----- Original Message -----
From: raja cholan
To: thanga
Sent: Friday, January 29, 2010 4:48 PM
Subject: Re: There was no informed or conscious boycott. To claim otherwise is midsummer madness
சோழன் யாரென்று தெரியவில்லை. வயது
போனவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்றால் பல நாடுகளில்
>அரசியல்வாதிகளில் பாதிப்பேர் காணாமல் போய்விடுவார்கள். மன் மோகன் சிங் வயது
76. அத்வானி வயது 82. கருணாநிதி 86.
If karunanidhi retired and seeman was in power we would have had tamil eelam
by now.
Small correction, I am not against older gentlemen in politics, I am against
older gentlemen who are against tamil eelam being in tamil politics.!
Older gentlemen for tamil eelam would always be supported by tamils of all
ages.
2010/1/29 thanga <athangav@sympatico.ca>
தமிழீழம் தனிநாடு என்பது தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களித்தபடியால்தான் வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கிறது. தேர்தலைப் புறக்கணித்திருந்தால் அது தெரிந்திருக்காது. மேலும் தேர்தலைப் புறக்கணித்திருந்தால் வட - கிழக்கில் மகிந்த இராசபக்சேதான் வென்றிருப்பார். வென்றிருந்தால் தானே முழு இலங்கைக்கும் சனாதிபதி என்று மார் தட்டியிருப்பார்.
2005 இல் விடுதலைப் புலிகள் தேர்தலை உத்தியோகப்பற்றற்ற முறையில் புறக்கணித்ததை வைத்து 2010 இலும் அதே புறக்கணிப்பைச் செய்யச் சொல்வது முட்டாள்தனம். அப்போதிருந்த களநிலை வேறு. இப்போதுள்ள கள நிலை வேறு.
இந்தத் தேர்தலை தமிழர் தாயகப்பகுதிகளில் வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் புறக்கணித்துள்ளனர் என்பது
கஜேந்திரனின் கற்பனை. வாக்கு அளிக்காதவர்கள் எல்லாம் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்று கொள்ளலாமா? அப்படியென்றால் நடக்கிற ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 30 விழுக்காட்டு மக்கள் தேர்தலைப் புறக்கணித்ர்கள் என்று சொல்வதும் சரியாக இருக்கும்.
கஜேந்திரன் கனவுலகில் இருந்து பூமிக்கு வரவேண்டும். மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் அறிக்கை விட்டார். கஜேந்திரன் அப்படிச் செய்தாரா? பின் எதற்காக மக்கள் தேர்தலைப் புறக்கணித்துவிட்டார்கள் என்று தானே தனது முதுகில் தட்டிக் கொள்ளலாம?
சரி உண்மை நிலை என்ன? யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர் தொகை 630,548 ஆகும். .
இவர்களில் 26.66 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளார்கள். காரணம் என்னவென்றால் யாழ்ப்பாணத்தில் 630,548 வாக்காளர்கள் இருக்கவில்லை. அப்படித்தான் உதயன் ஆசிரியர் வித்தியாதரன் சொன்னார். அங்குள்ள மொத்த மக்கள் கையே 5 இலட்சம் மட்டுமே தேறும். காரணம் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட வாக்காளர் பட்டியல் 1982க்குப் பின்னர் திருத்தப்படவில்லை. ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களது பெயர்கள் அந்த பட்டியலில் இருக்கிறது. கிளிநொச்சித் தொகுதியை எடுத்துக் கொண்டால் அங்குள்ள வாக்காளர் தொகை 90,841 ஆகும். ஆனால் 5708 க்காளர்களே (6.28விழுக்காடு) வாக்களித்துள்ளார்கள். இதற்குக் காரணம் இடப்பெயர்வு. அங்குள்ள மக்களில் பல ஆயிரம் நெடுந்தீவு, அனலை தீவு, யாழ்ப்பாணக் குடாநாடு என இடம்பெயர்ந்துள்ளார்கள். பலர் போரினால் இறந்து போனார்கள்.
ஆட்சிமாற்றம் வேண்டும் என்று த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆம் என வாக்களித்தவர் கஜேந்திரன். அப்படியென்றால் பொன்சேகாவுக்குப் போடாமல் ஆட்சிமாற்றத்தை எப்படிக் கொண்டுவருவது?
தமிழீழம் தனி நாடடென்பது மக்கள் வாக்களித்தபடியால்தான் நிரூபணமானது. தேர்தலைப் புறக்கணித்தல்ல?
யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுக்கவில்லை. மாறாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்றே அறிக்கை விட்டார்கள். கஜேந்திரனுக்கு இது கூடத் தெரியவில்லையா?
ஆட்சிமாற்றம் வேண்டும் என்று த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆம் என வாக்களித்தவர் கஜேந்திரன். அப்படியென்றால் பொன்சேகாவுக்குப் போடாமல் ஆட்சிமாற்றத்தை எப்படிக் கொண்டுவருவது?
எனவே இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் "தமிழர் தாயகப்பகுதிகளில் வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று முடிவு கட்டி அறிக்கை விடுவது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.
சோழன் யாரென்று தெரியவில்லை. வயது போனவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என்றால் பல நாடுகளில் அரசியல்வாதிகளில் பாதிப்பேர் காணாமல் போய்விடுவார்கள். மன் மோகன் சிங் வயது 76. அத்வானி வயது 82. கருணாநிதி 86.
அது சரி வெளிநாட்டில் வாழும் ஜெயானந்தமூர்த்தியால் எப்படி கட்சி நடத்த முடியும்? எப்போதும் வாய்வீரம் பேசும் கஜேந்திரனும்
அங்கு தேர்தல் நடக்க இலண்டனில் குடும்பத்தாரோடு காலத்தைக் கழித்த கஜேந்திரகுமாரும் தலைமைக்குத் தகுதியானவர்களா?
நக்கீரன்
இலங்கை வரைபடத்தில் தமிழீழத்தையும் ஸ்ரீலங்காவையும் தனித் தனியாகக் காட்டிய தேர்தல் முடிவுகள்!
நக்கீரன்
பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாடியவர்
பாரதியார்.
சிறிலங்காவில் பேயாட்சிதான் நடக்கிறது. அந்தப் பேயாட்சியின் தலைவர்
மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். அதே நேரம் தமிழீழத்தில் அவர்
படுதோல்வியைத் தழுவியுள்ளார்.
ஆறாவது ஆட்சித்தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த நொவெம்பர் மாதம் 23
ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்
டிசெம்பர் 17 ஆகும். தேர்தல் நடந்த நாள் சனவரி 26, 2010 ஆகும்.
இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க கால அவகாசம் இருந்தும்
தேர்தல் ஒன்றைச் சந்திக்க அவர் விரும்பியதற்குத் தக்க காரணம் இருந்தது.
விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டதை கிழமைக் கணக்கில் வெடிகொளுத்திக்
கொண்டாடிய மகிந்த இராசபச்சே அந்தத் தேர்தல் வெற்றியை வாக்குகளாக அறுவடை
செய்ய ஆசைப்பட்டார்.
முற்கூட்டி நடத்தப்பட்ட ஆட்சித்தலைவர் தேர்தலுக்கு வேறு காரணங்களும்
இருந்தன. வடக்கு மாகாணம் நீங்கலாக ஏனைய மாகாணங்களுக்கு நடந்த
தேர்தல்களில் ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி
பெற்றது. வெற்றி விழுக்காடு 60 விழுக்காட்டுக்கு மேல் இருந்தது.
இன்னொரு காரணம் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்மக்களது “ஆணையை”
யும் அவர் பெற விரும்பினார்.
தேர்தல் அறிவிப்பு வெளியிட்டபோது அவருக்கு எதிராகக் களத்தில் இரணில்
விக்கிரமசிங்கி ஒருவர் மட்டுமே காணப்பட்டார். இரணில் விக்கிரமசிங்கா
2001 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் நீங்கலாக அவர் சந்தித்த ஏனைய
தேர்தல் அனைத்திலும் தோற்றிருக்கிறார்.
2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 88 இருக்கைகளைக்
கைப்பற்றிய இரணில் விக்கிரமசிங்கியின் அய்க்கிய தேசியக் கட்சி அதில் 12
தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் உட்பட 30 .உறுப்பினர்களை ஆளும்
கட்சியிடம் பறிகொடுத்தது.
எனவே மகிந்த இராசபக்சே “நோஞ்சான்” ஆன இரணில் விக்கிரமசிங்கியோடு மோதி
எளிதில் அவரைப் புறங்கண்டு விடலாம் எனக் கணக்குப் போட்டார்.
இராணுவதளபதி சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் குதிப்பார் என மகிந்த
இராசபக்சே எதிர்பார்க்கவில்லை.
