----- Original Message -----
Sent: Friday, January 29, 2010 4:48 PM
Subject: Re: There was no informed or conscious boycott. To claim
otherwise is midsummer madness
சோழன் யாரென்று தெரியவில்லை. வயது
போனவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்றால் பல நாடுகளில்
>அரசியல்வாதிகளில் பாதிப்பேர் காணாமல் போய்விடுவார்கள். மன் மோகன் சிங் வயது
76. அத்வானி வயது 82. கருணாநிதி 86.
If karunanidhi retired and seeman was in power we would have had tamil eelam
by now.
Small correction, I am not against older gentlemen in politics, I am against
older gentlemen who are against tamil eelam being in tamil politics.!
Older gentlemen for tamil eelam would always be supported by tamils of all
ages.
2010/1/29 thanga <athangav@sympatico.ca>
தமிழீழம் தனிநாடு என்பது தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களித்தபடியால்தான்
வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கிறது. தேர்தலைப்
புறக்கணித்திருந்தால் அது தெரிந்திருக்காது. மேலும் தேர்தலைப்
புறக்கணித்திருந்தால் வட - கிழக்கில் மகிந்த இராசபக்சேதான்
வென்றிருப்பார். வென்றிருந்தால் தானே முழு இலங்கைக்கும் சனாதிபதி
என்று மார் தட்டியிருப்பார்.
2005 இல் விடுதலைப் புலிகள் தேர்தலை உத்தியோகப்பற்றற்ற முறையில்
புறக்கணித்ததை வைத்து 2010 இலும் அதே புறக்கணிப்பைச் செய்யச் சொல்வது
முட்டாள்தனம். அப்போதிருந்த களநிலை வேறு. இப்போதுள்ள கள நிலை வேறு.
இந்தத் தேர்தலை தமிழர்
தாயகப்பகுதிகளில் வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ்
மக்கள் புறக்கணித்துள்ளனர் என்பது
கஜேந்திரனின் கற்பனை. வாக்கு அளிக்காதவர்கள் எல்லாம் தேர்தலைப்
புறக்கணித்தார்கள் என்று கொள்ளலாமா? அப்படியென்றால் நடக்கிற ஒவ்வொரு
தேர்தலிலும் சுமார் 30 விழுக்காட்டு மக்கள் தேர்தலைப் புறக்கணித்ர்கள்
என்று சொல்வதும் சரியாக இருக்கும்.
கஜேந்திரன் கனவுலகில் இருந்து பூமிக்கு வரவேண்டும். மக்கள் தேர்தலைப்
புறக்கணிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் அறிக்கை விட்டார். கஜேந்திரன்
அப்படிச் செய்தாரா? பின் எதற்காக மக்கள் தேர்தலைப்
புறக்கணித்துவிட்டார்கள் என்று தானே தனது முதுகில் தட்டிக் கொள்ளலாம?
சரி உண்மை நிலை என்ன? யாழ்ப்பாண
தேர்தல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர் தொகை 630,548 ஆகும். .
இவர்களில் 26.66 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளார்கள். காரணம்
என்னவென்றால் யாழ்ப்பாணத்தில் 630,548 வாக்காளர்கள் இருக்கவில்லை.
அப்படித்தான் உதயன் ஆசிரியர் வித்தியாதரன் சொன்னார். அங்குள்ள மொத்த
மக்கள் கையே 5 இலட்சம் மட்டுமே தேறும். காரணம் யாழ்ப்பாணத் தேர்தல்
மாவட்ட வாக்காளர் பட்டியல் 1982க்குப் பின்னர் திருத்தப்படவில்லை.
ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களது பெயர்கள் அந்த பட்டியலில்
இருக்கிறது. கிளிநொச்சித் தொகுதியை எடுத்துக் கொண்டால் அங்குள்ள
வாக்காளர் தொகை 90,841 ஆகும். ஆனால் 5708 க்காளர்களே (6.28விழுக்காடு)
வாக்களித்துள்ளார்கள். இதற்குக் காரணம் இடப்பெயர்வு. அங்குள்ள மக்களில்
பல ஆயிரம் நெடுந்தீவு, அனலை தீவு, யாழ்ப்பாணக் குடாநாடு என
இடம்பெயர்ந்துள்ளார்கள். பலர் போரினால் இறந்து போனார்கள்.
ஆட்சிமாற்றம் வேண்டும் என்று
த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆம் என வாக்களித்தவர்
கஜேந்திரன். அப்படியென்றால் பொன்சேகாவுக்குப் போடாமல் ஆட்சிமாற்றத்தை
எப்படிக் கொண்டுவருவது?
தமிழீழம் தனி நாடடென்பது மக்கள்
வாக்களித்தபடியால்தான் நிரூபணமானது. தேர்தலைப் புறக்கணித்தல்ல?
யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள்
தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுக்கவில்லை. மாறாக ஆட்சி மாற்றம்
வேண்டும் என்றே அறிக்கை விட்டார்கள். கஜேந்திரனுக்கு இது கூடத்
தெரியவில்லையா?
ஆட்சிமாற்றம் வேண்டும் என்று
த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆம் என வாக்களித்தவர்
கஜேந்திரன். அப்படியென்றால் பொன்சேகாவுக்குப் போடாமல் ஆட்சிமாற்றத்தை
எப்படிக் கொண்டுவருவது?
எனவே இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் "தமிழர் தாயகப்பகுதிகளில்
வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் புறக்கணித்துள்ளனர்
என்று முடிவு கட்டி அறிக்கை விடுவது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.
சோழன் யாரென்று தெரியவில்லை. வயது
போனவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்றால் பல நாடுகளில்
அரசியல்வாதிகளில் பாதிப்பேர் காணாமல் போய்விடுவார்கள். மன் மோகன்
சிங் வயது 76. அத்வானி வயது 82. கருணாநிதி 86.
அது சரி வெளிநாட்டில் வாழும்
ஜெயானந்தமூர்த்தியால் எப்படி கட்சி நடத்த முடியும்? எப்போதும்
வாய்வீரம் பேசும் கஜேந்திரனும்
அங்கு தேர்தல் நடக்க இலண்டனில் குடும்பத்தாரோடு காலத்தைக் கழித்த
கஜேந்திரகுமாரும் தலைமைக்குத் தகுதியானவர்களா?
இலங்கை வரைபடத்தில் தமிழீழத்தையும்
ஸ்ரீலங்காவையும் தனித் தனியாகக் காட்டிய தேர்தல் முடிவுகள்!
நக்கீரன்
பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாடியவர்
பாரதியார்.
சிறிலங்காவில் பேயாட்சிதான் நடக்கிறது. அந்தப் பேயாட்சியின் தலைவர்
மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். அதே நேரம் தமிழீழத்தில் அவர்
படுதோல்வியைத் தழுவியுள்ளார்.
ஆறாவது ஆட்சித்தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த நொவெம்பர் மாதம் 23
ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்
டிசெம்பர் 17 ஆகும். தேர்தல் நடந்த நாள் சனவரி 26, 2010 ஆகும்.
இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க கால அவகாசம் இருந்தும்
தேர்தல் ஒன்றைச் சந்திக்க அவர் விரும்பியதற்குத் தக்க காரணம் இருந்தது.
விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டதை கிழமைக் கணக்கில் வெடிகொளுத்திக்
கொண்டாடிய மகிந்த இராசபச்சே அந்தத் தேர்தல் வெற்றியை வாக்குகளாக அறுவடை
செய்ய ஆசைப்பட்டார்.
முற்கூட்டி நடத்தப்பட்ட ஆட்சித்தலைவர் தேர்தலுக்கு வேறு காரணங்களும்
இருந்தன. வடக்கு மாகாணம் நீங்கலாக ஏனைய மாகாணங்களுக்கு நடந்த
தேர்தல்களில் ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி
பெற்றது. வெற்றி விழுக்காடு 60 விழுக்காட்டுக்கு மேல் இருந்தது.
இன்னொரு காரணம் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்மக்களது ஆணையை
யும் அவர் பெற விரும்பினார்.
தேர்தல் அறிவிப்பு வெளியிட்டபோது அவருக்கு எதிராகக் களத்தில் இரணில்
விக்கிரமசிங்கி ஒருவர் மட்டுமே காணப்பட்டார். இரணில் விக்கிரமசிங்கா
2001 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் நீங்கலாக அவர் சந்தித்த ஏனைய
தேர்தல் அனைத்திலும் தோற்றிருக்கிறார்.
2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 88 இருக்கைகளைக்
கைப்பற்றிய இரணில் விக்கிரமசிங்கியின் அய்க்கிய தேசியக் கட்சி அதில் 12
தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் உட்பட 30 .உறுப்பினர்களை ஆளும்
கட்சியிடம் பறிகொடுத்தது.
எனவே மகிந்த இராசபக்சே நோஞ்சான் ஆன இரணில் விக்கிரமசிங்கியோடு மோதி
எளிதில் அவரைப் புறங்கண்டு விடலாம் எனக் கணக்குப் போட்டார்.
இராணுவதளபதி சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் குதிப்பார் என மகிந்த
இராசபக்சே எதிர்பார்க்கவில்லை.
2005 ஆம் ஆண்டுத் தோதலில் 180,796 அதிகப்படி வாக்குகளால் வெற்றிபெற்ற
மகிந்த இராசபக்சே இம்முறை 1,842,749 அதிகப்படி வாக்குகளால்
வென்றுள்ளார். முறையே 2005 மற்றும் 2010 ஆண்டுத் தேர்தல் முடிவுகளைக்
கீழ்க்கண்ட அட்டவணை மூலம் தெரிந்துகொள்ளலாம்.
|
ஆட்சித்தலைவர் தேர்தல்
2010 |
|
மாவட்டம் |
மகிந்த இராசபக்சே |
விழுக்காடு |
சரத்
பொன்சேகா |
விழுக்காடு |
வாக்களித்த-வர்கள் விழுக்காடு |
|
யாழ்ப்பாணம் |
44154 |
24.75 |
113877 |
63.84 |
25.66 |
|
வன்னி |
28748 |
27.31 |
70367 |
66.86 |
40.33 |
|
மட்டக்களப்பு |
55663 |
26.27 |
146057 |
68.93 |
64.83 |
|
அம்பாரை |
146912 |
47.92 |
153105 |
49.94 |
73.54 |
|
திருகாணமலை |
146912 |
43.04 |
87661 |
54.09 |
68.22 |
|
|
422389 |
|
571067 |
|
|
|
நுவரேலியா |
151604 |
43.77 |
180604 |
52.14 |
14.77 |
இந்தத் தேர்தலில் மகிந்த இராசபக்சேயை நவீன துட்ட கைமுனு என்று
பார்த்த சிங்கள வாக்காளர்கள் அவருக்கு அமோக ஆதரவளித்துள்ளார்கள்.
மகிந்த இராசபக்சே சிங்கள பவுத்தர்கள் மற்றும் சிங்கள
கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில்
வென்றுள்ளார்.
பன்னிரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை ரூபா 10,000
ஆல் அதிகரிக்கப் போவதாக சரத் பொன்சேகா கொடுத்த வாக்குறுதியை
நம்பவில்லை. அதனால் அஞ்சல் மூல வாக்குகளில் 68 விழுக்காடு மகிந்த
இராசபக்சேக்கு விழுந்தன.
வட கிழக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை,
அம்பாரை ( டிகமுகல்ல) மட்டக்களப்பு என அய்ந்து தேர்தல்
மாவட்டங்கள். இருக்கின்றன. இந்த அய்ந்து மாவட்டங்களிலும் சரத்
பொன்சேகா வெற்றி பெற்றிருக்கிறார். அத்தோடு மலையகத் தமிழர்கள்
செறிந்து வாழும் நுவரேலியா மாவட்டத்திலும் சரத் பொன்சேகா
வெற்றிவாகை சூடியிருக்கிறா. சரத் பொன்சேகா மற்றும் மகிந்த
இராசபக்சே இருவருக்கும் இந்த மாவட்டங்களில் கிடைத்த வாக்குகள்
பின்வருமாறு.
சிறிலங்கா ஆட்சித் தலைவர்
தேர்தல்2005-2010
|
|
|
நொவெம்பர் 17
2005
|
சனவரி
26 2010 |
|
வேட்பாளர் |
மகிந்த இராசபக்சே |
இரணில்
விக்கிரமசிங்கி |
மகிந்த இராசபக்சே |
சரத் பொன்சேகா; |
|
கட்சி |
அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி
|
அய்க்கிய தேசியக் கட்சி |
அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
பொது வேட்பாளர் |
|
சொந்த மாவட்டம் |
njd; khfhzk; |
Nky; khfhzk; |
njd; khfhzk; |
njd; khfhzk |
|
Pகிடைத்த வாக்குகள் ; |
4>887>152 |
4>706>366 |
5>972>882 |
4>147>638 |
|
Pவிழுக்காடு |
50.29 |
48.43 |
57.85 |
40.17 |
|
|
|
மேலதிக வாக்குகள்; |
180>796 |
1>842>749 |
தமிழ்மக்கள் போலவே முஸ்லிம்கள் சரத் பொன்சேகாவுக்கே தமது ஆதரவை
வழங்கியுள்ளனர். முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட
சம்மாந்துறையில் சரத் பொன்சேகாவுக்கு 55.9 விழுக்காடும்
இராசபக்சேக்கு 44.42 விழுக்காடு வாக்குகளும் கிடைத்துள்ளன. அதே
போல் பொத்துவில் தேர்தல் தொகுதியில் சரத் பொன்சேகாவுக்கு 59.89
விழுக்காடும் மகிந்த இராசபக்சேக்கு 37.4 விழுக்காடு வாக்குகளும்
கிடைத்தன. திருகோணமலை மாவட்டம் மூதூர் தொகுதியில் சரத் பொன்சேகா 59
விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். இராசபக்சேக்கு 38 விழுக்காடு
வாக்குகளே கிடைத்தன..
போர் வெற்றிக்குப் பின்னர் இலங்கைத் தீவில் இன அடிப்படையில்
சிறுபான்மை, பெரும்பான்மை என்பது கிடையாது எல்லோரும் ஸ்ரீலங்கா
குடிமக்களே என்று சிங்கள பவுத்த வெறியரான மகிந்த இராசபக்சே
சொன்னதைத் தமிழர்களும் முஸ்லிம்களும் இரசிக்கவில்லை என்பதே அவரது
படுதோல்விக்குக் காரணமாகும்.
Summary
of the 26 January 2010
Sri Lankan
presidential
election results
|
Candidate |
Party |
Votes |
% |
|
Mahinda Rajapaksa |
United People's Freedom Alliance |
6,015,934 |
57.88% |
|
Sarath Fonseka |
New Democratic Front |
4,173,185 |
40.15% |
| Mohomad Cassim Mohomad Ismail |
Democratic United National Front |
39,226 |
0.38% |
| Achala Ashoka Suraweera |
Jathika Sangwardhena Peramuna |
26,266 |
0.25% |
| Channa Janaka Sugathsiri Gamage |
United Democratic Front |
23,290 |
0.22% |
| W.V. Mahiman Ranjith |
Independent |
18,747 |
0.18% |
|
Panagoda Don Prince Soloman Anura Liyanage |
Sri Lanka Labour Party |
14,220 |
0.14% |
| Sarath Manamendra |
Nawa Sihala Urumaya |
9,684 |
0.09% |
| M.K. Sivajilingam |
Independent |
9,662 |
0.09% |
| Ukkubanda Wijekoon |
Independent |
9,381 |
0.09% |
| Lal Perera |
Our National Front |
9,353 |
0.09% |
|
Siritunga Jayasuriya |
United Socialist Party |
8,352 |
0.08% |
|
Vickramabahu Karunaratna |
Left Front |
7,055 |
0.07% |
| Idroos Mohomad Ilyas |
Independent |
6,131 |
0.06% |
| Wije Dias |
Socialist Equality Party |
4,195 |
0.04% |
| Sanath Pinnaduwa |
National Alliance |
3,523 |
0.03% |
|
Mohamed Musthaffa |
Independent |
3,134 |
0.03% |
| Battaramulle Seelarathana Thero |
Jana Setha Peramuna |
2,770 |
0.03% |
| Senaratna de Silva |
Patriotic National Front |
2,620 |
0.03% |
| Aruna de Zoyza |
Ruhunu Janatha Party |
2,618 |
0.03% |
| Upali Sarath Kongahage |
United National Alternative Front |
2,260 |
0.02% |
| Muthu Bandara Theminimulla |
Okkoma Vesiyo Okkoma Rajavaru
Sanvidhanaya |
2,007 |
0.02% |
|
Total |
10,393,613 |
|
| Registered Voters |
14,088,500 |
|
| Total Votes cast |
10,495,451 (74.50%) |
| Invalid Votes |
101,838 |
| Valid Votes cast |
பதவி, பட்டம், மிதிவண்டி, கழிவறை போன்றவற்றுக்கு சிங்கள பவுத்த
வெறியரான மகிந்தா இராசபக்சேக்கு தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தும்
கூட்டி வைத்தும் மொத்தமாகவும் சில்லறையாவும் விற்று வயிறு
வளர்க்கும் டக்லஸ் தேவானந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன், கருணா,
பிள்ளையான் போன்றோருக்கு தமிழ்மக்கள் செம பாடம்
புகட்டியுள்ளார்கள். இந்தக் காக்கைவன்னியர்கள் முகத்தில் கரிபூசிக்
காறித் துப்பியுள்ளார்கள்.
தனது துரோகத்தை மூடி மறைக்க யாழ்ப்பாண மக்கள் வரலாற்றுத் தவறு
செய்து விட்டார்கள் என்று பிபிசி தமிழோசைக்கு வாயிலும் வயிற்றிலும்
அடித்து டக்லஸ் தேவானந்தா அழுது புலம்பியுள்ளார்.
இலங்கை முழவதிலும் மகிந்த இராசபக்சே 16 தேர்தல் மாவட்டங்களிலும்
சரத் பொன்சேகா 6 தேர்தல் மாவட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.
சென்ற தேர்தலில் மகிந்த இராசபக்சே, இரணில் விக்கிரமசிங்கி இருவரும்
தலா 11 தேர்தல் மாவட்டங்களில் வெற்றி பெற்றிருந்தார்கள்.
சரத் பொன்சேகா தனது சொந்தத் தொகுதியான அம்பலாங்கொடையில் படு தோல்வி
அடைந்துள்ளார். அவருக்கு 19,191 வாக்குகளும் ளே (35.98 விழுக்காடு)
மகிந்த இராசபக்சேக்கு 33,488 (62.79 விழுக்காடு) வாக்குகளும்
கிடைத்தன.
நுவரேலியா தேர்தல் தொகுதியில் பொன்சேகா 30,000 அதிகப்படியான
வாக்குகளால் கைப்பற்றியது ஆறுமுகம் தொண்டமானின் சந்தர்ப்பவாத
அரசியலுக்கு விழுந்த செம அடியாகவே பார்க்க வேண்டும். மத்திய
மாகாணத்தை கடந்த தேர்தலில் இரணில் விக்கிரமசிங்கி 250,000
அதிகப்படியான வாக்குகளால் வென்றிருந்தார்.
இதேபோல் மங்கள சமரவீர (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகாஜன) தனது
சொந்தத் தொகுதியான மாத்தறையில் (27,102 43.97 விழுக்காடு) மகிந்த
இராபச்சேயிடம் ( 33,945 55.07 விழுக்காடு) தோல்வி அடைந்தார்.
மகிந்த இராசபக்சேயின் வெற்றியின் இரகசியம் அவரிடம் இருந்த போர்
வெற்றி என்ற துரப்புச் சீட்டுத்தான். அந்த ஒற்றைத் துருப்பை
வைத்துக் கொண்டே அவர் சிங்கள - பவுத்த மக்களது வாக்குகளை அள்ளிக்
கொண்டார்.
தமிழ்மக்கள் மீது சிங்கள பவத்த மக்கள் கொண்டுள்ள
வெறுப்புக்காரணமாகவே மகிந்த இராசபக்சேயின் ஆட்சியில் இடம்பெற்ற
ஊழல், குடும்ப ஆட்சி, 109 அமைச்சர்களைக் கொண்ட யானையளவு அமைச்சரவை,
வீண்விரயம், ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக சுதந்திர மலினம்,
மனிதவுரிமை மீறல்கள், அடக்குமறை, ஆணவம், காடைத்தனம், விலைவாசி
போன்றவற்றை அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை!
மேலும் ஆறு ஆண்டுகளுக்கு மகிந்த இராசபக்சே என்ற சிங்கள பவுத்த
வெறியரது கைகளில் சிக்கியுள்ள தமிழினத்தின் எதிர்காலம் என்ன?
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு மகிந்த இராசபக்சே வட கிழக்கில் தனது
பிடியை மேலும் இறுக்கும் திருப்பணியில் இறங்குவார். இவ்வளவு
காலமும் வட கிழக்கை சிங்கள மயப்படுத்தவும் இராணுவ மயப்படுத்தவும்
மேற்கொண்ட முயற்சிகளுக்கு அப்பால் இப்போது பவுத்த மயப்படுத்தவும்
மகிந்த இராசபக்சே தயாராகிவிட்டார்.
ஏ9 பாதையில் 13 சின்னதும் பெரியதுமான பவுத்த விகாரைகள், நினைவு
தூபிகள் தமிழ்மக்களுக்குச் சொந்தமான மண்ணில் எழுப்பப்பட்டுள்ளன.
இனி அரசமரம் இருக்கும் இடம் எல்லாம் புத்தர் கொலு இருக்கப்
போகிறார்.
இந்தத் தேர்தலில் மகிந்த இராசபக்சே வெற்றி பெறுவதையே இந்தியா
விரும்பியது. மாறாக மேற்குலக நாடுகள் இரணில் விக்கிரமசிங்கி
ஆதரித்த சரத் பொன்சேகா வெற்றி பெறுவதையே விரும்பின. ஆனால் மேற்குலக
நாடுகளும் நலன்கள் என்று வரும்போது தங்களது சொந்த வணிக - பூகோள
அரசியல் நலன்களையே பாதுகாத்துக் கொள்ளவே விரும்பும் என்பதில்
அய்யம் இல்லை. ஏற்கனவே போர்க்குற்றங்கள, மனிதவுரிமை மீறல்கள்
பற்றிச் சலசலத்த அமெரிக்கா இப்போது இந்து சமுத்திரத்தில்
இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக அவற்றை அடக்கி வாசிக்க
முடிவு செய்துள்ளது.
மகிந்த இராசபக்சேயின் காட்டாட்சியில் தமிழ்த் தேசியத்தக்கும்
சிங்கள பவுத்த தேசியத்துக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடையப்
போகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
தங்களது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நெஞ்சில் வலியோடு
ஏதிலிகளாக வாழும் எமது மக்கள் அவர்களது சொந்த மண்ணில் மீளக்
குடியமர்த்தப் படவேண்டும். சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருக்கும்
போராளிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
தாயகத்தில் உள்ள தமிழ்மக்களது அரசியல் தலைமையை தமிழர் தேசியக்
கூட்டமைப்பைப் பலப்படுத்தி எமது விடுதலையை வென்றெடுக்கப்
புலமபெயர் தமிழர்கள் ஒன்று சேர வேண்டும். தமிழர்களது தாயகம்,
தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் சுதந்திரமான,
இறைமையுள்ள தமிழீழ தனியரசை மீள்கட்டியெழுப்பி மீள் உருவாக்கம்
செய்யும் வரை நாம் ஓயப்போவதில்லை.
.jpg)
தேர்தலில் சிறுபான்மை மக்கள் சொந்தத்
தலைமைகளை நிராகரித்துள்ளனர் - என்.சரவணன்
6வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான 5வது ஜனாதிபதித்
தேர்தலின் இறுதி முடிவுகளின் படி மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார்.
தெர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வழங்கும் செய்தி என்பதன்
சாராம்ச விளக்கமே இது.
யாழ் மாவட்டத்தில் 26.66 சதவீத மக்களே வாக்களித்துள்ளனர். அதிலும்
அளிக்கப்பட்ட வாக்குகளில் 3,65 வீத வாக்குகள்
நிராகரிக்கப்பட்டுள்ளன. அளிக்கப்பட்ட வாக்குகளில் 64 சதவீதம் சரத்
பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தின் 11
தொகுதிகளில் ஒரு தெரகுதியில் அதாவது ஊர்காவற்துறை தொகுதியில்
மாத்திரமே மகிந்த வென்றுள்ளார் அதுவும் 635 வாக்குகள் மட்டுமே
மேலதிகமாக பெற்றுள்ளார்.
வன்னி மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் சரத் பொன்சேகா வெற்றி
பெற்றுள்ளார். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து
தொகுதிகளிலும் மகிந்த படு தோல்வியடைந்துள்ளார் சரத் பொன்சேகா 69
சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். திருகோணமலையில் சேருவில
தொகுதியைத் தவிர மூதூர் திருகோணமலை தொகுதிகளில் மகிந்த
தொல்வியடைந்துள்ளார். அம்பாறையிலும், அம்பாறை தொகுதியைத் தவிர எனைய
3 தொகுதிகளிலும் மகிந்த தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
சரத் பொன்சேகா வெற்றி பெற்ற இன்னொரு மாவட்டம் மத்திய
மாகாணத்திலுள்ள மலையகத் தமிழர்கள் அதிகமாக வாழும் நவரெலிய
மாவட்டமாகும். அங்கும் சரத் பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார்.
கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் அனைத்திலும்
மகிந்த தொல்வியடைந்துள்ளார். 15 தொகுதிகளில் 6 தொகுதிகளில் சரத்
பொன்சேகா வென்றுள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணிப்புகளின் படி தமிழர்களின்
வாக்குகள் திசை தெரியாதபடி சிதைந்துள்ளதாக கணிப்புகள்
வெளியிடப்பட்ட போதும், இன்றைய தேர்தல் முடிவுகளானது வேறும் பல
செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறது.
அரசுடன் இணைந்த அனைத்து தமிழ் கட்சிகளும் இத்தேர்தலில்
நிராகரிக்கப்பட்டுள்ளனர். அரசுடன் உள்ள முக்கிய தமிழ் கட்சிகளான,
வடக்கில் ஈ.பி.டி.பி, புளொட், மலையகத்தில் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ், மலையக மக்கள் கட்சி, கிழக்கில் டி.எம்.வி.பி என்பன
மகிந்தவுக்கு ஆதரவாக எத்தனை பிரச்சாரம் செய்த போதும் அவர்களின்
கருத்தை மக்கள் ஏற்காது தமது சொந்த முடிவினையே
எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. தமிழ் கூட்டமைப்பு சரத்
பொன்சேகாவின் கூட்டில் இருந்தது ஒரு பொருட்டல்ல. அவர்கள்
இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே வெளிப்பாடு ஏற்பட்டிருக்கும்
என்று கருதத் தோன்றுகிறது.
சரத்பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவை
வெற்றிபெறச் செய்ய அளிக்கப்பட்ட வாக்குகளில்லை. மகிந்தவை
தோல்வியடையச் செய்வதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளே என்று கூறலாம்.
கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள
முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள்
சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
கொழும்பில் சரத் பொன்சேகா வென்ற தொகுதிகளில் கிடைத்த வெற்றியில்
மனோ கணேசனுக்கு பங்குண்டு என்றும் கூறலாம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 வீத வாக்குகள் மட்டுமே
பதிவாகியுள்ளன. குறைந்தளவு வாக்குகள் பதிவான மாவட்டம் முல்லைத்தீவு
மாவட்டமே. மக்கள் தேர்தலில் ஆர்வமில்லையென்பதை இவை நிருபித்துள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 43 வீத வாக்குகளும், மன்னாரில் 34 வீத
வாக்குளுமே பதிவாகியுள்ளன. ஆக மொத்தத்தலில் வடக்கில் அனைத்து 5
மாவட்டங்களிலும் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே
பதிவாகியுள்ளன. இதற்கு மக்களின் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருந்த
போதும், அது முழுமையான காரணமாக இருக்க முடியாது என்று தெரிகிறது.
ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பின் வடக்கில் முழு பிரதேசங்களிலும்
தேர்தல் இடம்பெற்றுள்ளன. முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த மக்கள்
இறுதி நேரத்தில் அவசர அவசமாக குடியேற்றப்படுவதற்கு தேர்தல் ஒரு
முக்கிய காரணமாகவே இருந்தது.
ஆக மொத்தத்தில் இம்முறை தேர்தலானது, இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே
சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களில்
பெரும்பாலானோர் தெட்டத்தெளிவாக தென்னிலங்கை "தேசிய" அரசியல்
நீரோட்டத்தில் இருந்து பிரிந்து நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
குறிப்பாக தமிழ், மலையக மக்கள் தமது அரசியல் தலைமைகளுக்கு ஆப்பு
வைக்கவும் எம்மால் முடியுமென்று நிரூபித்திருக்கிறார்கள். மக்களின்
அரசியல் அபிலாசைகளை அத்தலைமைகள் பிரதிபலிக்கவில்லை என்றும்
அர்த்தம் கொள்ளலாம்.
மகிந்த அரசு வெளிப்படையாகவே ஒட்டுமொத்த அதிகாரத்தையும், அரச
வளங்களையும் துஸ்பிரயோகம் செய்து தமது மோசமான அராஜகத்தையும்,
அட்டுழியங்களையும் செய்தே இந்த வெற்றியை பெற்றனர் என்பது கண்கூடு.
ஊழல், மனித உரிமை உரிமை மீறல், கருத்துச் சுதந்திரப் பறிப்பு,
தொழிற்சங்கங்கள் மற்றும் இடது சாரிப் போராட்டங்களை மோசமாக அரச
இயந்திரத்தைக் கொண்டு தொடர்ச்சியாக நசுக்கி வந்தமை என மகிந்த
அரசுக்கு எதிரான அலை மிகுந்திருந்தது.
போர் வெற்றி மாத்திரமே தென்னிலங்கையில் மகிந்தவின் ஒரே ஒரு
துருப்புச் சீட்டாக இருந்தது. அந்த வெற்றி மயக்கத்திலிருந்து
மக்கள் மீள்வதற்குள் அந்த வெற்றியை பயன்படுத்த வேண்டுமென மகிந்த
அரசாங்கம் திட்டமிட்டது. அதற்கான தேர்தல் தான் இப்போது நடந்து
முடிந்தது. அதே வெற்றியை சம அளவில் பங்கு போடக்கூடியவரான முன்னாள்
இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகள் பொது வேட்பாளராக
நிறுத்தியபோதும் இறுதியில் எதிர்க்கட்சிகள்
தோல்வியடைந்திருக்கிறதென்றால் அதற்கான முக்கிய காரணங்கள் அரசின்
அதிகார துஸ்பிரயோகமும், போர் வெற்றி மயக்கத்திலிருந்து தென்னிலங்கை
மக்கள் இன்னமும் மீளவில்லை என்பதுமே.
வெகு விரைவில் நடத்தப்படவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்கான
ஒத்திகையாகவும் இந்தத் தேர்தலை அரசாங்கம் கருதியிருந்தது. அப்படி
நாடிபிடித்தறிவதற்கு இந்தத் தேர்தல் போதுமானதா என்பது
கேள்விக்குறியே. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழவிருக்கும் தேர்தல்
கூட்டணிகள் மற்றும் மக்கள் மீது ஏற்படுத்தப்படும் நம்பிக்கைகளே
அதன் முடிவைத் தீர்மானிக்கும். போர் வெற்றி எவ்வளவு காலம்
அரசாங்கத்துக்கு கை கொடுக்கும் என்பதையும் பொறுத்திருந்து
பார்ப்போம்.
யாரைப் பார்த்தாலும் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயரைத்தான் பார்த்துப்
பேசுகிறார்கள். தமிழ்மக்களில் கத்தோலிக்கரது விழுக்காடு 10
விழுக்காட்டுக்கும் குறைவானதே. எஞ்சியவர்களின் முஸ்லிம்கள் 5 விழுக்காடு
இந்துக்கள் 85 விழக்காடு. ஆனால் இந்து மடாதிபதி நல்லூர் ஆதீனத்தை யாரும்
சென்று பார்ப்பதில்லை. அவருக்கும் அரசியலில் அக்கறை இல்லை. இந்த
உலகத்தைப்பற்றி
அக்கறை இல்லை. சித்தம் சிவன்பால் என்று இருக்கிறார்.
இதனால்தான் இந்து மதம் தேய்ந்து வருகிறது. இந்துக்கள் என்று சொல்பவர்கள்
இது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
நால்வருக்குக் கொலை மிரட்டல்!
யாழ் பல்கலைக்கலைக்கழக விரிவுரையாளர்கள்
நான்கு பேருக்கு கொலை மிரட்டல்
நாட்டைக் காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினால் யாழ்
பல்கலைக்கலைக்கழக விரிவுரையாளர்கள் நான்கு பேருக்கு கொலை மிரட்டல்
விடுக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் நேற்றைய தினம் இரவு
பல்கலைக்கழக ஆண் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் வீசப்பட்டிருந்ததாக
பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நால்வரும் கடந்த காலங்களில் பொங்குதமிழ் நிகழ்வுகளில்
முன்னின்று செயற்பட்டவர்கள் என்றும் கடந்த இரண்டு வருடங்களாக
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிச் சென்றிருந்த இவர்கள் மீண்டும்
யாழ்பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இவர்கள் கடந்த காலங்களை போன்று தமது செயற்பாடுகளை மீண்டும்
ஆரம்பித்துள்ளனர் என்றும். அவர்களது செயற்பாடுகள் தொடர்ந்தால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யுத்தம் முடிந்து விட்டாலும் தமது
துப்பாக்கிக் குழல்கள் இன்னமும் ஓயவில்லை என்றும் குறிப்பிட்டு
வெளியிடப்பட்டுள்ளது.
அந்தத் துண்டுப் பிரசுரத்தின் கீழ் நாட்டைக் காக்கும் தேசியக்
கூட்டமைப்பு என்ற அமைப்பில் பெயர் பொறிக்கப்பட்டள்ளதாகவும் தெரிய
வந்துள்ளது.
நாட்டைக்காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு கடந்த காலத்தில்
யாழ் குடாநாட்டில் பலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்ததும் அந்த
அமைப்பினால் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொது மக்களும்
மாணவர்களும் பின்னர் இராணுவப் புலனாய்வுத்துறை மற்றும் ஈபிடிபி யினரால்
சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடை பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே.
மட்டக்களப்பு,ஜன.20: மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள்,
சிங்களர்கள்தான் அதிகம். இவ்விரு வகுப்பாருமே ராஜபட்ச அரசின்
நிர்வாகத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே அதிபர் தேர்தலில் புதிய
வேட்பாளரான ஜெனரல் பொன்சேகாவையே ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளனர்.
இப்போது
விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்துவிட்டதால்
தமிழர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் எலி வளைகூட
இல்லாதபடிக்கு எல்லா இடமும் சிங்களர்களின் ஆதிக்கத்திலும்
கண்காணிப்பிலும் கொண்டு வரப்பட்டுவிட்டது. இதற்காக புதிய
புதிய தொழில் திட்டங்களுக்கு இலங்கை அரசு கொழும்பிலிருந்தே
அனுமதி அளிக்கிறது. அதற்குத் தேவைப்படும் நிலங்களை
அளிப்பது, திட்டங்களுக்கு ஒப்புதல் தருவது போன்றவற்றை
உள்ளாட்சி அமைப்புகள் உடனுக்குடன் செய்து முடிக்கின்றன.
பொன்சேகா புதிய துடைப்பம், நன்றாக செயலாற்றுவார் என்று நம்புகிறோம்
என்கிறார் தனியார் நிறுவன மேலாளர் யோகராஜா.
ராஜபட்சவைப் போல பொன்சேகாவுக்கென்று தனி அரசியல் கட்சி ஏதும்
கிடையாது; எனவே அவர் காப்பாற்ற வேண்டிய ஆதரவாளர்கள் கூட்டம் ஏதுமில்லை.
எல்லா பிரச்னைகளையும் புதிய கோணத்தில் பார்த்து தீர்க்க முயற்சிப்பார்
என்று நம்புகிறோம் என்றார் யோகராஜா.
போரில் விடுதலைப் புலிகளை வென்ற பிறகு செய்வதாகக் கூறியவற்றில்
ஒன்றைக்கூட ராஜபட்ச அரசு செய்யவில்லை என்று தமிழர்கள்
பட்டியலிடுகின்றனர்.
அனைத்து இனத்தவருக்கும் நீதி வழங்குவோம், மாகாணங்களுக்கு சுயாட்சி
அதிகாரம் வழங்குவோம், உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் வழங்குவோம், ஊழலற்ற
நல்ல ஆட்சி வழங்குவோம், விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்று
கூறியதில் ஒன்றைக்கூடச் செய்யவில்லை என்று அவர்கள் சாடுகின்றனர்.
கிழக்குப் பகுதியைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கு திட்டங்களை
அமல் செய்வதாக ராஜபட்ச அரசு கூறியது. சாலைகளைப் போட்டார்கள். ஆனால்
அந்தப் பணியின் துணை ஒப்பந்தத்தைக்கூட தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ
கொடுக்காமல் அனைத்தையும் சிங்கள ஒப்பந்ததாரர்களைக் கொண்டே செய்து
முடித்தார்கள். அதில் வேலைவாய்ப்பைக்கூட அளிக்கவில்லை என்கிறார்
உள்ளூர்க்காரர் ஒருவர்.
