாம் இன்று மீளவும் ஜனநாயகமும் கருத்துச்சுதந்திரமும் வாழும் ஏனைய நாடுகளில் எடுத்தாளமுடிகிறது.

 

1977 இற்குப் பின்னர் தமிழீழம் குறித்த மக்களாணையை இலங்கைத் தீவில் ஜனநாயக முறையில் முன்வைக்கமுடியாதவாறு அடக்குமுறைச் சட்டங்கள் (1979 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்) கொண்டுவரப்பட்டது மட்டுமல்ல சிறிலங்காவின் அரசியல் யாப்பிலே 6ம் திருத்தம் என்ற திருத்தத்தையும்; 1983 இல் கொண்டுவந்து தனிநாட்டுக்கோட்பாட்டை - அதாவது இந்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையை - யாப்புரீதியாகவே சிறிலங்கா அரசு மறுதலித்துவிட்டது.

 

இதனால் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசுக்கான தமது மக்களாணையை மீளவும் ஜனநாயக முறையில் வெளிப்படுத்த முடியாத நிலையே தாயகத்தில் தொடர்கிறது. இன்றுவரை இந்த 77ம் ஆண்டு மக்களாணையே இலங்கைத் தீவிலுள்ள ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் முதலாவதாக மட்டுமல்ல இறுதியாகவும் தமிழீழத் தனியரசுக்காக வெளிப்படுத்தக்கூடியதாகவிருந்த மக்களாணையாகும்.

 

1977ம் ஆண்டுத் தேர்தல் வேறு எந்த வகையில் முக்கியமாகிறது?

 

இந்த 77ம் ஆண்டுத் தேர்தலேஇ தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரைஇ இறுதியாக இராணுவக் கெடுபிடிகள்இ பாரிய இடப்பெயர்வுகள் புலப்பெயர்வுகள் இல்லாத நிலையில் சுதந்திரமான முறையில் நடந்த இறுதித் தேர்தலாகும். இது 1972ம் கொண்டுவரப்பட்ட சிங்கள மேலாதிக்க ஒற்றையாட்சிக் குடியரசு யாப்பு அமைக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தீவில் நடாத்தப்பட்ட முதலாவது தேர்தல்.

 

இதனால் இத் தேர்தலிலேயே வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த அரசியல் யாப்பை நிராகரிப்பதற்கான வாய்ப்புக் கிட்டுகிறதுஇ ஏனென்றால் தமிழீழ மக்கள் சுதந்திர நாட்டிற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு அளித்த மக்களாணை தனது வரைபில் 1972ம் ஆண்டு யாப்பை தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதென்றும்இ சட்டவிரோதமானதென்றும் அதைத் தமிழர்கள் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த வகையில் இன்று வரையுள்ள சிறிலங்காவின் யாப்பை தமிழர்கள் நிராகரித்தமைக்கான சட்டபூர்வமான ஜனநாயக ரீதியான வெளிப்படுத்தலுக்கான முக்கியத்துவமும் 77ம் ஆண்டின் தேர்தலுக்கு உண்டு.

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு மேலதிக சிறப்பம்சங்கள் வேறு ஏதும் உண்டா?

 

ஒன்றிரண்டல்ல பல உண்டு.

 

தமிழீழத் தனியரசு அமைக்கப்படவேண்டியதற்கான அரசியல் வரலாற்று நியதிகளையும்இ மனிதாபிமான நியாயப்பாடுகளையும் அமைக்கப்படவேண்டிய தமிழீழ அரசின் பிரஜாவுரிமை அதன் மத சார்பற்ற சாதி வேறுபாடற்ற தன்மைகள் போன்ற பல அடிப்படை விவகாரங்களை ஒரு சில பக்கங்களுக்குள் சுருக்கமாகவும் நுட்பமாகவும் இந்தத் தீர்மானம் தொகுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல தமிழீழத்தின் ஒரு பிராந்தியத்தை வேறொரு பிராந்தியமோ அல்லது ஒரு சமய அல்லது சமூகக் குழுவினரை இன்னொரு குழுவினரோ மேலாதிக்கம் செய்யாதிருக்கும் வகையில் ஜனநாயகப் பன்முகப்படுத்தற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ அரசு அமையவேண்டும் என்றும் இத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

இவற்றுக்கப்பால்இ உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்குத் தமிழீழத் தாயகத்தின் மீதான உரிமையைக் கூட இந்தத் தீர்மானம் நிறுவுகின்றது.இத் தீர்மானத்துக்கு 77இல் கிடைத்த மக்களாணையை அடிப்படையாகக் கொண்டே பின்னாட்களில் தொடர்ந்த தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது (கிளிநொச்சியில் 2002 சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டில் தேசியத் தலைவர் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

 

(அளப்பரிய தியாகங்களைப் புரிந்துஇ தமிழீழ அரசு அமைக்கப்படும் வரை அஞ்சாது போராடுவதற்கான வேண்டுகோளை பொதுவாகத் தமிழ்த் தேசிய மக்கள் அனைவருக்கும்;இ குறிப்பாக இளைஞர்களுக்கும்இ இந்தத் தீர்மானம் அறைகூவலாக விடுத்திருந்தது. தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயற்திட்டமொன்றை வகுக்குமாறு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இந்தத் தீர்மானம் பணித்திருந்தது. தமிழீழம் சமதர்ம அரசாக இருக்கவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கூறுகிறது. (இது அன்றைய பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்திற்குரிய உலக ஒழுங்கைக் கருத்திற்கொண்டு பார்க்கப்படவேண்டியது.)

 

தந்தை செல்வா மறைந்த பின்னர் (மீளவும்) உருவான தலைமை தமக்குக் கொடுக்கப்பட்ட ஆணையை செயற்படுத்தவில்லை. தமிழீழத்திற்கான அரசியல் நிர்ணய சபையை உருவாக்குவதற்கு வடக்குஇ கிழக்கில் தெரிவான பிரதிநிகள் செயலாற்றவில்லை. இதனால் இளையோர் வெறுப்படைந்தனர். ‘கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்' என்பது போன்ற வாசகங்களை தெருச் சுவர்களில் எழுதி தமது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை மீதான தமது அதிருப்தியை வெளிக்காட்டினார்கள். இதைத்தொடர்ந்து இராணுவரீதியாக தமிழ் இளையோர் அந்த மக்களாணைக்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகின்றனர். இதுவே ஆயுதப்போராட்டம் தீவிரமடைவதற்கான அரசியல் அடிப்படையைக் காட்டுகிறது.

 

இன அழிப்பின் ஆழத்தை இன்று கூட தெளிவாக எம்மவர் எடுத்தியம்பும் ஆற்றலை வளர்த்துக்கொண்டிராத அல்லது வளர்த்துக்கொள்ள ‘விரும்பாத‘ ஒரு சூழலில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அன்றே சிங்களப் பெருந்தேசியவாதிகளின் நுட்பமான பண்பாட்டு இன அழிப்பு (ஊரடவரசயட புநழெஉனைந) மற்றும் திட்டமிட்ட தாயக மண்பறிப்பு (ஊழடழnளையவழைn)போன்றவற்றை விடுதலைக்கான தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக எடுத்தியம்பியிருக்கிறது. சிறிலங்காவின் அரசியல் யாப்பு தமிழர்களைப் பொறுத்தவரை சட்டவிரோதமானது என்பதையும் அது தமிழர்களை ஆக்கிரமித்து அடிமைத் தேசிய இனமாக்கியுள்ளது என்பதையும் குறிப்பிட்டு காலனித்துவ சக்திகளுக்குப்பின் சிங்களப் பெருந்தேசியவாதத்தை ஓர் புதிய ஆக்கிரமிப்புச்சக்தியாக இத் தீர்மானம் இனம் காண்கிறது.