2005 ஆம் ஆண்டுத் தோதலில் 180,796 அதிகப்படி வாக்குகளால் வெற்றிபெற்ற
மகிந்த இராசபக்சே இம்முறை 1,842,749 அதிகப்படி வாக்குகளால்
வென்றுள்ளார். முறையே 2005 மற்றும் 2010 ஆண்டுத் தேர்தல் முடிவுகளைக்
கீழ்க்கண்ட அட்டவணை மூலம் தெரிந்துகொள்ளலாம்.
| ஆட்சித்தலைவர் தேர்தல் 2010 | |||||
| மாவட்டம் | மகிந்த இராசபக்சே |
விழுக்காடு |
சரத் பொன்சேகா | விழுக்காடு | வாக்களித்த-வர்கள் விழுக்காடு |
| யாழ்ப்பாணம் | 44154 | 24.75 |
113877 | 63.84 | 25.66 |
| வன்னி | 28748 | 27.31 |
70367 | 66.86 | 40.33 |
| மட்டக்களப்பு | 55663 | 26.27 |
146057 | 68.93 | 64.83 |
| அம்பாரை | 146912 |
47.92 |
153105 | 49.94 |
73.54 |
| திருகாணமலை | 146912 |
43.04 |
87661 | 54.09 |
68.22 |
| 422389 |
571067 | ||||
| நுவரேலியா | 151604 | 43.77 |
180604 | 52.14 | 14.77 |
இந்தத் தேர்தலில் மகிந்த இராசபக்சேயை நவீன துட்ட கைமுனு என்று
பார்த்த சிங்கள வாக்காளர்கள் அவருக்கு அமோக ஆதரவளித்துள்ளார்கள்.
மகிந்த இராசபக்சே சிங்கள பவுத்தர்கள் மற்றும் சிங்கள
கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில்
வென்றுள்ளார்.
பன்னிரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை ரூபா 10,000
ஆல் அதிகரிக்கப் போவதாக சரத் பொன்சேகா கொடுத்த வாக்குறுதியை
நம்பவில்லை. அதனால் அஞ்சல் மூல வாக்குகளில் 68 விழுக்காடு மகிந்த
இராசபக்சேக்கு விழுந்தன.
வட – கிழக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை,
அம்பாரை ( டிகமுகல்ல) மட்டக்களப்பு என அய்ந்து தேர்தல்
மாவட்டங்கள். இருக்கின்றன. இந்த அய்ந்து மாவட்டங்களிலும் சரத்
பொன்சேகா வெற்றி பெற்றிருக்கிறார். அத்தோடு மலையகத் தமிழர்கள்
செறிந்து வாழும் நுவரேலியா மாவட்டத்திலும் சரத் பொன்சேகா
வெற்றிவாகை சூடியிருக்கிறா. சரத் பொன்சேகா மற்றும் மகிந்த
இராசபக்சே இருவருக்கும் இந்த மாவட்டங்களில் கிடைத்த வாக்குகள்
பின்வருமாறு.
சிறிலங்கா ஆட்சித் தலைவர்
தேர்தல்2005-2010
|
|
நொவெம்பர் 17 2005
|
சனவரி 26 2010 | ||||
| வேட்பாளர் | மகிந்த இராசபக்சே |
இரணில்
விக்கிரமசிங்கி |
மகிந்த இராசபக்சே | சரத் பொன்சேகா; | ||
| கட்சி | அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி | அய்க்கிய தேசியக் கட்சி | அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி | பொது வேட்பாளர் | ||
| சொந்த மாவட்டம் | njd; khfhzk; | Nky; khfhzk; | njd; khfhzk; | njd; khfhzk | ||
| Pகிடைத்த வாக்குகள் ; | 4>887>152 | 4>706>366 | 5>972>882 |
4>147>638 |
||
| Pவிழுக்காடு | 50.29 | 48.43 | 57.85 |
40.17 |
||
|
|
|
மேலதிக வாக்குகள்; | 180>796 | 1>842>749 | ||
தமிழ்மக்கள் போலவே முஸ்லிம்கள் சரத் பொன்சேகாவுக்கே தமது ஆதரவை
வழங்கியுள்ளனர். முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட
சம்மாந்துறையில் சரத் பொன்சேகாவுக்கு 55.9 விழுக்காடும்
இராசபக்சேக்கு 44.42 விழுக்காடு வாக்குகளும் கிடைத்துள்ளன. அதே
போல் பொத்துவில் தேர்தல் தொகுதியில் சரத் பொன்சேகாவுக்கு 59.89
விழுக்காடும் மகிந்த இராசபக்சேக்கு 37.4 விழுக்காடு வாக்குகளும்
கிடைத்தன. திருகோணமலை மாவட்டம் மூதூர் தொகுதியில் சரத் பொன்சேகா 59
விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். இராசபக்சேக்கு 38 விழுக்காடு
வாக்குகளே கிடைத்தன..
போர் வெற்றிக்குப் பின்னர் இலங்கைத் தீவில் இன அடிப்படையில்
சிறுபான்மை, பெரும்பான்மை என்பது கிடையாது எல்லோரும் ஸ்ரீலங்கா
குடிமக்களே என்று சிங்கள – பவுத்த வெறியரான மகிந்த இராசபக்சே
சொன்னதைத் தமிழர்களும் முஸ்லிம்களும் இரசிக்கவில்லை என்பதே அவரது
படுதோல்விக்குக் காரணமாகும்.
| Candidate | Party | Votes | % | |
|---|---|---|---|---|
| Mahinda Rajapaksa | United People's Freedom Alliance | 6,015,934 | 57.88% | |
| Sarath Fonseka | New Democratic Front | 4,173,185 | 40.15% | |
| Mohomad Cassim Mohomad Ismail | Democratic United National Front | 39,226 | 0.38% | |
| Achala Ashoka Suraweera | Jathika Sangwardhena Peramuna | 26,266 | 0.25% | |
| Channa Janaka Sugathsiri Gamage | United Democratic Front | 23,290 | 0.22% | |
| W.V. Mahiman Ranjith | Independent | 18,747 | 0.18% | |
| Panagoda Don Prince Soloman Anura Liyanage | Sri Lanka Labour Party | 14,220 | 0.14% | |
| Sarath Manamendra | Nawa Sihala Urumaya | 9,684 | 0.09% | |
| M.K. Sivajilingam | Independent | 9,662 | 0.09% | |
| Ukkubanda Wijekoon | Independent | 9,381 | 0.09% | |
| Lal Perera | Our National Front | 9,353 | 0.09% | |
| Siritunga Jayasuriya | United Socialist Party | 8,352 | 0.08% | |
| Vickramabahu Karunaratna | Left Front | 7,055 | 0.07% | |
| Idroos Mohomad Ilyas | Independent | 6,131 | 0.06% | |
| Wije Dias | Socialist Equality Party | 4,195 | 0.04% | |
| Sanath Pinnaduwa | National Alliance | 3,523 | 0.03% | |
| Mohamed Musthaffa | Independent | 3,134 | 0.03% | |
| Battaramulle Seelarathana Thero | Jana Setha Peramuna | 2,770 | 0.03% | |
| Senaratna de Silva | Patriotic National Front | 2,620 | 0.03% | |
| Aruna de Zoyza | Ruhunu Janatha Party | 2,618 | 0.03% | |
| Upali Sarath Kongahage | United National Alternative Front | 2,260 | 0.02% | |
| Muthu Bandara Theminimulla | Okkoma Vesiyo – Okkoma Rajavaru Sanvidhanaya | 2,007 | 0.02% | |
| Total | 10,393,613 | |||
| Registered Voters | 14,088,500 | |||
| Total Votes cast | 10,495,451 (74.50%) | |||
| Invalid Votes | 101,838 | |||
| Valid Votes cast | ||||
பதவி, பட்டம், மிதிவண்டி, கழிவறை போன்றவற்றுக்கு சிங்கள – பவுத்த
வெறியரான மகிந்தா இராசபக்சேக்கு தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தும்
கூட்டி வைத்தும் மொத்தமாகவும் சில்லறையாவும் விற்று வயிறு
வளர்க்கும் டக்லஸ் தேவானந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன், கருணா,
பிள்ளையான் போன்றோருக்கு தமிழ்மக்கள் செம பாடம்
புகட்டியுள்ளார்கள். இந்தக் காக்கைவன்னியர்கள் முகத்தில் கரிபூசிக்
காறித் துப்பியுள்ளார்கள்.
தனது துரோகத்தை மூடி மறைக்க யாழ்ப்பாண மக்கள் வரலாற்றுத் தவறு
செய்து விட்டார்கள் என்று பிபிசி தமிழோசைக்கு வாயிலும் வயிற்றிலும்
அடித்து டக்லஸ் தேவானந்தா அழுது புலம்பியுள்ளார்.
இலங்கை முழவதிலும் மகிந்த இராசபக்சே 16 தேர்தல் மாவட்டங்களிலும்
சரத் பொன்சேகா 6 தேர்தல் மாவட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.
சென்ற தேர்தலில் மகிந்த இராசபக்சே, இரணில் விக்கிரமசிங்கி இருவரும்
தலா 11 தேர்தல் மாவட்டங்களில் வெற்றி பெற்றிருந்தார்கள்.
சரத் பொன்சேகா தனது சொந்தத் தொகுதியான அம்பலாங்கொடையில் படு தோல்வி
அடைந்துள்ளார். அவருக்கு 19,191 வாக்குகளும் ளே (35.98 விழுக்காடு)
மகிந்த இராசபக்சேக்கு 33,488 (62.79 விழுக்காடு) வாக்குகளும்
கிடைத்தன.
நுவரேலியா தேர்தல் தொகுதியில் பொன்சேகா 30,000 அதிகப்படியான
வாக்குகளால் கைப்பற்றியது ஆறுமுகம் தொண்டமானின் சந்தர்ப்பவாத
அரசியலுக்கு விழுந்த செம அடியாகவே பார்க்க வேண்டும். மத்திய
மாகாணத்தை கடந்த தேர்தலில் இரணில் விக்கிரமசிங்கி 250,000
அதிகப்படியான வாக்குகளால் வென்றிருந்தார்.