மத்திய அரசு அங்கீகரித்த ஒப்பந்ததாரர்கள் பட்டியலில்
உள்ளூர்க்காரர்கள் ஒருவரும் இல்லை, அத்துடன் சாலை போடும் பணிகளில்
அவர்களில் யாருக்குமே அனுபவம் இல்லை என்று அதற்கு விளக்கம் தருகிறார்
மூத்த அதிகாரி ஒருவர்.
வாய்ப்பே தராவிட்டால் அனுபவம் எப்படி கிடைக்கும் என்று தமிழர்களும்
முஸ்லிம்களும் கேட்கின்றனர்.
மாகாண அரசிடம் பணம் இல்லை: கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையனிடம்
உள்ள நிதி வசதி மாகாண அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கத்தான்
போதுமானதாக இருக்கிறது; வளர்ச்சித் திட்டங்களை அதிபர் ராஜபட்சவின்
சகோதரர் பாசில் ராஜபட்ச, அவருடைய பிரதிநிதி சுசாந்தபுஞ்சிநிலமே
ஆகியோரின் சிறப்பு பணிக்குழு மூலம்தான் நிறைவேற்றுகின்றனர் என்று தமிழ்
தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.
ராஜபட்சவின் இலங்கை சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவரும் தேசிய
சமரசத்துக்கான அமைச்சரும் மட்டக்களப்பு பகுதிக்கு விடுதலைப் புலிகள்
அமைப்பின் முன்னாள் தலைவருமான கர்னல் கருணாவை இலங்கை அரசு ஆதரிக்கிறது.
அவர் மூலம் தங்களுடைய செல்வாக்கை வளர்த்துக்கொள்ள ராஜபட்ச
விரும்புகிறார். ஆனால் அவரோ உள்ளூர் மக்களுக்காக எந்த நன்மையையும்
செய்யவில்லை என்கின்றனர் மக்கள்.
இப்பகுதி முஸ்லிம்கள் பெரும்பாலும் வியாபாரிகள்; கணிசமானவர்கள்
மோட்டார் வாகன ஓட்டிகள். கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசியால் அவர்கள்
அன்றாட வாழ்க்கையை நடத்தவே முடியாமல் திண்டாடுகின்றனர்.
132 பேர் அமைச்சர்கள்: இலங்கையில் ராஜபட்ச தலைமையிலான அரசில் 132 பேர்
அமைச்சர்கள், துணை அமைச்சர்களாக இருக்கின்றனர். இவர்களால் மட்டும்
அரசுக்கு ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் செலவாகிறது.
100 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் மத்திய அரசில் 48
அமைச்சர்கள்தான் இருக்கின்றனர். 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட
இலங்கைக்கு 132 பேர் அமைச்சர்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் பொன்சேகா.
உலகிலேயே 90% ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருக்கும் ஒரே
நாடு இலங்கைதான் என்றும் அவர் வேதனை பொங்க சுட்டிக்காட்டுகிறார்.
132 அமைச்சர்களுக்காக ஆண்டுதோறும் 400 கோடி செலவிடப்படுகிறது. 90
லட்சம் ஏழைகளுக்காக மொத்தமே 1000 கோடி ரூபாய்தான் செலவிடப்படுகிறது
என்று ஒப்பிடுகிறார் பொன்சேகா.
ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மீதும் 65 ரூபாய் வரியாக விதிக்கப்படுகிறது.
இதை ரத்து செய்தாலே விலைவாசி வேகமாக இறங்கிவிடும் என்கிறார் பொன்சேகா.
வணக்கம்.
சிறிலங்கா ஆட்சித் தலைவர் தேர்தலுக்கு இன்னும் எண்ணி 17 நாள்களே
இருக்கின்றன. சரியாகவோ பிழையாகவோ (என்னைப் பொறுத்தளவில மிகச்
சரியாக) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்த இராசபக்சே மீண்டும்
ஆட்சித்தலைவராக வருவதற்கு எதிராக முடிவு எடுத்துள்ளது. அதன்
மறுபக்கமாக சரத் பொன்சேகாவை ஆதரிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.
மகிந்த இராசபச்சே
மீண்டும் பதவிக்கு வந்தால் வடக்கு இராணுவ மயப்படுத்துவதற்கும் வடக்கும்
- கிழக்கும் சிங்கள மயப்படுவதற்கும் நிறைய வாய்ப்புண்டு. ஏற்கனவே
ஆங்காங்கு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகிறது என்ற செய்தி வந்து
கொண்டிருக்கிறது.
நேற்றைய கனடிய
தமிழ் வானொலி அரசியல் களத்தில் ஆட்சித் தலைவர் தேர்தல் பற்றி
மேலோட்டமாகவே பேசப்பட்டது. விரிவாகப் பேசப்படவில்லை. இந்த
இருட்டடிப்பு திட்டமிடப்பட்டுச் செய்ததாகவே நான் நினைக்கிறேன்.
இந்தத் தேர்தலில்
தமிழ்மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என
நினைக்கிறேன். அதனை உறுதிப்படுத்த புலம் பெயர் தமிழர்கள் தங்கள்
உறவுகளை அழைத்து சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு கேட்க வேண்டும்.
கடந்த
யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளுர் ஆட்சித் தேர்தலில் மக்கள்
த.கே.கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற பரப்புரையை
வெற்றிகரமாக சிரிஆர் மற்றும் ரிவியை செய்தது.
நாங்கள் 17 இலட்ச
ரூபாயை திரட்டிக் கொடுத்தோம்.
அதை விட வீச்சோடு
இந்தத் தேர்தலில் சிரிஆர் மற்றும் ரிவியை பரப்புரை செய்ய வேண்டும்.
வரலாறு எங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்திருக்கிறது. அதனைப்
புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்த வேண்டும்.
இதற்கான ஓழுங்கைச்
செய்ய முடியுமா? நன்றி.
இலங்கையில் நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல்
1) இலங்கையில் நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக்
கூட்டமைப்பு முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என
எடுத்துள்ள முடிவு பற்றியும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின்
இரட்டை வேடம் பற்றியும் எனது கருத்துக்களை முன்வைக்க வேண்டிய கட்டாயத்
தேவை ஏற்பட்டுள்ளது.
நான் முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒரு பகிரங்க மடல்
எழுதியிருந்தேன். அதை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் அடிக்கடி என்னால் கருத்துக்களை வெளிக்கொணர
முடியவில்லை. காரணம் தற்போதைய சூழ்நிலையில் மறைவிட வாழ்க்கையும்
இக்கட்டான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதால் தாயகத்தில் ஒரு பகுதியில்
இருந்து கொண்டே செயற்பட வேண்டி உள்ளது.
நான் மாத்திரமின்றி என்னைப்போன்ற பலர் இவ்வாறான நிலையில் மறைந்திருந்தும்
மக்களோடு மக்களாக இருந்தும் செயற்பட வேண்டியுள்ளது. எமது விடுதலை என்ற
வேட்கை இன்னும் எம்மை விட்டு அகல வில்லை. வீழ்ந்துவிட்டோம் ஆனால்
மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்கின்றோம்.
இனி விடயத்திற்கு வருவோம். எதிர்வரும் இலங்கையின் ஐனாதிபதி தேர்தல்
தொடர்பாக கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு மக்களுக்கு திருப்தி கரமாக
இருக்கின்றதோ இல்லையோ ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வசதிக்கும்
தமது சொந்த தேவைக்கும் ஏற்ற வகையில் முடிவுகளை எடுத்துள்ளனர். இரு
பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் தங்களது சொந்த
நோக்கத்தைக் கருத்தில் கொண்டே செயற்பட்டுள்ளனர். அந்த இருவர் பற்றி
பின்னர் பார்ப்போம்.
முதலில் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐயா சம்பந்தன் அவர்களின்
வழிகாட்டலில் அவரின் பின்னால் சென்றுள்ளனர். சம்பந்தன் ஐயா ஆட்சி மாற்றம்
வேண்டும் என்றும் அதற்காக சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்று
கூறியுள்ளார். மகிந்தவின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டுமென கூறுகின்றார்.
ஆனால் அது உண்மைதான் இத்தனை கொடுமைகளைச் செய்த மகிந்தவின் ஆட்சியை
இல்லாமல் செய்வதே நல்லது. ஆனால் அவர் சரத்பொன்சேகா நல்லவர் மாதிரியும்
அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும்
தீர்ந்துவிடும் என நம்புகின்றாரா? அவர் துணிந்து நின்று மகிந்தவின்
ஆட்சியை கலைக்க வேண்டுமென கூறும் அளவிற்கு அவருக்கு தனித்துவமான துணிவு
கிடையாது. அவர் வாய் வீரம் பேசினாலும் உள்ளுர பயந்தவர். நான் வன்னியில்
வைத்து அவரைச் சந்தித்தபோதும் அவருடன் கதைத்தபோதும் இன்னும் சில
எம்.பிக்களின் கதைகளை வைத்தும் அவரின் பல பக்கங்களை அறிந்து கொண்டவன்.
இது எமக்கு எல்லோருக்கும் அப்போதே தெரிந்திருந்தது.
பதில் - நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது.
முன்னாள் போராளி என நினைக்கிறேன். ஆனால் இப்போது விரக்தி காரணமாகவோ
அல்லது வேறு காரணங்களுக்கோ எல்லோர் மீதும் சேறு பூசுகிறீர்கள்.
உள்நோக்கம் கற்பிக்கிறீர்கள். எண்பிக்க முடியாத குற்றச்சாட்டுக்களை
அடுக்கிறீர்கள். நீங்கள் ஒருவரே உத்தமர், சத்தியவான் என்று
நினைக்கிறீர்கள். மகிந்த இராசபக்சேயின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என
சம்பந்தர் கூறுகிறார் அது உண்மைதான் என்கிறீர்கள். அப்படியென்றால் சரத்
பொன்சேகாவுக்கு வாக்குப் போடாமல் அது சாத்தியமாகுமா? ஆட்சிமாற்றமும்
வேண்டும் சரத் பொன்சேகாவும் வேண்டாம் என்பதில் உள்ள முரண்பாட்டை நீங்கள்
கவனிக்கத் தவறிவிட்டீர்கள். அதாவது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
என்றவன் கதைமாதிரி.
(2) எனவே மகிந்தவை எதிர்ப்பது என்பது அவரால் மாத்திரம் எடுத்த முடிவு
அல்ல. அவருக்கு பின்னால் சில சக்திகள் உள்ளன. பொன்சேக்கா ஐனாதிபதியாக
வரவேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். இதற்கு இந்தியாவும்
எதிர்ப்பல்ல. எனவே இந்த வெளிநாடுகளின் துணையுடன்தான் அவர் இந்த
முடிவுக்கு வந்தார். இவருடன் சுரேஸ் பிறேமச்சந்திரன் மாவை ஐயா
ஆகியோருக்கும் தொடர்புள்ளது. இவர்கள் சேர்ந்துதான் இந்த முடிவை
எடுத்தனர். இதற்காக பல கோடி ரூபா டொலர்களும் கைமாறியுள்ளது. இந்த விசயம்
புரியாமல் ஏதோ சம்பந்தன் ஐயா மக்களுக்காக சரத்துடன் ஒப்பந்தம்
செய்துள்ளார் என நம்பி அவரின் பின்னால் சில எம்.பி;க்கள் சென்றுள்ளனர்.
பதில் - இதெல்லாம் உமது கற்பனை அல்லது பிரேமை.
முன்பு சம்பந்தர் இந்தியாவின் கைப்பொம்மை என்றீர்கள் இப்போது அவர்
அமெரிக்காவின் கைப் பொம்மை என்றும் சொல்கிறீர்கள். நான் அறிந்தவரை
இந்தியா தனது பொருண்மிய - பூகோள நலன்காரணமாக இராசபக்சே தேர்தலில் வெற்றி
பெற்று வருவதை விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. எனவே சம்பந்தரின் முடிவு
அவர் மற்றவர்கள் குற்றம்சாட்டுவது போல் இந்தியாவின் கைப்பொம்மையாக இருக்க
முடியாது. இந்த முடிவுக்குக் காரணம் "இதற்காக பல கோடி ரூபா டொலர்களும்
கைமாறியுள்ளது" என எந்த அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டை
முன்வைக்கிறீர்கள். இதையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும். கோடி ரூபா
டொலர் அல்ல ஒரு ரூபா டொலர் கைமாறியதாக உங்களால் எண்பிக்க முடியுமா? யார்
கொடுத்தார்கள்? எந்த வைப்பகம் மூலம் கொடுக்கப்பட்டது? என்பதை அருள்
கூர்ந்து சொல்ல முடியுமா? இப்படியான அடிப்படை இல்லாத
குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
(3) இதில் தங்கேஸ்வரி, அரியநேந்திரன், கனகசபை போன்ற
எம்.பிக்களுக்கு அரசியல் தெரியாது. இவர்கள் தற்செயலாக கருணாவின்
செல்வாக்குடன் வந்தவர்கள். தற்போதும் அவருக்கு நன்றிக் கடனாக உள்ளனர்.
இதை வெளிப்படையாகவே கனகசபை ஐயா கூறியுள்ளார். இவர்கள் அடுத்த தேர்தலில்
போட்டியிடுவது என்றால் சம்பந்தரின் பின்னால் சென்றே ஆகவேண்டும். இதுதான்
இவர்கள் இந்த முடிவுக்கு வந்தனர். இவர்களுக்கு எங்கே மக்களை பற்றிய
சிந்தனை உள்ளது.
பதில் - அப்படியே இருக்கட்டும். அரசியல்
தெரிந்தவர்கள் யார் யார் என்பதை சொல்லமுடியுமா?
(4) சிறில் அண்ணை தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவர். இதனால்
சம்பந்தரின் விசுவாசி அவரின் பின்னால் செல்லாவிட்டால் அடுத்த தேர்தலில்
போட்டியிட முடியாது என்ற பயமும் இவருக்கு உண்டு. இவரைப் பற்றி எனக்கு
நன்கு தெரியும். அவர் எம்.பியாக முன்பு பல தடவைகள் சந்தித்துள்ளேன்.
சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி வாழ பழகிக் கொண்டவர். எப்படியாவது
வாழ்ந்து கொள்வார். ஆனந்தன் எம்.பியும் இவரைப்போன்றவர்தான்.
பதில் - இப்படி எதற்கெடுத்தாலும் உள்நோக்கம் கண்டு
பிடித்து அவதூறு சொல்வது அழகல்ல. அது உங்கள் விரக்தியை தீர்க்கமட்டுமே
உதவும்.
(5) இனி இந்த தேர்தலில் இரண்டு பேரையும் ஆதரிக்கக் கூடாது என்று
கூறியவர்கள் என்ன காரணத்திற்காக அப்படி முடிவெடுத்தார்கள் என்றும்
பார்க்க வேண்டும். இந்த முடிவை எடுத்தவர்கள் மட்டும் சளைத்தவர்களா.
இதில் சிறிகாந்தா மற்றும் கிசோர் போன்றோர் ராஐபக்சவின் செல்லப்பிள்ளைகள்.
அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்புபவர்கள். எனவேதான் ஆட்சி
மாற்றம் பற்றி பேசாமல் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என
கூறியுள்ளனர். இவ்வாறு கூறினால் கட்சி எடுத்த முடிவுக்கும் தலை
சாய்த்துவிட்டு ராஐசக்சவையும் சமாளித்துச் செல்லலாம். அல்லது இருவரையும்
ஆதரிப்பதில்லை என கூறிவிட்டு ராஐபக்சவை மறைமுகமாக ஆதரிக்க
திட்டமிட்டிருக்கலாம். இதன் சூத்திரம் அவர்களுக்கும் இறைவனுக்கும் தான்
தெரியும்.
பதில் - நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.
சிறிகாந்தா பட்டிக்குள் இருக்க மறுக்கும் கறுப்பு ஆடு என்ற எண்ணம்
மக்களிடம் இருக்கிறது.
(6) சிறிகாந்தா பெரும் தொகை பணத்தை ராஐபக்சவிடம் பெற்றுவிட்டே
சிவாஐpலிங்கத்தை தேர்தலில் இறக்கியதாகவும் ஒரு நண்பர் எனக்கு சொன்னார்.
இதிலும் பிழை இருப்பதாகத் தெரியவில்லை.
பதில் - இது கதைதான். நீங்களே சொல்லி விட்டீர்கள்.
(7) இனி இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்கக் கூடாது என விரும்பும்
கNஐந்திரன், செல்வன் அடைக்கலநாதன், பத்மினி சிதம்பரநாதன், சிவாஐpலிங்கம்
ஆகியோர் பற்றி பார்க்க வேண்டும். இவர்கள் அனைவரும் நீண்டகாலம்
வெளிநாடுகளில் இருந்தவர்கள். அங்கு பல கூட்டங்களிலும் பேசியிருந்தவர்கள்.
இவர்களுக்கு இங்கு வந்தால் பெரும் ஆபத்தும் காத்திருந்தது. எனினும்
வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது இவர்கள் எதுபற்றியும் வாய்
திறக்கவில்லை.
முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பின் எல்லாமே முடிவடைந்துவிட்டது என்று
நினைத்துக் கொண்ட பத்மினி அக்கா முதன்முதலாக இங்கு வந்து சேர்ந்தார்.
பின் அவர் ஐனாதிபதி ராஐபக்சவை நேரடியாகச் சந்தித்து கை குலுக்கிக்
கொண்டார். அவரின் கையைக் குலுக்குவதற்கு அவரால் எப்படி மனம் வந்ததோ
தெரியவில்லை. அரசியலில் நீண்ட அனுபவமோ போராட்டத்தில் எந்தவித பற்றோ
பக்குவமோ இல்லாத இவரை அரசியலுக்குக் கொண்டுவந்ததே நாம் விட்ட தவறுதான்.
இவரை தேர்தலுக்கு வேட்பாளராக போட்டபோதே எமக்கு சந்தேகம் இருந்தது.
அப்போது நாங்கள் சிலர் இது பற்றி பொறுப்பாளர்களுடன் விவாதித்திருந்தோம்.
இவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல சலுகைகள்
வழங்கப்பட்டன. மிக முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு
அனுப்பப்பட்டார். ஆனால் அதனால் பெரியளவில் எமது போராட்டத்திற்கோ
சமுகத்திற்கோ நன்மை கிடைக்கவில்லை. ஆனால் அவரின் குடும்பத்திற்கே நன்மை
கிடைத்தது.
இவர் ஐனாதிபதியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்கு
வந்ததும் அவருக்கு ஆதரவாகவே செயற்பட வெண்டியிருந்தால் இரு
வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
பதில் - உடன்பாடு செய்து கொண்டார் என்பது நீங்கள்
வீசும் அடிப்படையில்லாத குற்றச்சாட்டு.
(8) சிவாஐpலிங்கம், செல்வன் அடைக்கலநாதன், கஜேந்திரன் ஆகியோரும் பசில்
ராஐபக்சே மூலம் ஐனாதிபதியுடன் கதைத்து ஒப்பந்தம் செய்தே இங்கு வந்து
சேர்ந்தனர். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு நாங்கள் நாட்டுக்குச்
சென்றால் எங்களை கொன்றுவிடுவார்கள் சிறையில் அடைத்துவிடுவார்கள் என்று
வீராப்பு பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் இங்கு வந்ததும் நடந்தது
என்ன? எந்தவித விசாரிப்போ விசாரணைகளோ தொல்லைகளோ இல்லாமல் வரவேற்புக்
கிடைத்தது. செல்வன் அடைக்கலநாதனை விசாரணை செய்தது கூட சிறிகாந்தாவினால்
மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடாகமாகத்தான் உள்ளது.
இவர்கள் எக்காரணம் கொண்டும் ஆட்சி மாற்றம் வேண்டுமென கேட்கமாட்டார்கள்.
அதற்காக செயற்படவும் மாட்டார்கள். அப்படி ஏதும் செய்தால் அல்லது
கதைத்தால் இவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக பசில் உள்ளே
போட்டுவிடுவார். இதனால் தங்களையும் காப்பாற்றி தங்கள் கதிரையையும்
காப்பாற்றிக் கொள்வதென்றால் இரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை
என அறிவிப்பது பின்னர் பசில் ஊடாக ஐனாதிபதிக்கு விசயத்தை விளங்கப்படுத்தி
அவருக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவது என்ற திட்டமே இவர்களிடம் உள்ளது.
பதில் - பதில் - உடன்பாடுகள் செய்து கொண்டார் என்பது நீங்கள் வீசும்
அடிப்படையில்லாத குற்றச்சாட்டு. மற்றவர்களைத் தூற்றுவதே உங்கள் முழு நேர
வேலையாக இருக்கிறது.
(9) இவர்கள் நாங்கள் பலமாக இருந்தபோது எமது பக்கமும் தற்போது சிங்கள
பேரினவாதத்தின் பக்கமுமாக இருப்பதைப் பார்க்கும்போது தமிழ் மக்களின்
தலைவிதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
பதில் - கவலையை விடுங்கள். மக்கள் முடிவெடுக்கட்டும்.
(10) சிங்கள நாட்டின் ஐனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தமிழ்
மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஒவ்வொரு வேட்பாளர்களும் தாம்
வெற்றி பெறுவதற்காக எமது தயவையே நாடுவார்கள். வெற்றி பெற்ற பின்பு
எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். இதுதான் வரலாறு இதற்காக நாம் எமது
இனத்தை விற்க முடியுமா? தமிழினத்தின் இரத்தத்தில் தோய்ந்த சரத்
பொன்சேக்காவின் கரத்தை பலப்படுத்துமாறு இவர்கள் எந்த முகத்துடன் தமிழ்
மக்களிடம் செல்ல உள்ளனர்.
பதில் - எத்தனை காலத்துக்குப் பழைய காலத்திலேயே நீங்கள் பயணிக்கப்
போகிறீர்கள்? ஒரு மக்களாட்சி முறைமை - அது எவ்வளவு பலவீனமாக இருந்தாலும்
- மக்கள் தங்கள் துருப்புச் சீட்டான வாக்குரிமையை பயன்படுத்த வேணடும்.
இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஆட்சித்தலைவரின் அதிகாரம் வவுனியாவோடு
நின்றுவிடாது. நின்றால் அந்தத் தேர்தலைப் பற்றி நாம் கவலைப்படாது
இருக்கலாம். ஆனால் யதார்த்தம் அதுவல்ல.
(11) கNஐந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென
கூறியிருந்தார். அவர் தனது கட்சி எடுத்த முடியிலேயே நின்று கொண்டார்.
அவரைப் பொறுத்த வரையில் கொள்கையுடன் செயற்பட்டார் என்றே கூறவேண்டும்.
ஏனெனில் அவர் ஏனையவர்களைப் போல் எந்த பக்கத்திற்கும் அடிபணிய வேண்டிய
தேவை இல்லை.
பதில் - மெத்த நல்லது.
(12) அடுத்து சிறையில் அடைபட்டிருக்கும் கனகரெத்திம் ஐயா. இவர்
தேசியத்தில் ஊறிப்போன ஒருவர். அவர் இன்று நேற்று அல்ல நான் கட்ட
காலத்தில் இருந்தே போராட்டத்திற்கென தன்னை அர்ப்பணித்தவர்.
முள்ளிவாய்கால்வரை தனது மக்களோடு மக்களாக இருந்து தற்போது அதற்காக
சிறையில் அடைபட்டுள்ளார். அவர் நினைத்திருந்தால் சண்டை தொடங்கியவுடன்
தனது குடும்பத்துடன் வெளியேறி இருக்க முடியும். ஆனால் அவர் அப்படி
செய்தது கிடையாது. இறுதிவரை அந்த மண்ணிலேயே இருந்தவர். இவரைப்போல் எந்த
ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் நடந்தது கிடையாது.
பதில் - சதாசிவம் கனகரத்தினம் சிறையில் வாடுவதற்கு
மகிந்த இராசபச்சே தான் காரணம். ஆட்சியை மாற்றினால்தான் அவரைச் சிறை
மீட்கலாம்.
(13) அடுத்து தற்போதும் வெளிநாட்டில் தங்கியுள்ள nஐயானந்தமூர்த்தி
அண்ணையை எடுத்துக் கொண்டால் அவர் இரண்டு பிரதான வேட்பாளர்களையும்
எதிர்த்திருந்தார். அவரைப்பொறுத்த வரையில் அவர் ராஐபச்சாவிடமோ
பொன்சகாவிடமோ மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இரண்டு பேரையும்
அவர் ஆதரிக்கவில்லை. இவரும் எமது இலட்சியப் போராட்டத்திற்காகவும்
தேசியத்திற்காகவும் நிறையவே அர்ப்பணிப்புகளைச் செய்தவர். இதனால் இன்று
இங்கு வரமுடியாத நிலையில் உள்ளவர். இன்னும் இவரைப் பற்றிச் கூறுவதனால்
2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பிளவு படும் அபாயம் ஏற்பட்ட போது அதை மிகவும் சாதுரியமாக எதிர்கொண்டு
முறியடித்தவர். மட்டக்களப்பு எம்.பிக்கள் கருணாவின் பக்கம் இருந்தபோது
அதை உடைத்துக் கொண்டு வெளியேறியவர். அன்றிலிருந்து இன்று வரை தமிழ்
தேசியத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டு வரும் ஒருவர்.
பதில் - நீங்கள் சொல்வது எனக்கும் உடன்பாடுதான்.
(14) எனவே இந்த நிலையில் தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழ் தேசியக்
கூட்டமைப்பு ஐனாதிபதி தேர்தலுக்கு எடுத்துள்ள முடிவு என்பது அவரவர்
வாழ்வுக்காகவும் சுயநலத்திற்காகவுமே என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
2005 ஆம் ஆண்டு ஐனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்கள் எடுத்த முடிவை பிழை
என கூறும் சம்பந்தன் ஐயா போன்றோருக்கு தமிழ் மக்கள் இனியும்
வாக்களிப்பார்களா என்பதை அடுத்து வரும் பொதுத் தேர்தல்தான் பதில்
கூறவேண்டும.
பதில் - அப்போது வி.புலிகள் தங்கள் படை பலத்தின்
அடிப்படையில் எடுத்த முடிவு சரியாக இருந்திருக்கலாம். இப்போது
திரும்பிப்பார்த்தால் அது பிழையாகப் படுகிறது. காரணம் களத்தில் ஏற்பட்ட
பின்னடைவுதான். இதைத்தான் சம்பந்தர் சொன்னார்.
முடிவாக கடந்த காலத்தை பட்டறிவின் அடிப்படையில் மீள் ஆய்வு செய்து அது
தரும் பாடங்பளைப் படித்துக்கொண்டு செல்லும் பாதையில் நம்பிக்கையோடும்
ஒற்றுமையோடும் பயணிப்போம். நன்றி
நன்றி
நக்கீரன்
சிங்கள - பவுத்த இனவாதி இராசபக்சேயை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க
வேண்டும்
ஆட்சித்தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு கிழமையே
எஞ்சியிருக்கின்றன.
ஆளும் கட்சி எதிர்க் கட்சி இரண்டும் சூடான பரப்புரையை முடுக்கி விட்டுள்
ளன.
இராசபக்சேயைப் பொறுத்தளவில் அவர் அரசின் ஆள், நிதி, ஊடகம் போனற
வளங்களைத் தாராளமாகப் பயன்படுத்தி வருகிறார்.
சமுர்த்தி ஊழியர்கள் இராபச்சேயின் பரப்புரையில் வெளிப்படையாகக் கலந்து
கொள்கிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள்
காலை மாலை இரவு என இராசபக்சே புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன.
மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சித்தலைவர் தேர்தல் நடந்திருந்தால்
மகிந்த இராசபக்சே மிக எளிதாக வெற்றிவாகை சூடியிருப்பார். போட்டி
ஒருதலைக் குதிரை ஒட்டமாக இருந்திருக்கும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியை வாக்குகளாக மாற்றி
அதனை அறுவடை செய்யலாம் என
மகிந்தா இராசபக்சே கணக்குப் போட்டார்.
விடுதலைப் புலிகளைப்
போரில் அழித்தொழித்த காரணத்தால்
இராசபக்சே சிங்கள மக்களிடம் ஒரு நவீன துட்ட கைமுனு எனக் காட்சி
தருகிறார். அரச சார்பு ஊடகங்களும் அரசு கட்டுப்பாடு ஊடகங்களும்
இராசபக்சேயை அப்படித்தான் வருணிக்கின்றன. அவர்தான் நாட்டின் அரசன்
என்றுகூட சில ஊடகங்கள் புகழாரம் சூட்டி மகிழ்கின்றன
ஆனால் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவின் அரசியல் நுழைவு மகிந்
த
இராசபக்சேயின் வெற்றியைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. சரத் பொன்சேகா
தேர்தல் களத்தில் குதிப்பார் என்பதை இராசபக்சே கனவிலும்
எதிர்பார்க்கவில்லை. அதனால் இராசபக்சே போட்ட திட்டம் கட்டிய கோட்டை
தவிடுபொடி ஆகலாம் என்ற நிலமை தென்னிலங்கையில் தோன்றியுள்ளது.
இந்தச் சந்தடி சாக்கில் கட்சித் தாவல்களுக்கும் பஞ்சமில்லை. இலங்கைத்
தொழிலாளர் காங்கிரசின் மூத்த தலைவர்க
ள்
செல்லச்சாமி, யோசராசன்,
சச்சிதானந்தன் இராசபச்சேயை ஆதரிக்கும் தொண்டமானை விட்டு சரத்பொன்சேகா
முகாமுக்குப் பாய்ந்துவிட்டார்கள்.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகலா பிரபாகரனும் பொன்சேகா பக்கம்
தாவிவிட்டார்.. ஆனால் பதவிக்கு ஆபத்தென்பதால் கட்சிமாறவில்லை! சும்மா
சொல்லக்கூடாது.
அவர்
பிழைக்கத் தெரிந்த புத்திசாலித்தனமான
அரசியல்வாதி.
மே
மாதம் முதல் பனாகொட இராணுவ முகாமில் தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டிருந்த தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தையார் (அகவை 86)
அங்கேயே சாவடைந்துவிட்டார். பலத்த போராட்டத்தின் பின் அவரது பூதவுடல்
வல்வெட்டித்துறைக்குக் கொண்டு சென்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட
பன்னிரு வேங்கைகள் எரிக்கப்பட்ட தீருவில் மயானத்தில் உரிய மரியாதையோடு
தகனம் செய்யப்பட்டுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரது
துணைவியார் பார்வதி விடுதலை செய்யப்பட்டுள்ளர்.
ஆனால் அவர்களோடு கைது செய்யப்பட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.
சதாசிவம் கனகரத்தினம் சிறையில் வாடுகிறார். எழுநூறுக்கும் அதிகமான தமிழ்
அரசியல் கைதிகள் ஆண்டுக்கணக்காகச் சிங்களச் சிறைகளில்
அடைக்கப்பட்டுள்ளார்கள். தங்களை விடுவிக்குமாறு உண்ணாநோன்பில்
குதித்துள்ள அவர்களது போராட்டம் தொடர்கிறது.
North Eastern Monthly
என்ற செய்தி
ஏட்டின் ஆசிரியர் J.S.
திசநாயகம் அமைதிக் காலத்தில் எழுதிய இரண்டு
கட்டுரைக்கு ஒரு சிங்கள நீதிபதியால் இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத்
தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது அவரைப்
பிணையில் விட இராசபச்சேயின் கொடுங்கோல் அரசு இசைந்துள்ளது.
மகிந்த இராசபச்சேயின் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் யோசேப் பரராசசிங்கம், நடராசா ரவிராஜ், கிட்டினன்
சிவநேசன்,
தியாகராசா மகேஸ்வரன் போன்றோர்களது கொலையாளிகள் இன்னும் நீதிக்கு முன்
நிறுத்தப்படவில்லை.
இதேபோல் மகிந்த இராசபக்சே அரசின் தமிழின அழித்தொழிப்பபின் (
Genocide)
ஒரு கூறாகக் சிவராம் உட்பட 34
ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த 34 இல் 30 பேர் தமிழர்கள்
ஆவர். மேலும் 29 தமிழ் - சிங்கள ஊடகவியலாளர்கள் கொடிய சிங்கள அரசுக்கு
அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பியுள்ளார்கள்.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத்
பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஒரு
இராசதந்திரமான முடிவு என எல்லோராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் சரத் பொன்சேகா மற்றும்
அய்க்கிய தேசியக் கட்சித் தலைவர் இரணில் விக்கிரமசிங்கா இருவரோடும்
நடத்திய பேச்சுவார்த்தைகளில் பத்துப் பொருள்பற்றி உடன்பாடு
காணப்பட்டுள்ளது.
பொது நிருவாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்தல், துணை இராணுவக்
குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல், இடம்பெயர்ந்த மக்களை
மீள ்குடியேற்றுதல் மற்றும் மறு வாழ்வளித்தல், சிங்களப் படையினரால்
வல்வளைப்புக்கு ஆட்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம்
மீள ஒப்படைத்தல், குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான சான்றில்லாமல்
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவித்தல்
போன்றவற்றில் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இதில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு
அடிப்படையில் மறுவாழ்வளித்தல், மக்களை அவர்களது சொந்த வீடுகளில்
மீள்குடியேற்றுதல் முக்கியமானவை ஆகும்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சார்பில் சிங்கள அரசியல் தலைமைகளோடு
எழுதப்பட்ட உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டுள்ளன. இந்த உடன்பாட்டுக்கும்
அதே கதி ஏற்படலாம். இருந்தும் ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்பை நாம் நழுவ
விடக் கூடாது.
ஆட்சிமாற்றத்துக்கு ஆதரவு அளிப்பதாக சிவாஜிலிங்கம் சொல்கிறார். ஆனால்
அந்த ஆட்சி மாற்றம் இராசபக்சேயைத் தோற்கடித்தால் மட்டுமே சாத்தியமாகும்
என்பதை விளங்கிக் கொள்ள மறுக்கிறார். இராசபக்சேயைத் தோற்கடிக்க
வேண்டும் என்றால் பொன்சேகாவை தமிழ்மக்கள் ஆதரித்தால்தான் முடியும்.
இந்தத் தருக்க நுணுக்கம் (
logic)
சிவாஜிலிங்கத்துக்கு ஏன் புரியவில்லை என்பது
புதிராக இருக்கிறது. நல்ல தேசியப் பற்றாளரான அவர் ஏன் கட்சிக்
கட்டுப்பாட்டையும் மீறி தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார் என்பதும்
தெரியவில்லை. அவருக்கோ அல்லது விக்கிரமபாகு கருணரத்தினாவுக்கோ மக்கள்
போடும் வாக்குகள் வீணான வாக்குகள் ஆகும்.
எதிர்பார்த்தது போலவே சம்பந்தன் - பொன்சேகா எழுதிக் கொண்ட இந்த
உடன்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது,
பிரிக்கப்பட்ட கிழக்கை மீண்டும் இணைக்க பொன்சேகா ஒப்புக் கொண்டுள்ளார்
என மொனறாக்கலில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மகிந்த இராசபக்சே
அலறியிருக்கிறார். தனது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் வடக்குக் கிழக்கை
இணைக்கப் போவதில்லை என அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை தேசிய கவிஞர்கள்
சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பவுத்த மதப் பாடசாலை ஆசிரியர்கள்,
கைப்பணிப்பொருள் கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றும்போது இராசபக்சே
மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இனவெறியின் மொத்த வடிவான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்
வீரவன்ச சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பிரபாகரன் மீண்டும் உயிர்
பெற்று வருவார் எனப் புலம்பி இருக்கிறார்.
சிங்கள - பவுத்த இனவெறியர்கள் இவ்
வாறான
இனவாதத்தைக் கக்குவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. சரத் பொன்சேகா
இந்த உடன்பாட்டின் மூலம் சிங்களவர்களை தமிழர்களுக்கு விலை பேசி மொத்தமாக
விற்றுவிட்டார் என்ற வழக்கமான குற்றச் சாட்டும் மிக விரைவில் அவர் மீ:து
வீசப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.
யாழ்ப்பாணம் சென்ற இராசபக்சே இனச்சிக்கலுக்கு என்ன தீர்வு என்பதைச்
சொல்லவில்லை. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்ற புளித்துப்போன
பேச்சைத்தான் பேசியிருக்கிறார்.
ஈழம், தமிழீழம் என்ற சொற்களைக் கொண்டுள்ள தமிழர்களுடைய அரசியல்
கட்சிகளும் இயக்கங்களும் அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும் (ஈழ மக்கள்
ஜனநாயக கட்சி -இபிடிபி, தமிழ் ஈழ விடுதலைக் கூட்டணி-டெலோ, ஈழமக்கள்
புரட்சிகர விடுதலை முன்னணி -ஈபிஆர்எல்எஃப், ஈழ புரட்சிகர அமைப்பு -
ஈரோஸ் ஆகியவை) என்று இராசபக்சே சட்டம் கொண்டுவர முயற்சி செய்தது
எல்லோருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன். அரசியல் கட்சிகளின்
பெயர்களில் உள்ள ஈழம் என்ற வார்த்தையை விடுதலைப் புலிகள் இயக்கம்
அனைவருடைய மனங்களிலும் ஆழ விதைத்துவிட்டது என்பதே சட்டம் கொண்டு
வருவதற்கான காரணம் என இராசபக்சே அப்போது கூறியிருந்தார்.