 

இந்த வகையில் இத் தீர்மானத்தின் அரசியற் கனதியானது 34 வருடங்களுக்கு முன்பே எந்த அளவு ஆழமானதாயிருந்ததென்பது இன்றைய இன அழிப்புப் போரொன்றின் (ஈழப்போர்-4) முடிவில் உலக மனச் சாட்சியின் கதவுகளைத் தட்டும் புலம் பெயர் தமிழர்களால் மீள உறுதிசெய்து காட்டப்படவேண்டியதாகிறது.

 

ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரலாற்றுப் பக்கங்களில் குறிப்பிடப்படுவதற்கான ஒரு வெறும் ‘பழைய மைல்கல்' நிகழ்வு மட்டும் அல்லஇ தொடர்ந்து வந்த அளப்பரிய அர்ப்பணிப்புகளாலும் எதிரி மட்டுமன்றி பலவேறுபட்ட சக்திகளின் அநீதியான அணுகுமுறைகளாலெல்லாம் எல்லை மீறிக் கனதிப் படுத்தப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான மக்கள் ஆணை.

 

வட்டுக்கோட்டையில் தொடங்கிய தமிழர்களின் போராட்டம் நந்திக்கடலில் நடந்த சமருடன் முடிவடைந்துவிட்டதாக ராஜபக்ச அரசு தனது 18 மே 2009 ‘வெற்றிப்பிரகடனத்தில்' முழங்கியது. இது எந்த அளவுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஜனநாயக அரசியல் தார்ப்பரியத்துக்கு சிறிலங்கா அரசு அச்சம் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பதிலளிக்கப்படவேண்டிய கேள்விகள் (இன்னும் பல முக்கியமான கேள்விகள் உள்ளன)

 

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி 34 வருடங்கள் கடந்து விட்டது. இதற்கு பிறகு எத்தனையோ நல்லது கெட்டது எல்லாம் நடந்து முடிந்து நாங்கள் நன்றாக களைத்துப்போன நிலையில் இருக்கின்றோம். இதை ஏன் இப்போது மீண்டும் புதுப்பிக்க வேண்டும்? முதலில் இருந்து எல்லாவற்றையும் தொடங்க வேண்டுமா?

 

Ø சர்வதேச சக்திகள் பலவும் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை 13வது திருத்தச் சட்டத்திற்குள் அடக்கிவிடலாம் என்று நினைக்கின்றன. இந்த நிலையில் எமது தீர்க்கமான முடிவை ஜனநாயக ரீதியில் எடுத்துரைப்பது அவசியம்.

 

Ø முள்ளிவாய்க்கால் போர் முடிந்தவுடன் ஸ்ரீலங்காவின் உந்துதலில் சில நாடுகள் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தேசியக் கோட்பாட்டைக் கைவிட்டுவிட்டு எந்தவிதமான தீர்வையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பதற்கும் இடமுண்டு. Pழளவ உழகெடiஉவ என்றும் Pழளவ டுவுவுநு என்றும் தற்போதைய நிலையை இவர்கள் வர்ணிக்க முயல்கின்ற போதும் ஈழத்தமிழர்களாகிய எமது உண்மை நிலை Post Sri Lanka  என்பதை வர்ணிக்க வேண்டும்.

 

Ø மேற்குலக நாடுகளின் அரசியல் பண்பாட்டைப் பின்பற்றி மக்கள் ஆணையை முறைக்குமுறை மீள் உறுதி செய்வது எமது கோரிக்கையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும்.

 

Ø இலங்கைத் தீவின் அரசியலில் பரிட்சயம் இல்லாத தற்போதைய இளைய சமுதாயத்தினர்க்கு எமது தேசிய நிலைப்பாடுக் குறித்த ஒரு அரசியல் சரித்திர அறிவை வளர்க்க இம்முயற்சி உதவும்.

 

Ø ஒரு பாரிய இனவழிப்பிற்கு பின்னரும் எமது தேசிய இலக்கை திசை திருப்ப முயலும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய முயற்சி ஒரு எச்சரிக்கையாக அமையும்.

 

Ø 1977ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மக்களாணைக்குப் பின் பல தசாப்தங்கள் கடந்த நிலையில் குறிப்பாக 1959ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் ஜனநாயக ரீதியாக தமது தமிழீழத்திற்கான ஆணையை கருத்துச் சுதந்திரம் உள்ள நாடுகளில் தற்போதுதான் முதன்முறையாக இதற்காக வாக்களிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

 

Ø பிறசக்திகளின் நிர்பந்தங்களின் மூலம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பின்னால் உருவாக்கப்பட்ட முன்னெடுப்புகள் (திம்பு முதல் ஒஸ்லோ வரை) சுயநிர்ணய உரிமைஇ உள்ளக சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளை மாத்திரமே கருத்தில் கொண்டவை. தற்போது தமிழீழம் மாத்திரமே எமது குறிக்கோள் என்பதை மீளவும் வலியுறுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

முள்ளிவாய்க்கால் வரையான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதுகூட எதுவும் செய்யாது மௌனமாக இருந்த சர்வதேசம் இந்த வாக்கெடுப்பின்மூலம் மட்டும் திரும்பிப் பார்க்கும் என்று நினைக்கின்றீர்களா?

 

சர்வதேச சக்திகள் பயங்கரவாதத்தின் மீதான போர் என்று சாக்கு போக்கு சொல்ல இனிமேல் வாய்ப்பில்லை. ஸ்ரீலங்கா அரசு பாரிய மனித உரிமை மீறல் போர்க்குற்றம் இன அழிப்பு புரிந்ததாக உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. ஐ.நா மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் கொசோவோ மக்கள் போல ஈழத் தமிழர்களும் தனிநாடுதான் ஒரே தீர்வு என்று கேட்கும் உரிமை மேலும் வலுப்பட்டுள்ளது.

 

"காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்பதுபோல இத்தருணத்தை தமிழ் மக்கள் தக்க முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம். அண்மையில் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்று முடிந்த மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறீலங்கா அரசு போர்க்குற்றம் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றம் புரிந்ததாகவும் இன அழிப்புக் குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பிரான்ஸ் நாடு இன அழிப்பிற்கு எதிரான நீதிமன்றம் அமைக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டிருப்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

 

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மக்கள் அவை நாடுகடந்த அரசாங்கம் என்று மூன்று வேலைத்திட்டங்கள் எல்லாம் ஒன்றா அல்லது வெவ் வேறா?

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள அரசியல் கோட்பாடுகள்தான் எல்லாவற்றிர்க்குமே அடிப்படை. இது ஒரு தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் ஜனநாயக செயற்பாடேயொழிய கட்டமைப்பு அல்ல. மக்களவை இந்த தீர்மானத்தை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் இயங்கப்போகும் நாடு தழுவிய மக்கள் கட்டமைப்பு.

 

நாடு கடந்த அரசாங்கம் என்று குறிப்பிடப்படுவது தேச எல்லைகள் தாண்டி அமைகின்ற ஒரு மக்கள் கட்டமைப்பு.

 

இவையிரண்டும் தமக்கே உரிய முறையில் நிலைக்குத்தாகவும் சமாந்திரமாகவும் தமிழீழம் என்ற ஒரே இலக்குக்காக தமக்குள் முரண்பாடின்றி ஒன்றித்தோ அல்லது ஒன்றினைந்தோ செயற்பட வேண்டியவை.