இதேபோல் மங்கள சமரவீர (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – மகாஜன) தனது
சொந்தத் தொகுதியான மாத்தறையில் (27,102 – 43.97 விழுக்காடு) மகிந்த
இராபச்சேயிடம் ( 33,945 – 55.07 விழுக்காடு) தோல்வி அடைந்தார்.
மகிந்த இராசபக்சேயின் வெற்றியின் இரகசியம் அவரிடம் இருந்த போர்
வெற்றி என்ற துரப்புச் சீட்டுத்தான். அந்த ஒற்றைத் துருப்பை
வைத்துக் கொண்டே அவர் சிங்கள - பவுத்த மக்களது வாக்குகளை அள்ளிக்
கொண்டார்.
தமிழ்மக்கள் மீது சிங்கள – பவத்த மக்கள் கொண்டுள்ள
வெறுப்புக்காரணமாகவே மகிந்த இராசபக்சேயின் ஆட்சியில் இடம்பெற்ற
ஊழல், குடும்ப ஆட்சி, 109 அமைச்சர்களைக் கொண்ட யானையளவு அமைச்சரவை,
வீண்விரயம், ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக சுதந்திர மலினம்,
மனிதவுரிமை மீறல்கள், அடக்குமறை, ஆணவம், காடைத்தனம், விலைவாசி
போன்றவற்றை அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை!
மேலும் ஆறு ஆண்டுகளுக்கு மகிந்த இராசபக்சே என்ற சிங்கள – பவுத்த
வெறியரது கைகளில் சிக்கியுள்ள தமிழினத்தின் எதிர்காலம் என்ன?
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு மகிந்த இராசபக்சே வட – கிழக்கில் தனது
பிடியை மேலும் இறுக்கும் திருப்பணியில் இறங்குவார். இவ்வளவு
காலமும் வட – கிழக்கை சிங்கள மயப்படுத்தவும் இராணுவ மயப்படுத்தவும்
மேற்கொண்ட முயற்சிகளுக்கு அப்பால் இப்போது பவுத்த மயப்படுத்தவும்
மகிந்த இராசபக்சே தயாராகிவிட்டார்.
ஏ9 பாதையில் 13 சின்னதும் பெரியதுமான பவுத்த விகாரைகள், நினைவு
தூபிகள் தமிழ்மக்களுக்குச் சொந்தமான மண்ணில் எழுப்பப்பட்டுள்ளன.
இனி அரசமரம் இருக்கும் இடம் எல்லாம் புத்தர் கொலு இருக்கப்
போகிறார்.
இந்தத் தேர்தலில் மகிந்த இராசபக்சே வெற்றி பெறுவதையே இந்தியா
விரும்பியது. மாறாக மேற்குலக நாடுகள் இரணில் விக்கிரமசிங்கி
ஆதரித்த சரத் பொன்சேகா வெற்றி பெறுவதையே விரும்பின. ஆனால் மேற்குலக
நாடுகளும் நலன்கள் என்று வரும்போது தங்களது சொந்த வணிக - பூகோள
அரசியல் நலன்களையே பாதுகாத்துக் கொள்ளவே விரும்பும் என்பதில்
அய்யம் இல்லை. ஏற்கனவே போர்க்குற்றங்கள, மனிதவுரிமை மீறல்கள்
பற்றிச் சலசலத்த அமெரிக்கா இப்போது இந்து சமுத்திரத்தில்
இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக அவற்றை அடக்கி வாசிக்க
முடிவு செய்துள்ளது.
மகிந்த இராசபக்சேயின் காட்டாட்சியில் தமிழ்த் தேசியத்தக்கும்
சிங்கள – பவுத்த தேசியத்துக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடையப்
போகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
தங்களது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நெஞ்சில் வலியோடு
ஏதிலிகளாக வாழும் எமது மக்கள் அவர்களது சொந்த மண்ணில் மீளக்
குடியமர்த்தப் படவேண்டும். சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருக்கும்
போராளிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
தாயகத்தில் உள்ள தமிழ்மக்களது அரசியல் தலைமையை – தமிழர் தேசியக்
கூட்டமைப்பைப் பலப்படுத்தி – எமது விடுதலையை வென்றெடுக்கப்
புலமபெயர் தமிழர்கள் ஒன்று சேர வேண்டும். தமிழர்களது தாயகம்,
தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் சுதந்திரமான,
இறைமையுள்ள தமிழீழ தனியரசை மீள்கட்டியெழுப்பி மீள் உருவாக்கம்
செய்யும் வரை நாம் ஓயப்போவதில்லை.
.jpg)
தேர்தலில் சிறுபான்மை மக்கள் சொந்தத்
தலைமைகளை நிராகரித்துள்ளனர் - என்.சரவணன்
6வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான 5வது ஜனாதிபதித்
தேர்தலின் இறுதி முடிவுகளின் படி மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார்.
தெர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வழங்கும் செய்தி என்பதன்
சாராம்ச விளக்கமே இது.
யாழ் மாவட்டத்தில் 26.66 சதவீத மக்களே வாக்களித்துள்ளனர். அதிலும்
அளிக்கப்பட்ட வாக்குகளில் 3,65 வீத வாக்குகள்
நிராகரிக்கப்பட்டுள்ளன. அளிக்கப்பட்ட வாக்குகளில் 64 சதவீதம் சரத்
பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தின் 11
தொகுதிகளில் ஒரு தெரகுதியில் அதாவது ஊர்காவற்துறை தொகுதியில்
மாத்திரமே மகிந்த வென்றுள்ளார் அதுவும் 635 வாக்குகள் மட்டுமே
மேலதிகமாக பெற்றுள்ளார்.
வன்னி மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் சரத் பொன்சேகா வெற்றி
பெற்றுள்ளார். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து
தொகுதிகளிலும் மகிந்த படு தோல்வியடைந்துள்ளார் சரத் பொன்சேகா 69
சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். திருகோணமலையில் சேருவில
தொகுதியைத் தவிர மூதூர் திருகோணமலை தொகுதிகளில் மகிந்த
தொல்வியடைந்துள்ளார். அம்பாறையிலும், அம்பாறை தொகுதியைத் தவிர எனைய
3 தொகுதிகளிலும் மகிந்த தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
சரத் பொன்சேகா வெற்றி பெற்ற இன்னொரு மாவட்டம் மத்திய
மாகாணத்திலுள்ள மலையகத் தமிழர்கள் அதிகமாக வாழும் நவரெலிய
மாவட்டமாகும். அங்கும் சரத் பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார்.
கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் அனைத்திலும்
மகிந்த தொல்வியடைந்துள்ளார். 15 தொகுதிகளில் 6 தொகுதிகளில் சரத்
பொன்சேகா வென்றுள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணிப்புகளின் படி தமிழர்களின்
வாக்குகள் திசை தெரியாதபடி சிதைந்துள்ளதாக கணிப்புகள்
வெளியிடப்பட்ட போதும், இன்றைய தேர்தல் முடிவுகளானது வேறும் பல
செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறது.
அரசுடன் இணைந்த அனைத்து தமிழ் கட்சிகளும் இத்தேர்தலில்
நிராகரிக்கப்பட்டுள்ளனர். அரசுடன் உள்ள முக்கிய தமிழ் கட்சிகளான,
வடக்கில் ஈ.பி.டி.பி, புளொட், மலையகத்தில் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ், மலையக மக்கள் கட்சி, கிழக்கில் டி.எம்.வி.பி என்பன
மகிந்தவுக்கு ஆதரவாக எத்தனை பிரச்சாரம் செய்த போதும் அவர்களின்
கருத்தை மக்கள் ஏற்காது தமது சொந்த முடிவினையே
எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. தமிழ் கூட்டமைப்பு சரத்
பொன்சேகாவின் கூட்டில் இருந்தது ஒரு பொருட்டல்ல. அவர்கள்
இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே வெளிப்பாடு ஏற்பட்டிருக்கும்
என்று கருதத் தோன்றுகிறது.
சரத்பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவை
வெற்றிபெறச் செய்ய அளிக்கப்பட்ட வாக்குகளில்லை. மகிந்தவை
தோல்வியடையச் செய்வதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளே என்று கூறலாம்.
கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள
முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள்
சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
கொழும்பில் சரத் பொன்சேகா வென்ற தொகுதிகளில் கிடைத்த வெற்றியில்
மனோ கணேசனுக்கு பங்குண்டு என்றும் கூறலாம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 வீத வாக்குகள் மட்டுமே
பதிவாகியுள்ளன. குறைந்தளவு வாக்குகள் பதிவான மாவட்டம் முல்லைத்தீவு
மாவட்டமே. மக்கள் தேர்தலில் ஆர்வமில்லையென்பதை இவை நிருபித்துள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 43 வீத வாக்குகளும், மன்னாரில் 34 வீத
வாக்குளுமே பதிவாகியுள்ளன. ஆக மொத்தத்தலில் வடக்கில் அனைத்து 5
மாவட்டங்களிலும் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே
பதிவாகியுள்ளன. இதற்கு மக்களின் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருந்த
போதும், அது முழுமையான காரணமாக இருக்க முடியாது என்று தெரிகிறது.
ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பின் வடக்கில் முழு பிரதேசங்களிலும்
தேர்தல் இடம்பெற்றுள்ளன. முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த மக்கள்
இறுதி நேரத்தில் அவசர அவசமாக குடியேற்றப்படுவதற்கு தேர்தல் ஒரு
முக்கிய காரணமாகவே இருந்தது.
ஆக மொத்தத்தில் இம்முறை தேர்தலானது, இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே
சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களில்
பெரும்பாலானோர் தெட்டத்தெளிவாக தென்னிலங்கை "தேசிய" அரசியல்
நீரோட்டத்தில் இருந்து பிரிந்து நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
குறிப்பாக தமிழ், மலையக மக்கள் தமது அரசியல் தலைமைகளுக்கு ஆப்பு
வைக்கவும் எம்மால் முடியுமென்று நிரூபித்திருக்கிறார்கள். மக்களின்
அரசியல் அபிலாசைகளை அத்தலைமைகள் பிரதிபலிக்கவில்லை என்றும்
அர்த்தம் கொள்ளலாம்.
மகிந்த அரசு வெளிப்படையாகவே ஒட்டுமொத்த அதிகாரத்தையும், அரச
வளங்களையும் துஸ்பிரயோகம் செய்து தமது மோசமான அராஜகத்தையும்,
அட்டுழியங்களையும் செய்தே இந்த வெற்றியை பெற்றனர் என்பது கண்கூடு.
ஊழல், மனித உரிமை உரிமை மீறல், கருத்துச் சுதந்திரப் பறிப்பு,
தொழிற்சங்கங்கள் மற்றும் இடது சாரிப் போராட்டங்களை மோசமாக அரச
இயந்திரத்தைக் கொண்டு தொடர்ச்சியாக நசுக்கி வந்தமை என மகிந்த
அரசுக்கு எதிரான அலை மிகுந்திருந்தது.
போர் வெற்றி மாத்திரமே தென்னிலங்கையில் மகிந்தவின் ஒரே ஒரு
துருப்புச் சீட்டாக இருந்தது. அந்த வெற்றி மயக்கத்திலிருந்து
மக்கள் மீள்வதற்குள் அந்த வெற்றியை பயன்படுத்த வேண்டுமென மகிந்த
அரசாங்கம் திட்டமிட்டது. அதற்கான தேர்தல் தான் இப்போது நடந்து
முடிந்தது. அதே வெற்றியை சம அளவில் பங்கு போடக்கூடியவரான முன்னாள்
இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகள் பொது வேட்பாளராக
நிறுத்தியபோதும் இறுதியில் எதிர்க்கட்சிகள்
தோல்வியடைந்திருக்கிறதென்றால் அதற்கான முக்கிய காரணங்கள் அரசின்
அதிகார துஸ்பிரயோகமும், போர் வெற்றி மயக்கத்திலிருந்து தென்னிலங்கை
மக்கள் இன்னமும் மீளவில்லை என்பதுமே.
வெகு விரைவில் நடத்தப்படவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்கான
ஒத்திகையாகவும் இந்தத் தேர்தலை அரசாங்கம் கருதியிருந்தது. அப்படி
நாடிபிடித்தறிவதற்கு இந்தத் தேர்தல் போதுமானதா என்பது
கேள்விக்குறியே. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழவிருக்கும் தேர்தல்
கூட்டணிகள் மற்றும் மக்கள் மீது ஏற்படுத்தப்படும் நம்பிக்கைகளே
அதன் முடிவைத் தீர்மானிக்கும். போர் வெற்றி எவ்வளவு காலம்
அரசாங்கத்துக்கு கை கொடுக்கும் என்பதையும் பொறுத்திருந்து
பார்ப்போம்.
யாரைப் பார்த்தாலும் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயரைத்தான் பார்த்துப் பேசுகிறார்கள். தமிழ்மக்களில் கத்தோலிக்கரது விழுக்காடு 10 விழுக்காட்டுக்கும் குறைவானதே. எஞ்சியவர்களின் முஸ்லிம்கள் 5 விழுக்காடு இந்துக்கள் 85 விழக்காடு. ஆனால் இந்து மடாதிபதி நல்லூர் ஆதீனத்தை யாரும் சென்று பார்ப்பதில்லை. அவருக்கும் அரசியலில் அக்கறை இல்லை. இந்த உலகத்தைப்பற்றி
அக்கறை இல்லை. சித்தம் சிவன்பால் என்று இருக்கிறார். இதனால்தான் இந்து மதம் தேய்ந்து வருகிறது. இந்துக்கள் என்று சொல்பவர்கள் இது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நால்வருக்குக் கொலை மிரட்டல்!
யாழ் பல்கலைக்கலைக்கழக விரிவுரையாளர்கள்
நான்கு பேருக்கு கொலை மிரட்டல்
நாட்டைக் காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினால் யாழ்
பல்கலைக்கலைக்கழக விரிவுரையாளர்கள் நான்கு பேருக்கு கொலை மிரட்டல்
விடுக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் நேற்றைய தினம் இரவு
பல்கலைக்கழக ஆண் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் வீசப்பட்டிருந்ததாக
பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நால்வரும் கடந்த காலங்களில் பொங்குதமிழ் நிகழ்வுகளில்
முன்னின்று செயற்பட்டவர்கள் என்றும் கடந்த இரண்டு வருடங்களாக
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிச் சென்றிருந்த இவர்கள் மீண்டும்
யாழ்பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இவர்கள் கடந்த காலங்களை போன்று தமது செயற்பாடுகளை மீண்டும்
ஆரம்பித்துள்ளனர் என்றும். அவர்களது செயற்பாடுகள் தொடர்ந்தால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யுத்தம் முடிந்து விட்டாலும் தமது
துப்பாக்கிக் குழல்கள் இன்னமும் ஓயவில்லை என்றும் குறிப்பிட்டு
வெளியிடப்பட்டுள்ளது.
அந்தத் துண்டுப் பிரசுரத்தின் கீழ் நாட்டைக் காக்கும் தேசியக்
கூட்டமைப்பு என்ற அமைப்பில் பெயர் பொறிக்கப்பட்டள்ளதாகவும் தெரிய
வந்துள்ளது.
நாட்டைக்காக்கும் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு கடந்த காலத்தில்
யாழ் குடாநாட்டில் பலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்ததும் அந்த
அமைப்பினால் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொது மக்களும்
மாணவர்களும் பின்னர் இராணுவப் புலனாய்வுத்துறை மற்றும் ஈபிடிபி யினரால்
சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடை பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே.
மட்டக்களப்பு,ஜன.20: மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள், சிங்களர்கள்தான் அதிகம். இவ்விரு வகுப்பாருமே ராஜபட்ச அரசின் நிர்வாகத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே அதிபர் தேர்தலில் புதிய வேட்பாளரான ஜெனரல் பொன்சேகாவையே ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளனர்.
இப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்துவிட்டதால் தமிழர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் எலி வளைகூட இல்லாதபடிக்கு எல்லா இடமும் சிங்களர்களின் ஆதிக்கத்திலும் கண்காணிப்பிலும் கொண்டு வரப்பட்டுவிட்டது. இதற்காக புதிய புதிய தொழில் திட்டங்களுக்கு இலங்கை அரசு கொழும்பிலிருந்தே அனுமதி அளிக்கிறது. அதற்குத் தேவைப்படும் நிலங்களை அளிப்பது, திட்டங்களுக்கு ஒப்புதல் தருவது போன்றவற்றை உள்ளாட்சி அமைப்புகள் உடனுக்குடன் செய்து முடிக்கின்றன.
பொன்சேகா புதிய துடைப்பம், நன்றாக செயலாற்றுவார் என்று நம்புகிறோம் என்கிறார் தனியார் நிறுவன மேலாளர் யோகராஜா.
ராஜபட்சவைப் போல பொன்சேகாவுக்கென்று தனி அரசியல் கட்சி ஏதும் கிடையாது; எனவே அவர் காப்பாற்ற வேண்டிய ஆதரவாளர்கள் கூட்டம் ஏதுமில்லை. எல்லா பிரச்னைகளையும் புதிய கோணத்தில் பார்த்து தீர்க்க முயற்சிப்பார் என்று நம்புகிறோம் என்றார் யோகராஜா.
போரில் விடுதலைப் புலிகளை வென்ற பிறகு செய்வதாகக் கூறியவற்றில் ஒன்றைக்கூட ராஜபட்ச அரசு செய்யவில்லை என்று தமிழர்கள் பட்டியலிடுகின்றனர்.
அனைத்து இனத்தவருக்கும் நீதி வழங்குவோம், மாகாணங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவோம், உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் வழங்குவோம், ஊழலற்ற நல்ல ஆட்சி வழங்குவோம், விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறியதில் ஒன்றைக்கூடச் செய்யவில்லை என்று அவர்கள் சாடுகின்றனர்.
கிழக்குப் பகுதியைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கு திட்டங்களை அமல் செய்வதாக ராஜபட்ச அரசு கூறியது. சாலைகளைப் போட்டார்கள். ஆனால் அந்தப் பணியின் துணை ஒப்பந்தத்தைக்கூட தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ கொடுக்காமல் அனைத்தையும் சிங்கள ஒப்பந்ததாரர்களைக் கொண்டே செய்து முடித்தார்கள். அதில் வேலைவாய்ப்பைக்கூட அளிக்கவில்லை என்கிறார் உள்ளூர்க்காரர் ஒருவர்.