சென்ற திங்கள் கிழமை தனது "மகிந்த சிந்தனை
2
நீட்டிக்கப்பட்ட வடிவம்" என்ற தேர்தல் அறிக்கையைக் கொழும்பில்
வெளியிட்ட இராசபக்சே பிரிக்கப்படாத ஒரு ஒருங்கிணைந்த ஒற்றையாட்சி முறையே
இலங்கையில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதில் வியப்பேதும் இல்லை. 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட மகிந்த சிந்தனையில்
"தமிழ்மக்களுக்குத் தாயகம் இல்லை, தேசியம் இல்லை, தன்னாட்சி உரிமையில்லை,
வட - கிழக்கு இணைப்பு எப்போதும் இல்லை" என வெளிப்படையாக எந்த ஒளிவு
மறைவும் இல்லாமல் கூறியிருந்து நினைவிருக்கலாம்.
வேடிக்ககை என்னவென்றால் நக்கினார் நாவிழந்தார் என்பது போல மத்தியில்
கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாடசி என்றுமே பிரிக்க முடியாத வடக்கும்
கிழக்கும்" என்று முழங்கிய இபிடிபி இன்று மத்தியில் கூட்டாச்சி இல்லை
ஒற்றையாட்சி என்ற காட்டாட்சிதான் இருக்கும் மாநிலத்திலும்
சுயாடசி இல்லை என்றுமே பிரிக்க
முடியாத வடக்கும் கிழக்கும் எப்போதும் கிடையாது என
இராசபக்சே அறிவித்த பின்னரும் வெட்கம் துக்கம் இரண்டையும் துறந்து
அவருக்கு வாக்குப் பிச்சை கேட்கிறது! யாழ்ப்பாணம் சென்ற சிங்கள வெறியன்
இராசபக்சேக்கு பல்லக்குத் தூககுகிறது. மாலை மரியாதை செய்கிறது. கைகட்டி
வாய் பொத்தி சேவகம் செய்கிறது!
டக்லஸ் தேவானந்தாவை உதவாக்கரை என்று விட்டுவிடுவோம். அவரது உடலில்
குருதிக்குப் பதில் சாக்கடைத் தண்ணீர் ஓடுகிறது என்பதையும் மறந்து
விடுவோம். அந்தக் கட்சியில் உள்ள இரண்டாம் மட்டத் தலைவர்க் ஆவது
கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? அவர்களுக்கும் சூடு, சொரணை கொஞ்சமும்
இல்லையா?
இனச்சிக்கலுக்கு
ஒற்றையாட்சிதான் தீர்வு என சூளுரைத்த இராசபக்சேயை ஆட்சியில் இருந்து
அகற்ற வேண்டும்.
அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்காகான
மாற்றத்துக்கு - ஆட்சி மாற்றத்தக்கு -
நாம் பொன்சேகா என்ற இன்னொரு
பேய்க்கு ஆதரவளிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் பாரிய உயிரழிவுக்கும் உடமை அழிவிற்கும் மகிந்த
இராசபக்சேயும் அவரது குடும்பமுமே காரணகர்த்தர்கள் ஆவர். வைரத்தை
வைரத்தினால் மட்டுமே வெட்ட முடியும். இராசபக்சேயை ஆட்சிக் கட்டிலில்
இருந்து இறக்க அவரின் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவைப்
பயன்படுத்துவதான் எமக்குள்ள ஒரே வழியாகும்.
வரும் ஆட்சித்தலைவர் தேர்தலில் எதிரணிக் கட்சிகளின் பொது வேட்பாளரனய
சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
வவுனியாவில் தனது முதலாவது பரப்புரையை திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தலைமையில்
நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் இரா. சம்பந்தன்
தனது நீண்ட உரையில் சரத்
பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிரா
சா,
சுரேஷ் பிரேமச்சந்திரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இன்றைய அரசியல்
சூழலில் ஆட்சி மாற்றத்துக்கான அவசியம் பற்றி எடுத்து விளக்கினார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தே எனது கருத்தும் ஆகும்.
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு சிங்கள தேசம் தனக்குள்
மோதிக்கொண்டிருக்கிறது. தமிழ்மக்களது வாக்குகளே வெற்றி தோல்வியைத்
தீர்மானிக்கும் என்ற நிலை இன்று எழுந்துள்ளது. எனவே நாம் அதனைச்
சாணக்கியத்தோடு எமது மக்களது நலன் கருதி எமக்குச் சாதகமாகப் பயன்படுத்த
வேண்டும்.
இரண்டு எதிரிகளில் ஒரு எதிரியை ஒழிக்க . இன்னொரு எதிரியோடு கூட்டுச்
சேரவேண்டும்.
மகிந்த இராசபக்சேயைப் பதவியில இருந்து அகற்றுவதன் மூலம் அவரால் பாலூட்டி
வளர்க்கப்படும் ஒட்டுக்குழுக்களையும் இரண்டகர்களையும் அரசியல்
பாலைவனத்திற்குத் தள்ளிவிட முடியும். .
போர் முடிந்த இந்தக் குறுகிய காலத்தில் இனவழிப்புப் போரை நடத்திய
.இராசபக்சேயைப் பழிக்குப் பழிவாங்க இந்தத் தேர்தல் ஒரு அரிய வாயப்பை
தமிழ்மக்களுக்கு அளித்துள்ளது. அதனைத் தக்க முறையில்
பயன்படுத்த
வேண்டும்.
எனவே தமிழ்த் தேசியத்தையும் தேசியத் தலைவரையும் நேசிக்கும் புலம்பெயர்
தமிழர்கள், ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள்
எல்லாம் தாயகத்தில் வாழும் தங்கள் உற்றார் உறவினரைத் தொடர்பு கொண்டு
இராசபக்சேயின் கொடிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சரத்
பொன்சேகாவுக்குத் தங்கள் வாக்கைப் போட வேண்டும் எனக் கேட்டுக்
கொள்ளவேண்டும்.
அதன் மூலம் அரசியல் பிழைத்தோர்க்கு ஊழ்வினை ஒரு உரு எடுத்து வந்து
உணர்த்தும் என்பதை
உலகத்துக்கு
எண்பிக்க வேண்டும்.
எதிர்வரும் யனவரி 14 - 16 ஆம் நாள்களில் சிறிலங்காவில்
அரங்கேறிய
போர்க் குற்றங்களை விசாரிக்க 11 நீதிபதிகள் அடங்கிய மக்கள் நீதிமன்றம்
வட அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் கூடுவது ஊழிவினை உருத்தும் என்ற
நம்பிக்கையை எமக்குத்
தருகிறது.
ஒற்றையாட்சி முறையே இலங்கைக்கு நல்லது: மஹிந்த
ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தேர்தல் அறிக்கையை திங்களன்று
கொழும்பில் வெளியிட்டுள்ளார்.
"மஹிந்த சிந்தனை நீட்டிக்கப்பட்ட வடிவம்" என்று
பெயரிடப்பட்ட இந்த அறிக்கையை, கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வின்போது அவர் வெளியிட்டார்.
பிரிக்கப்படாத ஒரு ஒருங்கிணைந்த ஒற்றையாட்சி முறையே
இலங்கையில் இருக்கவேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அமைச்சர்களும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்களும்
கலந்துகொண்ட இந்த வைபவம் அரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு
செய்யப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி
வேட்பாளர் சரத் பொன்சேகா உள்ளிட்ட பிற வேட்பாளர்களுக்கு இந்த வசதி
தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்
ஆரம்பம்
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி கட்சிகளின்
கூட்டமைப்பு வேட்பாளராகிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ள
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வவுனியா பிரதேசத்திற்கான தனது முதலாவது
பரப்புரையை இன்று ஆரம்பித்திருக்கின்றது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன்
தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
தமது முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நீண்ட உரையின் மூலம்
அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் விளக்கமளித்ததன் பின்னர் சரத்
பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர்
கேட்டுக்கொண்டார்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை
சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர், இன்றைய
அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியமாகியுள்ளது எனவும், இதற்காகத்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பலருடைய கருத்துக்களுக்கமையவே எடுக்கப்பட்டது
என்றும் கூறுகின்றனர்.
இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில்
கேட்கலாம்.
இராசபக்கேயை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்! அதற்காக எந்தப்
பேயுடனும் சேரத் தயார்!
"தமிழ்மக்களுக்குத் தாயகம் இல்லை, தேசியம் இல்லை, தன்னாட்சி உரிமையில்லை,
வட - கிழக்கு இணைப்பு எப்போதும் இல்லை என சூளுரைக்கும் ஆட்சித்தலைவர்
இராசபக்சேயை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அவரை வீட்டுக்கு அனுப்ப
வேண்டும். அதற்காகான மாற்றத்துக்கு - ஆட்சி மாற்றத்தக்கு - நாம் எந்தப்
பேயுடனும் சேரத் தயாராக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் மத்தியில்
கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாடசி என்றுமே பிரிக்க முடியாத வடக்கும்
கிழக்கும்" என்று முழங்கிய இபிடிபி இன்று மத்தியில் கூட்டாச்சி இல்லை
மாநிலத்திலும் சுயாடசி இல்லை என்றுமே பிரிக்க முடியாத வடக்கும்
கிழக்கும் எப்போதும் கிடையாது என்று சொல்கின்ற இராசபக்சேக்கு
பல்லக்குத் தூக்குவதும், மாலை மரியாதை செய்வதும் வாக்குப் பிச்சை
கேட்பதும் வேடிக்கையானது" இவ்வாறு மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை
அவர்களது வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றிய தமிழ்ப்
படைப்பாளிகள் தலைவர் நக்கீரன் குறிப்பிட்டார்.
கடந்த யனவரி 10 ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) தேசியத் தலைவர் பிரபாகரனின்
தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களது வணக்க நிகழ்வை கனடிய
தமிழ்ச் சமூகமும் கனடிய மாணவ சமூகமும் இணைந்து இல.1199 கென்னடி
வீதியிலுள்ள எவறெஸ்ட் அரங்கில் நடத்தியது.
தொடர்ந்து பேசிய நக்கீரன் " மே 17 க்குப் பின்னர் ஆயுதப் போராட்டம்
நின்றுவிட்டது. ஆனால் அரசியல் போராட்டம் தொடர்கிறது. வட்டுக்கோட்டைத்
தீர்மானம், மக்களவைத் தேர்தல், நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு நிச்சயம் வலு சேர்க்கும். நாம்
புதிதாக ஒரு அரசைக் கேட்கவில்லை. போர்முனையில் போர்த்துக்கேயரிடம்
இரண்டாவது சங்கிலி இழந்த தமிழீழ அரசையே கேட்கிறோம்" எனக் கூறினார்.
யார்
தமிழத் தேசியவாதிகள் எனக் கேள்வி எழுப்பி அதற்குப் பதிலளித்த நக்கீரன்
" தேசியத் தலைவர் பிரபாகரன், தமிழ்த் தேசியம், தமிழ் தேசியக்
கொடி ஆகிய மூன்றையும் ஏற்றுக் கொளபவர்களே தங்களைத் தமிழ்த்
தேசியவாதிகள் எனச் சொல்லிக் கொள்ள அருகதை உடையவர்கள். இதில் ஒன்றையோ
அல்லது இரண்டையோ மட்டும் ஏற்றுக் கொள்பவர்கள் தங்களைத் தமிழ்த்
தேசியவாதிகள் என்று அழைப்பதற்குத் தகுதியற்றவர்கள்"
எனக்
கூறினார்.
ஊடகவியலாளர்கள், தமிழ் மாணவ சமூகத்தின் பிரதிநிதிகள், கனடிய தமிழ்
சமூகப் பிரதிநிதிகள், மர்க்கம் மாநகரசபை உறுப்பினர்கள் எனப் பலர்
இரங்கல் உரை ஆற்றினார்கள்.
யனவரி 09, 2010
செய்தி அறிக்கை
மகிந்த இராசபக்சேக்கு
ஆதரவு அளிக்க முடியாது ஆதரவு அளிக்கவும் கூடாது எனத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த
முடிவை வரவேற்கிறோம்
எமது முன்னைய அறிக்கைகள் மூலம் மகிந்தா
இராசபக்சேயின் நான்கு ஆண்டு ஆட்சியில் தமிழ்மக்கள் பாரிய அழிவுகளைச்
சந்தித்திருக்கிறார்கள்
,
சொல்லொணா துன்பங்களை அனுபவித்துள்ளார்கள்,
அல்லல்பட்டு ஆற்றாது
அழுது கண்ணீர் விட்டிருக்கிறார்கள்
எனவே தமிழ்மக்கள் கொஞ்சமாவது
மூச்சுவிட வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் தேவை என
வலியுறுத்தியிருந்தோம்.
"சனாதிபதி மகிந்த இராசபக்சே மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பது நாட்டு
மக்களின் சிறந்த நலன்களைப் பேணுவதற்கும் குறிப்பாக வடக்கு - கிழக்கில்
உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் உதவாது.
அவர்
மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையை
இத்தேர்தல் மூலம் நாட்டு மக்களிடம் விண்ணப்பித்திருப்பதற்கு ஆதரவு
அளிக்க முடியாது, ஆதரவளிக்கவும்
கூடாது" எனத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவை நாம் வரவேற்கிறோம்.
ஆட்சிமாற்றம் வேண்டும் என்பதில் பதினெட்டு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஒத்த கருத்து
நிலவியதாகத் தெரிகிறது. ஆட்சிமாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால்
தமிழ்மக்கள் சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இல்லை
என்றால் அது சாத்தியமாகாது. எனவே தன்னிச்சையாகத் தேர்தலில் குதித்து
குறுக்குச் சால் ஓட்ட நினைக்கும் சிவாஜிலிங்கம் தமிழ்மக்களது
எதிர்கால
அரசியல் நலன் கருதி அதிலிருந்து விலகிக்
கொள்ள வேண்டும். அவருக்கு விழும்
ஒவ்வொரு வாக்கும் இராசபக்சேயின்
வெற்றிக்கே உதவும் என்பதை சிவாஜிலிங்கம் அவர்களுக்கு நினைவு படுத்த
விரும்புகிறோம். .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பொது வேட்பாளர் சரத் பொன்சேகா மற்றும்
அய்க்கிய தேசியக் கட்சித் தலைவர்
இரணில் விக்கிரமசிங்கா இருவரோடும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பத்துப்
பொருள்பற்றி
உடன்பாடு காணப்பட்டுள்ளது.
பொது
நிருவாகத்தையும்
இயல்பு நிலையையும் ஏற்படுத்தல்,
துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்,
இடம்பெயர்ந்த மக்களை
மீள்குடியேற்றுதல் மற்றும்
மறுவாழ்வளித்தல்,
சிங்களப்
படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள
அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைத்தல்,
குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான
ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள்
விடுவித்தல் போன்றவற்றில் உடன்பாடு
காணப்பட்டுள்ளது.
இதில்
போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப்
பொதுமன்னிப்பு அடிப்படையில் மறுவாழ்வளித்தல்,
மக்களை அவர்களது சொந்த வீடுகளில்
மீள்குடியேற்றுதல்
முக்கியமானவை ஆகும்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சார்பில் சிங்கள அரசியல் தலைமைகளோடு
எழுதப்பட்ட உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டுள்ளன. இந்த உடன்பாட்டுக்கும்
அதே கதி ஏற்படலா
ம்.
இருந்தும் ஆட்சி
மாற்றத்துக்கான
வாய்ப்பை நாம் நழுவ விடக் கூடாது.
எதிர்பார்த்தது போலவே இந்த உடன்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு
மீண்டும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது, பிரிக்கப்பட்ட கிழக்கை மீண்டும்
இணைக்க சரத் பொன்சேகா ஒப்புக் கொண்டுள்ளார் என மொனறாக்கலில் நடந்த
தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மகிந்த இராசபக்சே அலறியிருக்கிறார். த
னது
ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் வடக்குக் கிழக்கை இணைக்கப் போவதில்லை என
அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை தேசிய கவிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள்
மற்றும் பவுத்த மதப்
பாடசாலை ஆசிரியர்கள், கைப்பணிப்பொருள் கலைஞர்கள் ஆகியோர் மத்தியில்
உரையாற்றும்போது இராசபக்சே மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இனவெறியின் மொத்த வடிவான
தேசிய
சுதந்திர
முன்னணியின்
தலைவர்
விமல்
வீரவன்ச
சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால்
பிரபாகரன் மீண்டும் உயிர் பெற்று வருவார் எனப் புலம்பி இருக்கிறார்.
சிங்கள - பவுத்த இனவெறியர்கள் இவ்விதமான இனவாதத்தைக் கக்குவார்கள்
என்பது எதிர்பார்க்கப்பட்டதே. சரத் பொன்சேகா இந்த உடன்பாட்டின் மூலம்
சிங்களவர்களை தமிழர்களுக்கு விலை பேசி மொத்தமாக விற்றுவிட்டார் என்ற
வழக்கமான குற்றச் சாட்டும் மிக விரைவில்
அவர் மீ:து
வீசப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.
தமிழ் மக்களின் பாரிய உயிரழிவுக்கும் உடமை அழிவிற்கும் மகிந்த
இராசபக்சேயும் அவரது குடும்பமுமே காரணகர்த்தர்கள் ஆவர். வைரத்தை
வைரத்தினால் மட்டுமே வெட்ட முடியும். இராசபக்சேயை ஆட்சிக் கட்டிலில்
இருந்து இறக்க அவரின் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவைப்
பயன்படுத்துவதான் எமக்குள்ள ஒரே வழியாகும்.
சரத் பொன்சேகா இன்னொரு இராசபக்சே என்று வைத்துக் கொண்டாலும்
முன்னவர் மூலமாக பின்னவரைப் பழிவாங்குவதே அரசியல் சாணக்கியமாகும்.
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு சிங்கள தேசம் தமக்குள்
மோதிக்கொண்டிருக்கிறது. தமிழ்மக்களது வாக்குகளே வெற்றி தோல்வியைத்
தீர்மானிக்கும் என்ற நிலை இன்று எழுந்துள்ளது. எனவே நாம் அதனைச்
சாணக்கியத்தோடு எமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்.
இரண்டு எதிரிகளில்
ஒரு
எதிரியை ஒழிக்க . இன்னொரு எதிரியோடு கூட்டுச் சேரவேண்டும்.
மகிந்த இராசபக்சேயைப் பதவியில இருந்து அகற்றுவதன் மூலம் அவரால் ஊட்டி
வளர்க்கப்படும் ஒட்டுக்குழுக்களையும் இரண்டகர்களையும் அரசியல்
பாலைவனத்திற்குத் தள்ளிவிடலாம்.
போர் முடிந்த இந்தக் குறுகிய காலத்தில் இனவழிப்புப் போரை நடத்திய
.இராசபக்சேயைப் பழிக்குப் பழிவாங்க இந்தத் தேர்தல் ஒரு அரிய வாயப்பை
தமிழ்மக்களுக்கு
அளித்துள்ளது. அதனைத் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும்.
எனவே தமிழ்த் தேசியத்தையும் தேசியத் தலைவரையும் நேசிக்கும் புலம்பெயர்
தமிழர்கள், ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள்
எல்லோரும் தாயகத்தில் வாழும் தங்கள் உற்றார் உறவினரைத் தொடர்பு கொண்டு
இராசபக்சேயின் கொடிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர
சரத் பொன்சேகாவுக்குத்
தங்கள் வாக்கைப்
போட
வைக்குமாறு அன்புடன் வேண்டிக்
கொள்கிறோம்.
-30-
முன்னாள்
இராணுவத் தளபதியும் எதிர் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளருமான
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா
சம்பந்தனுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்
குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனப்பிரச்சினை தீர்வு தவிர்த்து தமிழ் மக்களின் இயல்பு வாழ்வை
ஏற்படுத்தும் வகையிலான உடனடி மீட்பு நடவடிக்கை குறித்து அந்த
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உரிய முறையில்
நடைமுறைப்படுத்துவதாக சரத் பொன்சேகா ஒப்பமிட்டு உறுதியளித்துள்ளதாக
கூட்டமைப்பு வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தை அடுத்தே சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதற்கு
கூட்டமைப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தடையாக உள்ள காரணிகளை
இனம் கண்டு அகற்றுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை
பெற்றுக் கொடுப்பதும் உடனடித் தேவை என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல்இஅவசர காலச் சட்டத்தை
நீக்குதல் துணை ஆயுதக் குழுக்களை கலைத்தல் உட்பட பல்வேறு உறுதி
மொழிகளை சரத் பொன்சேகா தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனுக்கும் சரத்
பொன்சேகாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பின்னவரும் 10
அம்சங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. சிவில் நிர்வாகத்தையும்
இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:
- கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக்
கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் இராணுவஇ பொலிஸ் மற்றும் அரசியல்
தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.
- ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான
குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில்
ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர்
பிரதேச செயலாளர்கள்
ஏனைய அதிகாரிகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது பிரதிநிதிகள்
உள்ளூர் அதிகார சபைகளின் பிரதிநிதிகள்
நீதித்துறை அதிகாரிகள்
பாதுகாப்புப் படையினர் அதன் தளபதிகள் வடக்குக் கிழக்கிற்கான
அதிகாரிகள்
பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள்
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
இவர்கள் ஒருமாத காலத்திற்குள் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான
செயற்பாட்டுத் திட்டமொன்றை உருவாக்குவர். இதில் ஏற்படும் முன்னேற்றம்
குறித்த மாதாந்த அறிக்கைகள் ஜனாதிபதிஇ அமைச்சரவை மற்றும்
நாடாளுமன்றிற்குச் சமர்பிக்கப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைக்
கண்காணித்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக
ஜனாதிபதியின் கீழ் செயலகமொன்று அமைக்கப்படும்.
- உடனடியாக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தல்.
- தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் எடுத்த பின்னர் பாதுகாப்புப்
படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம்
நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர்
பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.
- பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி அனைவரும்
நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.
- தமிழ் பேசக்கூடிய பொலிஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில்
ஈடுபடுத்தல்.
11. துணை இராணுவக் குழுவினர்
மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.
- அனைத்துத் துணை இராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும்
உடனடியாகக் கலைத்தல்.
- பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.
- படையினர்இ பொலிஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள்
மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.
111. இடம்பெயர்ந்த மக்களை
மீள்குடியேற்றுதல் புனர்வாழ்வளித்தல்.
- நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத்
துரிதப்படுத்தல்.
- இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள்
அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை
மீளக்கட்டியெழுப்பவும்இ வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும்
நிதியுதவி வழங்கப்படும்.
- அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள்இ
வைத்தியசாலைகள்இ பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
ஏற்படுத்தப்படும்.
iv. நிலமும் விவசாயமும்
- தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத்
தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.
- மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
- கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான
திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.
- பின்வரும் குழுவினர் தொடர்பாக ஆராய்ந்து நீதியானஇ சட்டரீதியான தீர்வு
காணப்படும்.
(அ) அரசிற்கு உரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
(ஆ) அரச காணிகளில் இருப்பதற்கு உரித்திருந்தும் உரிமை
மறுக்கப்பட்டவர்கள்.
(இ) அரச காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள்.
(ஈ) அரச காணிகளைக் கண்மூடித்தனமாக பாரதீனப்படுத்தல் நிறுத்தப்படும்.
இதுவரை இடம்பெற்றவைகள் குறித்து மீள ஆராயப்படும். அத்தகைய பாரதீன
நடவடிக்கை நிறுத்தப்படும்.
அரச காணிகள் வெளியாருக்குப் பாரதீனப்படுத்தப்பட்ட விடயத்தில்
வெளிப்படையாக மேற்கொள்ளப்படாத சகலருக்கும் சம வாய்ப்பை வழங்காத
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்தந்தப்பகுதி பிரதிநிதிகளுடன் உரிய
ஆலோசனை மேற்கொள்ளப்படாத தேவையற்ற ஊழல் இடம்பெற்ற காணிக் கையளிப்பு
விடயங்களிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.
v. மீன்பிடித்துறை
- மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.
- பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச்
சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு
அமைக்கப்படும்.
vi. வியாபார, வர்த்தகம்
- பயணிகள் செல்வதற்கும் பொருள்கள்இ விவசாயம்இ மீன்பிடித்துறைப்
பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.
- கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
vii. போக்குவரத்து
- ரயில் சேவை யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீள
ஏற்படுத்தப்படும்.
- கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும்
அகற்றப்படும்.
இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.
- பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின்
ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
viii. விசேட நிவாரணத்
திட்டங்கள்
- யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு
- யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம்
முன்னெடுக்கப்படும்.
ix. தடுத்து
வைக்கப்பட்டுள்ளவர்கள்
- குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து
வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.
- யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு
அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.
தமிழ் மக்கள் சார்பில் பல்வேறு ஒப்பந்தங்கள் சிங்கள அரசியல்
தலைமைகளோடு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் அவை எவையும் நடைமுறைப்படுத்தப்பட்டற்கான வரலாற்று சான்றுகள்
எவையும் இல்லாத நிலையில் சம்பந்தன் சரத் ஒப்பந்தம்
நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில்
ஏற்படுவது தவிர்க்க முயடிாதது என்று ஆயர்வாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்
எனினும் தமிழ் மக்களின் இன்றைய அவல வாழ்வின் பிரதான சூத்திரிதாரியும்
அவரின் உறவினர்களையும் ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றுவதற்கு அவரின்
முன்னாள் தளபதியை பயன்படுத்துவது தவறில்லை என்ற நிலைப்பாடும் தமிழ்
மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
சரத் பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களை பொறுத்த வரையில்
சிங்கள இனவாதத்தின் விம்பங்கள் தான்.
இரு விம்பங்களும் தமிழர் விவகாரத்தில் நன்மையளிக்கும் நிலையில் இல்லாத
போதிலும் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணமாகி விட்ட ஒரு சிங்கள
இனவாதத்தை மறு இனவாதம் கொண்டு வேரறுப்பது இன்று எதுவுமற்று போய்விட்ட
ஈழத் தமிழ் மக்களுக்கு தவறாக படவில்லை.
இழப்பதற்கு எதுவுமற்ற நிலையில் தங்கள் வாக்குகள் மூலம் தம்மை
நிர்கதியாக்கிய சக்தியை தங்கள் துயர வாழ்வின் ஒரு வருட நிறைவிற்கு
முன்னபாக வீதிக்கு கொண்டு வருவதற்கு தமக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக
இதனை கருதுகின்றனர்.
சரத் பொன்சேகா மீது எந்த வித எதிர் பார்புகளும் தமிழ் மக்களுக்கு
இல்லை ஆனால் அவர் மூலமாக மகிந்தவை பழிவாங்க தமக்கு ஒரு சந்தாப்பம்
அமைந்துள்ளதாகவே அவர்கள் இந்த தேர்தலை பார்கின்றனர்.
அழித்தவனை வைத்ததே அழிக்கச் செய்தவனை அழிப்பதற்கான உத்தியாகவே இந்த
தேர்தலை தமிழ் மக்கள் நோக்குகின்றார்கள்.
தேர்தலை புறக்கணித்து தம்மை அழிக்கச் சொன்னவனை நிரந்தரமாக தம்மை
அடிமைப்படுத்த அனுமதிப்பதை விடவும் கிடைத்துள்ள சந்தர்பத்தை சரியாக
பயன்படுத்தி தம்மை அடிமைப்படுத்த நினைத்தவனை அழிப்பது தமிழ் மக்களின்
தெரிவாக உள்ளது.
இது கூட ஒருவகையில் பதில் தாக்குதல் தான் உத்தி தான் சிங்களத்தின்
ஆயுதங்கள் கொண்டு சிங்கள முகாம்களை தகர்த்த விடுதலைப் புலிகளின் வீரம்
போல் இப்போது சிங்களத்தின் தளபதி மூலமே தலைமையை அழிக்கும் புது
வியூகம் இது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் எடுக்க வேண்டிய
நிலைப்பாடு குறித்து தமிழ்த்; தேசியக்கூட்டமைப்பு மிக அக்கறையுடன்
பரிசீலித்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்
பாராளுமன்றக்குழு பல தடைவகள் சந்தித்து பரிசீலித்தது. தமிழ்ப்பேசும்
மக்களின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின்
அறிவுப்பிழைப்பாளர்கள், மூத்த குடிமக்கள், இளைஞர்கள் , நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள்
ஆகியோரின் கருத்துக்களை அறிவது குறித்து அவர்களுடன் தீவிர
கலந்துரையாடல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தியுள்ளது.
பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத் பொன்சேகா
மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோருடன் நாம்
கலந்துரையாடல்களை நடத்தி, தமிழ்ப் பேசும் மக்களின் உடனடித் தேவைகள்
குறித்தும் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நிலைத்
நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவது குறித்தும் அவர்களின்
அபிப்பிராயங்களை அறிந்து கொண்டோம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையை
இத்தேர்தல் மூலம் கோரி நாட்டு மக்களிடம் விண்ணப்பித்திருப்பதற்கு
ஆதரவளிக்க முடியாது , மற்றும் ஆதரவளிக்கவும் கூடாது என்பது தமிழ்த்
தேசியக்கூட்டமைப்புப் பாராளுமனற் உறுப்பினர்களின் ஏகோபித்த
அபிப்பராயமாகும். இம்முடிவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நான்கு ஆண்டு
கால பதவிக்காலத்தின் செயற்பாடுகளை வைத்தும் அவருடன் நாம் நடத்திய பல
கலந்துரையாடல்களின் பெறுபேறுகளை வைத்தும் எடுக்கப்பட்டதாகும். ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பது நாட்டு மக்களின் சிறந்த
நலன்களைப் பேணுவதற்கும் குறிப்பாக வடக்கு‐கிழக்கில் உள்ள தமிழ்ப் பேசும்
மக்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் உதவாது என்பதும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகும்.
தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைக் காண்பது
குறித்து ஒரு முன்னேற்றமும் காணப்படாத அதே வேளை ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷாவின் தீர்மானங்களும் செயல்பாடுகளும் பின்னோக்கியவையாகக்
காணப்படுகின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்
மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில்
அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு தீங்கு
விளைவிப்பதாகவே அமைகின்றன. இரகசியமாகவும் வெளிப்படத்தன்மையற்றவிதமாகவும்
அமையும் இந்நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களுக்கு சமத்துவத்தையும்
நீதியையும் மறுக்கிறதுடன் அத்துடன் தமிழ்ப் பேசும்மக்களின் இன மத
விகிதாசார நலன்களைப் பாதிக்கும் பாரிய மாற்றங்களையும்
தேசியப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்குக் குந்தகத்தை
ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்நடவடிக்கைகள் நாட்டில்
வாழுகின்ற மக்கள் இடையே இன ஒற்றுமையை கட்டி எழுப்புவதற்கும் சமரசத்தை
ஏற்படுத்தும் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையாது. கடந்த நான்கு
ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை தேசியப்
பிரச்சினைக்குக் காணுவதில் ஏற்படும் தாமதம், தமிழ்ப் பேசும் மக்களின்
வரலாற்றுப் பாரம்பரிய வாழ்விடம் தொடர்பான மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின்
மறைமுக நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவேயாகும்..
தமது
தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை
முற்றாகப் புறக்கணித்து, தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பை முற்றாக
ஓரங்கட்டி, தன்னிடம் அடிபணிந்து போகத் தயாராக இருக்கும் நபர்களை தமிழ்
மக்களின் தலைவர்களாக வெளிக்காட்டும் நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார். அவ்வாறான நபர்களுடன் மாத்திரமே வேலை
செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கின்றார். இதன் மூலம்
தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின்
பிரதிநிதிகளை மாத்திரமல்ல , தமிழ் மக்களையே புண்படுத்தியுள்ளார். .இவர்
மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் ஏற்றுக்கொள்ளமுடியாத இந்நிலவரம் தொடரவே
உதவும்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப்
பரராஜசிங்கம் , என்.ரவிராஜ் மற்றும் கே.சிவனேசன் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் அரசாங்கத்துடன் இணைந்திருந்த
சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர்..மட்டக்களப்பு பாராளுமன்ற
உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான
வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாதபடி அரசாங்கத்தைப்
பலப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் இரு தடவைகள்
தடுக்கப்பட்டனர்..தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற
உறுப்பினர்களின் ஜனநாயக மற்றும் செயல் திறன் உள்ளடக்கிய செயல்பாடுகள்
மீதான பாரதூரமான தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் அணுகுமுறை
உணர்ச்சியற்றதும் அக்கறையற்றதுமாக அமைந்து இருந்தது.
மனித
உரிமைகள் மற்றும் மனிதாபிமான விஷயங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவின்
செயல்பாடு கவலை தருவதாக உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்றபட்ட கொலைகள்
மற்றும் கட்டாயப்படுத்தி காணாமற் போகச் செய்தல் ஆகியன சர்வசாதாரணமாக
இடம்பெற்றிருக்கின்றன. இவற்றால் மோசமாகத் தமிழ் மக்கள் தான்
பாதிக்கப்பட்டுள்ளனர்;. ஆட்சி அதிகார அமைப்புக்கள் பாரதூரமாகப்
பாதிக்கப்பட்டுள்ளன. அரசமைப்பு கட்டுப்பாட்டு விதிகள் தொடர்பான
உரிமைக்கட்டளைகள் மீறப்பட்;டுள்ளன. சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்தல்
முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. சட்டம்
‐ ஒழுங்கு மற்றும் நல்லாட்சி ஆகியன கீழ் மட்டத்திற்கு சென்று விட்டது.
நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இத்துக்ககரமான நிலவரத்தினால் மோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் பேசும் மக்கள் தான் மிக மோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்
காரணங்களுக்காகத்தான் மேலும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையைத்
தருமாறு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கையை ஆதரிக்க
முடியாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த அபிப்பிராயமாக
இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு அரசியல் அமைப்புக்களைக் கொண்ட ஓர்
அணியாகும். தமிழ் பேசும் மக்களின் கூடிய நலன்கருதி செயற்படுத்துவது
அதிமுக்கியமானது எனக் கருதப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு
பிரதான வேட்பாளர்களில் எவரையுமே ஆதரிக்கக் கூடாது என்ற கருத்தைக்
கொண்டிருப்பதை நாம் உணர்ந்த போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி ராஜபக்ஷ தனது
பதவிக்காலத்தை நீடிப்பதற்கு மீண்டும் ஒர் ஆணையைப் பெறுவதற்கான
விருப்பத்தைத் தடுப்பதற்கு பொது எதிர்க்;கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத்
பொன்சேகாவை ஆதரிப்பதே பொருத்தமானதெனக் கருதப்படுகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால், பொது எதிர்க்கட்சி
வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்
கொள்கின்றனர்.
இரா.சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
பாராளுமன்ற குழுத் தலைவர்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)
அரசாங்கத்தரப்பினரால் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் தமிழ்
தேசியக் கூட்டமைப்பினர் ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு ஆதரவு
தெரிவிக்கின்றார்கள் இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்று
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பதிலளிக்கையில் தமிழ்
தேசியக் கூட்டமைப்பிற்குள் பல பிரச்சினைகள் காணப்பட்டதாகவும் அவர்களில்
பெரும்பான்மையானோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு
வழங்கவுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று பிரிவுகளாக பிரிந்து
செயற்படுவதாகவும், அவர்களில் ஒரு பிரிவினரே சரத்பொன்சேக்காவிற்கு ஆதரவு
தெரிவித்திருப்பதாகவும் ஏனையோர் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும்
அவர் தெரிவித்தார்.
ஆகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிறு பகுதியினர் ஜெனரல்
சரத்பொன்சேக்காவிற்கு ஆதரவு கொடுப்பது குறித்து அரசாங்கம் பெரிதாக
யோசிக்கவில்லை எனவும், இது குறித்து தாம் அச்சம் கொள்ளவில்லை எனவும் அவர்
குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி
வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக சற்று முன்னர் ஏகமனதாகத்
தீர்மானித்துள்ளது.
சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இம்முடிவினை அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் மற்றைய ஜனாதிபதி வேட்பாளரான சரத்
பொன்சேகாவுடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்ளைத் தொடர்ந்தே சரத்
பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவுக்குத் தாம் வந்துள்ளதாக அவர்
அறிவித்துள்ளார்.
தமிழ்பிரச்சினைக்கு ஏற்புடையதான தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்று
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட சரத் பொன்சேகா புரிந்து கொண்டுள்ளமை ஒரு
சிறப்பான விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.