 

இவையிரண்டிற்கும் தனித்தனியேயான செயற்தளங்கள் உண்டு. இவ்விரு செயற்தளங்களிலும் தீவிரமாக எமது கொள்கையை முன்னெடுக்க வேண்டும்.

 


 

யனவரி 21, 2010

கனடா

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துககுப் பேராதரவு அளித்து வரலாறு படையுங்கள்!  

 

நோர்வே, பிரான்ஸ், கனடா நாடுகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீது வெற்றிகரமாக  மீள் வாக்குக் கணிப்பு எடுத்ததைத் தொடர்ந்து சுவிசில் எதிர்வரும் 23, 24,  ஜெர்மனியில் 24,   நெதர்லாந்தில் 24, பிரித்தானியாவில் 30 ஆம் நாள் வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

தமிழீழ மக்களது அரசியல் வரலாற்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மிக முக்கிய திருப்பு முனையாகும். 1972 ஆம் ஆண்டுவரை அய்க்கிய இலங்கையில் இணைப்பாட்சி முறைமைக்கு தந்தை செல்வநாயகம் தலைமையில்  போராடி வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, அய்க்கிய இலங்கையில் ஒற்றை ஆட்சி முறைமைக்கு ஆதரவாக ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் செயற்பட்டு வந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், செளயமூர்த்தி தொண்டமானின் தலைமையில் இயங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பைத் தோற்றுவித்து வட்டுக்கோட்டையில் 1976 ஆம் ஆண்டு மே 14 இல் நடைபெற்ற அதன் முதல் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் "ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய இயல்பான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமய சார்பற்ற, சமவுடமைத் தமிழீழ அரசை மீள் எழுப்புதலும் மீள் உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ் தேசிய இனத்தின் இருப்பைப் பாதுகாப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது என இந்த மாநாடு தீர்மானிக்கிறது." 

 

(This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Tamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.)

 

தமிழ் இறைமை (Tamil Sovereignty) தமிழ்த் தேசியம் (Tamil Nationhood) அதன் அரசியல் இலக்கு (Independent Statehood) ஆகியவற்றை வரைவிலக்கணம் செய்வதுடன் இறைமை மீட்சிக்கான கோட்பாட்டையும் (Reversion to Sovereignty) இன அழிப்புக்குட்பட்ட (Genocide) ஒரு தேசிய இனத்தின் சுயாட்சி உரிமைக் கோட்பாட்டையும் (Right to Self-Determination) ஒருசேரப் பயன்படுத்தி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக அடிப்படைகளை முன்னெப்போதும் இல்லாதவாறு தெளிவாகவும், பின் எப்போதும் இதைவிடத் தெளிவாக ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்கான வினைத்திறன் ஒன்றின் தேவையை விட்டுவைக்காதவாறு நுண்மாண் நுழைபுலத்தோடு (Perspicacity)  இத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் தெளிவுற ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

1977 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்மக்களிடம் ஆணை கேட்டு 23 மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. .

 

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு பேராதரவு அளித்து வரலாறு படையுங்கள் என சுவிஸ், ஜெர்மன், நெதர்லாந்து மற்றும் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

-30-

 


 

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது 1976 மே மாதம் திகதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாக கைக்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். அதாவது

 

"1976 மே மாதம் 14ம் திகதியன்று வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழர்கள் மங்களின் தொன்மை வாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம் பாரம்பரியம் ஆகியவற்றாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும்வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட தனித்தேசிய இனமாகவுள்ளாரென இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

மேலும் 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ்மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத்தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த்தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம் மொழி வாழ்வுடமை பொருளாதார வாழ்க்கை தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது........ ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமைபொருந்திய சமயசார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வறிவித்தல் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது."

உண்மையான பிரச்சனை யாதெனப்பார்த்தோமானால் தமிழ் மக்களது ஜனநாயக முடிவுகள் அரசபயங்கரவாதத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 இன் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாகப் பார்போமானால் - தமிழர் ஓர் தேசிய இனம் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் அவர்களது பூர்வீகத்தாயகம் அவர்கட்கு அவர்களது உரிமைகளை நிர்ணயிக்கும் உரிமையுண்டு. இலங்கை சுதந்திரம் அடைந்தபின் தமிழ்பேசும் மக்களின் உரிமைகான போராட்டங்களில் முதலாவது முப்பது வருடங்கள் அகிம்சை வழியிலும் அதைத்தொடர்ந்து அடுத்த முப்பது வருடங்கள் ஆயுதப்போராட்டத்திலும் ஈடுபட்டு பல வெற்றிகளை யுத்தத்தில் கண்டாலும் ஆயுதப்போராட்டம் பின்னடைவில்; முடிவுற்றது. இந்நிலையில் தமிழ்பேசும் மக்கள் அவர்களின் வரலாற்றில் மிகப்பெரியதோர் வெற்றிடத்தில் விடப்பட்டுள்ளனர்.

 

இச்சுழ்நிலையில் தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தையும் அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் பாதுகாக்கவேண்டிய கடமையும் அவர்களது உரிமைகட்காக ஜனநாயக முறையிலான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய பொறுப்பும் உரிமையும் கடப்பாடும் இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் அரசியற்தலைவர்களையும் தமிழ் அறிஞர்களையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் சார்ந்ததாகவே இருக்கின்றது. தற்போதைய நிலையில் தமிழ்க்கூட்டமைப்பைத்தவிர்ந்த ஏனைய தமிழ்கட்சிகள் யாவும் ஆளும் கூட்டாட்சியான மகிந்த அரசாங்கத்தோடு இணைந்தே தமது அரசியலை நடாத்துகின்றனர். சென்ற ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஆயுதப்போர் பின்னடைவு கண்டநிலையில் தமிழ்பேசும் மக்களது நிலமை மிக மோசமான நிலையிலேயுள்ளது.

 

இந்நிலையில் தமிழ்மக்களது நிலமை இலங்கை முழுவதுமே வாய்திறக்க முடியாத அளவிற்கு அராஜக ஆட்சியாகவுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மக்கள் தமது உரிமைகள் சம்மந்தமாக குரல் எழுப்பமுடியாத அளவிற்கு ஓர் சாட்சிகள் அற்ற போர் நடந்து முடிந்துள்ளது. மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் பிரச்சனைகளான அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை காட்டமுடியவில்லை. போர் வெற்றிக்களிப்பில் சிங்கள மக்களை மிதக்க விடுவதிலேயே தொடர்ந்தும் இவ்வரசாங்கம் அரசியல் தீர்வுக்கான செயல்முறைகட்கு அம்மக்களின் ஆதரவை வென்றெடுப்பதில் எவ்விதமான முயற்சியும் எடுக்கும் என்று நம்புவதற்கில்லை. ஆனால் அரசுசார்பாக இருக்கும் தமிழ்கட்சிகளும் அதன் ஆதரவாளர்களான சில புலம்பெயர்தமிழர்களும் மகிந்தாவின் ஆளும்கட்சிகளுக்கு நோகாமல் அவர்களோடு இணைந்து அவர்கள் தருவதை வாங்குவோம் அதுதான் "யதார்த்தம்" என்ற நிலையில் உள்ளனர். இந்நிலையில் புலம்பெயர் தமிழ்பேசும் மக்கள்; என்ன செய்யலாம்?

