முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் மகிந்த இராசபக்சே!

நக்கீரன்

சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை மாதம் காதவழி போகும் தெனாலி இராமன் குதிரை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

மாகாண சபைக்குக் காணி, காவல்துறை அதிகாரம் கொடுக்க முடியாது என சிங்கள அரசு பிடிவாதம் பிடிக்கிறது. வட - கிழக்கு இணைப்பும் நடக்காது என அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.

மாகாண சபை என்னதான் நோஞ்சலாக இருந்தாலும் அதற்குச் சட்டப்படி சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. காணி, காவல்துறை  அதிகாரம் 13 ஆவது சட்ட திருத்தத்தில் மாகாண சபைக்குரிய அதிகாரங்களாகும்.  அது அண்மையில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.  சிங்கள அரசு பட்டின, நாடு திட்டமிடல் சட்டத்தில்  திருத்தம் கொண்டுவந்த போது உச்ச நீதிமன்றம் காணி அதிகாரம் மாகாணசபைக்கு இருப்பதால் எல்லா  மாகாண சபைகளின் ஒப்புதல் வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருக்கிறது.  இந்தச் சட்டத் திருத்தம்  சூழல் பாதுகாப்பு, பாதுகாப்பு, கட்டிடக்கலை மற்றும் வரலாறு மற்றும் தெய்வீகம் தொடர்பான எந்த நிலப்பரப்பையும் பட்டின, நாடு திட்டமிடல் அதிகார சபை விரும்பினால் பிரகடனத்தின் மூலம் கையகப்படுத்த வழிவகுத்தது. 

Only last week the Supreme Court held that the Bill introduced by the Government to amend the Urban Country Planning Ordinance to enable authorities concerned to declare land areas as conservation areas, protected areas, architectural and historical areas and sacred areas is invalid as the bill was about a matter (land) set out in the Provincial Council list and shall not become law unless it had been referred by the President to EVERY PC. (http://www.lakbimanews.lk/index.php?)

சிங்கள அரசு மகிந்த சிந்தனையில் அடிப்படையில்தான் இயங்குகிறது.  அந்தச் சிந்தனையை நாம் புறம் தள்ளிவிட முடியாது.  காணி, காவல்துறை அதிகாரம் மாகாண சபைக்குப் பாரப்படுத்த முடியாது, வட - கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற சிங்கள அரசின் நிலைப்பாடு  மகிந்த சிந்தனையின் எதிர்விளைவு  என்பதைத் தமிழர் தரப்பு உணரவேண்டும்.  பேச்சு வார்த்தை இழுபறியில் இருப்பதற்கு இந்த மகிந்த சிந்தனைதான் காரணம்.

மகிந்த சிந்தனை முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஆட்சித்தலைவர் தேர்தலில் தான் அறிமுகமானது. அதில் தமிழர்களது அடிப்படைக் கோரிக்கையான தாயகம், தேசியம் மற்றும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட மாட்டாது என வெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ளது. வட - கிழக்கு இணைப்புக்கும் சம்மதிக்க முடியாது என மகிந்த சிந்தனையில் சொல்லப்பட்டது. இந்த மகிந்த சிந்தனையைத் தமிழர் தரப்பு அன்று கவனத்தில் எடுக்கத்தவறி விட்டது. இன்றைய எமது இக்கட்டான நிலைமைக்கு இந்தத் தவறு ஒரு முக்கிய காரணியாகும்.

அண்மையில் Deccan Chronicle  என்ற ஏட்டின் நிருபர் ஆர்.பக்வன் சிங் (R. Bhagwan Singh) அலரிமாளிகையில் வைத்து ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே அவர்களை செவ்வி கண்டார். போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை, இனச் சிக்கலுக்குத் தீர்வு இந்திய - சிறிலங்கா பற்றிய உறவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கான பதில்கள் மகிந்த சிந்தனையை எதிரொளிப்பதாக இருந்தன.   இனச் சிக்கல் தொடர்பான முக்கிய கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்.

பக்வன் சிங் - மேற்குலக நாடுகள் சிறிலங்காவில் நடந்தேறிய "போர்க் குற்றம் பற்றி விசாரணை வேண்டும் என வற்புறுத்துகின்றன. இது பற்றி என்ன செய்யப் போகிறீர்கள்?

இராசபக்சே -  மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் மிச்சசொச்சங்கள்தான் சிறிலங்காவுக்கு எதிராக எந்த அடிப்படையும் இல்லாத  குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். மேற்குலக நாடுகள் கஷ்மீர் மற்றும் சிறிலங்கா பற்றி தமது நாடாளுமன்றங்களில் பேசுகின்றன. ஆனால் அந்த நாடுகள் ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான். இராக் நாடுகளில் எதைச் செய்தார்கள் என்பது பற்றி வாய் திறப்பதில்லை. மேற்குலக நாடுகள்  தங்களது எடுபிடியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. நான் அப்படி இருக்க மறுக்கிறேன். 

பக்வன் சிங் - போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. வி.புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் தமிழர்களின் தன்னாட்சிக் கோரிக்கை பலமாக இருப்பதை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றி காட்டுகிறது. அப்படியென்றால் தமிழர் கரிசனைகளைத் தீர்க்க நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? யாழ்ப்பாண வணிகர் சங்கம்  ஒரு அரசியல் தீர்வு கிடைத்தால் ஒழிய புலம்பெயர் தமிழர்கள் இங்கு முதலீடு செய்யமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இராசபக்சே - இந்தத் தேர்தல்கள் ஒப்பீட்டு அடிப்படையில் இடம்பெற்றன. ததேகூ க்கு எதிராக கணிசமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள்.  தமிழர்களில் 54 விழுக்காட்டினர்  வட கிழக்குக்கு வெளியில் வாழ்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. யாழ்ப்பாண வணிகர் சங்கம்  எதை வேண்டும் என்றாலும் சொல்லலாம். ஆனால் வெளிநாடுகளில் வாழும் சிறிலங்கா தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். நாங்கள் ஒரு நிலையான அரசியல் தீர்வு குறித்து ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் அதற்குப் பரந்துபட்ட (மக்கள்)  ஆதரவு தேவை. குறிப்பாகப் போர் முடிந்த சூழ்நிலையில்.

பிரதேச தன்னாட்சி என்ற முழக்கத்தை பயங்கரவாதிகளும் அவர்களது அடிவருடிகளுமே பயன்படுத்தினார்கள்.  வேற்றுமையில் பலமான ஒற்றுமை காண்பதே இன்றைய தேவை.  பிரதேச தன்னாட்சி அதற்கான ஒரே வழி அல்ல.  சம வாய்ப்பு நல்ல அணுகுமுறை. சனநாயக சுதந்திரங்கள் மற்றும் உரிமைகள் பரவலாக்கப்பட்டு வடக்கில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இணங்க  துரித பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

க்வன் சிங் - அதிகாரப்  பகிர்வை எப்படிக் கையாளப் போகிறீர்கள்?

இராசபக்சே - அதிகாரப் பகிர்வைப் பொறுத்தளவில் வடக்கைத் தவிர நாங்கள் ஏனைய மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி முடித்துவிட்டோம். அங்கும் விரைவில் மாகாண சபை தேர்தல் நடைபெறும்.  எப்படி மாகாண நிருவாகங்களைப் பலப்படுத்தலாம், செம்மைப்படுத்தலாம் அவற்றின் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளைப் பரவலாக்கலாம் என்பது பற்றி நாம் பேச வேண்டும். இது ஒரு சனநாயக விரிவாக்கத்தின் படிமுறை. இதில் எல்லா சமூகங்களும் அரசியல் பிரிவுகளும் மற்றும் முக்கிய பொருளாதார வல்லுனர்களும் ஈடுபட வேண்டும்.

பக்வன் சிங் -   நீங்கள் முன்மொழிந்துள்ள நாடாளுமன்றத்  தெரிவுக் குழுவினால் பயன் இல்லை என்று பலர் சொல்கிறார்கள். காரணம் இதற்கு முன்னரும் பல குழுக்கள் உருவாக்கப்பட்டன.  ஆனால் அரசியல் சிக்கல் இருந்த மாதிரியே இருக்கிறது.

இராசபக்சே -  இந்தச் சிக்கலுக்கு நா.தெ. குழு நல்ல அணுகுமுறையாகும். காரணம் ஒரு மக்களாட்சியில் நாடாளுமன்றம்தான் எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.  கெட்டகாலமாக ததேகூ இதற்குத் தனது பிரதிநிதிகளை நியமிக்க மறுத்துவிட்டது.  ததேகூ இன் மனப்போக்கு  வி.புலிகளது மனப்போக்கை ஒத்து இருக்கிறது.

இவர்கள் கொடுக்கமுடியாதவற்றைக் கேட்கிறார்கள் - வட கிழக்கு இணைப்பு, காணி மற்றும் காவல்துறை அதிகாரம். உங்கள் நாட்டில் என்ன நடந்தது என்று பாருங்கள் இராகுல் காந்தி உத்திரபிரதேசத்தில் பயணம் செய்யும் போது அவரைக் கைது செய்ய முதல்வர் மாயாவதி முயற்சித்தார்.  நீர் நினைக்கிறீரா நான் கைது செய்யப்படுவதை (தமிழர்களுக்கு காவல்துறை அதிகாரம் கொடுத்தால்) விரும்புகிறேன் என்று?