சரத்
பொன்சேகா தற்போது இராணுவத்தில் இல்லை. அதனால் ஒரு ஜனாதிபதித் தேர்தலில்
ஒரு இராணுவ அதிகாரியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதாகச் சொல்ல
முடியாது என்றார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான பேச்சுவார்த்தையின் போது வடக்கில் உள்ள
உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவது பற்றிய விடயத்தில் அவரிடமிருந்து
சாதகமான பதிலெதனையும் காண முடியவில்லை என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவுடன் எத்தகைய உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை
என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான
இணக்கப்பாடுகளை பொன்சேகா வெளிப்படுத்த வேண்டும்
- அரசாங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி
வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாடுகளை
நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென அரசாங்கம் சவால்
விடுத்துள்ளது.
எதிர்வரும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக்
கொள்வதற்காக, ஜெனரல் சரத் பொன்சேகா என்னென்ன நிபந்தனைகளை ஏற்றுக்
கொண்டார் என்பது மக்களுக்கு தெரிய வேண்டுமென ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா
அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டமை தமக்கு
எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், ஜனாதிபதி தேர்தலின்
முடிவுகளுக்கு அச்சுறுத்தலாக அமையாது எனவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆயுத கொடுக்கல் வாங்கல்கள்
தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு எதிராக அரசாங்கம் சட்ட
நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தமிழன், இரண்டு சிங்களன்...தற்போதைக்கு எதிரியின்
எண்ணிக்கையை குறைக்கவேண்டும் அதுவே புத்திசாலித்தனம் மற்றும்
ராசதந்திரமும் கூட...
முதலில் ராசபக்சேவையும் அவன் சகோதரர்களையும் ஒழிக்கவேண்டும்.
நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு
எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க
தயாராகிவிட்டது. இத்தேர்தல் மூலம் தமிழர் தரப்புக்கள் சாதிக்கபோவது என்ன?
சரத் பொன்சேகாவிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன உத்தரவாதங்கள்
பெற்றுக்கொள்ளப்பட்டன? அவை தொடர்பான உறுதிப்பாடுகள் எவை என்பது பற்றி
இப்பத்தி ஆராய்கிறது.
தற்போது தமிழ் மக்களுடைய உடனடி பிரச்சனைகளை முன்வைத்து
இரண்டு பிரதான
வேட்பாளர்களுடனும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள்
பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மகிந்தவுடன் எக்காலத்திலும் உடன்படக்கூடிய சாத்தியங்கள்
இல்லையென்பதை
தெரிந்துகொண்ட நிலையிலும் ஆளும்கட்சியினுடைய எதிர்கால திட்டங்கள் என்பது
பற்றி அவர்களுடனும் ஆராய்ந்து இறுதியாகவே சரத் பொன்சேகாவுக்கு
ஆதரவளிக்கமுடியுமென தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.
இவ்வாறான நிலைப்பாடு தொடர்பாக எம்மவர் சிலரிடம்
மாற்றுக்கருத்துக்கள்
உண்டு. சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியை ஆதரிப்பதில் சில
கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. இந்திய இராணுவத்தினர் இலங்கையில்
நிலைகொண்டிருந்தபோது இந்திய இராணுவத்தினரை அகற்றுவதற்காக தமிழீழ
விடுதலைப் புலிகளின் தலைமை எடுத்த முடிவை இங்கு ஞாபகப்படுத்தி கொள்வது
நல்லது. அப்போதைய சிறிலங்கா ஆட்சி பீடத்தோடு இணைந்து முதல்
எதிரியாகவிருந்த இந்திய படைகளை அகற்றுவதில் புலிகள் தமது இராசதந்திரத்தை
சரியாக பயன்படுத்தியிருந்தனர்.
முன்னர் நாம் குறிப்பிட்டது போல ஒரு நாகபாம்பை அகற்றி
இன்னொரு பற்கள்
புடுங்கப்பட்ட நாகபாம்பை ஆட்சியில் இருத்தபோகின்றோம். ஏனென்றால் சரத்
பொன்சேகாவுக்கு அவருக்கென்று ஒரு கட்சி இல்லை. பலவீனமான ஒரு
ஆட்சிபீடத்தையே அவரால் அமைக்கமுடியும். சிறிலங்காவின் ஆட்சிபீடம்
பலவீனமாக இருக்கும்போதே தமிழர் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இப்போது தமிழர் தரப்பின் ஆதரவை தேடி ஆளும் கட்சியும் எதிர்கட்சியும்
படையெடுப்பதும் இதன் ஒரு ஆரம்பமே.
இப்போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம்
ஈழத்தமிழர்களின் உடனடி
பிரச்சனைகளுக்கு என்ன உத்தரவாதங்கள் பெறப்பட்டுள்ளன? எதிர்வரவுள்ள
தேர்தல் தமிழர் தரப்பால் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா? என்ற
வினாக்கள் எழுவது வழமையானதே.
சரத் பொன்சேகாவுடனும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்
ரணில்
விக்கிரமசிங்கவுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு காணப்பட்ட
முக்கிய விடயங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்களுக்கு
பொதுமன்னிப்பு வழங்கல், உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல் மற்றும்
அவசரகால சட்டத்தை நீக்குதல் என்பன முக்கியமானதாகும்.
தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின்
விடுதலைக்கான
நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதை தமிழர் தரப்பு
உறுதிப்படுத்தியிருக்கிறது. தற்போதைய மகிந்த அரசாங்கத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினரை கூட இன்னமும்
விடுவிக்காமல் இருப்பதை பார்க்கிறோம். இவ்வாறான அரசை ஆட்சியில் தொடர்ந்து
அமரவிட்டு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையோ அல்லது அதன்
ஆதரவாளர்களையோ சிறையிலிருந்து வெளியில் கொண்டுவருவது என்பது
சாத்தியமில்லை. அத்தோடு அவர்களின் உயிருக்கு கூட உத்தரவாதத்தை கூட
பெற்றுக்கொள்ளமுடியாத நிலையே இருந்துவருகின்றது.
அத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ள முழுமையான
விடுதலைப்புலிகளின் விபரங்கள்
வெளியிடப்படவில்லை. யார் யார் சிறையில் இருக்கின்றார்கள் என்பது
அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக சொல்லப்படவில்லை. இதனால் அவர்களின்
உயிருக்கு எந்தவேளையிலும் ஆபத்து இருப்பதை புரிந்துகொள்ளமுடியும்.
அரசாங்கத்திற்கு சார்பாக கருத்து சொல்லுவார்கள் என அரசாங்கம் நம்பிக்கை
கொள்ளும் முன்னாள் போராளிகளை மட்டுமே அரசு வெளியில் விட விரும்புகிறது.
அப்படியானால் மற்றையவர்களின் நிலை என்ன?
எனவே தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளின் விடயத்தில்
முன்னேற்றகரமாக
தமிழர் தரப்பால் செய்யமுடியுமாகவிருந்தால் அதனை நிச்சயம் செய்யவேண்டும்
என்ற எதிர்பார்ப்பு அனைத்துமட்டங்களிலும் இருந்து வந்தது. அதனை சரியாக
தமிழர் தரப்பின் பிரதிநிதிகள் பயன்படுத்தியிருப்பது ஆறுதலான விடயமே.
அடுத்ததாக உயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றிய விடயங்கள்
மிகவும்
முக்கியமானதாகும். சிறிலங்கா அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்திலும்
திருகோணமலையிலும் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயங்கள் பேணப்படுவதற்கான
திட்டங்களே தற்போதைய அரசிடம் உண்டு. யாழ்ப்பாணத்தில் மூன்றில் ஒரு பகுதி
பிரதேசங்கள் உயர் பாதுகாப்புவலயங்களாகவே இருந்துவருகின்றன. இங்கு 30, 338
குடும்பங்கள் இருபது வருடங்களாக தமது வாழ்விடங்களுக்கு திரும்பமுடியாமல்
இருந்துவருகின்றார்கள்.
அதேபோல் திருகோணமலையிலும் சம்பூரை உயர்
பாதுகாப்புவலயமாக்கி 4249
குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இங்கிருக்கின்ற 19 பாடசாலைகளும்
தொடர்ந்தும் மூடப்பட்டேயிருக்கிறது. இதுதவிர மணலாறு மாவட்டத்தின்
கொக்குத்தொடுவாய் கொக்கிளாய் போன்ற பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்ட
மக்கள் இருபத்தைந்து வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்பமுடியாமல்
இருக்கிறார்கள்.
எனவேதான் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான உறுதியான
பதிலை தமிழர் தரப்பு
எதிர் பார்த்திருக்கவேண்டும். சாதகமான பதிலளித்த சரத் பொன்சேகா உயர்
பாதுகாப்பு வலயங்களை விரைவினிலே நீ்க்குவதற்கான ஒழுங்குகளை செய்வதாக
ஏற்றுக்கொண்டுள்ளார்.
அடுத்ததாக தற்போது இலங்கைத்தீவை ஆட்டிப்படைத்துவரும்
அவசரகாலசட்டம்
பற்றிய விடயமாகும். தற்போது கைது செய்யப்படும் தமிழர்களை நீண்ட காலமாகவே
தடுத்துவைப்பதற்கு அரசுக்கு வசதிசெய்யும் சட்டமூலமே இதுவாகும். தற்போதைய
நிலையில் இதனை நீக்குவதற்கு வழிசெய்வதன் மூலமே தமிழர்களது குரலை
வெளியுலகிற்கு கொண்டுவரமுடியும். அவசரகால சட்டம் நீக்கப்படுவதை
உறுதிப்படுத்தி அதற்கான எழுத்து மூல ஆவணங்களும் சரத் பொன்சேகாவிடமிருந்து
பெறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பால் பெறப்பட்ட உறுதிமொழிகள்
அனைத்தும்
தமிழர்களது அன்றாட அவசர தேவைகளை ஒட்டியதே தவிர தமிழர்களது அடிப்படை
அரசியல் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான எந்தவித முன்னேற்றங்களும்
இப்பேச்சுவார்த்தைகளின்போது ஏற்படவில்லை என்பதையும் அனைவரும்
கவனித்துக்கொள்ளவேண்டும்.
ஒரு சாதாரண பொதுமகனுக்கு இருக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை
நிலைநாட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளே நடைபெற்றன என்பதையும் தமிழர்களது
தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு இன்னும் நீண்ட
தூரம் பயணிக்கவேண்டியிருக்கும் என்பதையும் எவரும் மறந்துவிடக்கூடாது.
தமிழர்கள் தமது உரிமைகளை பற்றி விவாதிப்பதற்கான
களநிலைமையை ஏற்படுத்துவதே
இன்றைய தேவையாகும். அதனை ஏற்படுத்தி தாயகத்திலுள்ள மக்களே தமது உரிமைகள்
என்னவென்பதையும் அதற்கான களத்தையும் திறக்கவேண்டும். அவர்களுக்கு
வலுச்சேர்க்கும் விதத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் தன்னாலான பங்களிப்பை
வழங்கமுடியும்.
எனவே தாயகத்தில் எமது மக்கள் சுதந்திரமாக தமது
கருத்துக்களை சொல்லக்கூடிய
சூழ்நிலையை முதலில் ஏற்படுத்துவோம். அவ்வாறான சுதந்திரமான சூழல் வரும்வரை
அதற்கான வழிகளை திறப்பதே எம்முன்னுள்ள ஒரேதெரிவாகும்.
சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் : தமிழ் தேசிய
கூட்டமைப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள்
எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக
அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்றக்குழு பல தடவைகள் சந்தித்து பரிசீலித்தது.
தமிழ்ப் பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு
மக்களின் புத்திஜீவிகள், சிரேஷ்ட பிரஜைகள், இளைஞர்கள், நண்பர்கள் மற்றும்
நலன் விரும்பிகள் ஆகியோரின் கருத்துக்களை அறிவது குறித்து அவர்களுடன் தீவிர
கலந்துரையாடல்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்தியுள்ளது.
புராதன வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத்
பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன்
நாம் கலந்துரையாடல்களை நடத்தி, தமிழ்ப் பேசும் மக்களின் உடனடித் தேவைகள்
குறித்தும் தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதும் நிலைத்து நிற்கக்
கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவது குறித்தும் அவர்களின்
அபிப்பிராயங்களைத் தெரிந்து கொண்டோம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி
வகிப்பதற்கான ஆணையை இத்தேர்தல் மூலம் கோரி, நாட்டு மக்களிடம்
விண்ணப்பித்திருப்பதற்கு ஆதரவளிக்க முடியாது. ஆதரவளிக்க கூடாது என்பது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த
அபிப்பிராயமாகும்.
இம்முடிவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நான்கு ஆண்டு கால
பதவிக்காலத்தின் செயற்பாடுகளை வைத்தும் அவருடன் நாம் நடத்திய பல
கலந்துரையாடல்களின் பெறுபேறுகளை வைத்தும் எடுக்கப்பட்டதாகும். ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பது நாட்டுமக்களின் சிறந்த
நலன்களை பேணுவதற்கும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பேசும்
மக்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் உதவாது என்பதும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகும்.
தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றைக்
காண்பது குறித்து ஒரு முன்னேற்றமும் காணப்படாத அதே வேளை ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷவின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் பின்னோக்கியதாகவே
காணப்படுகின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல்வேறு
நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின்
பாரம்பரிய வாழ்விடங்களில், அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப்
பாதுகாப்பதற்குத் தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன.
இரகசியமாகவும் வெளிப்படைத் தன்மையற்றவிதமாகவும் அமையும்
இந்த நடவடிக்கைகள் தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சமத்துவத்தையும் நீதியையும்
மறுக்கும் செயலாகவே உள்ளது. அத்துடன் தமிழ்ப் பேசும் மக்களின் இன, மத,
விகிதாசார நலன்களைப் பாதிக்கும் வகையில் பாரிய மாற்றங்களை
ஏற்படுத்துவதாகவும், தேசிய பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்குக்
குந்தகத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள்
நாட்டில் வாழ்கின்ற மக்களிடையே இன ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கும்
சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையாது.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல்
தீர்வு ஒன்றை தேசிய பிரச்சினைக்குக் காண்பதில் ஏற்படும் தாமதம், தமிழ்ப்
பேசும் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய வாழ்விடம் தொடர்பான மகிந்த ராஜபக்ஷ
அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலை நடைமுறைபடுத்துவதாகும்.
தமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மக்களின்
ஜனநாயகத் தீர்ப்பை முற்றாகப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை
முற்றாக ஓரங்கட்டி, தன்னிடம் அடிபணிந்து போகத் தயாராக இருக்கும்
நண்பர்களைத் தமிழ் மக்களின் தலைவர்களாக வெளிகாட்டும் நிகழ்ச்சி நிரலை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார்.
அவ்வாறான நபர்களுடன் மாத்திரமே வேலை செய்வதற்கு ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களால் ஜனநாயக
ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை மாத்திரமல்ல,
தமிழ் மக்களையும் அவர் புண்படுத்தியுள்ளார். இவர் மீண்டும் தெரிவு
செய்யப்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத இந்நிலவரம் தொடரவே உதவும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற
உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், கே.சிவனேசன் ஆகியோர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் அரசாங்கத்துடன்
இணைந்திருந்த சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற
உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான
வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாதபடி அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காக
அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் இரு தடைவைகள் தடுக்கப்பட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஜனநாயக மற்றும் செயற்திறனை உள்ளடக்கிய செயற்பாடுகள் மீதான பாரதூரமான
தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் அணுகுமுறை உணர்ச்சியற்றதும்
அக்கறையற்றதுமாக அமைந்திருந்தது.
மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்களில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு கவலை தருவதாக உள்ளது. சட்டத்திற்கு
அப்பாற்பட்ட கொலைகள் மற்றும் கட்டாயப்படுத்தி காணாமற் போகச் செய்தல் ஆகியன
சர்வ சாதாரணமாக இடம் பெற்றிருக்கின்றன. இவற்றால் மோசமாகத் தமிழ் மக்கள்
தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சி அதிகார அமைப்புக்கள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்தல் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஊழல்
கட்டுக்கடங்காமல் போயுள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் நல்லாட்சி ஆகியன
கீழ் மட்டத்திற்குச் சென்று விட்டன.
நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இத்துக்ககரமான
நிலவரத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பேசும் மக்கள் தான்
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காரணங்களுக்காகத் தான் மேலும் ஒரு
தடவை பதவி வகிப்பதற்கான ஆணையைத் தருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கையை
மறுப்பது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த முடிவாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு அரசியல்
அமைப்புக்களைக் கொண்ட ஓர் அணியாகும். தமிழ்ப் பேசும் மக்களின் கூடிய நலன்
கருதி செயற்படுவது அதிமுக்கியமானது எனக் கருதப்படுகிறது.
ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி
வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்
தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
2ND LEAD (Adds TNA statement)
Sampanthan: Majority of TNA MPs back Fonseka
[TamilNet, Wednesday, 06 January 2010, 15:27 GMT]
Tamil National Alliance (TNA) Parliamentary group leader and
Trincomalee district MP Rajavarothayam Sampanthan on Wednesday said
majority of 18 members of the alliance who were present at lengthy
deliberations were of the view that the "only meaningful way" to thwart
the desire of the Sri Lankan President Mahinda Rajapaksa to seek a
mandate to hold office for a further term would be urging the Tamils to
vote for the joint opposition candidate General (retd.) Sarath Fonseka.
The announcement by Mr. Sampanthan comes amid strong opposition from the
Tamil diaspora against supporting either General Sarath Fonseka or
Mahinda Rajapaksa as Tamils believe they are both implicated in war
crimes and crimes against humanity.
18 members of the alliance who were present at a meeting held on Tuesday
evening were of the unanimous view that they were opposed to President
Mahinda Rajapaksa securing a fresh term.
Global Tamil Forum, an umbrella forum of diaspora Tamil organisations,
in an internal message sent to TNA parliamentarians a few days ago, said
that the Tamils stood morally and ethically unable to lend support to
neither of the two main candidates who were largely responsible for the
deaths of Tamils' kith and kin and destruction of the Tamil homeland in
the island of Sri Lanka.
"GTF stands in support of fundamental principles of the 1976 Vadukkoddai
Resolution which was supported and overwhelmingly voted through a
democratic election in 1977 by the Tamils of the island nation. Whilst
we appreciate that any candidate cannot espouse the resolution in full
in words due to the unreasonable restrictions levied by the sixth
amendment of the Sri Lankan constitution, we will stand in solidarity
with a candidate who will espouse the spirit of the resolution within
the constraints," the GTF had told the TNA.
Full text of the statement by the TNA follows:
http://www.pathivu.com/news/4937/54/.aspx
சரத்பொன்சேகாவிற்கு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு! இழுபறிக்குள் இறிதி முடிவு!
எதிர்வரும் 26-01-2010 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள ஐனாதிபதித்
தேர்தல் தொடர்பாக எத்தகைய தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பாக கடந்த ஒரு
மாதத்திற்கு மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் காணப்பட்ட இழுபறி ஒருவாறு இன்று
முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா
சம்பந்தன் தலைமையில் இன்று 5-1-2010 கொழும்பில் நான்கு மணிநேரம் நடைபெற்றுள்ளது.
அந்தக் கூட்டத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐனாதிபதி மகிந்த
ரர்ஐபக்ச அவர்களை எந்தக் காரணத்தினாலும் ஆதரிக்க முடியாது ஆதரிக்க கூடாது என்ற
கருத்தினை எவ்வித விவாதமும் இன்றி ஏகமானதாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா,
கே.துரைரட்ணம், தோமஸ் வில்லியம், சொலமன் எஸ் சிறில், செல்வி தங்கேஸ்வரி
கதிர்காமன், இமாம், சிவசக்திஆனந்தன், அரியநேத்திரன், சுரேஸ்பிறேமச்சந்திரன்
உள்ளிட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படல் வேண்டும்
என்ற கருத்தினை ஆணித்தரமாக வலியுறுத்தியதுடன் அதற்காக ஜெனரல் சரத்பொன்சேகா
அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க வேண்டும் என
வலியுறுத்தியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எடுக்கும் முடிவுகளை தாம்
முழுமையாக ஏற்றுக் கொள்ளுவதாகக் கூறினர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், ஸ்ரீகாந்தா,
எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இரண்டு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு
கோரமுடியாது என்ற கருத்தினை வலியுறுத்தியதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
ஒற்றுமையினை கருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும்
தீர்மானத்திற்கு எதிராக செயற்படப் போவதில்லை எனவும் கூறினர்.
சிவநாதன் கிசோர், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் மகிந்தராஐபக்ச மற்றும்
சரத்பொன்சேகா ஆகிய இருவருக்கும் வாக்களிக்க முடியாது என்றும் ஆனாலும் தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினைகருத்தில் கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள்
எடுக்கும் முடிவக்கு எதிராக செயற்பட மாட்டோம் எனவும் கூறினர்.
செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவரும் மகிந்தராஐபக்ச
மற்றும் சரத்பொன்சேகா ஆகிய இருவரையும் ஆதரிக்க முடியாது என்றும் இந்த தேர்தலை
பயன்படுத்தி தமிழ் தேசம் ஓர் தனித்துவமான தேசம் என்பதனை வெளிப்படுத்தும் சாதகமாக
பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ் தேசத்திலுள்ள மக்கள் இத் தேர்தலை
புறக்கணிக்க வேண்டும் என்றும் சிங்கள தேசத்தில் வாழும் அனைத்து மக்களும் ஐனாதிபதி
வேட்பாளராக போட்டியிடுபவரும் தமிழ் மக்களின் தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை
என்பவற்றினை அங்கீகரித்து அதற்கு ஆதரவாக நீண்டகாலமாக உழைத்துவருபவருமான கலாநிதி
விக்கிரமபாகு கருணாரட்ண அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு
என்றும் ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு
பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுக்கு எதிராக தாம் செயற்பட மாட்டோம்
எனவும் கூறினர்.
இக் கூட்டத் தொடரில் நேரில் கலந்து கொள்ள முடியாத நிலையில் கூட்டத்தின் போது
தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்த ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தனது
நிலைப்பாடு இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் ஆதரவளிக்க கூடாது எனக்
கூறியுள்ளார்.
இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்று தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு முடிவுக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன்பாடில்லாத போதும்
கூட்டமைப்பின் ஒற்றுமை பேணப்பட வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே அவர்கள்
எதிர் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அறிய முடியகின்றது.
டிசெம்பர் 3, 2010
செய்தி அறிக்கை
ஆட்சியை மாற்றி இராசபச்சேயின் கொடுங்கோல்
ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
எதிர்வரும் ஆட்சித்தலைவர் தேர்தல் மூலம் இலங்கைத் தீவில்
ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் அரிய வாய்ப்பு தமிழ்மக்களுக்குக கிடைத்துள்ளது.
"நடைபெற இருக்கும் ஆட்சித்தலைவர் தேர்தலில் கடந்த காலங்களைப் போல்
தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின்
வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ
புத்திசாலித்தனமானதல்ல" என யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள
அறிக்கையை நாம் முழு மனதோடு வரவேற்கிறோம். இதே கருத்தை வலியுறுத்தியுள்ள
முன்னாள் உச்ச நீதிமனற் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களோடும் நாம் நூறு
விழுக்காடு உடன்படுகிறோம்.
2005 ஆண்டு இருந்த களநிலையோ அரசியல் நிலையோ இன்றில்லை என்ற
உண்மையை (யதார்த்தத்தை) நாம் மறந்துவிடக் கூடாது. 2005 இல் வி.புலிகள் இராணுவ
சமபலத்தோடு இருந்தார்கள். ஒரு நிழலரசும் இயங்கிக் கொண்டிருந்தது. இன்று இந்த
இரண்டும் இல்லை.
இன்று எமது மக்கள் சிங்கள - பவுத்த வெறிபிடித்த ஒற்றை ஆட்சிக்குள்
சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.
வன்னி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுவாசல்களில் குடிபுக
முடியாமல் இடைநடுவில் விடப்பட்டுளார்கள். மறு வாழ்வு என்ற பெயரில் ஒரு
குடும்பத்துக்கு அய்ந்து தகரங்களும் ரூபா.25,000 மட்டும்
கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சத்துக்கும் மேலான மக்கள் தொடர்ந்து வன்னி முகாம்களில்
சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். . பன்னீராயிரம் போராளிகள் சிங்களைச் சிறைகளில்
அடைக்கப்பட்டுள்ளார்கள்.
பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கூறுவது போல் "எமது விதியை நாமே
நிருணயிக்க வேண்டும். இதற்காக நாம் எமக்குக் கிடைத்திருக்கும் சிறிய துரும்புச்
சீட்டையும் உரிய வகையில் உபயோகிக்க வேண்டும். வீரவசனங்களாலும் வெற்றுப்
பேச்சுக்களாலும் காலம் கடத்தும் எமது அரசியல்வாதிகளை உரிய வகையில் நாம் இனங்காண
வேண்டும்."
அதாவது பட்டது போதும் இனிப் படமுடியாது என்ற நிலையில்
ஆட்சிமாற்றம் ஒன்றே எமது மக்களுக்கு ஓரளவாவது நிம்மதியைத் தேடிக் கொடுக்கும்
என்ற உண்மையை உணரவேண்டும்.
தேசியத் தலைவரின் பெற்றோர்கள் தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டுள்ளார்கள். வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சதாசிவம் கனகரத்தினம்
சிறையில் வாடுகிறார். எழுநூறுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள்
ஆண்டுக்கணக்காகச் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
North Eastern Monthly
என்ற செய்தி
ஏட்டின் ஆசிரியர் J.S. திசநாயகம்
அமைதிக் காலத்தில் எழுதிய இரண்டு கட்டுரைக்கு ஒரு சிங்கள நீதிபதியால் இருபது
ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மகிந்த இராசபச்சேயின் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசேப் பரராசசிங்கம், நடராசா ரவிராஜ்,
கிட்டினன் சிவநேசன், தியாகராசா மகேஸ்வரன் போன்றோர்களது கொலையாளிகள் இன்னும்
நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.
இதேபோல் மகிந்த இராசபக்சே அரசின் தமிழின அழித்தொழிப்பபின்
(Genocide) ஒரு கூறாகக்
30 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர்
கொடிய சிங்கள அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பியுள்ளார்கள்.
எனவே எமது மக்கள் கொஞ்சமேனும் மூச்சுவிட வேண்டும் என்றால்
ஆட்சிமாற்றம் தேவை. மகிந்த இராசபக்சேயை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அவரது குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில்
50,000 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களைக் கொன்று
குவித்ததை வெடிகொளுத்திக் கொண்டாடிய கொடிய ஆட்சிக்கு நாம் முற்றுப்புள்ளி
வைக்க வேண்டும். தமிழ், தமிழீழம் என்ற சொற்களுக்குத் தடைவிதிக்கச் சட்டம்
கொண்டு வந்து இலங்கைத் தீவில் சிறுபான்மையினர் இல்லை, தமிழர்களுக்கு தாயகம்
இல்லை, தேசியம் இல்லை, தன்னாட்சி உரிமை இல்லை, வடகிழக்கு இணைப்பில்லை என்று
கொக்கரிக்கும் மகிந்த இராசபக்சே என்ற கொடுங்கோலனை ஆட்சிக் கட்டிலில் இருந்து
இறக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள
ஆட்சியாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கிக் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்து
வாழும் ஒட்டுக்குழுக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்.
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு சிங்கள தேசம் தமக்குள்
மோதிக்கொண்டிருக்கிறது. இதனை நாம் சாணக்கியத்தோடு எமக்குச் சாதகமாகப்
பயன்படுத்த வேண்டும். இரண்டு எதிரிகளில் ஒரு எதிரியை ஒழிக்க . இன்னொரு
எதிரியோடு கூட்டுச் சேரவேண்டும்.
எனவே மேற்கூறிய காரணங்களை மனதில் கொண்டு தமிழ்மக்கள் தங்கள்
வாக்குகளைப் புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக்
கொள்கிறோம்.
-30-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காத்திரமான
முடிவெடுப்போம் - யாழ்ப்பாண மாணவர் ஒன்றியம்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காலத்தின் கட்டாயத்தை கருத்திற்கொண்டு
காத்திரமான முடிவெடுப்போம். கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க
வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில்
சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.
சிறீரங்கன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாறிவரும் உலகில்
அரசியல், பொருளாதார அணுகுமுறை மாற்றங்கள் இன்று உலகமயமாதலின் விளைவாக அனைவரையும்
அதன் தாக்கத்திற்கு உள்ளாக்குகின்றது.
கடந்த காலங்களில் சர்வதேச நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் எமக்கு விமோசனம் பலர்
ஒதுங்கி நின்றோம். ஆனால் உலக வல்லாதிக்கங்களும் பிராந்திய வல்லாதிக்கங்களும் தமது
சுயலாப பொருளாதார, அரசியல், இராணுவ நலன் கருதியே அனைத்தையும் நடத்தி முடித்தனர்.
இன்றும் தமது நலன் கருதியே முட்டி மோதுகின்றனர்.
மறுபுறம் பெரும்பான்மைக் கட்சிகள் தமது இருப்புக்களை உறுதிப்படுத்தவும் தமது
சுயநலன் கருதியும் இன்றைய நிலையில் இலங்கையின் இராணுவ பொருளாதார மையங்கள் மேல்
உலகநாடுகள் கொண்டுள்ள அக்கறையையும் அதன் மூலம் உலக நாடுகளிடம் எழுந்துள்ள மறைமுக
மோதல்களையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அணிதிரண்டு நிற்கின்றனர்.
எவ்வாறாயினும் இக்கட்சிகள் மிகப் பெரிய உள்நோக்கங்களுடனும் நீண்ட கால பார்வையுடனும்
தமது நடவடிக்கைகளை திடமாகவே மேற்கொள்கின்றனர். அவை சிறுபான்மையினருக்கு எதை
தந்திடப் போகின்றன என்பதை இதுவரை எதை எமக்கு தந்தார்கள் என்பதை வைத்து மக்கள்
மதிப்பிடட்டும்.
ஆனால் எம் அன்புக்குரிய மக்களே! இன்றைய நிலையில் எமது தமிழ்ச் சகத்தின் எதிர்கால
நிலையை தீர்மானிக்கும் சக்தியாக மக்களாகிய நாம் காத்திரமான முடிவெடுக்க வேண்டும்.
கடந்த காலங்களைப் போல் மீண்டும் நாம் பிறரால் ஆட்டுவிக்கப்படுபவர்களாக இல்லாமல்
எமது விதியை நாமே நிர்ணயிக்க வேண்டும். இதற்காக நாம் எமக்குக் கிடைத்திருக்கும்
சிறிய துரும்புச் சீட்டையும் உரிய வகையில் உபயோகிக்க வேண்டும். வீரவசனங்களாலும்
வெற்றுப் பேச்சுக்களாலும் காலம் கடத்தும் எமது அரசியல்வாதிகளை உரிய வகையில் நாம்
இனங்காண வேண்டும்.
இவர்களில் பலர் பொதுநலன் சார்ந்து நிகழ்கால எதிர்கால நடைமுறை யதார்த்தத்தை புரிந்து
கொள்ளாது. தமது இருப்பை பேணுவதை மட்டுமே குறியாகக் கொண்டு மக்களை மீண்டும்
துன்பத்தில் தள்ள முயல்கின்றனர்.
எமது புலம்பெயர் உறவுகள் பல தமிழர் பிரதேசத்தின் நடைமுறை யதார்த்தம் புரியாது பல
கருத்துக்களை வெளியிடுகின்றனர். அவர்களின் கருத்துக்களை செப்பனிட வேண்டிய பாரிய
பொறுப்பு எமக்குள்ளது.
ஏனெனில் எமது பிரதேசத்தின் மீள்கட்டுமானம், பொருளாதாரம், அபிவிருத்தி சார்ந்த
முதலீடுகள் என்பன புலம்பெயர் உறவுகளின் நிதி மூலங்களாலேயே கட்டியெழுப்பப்பட வேண்டி
உள்ளதோடு எமது நியாயமான அரசியல் அபிலாஷைகளை எமது இனத்திற்கேயான தனித்துவத்தோடு
பெற்றெடுக்க அவர்களின் குரல் இன்றியமையாதுள்ளது.
இருவரில் ஒருவரே வெற்றிபெறுவர் என்னும் நிலையில் உள்ள எதிர்வரும் ஜனாதிபதி
தேர்தலில் இன்று வரை முடிவெடுக்காத நிலையில் பல அணிகளாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பிரிந்து நிற்கின்றது. தமிழ் மக்களை கடந்தகாலத்தைப் போல் தேர்தலில் வாக்களிக்க
வேண்டாம் எனக் கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில்
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதோ
புத்திசாலித்தனமானதும் அல்ல.
தமிழ் மக்களுக்குரிய பேரம் பேசலை தக்கவைக்க உகந்ததுமல்ல. உணர்ச்சிகளின்
அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் எவ்வாறான விளைவுகளை பெற்றுத் தரும் என்பதை
கடந்த காலம் எமக்கு கற்பித்து விட்டது. மாறிவரும் போக்கினை உணராது வாய்ப்புக்களை
தவற விட்டால் எமது இனம் இருள் சூழ்ந்த எதிர்காலத்தையே எதிர்கொள்ள நேரிடும்.
அழிவில் உருக்குலைந்த பல நாடுகள் இன்று உலகிலேயே இராணுவ, பொருளாதார வல்லாதிக்க
நாடுகளாக மாறிவிட்டன.
அவர்களிடமிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ளவேண்டும். அமெரிக்காவால் உருக்குலைந்த
ஜப்பான் அமெரிக்காவோடு இணைந்து செயற்பட்டு இன்று அமெரிக்காவை விட முன்னேறிச்
சென்றுவிட்டது.
ஆனாலும் இன்றுவரை ஜப்பான் தனது நாட்டின் தனித்துவத்தை இழக்கவில்லை.
வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொண்டு எமது உரிமைகளை பெற்றெடுக்கும் வகையில் நாம்
செயற்பட வேண்டும். மாறாக தென்னிலங்கை, எம் மக்களை பயன்படுத்தி அதிகாரத்திற்கு
வருவதற்கு வழி சமைக்கும் வகையில் எமது அரசியல் கட்சிகள் செயற்படக் கூடாது.
அவ்வாறு செயற்படும் அரசியல் கட்சிகளுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் மக்கள் உரிய
தீர்ப்பளிப்பர். தொடர்ந்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்களின்
பிரதிபலிப்புக்கள் நிச்சயமாக தமிழ்க் கட்சிகளின் செயல் வீரத்திற்கு முக்கியம்
கொடுப்பதாய் அமையுமே தவிர வாய் வீரங்களுக்கு முக்கியம் கொடுப்பதாய் அமையாது.
எனவே முயற்சியை நிறுத்தாத வரையில் தோல்வி முடிவானதல்ல என்பதற்கிணங்க எமது
சமூகத்திற்கு சுபீட்சமான எதிர்காலத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அரசியல்
பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் தொலைநோக்குப் பார்வையுள்ள தீர்மானங்களை
எடுத்து ஒன்றிணைந்து செயற்படுவோம்.
அதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் அனைத்து விதமான ஒத்துழைப்புக்களையும்
வழங்கத் தயாராக உள்ளது என்பதை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துக்
கொள்கின்றது.
THE TAMIL POPULATION AND THE POLITICS OF BOYCOTTS AND NON-PARTICIPATION
the
Donoughmore Constitution. The people of the other communities voted with much
enthusiasm but two large segments of the Tamil population did not. One
segment, led by the Jaffna Youth Congress boycotted it because they wanted
immediate Independence. Jawaharlal Nehru, who was in Jaffna on the invitation
of the Jaffna Youth Congress when the boycott decision was made, prophetically
warned of the likely ill-consequences of a boycott which could be
misinterpreted in the South. Some of the more responsible local leaders also
opposed the boycott but the radicals succeeded in getting the boycott
resolution adopted. The other segment, led by the old guard conservatives
boycotted it for the opposite reason- because the Donoughmore Reforms went too
far too early.
Thus while
people of other communities celebrated the achievement of universal adult
franchise and Dominion status by voting, two major sections of Sri Lankan
Tamils engaged in the first of what was to be a long sequence of mindless,
unproductive, escapist boycotts and self exclusions from national politics.
That first boycott led predictably to a pan-Sinhala government in the 1930s
and other negative developments thereafter.
The LTTE
enforced boycott of November 2005 led to the terrible agony inflicted on over
a million Tamils in the North and East as well as on large numbers of Muslims
in the region over the last few years. A critical difference between the first
and (hopefully) the last boycott is that unlike the first, the last was
violently enforced. The factor common to both boycotts, and to all those
in-between, was that they heaped needless suffering, yet continuing, on the
Tamil people.
Alarmingly,
some irresponsible Tamils are again advocating either boycotting or
effectively spoiling the vote. There are only two candidates with any chance
of winning. While neither of them may be attractive to Tamil voters, those who
wish to make a difference have no choice but to vote for either of them at
least as a second choice otherwise the vote would be meaningless and no
better than a boycott. That would be a betrayal of their civic responsibility
and an abandonment of any attempt to secure anyones welfare. Voicing an
indication of a decision not to vote or to effectively spoil their vote would
also be carrying a message to the two leading candidates that they need not
take Tamil concerns into account because the Tamils would either not vote or
effectively spoil their vote.