மத்திய அரசு அங்கீகரித்த ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் உள்ளூர்க்காரர்கள் ஒருவரும் இல்லை, அத்துடன் சாலை போடும் பணிகளில் அவர்களில் யாருக்குமே அனுபவம் இல்லை என்று அதற்கு விளக்கம் தருகிறார் மூத்த அதிகாரி ஒருவர்.
வாய்ப்பே தராவிட்டால் அனுபவம் எப்படி கிடைக்கும் என்று தமிழர்களும் முஸ்லிம்களும் கேட்கின்றனர்.
மாகாண அரசிடம் பணம் இல்லை: கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையனிடம் உள்ள நிதி வசதி மாகாண அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கத்தான் போதுமானதாக இருக்கிறது; வளர்ச்சித் திட்டங்களை அதிபர் ராஜபட்சவின் சகோதரர் பாசில் ராஜபட்ச, அவருடைய பிரதிநிதி சுசாந்தபுஞ்சிநிலமே ஆகியோரின் சிறப்பு பணிக்குழு மூலம்தான் நிறைவேற்றுகின்றனர் என்று தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.
ராஜபட்சவின் இலங்கை சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவரும் தேசிய சமரசத்துக்கான அமைச்சரும் மட்டக்களப்பு பகுதிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான கர்னல் கருணாவை இலங்கை அரசு ஆதரிக்கிறது. அவர் மூலம் தங்களுடைய செல்வாக்கை வளர்த்துக்கொள்ள ராஜபட்ச விரும்புகிறார். ஆனால் அவரோ உள்ளூர் மக்களுக்காக எந்த நன்மையையும் செய்யவில்லை என்கின்றனர் மக்கள்.
இப்பகுதி முஸ்லிம்கள் பெரும்பாலும் வியாபாரிகள்; கணிசமானவர்கள் மோட்டார் வாகன ஓட்டிகள். கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசியால் அவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே முடியாமல் திண்டாடுகின்றனர்.
132 பேர் அமைச்சர்கள்: இலங்கையில் ராஜபட்ச தலைமையிலான அரசில் 132 பேர் அமைச்சர்கள், துணை அமைச்சர்களாக இருக்கின்றனர். இவர்களால் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் செலவாகிறது.
100 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் மத்திய அரசில் 48 அமைச்சர்கள்தான் இருக்கின்றனர். 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கைக்கு 132 பேர் அமைச்சர்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் பொன்சேகா. உலகிலேயே 90% ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருக்கும் ஒரே நாடு இலங்கைதான் என்றும் அவர் வேதனை பொங்க சுட்டிக்காட்டுகிறார்.
132 அமைச்சர்களுக்காக ஆண்டுதோறும் 400 கோடி செலவிடப்படுகிறது. 90 லட்சம் ஏழைகளுக்காக மொத்தமே 1000 கோடி ரூபாய்தான் செலவிடப்படுகிறது என்று ஒப்பிடுகிறார் பொன்சேகா.
ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மீதும் 65 ரூபாய் வரியாக விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்தாலே விலைவாசி வேகமாக இறங்கிவிடும் என்கிறார் பொன்சேகா.
இந்திய
தேர்தல் முடிவுகள் வெளி வரும் முன்பாகவே அனைவரையும் அழித்து போரை
முடிவுக்கு கொண்டு வந்தான் ஒரு கொலைகாரன். அந்தோ பரிதாபம்! அந்த
கொலைகாரனுக்கும் அதே தேர்தல்தான் தகுந்த பாடம் கற்பிக்கப் போகிறது.
செய்த பாவம் துரத்துகிறது. பிள்ளை குட்டிகளுடன் எப்படி தமிழர்கள்
ஒவ்வொரு இடமாக அலைந்தார்களோ அதே போல இந்த கொலைகாரனும் பிள்ளை
குட்டிகளுடன் மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு செல்லும் காலம்
வந்து விட்டது.
![]()
By நவீன் சென்னை
1/21/2010 8:13:00 AM
போன வருடம்
ஜன. 26 அன்று நாம் குடியரசு தினம் கொண்டாடிய வேளையில் ஈழத்தில்
1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். இது புலிகள் கல்மடுக்குள
அணையை தகர்த்து அதிக எண்ணிக்கையில் ராணுவத்தினர் இறந்த ஆத்திரத்தில்
கொலை செய்தார்கள். அதை தூங்கு மூஞ்சி பிரணாப் முகர்ஜியும் போய்
பார்த்தார். அந்தோ பரிதாபம்! இந்த வருடம் ஜன. 26 அன்று ஒரு கொலைகாரன்
நாட்டை விட்டு ஓடப் போகிறான். தமிழர்கள், சிங்களர்கள் இரு தரப்பிலும்
அதிக பேர் செத்தார்கள். ஆனால் போரில் உண்மையில் தோற்றது யார்?
![]()
திரு. ஸரான்
வணக்கம். சிறிலங்கா ஆட்சித் தலைவர் தேர்தலுக்கு இன்னும் எண்ணி 17 நாள்களே இருக்கின்றன. சரியாகவோ பிழையாகவோ (என்னைப் பொறுத்தளவில மிகச் சரியாக) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்த இராசபக்சே மீண்டும் ஆட்சித்தலைவராக வருவதற்கு எதிராக முடிவு எடுத்துள்ளது. அதன் மறுபக்கமாக சரத் பொன்சேகாவை ஆதரிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.
மகிந்த இராசபச்சே மீண்டும் பதவிக்கு வந்தால் வடக்கு இராணுவ மயப்படுத்துவதற்கும் வடக்கும் - கிழக்கும் சிங்கள மயப்படுவதற்கும் நிறைய வாய்ப்புண்டு. ஏற்கனவே ஆங்காங்கு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகிறது என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய கனடிய தமிழ் வானொலி அரசியல் களத்தில் ஆட்சித் தலைவர் தேர்தல் பற்றி மேலோட்டமாகவே பேசப்பட்டது. விரிவாகப் பேசப்படவில்லை. இந்த இருட்டடிப்பு திட்டமிடப்பட்டுச் செய்ததாகவே நான் நினைக்கிறேன்.
இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என நினைக்கிறேன். அதனை உறுதிப்படுத்த புலம் பெயர் தமிழர்கள் தங்கள் உறவுகளை அழைத்து சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு கேட்க வேண்டும்.
கடந்த யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளுர் ஆட்சித் தேர்தலில் மக்கள் த.கே.கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற பரப்புரையை வெற்றிகரமாக சிரிஆர் மற்றும் ரிவியை செய்தது.
நாங்கள் 17 இலட்ச ரூபாயை திரட்டிக் கொடுத்தோம்.
அதை விட வீச்சோடு இந்தத் தேர்தலில் சிரிஆர் மற்றும் ரிவியை பரப்புரை செய்ய வேண்டும். வரலாறு எங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்திருக்கிறது. அதனைப் புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்த வேண்டும்.
இதற்கான ஓழுங்கைச் செய்ய முடியுமா? நன்றி.
மிக்க அன்புடன்
நக்கீரன்
இலங்கையில் நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல்
1) இலங்கையில் நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக்
கூட்டமைப்பு முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என
எடுத்துள்ள முடிவு பற்றியும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின்
இரட்டை வேடம் பற்றியும் எனது கருத்துக்களை முன்வைக்க வேண்டிய கட்டாயத்
தேவை ஏற்பட்டுள்ளது.
நான் முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒரு பகிரங்க மடல்
எழுதியிருந்தேன். அதை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் அடிக்கடி என்னால் கருத்துக்களை வெளிக்கொணர
முடியவில்லை. காரணம் தற்போதைய சூழ்நிலையில் மறைவிட வாழ்க்கையும்
இக்கட்டான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதால் தாயகத்தில் ஒரு பகுதியில்
இருந்து கொண்டே செயற்பட வேண்டி உள்ளது.
நான் மாத்திரமின்றி என்னைப்போன்ற பலர் இவ்வாறான நிலையில் மறைந்திருந்தும்
மக்களோடு மக்களாக இருந்தும் செயற்பட வேண்டியுள்ளது. எமது விடுதலை என்ற
வேட்கை இன்னும் எம்மை விட்டு அகல வில்லை. வீழ்ந்துவிட்டோம் ஆனால்
மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்கின்றோம்.
இனி விடயத்திற்கு வருவோம். எதிர்வரும் இலங்கையின் ஐனாதிபதி தேர்தல்
தொடர்பாக கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு மக்களுக்கு திருப்தி கரமாக
இருக்கின்றதோ இல்லையோ ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வசதிக்கும்
தமது சொந்த தேவைக்கும் ஏற்ற வகையில் முடிவுகளை எடுத்துள்ளனர். இரு
பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் தங்களது சொந்த
நோக்கத்தைக் கருத்தில் கொண்டே செயற்பட்டுள்ளனர். அந்த இருவர் பற்றி
பின்னர் பார்ப்போம்.
முதலில் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐயா சம்பந்தன் அவர்களின்
வழிகாட்டலில் அவரின் பின்னால் சென்றுள்ளனர். சம்பந்தன் ஐயா ஆட்சி மாற்றம்
வேண்டும் என்றும் அதற்காக சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்று
கூறியுள்ளார். மகிந்தவின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டுமென கூறுகின்றார்.