ததேகூ புலம்பெயர் தமிழர்களால் வழிநடத்தப்படுகிறது என நினைக்கிறேன். புலம்பெயர் தமிழர் சமாதானத்தையோ அரசியல் தீர்வையோ  விரும்பவில்லை.  காரணம் அப்படிச் செய்தால் அவர்கள் வாழும் நாடுகள் அவர்களைத் திருப்பி அனுப்பிவிடும்.  ததேகூ விடுதலைப் புலிகளது பிரிவினை நிகழ்ச்சித் திட்டத்தை வைத்திருக்கிறது.  அதனைப் பெரும்பான்மை (சிங்கள)  மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  நான் ஒரு தீர்வு நோக்கிச் செயல்பட விரும்புகிறேன். ஆனால் ததேகூ ஒத்துழைக்க மறுக்கிறது.

பக்வன் சிங் - உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் போர்க்காலத்திலும் வடக்கில் நடைபெற்றது. அப்படி இருக்கும்போது மாகாணசபைத் தேர்தலை மட்டும் அங்கு ஏன் இப்போது நடத்த முடியாது?

இராசபக்சே - தேர்தல் மிக விரைவில் அங்கு நடத்தப்படும்.  ஆனால் மாகாண சபைக்கான தேர்தலின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். தேர்தல் மக்கள்  பங்குகொள்வதற்கு உண்மையான வாய்ப்பைக் கொடுக்கிறது. போர்க் காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வடக்கில் உள்ள மக்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.  வி.புலிகள் மக்களாட்சி முறைமைக்கு எதிராகச் செயல்பட்டார்கள். இன்னொரு காரணம் வாக்களிப்பு ஒரு பழைய வாக்காளர் இடாப்பை வைத்து நடத்தப்பட்டது. அதனால் ததேகூ  ஈட்டிய வெற்றியை  பெரிதாக எண்ணவேண்டியதில்லை.  வி.புலிகள் வடக்கில் மக்கள்தொகை கணக்கு எடுப்பதைத் தடுத்துவிட்டார்கள்.  சரியான தேர்தல் இடாப்புக்கள் தயாரிக்கப்பட்டதும் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தலாம்.

பக்வன் சிங் - தமிழர்கள் வடக்கு இப்போதும் பலமாக இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக முறையிடுகிறார்கள். மூன்று இலட்சம் மக்களை ஒரு இலட்சம் இராணுவத்தினர் கண்காணிக்கின்றனர்.  ஒரு நூல்நிலைய கூட்டம் என்றாலும் பள்ளிக்கூட நிகழ்ச்சி என்றாலும் இராணுவத்தின் அனுமதி தேவையாக இருக்கிறது. சிவில் நிருவாகத்தில் இராணுவ தலையீட்டை எப்போது நீக்கப் போகிறீர்கள்?

இராசபக்சே - வடக்கில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாழ்கிறார்கள்.  இராணுவத்தினரின் தொகை மக்கள் தொகைக்கு ஒப்பளவாக வைக்கப்படவில்லை. அங்குள்ள பாதுகாப்புத் தேவைக்கு ஏற்பவே இராணுவத்தினரின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது.  மூன்று தசாப்தங்களாகப் போர் நடந்த பிரதேசத்தில்  இராணுவம் தோற்றம் பெற்றிருப்பதை  இராணுவமயப்படுத்தல் என்று சொல்ல முடியாது. இராணுவம் உள்ளுரில் கட்டுமானப் பணிக்குத் தேவையான கைத்திறன் பற்றாக்குறையை ஈடுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  பாதுகாப்புத் தேவையைப் பொறுத்து இராணுவம் படிப்படியாக விலக்கப்படும்.

பக்வன் சிங் - தமிழர்கள் தங்களது காணிகளை இராணுவ தளங்கள் அமைக்கவும் அல்லது சிங்கள வணிகர்களுக்குக் கொடுக்கவும் அபகரிகப்படுவதாக அய்யப்படுகிறார்கள்.

இராசபக்சே - வி.புலிகள்தான் இப்படியான கட்டுக்கதைகளைப் பரப்புகிறார்கள். இராணுவத்தினரின் முகாம்கள் நாடு முழுதும் இருக்கின்றன. சிறிலங்காவின் ஆட்புல ஒருமைப்பாட்டையும் அதன் இறைமையையும் பாதுகாப்பது அவசியமாகும்.

யாழ்ப்பாணத்தில் வி.புலிகள் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் விரட்டிவிட்டார்கள். இதுதான் முதன்முறை நடந்த இனச் சுத்திகரிப்பு ஆகும். விரட்டப்பட்ட சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் யாராக இருந்தாலும்  அவர்கள் மீளவும் அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்பட வேண்டும். வடமாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தகைமை அரசின் நடவடிக்கைகளால் மாற்றப்பட மாட்டாது.

பக்வன் சிங் அவர்களுடைய கேள்விகளுக்கு ஆட்சித்தலைவர் மகிந்த இராபக்சே அளித்த பதில்கள் முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்தவன் கதையாக இருக்கிறது. பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுவதற்கான பழியை ததேகூ மீதே சுமத்துகிறார். காணி, காவல்துறை அதிகாரம் கேட்பது வி.புலிகள் கேட்ட தன்னாட்சிக்கு ஒப்பிடுகிறார். சிறிலங்காவில் முதலீடு செய்யப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் சொல்கிறார்.  தன்னாட்சி தேவையில்லை. அதனை சிங்கள மக்கள் விரும்பவில்லை. வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான் முக்கியம். சம வாய்ப்பு, சனநாயக சுதந்திரங்கள் மற்றும் உரிமைகள் பரவலாக்கப்பட்டு வடக்கில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இணங்க  துரித பொருளாதார மேம்பாட்டை மேற்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்.

தன்னாட்சிக் கோரிக்கை வி.புலிகள் காலத்துக்கு முந்தியது. 1976 இல்  வட்டுக்கோட்டை மாநாட்டில் வட கிழக்கு தமிழர் தாயகம், தேசியம்,  தன்னாட்சி உரிமை என்பவற்றை அடிநாதமாகக் கொண்ட பூரண சுதந்திரமும் தன்னாட்சியும் கொண்ட சோசலிச தமிழீழத்தை அமைப்போம்  என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 1977 இல் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு மக்களிடம் ஆணை பெறப்பட்டது. எனவே இந்தத் தன்னாட்சி கோரிக்கை வி.புலிகளால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. இதனை வி.புலிகளே பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இராசபக்சே வி.புலிகள்தான் இனச் சுத்திகரிப்பை முதன்முறையாக தொடக்கி வைத்தார்கள் என்கிறார். விரட்டப்பட்ட முஸ்லிம்கள், சிங்களவர்கள் அவர்களது சொந்தக் காணியில் குடியமர்த்தப்பட வேண்டும் என்கிறார். முஸ்லிம்கள் தங்கள் சொந்தக் காணிகளில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும் என்று வி.புலிகளே சொன்னார்கள்.  சிங்களவர்களுக்கு சொந்தமாக காணி இருந்தால் அதில் குடியமரலாம். வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களை அரசு திட்டமிட்டுக்  குடியேற்றுவதைத்தான் தமிழர்கள் எதிர்க்கிறார்கள். நாவற்குழி திட்டமிட்ட அரச ஆதரவோடான சிங்களக் குடியேற்றமாகும்.

மகிந்த இராசபக்கே இனச் சுத்திகரிப்புப் பற்றிப் பேசுகிறார். இப்படிப் பேச அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழர்களே திட்டமிட்ட இனச் சுத்திகரிப்புக்கு கடந்த 60 ஆண்டுகளாக உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். அதனை கிழக்கு மகாண மக்கள்தொகை புள்ளிவிபரம் மெய்ப்பிக்கும்.  

1827ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் அரைவிழுக்காடு வாழ்ந்தனர். 1881ஆம் ஆண்டு இந்த விழுக்காடு  நான்கு. 1921 ஆம் ஆண்டு விழுக்காடும்  நான்கு. நாடு சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் விழுக்காடு ஒன்பது.

1957ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்த விழுக்காடு பதின்மூன்று.  1965 ஆம் ஆண்டு டட்லி  செல்வநாயகம் ஒப்பந்தம் ஏற்பட்டபோது கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் விழுக்காடு பத்தொன்பது.  இறுதியாக 1981 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை புள்ளிவிபரங்களின்படி கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் விழுக்காடு இருபத்தைந்து. இப்போது சிங்களவரின் விழுக்காடு 30  யை எட்டியிருக்கும் என நம்பலாம்.

இதே போல் மணல் ஆற்றிலும் இனச் சுத்திகரிப்பு நடந்தது. 1984 இல் மணல் ஆறு பிரதேசத்தில் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த 42 சிற்றூர்களைச் (கொக்குத்தொடுவாய், வவுனியா வடக்கு கிராம சேவகர் பிரிவு, நாயாறு, குமுழமுனை)  சேர்ந்த 13,288 தமிழ்க் குடும்பங்கள் 48 மணித்தியாலங்களில் சிங்கள இராணுவம் வெளியேற்றியது. தலைக்கு 99 ஆண்டு குத்தகையில் 14 தமிழ் தொழிலதிபர்களுக்குக் கொடுத்த 1,400 ஏக்கர் நிலத்தின் உரிமம் இரத்து செய்யப்பட்டது.

மகிந்த இராசபக்சே சிங்கள அரசுகள் மேற்கொண்ட இந்த தமிழினச் சுத்திகரிப்பை வசதியாக மறந்து விட்டார்.