Participation in national politics is absolutely essential. The choice for
politicians from minority communities need not be between (i) complete
marginalization as in the tradition set by the Federal party long ago, (ii)
virtual disassociation from ethnic issues as in the case of eminent Tamil and
Muslim Ministers such as Lakshman Kadirgamar and A.C.S Hameed who were never
seen as champions of Tamil and Muslim rights or (iii) servile cooption as a
quisling. In our recent history we have the examples of minority politicians
such as Badiuddin Mohammed, Mohamed Ashraff, and S. Thondaman who do not fit
in to any of the above categories but have effectively participated in
national government at the highest level and greatly contributed to the
welfare of their communities. There is no reason to believe that Sri Lankan
Tamil leaders cannot play such a role in national politics.
Jaffna students oppose Presidential poll boycott
COLOMBO: The Jaffna
University Students Union has appealed to the Tamil voters in north-east Sri
Lanka not to boycott the Presidential election but to vote for either of the two
main candidates.
In a statement published in the Tamil daily Virakesari on Thursday, the
President of the union, S.Srirangan, also said that it would not be wise to
support any Tamil candidate who had no chance of winning.
Srirangan mentioned no names, but he was referring to incumbent President
Mahinda Rajapaksa, the joint opposition candidate Gen.Sarath Fonseka and the
dissident Tamil National Alliance MP, M.K.Sivajilingam, who is contesting as an
independent.
The student leader said that in the (post-LTTE) changed world, it was important
to take practical decisions and not indulge in bravado and tall talk. Referring
to the Tamil Diasporas wish that the Tamils boycott the election as they did in
2005 (at the instance of the LTTE), he said that the Diaspora did not know the
conditions existing in their Homeland.
Tamils would have to be self reliant he said and not count on outsiders like the
world powers (the Western countries) or the regional power (India), Srirangan
said.
These powers had only played lip service to the Tamils cause.They had
ultimately gone by their economic and strategic interests and sided with one or
the other of the Sri Lankan mainstream political parties.
The Tamils should stand united and use their united strength to bargain for a
better deal, Srirangan said.
True enough, more than war, it is electoral politics which is bringing benefits
to the Tamils. The Rajapaksa government on Wednesday lifted the night curfew in
Jaffna, which had been in force since 1995.It also lifted all restrictions on
fishing on the north-eastern coast. The A9 highway linking the south and the
north has been opened.
The 280,000 Tamils, who were languishing in refugee camps since April-May, have
been allowed to go out and come back at will. Only about a 100,000 remain in the
camps now. Most have been moved to transit camps in their native districts.
The pro-LTTE Tamil National Alliance (TNA) is divided between those who want to
support Fonseka and those who want to boycott. The pro-LTTE elements want to
boycott as they did in 2005 at the LTTEs instance.
ENS
ஜனாதிபதி தேர்தலில்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களின் நலன் கருதியதாக இருக்குமே தவிர
வேறு எந்த வகையிலும் முரனாக அமையாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர்
இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.www.eelaman.com
2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள்
சார்பாக எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்பதனால்தான் இன்று பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்
குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை தமிழ்
பத்திரிகையாளர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விளக்கமளித்தபோது
இரா.சம்பந்தன் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக மிக
விரைவில் கூட்டமைப்பு அறிவிக்கும் என்றும் சிவாஜிலிங்கம் பொது வேட்பாளராக
போட்டியிட எடுத்த தீர்மானம் தன்னிச்சையானது எனவும் அது குறித்து கவலையடைவதாகவும்
ஆனாலும் தமிழ் மக்கள் குழப்பமடைய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அவர்
கூறினார்.
இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தமிழ் மக்களுடைய அரசியல்
அபிலாஷைகள் தொடர்பாக பேசி வருகின்றோம். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான
மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், துரைரெட்ணசிங்கம் கஜேந்திர குமார்
பொன்னனம்பலம் ஆகியோர் இந்த சந்திப்புகளில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்த
இரா.சம்பந்தன் வடக்கு கிழக்கு மாகாணத்தின் இணைப்பு மிகவும் முக்கியமானது என
வலியுறுத்தி வருவதாகவும் சொன்னார்.
இரண்டு வேட்பாளர்களையும் சந்தித்த போது முன்வைத்த விடயங்கள்
தொடர்பாக சம்பந்தன் பின்வருமாறு கூறினார்
தமிழ் மக்களுடைய சகலவிதமான பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான அதாவது
உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடங்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,
வீட்டு வசதி, தொழில் வாய்ப்பு, சமூக கட்டமைப்பு போன்ற விடயங்கள்.
வடக்கு கிழக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு அங்கு
மக்கள் மீள குடியேற உடனடி ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். யுத்தம்
முடிவடைந்துவிட்ட நிலையில் அவ்வாறான ஒரு உயர் பாதுகாப்பு வலயம் தேவையில்லை.
யுத்தம் முடிவடைந்த நிலையிலும் வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல்
மற்றும் சோதனை சாவடிகள், இராணுவ கட்டமைப்புகள், யுத்த முனைப்புகள் அனைத்தும்
உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் அபிவிருத்தி திட்டங்கள் என்ற
பெயரில் யாருக்கும் விநியோகம் செய்யப்படுமானால் அவ்விதமான ஒழுங்குகள் உடனடியாக
நிறுத்தப்பட வேண்டும்.
அத்துடன் பொரும்பான்மை இனங்கள் வடக்கு கிழக்கிலுள்ள அரச காணிகளில்
குடியமர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் யுத்தத்தினால் வெளியேறிய
தமிழர்களின் காணிகளில் பெரும்பான்மை இன மக்கள் குடியேற்றப்படும் நடவடிக்கைகளும்
நிறுத்தப்பட வேண்டும்.
அதேவேளை வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் காணிகளின் உரிமை
பத்திரங்களை நீக்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட
வேண்டும்.
தடுப்பு காவலில் உள்ள தமிழ் இளைஞர்கள் யுவதிகளுக்கு சாட்சியங்கள்
இல்லையானால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஏனையவர்களுக்கு பொது
மன்னிப்பு வழங்க வேண்டும். யாரையாவது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமானால்
அவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ் மக்கள் தமது அரசியல் பொருளாதார கலாசார விடயங்களை
சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் நிரந்தரமான நீதியான
நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும்
முன்வைக்க வேண்டும்.
இந்த முக்கியமான விடயங்கள்தான் கூட்டமைப்பினால் முன்
நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்குறித்த இந்த விடயங்கள் தொடர்பான இரண்டு பிரதான
வேட்பாளர்களின் கருத்துக்களையும் அறிந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆலோசனை நடத்தி வருகின்றனர், ஆராய்கின்றனர்.
அத்துடன் இவ்வாறான தீர்வுகள் ஏற்படுவதற்கு இந்தியா உட்பட சர்வதேச
நாடுகளின் உதவிகளும் தேவை. அது தொடர்பாக அவர்களுடனும் கூட்டமைப்பு நாடாளுமன்ற
உறுப்பினர்கள் கலந்துரையாடி வருகின்றனர்.
மேற் குறித்த விடயங்களை உறுதிப்படுத்த கூடிய வேட்பாளருக்குத்தான்
ஆதரவை வழங்க முடியும்.
எவ்வாறாயினும் இந்த விடயங்கள் தொடர்பாக தீவிரமான கவனத்திற்கு
உட்பட்டிருக்கின்றமையினால் தமிழ் மக்கள் இன்னமும் சிறிது காலத்திற்கு பொறுமையுடன்
இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இந்த ஜனாதிபதி தேர்தல் ஒரு நல்ல சந்தர்ப்பம் எனவே மக்கள் நிதானமாக
செயற்பட வேண்டும். மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இது அவர்களுடைய புனித கடமை
என்றுதான கருதுகின்றோம்.
மக்கள் எந்தவிதமான குழப்பங்களும் அடைய வேண்டிய அவசியம் இல்லை
என்றார்.
ஆட்சி மாற்றம் காலத்தின் கட்டாயம் :
தேர்தலில் தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன?
[ செவ்வாய்க்கிழமை, 29 டிசெம்பர் 2009, 09:19.17 AM GMT
+05:30 ]
கடந்த காலங்களில் தமிழர் தரப்பு கற்றுக்கொண்ட பாடங்களில்
இருந்து, ஆட்சி ஏறும் எந்த சிங்கள ஆட்சியாளரும் தமிழருக்கு உரித்தான உரிமைகளை
வழங்கி, தமிழரின் மரபு வழித்தாயகம் - தேசியம் - தன்னாட்சி என்பனவற்றை ஏற்று,
தமிழருக்கு நிறைவான விடுதலையை பெற்றுத் தருவார்கள் என்றோ தமிழரின் அடிப்படைப்
பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது.
ஆட்சிப் பீடம் யார் வந்தாலும் தமிழரின் அடிப்படை, அரசியல்
விருப்புக்களை நிறைவேற்றப் போவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தமிழர்
விடயத்தில் ஒரே கொள்கை உடையவர்கள். பேரினவாத அரசியல் சித்தாந்தங்களுக்குள்
சிக்குண்டு கிடப்பவர்கள். இந்நிலையில் அரச தலைவர் தேர்தலில் வாக்குகளை
வழங்கி, அவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்துவிட்டு, அவர்களிடம் இருந்து நாம்தான்
அடி உதையும் வாங்க வேண்டும்.
இப்படியான தேர்தலில் தமிழர் தரப்பு பேசாமல், ஆதரவு அளிக்காமல்
இருந்து விடுவதான் நல்லது என நினைப்பவர்கள் இன்று கூட இருக்கின்றனர்.
இவர்களின் ஆதங்கம், உணர்வு பூர்வமான சிந்தனை ஒருவகையில் நியாயமானதுதான்.
ஆனால் இது தற்காலத்திற்கும், நடைமுறை அரசியல் ஒழுங்கிற்கும், மக்களின்
அன்றாட, உடனடி அடிப்படைத் தேவைகளுக்கும் பொருத்தப்பாடு உடையதா என
சிந்திக்கவும் அலசி ஆராய வேண்டியதுமான விடயமாகின்றது.
அரசியலுக்கும் எமக்கும் தொடர்பு வேண்டாம். அரசியலில் இருந்து
விடுபட்டு இருப்பதே நடுநிலைமையும் பெருமை சேர்ப்பதும் என எண்ணிக்கொள்பவர்கள்
கணிசமான அளவினர் இருக்குமளவிற்கு அரசியல்வாதிகள் பலரின் செயற்பாடுகள்
காணப்படுகின்றன என்பது உண்மை. ஆட்சியாளர் புரிகின்ற சரி பிழைகளில் இருந்து
பிறப்பெடுக்கின்ற ஒவ்வொரு தாக்கமும் பாதிப்பும் நாட்டில் ஒவ்வொரு
குடிமகனையும் சென்றடைகின்றன. ஆட்சியாளர் இழைக்கின்ற தவறுகளினால் அதிகம்
அல்லற்படுவது அரசியல் வாதிகள் அல்லர். மக்கள்தான் என்பது இன்னொருவர்
சொல்லித்தான் தெரிந்து கொள்ளும் விடயமல்ல. இது மக்கள் அனுபவித்த,
அனுபவித்துக் கொண்டிருக்கும் வெளிப்படையான விடயம்.
சனநாயக அரசியலில், மக்கள் பிரதிநிதிகள் என்றும் தமது
செயற்பாட்டிற்கு மக்களின் ஆதரவும் அனுமதியும் கிடைத்தது என்றும்
கூறிக்கொள்ளும் ஆட்சியாளரின் ஒவ்வொரு நடவடிக்கையின் சாதக, பாதக விளைவுக்கும்
முகம் கொடுக்க வேண்டியவர்கள் மக்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது. இதனால்
ஆட்சியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும்
ஒப்படைக்கப்படுகின்றது. இதனை சரியாக பயன்படுத்த வேண்டிய கடப்பாடு
கொண்டவர்களாக மக்கள் காணப்படுகின்றனர். தவறான தெரிவின் ஊடாக ஒரு கொடுமையான
ஆட்சியாளரை உருவாக்கிவிட்டு, நாளை அவ் ஆட்சியாளரால் ஏற்படும் பாதிப்புக்கு
பொறுப்புடையவர்கள் ஆட்சியாளர் என்பதற்கு அப்பால் ஒரு வகையில் ஒவ்வொருவரும்
தார்மீக பொறுப்பாளிகளாக வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
எனவே அரசியல் - ஆட்சி என்பவற்றில் இருந்து எவரும் தொடர்பு
அற்றவர்களாக, விலகி ஒதுங்கி இருக்கமுடியாது. மக்கள் - அரசியல் - ஆட்சியாளர்
என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட ஒன்றில் ஒன்று ஆதிக்கமும் செல்வாக்கும்
செலுத்துகின்றவையாகும். ஒவ்வொருவரும் விரும்பியோ விரும்பாமலோ ஆட்சியை
தீர்மானிக்க வேண்டியவர்களாக ஏதோ ஒரு வகையில் அரசியலோடும் ஆட்சியாளரோடும்
தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் இராமன் ஆண்டால் என்ன?
இராவணன் ஆண்டால் என்ன? நாங்கள் சோறு திண்டால் சரி என்று எவரும் இருந்து விட
முடியாது. அவ்வாறு இருப்போமாயின் நாட்டில் நடைபெறும் அநீதிகளுக்கும் ஊழல்,
மோசடிகளுக்கும் நாமும் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள். ஆட்சியாளரை தெரிவு
செய்யும் போது ஒவ்வொருவரும் நிதானமாகச் சிந்தித்து தமது வாக்கினை சரியாக
பயன்படுத்த வேண்டிய தேவை எழுகின்றது.
ஓவ்வொருவரினதும் முடிவு சமூகத்தின், இனத்தின், தேசத்தின்
எதிர்காலத்தோடு தொடர்புடையதாக அமைகின்றது. இதன் அடிப்படையில் இம்முறை
இலங்கையின் அரச தலைவர் தேர்தலில், யாரை ஆட்சியாளராக அனுமதிக்க வேண்டும் என்ற
மிகப் பெரிய பொறுப்பு தமிழர் தரப்பிடம் விடப்படுகின்றது. இலங்கை தேர்தல்
நடைமுறைகளின் படி தமிழர் தரப்பில் இருந்தோ அல்லது எந்த சிறுபான்மைச்
சமூகத்தில் இருந்தோ ஒருவர் அரச தலைவர் ஆக வாய்ப்பு இல்லை. இது வெளிப்படை.
இந்நிலையில் தமிழர் பெரும்பான்மையில் இருந்து வருகின்ற முதன்மை
வேட்பாளர்களில் சார்பளவில் பொருத்தமான ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாய
நிலையில் காணப்படுகின்றனர். ஏனெனில் தமிழர் விரும்பாவிட்டாலும் தேர்தலில்
பங்கு கொள்ளா விட்டாலும் சிங்களவர் ஒருவர் இலங்கையின் அரச தவைவர் ஆவார்
என்பதாலும் அவ்வாறு ஆட்சி அதிகாரங்களை பெற்றுக் கொண்டவரின் செயற்பாட்டின்
விளைவு தமிழ் மக்களை விட்டு வைக்கப்போவதில்லை அது தமிழரின் அன்றாட
வாழ்வியல் தொடக்கம் இனத்தின் இருப்பு மற்றும் அரசியல் கோரிக்கைகள் வரை
தாக்கத்தை உருவாக்கும் என்பதாலும் ஆட்சிக்கு வரும் சாத்தியப்பாடுடையவர்களில்
சார்பளவில் பொருத்தமானவரை ஆட்சியாளராக அனுமதிக்க வேண்டிய அல்லது தெரிவு செய்ய
வேண்டிய தேவை காணப்படுகின்றது.
ஆனால் தமிழர் தரப்பு முடிவு இன ஒருமைப்பாட்டை, பலத்தை
வெளிக்காட்டுவதாகவும் தமிழரின் ஒற்றுமையை சிதைக்க, பிளவுபடுத்த இடமளிக்காத
வகையிலும் இருத்தல் வேண்டும். தமிழர் தரப்பால் இனம், தேசிய நலன் கருதி
எடுக்கப்படும் ஒருமைப்பாடுடைய முடிவுக்கு எல்லாத் தமிழரும் கட்டுப்பட்டு ஆக
வேண்டிய தார்மீக கடப்பாடு, வரலாற்றுக் கடமை எம் முன்
நிலைநிறுத்தப்படுகின்றது. எமது வாக்குப் பலம் கூறு போட, பிளவுபடுத்த
இடமளிப்போமாயின் வரலாற்றில் நாம் செய்யும் தப்பாக அமையும். அண்மைக்
காலங்களில் தமிழர் தரப்பு ஒன்றிணைந்து எதிரிக்கு புகட்டியிருக்க வேண்டிய,
செய்திருக்க வேண்டிய கடமைகளில் இருந்து தவறியதன் விளைவை பெரும்பாலான தமிழரின்
இன்றைய அவலநிலையில் இருந்து அறிந்து கொள்ள முடியும். நடந்தவை நடந்தவையாக
இருக்க, இனத்தின் இருப்பையும் தேசியத்தையும் பாதுகாத்து கொள்ள இனி என்ன செய்ய
வேண்டும் என ஒருமித்த சரியான தீர்மானத்தை எடுத்து செயல் ஆற்ற வேண்டும்.
காலத்தின் தேவை கருதி தமிழர் தரப்பு தமது போராட்டத்தின் அளவு
பரிமாணங்களையும் வடிவங்களையும் மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்
வேளையில், அரசியல் வடிவில் எமக்கு முன் எழுந்துள்ள சவாலை வென்றெடுக்க
வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆயுத களங்கள் ஓய்வுக்கு வந்து அரசியல் என்னும்
களம் முதன்மை பெறுகின்றது. தமிழரை ஏமாற்றி வெறும் பகடைக்காய்களாக பயன்படுத்தி
விடலாம் என சிங்களத் தலைமைகள் எண்ணிக்கொள்கின்றன. தமிழர் வாக்குகளையும்
தமதாக்கி மீண்டும் தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இன்றைய ஆட்சியாளர்
முயற்சி செய்கின்றனர். இவ்வகையில் தேர்தலில் வெற்றீட்டுவார்கள் எனின்,
தமிழரும் தமக்கு பின்னால்தான் உள்ளனர். தங்களுக்கு வேண்டிய ஆதரவை அனுமதியை
தமிழ் மக்களும் தந்துவிட்டனர். முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுவிட்டன.
தமிழருக்கு பிரச்சினை என்று கூறுவதற்கு எதுவும் இல்லை. நாட்டில் ஒற்றுமையை
சமாதானத்தை ஏற்படுத்திவிட்டோம் என்றெல்லாம் தமக்கு ஏற்றவாறு கூறி தமிழரையும்
உலகையும் ஏமாற்றி நல்லபிள்ளை வேடம் போட்டுவிடலாம் என இன்றைய ஆட்சியாளர் கனவு
காண்கின்றன். தமிழருக்கு இழைக்கின்ற அநீதிகளையும் செய்த பேரழிவுகளையும்
மூடிமறைக்கவும் தமிழரின் அரசியல் விருப்புக்களையும் கோரிக்கைகளையும் நசுக்கி
விடவும் திட்டமிடுகின்றனர். நாட்டை குட்டிச்சுவராக்கி குடும்ப ஆட்சி செய்யும்
ஆட்சியாளரிடம் மீண்டும் ஆட்சி, அதிகாரம் கிடைக்கப்பெற்றால் தமிழர்
இருப்பிற்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் என்ன நடக்கும். ஏன் முழு நாடும்
எவ்வளவு தூரம் சின்னா பின்னமாகும். சீரழிக்கப்படும் என்பது நியாயமாக
சிந்திக்கின்ற எல்லோரும் அறிந்தவையே. இவ்வளவும் தெரிந்து கொண்டும் மீண்டும்
இந்நிலைமையை, இவ் ஆட்சியாளரை தொடர விடுவோமாயின் இது போன்ற முட்டாள்தனமான
மிகப்பெரிய தப்பு வேறு எதுவுமில்லை.
மகிந்த சகோதரர்களின் கபட வேடத்தில், தேர்தல் நாடகத்தில்,
சதிவலையில் இனத்தைப் பற்றி சிந்திக்கின்ற தன்மானமுள்ள எந்த தமிழரும் வீழ்ந்து
விடமாட்டார்கள் - வீழ்ந்து விடக்கூடாது. தமிழர் பகுதியில், வடக்கு -
கிழக்கில் வீதிகளை புனரமைக்கின்றோம். கோயில்களுக்கு நிதி வழங்கின்றோம்.
பாடசாலைகளுக்கு இலவச புத்தகங்களை வழங்குகின்றோம். என நாளேடுகளிலும்
இலத்திரனியல் ஊடகங்களிலும் விளம்பரம் செய்து பெரிதாக கொக்கரித்துக் கொள்ளும்
இன்றைய ஆட்சியாளரும் அவர்களின் அடிவருடிகளும் தமிழருக்கு யாரும் செய்யாததை
பெரிதாக செய்பவர்கள் போன்றும் தமிழரின் விருப்புக்களை புரிந்து கொண்டு
நடக்கின்ற உத்தமர் போன்றும் வேடம் போடுகின்றனர். மிக அண்மையில் இவர்கள்
செய்திருப்பது அரசாங்கம் என்ற அடிப்படையில் நிறைவேற்ற வேண்டிய அபிவிருத்தி
பணிகளில் மிகச்சொற்பமானவையாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி ஏறிய
காலத்தில் இருந்தே இவற்றை செய்திருக்க வேண்டியதுதானே என ஒருவர் நியாயமாக வினா
எழுப்பினால் இவர்களால் முறையான பதில் கூறமுடியுமா? அத்தோடு அபிவிருத்தி
என்பது வேறு இனத்தின் அரசியல் கோரிக்கை என்பது வேறு. அண்மையில் அபிவிருத்தி
சார்ந்த சிலவற்றை செய்து விட்டு தமிழரின் கோரிக்கைகளையும் விருப்பங்களையும்
நிறைவேற்றுகின்றோம் என்ற மாய தோற்றப்பாட்டை காட்ட முனைகின்றனர். இவர்கள்
செய்திருக்கும் சிறுஅபிவிருத்தி வேலைகளுக்கான காரணம் தமிழர் மீதுள்ள
அக்கறையல்ல அனைத்துலகின் அழுத்தங்களை சமாளிப்பதற்கான தந்திரோபாயம் என்பதே
உண்மை. கூட இருந்தவனுக்கே வீடு கொடுக்க மறுத்தவர்கள் தமிழருக்கு உரிமைகளைத்
தருவார்களா?
அதேவேளை, அபிவிருத்தி சார்ந்த சிலவற்றை செய்து விட்டு பெரிதாக
அலட்டிக் கொள்ளும் மகிந்தவின் கோர ஆட்சியினால் ஏற்பட்ட பேரழிவுகளை எந்தத்
தமிழனும் மறந்து விடமாட்டான். மனித நேயமற்ற முறையில் போர் விதிகளுக்கு மாறாக
கொத்துக் குண்டுகளையும் பல்குழல் பீரங்கி எறிபடைகளையும் வீசி நாளும்
பல்லாயிரக்கணக்கில் மக்களை துடிதுடிக்க கொன்றதையும், ஆயிரக்கணக்கில்
அங்கவீனர் ஆக்கியதையும், ஆயிரக்கணக்கில் ஆட்கள் காணாமல் போனதையும், இளையோர்
மற்றும் முன்னாள் போராளிகள் சிறை பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு
கொலைசெய்யப்படுவதையும் தெரிந்து கொண்ட எந்தவொரு மானமுள்ள இனத்திற்காக
சிந்திக்கின்ற தமிழன், இவற்றுக்கு காரணமான இன்றைய ஆட்சியாளருக்கு - இனத்தின்
எதிரிக்கு கைகொடுத்து கைகோர்த்து நிற்கமாட்டான். இன்று இனத்தின் முதல் பொது
எதிரியாக உருவெடுத்திருக்கும் இன்றைய ஆட்சியாளருக்கு மக்களால் வழங்கக் கூடிய
தீர்ப்பான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஏற்ற களமாக இத்தேர்தல் களத்தை
பயன்படுத்த வேண்டும் என்பதே விடுதலை உணர்வும் இனப்பற்றும் மிக்க
ஒவ்வொருவரினதும் உள்ளத்துடிப்பாகும்.
மனிதநேயமற்ற முறையில் இனப்படுகொலை நிகழ்த்தியவர்கள்.
காட்டுமிராண்டித்தனமாக அடாவடித்தனங்களை அரங்கேற்றியவர்கள். அவற்றையெல்லாம்
மூடி மறைக்கவும் தேர்தல் நாடகங்களில் ஒன்றாகவும் வடக்கு கிழக்கில்
இருக்கின்ற கொடுமையான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை செய்துவிட்டு கிழக்கில்
உதயமென்றும் வடக்கில் வசந்தம் என்னும் வார்த்தைகளால் அலங்கரித்து
தமிழ்மக்களையும் உலகையும் ஏமாற்றி விட நினைக்கும் இவர்களின் செயற்பாடு,
எம்மைத் துரத்தி விட்டு எமது வீட்டுக்குள் குடியிருக்கும் அயலவன் - எமது
வீடு, வளவில் உள்ள வளங்களைச் சுரண்டுபவன், மழைக்கு, வெயிலுக்கு ஒதுங்குவதற்கு
இடம் தருகின்றேன்.. காணி, வளவை வந்து பார்க்க அனுமதி தருகின்றேன் என
கூறுவதற்கு ஒப்பானதாகும்.
இதே வேளை, இனத்தை கூறுபோட்டு, காட்டிக்கொடுத்து வயிறு
வளர்க்கும் அடிவருடிகள் தொடர்பாக தமிழர்கள் விழிப்பாகவும் சரியான நிலைப்பாடு
கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். முன்னரே இருந்த இரண்டகர் ஐவரோடு தொடரும்
பட்டியலில் புதிதாக இன்னும் சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும்
சேர்ந்து கொண்டார்கள். படை வலிமையை தோற்கடித்ததை விட இலகுவாகவே எஞ்சிய
அரசியல் பலத்தை, இன ஒற்றுமைமை தோற்கடிக்கலாம் - கூறுபோடலாம் என ஆளும் தரப்பு
கருதுகின்றது. அதற்கு ஏற்றாற்போல் மக்களின் நலனுக்காக செயற்படுகின்றோம் என
கூறிக்கொள்ளும் சுயநலன் மிக்க, இனம் பற்றிய சிந்தனையற்ற, தம்மை வளர்ப்பதில்
குறியாகவுள்ள குறுகிய நோக்கமுடைய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தற்போதைய
ஆட்சியாளரை வலுப்படுத்துகின்ற அபாய நிலையை தோற்றுவித்துள்ளனர்.
எஞ்சி இருக்கும் தமிழர் பலத்தை கூறு போடும் வகையிலும் இனத்தை
விற்று பிழைக்கும் வகையிலும் நடந்து கொள்ளும் இவர்கள், தமிழரின் படை பலம்
உயிர்ப்போடு இருந்த வேளை, தமிழ் தேசியத்திற்காகவும் இனத்திற்காகவும்
உழைப்பவர் போல காட்டிக் கொண்டவர்கள். இன்று இனத்தைக் காட்டிக்
கொடுக்கின்றார்கள். இப்படிப் பட்ட இவர்கள், உயிர்ப்போடு இருக்கும் வரை
இருந்து விட்டு இறப்போடு கலையும் உண்ணி போன்றவர்கள். ஏனைய அடிவருடிகள் போலவே
இவர்களும் மக்கள் நலன் என அதிகம் அலட்டிக் கொள்வது அவர்களின் சுயநலன்
சார்ந்தது தவிர வேறு ஒன்றுமில்லை. கோடரிக் காம்புகளின் தோற்றம் தமிழருக்கு
புதியவையும் அல்ல. காலம் காலமாக அவ்வப்போது இருந்து வந்தது ஒன்றே.
இந்நிலையில் இவர்கள் பற்றி கவலைப்பட்டு காலத்தை போக்காது எதை, எப்படி,
எப்போது செய்ய வேண்டும் என்பதை இப்போதே ஒவ்வொரு தமிழரும் தீர்மானித்து
செயலாற்ற வேண்டும்.
நடைபெற இருக்கும் அரச தலைவருக்கான தேர்தலில் தென்னிலங்கையில்
போர் வெற்றியை முன் நிறுத்தி களமிறங்கியிருக்கும் முதன்மை வேட்பாளர்கள்
இருவரிடையேயும் பலத்த கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்ற
நிலையில், அடுத்த அரச தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தி தமிழரின்
வாக்குகளிலேயே தங்கியிருக்கின்றது. இதனால் முதன்மை வேட்பாளர் இருவரும்
தமிழரின் வாக்குகளை தம்பக்கம் கவர்ந்து கொள்ள பல வியூகங்களை வகுக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய ஆட்சியாளர் மகிந்தவும் அவர்
சார்பானவர்களும் முடிந்த அளவு தமிழர் வாக்குகளை தமதாக்கி கொள்வது அல்லது
தமிழர் வாக்குகள் தமக்கு கிடைக்காவிட்டாலும் அவை முதன்மை எதிர் வேட்பாளர்
சரத் பொன்சேகாவுக்கு சேரவிடாது தடுப்பது எனும் நிலைப்பாட்டில்
திடமாகவுள்ளனர். இதன் அடிப்படையில் தமிழர் வாக்குகள் எல்லாம் சரத்
பொன்சேகாவுக்கு விழுந்து விடுமோ என்ற ஐயத்தில்தான், அதனை தடுத்து தமிழர்
வாக்குகளை பிளவு படுத்தும் நோக்கிலேயே சுயேட்சையாக சிவாஜிலிங்கம்
நிறுத்தப்பட்டார் - இதன் பின்னணியில் தற்போதைய இலங்கை அரசாங்கமும்
இந்தியாவும் இருப்பதாகவும் அவர் விலை போனவர் எனவும் அரசியல் ஆய்வாளர்கள்
கருதுகின்றனர்.
தமிழருக்கான முறையான தீர்வை பற்றி குறிப்பிடாத எந்த முதன்மை
வேட்பாளருக்கும் 50 சதவீத வாக்குகள் சென்றடைவதை தடுக்கும் வகையில்
போட்டியிடுவதாக கூறி தமிழ் உணர்வாளர் போல காட்ட முனையும் சிவாஜிலிங்கத்தின்
உள்ளார்ந்த நோக்கம் எதுவாக இருந்தாலும் இவரின் நிலைப்பாடு தமிழரை
பலவீனப்படுத்தி பிரித்தாள நினைக்கும் எதிரிக்கு சார்பானது. ஒர் பொது எதிரியை
தோற்கடிப்பதற்காக, காலத்தின் கடமையை நிறைவேற்றுவதற்காக, நடைமுறைக்கு ஏற்ற
வகையில் தமிழர் தரப்பு ஒருமித்து எடுக்க வேண்டிய முடிவால் சிவாஜிலிங்கம்
ஐயாவையும் புறம்தள்ளவேண்டியது என்பது கவலை தருகின்ற ஆனால்
தவிர்க்கமுடியாததொன்றாகும். இன்றைய ஆட்சியாளருக்கு முண்டு கொடுக்கப்
போவதில்லை என்றால், தமிழரை கூறுபோடும் சக்திகளுக்கு இடமளிக்கப் போவதில்லை
என்றால், கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்திய ஆட்சியாளரை மாற்றியமைக்க
நினைத்தால் சிவாஜிலிங்கம் இதனை விளங்கி விலகிக் கொள்வது அவருக்கும்
அனைவருக்கும் நல்லது.
குடும்பத்திற்கு சொத்துக்களை பெருக்கிக்
கொண்டிருக்கின்றார்கள் - நாட்டைச் சூறையாடி விட்டார்கள் - நாடோ சகோதரரின்
இரும்பு பிடிக்குள் சிக்கி தவிக்கின்றது இந்நிலையை மாற்றியமைப்பதற்கு, நாட்டை
சீரழிப்பவரை வீட்டுக்கு அனுப்ப, ஒரு மீட்பர் வரமாட்டாரா என ஏங்கித் தவித்துக்
கொண்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில், இன்றைய சூழ்நிலையில் இதற்கு
பொருத்தமானவர் சரத் பொன்சேகா என கருதுகின்றனர். தற்போதைய ஆட்சியாளரின்
தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் அன்றாடம் அதிகமாக அவதிப்பட்டு
கொண்டிருக்கும் தமிழ்மக்கள் ஒரு புறமிருக்க வாழ்வாதார பொருளாதார
சிக்கல்களாலும் கட்டுக்கடங்காது பெருகிவிட்ட ஊழல், மோசடிகளாலும் இன வேறுபாடு
இன்றி ஒட்டுமொத்த இலங்கையில் வாழ்கின்ற அனைவரும் அல்லற்பட்டு
அவதிப்படுகின்றனர். இவற்றில் இருந்து விடுபட்டுக் கொள்ள, ஆட்சிமாற்றத்தின்
தேவையை உணர்ந்த இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் இத் தேர்தலை பயன்படுத்திக்
கொள்வார்கள் என நம்பப்படுகின்றது.
போரை முடித்த பயங்கரவாதத்தை ஒழித்த நாயகன் என சிங்கள
மக்களிடையே தம்பட்டம் போடும் தற்போதைய ஆட்சியாளர் அதனை காப்பாக வைத்து சிங்கள
மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி விடலாம் என கருதும் நிலையில் இது தொடர்ந்தும்
வாழ்வாதார- பொருளாதார சிக்கல்களாலும் தொடர்பு வறுமையாலும்
வாடிக்கொண்டிருக்கும் மக்களிடையே எவ்வளவு தூரம் எடுபடும் என்பது ஐயமானதே.
சிங்கள மக்களிடையே ஆட்சியாளர் தொடர்பாக தோன்றியிருக்கும் எதிர்
அதிர்வலைகளினால் ஆட்சியாளரின் வேடம் அடிபட்டு போகும் நிலை காணப்படுகின்றது.
இவ்வாறாக பல்வேறுபட்ட காரணங்களுக்காக இலங்கையில் ஒவ்வொருவருக்கும்
ஆட்சிமாற்றம் அவசியமாகின்ற, தேவைப்படுகின்ற நிலையில் தமிழர் தரப்பு என்ற
வகையிலும் இவ் ஆட்சியாளரை மாற்றி அமைத்து ஆக வேண்டிய கடப்பாட்டில் தமிழர்கள்
காணப்படுகின்றனர்.
ஒர் ஆட்சிமாற்றத்தின் ஊடாகவே ஆட்சியாளர் செய்த போர்க்
குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மோசடிகள், ஊழல்கள், உள்வீட்டு இரகசியங்கள்
சிறிதளவு ஏனும் வெளிவர வாய்ப்பு இருக்கின்றது. கோரப்பிடியில் இருந்து விடுபட
அல்லது கோரப்பிடியின் தளர்வுக்காவது தமிழர்களுக்கு உடனடியான ஆட்சி மாற்றம்
வேண்டப்படுகின்றது. தமிழரின் மாறுபட்ட முடிவுகளால் தற்போதைய ஆட்சியாளர்
மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுமாயின்
தமிழர்கள் கொள்கை அற்றவர்கள் வெறும் ஏமாளிகள் என்னும் எதிரியின் எண்ணத்தை
வலுப்படுத்தும் என்பதோடு தமிழரின் தனித்துவத்தை இருப்பை
கேள்விக்குறியாக்கும்.
இதே வேளை பெரும்பாலான இலங்கையருக்குமே ஆட்சி மாற்றம்
வேண்டப்படும் நிலையில் இவ்விடயம் தொடர்பாக பல்வேறு காரணங்களுக்கமைவாக உலக
நாடுகளும் குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் புதிய திருப்பம் ஏற்பட
வேண்டும் என கூடிய கவனம் செலுத்துகின்றன. இலங்கையில் ஒவ்வொருவரும் உலக
நடைமுறை ஒழுங்குக்கு அமையவும் நாட்டில் நிலவும் மோசமான சீர்கேடு, சீரழிவுகளை
சீர்செய்யவும் ஆட்சி மாற்றத்திற்காக, சாத்தியமான, சார்பளவில் பொருத்தமானவராக
உள்ள சரத் பொனசேகாவை தெரிவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.
இனப்பேரழிவை நிகழ்த்தியவனுக்கு, சொத்துகளை சூறையாடியவனுக்கு
இனத்தை பிளவுபடுத்தி பிரித்தாள நினைப்பவனுக்கு பாடம் புகட்டவேண்டிய
தமிழர்கள், தமிழன் - சிந்தனையுள்ள மனிதன் என்ற நிலைப்பாட்டில் ஆவது இனத்தின்
பொது எதிரியை காலத்தின் கட்டாயத்திற்காக தோற்கடிக்க வேண்டிய வரலாற்றுக்
கடமையை ஏற்று நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளனர்.