 

இராஜதந்திர முறையிலான போராட்டம் (Diplomatic War)

(இதை எமது மூனறாவது கட்டப்போராட்டமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். இதில் பலவிதமான போராட்ட முறைகள் இருக்கலாம். அதன் ஒரு கட்டமான போராட்ட நடவடிக்கைதான் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ் பேசும் மக்களால் நடாத்தப்படவுள்ள 1976 மே மாதம் 14ம் திகதி முடிவெடுக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி வடக்கு கிழக்கு இணைந்த(ஈழம்) தமிழ்பேசும் மக்களுக்கான அரசு ஒன்றை நிறுவுவதற்கான ஆணையை தாம் மீண்டும் ஜனநாயக முறையில் பெற்றுக்கொள்ள அறைகூவல் விடுவதாகவே இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடாத்தவுள்ளோம்.

 

தமிழரது நிலம் திட்டமிட்டு சிங்களமயமாகிறது.

 

ஈழப்பகுதிகளிலே தமிழ்பேசும் மக்கள் திறந்த்வெளிச்சிறைச் சாலையில் வாழ்வது போலவே வாழ்கின்றனர். வடகிழக்கு இராணுவ மயமக்கப்பட்டுள்ளது. இங்கு இராணுவ ஆட்சியில் பல இடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது. இவ்விடங்கள் தமிழ் மக்களது பூர்வீக குடியிருப்பு நிலங்களாகும். இவை நிரந்தர உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதால் அங்கு வாழ்ந்த மக்கள் அகதிமுகாம்களில் 1995ம் ஆண்டில் இருந்து வாழ்ந்து வருகின்றனர். இக்காலகட்டத்தில் ஆங்காங்கே புத்தவிகாரைகள் வரத்தொடங்கிவிட்டன, தெருக்கள் வீதிகள் சிங்களப் பெயராக மாற்றம் பெற்றுவிட்டன, நடந்த முடிந்த போரினால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தடுப்பு முகாம்களில் முட்கம்பிகளுக்கு நடுவே இராணுவக் காவலில் வைக்கப்ட்டுள்ளனர்.

 

இவர்களது நிலங்கள் பல இடங்களிள் ‘உயர்பாதுகாப்பு வலயமாக' கொண்டு வரப்பட்டுள்ளதால் இம்மக்கள் தமது நிலங்களுக்கு திரும்பப் போகவே முடியாத நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. இதோடு இப்படி அரசு திட்டமிட்டு இவற்றைச்செய்வதால் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கும் தொடற்சி துணடிக்கப்படுகிறது. இடையே இராணுவக் காவலுடன் சிங்களவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். தமிழ் மக்களின் வாழ்வாதரமாக இருந்த வன்னி நிலம் சிங்களவர்களால்; ஆக்கிரமிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கிழக்கு மாகாணம் 33 விகிதத்திற்கு மேல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தால் பறிபோய்விட்ட நிலையில் வடமாகாணம் அரச பயங்கர வாதத்தால் முற்றுகையிடபட்ட நிலையில் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களை சிந்திக்க வேண்டுகிறோம்.

 

தமிழ் மக்களது இறைமையை மீளப்பெறும் போராட்டம்

 

உலகு இலங்கையை ஓர் ஜனநாயக நாடு என்று கூறுகின்றது. ஆனால் 60 வருடங்களுக்கு மேலாக ஓர் இனப்பிரச்சினை இருப்பதை ‘உள்நாட்டுப்பிரச்சினை' என மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. 1956ம் ஆண்டின் பின்னர் ஒவ்வொரு பாராளுமன்றத்தேர்தலிலும் தமிழ்பேசும் மக்கள் சமஷ்டி முறையை ஆதரித்து வாக்களித்து வந்தனர். ஆனால் சிங்கள இனவாத அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதன் பின்னரே வட்டுக்கோட்டைத தீர்மானமும் அதனைத் தொடர்ந்து நடந்த 1977 பொதுத்தேர்தலும் அதில் மக்கள் அமோகமாக தனிநாட்டுக்காக வாக்களித்ததுமாகும். எனவே மக்கள் தமது கருத்தை மிகத்தேளிவாகவே கூறியிருந்தனர்.

 

ஆயுதப்போராட்டத்தாலும் அரசு எதையும் செய்யாத போதும் இலங்கையில் ஓர் இனப்பிரச்சினை இருக்கின்றது அங்கு அத்தமிழ்த் தேசிய இனத்துக்குரிய அரசியல் அந்தஸ்து வழங்கப்படவில்லை என்ற உண்மை உலகிற்கு நன்கு தெரியவந்துள்ளது. இப்போது இதை உணர்ந்த உலக நாடுகள் தமிழ்பேசும் மக்களுக்கு ஓர் ஜனநாயக முறையிலான அவர்கள் ஏற்கக் கூடியதான ஓர் தீர்வை முன்வைக்க வேண்டுமென இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. அண்மையில் UN,UK,USA,EU மற்றும் இந்தியா போன்றன இப்படியான அறிக்கைகள் விட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். விடுதலைபுலிகளின் பாதையில் பல பிழைகள் இருக்கலாம்.

 

ஆனால் அவர்களின் அடிப்படைப்போராட்டத்தின் பின்னணியில் ஓர் நியாயம் இருந்தது. தமிழ் மக்களுக்கு அவர்களுடைய அரசியல் அந்தஸ்து இந்நாட்டில் வழங்கப்படவில்லை என்ற உண்மை இருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் எவ்வித அரசியல் அந்தஸ்துக்களும் கிடைக்காவிட்டாலும் உலகிற்கு இலங்கையில் ஜனநாயகம் என்ற போர்வையில் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாத அராஜக ஆட்சி நடைபெறுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இலங்கையில் அமைதி திரும்பவேண்டுமானால் தமிழர் பிரச்சினை அவர்களது ஜனநாயக அபிலாஷைகளுக்கேற்ப தீர்க்கப்படவேண்டும். மகிந்த அரசு தாம் இந்த இன மோதலில் விடுதலைப்புலிகளை வென்றுவிட்டதால் தமிழர்களை அடக்கி ஆளலாம் என முடிவுகட்டிவிட்டார்கள்.

 

முல்லைத்தீவில் முள்ளிவாய்காலில் விடுதலைபுலிப் போராளிகளையும் 50'000 மக்களையும் புதைத்தது போல் தமிழர்களது உரிமைப் போராட்டத்தையும் புதைத்துவிட்டடோம் என மகிந்த ‘இந்து' பத்திரிகைக்கு கூறியிருந்ததையும் அவரது அமைச்சர்கள் இதேபோல் கூறிவருவதையும் பார்த்திருப்பீர்கள். உண்மையில் ஜனநாயகம் எப்போதோ புதைக்கப்பட்டுவிட்டது. மகிந்த ஆட்சியில் இலங்கையில் இரண்டு விதமான மக்களே வாழமுடியும். முதலாவது சிங்கள-புத்த அரசை ஏற்று அதை மதித்து நடப்பவர்கள். அவர்களே நாட்டுப்பற்றாளர்கள். இரண்டாவது- அதை எதிர்பவர்கள. இவர்கள் நாட்டின் துரோகிகளாகக் கணிக்கப்படுகின்றார்கள் என மகிந்த பல மேடைகளில் பேசி வருவதைப் பார்க்கின்றோம். இப்படியான இனவாதப் பேச்சு இலங்கையில் தமிழ்பேசும் மக்களை முற்றாக அழிக்கும் திட்டத்தில் உருவானதாகும். மகிந்த அரசின் நடவடிக்கைகளை கவனித்தீர்களானால் இதை நீங்கள் நன்கு ஊகிக்க முடியும். எனவே எம் அன்பான மக்களே சிந்தியுங்கள்.