தமிழர் தரப்பு வரலாற்றில் இல்லாத ஒரு கொடிய ஆட்சிக்கு  முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.  போர் வெற்றியில் மூழ்கிப் போயிருக்கும்  அரசின் சிங்கள - பவுத்த மேலாதிக்க சிந்தனையை புலம்பெயர் தமிழர்கள்தான் பன்னாட்டு சமூகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.  தமிழர்களது தன்னாட்சிக் கோரிக்கை வரலாற்றின் அடிப்படையில் நியாயமானது நீதியானது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

 

 

 

 


தமிழ் சிவில் சமூகத்தின் விண்ணப்பத்திற்கு கூட்டமைப்பின் பதில் என்ன?

கூட்டமைப்பின் கனடிய செயற்பாட்டாளர் நக்கீரன் பதில்..

[Wednesday, 2011-12-21 22:52:23]

தமிழர்கள் வாய்மூடி மௌனிகளாக தொடர்ந்தும் இருப்பதற்கு தயாராக இல்லை என்பதை தமிழ் சிவில் சமூகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தின் பகிரங்க விண்ணப்பம் இதனை உணர்த்தியிருக்கின்றது.

வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் சார்பில் தமிழ் சிவில் சமூகம் இந்த பகிரங்க விண்ணப்பத்தை விடுத்துள்ளதாகவே கொள்ள வேண்டும். கூட்டமைப்பினரை நோக்கி விளக்கம் கோரி பல விடயங்களை தமிழ் சிவில் சமூகம் முன்வைத்துள்ளது.

1. .நா. மனிதவுரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த வேளை அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த தங்களது முடிவானது அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதத்தில் அமைந்து விட்டதாக நியாயமான விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. இதற்கான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது கூட்டமைப்பின் தார்மீகக் கடமையாகும்.

பதில் - ஒரு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது அய்யன்னா மனிதவுரிமை சபையில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்குப் போவதா? விடுவதா? என்பதை தீர்மானிக்க முடியாது. அப்படியிருந்தும் அய்யன்னா மனிதவுரிமை சபையில் செப்தெம்பர் 12 ஆம் நாள் சிறிலங்காவின் தூதுக்குழுவின் தலைவர் அமைச்சர் மகிந்த சமரசிங்கி நாட்டில் மும்மாரி பொழிகறிது என்று பேசியதை மறுத்து ததேகூ தலைவர் இரா. சம்பந்தன் அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து அல்லது மறுத்து ஒரு அறிக்கையை செப்தெம்பர் 14 ஆம் வெளியிட்டார். (http://www.humanrights.asia/news/forwarded-news/AHRC-FST-046-2011). இந்த அறிக்கையைப் பிடிக்காத அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ததேகூ பேச்சுவார்த்தைக் குழுவுக்கு தனது அதிருப்தியை அதாவது அரசின் நிலைப்பாட்டை ததேகூ எதிர்ப்பதாக ததேகூ குழுத் தலைவர் இரா. சம்பந்தரிடம் தெரிவித்தார். அப்படிப் பார்த்தால் நாள், நட்சத்திரம், இராகுகாலம், யமகண்டம் பார்த்துத்தான் ததேகூ பேச்சுவார்த்தைக்குப் போகவேண்டும் என்று தேவாராஜ் மற்றும் விண்ணபதாரர்கள் சொல்வார்கள் போல் தெரிகிறது! இது குழந்தைத்தனமான குற்றச்சாட்டு. தமிழ்க் காங்கிரசின் முகமூடியான தமதேமு முன்வைத்த குற்றச்சாட்டு. அதைத்தான் இப்போது இந்த தமிழ் சிவில் சமூகம் கிளிப்பிள்ளை போல் முன்வைத்திருக்கிறது.

2. வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் விட்டுக் கொடுக்க மறுக்கின்றது. இவை மூன்றும் மறுக்கப்படின் தொடர்ந்தும் பேசுவதில் அர்த்தமில்லை. பேச்சுகளில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது கூட்டமைப்பின் கடமை.

பதில் - தேவராஜ் ஞாயிறு வீரகேசரி பதிப்பின் ஆசிரியர் என நினைக்கிறேன். அவருக்குமா இதற்கான விடை தெரியாது? அல்லது தெரியாதென்று நடிக்கிறாரா? தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை என்றால் தமிழர் தரப்பு பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டு வெளியேற வேண்டுமா? அப்படி வி.புலிகள் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு (2006) வெளியேறியதை பன்னாட்டு சமூகம் எப்படிப் பார்த்தது என்பது ஆயர் இராயப்பு யோசேப்புக்குத் தெரியாமல் இருக்கலாம்,  ஒரு பிரபல செய்தித்தாளின் ஆசிரியருக்குமா தெரியாது? அல்லது நினைவுப் பஞ்சமா?

3.தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அதனை அழிப்பதற்கான ஒற்றுமையில் பயன் ஏதும் இல்லை.

பதில் - யார் இல்லை என்றது? தமதேமு என்ற காளான் கட்சியை கஜேந்திரகுமார் தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்க உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு தேசியம் சார்பான வாக்குகளைப் பிரித்தது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக வலிமை சேர்த்ததாகச் சொல்ல முடியுமா?

4. தேசியம், சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம் தனிநாட்டை கோருவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதன் அடிப்படையிலான தீர்வுக்கு நாம் செல்லத் தவறுவோமேயாயின் நாம் உண்மையான சுயாட்சியை பெற்றுக் கொள்ள முடியாததாகிவிடும். இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வு மட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வைத் தருவதோடு, இலங்கையில் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக் கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும், இவை பேரம் பேசும் பொருட்களும் அல்ல.

பதில் - தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை விட்டுக் கொடுக்காமல்தான் ததேகூ அரசோடு பேசுகிறது. ஆனபடியால்தான் வட கிழக்கு இணைப்பை ஒரு முக்கிய பேசு பொருளாக பேச்சுவார்த்தை மேசையில் ததேகூ வைத்துள்ளது. வி.புலிகள் கூட தமிழீழத்தை விட்டுக் கொடுக்காமல் உள்ளக தன்னாட்சியை பேச்சு வார்த்தை மேசையில் வைத்ததை தேவராஜ் இவ்வளவு கெதியில் மறந்து விட்டாரா? இப்படி எடுத்ததுக்கு எல்லாம் மொ(மு)ட்டையில் மயிர் புடுங்கினால் எப்படி?

5.வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாதது. பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதது. அழுத்தங்களுக்குப் பயந்து தமிழ்த் தேசியத்தின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தை மீள முடியாத பாழுக்குள் தள்ளக் கூடாது.

பதில் - யார் விட்டுக் கொடுத்தார்கள்? சாம்பிராணி காட்டமுன் சன்னதம் கொண்டு ஆடுவதன் நோக்கம் என்ன?

6. மாகாண சபைத் தேர்தல்கள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பிலே நாம் முன்னோக்கி நகர்வதற்கு பெரும் தடைக்கல்லாக அமையும்.

பதில் - இது கொலம்பஸ் கண்டுபிடிப்பு. சரி ஒரு வாதத்துக்கு அதை சரியென்று வைத்துக்கொண்டாலும் அது எப்படித் தடைக்கல்லாக முடியும்? ததேகூ போட்டியிடக் கூடாது ஆனால் சுயேட்சைகள் (?) போட்டி போடலாம்! அப்படியென்றால் ஆட்டோடு போபம் குட்டியோடு நட்பா? மாகாண சபை என்னதான் நோஞ்சலாக இருந்தாலும் அதற்கு சட்டப்படி சில அதிகாரங்கள் இருக்கிறது. ஆனபடியால்தான் அண்மையில் பட்டின, நாடு திட்டமிடல் சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டுவந்த போது உச்ச நீதிமன்றம் காணி அதிகாரம் மாகாணசபைக்கு இருப்பதால் மாகாண சபைகளின் ஒப்புதல் வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருக்கிறது. Only last week the Supreme Court held that the Bill introduced by the Government to amend the Urban Country Planning Ordinance to enable authorities concerned to declare land areas as conservation areas, protected areas, architectural and historical areas and sacred areas is invalid as the bill was about a matter (land) set out in the Provincial Council list and shall not become law unless it had been referred by the President to EVERY PC. (http://www.lakbimanews.lk/index.php?)

7.மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு பொருத்தமற்றதென கூட்டமைப்பு நிலைப்பாடாக பேச்சுவார்த்தை மேசையில் சர்வதேசத்திடம் வலியுறுத்தும் தார்மீகக் கடப்பாடு கூட்டமைப்புக்கு உள்ளது.

பதில் - ஓகோ! இதற்கு மட்டும் பன்னாட்டு உதவி வேண்டும்? அரசோடு பேசுங்கள் என்று ததேகூ பன்னாட்டு சமூகம் சொன்னால் ததேகூ அதனைத் தள்ளிவிட வேண்டும்? தலை விழுந்தால் எனக்கு வெற்றி பூவிழுந்தால் உனக்குத் தோல்வி!

8. கூட்டமைப்பு இன்னுமொரு தேர்தலில் தமிழ்மக்களின் ஆணையைப் பெற்றுத் தான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அறிவிக்க வேண்டுமென்பதில்லை. இதனை மீறி தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் கூட்டமைப்பு பங்கெடுக்கக் கூடாது. மாற்று உபாயங்கள் குறித்து மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்.