தற்போதைய ஆட்சியாளரை ஆதாரித்து அனுமதி கொடுக்க
முனைவர்களின் செயற்பாடு தாயை, தாயகத்தை சீரழித்தனுக்கு மாலை போட்டு
வரவேற்பதற்கு சமனானதாகும். அவர்கள் பெற்ற தாயை விற்று பிழைப்பவர்கள். எனவே
வரலாற்றுக் கடமையாக காலத்தின் கட்டாயமாகவுள்ள, உடனடித் தேவையாக உள்ள ஆட்சி
மாற்றத்தை கொண்டுவர, இனத்தின் முதல் பெரும் எதிரியை தோற்கடிக்க ஒன்றிணைந்து
செயற்பட வேண்டியவர்களாக, விரும்பியோ விரும்பாமலோ சரத் பொன்சேகாவின் வெற்றியை
உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்புடையவர்களாக தமிழர்கள் காணப்படுகின்றனர்.
தேர்தல் ஊடாக இன்றைய ஆட்சியாளருக்கும் அவர்களின்
அடிவருடிகளுக்கும் தமிழர்கள் கொடுக்கவிருக்கும் தகுந்த பதிலடியானது தமிழர்களை
சீரழிக்க துணைபோன-சிதைத்து சீரழித்த பிறநாட்டு சக்திகளுக்கும் குறிப்பாக
அண்டைய நாடுகளுக்கும்; தகுந்த படிப்பினையாக இருக்கும். தமிழருக்கு உள்ள
தார்மீக பொறுப்பை, கடமையை தவறவிடாது, ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு இடமளியாது,
தமிழர் பலத்தை - தேசிய ஒருமைபாட்டை அந்நிய சக்திகளுக்கும் அவர்களின்
அடிவருடிகளுக்கும் தெரியப்படுத்தும் வகையிலும் தேர்தலை தமிழ்மக்கள் சரியான
முறையில் பயன்படுத்த வேண்டும்.
இன்று இலங்கை அரசியலை, ஆட்சியாளரை தீர்மானிப்பவர்கள்
தமிழர்கள் என்பதையும் ஆட்சியாளரின் அரசியல் இருப்பும் கூட தமிழர் கைகளில்தான்
உள்ளது என்பதையும் சிங்களத் தலைமைகளுக்கு உணர்த்த வேண்டியவர்களாக தமிழர்கள்
காணப்படுகின்றனர். இது எந்த சிங்கள ஆட்சியாளருக்கும் பேரடியாகவும்
தலையிடியாகவும் இருக்கும் என்பது மட்டுமல்ல குறைந்த அளவு அவர்களின்
தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை வரையறை செய்யவும் தமிழரின் பேரம் பேசும்
அரசியல் பலத்தை வலுப்படுத்தவும் வாய்ப்பாக இருக்கும். தமிழரை பலிக்கடாவாக்கி,
பலவீனப்படுத்தி பிரித்தாள நினைக்கும் சக்திகளுக்கு எதிராக தமிழர் ஒருமித்து
சொல்லவிருக்கும் செய்தி, வேண்டியதெல்லாம் ஆடிவிட்டு, நினைத்ததெல்லாம் செய்து
விட்டு தமிழரை இலகுவில் ஏமாற்றி விடலாம் என நினைப்பவர்களுக்கு தகுந்த பாடமாக
அமையும் என்பது மட்டுமல்ல வரவிருக்கும் புதிய ஆட்சியாளருக்கு முன்கூட்டியே
விடப்படும் எச்சரிக்கையாகவும் இருக்கும்.
நடைபெறவிருக்கும் இலங்கை அரச தலைவருக்கான தேர்தலில் பொது
எதிரிக்கு, இன்றைய ஆட்சியாளருக்கு தமிழர் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்
என்பது தன்மானமிக்க தமிழரின் உயிர்த் தாகம் மட்டுமல்ல தமிழர் தாயகத்துகாக, இன
விடுதலைக்காக போராடி உயிர் விட்ட அனைவருக்கும் தமிழர் என்ற அடிப்படையில்
செய்யும் மிகக்குறைந்த அளவிலான நன்றி தெரிவிப்பாகவும் அமையும்.
தாயகத்திலிருந்து நிலவன்
பொறுத்த நேரத்தில் இந்தச்
செய்தியை வெளியிட்ட உதயன் ஏட்டுக்கு நன்றி. தாங்களும் குழம்பி மற்றவர்களையும்
குழப்பும் த.தே. கூ நா.உறுப்பினர்கள் இனியாவது தெளிவு பெறுவார்கள் என
நம்புகிறேன்.
நீதியரசர் விக்னேஸ்வரனின் அறிவுரை
ஆயிரம் கோடி பெறும். இதையேதான் நான் தொடக்க முதல் சொல்லி வருகிறேன்.
சிவாஜிலிங்கத்துக்கு உணர்வு இருக்கிற அளவுக்கு இராசதந்திரம் இல்லை.
2005 ஆம் ஆண்டு தேர்தல் புறக்கணிப்பு வி.புலிகள் இராணுவ
சமபலத்தோடு இருந்த போது எடுக்கப்பட்டது. இப்போது இராணுவமே இல்லை.
இருக்கிற ஒரே பலம் மக்கள் கையில் உள்ள வாக்குச் சீட்டுத்தான்! அதனை நாம்
சாணக்கியத்தோடு பயன்படுத்த வேண்டும். முதலில் இப்போதுள்ள சிங்கள - பவுத்த
வெறிபிடித்த மகிந்த இராசபக்சேயின் கொடிய அரசை அகற்றுவோம். அத்தோடு சிங்கள
அரசுக்கு தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து அதற்குச் சம்பளமாக அற்ப
சலுகைகளுக்கு கையேந்தி, வாய்பொத்தி சேவகம் செய்யும் எட்டப்பர்களையும்
வீழ்த்துவோம். மிச்சத்தைப் பின்னர் பார்ப்போம்.
நக்கீரன்
தமிழ் வேட்பாளர் அல்லது பகிஷ்கரிப்பு; இரண்டுமே
தமிழருக்கு பயன்தர மாட்டா: முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து
[ திங்கட்கிழமை, 28 டிசெம்பர் 2009, 02:06.45 AM GMT +05:30 ]
ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதோ அல்லது பகிஷ்கரிப்பதோ தமிழர்களுக்கு
எந்தப் பயனையும் தரா. அப்படி நாங்கள் தமிழர் ஒருவனுக்கு வாக்களித்தாலோ அல்லது
பகிஷ்கரித்தாலோ அது எங்கள் ஜனநாயக உரித்தை நாங்களே விட்டுக் கொடுத்தவர்களாக
அமைந்துவிடும். என்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப்
பேசுவதை நிறுத்த வேண்டும். கூட்டமைப்பை வழிநடத்தும் ஒருவரின் வழி காட்டலுக்கே
முதலிடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்திச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்
உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.
மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகம் சென்றிருந்த அவர் சில தினங்களுக்கு முன்னர் நாடு
திரும்பியிருந்தார். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது
வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து முன்னர் பேசப்பட்டபோது, அதற்கு நீதியரசர்
விக்னேஸ்வரனின் பெயரும் சில தரப்புகளால் சிபார்சு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இத்தேர்தல் தொடர்பில் அவரது நிலைப்பாட்டை அவரை உதயன்
தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை
வருமாறு:
தமிழர்கள் இன்று தமது அரசியல் தலைமைத்துவத்தை இழந்து நிற்கின்றார்களோ என்று எண்ணத்
தோன்றியுள்ளது. தனிப்பட்ட மனிதர்களின் சுயநலம் மேலோங்கி, அவர்களின் பொறுப்பற்ற
வார்த்தைகளினால் தமிழ் மக்களின் மனங்கள் கலக்கத்திலும் குழப்பத்திலும்
நீந்திக்கொண்டிருக்கின்றன.
நான் அண்மையில் இந்தியாவில் இருந்தபோது வெளிநாட்டில் இருந்து சில
அன்பர்கள் என்னுடன் தொடர்புகொண்டு, தமிழ் மக்கள் சார்பில் இந்த ஜனாதிபதித்
தேர்தலில் நான் நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நான்கூறிய பதில்
இதுதான்:
1. ஒரு தமிழ் மகன் தனித்துவமாக ஜனாதிபதித் தேர்தலில் நின்று,
எல்லாத் தமிழ்ப் பேசும் மக்களும் அவருக்கு வாக்களித்தாலும் கூட எந்த நன்மையும்
எமக்குக் கிட்டப் போவதில்லை. முக்கியமான இருவரில் ஒருவர்தான் பதவிக்கு
வரப்போகின்றார். தனக்கு விரும்பியதைத்தான் அவர் செய்யப் போகின்றார்.
2. நாங்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தாலும் அதே நிலைதான்.
3. இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின்
கையாலாகாத் தன்மையையே வெளிக்காட்டும். மேலும் தங்களின் ஜனநாயக உரித்தை அவர்கள்
உணர்ந்துகொள்ளவில்லை என்பதையும் அது எடுத்துக்காட்டும்.
4. இதுவரை காலமும் தேர்தல்களில் தமிழ் மகன் ஒருவரை நிறுத்துவது,
தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பன போன்ற காரியங்கள், தமிழ் மக்களின் பின்னணியில்
ஆயுதம் தாங்கியோர் உறுதுணையாக இருக்கின்றனர் என்ற எண்ணத்தில், தமது தனித்துவத்தைக்
காட்டும் விதத்தில் நடைபெற்றிருக்கலாம். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கும்
இந்த நிலையில் அதே வழிமுறைகளைப் பின்பற்றுதல் சரிதானா என்று யோசிக்க வேண்டும்.
5. இந்த நிலையில் பதவிக்கு வர எத்தனிக்கும் இருவரையும் சந்தித்துத்
தமிழ் மக்களுக்கு அவர்களிடமிருந்து பெற்றுக் கொடுக்கக்கூடிய ஆகக்கூடிய நன்மைகள்
என்னவென்பதை ஆராய்ந்து பார்ப்பதே சிறந்தது.
இப்படி நான் அவர்களுக்குப் பதில் கூறினேன்.
இன்று இதைத் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உணர்ந்து செய்வதையிட்டு
மகிழ்வுறுகிறேன். இருவரிடமும் பேசிப் பார்த்து எவ்வாறு தமிழ் மக்கள் வாக்களிக்க
வேண்டும் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தியம்ப வேண்டும்.
கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசுவதை நிறுத்தவேண்டும்.
கூட்டமைப்பை வழிநடத்தும் ஒருவரின் வழிகாட்டலுக்கே முதலிடம் கொடுக்கவேண்டும். ஒன்று
மட்டும் நிச்சயம். நாங்கள் தமிழ் மகன் ஒருவருக்கு வாக்களித்தாலோ, தேர்தலைப்
பகிஷ்கரித்தாலோ எங்கள் ஜனநாயக உரித்தை நாங்கள் விட்டுக் கொடுத்தவர்களாகவே அது
அமையும்.
எங்கள் கைகளில் "வாக்கு" என்ற பலத்த ஆயுதம் ஒன்று இருப்பதை நாங்கள்
மறத்தலாகாது. சௌமியமூர்த்தி தொண்டமான் மலைநாட்டுத் தமிழ்ச் சகோதர, சகோதரிகளை
வழிநடத்தியபோது "வேலை நிறுத்தம்" என்ற பாரிய ஆயுதத்தைப் பாவித்தார். முஸ்லிம்
சகோதரர்கள் தங்கள் உரித்துகளைப் பெற்றெடுக்க மத ரீதியாகத் தமக்கு உதவி செய்யக்கூடிய
நாடுகள் இருப்பதை ஒரு ஆயுதமாகவே பாவித்தனர்.
ஆனால் இலங்கைத்
தமிழ் மக்கள் ஆயுதத்தில் நம்பிக்கை வைத்து இன்று செய்வதறியாது இருக்கின்றனர்.
அப்படி இருப்பினும், தமிழ் மக்கள் எல்லா ஆயுதங்களையும் இழந்த நிலையில்
இருக்கின்றார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிடக் கூடாது. ஜனநாயக ரீதியில்
பார்த்தால் தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமை ஒரு பெரிய ஆயுதம்.
உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோமானால் வரும் "பொதுத் தேர்தலில்" இரு
பெரிய கட்சிகளும் கிட்டத்தட்ட சமபலம் பெற்றிருந்தால் அவர்களில் தமிழ் மக்கள் யாரை
ஆதரிக்கின்றார்களோ அவர்களே அரசு அமைக்கத் தமிழ் மக்கள் உதவுவர். சென்ற தடவை 22 பேர்
நாடாளுமன்றுக்குத் தெரிவானார்கள். இம்முறை அந்த ஒற்றுமையை நாம் இழந்து விடுவோமானால்
எங்களின் ஒரே ஆயுதத்தையும் நாங்களே விட்டெறிந்த நிலைக்கு வந்துவிடுவோம்.
தமிழ் மக்களின்
ஒற்றுமை இந்த நாட்டின் ஜாதகத்தைக் கணிக்க உதவும். பதவியில் இருக்கும் ஒருவரைக் கீழே
இறக்கவும், இன்னொருவரை மேலே ஏற்றவும் தமிழ்ப் பேசும் மக்களால் முடியும் என்பதைச்
சிலர் அறிந்திருக்கின்றபடியால், தமிழ்ப் பேசும் மக்களிடையே வேற்றுமைகளை விதைக்க
அவர்கள் பாடுபடுகின்றனர். எங்களின் வேற்றுமைகள் அவர்களுக்கு உதவும். எங்கள் ஒற்றுமை
எங்களுக்கு உதவும். இவ்வளவுதான் என்னால் கூறமுடியும். என்றார் நீதியரசர் ஸி.வி.
விக்னேஸ்வரன்.
ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கு தமிழ்க்காங்கிரஸ் நேற்றுத்
தீர்மானம்
[ திங்கட்கிழமை, 28 டிசெம்பர் 2009, 02:16.24 AM GMT +05:30 ]
எதிர்வரும்
ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைப்பதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி முடிவு
செய்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்க் காங்கிரஸ்
கட்சி, கூட்டமைப்பு இவ்விடயத்தில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் தனது
முடிவை நேற்று எடுத்தது.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் விசேட பொதுக்
குழுக்கூட்டம் நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள கட்சியின்
அலுவலகத்தில் கட்சியின் தலைவர் அ.விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. சுமார்
எழுபத்தியைந்து பேர் வரை அங்கு பிரசன்னமாகி யிருந்தனர்.
இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான விளக்கங்கள், வியாக்கியானங்களை
விவரிக்கும் அறிக்கை ஒன்றைக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு வாசித்தார்.
அந்த அறிக்கை பிரேரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று
தேர்தலைப் பகிஷ்கரிக்கும் முடிவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுக்கும் என
எதிர்பார்க்கப்படுவதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டதாக அறியவந்தது.
எனினும், தேர்தலைப் பகிஷ்கரிக்கும் முடிவுக்குத் தனிப்பட்ட முறையில்
கட்சித் தலைவர் அ.விநாயகமூர்த்தி உடன்படவில்லை என்றும் தெரியவருகின்றது.
எவ்வாறெனினும் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்
விருப்பத்துக்கு அமைய பகிஷ்கரிப்பு முடிவு எடுக்கப்பட்டதாகவும் கட்சி வட்டாரங்கள்
மூலம் அறியவந்தது.
இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசுக்குத் தமிழ்மக்கள் வாக்களிப்பு?
இரண்டு ஆண்டுகாலம் பதவியில் நீடிக்கச் சட்டப்படி வாய்ப்பிருந்தும் ஆட்சி;த்தலைவர்
மகிந்தா இராசபச்சே ஆட்சித்தலைவருக்கான தேர்தலை முன்கூட்டி நடத்த முடிவு
செய்துள்ளார்.
தேர்தலுக்கான வேட்பு மனு இம் மாதம் 16 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்
எதிர்வரும் சனவரி 26 இல் நடைபெற இருக்கிறது.
ஆட்சித்தலைவர் தேர்தலை இரண்டு ஆண்டுகாலம் கழித்து நடத்தாமல் இப்போது இராசபக்சே
நடத்துவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியை வாக்குகளாக மாற்றி அதனை அறுவடை
செய்யலாம் என மகிந்தா இராசபக்சே நினைக்கிறார்.
விடுதலைப் புலிகளைப் போரில் அழித்தொழித்த காரணத்தால் இராசபக்சே சிங்கள மக்களிடம்
தான் ஒரு நவீன துட்ட கைமுனு என்ற மிதப்போடு வலம் வருகிறார். அரச சார்பு ஊடகங்களும்
அரசு கட்டுப்பாடு ஊடகங்களும் இராசபக்சேயை அப்படித்தான் வருணிக்கின்றன. அவர்தான்
நாட்டின் அரசன் என்றுகூட சில ஊடகங்கள் புகழாரம் சூட்டி மகிழ்கின்றன.
மூன்று சகாப்தங்களுக்கும் மேலான பயங்கரவாதத்தை முறியடித்த சிங்கள பவுத்த வீரர்
என்ற முறையில் மகிந்த இராசபக்சே மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் தேர்தலில்
வெற்றிவாகை சூட வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணம் நீங்கலாக
சிங்கள மாகாணங்களில் மகிந்த இராசபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரு
வெற்றி பெற்றிருக்கிறது.
அய்க்கிய தேசியக் கட்சியின் கோட்டை என ஒரு காலத்தில் கருதப்பட்ட மேல்மாகாணத்திலும்
அய்க்கிய மக்கள் சுதந்தி;ர முன்னணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இராசபக்சேயின் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த வெற்றி முன்னாள் இராணுவ தளபதி
சரத் பொன்சேகாவின் அரசியல் வருகையால் கைக்கு எட்டாத தூரத்திற்குப் போயிருக்கிறது.
இராசபக்சேயும் சரத் பொன்சேகாவும் ஆளை ஆள் சரமாரியாக விமர்ச்சிக்கத்
தொடங்கியுள்ளார்கள்.
நேற்றைய கதாநாயகர்கள் இன்றைய துரோகிகளாக மாறுகிறார்கள்
("Yesterday's heroes are today's
traitors") என சரத் பொன்சேகாவை இராசபக்சே சாடியுள்ளார்.
ஒரு இராணுவப் புரட்சி மூலம் தனது ஆட்சியைக் கவிழ்க்க பொன்சேகா திட்டம் தீட்டினார்
என்று இராசபச்சே குற்றம் சாட்டினார். இராணுவப் புரட்சியா? அப்படியொன்றும் இல்லை,
இது வெறும் புரளி என்றார் பொன்சேகா.
சரத் பொன்சேகா தான் ஒருபோதும் தோல்வியைக் கண்டிராத ஒரு இராணுவ தளபதி என்று
மார்தட்டுகிறார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தன்னை
உலகிலேயே சிறந்த இராணுவ தளபதி என்று குறிப்பிட்டிருந்ததாகவும் பொன்சேகா கூறுகிறார்.
இல்லை அவர் இதற்கு முன்னர் வி.புலிகளுக்கு எதிரான போரில் பல களமுனைகளில் தோல்வி
கண்டவர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சே ஏளனம் செய்கிறார்.
முகமாலைப் போர்முனையில் வி.புலிகளுக்கு எதிராக மூன்று முறை படையெடுத்து மூன்று
முறையும் தோல்வி கண்டவர் என்றும் 500 சிங்கள இராணுவத்தினரைப் பலி கொடுத்தவர்
என்றும் அவர் ஒரு இராணுவ மேதாவி என்றோ யுத்த கதாநாயகன் என்றோ உரிமை கோர முடியாது
என்று கோத்தபாய இராசபக்சே கூறுகிறார்.
ஆட்சித்தலைவி சந்திரிகா குமாரதுங்காவுக்கு 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வி.
புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த 40,000 சிங்கள இராணுவத்தினரை திருப்பி
எடுக்குமாறு பரிந்துரை செய்தவர்களில் பொன்சேகாவும் ஒருவர் என்ற குற்றசாட்டும்
பொன்சேகா மீது வீசப்படுகிறது.
இப்படி மாறி மாறி இராசபக்சேயும் பொன்சேகாவும் ஆளுக்கு ஆள் சேற்றை வாரி
இறைக்கிறார்கள்.
மகிந்த இராபக்சேயைப் பொறுத்தளவில் தன்பக்கம் நிற்காத அனைவருமே துரோகிகள் என்பது
அவரது சிந்தனையாகும்.
போர்க்காலத்தில் தோளோடு தோள் நின்று போர்க்கள வெற்றியை வெடிகொளுத்தி நாடு முழுதும்
பறையறைந்து கொண்டாடிய இந்த இரண்டு போர்க் கதாநாயகர் களும் எப்படி பரம எதிரிகளாக
மாறினார்கள்?
எல்லாம் போர்க்கள வெற்றிக்கு யார் காரணம்? அந்தப் பெருமை யாருக்கு உரியது? என்ற
சண்டைதான்.
போர் வெற்றிக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவா அல்லது அரசியல் தலைவர் மகிந்தா
இராசபச்சேயா என்பதில்தான் சண்டை! இந்தச் சண்டை குழாயடிச் சண்டையாக இன்று
மாறியிருக்கிறது. அது கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கிறது!
எது எப்படியிருப்பினும் மகிந்த இராசபச்சே சரி, சரத் பொன்சேகா சரி இருவருமே
தமிழ்மக்களைப் பொறுத்தளவில் கொலைகாரர்களே! முன்னவர் வன்னி மக்களை கொல்லச் சொன்னார்,
பின்னவர் அவர்களைக் கொன்று முடித்தார்.
போர் முடிந்த பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகளை
ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சரத் பொன்சேகா வெளிப்படையாகவே
பயமுறுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ்மக்கள் யாரை ஆதரிப்பது என்ற கேள்வி எழுகிறது. தமிழ்மக்களின்
அழிவுக்குக் காரணமாக இருந்தவரும் இருந்து வருபவருமான மகிந்த இராசபக்சேக்கு
வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. எனவே அவருக்கு எதிராக தமிழ்மக்கள்
வாக்களிக்க வேண்டும் என்பதில் இருவித கருத்துக்கு இடமில்லை. அப்படியென்றால்
தமிழ்மக்கள் அடுத்து யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி எழுகிறது. அவர்கள்
முன்னுள்ள தேர்வு என்ன?
(1) இரண்டும் பிசாசுகள் அல்லது பாம்புகள் அல்லது கொள்ளிக் கட்டைகள் இதில் நல்லது
கெட்டது என்ற ஆராயாமல் தேர்தலைப் புறக்கணிப்பது.
(2) தமிழ்மக்களின் முக்கிய எதிரியான இராசபக்சேயை வீழ்த்த பொன்சேகாவுக்கு
வாக்களிப்பது.
(3) தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் இரா.சம்பந்தனை தேர்தலில் போட்டியிட வைப்பது.
(4) இரா.சம்பந்தனை ஆதரித்து வாக்களிக்கும் தமிழ் வாக்காளர்கள் விருப்பு வாக்கை
இராசபக்சே இரண்டாவது சுற்றில் வெற்றிபெறுவதைத் தடுக்கும் பொருட்டு பொன்சேகாவுக்கு
அளிப்பது.
இதை எழுதிக் கொண்டிருக்கும் போது சம்பந்தனை தேர்தலில் போட்டியிட நிறுத்துவதா
இல்லையா என்பது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் கூடி ஆராய்ந்து
கொண்டிருக்கிறது. முடிவு அறிவிக்கப்படவில்லை.
தேர்தலில் மகிந்தா இராசபக்சே 50 விழுக்காட்டுக்கு மேலான வாக்குகளைப் பெற்றால்
தமிழ்மக்கள் பொன்சேகாவுக்குப் போட்டாலும் சரி சம்பந்தனுக்குப் போராட்டாலும் சரி
தேர்தல் முடிவில் மாற்றம் இருக்காது.
தேர்தலில் இராசபக்சேயும் பொன்சேகாவும் 50 விழுக்காட்டுக்குக் குறைவான வாக்குகளைப்
பெற்றால் மட்டுமே சம்பந்தனுக்குப் போட்ட வாக்குகள் முதல் சுற்றில் பொன்சாகாவின்
வெற்றியைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
இந்தத் தேர்தல் 2008 இல் எடுத்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடைபெறுகிறது.
அதன்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 14,088,500 ஆகும். இதில் இன்று குறைந்த பட்ச
தமிழ்வாக்களர்களது (வடகிழக்கு, மலையகம், மேல்மாகாணம் உட்பட முழு இலங்கையிலும்)
விழுக்காடு 15 என எடுத்துக்கொள்ளலாம்.
(1981 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணிப்பின் படி இலங்கைத் தமிழர் 12.71 மலையகத்தமிழர்
5.51 (1971 - 9.26) மொத்தம் 18.22 விழுக்காடு).
மொத்தம் 14 மில்லியன் வாக்குகளில் 65 விழுக்காட்டினரே தேர்தலில் கலந்து கொள்வார்கள்
என்று எடுத்துக் கொண்டால் 8.1 மில்லியன் வாக்காளர்களே தேர்தலில் கலந்து கொண்டு
வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் 15 விழுக்காடு வாக்குகளின் தொகை 1.22 மில்லியன்
(12.2 இலட்சம்) ஆகும்.
தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமையலாம் என ஒரு எதிர்வு கூறலாம்.
மகிந்த இராசபக்சே - 47 விழுக்காடு
சரத் பொன்சேகா - 45 விழுக்காடு
இரா. சம்பந்தன் - 7 விழுக்காடு
மற்றவர்கள் - 1 விழுக்காடு
இப்படியான முடிவு இரா. சம்பந்தனுக்கு போட்ட வாக்குகள் பொன்சேகாவின் வெற்றியைப்
பாதித்து விட்டது என்பது சரியாயாகி விடும். சம்பந்தன் கேட்காது இருந்திருந்தால்
பொன்சேகா 52 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதல் சுற்றிலேயே வெற்றி பெற்றிருப்பார்
என்று எண்ணத் தோன்றும்.
ஆனால் கதை இதோடு முடிந்து விடாது. எந்த வேட்பாளருக்கும் 50 + விழுக்காடு வாக்குகள்
கிடைக்காத பட்சத்தில் வெற்றி தோல்வி முதல் இரண்டு வேட்பாளருக்கும் கிடைத்த விருப்பு
வாக்குகளின் எண்ணிக்கையே முடிவு செய்யும். அதாவது தேர்தலில் ஒருவர் இரண்டு
வாக்குகளைப் போடமுடியும். இரா. சம்பந்தருக்குப் போட்ட 7 விழுக்காடு (மொத்த
தமிழ்வாக்களர்களது வாக்குகளில் பாதி) வாக்காளர் தங்களது விருப்பு வாக்குகளை
பொன்சேகாவுக்கு போட்டிருந்தால் அவர் வெற்றிபெறுவார். ஆனால் இதிலும் ஒரு சிக்கல்.
சிங்கள வாக்காளர்களது விருப்பு வாக்குகள் யாருக்கு அதிகம் என்பதில் இருந்தே இறுதி
வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும்.
இரா.சம்பந்தனை வேட்பாளராக நிறுத்துவதால் தமிழர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
(1) தமிழ்மக்கள் சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட இனம் என்பதையம் அவர்களது அரசியல்
வேட்கை வேறு என்பதையும் உலகுக்கு எடுத்துக் காட்டலாம்.
(2) அனைத்துலக நாடுகளுக்கு போர் முடிந்தாலும் தமிழர்களது அரசியல் போராட்டம்
தொடர்கிறது என்பதை எடுத்துக் காட்டலாம்.
(3) தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை மீண்டும்
வலியுறுத்தி அதற்கு வலுச் சேர்க்கலாம்.
(4) 2010 ஏப்ரில் மாதத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கு
இந்தத் தேர்தல் முன்னோடியாக அமையலாம்.
(5) இபிடிபி டக்லஸ் தேவானந்தா, புளட் சித்தார்த்தன், கருணா, பிள்ளையான், ஆறுமுகன்
தொண்டமான், சந்திரசேகரன, ஆனந்தசங்கரி போன்றோரை தமிழ்மக்களை சிங்களவர்களுக்குக்
காட்டிக் கொடுக்கும் அல்லது கூட்டிக் கொடுக்கும் அற்ப சலுகைகளுக்காக முழங்காலில்
கையேந்தி நிற்கும் எட்டப்பர்கள், காக்கைவன்னியர்கள் எனச் சித்திரித்துக் காட்டி
கொடுங்கோலன் இராசபக்சேக்கு அவர்கள் வழங்க இருக்கும் நிபந்தனையற்ற ஆதரவை
மழுங்கடிக்கலாம்.
(6) தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் வேட்கைகளுக்குத் தீர்வு காண்பதற்கான எந்தத்
திட்டமும் இராசபக்சே சரி, பொன்சேகா சரி இருவரிடமும் இல்லை என்பதை ஊருக்கும்
உலகுக்கும் அம்பலப்படுத்தலாம்.
(7) 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு உட்பட்ட எந்தத் தீர்வையும் தமிழ்மக்கள்
ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்ற உண்மையை உலகுக்குக் குறிப்பாக இந்தியாவுக்கு
உறைப்பாக உணர்த்தலாம்.
எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் எதிர்வரும் ஆட்சித்தலைவர் தேர்தலில் தமிழ்
வாக்காகளர்கள் தமிழினத்தின் முதல் எதிரியான இராசபக்சேயைத் தோற்கடிக்க இரண்டாவது
எதிரியான சரத் பொன்சேகாவுக்கு இடது கையால் வாக்களிக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் இரா. சம்பந்தன் நிறுத்தப்பட்டால்
அவருக்கு முதல் வாக்கையும் இரண்டாவது விருப்பு வாக்கை பொன்சேகாவுக்கும் தமிழர்கள்
வாக்களிக்க வேண்டும்.
கொலை வழக்கில் முதல் எதிரி மகிந்த
இராசபக்சேயை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்!
இந்திரஜித்
இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசை ஆதரிப்பது? அல்லது இரண்டு பிசாசுமே வேண்டாம் நாம்
தனித்து நின்று கேட்போம், அதுவும் வேண்டாம் இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன
அல்லது இடையில் வந்த அனுமான் ஆண்டால் என்னவென்று தேர்தலையே முற்றாகப்
புறக்கணிப்போம். இந்த தெரிவுகளையிட்டுத்தான் தமிழ்த் தேசியக் கூட்டணி தலையைப்
பிய்த்துக் கொண்டு இருக்கிறது போல் தெரிகிறது.
வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் மூன்று நாள்களே (டிசெம்பர் 17) முழுதாக
எஞ்சியிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது
என்று தெரியாமல் குழம்பிப் போய்த் திண்டாடுகிறது.
சனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் ஒருவரை
நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் கூடி
முடிவெடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மீண்டும் கூடி சனாதிபதி தேர்தல்
தொடர்பாக ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உண்மையல்ல. 12
ஆம் நாள் (சனிக்கிழமை) வரை எந்த முடிவையும் தமிழத் தேசியக் கூட்டணி எடுக்கவில்லை
என்பதே உண்மையாகும்.
ஆட்சித் தலைவர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அய்ந்துக்கும் மேற்பட்ட
குழுக்களாகப் பிரிந்து நிற்பது தெரிகிறது.
முதலாவது குழு
தேர்தலை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். இந்தத் தேர்தல் சிறிலங்காவின்
ஆட்சித்தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக சிங்களவர்கள் மத்தியில் நடைபெறும் தேர்தல்.
சுதந்திரமும் இறைமையும் படைத்த தமிழீழ அரசே எமது வேட்கை என்பதால் சிங்கள நாட்டில்
நடைபெறும் தேர்தலைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. 2005 ஆம் ஆண்டிலும் வி.புலிகள்
இந்த நிலைப்பாட்டைத்தான் எடுத்தார்கள்.
இரண்டாவது குழு
வட-கிழக்குத் தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். வட கிழக்குக்கு வெளியே
உள்ள தமிழர்கள் தங்கள் வாக்குகளை தமிழர்களது தன்னாட்சி உரிமையை ஏற்றுக் கொள்ளும்
இடதுசாரி முன்னணி வேட்பாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்தினாவுக்குப் போட
வேண்டும். இந்தக் குழுவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன்
இருக்கிறார்கள்.
மூன்றாவது குழு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை தேர்தலில் போட்டியிட நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தாவிட்டால் சுயேட்சையாகப் போட்டியிடுவேன் எனத் தனி ஆவர்த்தனம்
வாசிக்கும் எம்.கே. சிவாஜிலிங்கம்.
நான்காவது குழு
அய்க்கிய சுதந்திர மக்கள் முன்னணி வேட்பாளரும் தமிழ்மக்களை நரகவேட்டை ஆடியவருமான
மகிந்த இராசபக்சேயை ஆதரிக்கும் குழு. என்.சிறிகந்தா, சிவநாதன் கிஷோர், கே.
தங்கேஸ்வரி இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
அய்ந்தாவது குழு
இரண்டும் பிசாசுகள். அதில் இப்போது பதவியில் இருக்கும் இராசபக்சே என்ற பிசாசைத்
துரத்த வேண்டும். அதற்கு இருக்கும் ஒரே வழி சரத் பொன்சேகா என்ற பிசாசை (உhழழளiபெ
வாந டநளளநச ழக வாந வறழ னநஎடைள) ஆதரிப்பது. இந்தக் குழுவில் இரா.சம்பந்தன், மாவை
சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோhர் இருக்கிறார்கள்.
ஏன் இவ்வாறு வௌ;வேறு குழுக்களாக அல்லது அணிகளாகப் பிரிந்து சந்தி சிரிக்கும் வண்ணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்டை பிடிக்கிறார்கள்
என்பது விளங்கவில்லை.
ஓரு மாதத்துக்கு முன்னர் ஆட்சித் தலைவர் தேர்தல் உப்புச் சப்பில்லாது இருந்தது.
மகிந்த இராசபக்சேக்கு போட்டியே இல்லை என்ற தோற்றம் இருந்தது. அவரிடம் இருக்கும்
ஆள், அம்பு, பணம், பதவி, அடியாள், அண்ணன் தம்பிகள் ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்க
தென்னிலங்கையில் வேறு சிங்களத் தலைவர் இல்லை என்பதே பேச்சாக இருந்தது. ஆனானப்பட்ட
அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளரான இரணில் விக்கிரமசிங்கா ஒரு நொண்டிக் குதிரையாகவே
பார்க்கப்பட்டார். அதுவும் பரிதாபத்தோடு பார்க்கப்பட்டார்.
ஆனால் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தேர்தலில் குதித்தது மகிந்தாவின்
வெற்றியை இரவோடு இராவாகக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இராசபச்சே, பொன்சேகா இருவருமே சிங்கள பவுத்த பேரினவாதிகள். இரண்டுபேருமே
தமிழினத்தின் பரம எதிரிகள். பின் ஏன் இருவருக்கும் இடையில் மோதல்?
எல்லாம் வி.புலிகளுக்கு எதிரான போர் வெற்றிக்கு யார் காரணம்? அந்தப் பெருமை
யாருக்கு உரியது? என்ற குடுமிச் சண்டைதான்.
சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் குதித்ததால் தேர்தல் சூடு பிடித்துள்ளது.
இருவருக்கும் இடையில் போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்த இரண்டு பிசாசுகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வாக்குப்
பலம் தமிழ்மக்களுடைய கையில் இருக்கிறது.
இந்தத் தேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 2005
ஆம் ஆண்டில் வி.புலிகள் இராணுவ சம பலத்தோடு விளங்கினார்கள். அத்தோடு அவர்கள் ஒரு
நிழல் அரசை இயங்க வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய நிலமை முற்றிலும்
வேறுபட்டது. களமும் இல்லை. அரசும் இல்லை. இந்த யதார்த்தத்தை எல்லோரும் புரிந்து
கொள்ள வேண்டும்.
2005 ஆம் ஆண்டு வி.புலிகள் எடுத்த முடிவு சரியாக இருந்தாலும் இப்போது பார்க்கும்
போது அது தவறாகப் படுகிறது. அந்தத் தவறை மீண்டும் தமிழ்மக்கள் விடக் கூடாது.
மறைந்து போன சோவியத் ஒன்றியத்தின் சிற்பி என வருணிக்கப்படும் லெனின் கம்யூனிஸ்ட்
கட்சித் தோழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பது வழக்கம். அதில் அவர் அரசியலில்
கையாள வேண்டிய இராசதந்திரம், வினை வலி, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி போன்றவற்றை
எப்படி சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பது என்பது பற்றி பாடம் எடுப்பார்.
ஒரு கம்யூனிஸ்டுக்கு நான்கு எதிரிகள் இருந்தால் மூன்று எதிரிகளோடு சேர்ந்து நாலாவது
எதிரியை முடித்துக் கட்ட வேண்டம். எஞ்சியுள்ள மூன்று எதிரிகளில் இரண்டு எதிரிகளோடு
சேர்ந்து மூன்றாவது எதிரியை முடிக்க வேண்டும். அப்புறம் எஞ்சியுள்ள இரண்டு
எதிரிகளில் முதல் எதிரியோடு சேர்ந்து இரண்டாவது எதிரியை முடிக்க வேண்டும்.
வகுப்பில் இருந்த ஒரு இளம் தோழர் அந்தக் கடைசி ஆளை என்ன செய்யலாம் என நீங்கள்
எதுவும் சொல்லவில்லையே எனக் கேட்டான்.
அவனை நீதான் வெற்றி கொள்ள வேண்டும். அந்தப் பலம் உன்னிடம் இல்லாவிட்டால் நீ ஒரு
கம்யூனிஸ்டே இல்லை என்றார் லெனின்.