ஆனால் அது உண்மைதான் இத்தனை கொடுமைகளைச் செய்த மகிந்தவின் ஆட்சியை
இல்லாமல் செய்வதே நல்லது. ஆனால் அவர் சரத்பொன்சேகா நல்லவர் மாதிரியும்
அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும்
தீர்ந்துவிடும் என நம்புகின்றாரா? அவர் துணிந்து நின்று மகிந்தவின்
ஆட்சியை கலைக்க வேண்டுமென கூறும் அளவிற்கு அவருக்கு தனித்துவமான துணிவு
கிடையாது. அவர் வாய் வீரம் பேசினாலும் உள்ளுர பயந்தவர். நான் வன்னியில்
வைத்து அவரைச் சந்தித்தபோதும் அவருடன் கதைத்தபோதும் இன்னும் சில
எம்.பிக்களின் கதைகளை வைத்தும் அவரின் பல பக்கங்களை அறிந்து கொண்டவன்.
இது எமக்கு எல்லோருக்கும் அப்போதே தெரிந்திருந்தது.
பதில் - நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது.
முன்னாள் போராளி என நினைக்கிறேன். ஆனால் இப்போது விரக்தி காரணமாகவோ
அல்லது வேறு காரணங்களுக்கோ எல்லோர் மீதும் சேறு பூசுகிறீர்கள்.
உள்நோக்கம் கற்பிக்கிறீர்கள். எண்பிக்க முடியாத குற்றச்சாட்டுக்களை
அடுக்கிறீர்கள். நீங்கள் ஒருவரே உத்தமர், சத்தியவான் என்று
நினைக்கிறீர்கள். மகிந்த இராசபக்சேயின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என
சம்பந்தர் கூறுகிறார் அது உண்மைதான் என்கிறீர்கள். அப்படியென்றால் சரத்
பொன்சேகாவுக்கு வாக்குப் போடாமல் அது சாத்தியமாகுமா? ஆட்சிமாற்றமும்
வேண்டும் சரத் பொன்சேகாவும் வேண்டாம் என்பதில் உள்ள முரண்பாட்டை நீங்கள்
கவனிக்கத் தவறிவிட்டீர்கள். அதாவது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
என்றவன் கதைமாதிரி.
(2) எனவே மகிந்தவை எதிர்ப்பது என்பது அவரால் மாத்திரம் எடுத்த முடிவு
அல்ல. அவருக்கு பின்னால் சில சக்திகள் உள்ளன. பொன்சேக்கா ஐனாதிபதியாக
வரவேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். இதற்கு இந்தியாவும்
எதிர்ப்பல்ல. எனவே இந்த வெளிநாடுகளின் துணையுடன்தான் அவர் இந்த
முடிவுக்கு வந்தார். இவருடன் சுரேஸ் பிறேமச்சந்திரன் மாவை ஐயா
ஆகியோருக்கும் தொடர்புள்ளது. இவர்கள் சேர்ந்துதான் இந்த முடிவை
எடுத்தனர். இதற்காக பல கோடி ரூபா டொலர்களும் கைமாறியுள்ளது. இந்த விசயம்
புரியாமல் ஏதோ சம்பந்தன் ஐயா மக்களுக்காக சரத்துடன் ஒப்பந்தம்
செய்துள்ளார் என நம்பி அவரின் பின்னால் சில எம்.பி;க்கள் சென்றுள்ளனர்.
பதில் - இதெல்லாம் உமது கற்பனை அல்லது பிரேமை.
முன்பு சம்பந்தர் இந்தியாவின் கைப்பொம்மை என்றீர்கள் இப்போது அவர்
அமெரிக்காவின் கைப் பொம்மை என்றும் சொல்கிறீர்கள். நான் அறிந்தவரை
இந்தியா தனது பொருண்மிய - பூகோள நலன்காரணமாக இராசபக்சே தேர்தலில் வெற்றி
பெற்று வருவதை விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. எனவே சம்பந்தரின் முடிவு
அவர் மற்றவர்கள் குற்றம்சாட்டுவது போல் இந்தியாவின் கைப்பொம்மையாக இருக்க
முடியாது. இந்த முடிவுக்குக் காரணம் "இதற்காக பல கோடி ரூபா டொலர்களும்
கைமாறியுள்ளது" என எந்த அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டை
முன்வைக்கிறீர்கள். இதையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும். கோடி ரூபா
டொலர் அல்ல ஒரு ரூபா டொலர் கைமாறியதாக உங்களால் எண்பிக்க முடியுமா? யார்
கொடுத்தார்கள்? எந்த வைப்பகம் மூலம் கொடுக்கப்பட்டது? என்பதை அருள்
கூர்ந்து சொல்ல முடியுமா? இப்படியான அடிப்படை இல்லாத
குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
(3) இதில் தங்கேஸ்வரி, அரியநேந்திரன், கனகசபை போன்ற
எம்.பிக்களுக்கு அரசியல் தெரியாது. இவர்கள் தற்செயலாக கருணாவின்
செல்வாக்குடன் வந்தவர்கள். தற்போதும் அவருக்கு நன்றிக் கடனாக உள்ளனர்.
இதை வெளிப்படையாகவே கனகசபை ஐயா கூறியுள்ளார். இவர்கள் அடுத்த தேர்தலில்
போட்டியிடுவது என்றால் சம்பந்தரின் பின்னால் சென்றே ஆகவேண்டும். இதுதான்
இவர்கள் இந்த முடிவுக்கு வந்தனர். இவர்களுக்கு எங்கே மக்களை பற்றிய
சிந்தனை உள்ளது.
பதில் - அப்படியே இருக்கட்டும். அரசியல்
தெரிந்தவர்கள் யார் யார் என்பதை சொல்லமுடியுமா?
(4) சிறில் அண்ணை தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவர். இதனால்
சம்பந்தரின் விசுவாசி அவரின் பின்னால் செல்லாவிட்டால் அடுத்த தேர்தலில்
போட்டியிட முடியாது என்ற பயமும் இவருக்கு உண்டு. இவரைப் பற்றி எனக்கு
நன்கு தெரியும். அவர் எம்.பியாக முன்பு பல தடவைகள் சந்தித்துள்ளேன்.
சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி வாழ பழகிக் கொண்டவர். எப்படியாவது
வாழ்ந்து கொள்வார். ஆனந்தன் எம்.பியும் இவரைப்போன்றவர்தான்.
பதில் - இப்படி எதற்கெடுத்தாலும் உள்நோக்கம் கண்டு
பிடித்து அவதூறு சொல்வது அழகல்ல. அது உங்கள் விரக்தியை தீர்க்கமட்டுமே
உதவும்.
(5) இனி இந்த தேர்தலில் இரண்டு பேரையும் ஆதரிக்கக் கூடாது என்று
கூறியவர்கள் என்ன காரணத்திற்காக அப்படி முடிவெடுத்தார்கள் என்றும்
பார்க்க வேண்டும். இந்த முடிவை எடுத்தவர்கள் மட்டும் சளைத்தவர்களா.
இதில் சிறிகாந்தா மற்றும் கிசோர் போன்றோர் ராஐபக்சவின் செல்லப்பிள்ளைகள்.
அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்புபவர்கள். எனவேதான் ஆட்சி
மாற்றம் பற்றி பேசாமல் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என
கூறியுள்ளனர். இவ்வாறு கூறினால் கட்சி எடுத்த முடிவுக்கும் தலை
சாய்த்துவிட்டு ராஐசக்சவையும் சமாளித்துச் செல்லலாம். அல்லது இருவரையும்
ஆதரிப்பதில்லை என கூறிவிட்டு ராஐபக்சவை மறைமுகமாக ஆதரிக்க
திட்டமிட்டிருக்கலாம். இதன் சூத்திரம் அவர்களுக்கும் இறைவனுக்கும் தான்
தெரியும்.
பதில் - நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.
சிறிகாந்தா பட்டிக்குள் இருக்க மறுக்கும் கறுப்பு ஆடு என்ற எண்ணம்
மக்களிடம் இருக்கிறது.
(6) சிறிகாந்தா பெரும் தொகை பணத்தை ராஐபக்சவிடம் பெற்றுவிட்டே
சிவாஐpலிங்கத்தை தேர்தலில் இறக்கியதாகவும் ஒரு நண்பர் எனக்கு சொன்னார்.
இதிலும் பிழை இருப்பதாகத் தெரியவில்லை.
பதில் - இது கதைதான். நீங்களே சொல்லி விட்டீர்கள்.
(7) இனி இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்கக் கூடாது என விரும்பும்
கNஐந்திரன், செல்வன் அடைக்கலநாதன், பத்மினி சிதம்பரநாதன், சிவாஐpலிங்கம்
ஆகியோர் பற்றி பார்க்க வேண்டும். இவர்கள் அனைவரும் நீண்டகாலம்
வெளிநாடுகளில் இருந்தவர்கள். அங்கு பல கூட்டங்களிலும் பேசியிருந்தவர்கள்.
இவர்களுக்கு இங்கு வந்தால் பெரும் ஆபத்தும் காத்திருந்தது. எனினும்
வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது இவர்கள் எதுபற்றியும் வாய்
திறக்கவில்லை.
முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பின் எல்லாமே முடிவடைந்துவிட்டது என்று
நினைத்துக் கொண்ட பத்மினி அக்கா முதன்முதலாக இங்கு வந்து சேர்ந்தார்.