 

இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு போராட்டத்தின் அவசியம்.

 

இலங்கை அரசின் அராஜக நடவடிக்கைகட்கு எதிராகவும் அவர்களது இரகசியத்திட்டங்கட் எதிராகவும். புலம் பெயர் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்து தொடர்பாக போராடவேண்டும். வன்னியில் நடந்த போரை நிறுத்தக் கோரி உலகளாவிய புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடாத்தினார்கள். பிரிட்டனில் 73 நாட்களாக பாராளமன்ற முன்றலில் தொடர்ந்த மறியல் போராட்டங்கள் உண்ணாவிரதம் நடாத்தினோம். அவற்றால் ஒரளவு அனுதாபம் ஏற்ப்பட்டாலும் போர் முடியும் வரை, எந்த ஒரு நாடும் உருப்படியாக எதையும் செய்யவில்லை. அவர்கள் எம் மக்களைப் பயங்கரவாதிகளாகவே பார்த்தனர்.

 

இந்நிலையில், இந்த வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டும் எமது போர் பயங்கரவாதப் போர் அல்ல. எமது சுயநிர்ணய உரிமைக்கான போர். மக்கள் அதற்காக பலதடவை வாக்களித்துள்ளனர். அதை திரும்பவும் நினைவூட்ட முனைவதுதான் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடவடிக்கை என்று கூறிவைக்கவேண்டும். இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வழி எதுவுமே இல்லை. அங்கே 1948ம் ஆண்டில் இருந்து ஓர் அராஜக ஆட்சியே நடை பெறுகின்றது. இதை மாற்றவேண்டுமானால் புலம் பெயர் தமிழர்களால் தொடர்ந்து தொடர்பாக பலவிதமான போராட்டங்களும் நடாத்தப்படவேண்டும். அதில் முக்கியமானதொன்றுதான் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு. இதன் மூலம் எமது இழந்த உரிமைகளைப் பெறும் உரிமைப்போராட்டத்தை தொடர முடியும்.

 

உண்மை நிலையை உலகிற்கு உணர்துதல்

 

எமது ஜனநாயக நிலையை உலகிற்கு உணர்த்த இப்பொது வாக்குக்கணிப்பு அவசியமாகும். அதோடு இது ஈழவரின் உண்மையான அரசியல் நிலமையை உலகறியச் செய்யும். மேலும் இலங்கையிலும் வட-கிழக்கில் அவர்களது உரிமையை நிர்ணயிக அங்கும் ஓர் பொதுமக்கள் வாக்குக்கணிப்பு நடாத்தப்படவேண்டு மென்று இலங்கை அரசை நிர்பந்திக்க முடியும். உலகில் பொது மக்கள் வாக்குக்கணிப்பு மூலம் பல இனங்கள் தமது சுயநிர்ணய உரிமையை நிர்ணயிக்க முடியுமானால் தமிழ்பேசும் மக்களால் ஏன் முடியாது. இன்று இலங்கையில் தமிழ்பேசும் மக்களுகு நியாயம் வழங்கப்படவில்லை என்பதை உலகம் உணரத்தொடங்கியுள்ளது. ஆதை மேலும் வலுப்படுத்தவே புலம்பெயர் தமிழர்களால் எடுக்கப்படும் நடவடிக்கையே இப்பொதுமக்கள் வாக்குக்கணிப்பாகும்.

 

ஒன்றுபட்டு போராடுவதின் அவசியம்

 

எமது நடவடிக்கை காலத்தின் கட்டாயமாகும. ஆகவே அன்பான பொது மக்களே கருத்துவேறுபாடுகள் (Ideology) பிரதேசவாதம் கட்சி வாதங்கள் சமயவாதங்கள் மற்றும் குரோதங்களை மறந்து ஈழவர் பிரச்சினைகள் தீர சகல புலம்பெயர் தமிழ்பேசும் மக்களும் ஒன்றிணைய வேண்டும். அத்தகைய ஒன்றிணைவதற்கான சாத்தியத்தை தடுக்கும் முயற்சிகள் எப்போதோ ஆரம்பமாகிவிட்டன என்பதனை அனைத்து தமிழ்கட்சிகளின் தலைவர்களும் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடப்பார்களாக. முன்பு பல தமிழ் அமைப்புகள் பொது எதிரியான சிறீலங்காவின் அரசுக்கு எதிராக வேலை செய்தார்கள்.

 

இப்போது இப்பொது எதிரியுடன் சிலர் இணைந்து தமிழ் பேசும் மக்களின் நலனுக்கு எதிராக வேலைசெய்கின்றார்கள். இந்நிலையை அவர்கள் மீளாய்வு செய்யுமாறு தயவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்கள் யாவும் தாம்பெரிது நீ சிறிது என்று பாகுபாடு காட்டாது இவ்வட்டுக்கோட்டடைத் தீர்மானத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வீர்களாக.தமிழ்மக்கள் கையேந்திப்பிழைப்பவர்கள் அல்லர். அவர்கள் தன்மானத்தோடு தமது தாயகத்தில் ஓர் தேசிய இனமாக சுயநிர்ணய உரிமையோடு வாழவிரும்புகின்றார்கள்.

 

அவர்களது எண்ணம் ஈடேற இப்பொழுது மக்கள் வாக்குக்கணிப்பு ஓர் பங்கை வகிக்க வேண்டும். இதை வெற்றியளிக்கச் செய்வீர்களாக. ஆகவே பிரித்தானியா வாழ் தமிழ் பேசும் மக்களே! நாமும், நமது உற்றார் உறவினர்களும், எமது சொந்த பந்தங்களினதும், ஈழ உறவுகளினதும் இறைமைக்காகவும், ஜனநாயக உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், பூர்வீக நிலத்தில் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்காகவும் வரப்போகும் வரப்போகும் தை மாதம் 30ம் திகதி நடக்கவிருக்கும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எமது பெரும்பான்மைத் தீர்வை உலகுக்கு உணர்த்த வேண்டும்.இதுவே ஈழத்தில் வாழும் உங்கள் உறவுகளுக்காக நாங்கள் செய்யும் ஒப்பற்ற கடமையும், உதவியுமாகும்.

தமிழ் தேசிய சபை
 

www.vkr1976.org.uk

ஸ்ரீரஞ்சன்: 07841 522514
இரகுநாதி: 07807 108318
பரமகுமரன்: 07958 507010

 


 


-ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது “தமிழீழம்" என்ற கொள்கையும் “பிரபாகரன்" என்ற நாமமுமே!

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே “சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு” என்பதாகும்.

 

மக்களின் ஆணையை வென்றெடுக்க தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து அளப்பரிய தியாகங்களினூடாக போராட்டத்தை செவ்வனே வழிநடத்திய தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் விடுதலையின் மறு உருவம். தனியரசு என்ற மக்களின் அரசியல் ஆணையை ஆயுதப்போராட்டத்தின் மூலம் செம்மையாகயும் குறிக்கோளில் இருந்து வழுவாதும் பாரிய அரசியல், இராணுவ சவால்களை எதிர்கொண்டும் செயற்பட்டவர் தலைவர் அவர்கள். தமிழீழம் என்ற சொல்லுக்கு பிரபாகரன் என்ற பெயரை பிரதியீடாக சொல்லுமளவிற்கு விடுதலைப்போராட்டத்தை ஆயுதப்போராட்டப் பாதைக்கூடாக நகர்த்திய பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானது. எனவே தமிழீழம் என்ற கொள்கையும் பிரபாகரன் என்ற நாமமும் தமிழ்மக்களை எப்போதும் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் என்பதில் மறுகருத்து இருக்க முடியாது.