தமிழ்மக்கள் முன் இரண்டு எதிரிகள் நிற்கிறார்கள். இதில் முதல் எதிரி இராசபக்சே.
இரண்டாம் எதிரி சரத் பொன்சேகா. இரண்டாம் எதிரியோடு சேர்ந்து முதல் எதிரியை முடிக்க
வேண்டும். அதுதான் சாணக்கியம்.
அம்பை எய்தவர் இராசபக்சே. எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? ஆட்சித் தலைவர் என்ற
முறையில், இராணுவத்தின் முக்கிய தளபதி (ஊழஅஅயனெநச in ஊhநைக ழக வாந யுசஅல) ;
இராசபக்சேதான் போரை நடத்தினார். பொன்சேகா வெறும் அம்பு மட்டுமே!
இராசபச்சே ஒரு பலமான கட்சியின் தலைவர். அவரிடம் பதவி அதிகாரமும் பணபலமும்
இருக்கிறது. அத்தோடு குடும்ப அரசியல் நடத்துகிறார். இந்தப் பலமெல்லாம் சரத்
பொன்சேகாவிடம் இல்லை.
பொன்சேகா இராசபக்சேயைவிட மோசமான ஆளாக இருக்க முடியாது. ஒரு வாதத்துக்க அப்படியே
வைத்துக் கொள்வோம். முதலில் முதல் எதிரியான இராசபக்சேயை வீட்டுக்கு அனுப்ப
வேண்டும். அப்புறம் எதிரிக்கு எதிரியான இரண்டாவது எதிரிபற்றி யோசிக்கலாம்.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னும் தமிழ்மக்கள் முன்னும் இருக்கின்ற
தேர்வுகள் என்ன?
1) சரத் பொன்சேகாவை ஆதரிப்பது, அதற்கு மனமில்லை என்றால்
2) இரா சம்பந்தனை தேர்தலில் நிறுத்த வேண்டும். ஆனால்
3) விருப்பு வாக்குகளை சரத் பொன்சேகாவுக்குப் போட வேண்டும்.
முதல் சுற்றில் இராசபக்சேக்கு 50 + வாக்குகள் எடுத்தால் வெற்றி அவருக்குத்தான்.
தமிழ்மக்கள் பொன்சேகாவுக்கு போட்ட வாக்குகள் அல்லது இரா சம்பந்தனுக்குப் போட்ட
வாக்குகள் முடிவை மாற்றாது.
இராசபக்சே 50 + வாக்குகள் எடுக்கத் தவறினால் விருப்புவாக்குகளின் அடிப்படையில்
பொன்சேகா வெற்றி பெறுவார். அதாவது தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்தால்
பொன்சேகா 52 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார்.
மகிந்த இராசபக்சே - 47 விழுக்காடு
சரத் பொன்சேகா - 45 விழுக்காடு
இரா. சம்பந்தன் - 7 விழுக்காடு
மற்றவர்கள் - 1 விழுக்காடு
தேசியத்தை நேசிக்கும் தமி;ழ்மக்கள் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சரி தங்கள்
பொன்னான வாக்குகளைச் சாணக்கியத்தோடு பயன்படுத்தினால் தமிழ்மக்களின் குருதி தோய்ந்த
கையோடு காணப்படும் கொலையாளி மகிந்த இராசபக்சேயை மட்டுமல்ல தமிழ் ஒட்டுக்
குழுக்களையும் காட்டிக் கொடுப்பவர்களையும் கூட்டிக் கொடுப்பவர்களையும் வீட்டுக்கு
அனுப்பலாம்.
ரொறன்ரோ
நொவெம்பர் 23, 2009
தப்புத்தாளம் போடும் சிவநாதன் கிஷோரும்
நல்லதம்பி சிறிகாந்தாவும்!
பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம் என்பார்கள். இப்போது புலி இல்லாத நாட்டில்
பூனைகள் ஓடி விளையாடுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர்
கொஞ்சக் காலமாக தமிழ்மக்களை வானிலிருந்து குண்டு போட்டும் தரையில் இருந்து செல்
அடித்தும் மனிதப் படுகொலையை கச்சிதமா அரங்கேற்றின மகிந்த இராசபக்சேயின் அரசுக்கு
ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இரண்டு நாள்களுக்கு முன் வன்னியில் உள்ள
வதைமுகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள மக்களை வெளியே விடுமாறு மன்னிப்புச்பை மூலம்
கேட்டது. கேட்டதோடு நில்லாமல் தெருவுக்கு இறங்கி போராடியது.
ஆனால் கிஷோர் இராபச்சேயைக் கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கிறார்.
அவரது தமிழ்க் குருதி படிந்த கையைப் பிடித்துக் குலுக்குகிறார்.
இன்னொரு தமிழத் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் நல்லதம்பி சிறிகாந்தா அமைச்சர்
பசில் இராசபக்சேக்கும் மீள்குடியேற்றம் மற்றும் இடர் நிவாரண சேவைகள் அமைச்சர்
ரிசாட் பதியுதீன் இருவருக்கும் பாமாலை பாடி புகழ்மாலை சூட்டுகிறார். இந்த இரு
அமைச்சர்களும் மீள்குடியேற்றத்தை மிகுந்த அர்ப்பணிப்பு ஓடு செய்வதாக சான்றிதழ்
வழங்குகிறார். சிறைவைக்கப்பட்டுள்ள எமது உறவுகளோ வதை முகாம்களில் எந்த அடிப்படை
வசதிகளும் இன்றி மழைவெள்ளத்தில் மிதக்கும் கூடாரங்களில் அரசு கொடுக்கும்
அரிசியையும் மாவையும் சமைத்துச் சாப்பிட வழியில்லாது திண்டாடுகிறார்கள். மருத்துவ
வசதியின்றி அல்லல்படுகிறார்கள். மீள்குடியமர்த்தப் பட்டோரில் பெரும்பாலோர்
நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள்.
இந்த அழகில் கிஷோரும் சிறிகந்தாவும் அரசையும் அமைச்சர்களையும் இந்திரன் சந்திரன்
எனப் போற்றிப் பாடுவது அந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம் இல்லையா?
கடந்த கிழமை கனடிய தமிழ் வானொலிக்கு சிறிகாந்தா கொடுத்த செவ்வியில் தான் ஒன்றும்
அரசியலில் கற்றுக்குட்டி இல்லை என்றும் தான் 7 வயது தொட்டே அரசியலில் ஈடுபடத்
தொடங்கியதாகவும் தனது பதினேழாவது வயதில் தீவிர அரசியலில் குதித்ததாகவும் தான் ஒரு
சட்டத்தரணி என்றும் தான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்றும் மிகவும் தலைக்
கனத்தோடு சொன்னார். அவரது வார்த்தையில் ஆணவம் பளிச்சிட்டது என வானொலி நேயர்கள்
சொன்னார்கள்.
சிறிகாந்தா தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்று எதை
வைத்துச் சொல்கிறார் என்பது தெரியவில்லை. 2001 ஆம் ஆண்டு திருகோணமலை தேர்தல்
மாவட்டத்தில் ரெலோ சார்பில் போட்டியிட்டுத் தோற்றவர். மீண்டும் 2004 ஆம் ஆண்டு
யாழ்ப்பாணத்தில் அதே ரெலோ சார்பில் போட்டியிட்டுத் தோற்றவர். நடராசா ரவிராஜ் அரச
கூலிப்படைகளால் கொல்லப்பட்டதன் காரணமாகவே அவரது வெற்றிடத்திற்கு தேசியப்பட்டியலில்
இருந்து சிறிகாந்தா நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.
சட்டத்தரணியாக இருந்தாலும் சரி அரசியலைக் கரைத்துக் குடித்த அரம் போல் புத்திக்
கூர்மையராக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி எதிரிகளோடு பின் வாசலால்
சென்று கூடிக் குலாவி விருந்துண்டு அற்ப சலுகைகளுக்காக அவர்களுக்கு சாமரம்
வீசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் தேசத்துக்குப் பயனில்லை. தேசியத்துக்கு
பயனில்லை. அவர்கள் ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
இதனை தப்புத்தாளம் போடும் சிவநாதன் கிஷோரும் சிறிகாந்தாவும் புரிந்து கொள்ள
வேண்டும்.
கட்டுப்பாட்டுக்குப் பெயர் போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படி ஒழுங்காகப்
பட்டிக்குள் இருக்க மறுக்கும் கருப்பு ஆடுகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க
இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறோம். காரணம் உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள்
கட்சிக்குள் இருப்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு
நொடியும் அச்சம் தருவதாக இருக்கும். அது மட்டுமல்ல உட்பகையை அது மெலிதாயிருக்கும்
தொடக்க நிலையிலேயே களைந்துவிட வேண்டும். அங்ஙனமன்றி அது வலுத்தபின் பலர் கூடி
வெட்டினாலும் வெட்டுவோரை அது வெட்டும். இந்த இருவரும் கடந்த காலங்களிலும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தலைமையோடு முரண்பட்டு வந்தவர்கள் என்பதனை இங்கு நினைவூட்ட
விரும்புகிறோம்.
-30-
e d Summary
of the 2001 Sri Lankan parliamentary election
|
Parties |
Votes |
% |
Seats |
|
Constituency |
Party list |
Total |
|
United National Front |
4,086,026 |
45.6 |
|
|
109 |
|
People's Alliance |
3,330,815 |
37.2 |
|
|
77 |
|
Janatha Vimukthi Peramuna |
815,353 |
9.1 |
|
|
16 |
|
Tamil United Liberation Front |
348,164 |
3.9 |
|
|
15 |
|
Sri Lanka Muslim Congress |
105,346 |
1.2 |
|
|
5 |
|
Eelam People's Democratic Party |
72,783 |
0.8 |
|
|
2 |
|
Democratic People's Liberation Front |
16,669 |
0.2 |
|
|
1 |
| Others |
180,379 |
0.2 |
|
|
0 |
| Totals |
8,955,869 |
100.0 |
196 |
29 |
225 |
| Rejected votes |
493,944 |
5.2 |
|
|
|
| Votes cast |
9,449,813 |
76.3 |
|
|
|
| Registered voters |
12,428,208 |
|
|
|
|
Source:
Adam Carr's Election Archive
2001
Parliamentary General Election
Results of
the
2001 general elections for the
Jaffna district:
|
Party |
Votes per Polling
Division |
Total Votes |
% |
Seats |
Chavaka
-chcheri |
Jaffna |
Kankesan
-thurai |
Kayts |
Kilino
-chchi |
Kopay |
Manipay |
Nallur |
Point
Pedro |
Udupiddy |
Vaddu
-koddai |
Tamil National Alliance
(TULF,
ACTC,
EPRLF,
TELO) |
9,865 |
7,368 |
8,898 |
4,304 |
1,100 |
12,539 |
13,539 |
11,787 |
8,525 |
12,493 |
9,800 |
102,324 |
54.84% |
6 |
|
Eelam People's Democratic Party |
2,221 |
3,647 |
5,580 |
15,378 |
431 |
6,300 |
7,450 |
4,565 |
2,736 |
3,385 |
4,609 |
|
57,208 |
30.66% |
2 |
United National Front
(UNP,
CWC,
DPF) |
1,218 |
974 |
1,231 |
764 |
191 |
1,753 |
1,999 |
1,970 |
1,273 |
1,022 |
3,445 |
|
16,245 |
8.71% |
1 |
|
Sri Lanka Muslim Congress |
27 |
299 |
51 |
23 |
3 |
85 |
95 |
334 |
12 |
36 |
35 |
|
3,364 |
1.80% |
0 |
|
Independent |
1,045 |
311 |
234 |
24 |
68 |
181 |
349 |
217 |
34 |
126 |
60 |
|
2,677 |
1.43% |
0 |
|
Democratic Left Front |
28 |
20 |
75 |
4 |
0 |
689 |
127 |
82 |
429 |
121 |
461 |
|
2,054 |
1.10% |
0 |
|
Democratic People's Liberation Front
(PLOTE) |
79 |
274 |
77 |
19 |
2 |
326 |
215 |
159 |
121 |
55 |
44 |
|
1,454 |
0.78% |
0 |
|
United Socialist Party |
27 |
15 |
29 |
23 |
9 |
46 |
68 |
44 |
30 |
39 |
73 |
|
410 |
0.22% |
0 |
|
New Left Front (NSSP
et al) |
31 |
21 |
34 |
9 |
4 |
70 |
72 |
29 |
26 |
47 |
55 |
|
407 |
0.22% |
0 |
|
Janatha Vimukthi Peramuna |
15 |
12 |
30 |
14 |
1 |
40 |
27 |
21 |
14 |
17 |
48 |
|
242 |
0.13% |
0 |
|
Sihala Urumaya |
20 |
13 |
21 |
22 |
2 |
32 |
28 |
21 |
8 |
23 |
20 |
|
213 |
0.11% |
0 |
|
Valid Votes |
14,576 |
12,954 |
16,260 |
20,584 |
1,811 |
22,061 |
23,969 |
19,229 |
13,208 |
17,364 |
18,650 |
|
186,598 |
100% |
9 |
| Rejected Votes |
1,264 |
624 |
899 |
777 |
133 |
1,354 |
1,370 |
547 |
823 |
1,084 |
1,478 |
|
10,681 |
|
|
| Total Polled |
15,840 |
13,578 |
17,159 |
21,361 |
1,944 |
23,415 |
25,339 |
19,776 |
14,031 |
18,448 |
20,128 |
|
197,279 |
|
|
| Registered
Electors |
|
55,244 |
64,119 |
51,072 |
57,595 |
61,334 |
64,262 |
67,057 |
43,087 |
53,941 |
60,967 |
|
633,457 |
|
|
| Turnout (%) |
|
24.58% |
26.76% |
41.83% |
3.38% |
38.18% |
39.43% |
29.49% |
32.56% |
34.20% |
33.01% |
|
31.14% |
|
|
|
Sources:
[14][15] |
The following
candidates were elected:[16]
Veerasingham Anandasangaree (TNA-TULF),
Douglas Devananda (EPDP),
T.
Maheswaran (UNF), N. Mathanarasa (EPDP),
Gajendrakumar Ponnambalam (TNA-ACTC),
Nadarajah Raviraj (TNA-TULF),
Somasundaram Senathirajah (TNA-TULF),
M. K. Shivajilingam (TNA-TELO) and Appathurai Vinayagamoorthy (TNA-ACTC).
e d Summary
of the 2 April 2004
Parliament of Sri Lanka
election results
|
Alliances and parties |
Votes |
% |
Change |
Seats |
Change |
|
United People's Freedom Alliance
|
4,223,970 |
45.60 |
-0.01 |
105 |
+12 |
|
United National Front
|
3,504,200 |
37.83 |
-7.73 |
82 |
-27 |
|
Tamil National Alliance/Illankai
Tamil Arasu Katchi
|
633,654 |
6.84 |
- |
22 |
+22 |
|
Jathika Hela Urumaya |
554,076 |
5.97 |
- |
9 |
+9 |
|
Sri Lanka Muslim Congress |
186,876 |
2.02 |
+0.87 |
5 |
- |
|
Up-Country People's Front |
49,728 |
0.54 |
|
1 |
|
|
Eelam People's Democratic Party |
24,955 |
0.27 |
-0.54 |
1 |
-1 |
|
Jathika Sangwardhena Peramuna |
14,956 |
0.16 |
+0.14 |
0 |
|
|
United Socialist Party |
14,660 |
0.16 |
+0.06 |
0 |
|
|
Ceylon Democratic Unity Alliance |
10,736 |
0.12 |
|
0 |
|
|
New Left Front |
8,461 |
0.09 |
-0.42 |
0 |
|
|
Democratic People's Liberation Front |
7,326 |
0.08 |
-0.10 |
0 |
-1 |
|
United Muslim People's Alliance |
3,779 |
0.04 |
|
0 |
|
|
United Lalith Front |
3,773 |
0.04 |
+0.00 |
0 |
|
|
National People's Party |
1,540 |
0.02 |
|
0 |
|
|
Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya |
1,401 |
0.02 |
+0.00 |
0 |
|
|
Swarajya |
1,136 |
0.01 |
|
0 |
|
|
Sri Lanka Progressive Front |
814 |
0.01 |
+0.00 |
0 |
|
|
Ruhunu Janatha Party |
590 |
0.01 |
+0.00 |
0 |
|
|
Sri Lanka National Front |
493 |
0.01 |
+0.00 |
0 |
|
|
Liberal Party |
413 |
0.00 |
-0.01 |
0 |
|
|
Sri Lanka Muslim Katchi |
382 |
0.00 |
-0.01 |
0 |
|
|
Socialist Equality Party |
159 |
0.00 |
+0.00 |
0 |
|
|
Democratic United National Front |
141 |
0.00 |
-0.01 |
0 |
|
Independent lists |
* |
* |
* |
0 |
| Total |
9,262,732 |
- |
- |
225 |
2004 Parliamentary General Election
Results of
the
2004 general elections for the
Jaffna district:
| Party |
Votes per Polling Division |
Postal
Votes |
Displaced
Votes |
Total Votes |
% |
Seats |
Chavaka
-chcheri |
Jaffna |
Kankesan
-thurai |
Kayts |
Kilino
-chchi |
Kopay |
Manipay |
Nallur |
Point
Pedro |
Udupiddy |
Vaddu
-koddai |
Tamil National Alliance
(TULF,
ACTC,
EPRLF,
TELO) |
30,882 |
16,353 |
18,499 |
13,911 |
29,574 |
26,805 |
23,779 |
22,321 |
22,400 |
24,172 |
24,240 |
3,175 |
1,209 |
257,320 |
90.60% |
8 |
|
Eelam People's Democratic Party |
1,252 |
1,710 |
2,395 |
1,406 |
145 |
2,108 |
3,239 |
2,431 |
676 |
874 |
1,513 |
420 |
443 |
18,612 |
6.55% |
1 |
|
Independent 1 |
492 |
360 |
405 |
51 |
171 |
453 |
980 |
800 |
248 |
362 |
485 |
340 |
9 |
5,156 |
1.82% |
0 |
|
Sri Lanka Muslim Congress |
8 |
151 |
7 |
41 |
5 |
16 |
11 |
14 |
2 |
13 |
9 |
1 |
1,717 |
1,995 |
0.70% |
0 |
|
United Socialist Party |
24 |
6 |
27 |
14 |
18 |
32 |
36 |
32 |
22 |
25 |
42 |
1 |
12 |
291 |
0.10% |
0 |
|
New Left Front (NSSP
et al) |
19 |
13 |
25 |
11 |
6 |
36 |
54 |
30 |
9 |
23 |
32 |
7 |
1 |
266 |
0.09% |
0 |
|
Independent 2 |
24 |
17 |
8 |
8 |
6 |
15 |
22 |
14 |
6 |
15 |
15 |
0 |
1 |
151 |
0.05% |
0 |
|
Jathika Hela Urumaya |
9 |
4 |
5 |
4 |
8 |
12 |
20 |
5 |
5 |
12 |
9 |
1 |
1 |
95 |
0.03% |
0 |
| Swarajya |
6 |
11 |
8 |
3 |
2 |
9 |
11 |
5 |
1 |
6 |
7 |
1 |
3 |
73 |
0.03% |
0 |
|
Ruhunu Janatha Party |
8 |
5 |
7 |
5 |
4 |
9 |
6 |
7 |
3 |
5 |
6 |
0 |
2 |
67 |
0.02% |
0 |
| Valid Votes |
32,724 |
18,630 |
21,386 |
15,454 |
29,939 |
29,495 |
28,158 |
25,659 |
23,372 |
25,507 |
26,358 |
3,946 |
3,398 |
284,026 |
100.00% |
9 |
| Rejected Votes |
2,966 |
1,120 |
1,631 |
1,282 |
2,213 |
2,445 |
2,268 |
1,465 |
1,028 |
1,956 |
2,543 |
39 |
277 |
21,233 |
|
|
| Total Polled |
35,690 |
19,750 |
23,017 |
16,736 |
32,152 |
31,940 |
30,426 |
27,124 |
24,400 |
27,463 |
28,901 |
3,985 |
3,675 |
305,259 |
|
|
| Registered Electors |
57,379 |
57,460 |
64,434 |
51,911 |
57,975 |
61,403 |
65,218 |
67,672 |
45,457 |
54,087 |
61,283 |
|
|
644,279 |
|
|
| Turnout (%) |
62.20% |
34.37% |
35.72% |
32.24% |
55.46% |
52.02% |
46.65% |
40.08% |
53.68% |
50.78% |
47.16% |
|
|
47.38% |
|
|
| Source:
[17] |
The following
candidates were elected:[18]
Selvarajah Kajendren (TNA), 112,077 preference votes (pv);
Pathmini Sithamparanathan (TNA), 68,239 pv;
Gajendrakumar Ponnambalam (TNA-ACTC), 60,768 pv;
Kandaiah Premachandran (TNA-EPRLF), 45,783 pv;
K.
Sivanesan (TNA), 43,730 pv;
Nadarajah Raviraj (TNA-TULF), 42,963 pv;
M. K. Shivajilingam (TNA-TELO), 42,191 pv;
Somasundaram Senathirajah (TNA-TULF), 38,779 pv; and
Douglas Devananda (EPDP).
N. Raviraj
(TNA-TULF) was
murdered on 10 November 2006. His replacement
Nallathamby Srikantha (TNA-TELO) was sworn in on 30 November 2006.[19]
K. Sivanesan
(TNA) was
murdered on 6 March 2008. His replacement
Solomon Cyril (TNA) was sworn in on 9 April 2008.[20]
2005 Presidential
Election
Majority
180,796 Votes
Results of
the
2005 presidential elections for the Jaffna District:
|
Candidate |
Party |
Votes per Polling Division |
Postal
Votes |
Displaced
Votes |
Total Votes |
% |
|
Chavaka
-chcheri |
Jaffna |
Kankesan
-thurai |
Kayts |
Kilino
-chchi |
Kopay |
Manipay |
Nallur |
Point
Pedro |
Udupiddy |
Vaddu
-koddai |
|
Ranil Wickremasinghe |
UNP |
zz |
301 |
148 |
98 |
1 |
267 |
256 |
198 |
25 |
52 |
191 |
1,405 |
2,548 |
5,523 |
70.20% |
|
Mahinda Rajapaksa |
UPFA |
10 |
124 |
97 |
139 |
0 |
54 |
64 |
100 |
9 |
11 |
53 |
327 |
979 |
1,967 |
25.00% |
|
Victor Hettigoda |
ELPP |
0 |
3 |
0 |
3 |
0 |
1 |
0 |
2 |
0 |
1 |
0 |
109 |
1 |
120 |
1.53% |
|
Siritunga Jayasuriya |
USP |
2 |
4 |
2 |
3 |
0 |
14 |
11 |
2 |
0 |
0 |
3 |
5 |
26 |
72 |
0.92% |
| A.A. Suraweera |
JSP |
0 |
2 |
3 |
3 |
0 |
5 |
1 |
1 |
0 |
0 |
3 |
4 |
12 |
34 |
0.43% |
| A.K.J. Arachchige |
DUA |
1 |
1 |
3 |
4 |
0 |
2 |
3 |
4 |
0 |
0 |
0 |
3 |
10 |
31 |
0.39% |
| Wije Dias |
SEP |
1 |
1 |
0 |
10 |
0 |
1 |
0 |
0 |
0 |
0 |
2 |
10 |
4 |
29 |
0.37% |
| Chamil Jayaneththi |
NLF |
2 |
1 |
2 |
2 |
0 |
5 |
1 |
0 |
1 |
0 |
2 |
7 |
1 |
24 |
0.31% |
| Anura De Silva |
ULF |
0 |
0 |
2 |
1 |
0 |
4 |
3 |
1 |
0 |
0 |
1 |
3 |
6 |
21 |
0.27% |
| P. Nelson Perera |
SLPF |
0 |
1 |
1 |
0 |
0 |
2 |
1 |
0 |
0 |
0 |
3 |
4 |
4 |
16 |
0.20% |
| Wimal Geeganage |
SLNF |
1 |
0 |
0 |
0 |
0 |
4 |
0 |
0 |
0 |
0 |
2 |
4 |
4 |
15 |
0.19% |
| Aruna de Soyza |
RJP |
0 |
0 |
2 |
0 |
0 |
3 |
0 |
0 |
0 |
0 |
3 |
2 |
2 |
12 |
0.15% |
| H.S. Dharmadwaja |
UNAF |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
2 |
2 |
4 |
0.05% |
|
Valid Votes |
50 |
438 |
260 |
263 |
1 |
362 |
340 |
308 |
35 |
64 |
263 |
1,885 |
3,599 |
7,868 |
100.00% |
| Rejected Votes |
3 |
17 |
7 |
13 |
0 |
26 |
17 |
5 |
4 |
1 |
15 |
441 |
107 |
656 |
|
| Total Polled |
53 |
455 |
267 |
276 |
1 |
388 |
357 |
313 |
39 |
65 |
278 |
2,326 |
3,706 |
8,524 |
|
| Registered
Electors |
62,022 |
62,089 |
67,133 |
52,986 |
89,454 |
63,752 |
68,783 |
70,251 |
47,188 |
55,499 |
62,781 |
|
|
701,938 |
|
| Turnout (%) |
0.08% |
0.73% |
0.40% |
0.52% |
0.00% |
0.61% |
0.52% |
0.45% |
0.08% |
0.12% |
0.44% |
|
|
1.21% |
| Source:
[21] |
2005
Presidential Election
Results of
the
2005 presidential elections for the Vanni District:
|
Candidate |
Party |
Votes per Polling Division |
Postal
Votes |
Displaced
Votes |
Total Votes |
% |
| Mannar |
Mullaitivu |
Vavuniya |
|
Ranil Wickremasinghe |
UNP |
20,463 |
372 |
33,553 |
2,234 |
9,176 |
65,798 |
77.89% |
|
Mahinda Rajapaksa |
UPFA |
2,183 |
510 |
7,936 |
1,356 |
5,212 |
17,197 |
20.36% |
|
Siritunga Jayasuriya |
USP |
160 |
2 |
276 |
2 |
80 |
520 |
0.62% |
| A.A. Suraweera |
JSP |
54 |
1 |
155 |
5 |
71 |
286 |
0.34% |
| Chamil Jayaneththi |
NLF |
50 |
1 |
68 |
5 |
9 |
133 |
0.16% |
|
Victor Hettigoda |
ELPP |
21 |
1 |
62 |
21 |
10 |
115 |
0.14% |
| A.K.J. Arachchige |
DUA |
44 |
0 |
37 |
1 |
25 |
107 |
0.13% |
| Aruna de Soyza |
RJP |
18 |
2 |
37 |
2 |
12 |
71 |
0.08% |
| Wije Dias |
SEP |
18 |
0 |
37 |
6 |
8 |
69 |
0.08% |
| Wimal Geeganage |
SLNF |
21 |
1 |
40 |
4 |
2 |
68 |
0.08% |
| Anura De Silva |
ULF |
21 |
1 |
33 |
1 |
6 |
62 |
0.07% |
| P. Nelson Perera |
SLPF |
7 |
0 |
15 |
0 |
5 |
27 |
0.03% |
| H.S. Dharmadwaja |
UNAF |
5 |
0 |
13 |
1 |
4 |
23 |
0.03% |
| Valid Votes |
23,065 |
891 |
42,262 |
3,638 |
14,620 |
84,476 |
100.00% |
| Rejected Votes |
361 |
11 |
766 |
79 |
181 |
1,398 |
|
| Total Polled |
23,426 |
902 |
43,028 |
3,717 |
14,801 |
85,874 |
|
| Registered Electors |
78,906 |
66,596 |
104,884 |
|
|
250,386 |
|
| Turnout (%) |
29.69% |
1.35% |
41.02% |
|
|
34.30% |
|
| Source:
[18] |
Results of the
2005 presidential elections for Trincomalee District:
|
Candidate |
Party |
Votes per Polling Division |
Postal
Votes |
Displaced
Votes |
Total Votes |
% |
| Mutur |
Seru-
wila |
Trinco
-malee |
|
Ranil Wickremasinghe |
UNP |
29,061 |
17,835 |
41,369 |
3,913 |
19 |
92,197 |
61.33% |
|
Mahinda Rajapakse |
UPFA |
18,817 |
21,353 |
10,878 |
4,621 |
11 |
55,680 |
37.04% |
|
Siritunga Jayasuriya |
USP |
338 |
142 |
299 |
13 |
0 |
792 |
0.53% |
| A.A. Suraweera |
JSP |
257 |
153 |
138 |
10 |
0 |
558 |
0.37% |
|
Victor Hettigoda |
ELPP |
45 |
56 |
133 |
42 |
0 |
276 |
0.18% |
| A.K.J. Arachchige |
DUA |
82 |
35 |
38 |
10 |
0 |
165 |
0.11% |
| Chamil Jayaneththi |
NLF |
32 |
50 |
65 |
10 |
0 |
157 |
0.10% |
| Aruna de Soyza |
RJP |
65 |
50 |
37 |
5 |
0 |
157 |
0.10% |
| Anura De Silva |
ULF |
45 |
29 |
56 |
2 |
0 |
132 |
0.09% |
| Wimal Geeganage |
SLNF |
16 |
26 |
27 |
2 |
0 |
71 |
0.05% |
| Wije Dias |
SEP |
18 |
14 |
33 |
2 |
0 |
67 |
0.04% |
| P. Nelson Perera |
SLPF |
22 |
9 |
24 |
1 |
0 |
56 |
0.04% |
| H.S. Dharmadwaja |
UNAF |
10 |
7 |
9 |
0 |
0 |
26 |
0.02% |
| Valid Votes |
48,808 |
39,759 |
53,106 |
8,631 |
30 |
150,334 |
100.00% |
| Rejected Votes |
542 |
406 |
956 |
190 |
0 |
2,094 |
|
| Total Polled |
49,350 |
40,165 |
54,062 |
8,821 |
30 |
152,428 |
|
| Registered Electors |
81,534 |
66,126 |
91,095 |
|
|
238,755 |
|
| Turnout (%) |
60.53% |
60.74% |
59.35% |
|
|
63.84% |
|
| Source:
[20] |
2005
Presidential Election
Results of the
2005 presidential elections for the
Amparai district:
|
Candidate |
Party |
Votes per Polling Division |
Postal
Votes |
Total Votes |
% |
| Ampara |
Kal-
munai |
Pottu
-vil |
Saman-
thurai |
|
Ranil Wickremasinghe |
UNP |
44,218 |
29,316 |
55,467 |
24,969 |
5,228 |
159,198 |
55.81% |
|
Mahinda Rajapakse |
UPFA |
57,624 |
8,951 |
27,704 |
21,029 |
7,021 |
122,329 |
42.88% |
|
Siritunga Jayasuriya |
USP |
275 |
175 |
419 |
220 |
2 |
1,091 |
0.38% |
| A.A. Suraweera |
JSP |
418 |
125 |
314 |
201 |
14 |
1,072 |
0.38% |
|
Victor Hettigoda |
ELPP |
131 |
68 |
76 |
34 |
22 |
331 |
0.12% |
| Aruna de Soyza |
RJP |
127 |
19 |
93 |
54 |
4 |
297 |
0.10% |
| A.K.J. Arachchige |
DUA |
55 |
33 |
68 |
57 |
2 |
215 |
0.08% |
| Anura De Silva |
ULF |
58 |
43 |
73 |
26 |
3 |
203 |
0.07% |
| Chamil Jayaneththi |
NLF |
86 |
15 |
55 |
21 |
11 |
188 |
0.07% |
| Wimal Geeganage |
SLNF |
89 |
9 |
29 |
7 |
0 |
134 |
0.05% |
| P. Nelson Perera |
SLPF |
45 |
9 |
27 |
7 |
1 |
89 |
0.03% |
| Wije Dias |
SEP |
37 |
13 |
18 |
13 |
1 |
82 |
0.03% |
| H.S. Dharmadwaja |
UNAF |
16 |
3 |
16 |
3 |
0 |
38 |
0.01% |
| Valid Votes |
103,179 |
38,779 |
84,359 |
46,641 |
12,309 |
285,267 |
100.00% |
| Rejected Votes |
949 |
456 |
863 |
517 |
156 |
2,941 |
|
| Total Polled |
104,128 |
39,235 |
85,222 |
47,158 |
12,465 |
288,208 |
|
| Registered Electors |
136,738 |
62,251 |
129,798 |
66,666 |
|
396,453 |
|
| Turnout (%) |
76.15% |
62.03% |
65.66% |
70.74% |
|
72.70% |
|
| Source:
[18] |
Results of the
2005 presidential elections for the district:
|
Candidate |
Party |
Votes per Polling Division |
Postal
Votes |
Total Votes |
% |
Batti-
caloa |
Kal-
kudah |
Paddi-
ruppu |
|
Ranil Wickremasinghe |
UNP |
65,401 |
28,482 |
24,142 |
3,489 |
121,514 |
79.51% |
|
Mahinda Rajapakse |
UPFA |
15,798 |
11,105 |
905 |
1,028 |
28,836 |
18.87% |
|
Siritunga Jayasuriya |
USP |
474 |
214 |
201 |
3 |
892 |
0.58% |
| A.A. Suraweera |
JSP |
265 |
253 |
58 |
2 |
578 |
0.38% |
|
Victor Hettigoda |
ELPP |
136 |
43 |
28 |
18 |
225 |
0.15% |
| A.K.J. Arachchige |
DUA |
93 |
44 |
16 |
0 |
153 |
0.10% |
| Chamil Jayaneththi |
NLF |
51 |
52 |
42 |
4 |
149 |
0.10% |
| Anura De Silva |
ULF |
73 |
37 |
29 |
3 |
142 |
0.09% |
| Aruna de Soyza |
RJP |
51 |
52 |
19 |
2 |
124 |
0.08% |
| Wije Dias |
SEP |
41 |
43 |
19 |
1 |
104 |
0.07% |
| P. Nelson Perera |
SLPF |
18 |
28 |
13 |
0 |
59 |
0.04% |
| Wimal Geeganage |
SLNF |
20 |
12 |
10 |
1 |
43 |
0.03% |
| H.S. Dharmadwaja |
UNAF |
7 |
4 |
7 |
0 |
18 |
0.01% |
| Valid Votes |
82,428 |
40,369 |
25,489 |
4,551 |
152,837 |
100.00% |
| Rejected Votes |
970 |
503 |
247 |
58 |
1,778 |
|
| Total Polled |
83,398 |
40,872 |
25,736 |
4,609 |
154,615 |
|
| Registered Electors |
147,979 |
91,410 |
79,339 |
|
318,728 |
|
| Turnout (%) |
56.36% |
44.71% |
32.44% |
|
48.51% |
|
| Source:
[22] |
Dear Rajkumar
I am glad you are thinking and thinking aloud. This
type of brainstorming is very necessary and useful All these years we left
decisions
with Vanni and followed them scrupulously without
any questions. Today the situation is totally different. Thamil Diaspora should
have a say.
1. At present our No. one enemy is Rajapakse
followed by India.
2. When you have two enemies in your hand you
should join with one of the enemy to defeat the main enemy.
3. It is dangerous to facilitate the re-election
of Rajapakse. He is not a loner like Fonseka. His politics is family politics.
4. During the 2005 election LTTE made a "mistake"
in asking people to boycott the elections. Their choice of Rajapakse was the
reason for their battle defeat. But to be charitable LTTEs decision was based
on two factors. (a) They enjoyed parity of military power. (2) The existence of
the de facto state of Thamil Eelam. Had the LTTE managed to defeat the
Sinhala army then their decision to boycott the elections would have proved
dead right. But unfortunately this did not happen. It was a big gamble and it
ended in total disaster.
5. We may hate India. Criticise India. Despise
India. But India is the regional power of South Asia/Indian Ocean. India
overruled US initiatives during the war. It overruled US, EU, UK opposition to
IMF loan to Sri Lanka. It even threatened to give the loan to Sri Lanka if IMF
said no. We should tackle India via TN. For this we should get more closer to
people and parties who can bring change.
6. With Rajapakse there will be more dictatorship
and nepotism. With Fonseka/Ranil there is some hope. I met a Sinhalese
Professor of Law who castigated LTTE decision to support Rajapakse indirectly. I
asked him what the difference is. He answered "With Ranil you can talk. With
Rajapakse you cannot do that." This is 100% true.
7. You cannot develop diplomatic links with China.
What has China to gain by supporting the Thamils? Nothing! Think practically.
My recommended strategy for the presidential
elections is as follows:
1) Defeat Rajapaakse and prevent his re-election.
This should be our number one priority. He is the known devil. His re-election
will spell disaster to Thamils and the present agony will continue. He will
depopulate Vanni, build military camps/bases and colonize same with Sinhalese
soldiers and Sinhalese thugs from Matara/Hambantota. In addition, MaNal Aru
borders will start moving towards North. He will do the same thing in the east.
To prevent his re-election no Thamil should vote for him.
2) Field R. Sampanthan or some other candidate.
like Kanagaratnam, MP who is in detention or some outsider like retired SC Judge
R.T. Wicknarajah, as the TNA candidate.
3) Ask Thamil voters to give their preference vote
to Sarath Fonseka. They can vote with their left hands. Remember he is a
civilian now.
4) If Rajapakse wins in the first round, that is,
50+ then nothing can be done. It did not matter whether Thamils voted for
Sampanthan or Fonseka.
5) If Rajaapase does not secure 50+ votes then the
preference votes cast to Fonseka might help him to win the elections.