பின் அவர் ஐனாதிபதி ராஐபக்சவை நேரடியாகச் சந்தித்து கை குலுக்கிக்
கொண்டார். அவரின் கையைக் குலுக்குவதற்கு அவரால் எப்படி மனம் வந்ததோ
தெரியவில்லை. அரசியலில் நீண்ட அனுபவமோ போராட்டத்தில் எந்தவித பற்றோ
பக்குவமோ இல்லாத இவரை அரசியலுக்குக் கொண்டுவந்ததே நாம் விட்ட தவறுதான்.
இவரை தேர்தலுக்கு வேட்பாளராக போட்டபோதே எமக்கு சந்தேகம் இருந்தது.
அப்போது நாங்கள் சிலர் இது பற்றி பொறுப்பாளர்களுடன் விவாதித்திருந்தோம்.
இவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல சலுகைகள்
வழங்கப்பட்டன. மிக முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு
அனுப்பப்பட்டார். ஆனால் அதனால் பெரியளவில் எமது போராட்டத்திற்கோ
சமுகத்திற்கோ நன்மை கிடைக்கவில்லை. ஆனால் அவரின் குடும்பத்திற்கே நன்மை
கிடைத்தது.
இவர் ஐனாதிபதியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்கு
வந்ததும் அவருக்கு ஆதரவாகவே செயற்பட வெண்டியிருந்தால் இரு
வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
பதில் - உடன்பாடு செய்து கொண்டார் என்பது நீங்கள்
வீசும் அடிப்படையில்லாத குற்றச்சாட்டு.
(8) சிவாஐpலிங்கம், செல்வன் அடைக்கலநாதன், கஜேந்திரன் ஆகியோரும் பசில்
ராஐபக்சே மூலம் ஐனாதிபதியுடன் கதைத்து ஒப்பந்தம் செய்தே இங்கு வந்து
சேர்ந்தனர். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு நாங்கள் நாட்டுக்குச்
சென்றால் எங்களை கொன்றுவிடுவார்கள் சிறையில் அடைத்துவிடுவார்கள் என்று
வீராப்பு பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் இங்கு வந்ததும் நடந்தது
என்ன? எந்தவித விசாரிப்போ விசாரணைகளோ தொல்லைகளோ இல்லாமல் வரவேற்புக்
கிடைத்தது. செல்வன் அடைக்கலநாதனை விசாரணை செய்தது கூட சிறிகாந்தாவினால்
மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடாகமாகத்தான் உள்ளது.
இவர்கள் எக்காரணம் கொண்டும் ஆட்சி மாற்றம் வேண்டுமென கேட்கமாட்டார்கள்.
அதற்காக செயற்படவும் மாட்டார்கள். அப்படி ஏதும் செய்தால் அல்லது
கதைத்தால் இவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக பசில் உள்ளே
போட்டுவிடுவார். இதனால் தங்களையும் காப்பாற்றி தங்கள் கதிரையையும்
காப்பாற்றிக் கொள்வதென்றால் இரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை
என அறிவிப்பது பின்னர் பசில் ஊடாக ஐனாதிபதிக்கு விசயத்தை விளங்கப்படுத்தி
அவருக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவது என்ற திட்டமே இவர்களிடம் உள்ளது.
பதில் - பதில் - உடன்பாடுகள் செய்து கொண்டார் என்பது நீங்கள் வீசும்
அடிப்படையில்லாத குற்றச்சாட்டு. மற்றவர்களைத் தூற்றுவதே உங்கள் முழு நேர
வேலையாக இருக்கிறது.
(9) இவர்கள் நாங்கள் பலமாக இருந்தபோது எமது பக்கமும் தற்போது சிங்கள
பேரினவாதத்தின் பக்கமுமாக இருப்பதைப் பார்க்கும்போது தமிழ் மக்களின்
தலைவிதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
பதில் - கவலையை விடுங்கள். மக்கள் முடிவெடுக்கட்டும்.
(10) சிங்கள நாட்டின் ஐனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தமிழ்
மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஒவ்வொரு வேட்பாளர்களும் தாம்
வெற்றி பெறுவதற்காக எமது தயவையே நாடுவார்கள். வெற்றி பெற்ற பின்பு
எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். இதுதான் வரலாறு இதற்காக நாம் எமது
இனத்தை விற்க முடியுமா? தமிழினத்தின் இரத்தத்தில் தோய்ந்த சரத்
பொன்சேக்காவின் கரத்தை பலப்படுத்துமாறு இவர்கள் எந்த முகத்துடன் தமிழ்
மக்களிடம் செல்ல உள்ளனர்.
பதில் - எத்தனை காலத்துக்குப் பழைய காலத்திலேயே நீங்கள் பயணிக்கப்
போகிறீர்கள்? ஒரு மக்களாட்சி முறைமை - அது எவ்வளவு பலவீனமாக இருந்தாலும்
- மக்கள் தங்கள் துருப்புச் சீட்டான வாக்குரிமையை பயன்படுத்த வேணடும்.
இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஆட்சித்தலைவரின் அதிகாரம் வவுனியாவோடு
நின்றுவிடாது. நின்றால் அந்தத் தேர்தலைப் பற்றி நாம் கவலைப்படாது
இருக்கலாம். ஆனால் யதார்த்தம் அதுவல்ல.
(11) கNஐந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென
கூறியிருந்தார். அவர் தனது கட்சி எடுத்த முடியிலேயே நின்று கொண்டார்.
அவரைப் பொறுத்த வரையில் கொள்கையுடன் செயற்பட்டார் என்றே கூறவேண்டும்.
ஏனெனில் அவர் ஏனையவர்களைப் போல் எந்த பக்கத்திற்கும் அடிபணிய வேண்டிய
தேவை இல்லை.
பதில் - மெத்த நல்லது.
(12) அடுத்து சிறையில் அடைபட்டிருக்கும் கனகரெத்திம் ஐயா. இவர்
தேசியத்தில் ஊறிப்போன ஒருவர். அவர் இன்று நேற்று அல்ல நான் கட்ட
காலத்தில் இருந்தே போராட்டத்திற்கென தன்னை அர்ப்பணித்தவர்.
முள்ளிவாய்கால்வரை தனது மக்களோடு மக்களாக இருந்து தற்போது அதற்காக
சிறையில் அடைபட்டுள்ளார். அவர் நினைத்திருந்தால் சண்டை தொடங்கியவுடன்
தனது குடும்பத்துடன் வெளியேறி இருக்க முடியும். ஆனால் அவர் அப்படி
செய்தது கிடையாது. இறுதிவரை அந்த மண்ணிலேயே இருந்தவர். இவரைப்போல் எந்த
ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் நடந்தது கிடையாது.
பதில் - சதாசிவம் கனகரத்தினம் சிறையில் வாடுவதற்கு
மகிந்த இராசபச்சே தான் காரணம். ஆட்சியை மாற்றினால்தான் அவரைச் சிறை
மீட்கலாம்.
(13) அடுத்து தற்போதும் வெளிநாட்டில் தங்கியுள்ள nஐயானந்தமூர்த்தி
அண்ணையை எடுத்துக் கொண்டால் அவர் இரண்டு பிரதான வேட்பாளர்களையும்
எதிர்த்திருந்தார். அவரைப்பொறுத்த வரையில் அவர் ராஐபச்சாவிடமோ
பொன்சகாவிடமோ மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இரண்டு பேரையும்
அவர் ஆதரிக்கவில்லை. இவரும் எமது இலட்சியப் போராட்டத்திற்காகவும்
தேசியத்திற்காகவும் நிறையவே அர்ப்பணிப்புகளைச் செய்தவர். இதனால் இன்று
இங்கு வரமுடியாத நிலையில் உள்ளவர். இன்னும் இவரைப் பற்றிச் கூறுவதனால்
2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பிளவு படும் அபாயம் ஏற்பட்ட போது அதை மிகவும் சாதுரியமாக எதிர்கொண்டு
முறியடித்தவர். மட்டக்களப்பு எம்.பிக்கள் கருணாவின் பக்கம் இருந்தபோது
அதை உடைத்துக் கொண்டு வெளியேறியவர். அன்றிலிருந்து இன்று வரை தமிழ்
தேசியத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டு வரும் ஒருவர்.
பதில் - நீங்கள் சொல்வது எனக்கும் உடன்பாடுதான்.
(14) எனவே இந்த நிலையில் தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழ் தேசியக்
கூட்டமைப்பு ஐனாதிபதி தேர்தலுக்கு எடுத்துள்ள முடிவு என்பது அவரவர்
வாழ்வுக்காகவும் சுயநலத்திற்காகவுமே என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
2005 ஆம் ஆண்டு ஐனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்கள் எடுத்த முடிவை பிழை
என கூறும் சம்பந்தன் ஐயா போன்றோருக்கு தமிழ் மக்கள் இனியும்
வாக்களிப்பார்களா என்பதை அடுத்து வரும் பொதுத் தேர்தல்தான் பதில்
கூறவேண்டும.
பதில் - அப்போது வி.புலிகள் தங்கள் படை பலத்தின்
அடிப்படையில் எடுத்த முடிவு சரியாக இருந்திருக்கலாம். இப்போது
திரும்பிப்பார்த்தால் அது பிழையாகப் படுகிறது. காரணம் களத்தில் ஏற்பட்ட
பின்னடைவுதான். இதைத்தான் சம்பந்தர் சொன்னார்.