 

கட்டுரையின் நோக்கத்திற்காக சற்று பின்நோக்கிச் சென்று வரலாற்றை சுருக்கமாக மீளப் பார்ப்போம். 1949ம் ஆண்டு தந்தை செல்வா அவர்களின் தமிழரசுக்கட்சியினால் “சமஷ்டி” முறைமைக்குள் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிந்தைய காலங்களில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனையை தீர்க்க பல ஒப்பந்தங்கள்; சிங்கள அரசாங்கங்களுடன் கைச்சாத்திடப்பட்டாலும் அவை சிங்கள அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன அல்லது கிழித்தெறியப்பட்டன.

 

மேலும், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோல்பரி அரசியல் யாப்பின் 29வது அரசியல் சட்டத்தின் சிறுபிரிவான “சிறுபான்மை இனங்களிற்கு பாதகமான முடிவு எடுக்கப்படாது” என்ற சிறுபாதுகாப்புச்சரத்தும் 1972ம் ஆண்டு அவ் அரசியல் யாப்பை சிங்களப்பேரினவாதம் தூக்கியெறிந்த போது முடிவிற்கு வந்தது. அதற்கு பதிலாக உருவாக்கப்பட்ட 1972ம் ஆண்டு அரசியல் யாப்பில் முக்கிய அரசியல் சரத்துக்களான - இலங்கை என்ற பெயர் சிறிலங்கா என்று பெயர் மாற்றப்பட்டதுடன், சிறிலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு, சிங்களம் மட்டும் ஆட்சிமொழி, கல்வியில் தரப்படுத்தல் போன்ற அரசியல்யாப்புச் சரத்துக்கள் சிறுபான்மையினங்களின் தேசியக்கோட்பாடு மற்றும் அரசியல் சாசன உரிமைகள் தொடர்பில் எந்தவித பாதுகாப்பையும் வழங்கவில்லை. இச்சம்பவம் இனவிடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை தமிழ்மக்களிற்கு உணர்த்தி நின்றது.

 

எனவே தமிழ்மக்கள் இலங்கைத்தீவில் தமக்கான அரசியல் உரிமையை நிலைநாட்ட எடுக்கப்பட்ட தீர்மானமே “சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு” அமைப்பது என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் எடுக்கப்பட்ட முடிவை அடைவதற்கான ஆரம்ப செயல் திட்டங்களான “அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி தமிழ்த்தேசத்திற்கான அரசியல் யாப்பை உருவாக்குதல்” மற்றும் “தனியரசு நோக்கிய சாத்வீக போராட்டங்களை நடத்துதல்”; என எடுக்கப்பட்ட தீர்மானங்களும், அப்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் சரியாக நடைமுறைப்படுத்தாமல் தட்டிக்கழித்து காலங்கடத்தினர். அத்தீர்மானத்தை நோக்கிய முனைப்பை தீவிரப்படுத்தாமல் அன்றைய தமிழ்த்தலைவர்கள்; தங்களின் சுயநல அரசியல் இருப்பிற்காக தனியரசுத் தீர்மானத்தை தவறான பாதையில் கொண்டு சென்றனர்.

 

மேலும் தனியரசே தமிழ்மக்களிற்கான அரசியல் அடைவு என்பது பெரும்பான்மை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை ஆகும். அதை அடைவதற்காக சாத்வீக வழியில் போராடுவோம் என்று கூறிவிட்டு அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்காமல், தங்களின் அரசியல் இருப்பிற்காகவே செயன்முறையற்ற வழியில் நடந்தனர். அந்நிலையில் தமிழ்மக்களின் அரசியல் ஆணையை நிறைவேற்ற பல விடுதலை இயக்கங்கள் உருவாகி செயற்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் சரியான பாதையில் தமிழ்மக்களின் போராட்டத்தை நடாத்திச்சென்றது என்று கூறுவது பொருத்தமானது. அதற்கான தலைமையை வழங்கிய தலைவர் பிரபாகரன் அவர்களின்

காலத்திலேயே ஆயுதப்போராட்டம் ஒருமுகப்படுத்தப்பட்டு ஒருமுனைப்பில் இலக்கு நோக்கி நகர்ந்தது. விடுதலைப்போருக்காக வீரத்துடன் போராடி 30,000 க்கும் மேற்பட்ட போராளிகள் அளப்பரிய தியாகங்களை செய்து மண்ணுக்காக விதைகுழிக்குள் உறங்குகின்றனர்.

 

குறிப்பாக “நாம் இரந்து கேட்கும் சமூகமாக இருக்கும் வரை எமது அரசியல் உரிமைப்போராட்ட நியாயம் யாருக்கும் எடுபடாது எனவே ஆயுதப்போராட்டத்தை முனைப்புப்படுத்தும் போது சிங்களப்பேரினவாதிகளும, சர்வதேச நாடுகளும், எமக்கு என்ன பிரச்சனை என்று கேட்பார்கள்? அப்போது மக்களின் அரசியல் பிரச்சனையை முன்வைப்போம்” என்ற தலைவர்

 

அவர்களின் சிந்தனைக்கான பெறுபேறுகள் இலங்ககைக்குள்ளிருந்தும் சர்வதேச மட்டங்களிலிருந்தும் கிடைத்தது. ஆனால் அத்தீர்வுத்திட்டங்கள் தமிழ்மக்களின் அரசியல்

 

அபிலாசையை அடையக்கூடியதாக இருக்காமல் அரைகுறைத்தீர்;வை நோக்கியதாகவும் ஆயுதப்போராட்டத்தை வலுவிழக்கச்செய்யும் சதிக்குமான காலமாக கடந்தகால பேச்சுவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதே அன்றி! நிரந்தர அரசியல் தீர்விற்கானதாக இருக்கவில்லை.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் பல நாடுகளின் நேரடி, மறைமுக உதவியுடன் பின்னடைவு அடைந்த நிலையில் தற்போதைய காலகட்டமானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு கடினமான காலமாக இருக்கின்றது. என்றாலும,; தமிழ்மக்களின் போராட்ட நியாயங்கள் இன்று சர்வதேச அளவில் பேசப்படும் விடயமாகவும் தமிழ்மக்களின் மனங்களின் விடுதலையின் அவசியத்தை மேலும் வலுப்படுத்தி நிற்கின்றது. எனவே தமிழ்மக்களிற்கான தற்போதைய அரசியல் தலைமைகள் காத்திரமான பங்கை வழங்கி, தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை நோக்கி மக்களை நகர்த்த வேண்டியது அவர்களுக்குரிய முதற்கடமை.

 

முக்கியமாக பெரும்பான்மை தமிழ்மக்களின் தீர்மானமான சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பதில் தமிழ்மக்களிற்கு மாற்றுக்கருத்து என்றுமிருக்க முடியாது. அதற்காகவே 30,000க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அவர்களின் தியாகத்தினுடாகவே தமிழ்மக்களின் விடுதலைக்கோரிக்கையின் நியாயங்கள் வலுப்பெற்றது. எனவே தமிழ் மக்கள் தொடர்பான எந்தத் தீர்மானங்களும் கருத்துக்களும் தமிழ்மக்களின் அரசியல் தீர்மானமான சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்ற கோட்பாட்டை கைவிடாமல் அந்த இலக்கை அடையக்கூடிய வகையிலேயே தீர்;வுத்திட்டங்களாக இருந்தாலும் அரசியல் நகர்வுகளாக இருந்தாலும் சரியாக திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும்.