6) No repeat mistake like 2005.
Thangavelu
----- Original Message -----
From:
Thamil Anban
To:
thanga
Sent:
Saturday, December 05, 2009 11:24 AM
Subject:
Presidential Elections
Anbu Aiya,
When I was reading your comments on one of the article in thamilvaddam, you
opined that we should vote for Fonseka. I think this is dangerous for the
following reasons:
-
USA is never for Tamil Eelam
-
Fonseka is backed by USA (and indirectly the EU)
-
Why our efforts (ahimsa) to stop the carnage went unnoticed by
the world?
-
It's because there is no need for them in us. Believe me, once
Fonseka wins, the western world will utterly forsake us.
-
The western world shows that they support you now is because
they have a need in us in countering the pro-China Rajapaksha
-
If Fonseka wins, the western world has no need in us and
Fonseka will be their puppet
-
After that the diaspora Thamils' activities will be curtailed
and this is detrimental as they are the ones who are given the task to cary it
to the next level
-
Our biggest diplomatic mistake is not developing links with
China. We need to play that China card carefully with the West.
-
Rather than making Fonseka to win and endangering our overseas
activities, we'll live with the known devil.
Please clarify me.
Thamilanban.
| Votes per Polling Division -
1982 Presideential Elections |
Postal
Votes |
Total Votes |
% |
Chavaka
-chcheri |
Jaffna |
Kankesan
-thurai |
Kayts |
Kilino
-chchi |
Kopay |
Manipay |
Nallur |
Point
Pedro |
Udupiddy |
Vaddu
-koddai |
|
Kumar Ponnambalam |
ACTC |
9,742 |
9,319 |
6,065 |
8,353 |
9,822 |
4,984 |
7,514 |
8,979 |
5,367 |
5,779 |
9,741 |
1,598 |
87,263 |
40.03% |
| Hector Kobbekaduwa |
SLFP |
6,128 |
3,258 |
9,523 |
3,393 |
4,188 |
13,678 |
9,008 |
4,330 |
6,348 |
8,155 |
7,770 |
1,431 |
77,300 |
35.46% |
|
Junius Jayewardene |
UNP |
3,629 |
6,419 |
3,771 |
4,067 |
3,616 |
3,546 |
4,463 |
4,831 |
3,198 |
2,282 |
3,700 |
1,253 |
44,780 |
20.54% |
|
Colvin de Silva |
LSSP |
419 |
134 |
310 |
157 |
171 |
423 |
483 |
332 |
217 |
353 |
257 |
120 |
3,376 |
1.55% |
|
Rohana Wijeweera |
JVP |
204 |
176 |
341 |
119 |
188 |
379 |
559 |
244 |
189 |
208 |
380 |
111 |
3,098 |
1.42% |
| Vasudeva Nanayakkara |
NSSP |
125 |
186 |
184 |
98 |
102 |
182 |
298 |
243 |
150 |
224 |
255 |
129 |
2,186 |
1.00% |
| Valid Votes |
20,247 |
19,502 |
20,194 |
16,187 |
18,087 |
23,282 |
22,330 |
18,959 |
15,469 |
17,001 |
22,103 |
4,642 |
218,003 |
100.00% |
| Rejected Votes |
1,205 |
711 |
1.078 |
943 |
1,012 |
1,023 |
1,069 |
894 |
585 |
816 |
1,076 |
198 |
10,610 |
|
| Total Polled |
21,452 |
20,213 |
21,272 |
17,130 |
19,099 |
24,305 |
23,399 |
19,853 |
16,054 |
17,817 |
23,179 |
4,840 |
228,613 |
| Registered Electors |
44,597 |
42,296 |
51,681 |
42,563 |
39,773 |
49,577 |
48,930 |
49,233 |
34,859 |
43,990 |
46,206 |
|
493,705 |
| Turnout (%) |
48.10% |
47.79% |
41.16% |
40.25% |
48.02% |
49.02% |
47.82% |
40.32% |
46.05% |
40.50% |
50.16% |
|
46.31% |
| Source:
[5] |
இருக்க முடியாது. ஒரு வாதத்துக்க அப்படியே
வைத்துக் கொள்வோம். முதலில் முதல் எதிரியான
இ,ராசபக்சேயை வீட்டுக்கு அனுப்ப
வேண்டும். அப்புறம் எதிரிக்கு எதிரியான ,ரண்டாவது எதிரிபற்றி யோசிக்கலாம்.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னும் தமிழ்மக்கள் முன்னும் இருக்கின்ற
தேர்வுகள் என்ன?
1) சரத் பொன்சேகாவை ஆதரிப்பது, அதற்கு
மனமில்லை என்றால்
2) இரா சம்பந்தனை தேர்தலில்
நிறுத்த வேண்டும். ஆனால்
3) விருப்பு வாக்குகளை சரத்
பொன்சேகாவுக்குப் போட வேண்டும்.
முதல் சுற்றில் ,ராசபக்சேக்கு 50 + வாக்குகள் எடுத்தால் வெற்றி அவருக்குத்தான்.
தமிழ்மக்கள் பொன்சேகாவுக்கு போட்ட வாக்குகள் அல்லது ,ரா சம்பந்தனுக்குப் போட்ட
வாக்குகள் முடிவை மாற்றாது.
,ராசபக்சே 50 + வாக்குகள் எடுக்கத் தவறினால் விருப்புவாக்குகளின் அடிப்படையில்
பொன்சேகா வெற்றி பெறுவார். அதாவது தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்தால்
பொன்சேகா 52 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார்.
மகிந்த இராசபக்சே -
47 விழுக்காடு
சரத் பொன்சேகா
- 45 விழுக்காடு
இரா. சம்பந்தன்
- 7 விழுக்காடு
மற்றவர்கள்
- 1 விழுக்காடு
தேசியத்தை நேசிக்கும் தமி;ழ்மக்கள் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சரி தங்கள்
பொன்னான வாக்குகளைச் சாணக்கியத்தோடு பயன்படுத்தினால் மகிந்த இராசபக்சேயை மட்டுமல்ல
தமிழ் ஒட்டுக் குழுக்களையும் காட்டிக் கொடுப்பவர்களையும் கூட்டிக்
கொடுப்பவர்களையும் வீட்டுக்கு அனுப்பலாம்.
If you
have any doubts please refer below:
Election of the President.
94. (1) At the election of the President every voter while casting his vote
for any candidate may-
(a) where there are three candidates for election, specify his second
preference ; and
(b) where there are more than three candidates for election, specify his
second and third preferences...
(2) The candidate, if any, who receives more than one-half of the valid
votes cast shall be declared elected as President
(3) Where no candidate is declared elected under paragraph (2) of this
Article, the candidate or candidates, other than the candidates who
received the highest and second highest number of such votes, shall be
eliminated from the contest, and -
(a) the second preference of each voter whose vote had been for a candidate
eliminated from the contest, shall, if it is for one or the other of the
remaining two candidates, be counted as a vote for such candidate and be
added to the votes counted in his favour under paragraph (2), and
(b) the third preference of each voter referred to in sub-paragraph (a)
whose second preference is not counted under that sub-paragraph shall, if
it is for one or the other of the remaining two candidates, be counted as a
vote for such candidate and be added to the votes counted in his favour
under sub-paragraph (a) and paragraph (2),
and the candidate who receives the majority of the votes so counted shall
be declared elected as President.
(4) Where an equality is found to exist between the votes received by two
or more candidates and the addition of one vote would determine-
(a) which candidate is to be declared elected under this Article ; or
(b) which candidate is not to be eliminated under this Article, then the
determination of the candidate to whom such additional vote shall be deemed
to have been given for the purpose of such determination shall be made by
lot.
With regards
Victor
2001
Parliamentary General Election
Results of
the
2001 general elections for the
Jaffna district:
|
Party |
Votes per Polling
Division |
Postal
Votes |
Displaced
Votes |
Total Votes |
% |
Seats |
Chavaka
-chcheri |
Jaffna |
Kankesan
-thurai |
Kayts |
Kilino
-chchi |
Kopay |
Manipay |
Nallur |
Point
Pedro |
Udupiddy |
Vaddu
-koddai |
Tamil National Alliance
(TULF,
ACTC,
EPRLF,
TELO) |
9,865 |
7,368 |
8,898 |
4,304 |
1,100 |
12,539 |
13,539 |
11,787 |
8,525 |
12,493 |
9,800 |
|
|
102,324 |
54.84% |
6 |
|
Eelam People's Democratic Party |
2,221 |
3,647 |
5,580 |
15,378 |
431 |
6,300 |
7,450 |
4,565 |
2,736 |
3,385 |
4,609 |
|
|
57,208 |
30.66% |
2 |
United National Front
(UNP,
CWC,
DPF) |
1,218 |
974 |
1,231 |
764 |
191 |
1,753 |
1,999 |
1,970 |
1,273 |
1,022 |
3,445 |
|
|
16,245 |
8.71% |
1 |
|
Sri Lanka Muslim Congress |
27 |
299 |
51 |
23 |
3 |
85 |
95 |
334 |
12 |
36 |
35 |
|
|
3,364 |
1.80% |
0 |
|
Independent |
1,045 |
311 |
234 |
24 |
68 |
181 |
349 |
217 |
34 |
126 |
60 |
|
|
2,677 |
1.43% |
0 |
|
Democratic Left Front |
28 |
20 |
75 |
4 |
0 |
689 |
127 |
82 |
429 |
121 |
461 |
|
|
2,054 |
1.10% |
0 |
|
Democratic People's Liberation Front
(PLOTE) |
79 |
274 |
77 |
19 |
2 |
326 |
215 |
159 |
121 |
55 |
44 |
|
|
1,454 |
0.78% |
0 |
|
United Socialist Party |
27 |
15 |
29 |
23 |
9 |
46 |
68 |
44 |
30 |
39 |
73 |
|
|
410 |
0.22% |
0 |
|
New Left Front (NSSP
et al) |
31 |
21 |
34 |
9 |
4 |
70 |
72 |
29 |
26 |
47 |
55 |
|
|
407 |
0.22% |
0 |
|
Janatha Vimukthi Peramuna |
15 |
12 |
30 |
14 |
1 |
40 |
27 |
21 |
14 |
17 |
48 |
|
|
242 |
0.13% |
0 |
|
Sihala Urumaya |
20 |
13 |
21 |
22 |
2 |
32 |
28 |
21 |
8 |
23 |
20 |
|
|
213 |
0.11% |
0 |
|
Valid Votes |
14,576 |
12,954 |
16,260 |
20,584 |
1,811 |
22,061 |
23,969 |
19,229 |
13,208 |
17,364 |
18,650 |
|
|
186,598 |
100.00% |
9 |
| Rejected Votes |
1,264 |
624 |
899 |
777 |
133 |
1,354 |
1,370 |
547 |
823 |
1,084 |
1,478 |
|
|
10,681 |
|
|
| Total Polled |
15,840 |
13,578 |
17,159 |
21,361 |
1,944 |
23,415 |
25,339 |
19,776 |
14,031 |
18,448 |
20,128 |
|
|
197,279 |
|
|
| Registered
Electors |
|
55,244 |
64,119 |
51,072 |
57,595 |
61,334 |
64,262 |
67,057 |
43,087 |
53,941 |
60,967 |
|
|
633,457 |
|
|
| Turnout (%) |
|
24.58% |
26.76% |
41.83% |
3.38% |
38.18% |
39.43% |
29.49% |
32.56% |
34.20% |
33.01% |
|
|
31.14% |
|
|
|
Sources:
[14][15] |
The following
candidates were elected:[16]
Veerasingham Anandasangaree (TNA-TULF),
Douglas Devananda (EPDP),
T.
Maheswaran (UNF), N. Mathanarasa (EPDP),
Gajendrakumar Ponnambalam (TNA-ACTC),
Nadarajah Raviraj (TNA-TULF),
Somasundaram Senathirajah (TNA-TULF),
M. K. Shivajilingam (TNA-TELO) and Appathurai Vinayagamoorthy (TNA-ACTC).
[edit]
2004 Parliamentary General Election
Results of
the
2004 general elections for the
Jaffna district:
| Party |
Votes per Polling Division |
Postal
Votes |
Displaced
Votes |
Total Votes |
% |
Seats |
Chavaka
-chcheri |
Jaffna |
Kankesan
-thurai |
Kayts |
Kilino
-chchi |
Kopay |
Manipay |
Nallur |
Point
Pedro |
Udupiddy |
Vaddu
-koddai |
Tamil National Alliance
(TULF,
ACTC,
EPRLF,
TELO) |
30,882 |
16,353 |
18,499 |
13,911 |
29,574 |
26,805 |
23,779 |
22,321 |
22,400 |
24,172 |
24,240 |
3,175 |
1,209 |
257,320 |
90.60% |
8 |
|
Eelam People's Democratic Party |
1,252 |
1,710 |
2,395 |
1,406 |
145 |
2,108 |
3,239 |
2,431 |
676 |
874 |
1,513 |
420 |
443 |
18,612 |
6.55% |
1 |
|
Independent 1 |
492 |
360 |
405 |
51 |
171 |
453 |
980 |
800 |
248 |
362 |
485 |
340 |
9 |
5,156 |
1.82% |
0 |
|
Sri Lanka Muslim Congress |
8 |
151 |
7 |
41 |
5 |
16 |
11 |
14 |
2 |
13 |
9 |
1 |
1,717 |
1,995 |
0.70% |
0 |
|
United Socialist Party |
24 |
6 |
27 |
14 |
18 |
32 |
36 |
32 |
22 |
25 |
42 |
1 |
12 |
291 |
0.10% |
0 |
|
New Left Front (NSSP
et al) |
19 |
13 |
25 |
11 |
6 |
36 |
54 |
30 |
9 |
23 |
32 |
7 |
1 |
266 |
0.09% |
0 |
|
Independent 2 |
24 |
17 |
8 |
8 |
6 |
15 |
22 |
14 |
6 |
15 |
15 |
0 |
1 |
151 |
0.05% |
0 |
|
Jathika Hela Urumaya |
9 |
4 |
5 |
4 |
8 |
12 |
20 |
5 |
5 |
12 |
9 |
1 |
1 |
95 |
0.03% |
0 |
| Swarajya |
6 |
11 |
8 |
3 |
2 |
9 |
11 |
5 |
1 |
6 |
7 |
1 |
3 |
73 |
0.03% |
0 |
|
Ruhunu Janatha Party |
8 |
5 |
7 |
5 |
4 |
9 |
6 |
7 |
3 |
5 |
6 |
0 |
2 |
67 |
0.02% |
0 |
| Valid Votes |
32,724 |
18,630 |
21,386 |
15,454 |
29,939 |
29,495 |
28,158 |
25,659 |
23,372 |
25,507 |
26,358 |
3,946 |
3,398 |
284,026 |
100.00% |
9 |
| Rejected Votes |
2,966 |
1,120 |
1,631 |
1,282 |
2,213 |
2,445 |
2,268 |
1,465 |
1,028 |
1,956 |
2,543 |
39 |
277 |
21,233 |
|
|
| Total Polled |
35,690 |
19,750 |
23,017 |
16,736 |
32,152 |
31,940 |
30,426 |
27,124 |
24,400 |
27,463 |
28,901 |
3,985 |
3,675 |
305,259 |
|
|
| Registered Electors |
57,379 |
57,460 |
64,434 |
51,911 |
57,975 |
61,403 |
65,218 |
67,672 |
45,457 |
54,087 |
61,283 |
|
|
644,279 |
|
|
| Turnout (%) |
62.20% |
34.37% |
35.72% |
32.24% |
55.46% |
52.02% |
46.65% |
40.08% |
53.68% |
50.78% |
47.16% |
|
|
47.38% |
|
|
| Source:
[17] |
The following
candidates were elected:[18]
Selvarajah Kajendren (TNA), 112,077 preference votes (pv);
Pathmini Sithamparanathan (TNA), 68,239 pv;
Gajendrakumar Ponnambalam (TNA-ACTC), 60,768 pv;
Kandaiah Premachandran (TNA-EPRLF), 45,783 pv;
K.
Sivanesan (TNA), 43,730 pv;
Nadarajah Raviraj (TNA-TULF), 42,963 pv;
M. K. Shivajilingam (TNA-TELO), 42,191 pv;
Somasundaram Senathirajah (TNA-TULF), 38,779 pv; and
Douglas Devananda (EPDP).
N. Raviraj
(TNA-TULF) was
murdered on 10 November 2006. His replacement
Nallathamby Srikantha (TNA-TELO) was sworn in on 30 November 2006.[19]
K. Sivanesan
(TNA) was
murdered on 6 March 2008. His replacement
Solomon Cyril (TNA) was sworn in on 9 April 2008.[20]
2005 Presidential
Election
Majority
180,796 Votes
Results of
the
2005 Presidential elections for the Jaffna District:
|
Candidate |
Party |
Votes per Polling Division |
Postal
Votes |
Displaced
Votes |
Total Votes |
% |
|
Chavaka
-chcheri |
Jaffna |
Kankesan
-thurai |
Kayts |
Kilino
-chchi |
Kopay |
Manipay |
Nallur |
Point
Pedro |
Udupiddy |
Vaddu
-koddai |
|
Ranil Wickremasinghe |
UNP |
zz |
301 |
148 |
98 |
1 |
267 |
256 |
198 |
25 |
52 |
191 |
1,405 |
2,548 |
5,523 |
70.20% |
|
Mahinda Rajapaksa |
UPFA |
10 |
124 |
97 |
139 |
0 |
54 |
64 |
100 |
9 |
11 |
53 |
327 |
979 |
1,967 |
25.00% |
|
Victor Hettigoda |
ELPP |
0 |
3 |
0 |
3 |
0 |
1 |
0 |
2 |
0 |
1 |
0 |
109 |
1 |
120 |
1.53% |
|
Siritunga Jayasuriya |
USP |
2 |
4 |
2 |
3 |
0 |
14 |
11 |
2 |
0 |
0 |
3 |
5 |
26 |
72 |
0.92% |
| A.A. Suraweera |
JSP |
0 |
2 |
3 |
3 |
0 |
5 |
1 |
1 |
0 |
0 |
3 |
4 |
12 |
34 |
0.43% |
| A.K.J. Arachchige |
DUA |
1 |
1 |
3 |
4 |
0 |
2 |
3 |
4 |
0 |
0 |
0 |
3 |
10 |
31 |
0.39% |
| Wije Dias |
SEP |
1 |
1 |
0 |
10 |
0 |
1 |
0 |
0 |
0 |
0 |
2 |
10 |
4 |
29 |
0.37% |
| Chamil Jayaneththi |
NLF |
2 |
1 |
2 |
2 |
0 |
5 |
1 |
0 |
1 |
0 |
2 |
7 |
1 |
24 |
0.31% |
| Anura De Silva |
ULF |
0 |
0 |
2 |
1 |
0 |
4 |
3 |
1 |
0 |
0 |
1 |
3 |
6 |
21 |
0.27% |
| P. Nelson Perera |
SLPF |
0 |
1 |
1 |
0 |
0 |
2 |
1 |
0 |
0 |
0 |
3 |
4 |
4 |
16 |
0.20% |
| Wimal Geeganage |
SLNF |
1 |
0 |
0 |
0 |
0 |
4 |
0 |
0 |
0 |
0 |
2 |
4 |
4 |
15 |
0.19% |
| Aruna de Soyza |
RJP |
0 |
0 |
2 |
0 |
0 |
3 |
0 |
0 |
0 |
0 |
3 |
2 |
2 |
12 |
0.15% |
| H.S. Dharmadwaja |
UNAF |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
0 |
2 |
2 |
4 |
0.05% |
|
Valid Votes |
50 |
438 |
260 |
263 |
1 |
362 |
340 |
308 |
35 |
64 |
263 |
1,885 |
3,599 |
7,868 |
100.00% |
| Rejected Votes |
3 |
17 |
7 |
13 |
0 |
26 |
17 |
5 |
4 |
1 |
15 |
441 |
107 |
656 |
|
| Total Polled |
53 |
455 |
267 |
276 |
1 |
388 |
357 |
313 |
39 |
65 |
278 |
2,326 |
3,706 |
8,524 |
|
| Registered
Electors |
62,022 |
62,089 |
67,133 |
52,986 |
89,454 |
63,752 |
68,783 |
70,251 |
47,188 |
55,499 |
62,781 |
|
|
701,938 |
|
| Turnout (%) |
0.08% |
0.73% |
0.40% |
0.52% |
0.00% |
0.61% |
0.52% |
0.45% |
0.08% |
0.12% |
0.44% |
|
|
1.21% |
| Source:
[21] |
2005
Presidential Election
Results of
the
2005 presidential elections for the Vanni District:
|
Candidate |
Party |
Votes per Polling Division |
Postal
Votes |
Displaced
Votes |
Total Votes |
% |
| Mannar |
Mullaitivu |
Vavuniya |
|
Ranil Wickremasinghe |
UNP |
20,463 |
372 |
33,553 |
2,234 |
9,176 |
65,798 |
77.89% |
|
Mahinda Rajapaksa |
UPFA |
2,183 |
510 |
7,936 |
1,356 |
5,212 |
17,197 |
20.36% |
|
Siritunga Jayasuriya |
USP |
160 |
2 |
276 |
2 |
80 |
520 |
0.62% |
| A.A. Suraweera |
JSP |
54 |
1 |
155 |
5 |
71 |
286 |
0.34% |
| Chamil Jayaneththi |
NLF |
50 |
1 |
68 |
5 |
9 |
133 |
0.16% |
|
Victor Hettigoda |
ELPP |
21 |
1 |
62 |
21 |
10 |
115 |
0.14% |
| A.K.J. Arachchige |
DUA |
44 |
0 |
37 |
1 |
25 |
107 |
0.13% |
| Aruna de Soyza |
RJP |
18 |
2 |
37 |
2 |
12 |
71 |
0.08% |
| Wije Dias |
SEP |
18 |
0 |
37 |
6 |
8 |
69 |
0.08% |
| Wimal Geeganage |
SLNF |
21 |
1 |
40 |
4 |
2 |
68 |
0.08% |
| Anura De Silva |
ULF |
21 |
1 |
33 |
1 |
6 |
62 |
0.07% |
| P. Nelson Perera |
SLPF |
7 |
0 |
15 |
0 |
5 |
27 |
0.03% |
| H.S. Dharmadwaja |
UNAF |
5 |
0 |
13 |
1 |
4 |
23 |
0.03% |
| Valid Votes |
23,065 |
891 |
42,262 |
3,638 |
14,620 |
84,476 |
100.00% |
| Rejected Votes |
361 |
11 |
766 |
79 |
181 |
1,398 |
|
| Total Polled |
23,426 |
902 |
43,028 |
3,717 |
14,801 |
85,874 |
|
| Registered Electors |
78,906 |
66,596 |
104,884 |
|
|
250,386 |
|
| Turnout (%) |
29.69% |
1.35% |
41.02% |
|
|
34.30% |
|
| Source:
[18] |
Results of the
2005 presidential elections for Trincomalee District:
|
Candidate |
Party |
Votes per Polling Division |
Postal
Votes |
Displaced
Votes |
Total Votes |
% |
| Mutur |
Seru-
wila |
Trinco
-malee |
|
Ranil Wickremasinghe |
UNP |
29,061 |
17,835 |
41,369 |
3,913 |
19 |
92,197 |
61.33% |
|
Mahinda Rajapakse |
UPFA |
18,817 |
21,353 |
10,878 |
4,621 |
11 |
55,680 |
37.04% |
|
Siritunga Jayasuriya |
USP |
338 |
142 |
299 |
13 |
0 |
792 |
0.53% |
| A.A. Suraweera |
JSP |
257 |
153 |
138 |
10 |
0 |
558 |
0.37% |
|
Victor Hettigoda |
ELPP |
45 |
56 |
133 |
42 |
0 |
276 |
0.18% |
| A.K.J. Arachchige |
DUA |
82 |
35 |
38 |
10 |
0 |
165 |
0.11% |
| Chamil Jayaneththi |
NLF |
32 |
50 |
65 |
10 |
0 |
157 |
0.10% |
| Aruna de Soyza |
RJP |
65 |
50 |
37 |
5 |
0 |
157 |
0.10% |
| Anura De Silva |
ULF |
45 |
29 |
56 |
2 |
0 |
132 |
0.09% |
| Wimal Geeganage |
SLNF |
16 |
26 |
27 |
2 |
0 |
71 |
0.05% |
| Wije Dias |
SEP |
18 |
14 |
33 |
2 |
0 |
67 |
0.04% |
| P. Nelson Perera |
SLPF |
22 |
9 |
24 |
1 |
0 |
56 |
0.04% |
| H.S. Dharmadwaja |
UNAF |
10 |
7 |
9 |
0 |
0 |
26 |
0.02% |
| Valid Votes |
48,808 |
39,759 |
53,106 |
8,631 |
30 |
150,334 |
100.00% |
| Rejected Votes |
542 |
406 |
956 |
190 |
0 |
2,094 |
|
| Total Polled |
49,350 |
40,165 |
54,062 |
8,821 |
30 |
152,428 |
|
| Registered Electors |
81,534 |
66,126 |
91,095 |
|
|
238,755 |
|
| Turnout (%) |
60.53% |
60.74% |
59.35% |
|
|
63.84% |
|
| Source:
[20] |
2005
Presidential Election
Results of the
2005 presidential elections for the Amparai district:
|
Candidate |
Party |
Votes per Polling Division |
Postal
Votes |
Total Votes |
% |
| Ampara |
Kal-
munai |
Pottu
-vil |
Saman-
thurai |
|
Ranil Wickremasinghe |
UNP |
44,218 |
29,316 |
55,467 |
24,969 |
5,228 |
159,198 |
55.81% |
|
Mahinda Rajapakse |
UPFA |
57,624 |
8,951 |
27,704 |
21,029 |
7,021 |
122,329 |
42.88% |
|
Siritunga Jayasuriya |
USP |
275 |
175 |
419 |
220 |
2 |
1,091 |
0.38% |
| A.A. Suraweera |
JSP |
418 |
125 |
314 |
201 |
14 |
1,072 |
0.38% |
|
Victor Hettigoda |
ELPP |
131 |
68 |
76 |
34 |
22 |
331 |
0.12% |
| Aruna de Soyza |
RJP |
127 |
19 |
93 |
54 |
4 |
297 |
0.10% |
| A.K.J. Arachchige |
DUA |
55 |
33 |
68 |
57 |
2 |
215 |
0.08% |
| Anura De Silva |
ULF |
58 |
43 |
73 |
26 |
3 |
203 |
0.07% |
| Chamil Jayaneththi |
NLF |
86 |
15 |
55 |
21 |
11 |
188 |
0.07% |
| Wimal Geeganage |
SLNF |
89 |
9 |
29 |
7 |
0 |
134 |
0.05% |
| P. Nelson Perera |
SLPF |
45 |
9 |
27 |
7 |
1 |
89 |
0.03% |
| Wije Dias |
SEP |
37 |
13 |
18 |
13 |
1 |
82 |
0.03% |
| H.S. Dharmadwaja |
UNAF |
16 |
3 |
16 |
3 |
0 |
38 |
0.01% |
| Valid Votes |
103,179 |
38,779 |
84,359 |
46,641 |
12,309 |
285,267 |
100.00% |
| Rejected Votes |
949 |
456 |
863 |
517 |
156 |
2,941 |
|
| Total Polled |
104,128 |
39,235 |
85,222 |
47,158 |
12,465 |
288,208 |
|
| Registered Electors |
136,738 |
62,251 |
129,798 |
66,666 |
|
396,453 |
|
| Turnout (%) |
76.15% |
62.03% |
65.66% |
70.74% |
|
72.70% |
|
| Source:
[18] |
Results of the
2005 presidential elections for the Batticaloa District:
|
Candidate |
Party |
Votes per Polling Division |
Postal
Votes |
Total Votes |
% |
Batti-
caloa |
Kal-
kudah |
Paddi-
ruppu |
|
Ranil Wickremasinghe |
UNP |
65,401 |
28,482 |
24,142 |
3,489 |
121,514 |
79.51% |
|
Mahinda Rajapakse |
UPFA |
15,798 |
11,105 |
905 |
1,028 |
28,836 |
18.87% |
|
Siritunga Jayasuriya |
USP |
474 |
214 |
201 |
3 |
892 |
0.58% |
| A.A. Suraweera |
JSP |
265 |
253 |
58 |
2 |
578 |
0.38% |
|
Victor Hettigoda |
ELPP |
136 |
43 |
28 |
18 |
225 |
0.15% |
| A.K.J. Arachchige |
DUA |
93 |
44 |
16 |
0 |
153 |
0.10% |
| Chamil Jayaneththi |
NLF |
51 |
52 |
42 |
4 |
149 |
0.10% |
| Anura De Silva |
ULF |
73 |
37 |
29 |
3 |
142 |
0.09% |
| Aruna de Soyza |
RJP |
51 |
52 |
19 |
2 |
124 |
0.08% |
| Wije Dias |
SEP |
41 |
43 |
19 |
1 |
104 |
0.07% |
| P. Nelson Perera |
SLPF |
18 |
28 |
13 |
0 |
59 |
0.04% |
| Wimal Geeganage |
SLNF |
20 |
12 |
10 |
1 |
43 |
0.03% |
| H.S. Dharmadwaja |
UNAF |
7 |
4 |
7 |
0 |
18 |
0.01% |
| Valid Votes |
82,428 |
40,369 |
25,489 |
4,551 |
152,837 |
100.00% |
| Rejected Votes |
970 |
503 |
247 |
58 |
1,778 |
|
| Total Polled |
83,398 |
40,872 |
25,736 |
4,609 |
154,615 |
|
| Registered Electors |
147,979 |
91,410 |
79,339 |
|
318,728 |
|
| Turnout (%) |
56.36% |
44.71% |
32.44% |
|
48.51% |
|
| Source:
[22] |
Dear Rajkumar
I am glad you are thinking and thinking aloud. This
type of brainstorming is very necessary and useful All these years we left
decisions with Vanni and followed them scrupulously without
any questions. Today the situation is totally different. Thamil Diaspora should
have a say.
1. At present our No. one enemy is Rajapakse
followed by India.
2. When you have two enemies in your hand you
should join with one of the enemy to defeat the main enemy.
3. It is dangerous to facilitate the re-election
of Rajapakse. He is not a loner like Fonseka. His politics is family politics.
4. During the 2005 election LTTE made a "mistake"
in asking people to boycott the elections. Their choice of Rajapakse was the
reason for their battle defeat. But to be charitable LTTEs decision was based
on two factors. (a) They enjoyed parity of military power. (2) The existence of
the de facto state of Thamil Eelam. Had the LTTE managed to defeat the
Sinhala army then their decision to boycott the elections would have proved
dead right. But unfortunately this did not happen. It was a big gamble and it
ended in total disaster.
5. We may hate India. Criticise India. Despise
India. But India is the regional power of South Asia/Indian Ocean. India
overruled US initiatives during the war. It overruled US, EU, UK opposition to
IMF loan to Sri Lanka. It even threatened to give the loan to Sri Lanka if IMF
said no. We should tackle India via TN. For this we should get more closer to
people and parties who can bring change.
6. With Rajapakse there will be more dictatorship
and nepotism. With Fonseka/Ranil there is some hope. I met a Sinhalese
Professor of Law who castigated LTTE decision to support Rajapakse indirectly. I
asked him what the difference is. He answered "With Ranil you can talk. With
Rajapakse you cannot do that." This is 100% true.
7. You cannot develop diplomatic links with China.
What has China to gain by supporting the Thamils? Nothing! Think practically.
My recommended strategy for the presidential
elections is as follows:
1) Defeat Rajapaakse and prevent his re-election.
This should be our number one priority. He is the known devil. His re-election
will spell disaster to Thamils and the present agony will continue. He will
depopulate Vanni, build military camps/bases and colonize same with Sinhalese
soldiers and Sinhalese thugs from Matara/Hambantota. In addition, MaNal Aru
borders will start moving towards North. He will do the same thing in the east.
To prevent his re-election no Thamil should vote for him.
2) Field R. Sampanthan or some other candidate.
like Kanagaratnam, MP who is in detention or some outsider like retired SC Judge
R.T. Wicknarajah, as the TNA candidate.
3) Ask Thamil voters to give their preference vote
to Sarath Fonseka. They can vote with their left hands. Remember he is a
civilian now.
4) If Rajapakse wins in the first round, that is,
50+ then nothing can be done. It did not matter whether Thamils voted for
Sampanthan or Fonseka.
5) If Rajaapase does not secure 50+ votes then the
preference votes cast to Fonseka might help him to win the elections.
6) No repeat mistake like 2005.
Thangavelu
From:
Thamil Anban
To:
thanga
Sent:
Saturday, December 05, 2009 11:24 AM
Subject:
Presidential Elections
Anbu Aiya,
When I was reading your comments on one of the article in thamilvaddam, you
opined that we should vote for Fonseka. I think this is dangerous for the
following reasons:
-
USA is never for Tamil Eelam
-
Fonseka is backed by USA (and indirectly the EU)
-
Why our efforts (ahimsa) to stop the carnage went unnoticed by
the world?
-
It's because there is no need for them in us. Believe me, once
Fonseka wins, the western world will utterly forsake us.
-
The western world shows that they support you now is because
they have a need in us in countering the pro-China Rajapaksha
-
If Fonseka wins, the western world has no need in us and
Fonseka will be their puppet
-
After that the diaspora Thamils' activities will be curtailed
and this is detrimental as they are the ones who are given the task to cary it
to the next level
-
Our biggest diplomatic mistake is not developing links with
China. We need to play that China card carefully with the West.
-
Rather than making Fonseka to win and endangering our overseas
activities, we'll live with the known devil.
Please clarify me.
Thamilanban.
| Votes per Polling Division -
1982 Presideential Elections |
Postal
Votes |
Total Votes |
% |
Chavaka
-chcheri |
Jaffna |
Kankesan
-thurai |
Kayts |
Kilino
-chchi |
Kopay |
Manipay |
Nallur |
Point
Pedro |
Udupiddy |
Vaddu
-koddai |
|
Kumar Ponnambalam |
ACTC |
9,742 |
9,319 |
6,065 |
8,353 |
9,822 |
4,984 |
7,514 |
8,979 |
5,367 |
5,779 |
9,741 |
1,598 |
87,263 |
40.03% |
| Hector Kobbekaduwa |
SLFP |
6,128 |
3,258 |
9,523 |
3,393 |
4,188 |
13,678 |
9,008 |
4,330 |
6,348 |
8,155 |
7,770 |
1,431 |
77,300 |
35.46% |
|
Junius Jayewardene |
UNP |
3,629 |
6,419 |
3,771 |
4,067 |
3,616 |
3,546 |
4,463 |
4,831 |
3,198 |
2,282 |
3,700 |
1,253 |
44,780 |
20.54% |
|
Colvin de Silva |
LSSP |
419 |
134 |
310 |
157 |
171 |
423 |
483 |
332 |
217 |
353 |
257 |
120 |
3,376 |
1.55% |
|
Rohana Wijeweera |
JVP |
204 |
176 |
341 |
119 |
188 |
379 |
559 |
244 |
189 |
208 |
380 |
111 |
3,098 |
1.42% |
| Vasudeva Nanayakkara |
NSSP |
125 |
186 |
184 |
98 |
102 |
182 |
298 |
243 |
150 |
224 |
255 |
129 |
2,186 |
1.00% |
| Valid Votes |
20,247 |
19,502 |
20,194 |
16,187 |
18,087 |
23,282 |
22,330 |
18,959 |
15,469 |
17,001 |
22,103 |
4,642 |
218,003 |
100.00% |
| Rejected Votes |
1,205 |
711 |
1.078 |
943 |
1,012 |
1,023 |
1,069 |
894 |
585 |
816 |
1,076 |
198 |
10,610 |
|
| Total Polled |
21,452 |
20,213 |
21,272 |
17,130 |
19,099 |
24,305 |
23,399 |
19,853 |
16,054 |
17,817 |
23,179 |
4,840 |
228,613 |
| Registered Electors |
44,597 |
42,296 |
51,681 |
42,563 |
39,773 |
49,577 |
48,930 |
49,233 |
34,859 |
43,990 |
46,206 |
|
493,705 |
| Turnout (%) |
48.10% |
47.79% |
41.16% |
40.25% |
48.02% |
49.02% |
47.82% |
40.32% |
46.05% |
40.50% |
50.16% |
|
46.31% |
| Source:
[5] |
e d Summary
of the 1982 Sri Lankan presidential election
| Candidate |
Party |
Votes |
% |
|
Junius Jayewardene |
United National Party |
3,450,811 |
52.9 |
|
Hector Cobbekaduwa |
Sri Lanka Freedom Party |
2,548,438 |
39.1 |
|
Rohana Wijeweera |
Janatha Vimukthi Peramuna |
273,439 |
4.2 |
|
G.G. Ponnambalam |
All Ceylon Tamil Congress |
173,934 |
2.7 |
|
Colvin R. de Silva |
Lanka Sama Samaja Party |
57,532 |
0.9 |
|
Vasudeva Nanayakkara |
Nava Sama Samaja Party |
17,006 |
0.3 |
|
Total |
6,441,677 |
100.0 |
|
Invalid votes |
80,470 |
|
|
Total cast |
6,522,147 |
|
Source:
[3
கருத்துக்கள்