பதில் - அப்படியென்றால் 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தவிகூ கிடைத்த ஆணை போதுமே? பின் எதற்காக அடுத்து வந்த தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் போட்டியிட்டன? அதெல்லாம் பிழை என்று தமிழ் சிவில் சமூகம் சொல்கிறதா? அதற்கு தேவராஜ் தலையாட்டுகிறாரா?

9. தேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் தேசிய அரசியல் விடுதலை இயக்கமாக செயற்பட வேண்டுமென்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள் கூட்டமைப்பைக் கருதுகின்றனர். இதன் அடிப்படையிலேயே சகல தேர்தல்களிலும் மக்கள் கூட்டமைப்புக்கு ஆணையை வழங்கி வருகிறார்கள்.

பதில் - யார் இல்லை என்கிறார்கள்? ஆனால் ததேகூ வாக்களித்த தமிழ்மக்கள் சார்பாக பேச நீங்கள் யார் என்று சொல்லமுடியுமா?

10. 75 பேர் கையெழுத்திட்டு கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ள மேற்படி விண்ணப்பம் கூட்டமைப்பின் கண்களைத் திறந்தாக வேண்டும்.

பதில் - அப்படி வாரும் பிள்ளாய்! இந்த விண்ணப்பத்தில் யாரும் கெயெழுத்து இடவில்லை. வெளிமாவட்டங்களை விட்டாலும் யாழ்ப்பாண மாவட்ட விண்ணப்பதாரார்கள் கூட ஏன்  கையெழுத்துப் போடவில்லை? முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் தமிழர் தாயகத்துக்குள் வரவில்லையா? சரி போகட்டும் அவற்றை விட்டு விடுவோம். இப்படிச் சொன்னால் நக்கீரன் உள்ளடகத்தைப் பாராமல் உருவத்தைப் பார்க்கிறார் என்று குற்றம் சாட்ட ஆட்கள் இருக்கிறார்கள். இருந்தும் அந்த கையொப்பகாரர்களில் பலர் வண பிதாக்கள். பலர் வைத்திய கலாநிதிகள். சிலர் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள். இவர்கள் எல்லோரும் தாமுண்டு தமது தொழில் உண்டு என்று இருப்பவர்கள். அது சரி. ததேகூ கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக தேவராஜ்க்கு யார் சொன்னது? சம்பந்தன் என்ன காலுக்கு மேல் காலைப் போட்டுக் கொண்டு சாய்மனைக் கதிரையில் ஓய்வாகப் படுத்து இருக்கிறாரா?

11. ஒரு பாரிய வரலாற்றுக் கடமையை தமிழ் மக்களின் சார்பில் சுமந்துள்ள கூட்டமைப்புக்கு தமிழ் சிவில் சமூகத்தின் இந்த விண்ணப்பம் ஒரு ""துடுப்பாக" அமையும் என்பதில் ஐயமில்லை. இதுவரை தனித்து நின்ற கூட்டமைப்பு இது போன்ற பல்வேறு தமிழ் சிவில் சமூகத்துடன் கைகோர்த்துப் பயணிக்க முன்வர வேண்டும்.

பதில் - ஆகா அருமையான யோசனை. கடந்த தேர்தலில் ததேகூ வாக்களித்த பொதுமக்கள், ஏழை பாளைகள், தொழிலாளர்கள், கமக்காரர்கள் உங்களுடைய கணிப்பில் ஒரு பொருட்டே இல்லை!

11. அரசாங்கத் தரப்பு கூட்டமைப்புக்கு நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்ற காலம் இது. வெற்றியின் மமதையிலான வார்த்தைகள் இன்னும் அரசாங்கத் தரப்பில் முடங்கிப் போகவும் இல்லை. முற்றுப் பெறவும் இல்லை. அரசாங்கத் தரப்பினரின் நாடாளுமன்ற உரைகள் இதனையே சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில் கூட்டமைப்புதான் அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும் சக்தி படைத்ததாக உள்ளது. ஏனெனில் அரசாங்கத்தின் பேச்சுத் துணைக்கு'' கூட்டமைப்பு தான் தேவைப்படுகின்றது. சர்வதேச நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசியாக வேண்டும். அது மாத்திரமல்ல கடந்த ஒருவருட காலமாக கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசாங்கம் 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு மேல் பேசியும் தீர்வு நோக்கி ஒரு அங்குலம் கூட நகர முடியாத நிலையே காணப்படுகின்றது.

ஆனால், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் "சாட்சியங்கள் இல்லாத யுத்தமொன்று நடைபெற்றுள்ள நிலையில் உண்மைகள் கண்டறியப்பட்டால் மட்டுமே சரியான பாடங்களை கற்றுக் கொள்ள முடிவதுடன் நேர்மையான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும்'' என்ற உரையையடுத்து அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடும் தொனியில் உரையாற்றியுள்ளார். "உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச விசாரணை மற்றும் .நா. பிரசன்னம் போன்ற விடயங்களை வரவேற்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுகளை பயன்பாடுடையதாக முன்னெடுக்க விரும்புகின்றதா அல்லது அதுவாக முறித்துக் கொள்ள முயற்சிக்கின்றதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

"விசாரணைகளில் நம்பிக்கையில்லையென்றும் சர்வதேச விசாரணை தேவையென்றும்" சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

"அதை ஏற்க முடியாது. சர்வதேச விசாரணைகள் எமக்கு அவசியமில்லை. பிற நாடுகளை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அனுமதிக்கமாட்டோம். இந்த நாட்டுப் பிரச்சினையை சர்வதேச பொலிஸாருக்கு கையளிக்க நாம் தயாரில்லை. சர்வதேச பொலிஸ் எமக்கு அவசியமில்லை" என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் பீரிஸ்.

ஒரு வருட பேச்சுவார்த்தையில் ஒன்றுமில்லை என்று சம்பந்தன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகப் போட்டுடைத்தது அரசாங்கத் தரப்புக்கு ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஊட்டியிருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

பதில் - மிக மிக அருமை!

12. இன விவகாரத் தீர்வுக்கு 13 ஐத் தருவோம். இதற்குமப்பால் 13 பிளஸ் தருவோம் என்று கூறிய அரசாங்கம் தான் இன்று 13 க்கே தயாராக இல்லையென்பதை ஒரு வருடமாக உணர்த்தி வருகின்றது. இதற்குப் பிறகும் பேச்சுவார்த்தை தேவையா? என்று சிவில் சமூகம் கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

பதில் - மெத்தச் சரி. ததேகூ பேச்சுவார்த்தையை முடி(றி)த்துக் கொண்டு மக்களை ஒன்று திரட்டி ஒரு சாத்வீக போராட்டத்தில் களம் இறங்கினால் இந்த விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டவர்கள் எத்தனை பேர் அதில் சேர்ந்து கொள்வார்கள்? வைத்திய கலாநிதிகள்? ஆயர் இராயப்பு யோசேப் அடிகளார்?

13. இந்த ஒரு நிலை உருவாகும் என்பதை எதிர்பார்த்தே இப்பத்தியில் தொடர்ச்சியாக கூட்டமைப்பு அரசியல் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். தற்பொழுது .பி.டி.பி. கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தெரிவுக் குழுவில் பங்குபற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டமைப்புடன் அரசாங்கம் ஒருவருடமாக பேசியும் ஒன்றும் வெளிவரவில்லை.

பதில் - காணி அதிகாரம் தேவையில்லை, காவல்துறை அதிகாரம் தேவையில்லை என்று சொல்லும் இபிடிபி கட்சியோடு பின் எதைப்பற்றிப் பேசுவது?

13.இந்நிலையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் ஏதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுமளவிற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவில்லை. அமைச்சரைப் பொறுத்து அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இருப்பவர். தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் பேசி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அந்த பெறுபேறுகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்பது குறித்தும் அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். இது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையும். அமைச்சர் அவர்கள் கூறுவது போல் தமிழ்த் தலைமைகள் பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டன என்பது உண்மையே. அரசுடன் இணைந்திருக்கும் அவருக்கு தீர்வு நோக்கிய காய்களை நகர்த்துவதற்கும் அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்த செல்வாக்கை பயன்படுத்தி தீர்வு நோக்கி பயணத்தை அவர் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும். அந்த வெற்றியே ஏனைய தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைவதிலும் தங்கியுள்ளது.
வி.தேவராஜ்

பதில் - டக்லஸ் தேவானந்தா ஒரு அடிமை. 1994 தொடக்கம் ஆள்வோரது காலணியை மாறி மாறி நக்கித் துடைத்துத் துப்பரவாக்கி வருபவர். அவரிடம் போய் "அமைச்சர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தீர்வு நோக்கிய பயணத்தை அவர் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும்"என்று சொல்கிறீர்களே? இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா? இது நல்ல நகைச்சுவையாக உங்களுக்குத் தெரியவில்லை? இந்த ஆண்டின் நகைச்சுவை மனனன் விருதை உங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதியெங்கே?

முடிவாக ததேகூ நன்றாக விமர்சியுங்கள். வேண்டுமட்டும் இடித்துரையுங்கள். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லாமலும் கெட்டுப் போவான் என்று வள்ளுவர் இடித்துரைக்கிறார். அதாவது கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவானாம்.

எனவே ததேகூ இடித்துச் சொல்லுங்கள். ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு அதன் மீது விமரிசனம் என்ற போர்வையில் சேறு பூசவேண்டாம். கால்தடம் போட வேண்டாம். குறுக்குச் சால் ஓட்ட வேண்டாம்.