முடிவாக கடந்த காலத்தை பட்டறிவின் அடிப்படையில் மீள் ஆய்வு செய்து அது
தரும் பாடங்பளைப் படித்துக்கொண்டு செல்லும் பாதையில் நம்பிக்கையோடும்
ஒற்றுமையோடும் பயணிப்போம். நன்றி
நன்றி
நக்கீரன்
சிங்கள - பவுத்த இனவாதி இராசபக்சேயை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும்
ஆட்சித்தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு கிழமையே எஞ்சியிருக்கின்றன.
ஆளும் கட்சி எதிர்க் கட்சி இரண்டும் சூடான பரப்புரையை முடுக்கி விட்டுள்
ளன. இராசபக்சேயைப் பொறுத்தளவில் அவர் அரசின் ஆள், நிதி, ஊடகம் போனற வளங்களைத் தாராளமாகப் பயன்படுத்தி வருகிறார்.சமுர்த்தி ஊழியர்கள் இராபச்சேயின் பரப்புரையில் வெளிப்படையாகக் கலந்து கொள்கிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அச்சு, ஒலி, ஒளி ஊடகங்கள் காலை மாலை இரவு என இராசபக்சே புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன.
மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சித்தலைவர் தேர்தல் நடந்திருந்தால் மகிந்த இராசபக்சே மிக எளிதாக வெற்றிவாகை சூடியிருப்பார். போட்டி ஒருதலைக் குதிரை ஒட்டமாக இருந்திருக்கும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியை வாக்குகளாக மாற்றி அதனை அறுவடை செய்யலாம் என
மகிந்தா இராசபக்சே கணக்குப் போட்டார். விடுதலைப் புலிகளைப் போரில் அழித்தொழித்த காரணத்தால் இராசபக்சே சிங்கள மக்களிடம் ஒரு நவீன துட்ட கைமுனு எனக் காட்சி தருகிறார். அரச சார்பு ஊடகங்களும் அரசு கட்டுப்பாடு ஊடகங்களும் இராசபக்சேயை அப்படித்தான் வருணிக்கின்றன. அவர்தான் நாட்டின் அரசன் என்றுகூட சில ஊடகங்கள் புகழாரம் சூட்டி மகிழ்கின்றனஆனால் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவின் அரசியல் நுழைவு மகிந்
த இராசபக்சேயின் வெற்றியைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. சரத் பொன்சேகா தேர்தல் களத்தில் குதிப்பார் என்பதை இராசபக்சே கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அதனால் இராசபக்சே போட்ட திட்டம் கட்டிய கோட்டை தவிடுபொடி ஆகலாம் என்ற நிலமை தென்னிலங்கையில் தோன்றியுள்ளது.இந்தச் சந்தடி சாக்கில் கட்சித் தாவல்களுக்கும் பஞ்சமில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் மூத்த தலைவர்க
ள் செல்லச்சாமி, யோசராசன், சச்சிதானந்தன் இராசபச்சேயை ஆதரிக்கும் தொண்டமானை விட்டு சரத்பொன்சேகா முகாமுக்குப் பாய்ந்துவிட்டார்கள்.மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகலா பிரபாகரனும் பொன்சேகா பக்கம் தாவிவிட்டார்.. ஆனால் பதவிக்கு ஆபத்தென்பதால் கட்சிமாறவில்லை! சும்மா சொல்லக்கூடாது.
அவர் பிழைக்கத் தெரிந்த புத்திசாலித்தனமான அரசியல்வாதி.மே மாதம் முதல் பனாகொட இராணுவ முகாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தையார் (அகவை 86) அங்கேயே சாவடைந்துவிட்டார். பலத்த போராட்டத்தின் பின் அவரது பூதவுடல் வல்வெட்டித்துறைக்குக் கொண்டு சென்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் எரிக்கப்பட்ட தீருவில் மயானத்தில் உரிய மரியாதையோடு தகனம் செய்யப்பட்டுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரது துணைவியார் பார்வதி விடுதலை செய்யப்பட்டுள்ளர்.
ஆனால் அவர்களோடு கைது செய்யப்பட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சதாசிவம் கனகரத்தினம் சிறையில் வாடுகிறார். எழுநூறுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் ஆண்டுக்கணக்காகச் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். தங்களை விடுவிக்குமாறு உண்ணாநோன்பில் குதித்துள்ள அவர்களது போராட்டம் தொடர்கிறது.
North Eastern Monthly
என்ற செய்தி ஏட்டின் ஆசிரியர் J.S. திசநாயகம் அமைதிக் காலத்தில் எழுதிய இரண்டு கட்டுரைக்கு ஒரு சிங்கள நீதிபதியால் இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது அவரைப் பிணையில் விட இராசபச்சேயின் கொடுங்கோல் அரசு இசைந்துள்ளது.மகிந்த இராசபச்சேயின் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசேப் பரராசசிங்கம், நடராசா ரவிராஜ், கிட்டினன்
சிவநேசன், தியாகராசா மகேஸ்வரன் போன்றோர்களது கொலையாளிகள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.இதேபோல் மகிந்த இராசபக்சே அரசின் தமிழின அழித்தொழிப்பபின் (
Genocide) ஒரு கூறாகக் சிவராம் உட்பட 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த 34 இல் 30 பேர் தமிழர்கள் ஆவர். மேலும் 29 தமிழ் - சிங்கள ஊடகவியலாளர்கள் கொடிய சிங்கள அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பியுள்ளார்கள்.நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஒரு இராசதந்திரமான முடிவு என எல்லோராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் சரத் பொன்சேகா மற்றும் அய்க்கிய தேசியக் கட்சித் தலைவர் இரணில் விக்கிரமசிங்கா இருவரோடும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பத்துப் பொருள்பற்றி உடன்பாடு காணப்பட்டுள்ளது.
பொது நிருவாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்தல், துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல், இடம்பெயர்ந்த மக்களை மீள ்குடியேற்றுதல் மற்றும் மறு வாழ்வளித்தல், சிங்களப் படையினரால் வல்வளைப்புக்கு ஆட்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைத்தல், குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான சான்றில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவித்தல் போன்றவற்றில் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இதில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் மறுவாழ்வளித்தல், மக்களை அவர்களது சொந்த வீடுகளில் மீள்குடியேற்றுதல் முக்கியமானவை ஆகும்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சார்பில் சிங்கள அரசியல் தலைமைகளோடு எழுதப்பட்ட உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டுள்ளன. இந்த உடன்பாட்டுக்கும் அதே கதி ஏற்படலாம். இருந்தும் ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்பை நாம் நழுவ விடக் கூடாது.
ஆட்சிமாற்றத்துக்கு ஆதரவு அளிப்பதாக சிவாஜிலிங்கம் சொல்கிறார். ஆனால் அந்த ஆட்சி மாற்றம் இராசபக்சேயைத் தோற்கடித்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை விளங்கிக் கொள்ள மறுக்கிறார். இராசபக்சேயைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் பொன்சேகாவை தமிழ்மக்கள் ஆதரித்தால்தான் முடியும். இந்தத் தருக்க நுணுக்கம் (
logic) சிவாஜிலிங்கத்துக்கு ஏன் புரியவில்லை என்பது புதிராக இருக்கிறது. நல்ல தேசியப் பற்றாளரான அவர் ஏன் கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறி தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார் என்பதும் தெரியவில்லை. அவருக்கோ அல்லது விக்கிரமபாகு கருணரத்தினாவுக்கோ மக்கள் போடும் வாக்குகள் வீணான வாக்குகள் ஆகும்.எதிர்பார்த்தது போலவே சம்பந்தன் - பொன்சேகா எழுதிக் கொண்ட இந்த உடன்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது, பிரிக்கப்பட்ட கிழக்கை மீண்டும் இணைக்க பொன்சேகா ஒப்புக் கொண்டுள்ளார் என மொனறாக்கலில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மகிந்த இராசபக்சே அலறியிருக்கிறார். தனது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் வடக்குக் கிழக்கை இணைக்கப் போவதில்லை என அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை தேசிய கவிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பவுத்த மதப் பாடசாலை ஆசிரியர்கள், கைப்பணிப்பொருள் கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றும்போது இராசபக்சே மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இனவெறியின் மொத்த வடிவான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பிரபாகரன் மீண்டும் உயிர் பெற்று வருவார் எனப் புலம்பி இருக்கிறார்.
சிங்கள - பவுத்த இனவெறியர்கள் இவ்
வாறான இனவாதத்தைக் கக்குவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. சரத் பொன்சேகா இந்த உடன்பாட்டின் மூலம் சிங்களவர்களை தமிழர்களுக்கு விலை பேசி மொத்தமாக விற்றுவிட்டார் என்ற வழக்கமான குற்றச் சாட்டும் மிக விரைவில் அவர் மீ:து வீசப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.யாழ்ப்பாணம் சென்ற இராசபக்சே இனச்சிக்கலுக்கு என்ன தீர்வு என்பதைச் சொல்லவில்லை. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்ற புளித்துப்போன பேச்சைத்தான் பேசியிருக்கிறார்.
ஈழம், தமிழீழம் என்ற சொற்களைக் கொண்டுள்ள தமிழர்களுடைய அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும் (ஈழ மக்
கருத்துக்கள்