 

தற்போது அரசியல் களத்தில் இருப்பவர்கள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை நோக்கி நகரக்கூடியதான தீர்மானங்களையும், அரசியல் நகர்வையும், சரிவர எடுத்து அடுத்த சந்ததியினருக்கு, விடுதலைத் தீர்மானத்தை சிறிதும் மாறாமல் பெற்றுக்கொடுப்பதோ அன்றி பொறுப்புக்கொடுப்பதாகவோ இருக்கலாமேயன்றி அந்த கொள்கை நிலையிலிருந்து கீழிறங்கி அல்லது சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பது சாத்தியமில்லை என்ற கருத்துக்களை விதைப்பதோ அல்ல. தனியரசு என்ற அரசியல் தீர்மானத்தின் சொந்தக்காரர்கள் மக்கள் மட்டுமே. ஏனெனில் 37 வருட போராட்ட காலத்தில் விடுதலைக்காக ஆகுதியாகிப் போனவர்களும் மற்றும் சொல்லொணா துயரங்களைத் தாங்கிய மக்களும் மற்றும் வலுவையும், பலத்தையும் சேர்த்த புலம்பெயர் மக்களும் தமிழ்மக்களின் அரசியல் விடுதலை நோக்கிய பயணத்தில் அளப்பரிய தியாகங்களையும் உழைப்பையும் வழங்கிய நேரடிப்பங்காளர்கள் (ஒரு வகையில் போராளிகள் என்றும் சொல்லலாம்). இன்றும் அவர்கள் தமிழ்மக்களின் அரசியல் இலக்கு தொடர்பில் மாறுபாடில்லாத கருத்துடனும்  நம்பிக்கையுடனும் இருக்கின்றனர்.

 

தாயகத்தில் நடைமுறை அரசு ஒன்றை நிறுவி, 19 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடாத்தி வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் இயங்குதளத்தில் செயற்பட முடியாத தற்சமயத்தில் தனது பிரதேசத்திற்கு வெளியே மக்களின் அரசியல் கோட்பாட்டை நிலைநிறுத்தியும் வலியுறுத்தியும் மக்களை ஒருங்கிணைத்தும் செயற்பாடுகளை

 

முன்னெடுக்கும் ஒரு நோக்கத்துடன் விடுதலைப்புலிகளால் முன்மொழியப்பட்டு அமைக்கப்படுவதற்கான எண்ணக்கரு நிலையில் இருப்பது “நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்” ஆகும். இவ் அரசாங்கமானது தமிழ்மக்களின் அரசியல் கோட்பாட்டை எந்த மாற்றமுமின்றி கடைப்பிடிக்கும் என தமிழ் மக்கள் எதிர்பாக்கின்றனர்.

 

அவர்களினது தற்போதைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்;தில் எடுக்கப்பட்ட சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத்தனியரசு என்ற தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பானது, கோட்பாட்டிற்கான ஆதரவை மீளவலுப்படுத்தி நிற்கின்றது. மேலும் தற்போதைய இளம் சந்ததிக்கு முன்னோர்களின் அரசியல் விடுதலை எண்ணம், ஏக்கம் தொடர்பான விழிப்புணர்வையும் அரசியல் விடுதலைக் கோட்பாட்டின் மீதான உறுதிப்பாட்டையும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றது..

 

தமிழ்மக்களின் தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் இறைமையுள்ள தனியரசு என்ற அரசியல் கோட்பாட்டை இலக்காக வைத்து தங்களின் அரசியல் சாணக்கியத்தால் அடையக்கூடிய அரசியல் தீர்வுகளை அடைய வேண்டுமே தவிர அடிப்படைக் கொள்கையிலிருந்து பிறழ்ந்து செயற்படுவார்களானால் அது தமிழ்மக்களிற்கு இழைக்கும் மிகப்பெரும் அரசியல் தவறாகும். அத்துடன் தமிழ் மக்களின் நீண்ட அரசியல் வரலாற்றில் அம்மக்கள் கடந்தகாலங்களில் ஏமாற்றப்பட்ட சம்பவங்களை நேரடியாகவும் முழுமையாகவும் அறிந்தவர் தமிழ் மக்களின் தேசியத்தை பின்பற்றியிருக்கும் மூத்த அரசியல் தலைவரான திரு சம்பந்தர் அவர்கள். அடிப்படைக் கொள்கையிலிருந்து வழுவாது அதை அடையக்கூடிய சரியான பாதையில் மெதுவாக நகர்த்துவதே அவரின் அரசியல் முதிர்சியின் அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.

 

தளத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் இணை அமைப்புக்களும் சரியான முறையில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான் செயற்பாடுகளை ஒன்றிணைந்து, ஒருமுகப்பட்டு, கருத்து பேதங்களை விடுத்து, சிறப்பாக செயற்பட வேண்டும் என தமிழ்ச்சமூகம் எதிர்பார்க்கின்றது. முக்கியமாக இவ் இரு தளத்திலுள்ள இரு அமைப்புகளும் சரியான தொடர்பாடலுடன் சரியான திட்டங்களை வகுத்து இரு தண்டவாளங்களில் செல்லும் ஒரு புகைவண்டியைப்போல தமிழ்மக்களின் அரசியல் விடுதலை இலட்சியத்தை நகர்த்தவேண்டும்.

 

தற்போதைய சூழலைப்பொறுத்தவரையில் தலைவர் சுதுமலைப்பிரகடனத்தில் தெரிவித்ததைப் போன்று “போராட்ட வடிவம் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறாது” என்ற தத்துவ வரிகளிற்கு அமைவாக தற்போதைய பின்னடைவு நிலையிலிருந்து மீண்டு எழும் காலம் வரும் வரை, சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் சூழல்களை வெல்ல ஜனநாயக, அரசியல், ராஜதந்திர வழிகளினூடாக தமிழர்களின் இலட்சியம் நோக்கிய பயணத்தை தொடரவேண்டும்.

 

இது தலைமுறைக்கான போராட்டம். இளம் தலைமுறைக்கு விடுதலைப்போராட்டம் தொடர்பான கருத்துக்கள் தொடர்ந்து விதைக்கப்பட்டு, அரசியல் கருத்தூட்டல் செய்யப்பட வேண்டும். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அடுத்த தலைமுறைகளிற்கு போராட்ட உணர்வுகள் மருவாது பாதுகாக்க வேண்டும். அதேவேளை ஒன்றுபட்டிருக்கும் அவர்களது உணர்வுகளும் ஆதரவும் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு தேசவிடுதலை நோக்கி பயன்படுத்தப்பட வேண்டும்.

 

இஸ்ரேலிய மக்கள் தமது தாயகவிடுதலையை வென்றெடுக்க புலம்பெயர் தேசங்களில் இருந்த ய+தர்களை ஒன்றிணைத்து போராடி வென்ற சம்பவத்தை கூறும் “தாயகம் நோக்கிய பயணம்” என்ற விடுதலை வரலாற்றைப்போல, தமிழ்மக்களின் விடுதலைக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்து “ஈழவிடுதலை நோக்கிய பயணம்” அவசியமாகும் காலம் வரலாம் என கருதாமலும் இருந்து விட முடியாது. எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விடுதலைக்காக தியாகம் செய்யக்கூடிய மக்கள் சமூகத்தை கட்டி வளர்த்தெடுப்பது இப்பணிகளை முன்னெடுப்போரின் முதன்மையான கடமையாகும்.