இந்த விண்ணப்பத்துக்குப் பின்னால் நிற்பவர்கள் மாமரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்து அம்புவிட்டு வாலியைக் கொன்ற கோழை இராமனைப் போன்றவர்கள்.

ஒரு நல்ல செய்தி. ததேகூ விளக்கம் விரைவில் வரும். அதுவரை பொறுமை காக்க.

காக்கக் காக்க கனகவேல் காக்க!

நக்கீரன்

 http://www.seithy.com./breifArticle.php?newsID=53419&category=Article&language=tamil

 


 

Sri Lanka  is a  "democracy" in name only

V.Thangavelu

Anyone who surveys the politico-economic scenario of Sri Lanka will be alarmed at  President Rajapakse and his siblings iron grip on power. Rajapakse brothers exercise control over every aspect of peoples life today. 

Despite the end of the country’s ethnic conflict in 2009, defence spending  hit LKR 230 billion (US$ 2.1 billion) for 2012, up from 215 billion this year. Sri Lanka's 2012 budget reveals further  expansion of  the  security forces and  their  families. Measures aimed at the military included a one-off cash grant of 100,000 rupees, to any military or police officer who parented a third child. This payment is clearly intended to boost  the Sinhala population.

Out of  the 230 billion rupees allocated to defence, 203 billion or 88 percent will be spent on salaries, food and uniforms. 

The Rajapakse  siblings including  the President control the Ministry of Finance and Planning, Ports and Highways, Civil Aviation, Economic Development, and Defence and Urban Development. The total allocation for these ministries is over a third of the Budget (39%). Furthermore, given the considerable centralization of  powers   the Rajapakse brothers will exercise  control over most other ministries  as well in addition to the  lion’s share of the Budget.

A critical reading of the budget reveals the mounting powers of Gotabhaya Rajapakse who is virtually the Minister for Defence. He is the real power behind the throne although holding  supposedly an innocuous civilian post. Politics is taboo to civil servants but Gotabhaya is a notable exception. He  acts like a super politician.

It is,  therefore, little wonder  he was invited to deliver the key note speech at the Inaugural National Conference on Reconciliation: "The Way Forward for Post Conflict Sri Lanka"  by G.L. Peiris, Minister of Foreign Affairs and an ace acrobatic  in politics. 

Gotabhaya Rajapakse among other things claimed "Sri Lanka today is not only one of the most secure and stable countries in Asia but in the entire world." To drive his point he cited the Humanitarian Operation concluded in May, 2009.  "The return of peace, the restoration of freedom and democracy, and the prospect of a resurgent economy have all been made possible by the success of the Humanitarian Operation that put an end to the terrorist activities of the   LTTE" he  bragged.

One may rightly disagree with him, but you have to marvel at the audacity with which he makes such bombastic claims. The UN experts panel appointed by the Secretary-General Ban Ki-moon  to advise him on “issues of accountability” from the end of Sri Lanka’s  three decades old war.  

The U.N.-appointed panel has found “credible allegations” that tens of thousands of civilians were killed and war crimes were committed in the final months of Sri Lanka’s war with the Liberation Tigers of Tamil Eelam, and urged the investigation and prosecution of those responsible. “The panel found credible allegations, which if proven, indicate that a wide range of serious violations of international humanitarian law and international human rights law were committed both by the Government of Sri Lanka and the LTTE, some of which would amount to war crimes.”

Beside the Panel Sri Lankan government faces multiple allegations, primarily from international  rights groups and Tamil Diaspora, that its troops committed war crimes and were responsible for tens of thousands of civilian deaths.

Ch.4 produced damning video evidence that surrendered or captured LTTE cadres were stripped naked,  blindfolded and shot from behind at point blank range by Sinhalese soldiers. UN experts confirmed that the video was authentic, but the Sri Lankan government, notably Gotabhaya Rajapakse dismissed  Ch.4 video  as "total fabrication." The latest to join the chorus is the LLRC which also says the video is a "total fabrication". On what grounds only god knows.

There are irrefutable video, photographic, satellite images, oral evidence to indict President Rajapakse and his commanders of war crimes, though  the Sri Lankan government is in a state of total denial.  After May, 2009  Sri Lanka faced multiple allegations, primarily from rights groups  like AI, HRW, ICG and  other organisations, that its troops committed war crimes and were responsible for tens of thousands of civilian deaths. But,  by deftly playing Western critics off China and India, and the Asian giants against each other, it forestalled any action and engineered a post-war resolution from the U.N. Human Rights Council praising its victory over "terrorism."  The government then and now rejected the charges as baseless, and argues it had every right to fight a  ruthless terrorist group the United Nations, United States, and 30 other countries had put on their terrorism lists.

Now let us take a closer look at the tall claims by Gotabhaya Rajapakse that " the countrymen irrespective of ethnicity, religion or political affiliation, are reaping the rewards of peace, and that freedom of movement, restoration of democracy and improvement of the country's economy are significant achievements with the return of  peace. Perhaps the most heartening outcome of the dawn of peace has been the freedom of movement that all Sri Lankans finally enjoy."

Richard Armitege is a former US Deputy Secretary of State. He is no friend of the LTTE or the Tamil people. At the conference  held in Tokyo  in April 2003 but  boycotted by the LTTE Armistice demanded  that LTTE renounce violence - an undemocratic and unrealistic suggestion. He also pledged US military support to the Sri Lankan government in its fight against the LTTE.

Recently, Richard Armitege participated in a panel meeting conducted at the release of the report   held in an undisclosed location that discussed  the peace process and the evaluation report.   Apart from Messrs Armitage, Solheim and Narayan Swamy, the other speakers were former Minister and government peace negotiator  Milinda Moragoda,  Prof. Gunnar M. Sørbø, (team leader for the evaluation), Dr Jonathan Goodhand (Reader in Conflict and Development Studies, SOAS and deputy team leader for the evaluation) and Dr Suthaharan Nadarajah (lecturer with Centre for International Studies and Diplomacy, SOAS – who was not involved in the evaluation). The panel was chaired by Ms. Frances Harrison, Head of News at Amnesty International and former senior BBC correspondent.

Mr. Armitege told the meeting "Much to my dismay the government of Sri Lanka is still caught up in a CHAUVANISTIC  attitude” a charge the Tamils have continuously levelled against all past Sinhala governments. Continuing Mr. Armitege said "I don’t think they have been far sighted enough in their approach to the North and East. There has been a somewhat lessening of violence there, somewhat lessening of the abductions and things of this nature, but not sufficient. From the US point of view we are quite dismayed  at the lack of progress in HUMAN FREEDOMS, HUMAN RIGHTS etc, and I made that view known [to SL President Rajapakse].

“But what to do about it is the question. [Firstly] the international community is generally coalesced around the fact that the north and the east particularly NEED PROTECTION, and the government of Sri Lanka has to move in that direction. … That is the united message the international community gives.

“Second, I don’t think President Rajapakse is going to be widely welcomed internationally – across the board – until there is some movement. Maybe that’s the wrong strategy, but that’s the way things are going.”

As a former diplomat Mr.Armitege can say only this much in public.  Nonetheless,  it is a damning  indictment against the Sri Lankan government   whatever Gotabhaya Rajapakse's claims to the restoration of peace, freedom and democracy.

Mr. Gibson Bateman, an international consultant based in New York City, writing  under the caption "Fear and Loathing in Post-War Sri Lanka" (The Mantle - November 11, 2011) has criticised the Sri Lankan government record on  human rights and accuses the regime of seeing everything through the prism of “national security.”  Here are extracts from his article.

"Today, the Sri Lankan government refuses to mention human rights. As such, the regime sees everything through the prism of “national security.” Talking about minority rights, human rights, documenting human rights violations (both past and present), and educating Sri Lankans about the basic principles of human rights are not priorities for President Rajapakse and the United People’s Freedom Alliance.  

"Even though the war ended, the country’s North and East remain HEAVILY MILITARIZED. Because of the war, many families in the North are now female-headed households, making some families especially vulnerable; many women now have to worry about their more traditional domestic duties while also figuring out how to earn enough money to provide for their families. Furthermore, with development projects in the North currently focused on infrastructure (like road-building), few jobs are even suitable for women. Reports of violence against women, sexual harassment, and rape are not uncommon. In many cases, Sri Lankan soldiers are the alleged perpetrators.

"Aside from all of this, the government is building a number of war memorials along the A-9 road, which runs from Vavuniya to Jaffna in Northern Sri Lanka. This is in addition to the large number of Buddhist temples, which are also being built in the North. It is unclear why Northern Sri Lanka (where the vast majority of people are Tamil and the predominant religion is Hindu), would need a large number of Buddhist temples.

"Few countries have more history with emergency laws than Sri Lanka. The country’s experience with such decrees goes back to 1947 when, during the final days of British rule, the fading colonial power passed the Pubic Security Ordinance (P.S.O.) in an attempt to suppress political dissent on the island. Since that time, the P.S.O. has given the president the authority to announce state of emergency whenever he sees fit. Over the years, some presidents have added to the original laws, widening the scope of executive power. In the event of a conflict, Emergency Regulations, which are passed by the president without need of parliamentary approval, supersede other existing laws.

"Sri Lanka has been governed under Emergency Regulations for most of the past thirty years. The emergency laws facilitated the establishment of military checkpoints throughout the country, where governmental authorities were given sweeping powers to search and detain LTTE suspects. A suspect could remain in a detention center for up to 21 months without appearing in a court of law. The laws even allowed for people to be displaced from their land."

According to Human Rights Watch "Sri Lanka’s Emergency Regulations granted the authorities sweeping powers of search, arrest, and detention, which have led to serious human rights violations, including arbitrary detentions, torture, and enforced disappearances. Thousands of people have been detained over the years in official and unofficial detention centers under emergency regulations, many without charge for years, in violation of international law."

Recently, these regulations were lifted, but they were simultaneously replaced with regulations under the equally draconian piece of legislation styled " Prevention of Anti Terrorism Act (P.T.A)." It was a cosmetic change to hoodwink the international community.

Basically,  the P.T.A.  enacted in 1979  and made permanent in 1982  shackles  citizens’ civil and political freedoms under the  charade of fighting terrorism and combating political violence. The important thing to remember is that the Emergency Regulations and the Prevention of Terrorism Act have given the government two separate (although similar) legal frameworks to justify systematic human rights violations perpetrated against  Tamils (and sometimes Sinhalese) for decades.

In  Mullaitheevu and many other places in the North, Tamils are not allowed to enter the sea, while their Sinhala counterparts from the south are allowed to fish in their areas without any restrictions.  Tamil  people say that all petitions to government services and establishments have to be given in Sinhala only since 2009. In the heart of Kilinochchi town, the erstwhile administrative capital of Tamil rebels, streets sport Sinhalese names such as Mahinda Rajapakse Mawatha, and Aluth mawatte (The new road).

Three roads close to the A9 highway in Kanakarayankulam have been given Sinhala names - Kosala Perera road, Anura Perera road, and Rev.Yatiravana Vimala Thero Street. The first two names are those of  Sinhalese soldiers and the last one is the name of a Buddhist monk.

Brad Adams of Human Rights watch has noted that the end of the state of emergency is insignificant if the government enjoys  the same powers  it had during the conflict. Adams further asserts that, “The government should repeal all its abusive detention laws and make all laws and regulations related to detention public, instead of engaging in token measures for PR purposes.”

One of the pillars of democracy is media freedom. But Rajapakse siblings have succeeded in muzzling  the media to the extent  about 34 journalists (31 Tamils) have been killed since 1995. An equal number has bolted  Gotabhaya Rajapakse's democratic and peaceful paradise and sought asylum in the Western countries. The dastardly killing of Lasantha Wickrematunge, editor Sunday Leader,  in broad day light and in the centre of Colombo remain unsolved.  The attack on  Deputy Editor of The Nation newspaper Keith Noyahr,  the assault on journalist Namal Perera together with his friend Mahendra Ratnaweera on a busy highway on June 30, 2008, knifing  of former Rivira Editor Upali Tennakoon remain unsolved. In August 2009, eight months after Wickrematunge's murder, Tamil journalist Jayaprakash Tissainayagam was sentenced to 20 years in prison found guilty of aiding terrorism in two of his articles he wrote during the time of CFA.

The wife of  Navy Ruwan a gang leader abducted recently  claims she overhead one of the abductors in the vehicle saying that he needs to take a call to "Gotabhaya Sir," in an apparent reference to Defence Secretary Gotabhaya Rajapakse. Navy Ruwan was named by media reports as a close associate of Defence Ministry Advisor Duminda Silva MP who shot and killed Bharatha Lakshman Premachndra on 08, October 2011.

Journalist and cartoonist  Prageeth Eknaligoda  who was critical of the government disappeared on 24th January 2010 is an example where  the right to life has become a huge joke in Sri Lanka.

Under-world leader Dematagoda Chaminda has told the CID recently that a group of persons led by him had dumped the body of journalist Prageeth Eknaligoda in the sea off the Negombo lagoon. Chaminda had said that he was not aware of whose body he had dumped in the sea until that evening when the boss (Duminda Silva) had said it was a web journalist during a party at Jaic Hilton and that he had later found out that the dead person was Prageeth Eknaligoda.

Dematagoda Chaminda had observed that several bodies had been dumped in the sea on the boss’ orders. The bodies had been wrapped in gunny bags and tied to heavy granite stones. He had added that on every occasion when the bodies were dumped, the boss had told him that they were orders by the big boss (Defence Secretary).

The former  Attorney General Mohanm Peiris, however,  speaking during the Convention Against Torture in Geneva said that information has been received that Prageeth Eknaligoda was living in a foreign country after receiving political asylum. Only Gotabhaya Rajapakse under whom the army and police intelligence agencies operate  knows the truth of all disappearances and killings!

President Rajapakse and his brothers are fooling no one.  Sri Lanka is not China  and if the government continues to ignore human rights and to repress both Tamils and Sinhalese,  it is unlikely as pointed out by Mr.Armitege that the international community will look the other way. Sri Lanka will not placate the West with facile sleight of hand and  it is naïve for  Gotabhaya Rajapakse to think otherwise.

In short, genuine peace, democracy  and freedom  for Tamil people in Sri Lanka remains illusory.  Sri Lanka  is a "democracy" in name only. In practice, it has been a majoritarian Sinhala hegemonic state  based on language, race and religion after 1956 to date.  Mahinda Rajapakse openly declared that his government elected by the majority Sinhala - Buddhist voters will govern according to their wishes only.


 

வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பது  அரசியல் தற்கொலைக்குச்  சமமானது!

நக்கீரன்

மிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அலங்காரப் பெயரில் ஒரு  விண்ணப்பம் வெளிவந்துள்ளது. அதில் பல பெயர்கள் காணப்படுகின்றன.  பெரும்பான்மையினர்  வண. பிதாக்கள் மற்றும் வைத்திய கலாநிதிகளது பெயர்களாகும்.  எது எப்படியோ தமிழ் மக்களது அரசியல் தீர்வு பற்றி இந்த தமிழ் சிவில் சமூகம் காட்டும் கரிசனை வரவேற்கத்தக்கது.

ஆனால் நாம்  அறிந்தவரையில் இந்த விண்ணப்பத்தில் உள்ள பெயர்கள் தட்டச்சுச் செய்யப்பட்டுள்ளன.  அதில் யாரும் கையெழுத்து இடவில்லை. தொழிற்சங்கம் சார்பான கையொப்பகாரர்கள் இபிடிபி கட்சியின் ஆதரவு தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்கள். இன்னும் ஒரு தொகுதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வேண்டியவர்கள்.

குறிப்பாக முதல்  பெயர்   மன்னார் மறைவட்ட பேராயர் இராயப்பு யோசேப்  ஒப்பீட்டளவில் ஏனைய கத்தோலிக்க பேராயர்களைவிட தமிழ்மக்களது உரிமைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வந்தவர்.  அதே சமயம் போர் முடிந்த பின்னர் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே அவர்களை பல தடவை அலரிமாளிகையில் சந்தித்து தேநீர் அருந்தி அளவளாவி வருபவர்.

ஆகவே இந்த விண்ணப்பத்தை படிப்பவர்களுக்கு அதன் பின்னால்  வேறு வேறு கைகள்  இருப்பது தெள்ளெனப் புலனாகும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. "The voice is Jacob's voice, but the hands are the hands of Esau" (Genesis 27:22). அதாவது "குரல் யாக்கோப்பினுடையது ஆனால் கைகள் ஏசுவினது.'' இந்தப் பழமொழி இந்த விண்ணப்பத்துக்கு முற்றிலும் பொருத்தமாக உள்ளது.

இது கஜேந்திரகுமாரின் மறுவாசிப்பு

(1) "புதுடில்லியில் கடந்த ஓகஸ்ட் 23 மற்றும் 24  திகதிகளில் இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் கூட்டப்பட்ட பல்-தமிழ் கட்சி மகாநாட்டில் 'தேசியம்' 'சுயநிர்ணயம்' என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய தீர்மானமொன்றில் ததேகூ சார்பில் பங்குபற்றிய அதன் தொடக்க கால கட்சிகளின் உறுப்பினர்கள் கையெழுத்திட மறுத்தமை எமக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கருத்தொருமிப்பு ஏற்படாததால் கையெழுத்திடவில்லை என்ற விளக்கம் எந்த வகையிலும் ஏற்புடைத்தன்று"  என்பது சாட்சாத் திருவாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடைய  குரல்.  அவரது மறுவாசிப்பு.   

கடந்த  தேர்தலில்  தமிழ்க் காங்கிரசை மக்களிடம் விலைப்படுத்த முடியாது என்று தெரிந்து கொண்ட கஜேந்திரகுமார் தமிழ் மக்கள் தேசிய முன்னணி என்றவொரு  காளான் கட்சியை அவசர அவசரமாக உருவாக்கினார். அந்தக் கட்சி  சார்பில் தேர்தலில் குதித்த அவரும் அவரது கட்சி வேட்பாளர்களும் கட்டுக்காசை இழந்தார்கள்.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி 6,363 வாக்குகளை மட்டும்  (6.28 விழுக்காடு) பெற்று 4 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. திருகோணமலையில் அந்தக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் 1,181 மட்டுமே.  வேட்பாளர்கள் கிடைக்காததால் மட்டக்களப்பு, வன்னி, முல்லைத்தீவு, அம்பாரை  தேர்தல் மாவட்டங்களில் அந்தக் கட்சி போட்டியிடாமல் வெற்றிகரமாகப் பின்வாங்கி விட்டது.

இப்போது தமிழ்மக்கள் முன்னணியும்  செல்லாக்காசாகப் போய்விட்டதால் தமிழ் சிவில் சமூகம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிக்கிட்டுள்ளார்.