 

“இறைமையுள்ள தனியரசு” என்ற கொள்கையும், அதை அடைவதற்காக தன்நம்பிக்கை தந்து விடுதலைப்போராட்டத்தை நடாத்திய தலைவர் பிரபாகரன் என்ற நாமமும், எப்போதும் விடுதலையின் மீதான நம்பிக்கையை கட்டிவைத்து வழிநடத்தும் என்பதுடன் தமிழ்மக்களை ஒன்றிணைக்கும் சக்தியும் இருக்கின்றது. அதன் வழி தொடர்ந்து நம்பிக்கையுடனும் தியாக உணர்வுடன் செயற்படுவதே விடுதலையை வென்றெடுக்க அவசியமானதாகும்

                                                                                                           தமிழ் ப்ரியன் K.சுரேஷ்


 

 

ஞாயிறு, ஜனவரி 17, 2010 14:23 | மறைச்செல்வன், ஐரோப்பா வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தான் என்ன?

 

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தான் என்ன?

 

சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை பெறப்பட்ட அரசியல் தீர்மானம். 30 வருட அமைதிவழிப் போராட்டத்தின் முடிவுக்காலத்தில், 1976 ஆம் ஆண்டு மே மாதம், தந்தை செல்வாவின் தலைமையில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பின் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாய்க் கூடி வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் எனும் இடத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

 

சுதந்திரமும் இறைமையுள்ள தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் தமிழ்த்தேசியத்தின் மீட்சிக்கு தவிர்க்கமுடியாதது என்பது மாத்திரமல்ல ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்கு தனிவேறான தமிழீழ அரசு என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பும் ஒரே ஒரு மக்களாணை பெற்ற தீர்மானமும் இதுதான்.

 

இத் தீர்மானத்தின் அரசியல் முக்கியத்துவம் என்ன?

 

தமிழ் இறைமை ((Tamil Sovereignty)) , தமிழ்த் தேசியம் (Tamil Nationhood), அதன் அரசியல் இலக்கு (Independent Statehood) ஆகியவற்றை வரைவிலக்கணஞ்செய்வதுடன் இறைமை மீட்சிக்கான கோட்பாட்டையும் (Reversion to Sovereignty), இன அழிப்புக்குட்பட்ட (Genocide) ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் (Right to Self-Determination) ஒருசேரப் பயன்படுத்தி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக அடிப்படைகளை முன்னெப்போதும் இல்லாதவாறு தெளிவாகவும், பின்னெப்போதும் இதைவிடத் தெளிவாக ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்கான திறமை ஒன்றின் தேவைக்கான இடைவெளியை விட்டுவைக்காத அளவு மதிநுட்பத்துடனும், தந்தை செல்வா அவர்களினால் இத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் தெளிவுற ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை செல்வா அவர்களே நேரடியாக இத்தீர்மானத்தை இதன் ஒவ்வொரு சொல்லையும் பகுப்பாய்வுசெய்து இயற்றினார் என்று A J Wilson எனும் அரசியல் வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கென்றே சிறப்பான முக்கியத்துவம் என்ன?

 

இதன் சிறப்பு என்னவென்றால், அடுத்தவருடம், அதாவது 1977ம் ஆண்டு, இலங்கைத் தீவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் தமது பெருவாரியான வாக்குக்கள் மூலம் இத் தீர்மானத்திற்கு மக்களாணை வழங்கியமை. இதுவே தமிழீழத் தனியரசுக்காக இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வாக்களித்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையாக விளங்குகிறது.

இதனால் தான் இதை நாம் இன்று மீளவும் ஜனநாயகமும் கருத்துச்சுதந்திரமும் வாழும் ஏனைய நாடுகளில் எடுத்தாளமுடிகிறது.

 

1977 இற்குப் பின்னர் தமிழீழம் குறித்த மக்களாணையை இலங்கைத் தீவில் ஜனநாயக முறையில் முன்வைக்கமுடியாதவாறு அடக்குமுறைச் சட்டங்கள் (1979 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்) கொண்டுவரப்பட்டது மட்டுமல்ல சிறிலங்காவின் அரசியல் யாப்பிலே 6ம் திருத்தம் என்ற திருத்தத்தையும் 1983 இல் கொண்டுவந்து தனிநாட்டுக்கோட்பாட்டை - அதாவது இந்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையை - யாப்புரீதியாகவே சிறிலங்கா அரசு மறுதலித்துவிட்டது.

 

இதனால் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசுக்கான தமது மக்களாணையை மீளவும் ஜனநாயக முறையில் வெளிப்படுத்த முடியாத நிலையே தாயகத்தில் தொடர்கிறது.

 

இன்றுவரை இந்த 77ம் ஆண்டு மக்களாணையே இலங்கைத் தீவிலுள்ள ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் முதலாவதாக மட்டுமல்ல இறுதியாகவும் தமிழீழத் தனியரசுக்காக வெளிப்படுத்தக்கூடியதாகவிருந்த மக்களாணையாகும்.1977ம் ஆண்டுத் தேர்தல் வேறு எந்த வகையில் முக்கியமாகிறது?

இந்த 77ம் ஆண்டுத் தேர்தலே, தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை, இறுதியாக, இராணுவக் கெடுபிடிகள், பாரிய இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள் இல்லாத நிலையில் சுதந்திரமான முறையில் நடந்த இறுதித் தேர்தலாகும்.

 

இது 1972ம் கொண்டுவரப்பட்ட சிங்கள மேலாதிக்க ஒற்றையாட்சிக் குடியரசு யாப்பு அமைக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தீவில் நடாத்தப்பட்ட முதலாவது தேர்தல்.

 

இதனால் இத் தேர்தலிலேயே வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த அரசியல் யாப்பை நிராகரிப்பதற்கான வாய்ப்புக் கிட்டுகிறது, ஏனென்றால் தமிழீழ மக்கள் சுதந்திர நாட்டிற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு அளித்த மக்களாணை தனது வரைபில் 1972ம் ஆண்டு யாப்பை தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதென்றும், சட்டவிரோதமானதென்றும் அதைத் தமிழர்கள் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

 

இந்த வகையில் இன்று வரையுள்ள சிறிலங்காவின் யாப்பை தமிழர்கள் நிராகரித்தமைக்கான சட்டப+ர்வமான ஜனநாயக ரீதியான வெளிப்படுத்தலுக்கான முக்கியத்துவமும் 77ம் ஆண்டின் தேர்தலுக்கு உண்டு.

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு மேலதிக சிறப்பம்சங்கள் வேறு ஏதும் உண்டா?

 

ஒன்றிரண்டல்ல, பல உண்டு.

 

தமிழீழத் தனியரசு அமைக்கப்படவேண்டியதற்கான அரசியல், வரலாற்று நியதிகளையும், மனிதாபிமான நியாயப்பாடுகளையும் அமைக்கப்படவேண்டிய தமிழீழ அரசின் பிரஜாவுரிமை அதன் மத சார்பற்ற, சாதி வேறுபாடற்ற தன்மைகள் போன்ற பல அடிப்படை விவகாரங்களை ஒரு சில பக்கங்களுக்குள் சுருக்கமாகவும் நுட்பமாகவும் இந்தத் தீர்மானம் தொகுத்திருக்கிறது.

 

அ