கொக்கு தலையில் வெண்ணெய் வைத்த கதை

2. பேராயர் இராயப்பு யோசேப் தலைமையிலான இந்த சிவில் சமூகம் ஒரு விசித்திரமான, வேடிக்கையான, நகைப்புக்கிடமான வாதம் ஒன்றை முன்வைத்துள்ளது.  மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக எதிர்வரும் 2012 இல் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருப்பதாகவும் அதனை  ததேகூ  சந்திக்குமானால் அதில் அமோக வெற்றி பெறும் என்பதில் தமக்கு அய்யமில்லை என்றும்  ஆனால் அதனையே அரசும்  விரும்புகின்றது என்பதில் உள்ள சூட்சுமத்தை விளங்கிக் கொள்ளவேண்டும் என்றும் ததேகூ யை  மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவைத்து அத்தேர்தலில அது வெற்றி பெறுவதையும் விரும்புகின்றதென்றால் அதற்கான உள்நோக்கம் பூடகமானதல்ல என்றும் மாகாண சபை முறைமையினை தழிழர்கள் ஒரு தீர்வாக ஏற்றுக் கொண்டுவிட்டதாகப்பிரச்சாரம் செய்வதற்காகவே அரசு இதனை முயற்சிக்கின்றது என்ற பெரிய அரசியல் கண்டுபிடிப்பை இந்த சிவில் சமூகம் கண்டுபிடித்துள்ளது.  கொக்கைப் பிடிக்க அதன்  தலையில் வெண்ணெய் வைத்து அது வெய்யிலுக்கு உருகி கண்ணை மறைக்கும் போது அபக்கென்று பிடிக்கலாம் என்று சொன்ன புத்திசாலியின் யோசனைக்கும் இந்த சிவில் சமூகத்தின் யோசனைக்கும் வேற்றுமையே கிடையாது! அப்படிப் பார்க்கப் போனால் 1983 இயற்றப்பட்ட 6 ஆவது சட்ட திருத்தத்திற்கும் 1987 இல் இயற்றப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்திற்கும் பின்னரும் நாடாளுமன்ற தேர்தலில் ததேகூ பங்குபற்றியது  சிறீலங்காவின் ஒற்றையாட்சி யாப்பை ஒப்புக்கொண்டதற்குச் சமமாகும்!  உண்மையில் சிங்கள அரசுக்கு  வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ யை வெற்றிபெற வைப்பதுதான்  விருப்பம் என்றால் எதற்காக அந்த சபைக்கான தேர்தலை தள்ளி வைத்துக் கொண்டுபோகிறது?  தேர்தலை உடனடியாக வைத்து தமிழர்கள் 13 ஆவது சட்ட திருத்தத்தை தமேகூ ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று பரப்புரை செய்யலாமே?

உண்மை என்னவென்றால் சிங்கள அரசுக்கு அப்படியான எண்ணம் இல்லை. அப்படி நினைப்பது குழந்தைப்பிள்ளைத் தனமானது.  மகிந்த இராசபக்சே தேர்தலை தள்ளிப் போடுவதற்குக் காரணம் இன்னும் சில "அபிவிருத்தித் திட்டங்களை"  செய்து முடித்துவிட்டு அதன் அடிப்படையில் தேர்தல் பரப்புரை செய்து வட மாகாண சபையைக்  கைப்பற்றலாம் என  மகிந்த இராசபக்சே  கணக்குப் போடுகிறார்.   அதுதான் உண்மை. 2012 இல் தேர்தல் இல்லை என்று மகிந்த இராசபக்சே நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது அதனை உறுதி செய்கிறது.

வெளியார் தலையீடு  இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காணலாம் என்பது பகற்கனவு

3. இந்த தமிழ் சிவிலியன் சமூகம் தேசியம்,  சுயநிர்ணயம் என்ற அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத உள்ளடக்காத எந்த ஒரு அரசியல் தீர்விலும் பலன் இல்லை என்றும் மாறாக இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வுமட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வைத் தருவதோடு இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்றும் வெளியார் தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல் செய்யும் என்றும் சொல்கிறது. விடிய விடிய இராமர் கதை விடிந்த பின் இராமருக்கு சீதை என்ன முறை என்று ஒருவன் கேட்டானாம். 13 ஆவது சட்ட திருத்தத்தில் சொல்லப்பட்ட காணி,  காவல்துறை அதிகாரங்களையோ,  வட - கிழக்கு இணைப்பையோ தர மறுக்கும் அரசு எப்படி "இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்?" ஒரு அரசியல் தீர்வுக்குச் சம்மதிக்கும்?  அதுவும் "வெளியார் தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல்?"

இன்று எமக்குள்ள பலங்களில் பன்னாட்டு சமூகத்தின் ஆதரவுதான் முக்கியமானது. பன்னாட்டு சமூகத்தின் அழுத்தம் காரணமாகவே மகிந்த இராபக்சேயின் அரசு பேச்சு வார்த்தையில் வேண்டா வெறுப்போடு கலந்து கொள்கிறது.  நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு வாருங்கள் இல்லையென்றால் பேச்சுவார்த்தை இல்லை எனத் திமிரோடு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மிரட்டியது நினைவிருக்கலாம்.  ஆனால் அதன்பின்னரும் பேச்சுவார்த்தை தொடருகிறது என்றால் அதற்கு "வெளியார் தலையீடு" தான் காரணம். வெளியார் தலையீடு  இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காணலாம் என்பது பகற்கனவு.  சிங்கள அரசைப் பொறுத்தளவில் போரில் வெற்றி பெற்று விட்டதால் இனச் சிக்கல் இன்று இல்லை,  எல்லோரும் "லங்கா மாதாவின் புத்திரர்கள்"  "அதிகாரப் பரவலாக்கலும் தேவையில்லை" என்பதுதான் அதன் நிலைப்பாடு.

தீர்மானங்கள்,  ஆணை என்பது வேறு  நடைமுறை அரசியல் என்பது வேறு

4. தமிழ் சிவில் சமூகம் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல் தீர்வுதொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஒரு பெரும் தடைக்கல்லாக அமையும் என்றும்  மேலும் குறிப்பாகச் சொல்லுவதாயின் மாகாண சபையை ததேகூ கைப்பற்றும் தருவாய் என்பது எமது நீண்ட அரசியல் பயணத்தின் அவல முடிவாக அமைந்து விடும் என்றும் .........அதேபோல் இன்னுமொரு தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுத்தான் ததேகூ  தமிழ் மக்களின் வேட்கைகளை அரசுக்கும் உலகுக்கும் அறிவிக்க வேண்டுமென்றுமில்லை என்ற கண்டுபிடிப்புக்களை தனது விண்ணப்பத்தில் அடுக்குகிறது.  அப்படிப் பார்த்தால் வட்டுக்கோட்டை மாநாட்டில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், தேசியம், சுய நிர்ணய உரிமை என்பவற்றை அடிநாதமாகக் கொண்ட பூரண சுதந்திரமும் தன்னாட்சியும் கொண்ட சோசலிச தமிழீழத்தை அமைப்போம்  என்ற தீர்மானத்தின் அடிப்படையில் 1977 இல் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டு மக்களிடம் ஆணை பெறப்பட்ட பின்னர் ஏன் தவிகூ, ததேகூ தொடர்ந்து தேர்தலில் பங்குபற்றியது? "தமிழ் மக்களின் ஆணையைப் பெற இன்னுமொரு தேர்தல் அவசியமில்லை"  என்று ஏன் சொல்லவில்லை?  காரணம் தீர்மானங்கள், ஆணை என்பது வேறு. நடைமுறை அரசியல் என்பது வேறு.

தேர்தலைப் புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்கு சமமானது

5.  "அரசு இதனை மீறி தேர்தல்களை நடாத்துமாயின் தேர்தலில் ததேகூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. மாறாக தமிழ்த் தேசிய விரோத சக்திகள் அல்லது அரச சார்பு சக்திகள் மாகாண சபையைக் கைப்பற்றுவதைத் தடுக்க நாம் வேறுமாற்று உபாயங்கள் தொடர்பில் சிந்திக்கலாம். இவை தொடர்பில் ததேகூ. மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்" என்று தமிழ் சிவில் சமூகம் சொல்கிறது. இந்த யோசனையை இதற்கு முன் எங்கேயோ கேட்ட மாதிரி - அதாவது யாக்கோப்பின் குரல் - படுகிறதே? ஆமாம் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட வக்கற்ற தமிழ்க் காங்கிரஸ் அல்லது அதன் முகமூடி தமதேமு இப்படித்தான் "சீ சீ அந்தப் பழம் புளிக்கும்" என்று தேர்தல் காலத்தில் தேர்தலைப் புறக்கணிக்குமாறு  அறிக்கை விட்டது.  ஒரு மக்களாட்சி முறைமை உள்ள நாட்டில் தேர்தலைப் புறக்கணிப்பது என்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானது. வண பிதாக்களுக்கும் வைத்திய கலாநிதிகளுக்கும் அரசியல் வரலாறு தெரியாதிருந்திருக்கலாம். இதை எழுதிய அரசியல்வாதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமா  அரசியல் வரலாறு தெரியாது?

1931 இல் நடந்த சட்டசபைத் தேர்தலை அன்றைய யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் புறக்கணித்ததால் 50 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் சிங்களவர்களது வாக்குப் பலம் அதிகரித்தது. அதன் காரணமாக  முழுவதும் சிங்களவர்களைக் கொண்ட அமைச்சர் அவை  (Pan Sinhala Board  of Ministers) உருவாகியது.  புறக்கணிப்புக்குச் சொல்லப்பட்ட காரணம் டொமினியன் தகைமை வேண்டாம் இலங்கைக்கு - இந்தியாவில் இந்திய காங்கிரஸ் கேட்டது போல -  பூரண சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கைதான். இந்தக் கோரிக்கையை எள்ளி நகையாடிய எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் தனது பொல்லாச் சிறகை விரித்தாடிய கதைக்கு ஒப்பிட்டார்.

1994 இல் வரலாறு மீண்டும் திரும்பியது.  வி.புலிகள் தேர்தலைப் புறக்கணித்ததால் டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி  10,744  (0.14)  வாக்குளைப் பெற்று 9 இடங்களில் "வெற்றி" பெற்றது!  இந்த 10,744 வாக்குகளில் இபிடிபி யின் கட்டுப்பாட்டில் இருந்த தீவுப்பகுதியில் 9,944 வாக்குகள் கிடைத்தன.  இந்தத் தேர்தல் புறக்கணிப்பே  இபிடிபி யின் அரசியல் வருகைக்கு கால்கோள் இட்டதோடு மட்டுமின்றி இன்றைய துரோக அரசியலுக்கும் வழிவகுத்தது. இதனை வரலாறு தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

தேர்தல் புறக்கணிப்பு தேவானந்தாவுக்கு மகிடம் சூட்டவோ?

6. போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் சிவில் சமூகம் வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்க  ஆலோசனை சொல்வது டக்லஸ் தேவானந்தாவுக்கு மகிடம் சூட்டத்தான்  என்ற அய்யம் எழுகிறது.  சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் (2010)  தமிழ்க் காங்கிரஸ் கட்சி தேசியத்துக்கு ஆதரவான வாக்குகளைப் பிரித்ததால் இபிடிபி கட்சிக்கு ஒரு இருக்கையை தங்கத் தாம்பாளத்தில் வைத்துக்  கொடுத்தது.  ததேகூ கேட்காவிட்டால் மாகாண சபையைக் கைப்பற்றுவதற்கு வேறு மாற்று உபாயங்களைப் பற்றித் தமிழ் சிவில் சமூகம் சிந்திக்கப் போகிறதாம்.  என்ன அந்த உபாயம் - சாணக்கியம் - என்பதைச் சொல்ல வேண்டியதுதானே?   அந்த உபாயம்  வணபிதாக்களையும் வைத்திய கலாநிதிகளையும் சுயேட்சைகளாகத் தேர்தலில் நிறுத்துவதா?   அப்படியென்றால் தமிழ் சிவில் சமூகத்துக்கு ஆட்டோடுதான் கோபம் குட்டிகளோடு இல்லை என்றாகிறது?  அதாவது ததேகூ ஓடு மட்டும் கோபம் மற்றவர்களோடு இல்லை!

ததேகூ யை மக்கள் தேர்தலில் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பி இருக்கிறார்கள்.  அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆணையை ததேகூ மனம், மொழி, வாக்கு ஆகிய மூன்றோடும் நிறைவேற்ற வேண்டும்.  அதில் அவர்கள் தவறு இழைத்தால் மக்கள் அடுத்த தேர்தலில் ததேகூ யை நிச்சயம் தண்டிப்பார்கள்.

தமிழ் சிவில் சமூகம் என்ற போர்வையில் ததேகூ க்கு எதிராகக் குறுக்குச் சால் ஓட்டுவது அல்லது கால்தடம் போட்டு விழுத்த எத்தனிப்பது அறம் அல்ல.   தமிழ் சிவில் சமூகம் யார் எதிரி யார் நண்பன் என்பதைத்  தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்றில் முன் எப்பொழுதம் இல்லாத ஒரு சிங்கள - பவுத்த வெறிபிடித்த - போர் வெற்றியில் மிதப்பாக இருக்கும் ஓர்  அரசின் அரசியல், இராணுவ,  இராசதந்திரம் ஆகியவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ததேகூ இருக்கிறது.

திரு இரா சம்பந்தர்  கிழக்கை சிங்கள மயப்படுத்த 60 ஆண்டுகள் எடுத்தது ஆனால் வடக்கை சிங்கள மயப்படுத்த 10- 20 ஆண்டுகள் போதும்  என்று கனடாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டிருந்தார்.  

வட - கிழக்கு வரலாற்றில் இல்லாதவாறு இராணுவ மயப்படுத்தப் பட்டுள்ளது. முழத்துக்கு ஒரு இராணுவம் மட்டுமல்ல ஊருக்கு ஒரு இராணுவ தளமும் நிறுவப்படுகிறது. 

திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வடக்கில் அசுர வேகத்தில் நடைபெறுகிறது.  இதன் மூலம் தமிழர்களது தாயகக் கோட்பாட்டை உடைத்து எறிவதே சிங்கள அரசின் இலக்காகும்.  நிலம் பறிபோனால் சுயநிர்ணயம் என்ற பேச்சுக்கே இடமில்லாது போய்விடும்.

எனவே  இன்றைய உலக ஒழுங்கு,  புவிசார் அரசியல்,  பொருளாதார நலங்கள் போன்றவற்றின் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு ததேகூ கைகளைப் பலப்படுத்த எல்லோரும் முன்வர வேண்டும்.  ததேகூ ஆலோசனை சொல்வதென்றால் அது ஆக்க பூர்வமான உருப்படியான ஆலோசனை ஆக இருக்க வேண்டும். 

ததேகூ யைப் பொறுத்தளவில் தேர்தல் அறிக்கையில் சொல்லியவாறு தமிழினத்தின் அடிப்படைக் கோரிக்கைகளான தமிழ்த் தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை எவற்றையும் விட்டுக் கொடுக்காமல்தான் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.  எமக்குப் பணியாரம்தான் தேவையே ஒழிய சிலு சிலுப்பு அல்ல என்பதை நினைவில் கொள்வது நல்லது.  

திருவள்ளுவர் வாக்குக்கு இணங்க வினை வலி, தன் வலி, துணை வலி, மாற்றான் வலி என்பனவற்றைத் தூக்கிச் செயல் செய்ய வேண்டும்.  பின்னாளில் மாவோ நண்பன் யார்? எதிரி யார்?” என்று வகுத்துக் கொண்ட பின் களமிறங்குஎன்று சொன்னதை மனதில்  இருத்திக் கவனமாகவும் நிதானமாகவும் பயணிப்போம்.   
 

                                           


 பகுத்தறிவு பற்றிய விளக்கம்

         நக்கீரன்

 

குத்தறிவு என்ற சொல்லுக்கு பகுத்தறிதல் பகுத்துணர்தல் (To distinguish, discriminate)  என தமிழ் அகரமுதலிகள் பொருள் சொல்கின்றன. பகுத்தறிவுள்ளவன் என்பதற்குப் பகுத்துப் பார்ப்பவன் (A judicious person) என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது. பகுத்துப் பார்க்க (To survey every part) என்றும் பகுப்பு (division, classification) எனப் பொருள் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

 

பகுத்தறிவு என்றால் விவேகம்  (Cleverness, ingenuity, discrimination, penetration, judgment) வியாசம் எனவும் பொருள் கூறப்படுகிறது. இந்த இரண்டும் வட சொற்களாகும்.

 

எனவே பகுத்தறிவு என்றால்  ஒரு பொருளைப் பகுத்து  வகைப்படுத்தி (To distinguish, discriminate, reason analytically) அறிதல் என்பது பொருள் ஆகும்.

 

ஆங்கிலத்தில் பகுத்தறிவு  rationality என்று அழைக்கப்படுகிறது. அதன் வரைவிலக்கணம் Rationality is the exercise of reason. It is the manner in which people derive conclusions when considering things deliberately. It also refers to the conformity of one's beliefs with one's reasons for belief, or with one's actions with one's reasons for action.  A rational decision is one that is not just reasoned, but is also optimal for achieving a goal or solving a problem.”

 

பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து சான்றுகளோடு புறவய நோக்கில் எண்பிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையைக் கண்டறிவதே.

 

·        கூறு                            - தன்மை, properties, nature

·        அவதானித்து         - observe, புலன்களின் தன்மையைப் புரிந்து புலன்கள் ஊடாக அவதானித்தல்

·        சான்றுகளோடு     - evidence, repeatable, testable, empirical or experience

·        புறவய நோக்கில் - objective

·        முடிவுகள்               - explanation, facts

·        வழிமுறை            - method

·        ஆற்றல்               - capacity

 

பகுத்தறிவு பற்றிய இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்.

 

தொல்காப்பியர் புல் பூண்டு முதல் மனிதன் ஈறாக உயிர் இருப்பதாகச் சொல்கிறார். இந்தக் கோட்பாடு சமணர்களுக்கு உரியது. தொல்காப்பியர் சமணர்.

 

புல், பூண்டு                             -          ஓரறிவு  (தொடு உணர்ச்சி)
நத்தை, சங்கு                         -          ஈரறிவு  (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி)
எறும்பு, கறையான்              -          மூவறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி, நுகர்தல்)
, வண்டு                                 -          நான்கறிவு  (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி, நுகர்தல், பார்வை)
விலங்குகள், பறவைகள்      -        அய்ந்தறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி, நுகர்தல், பார்வை, கேட்டல்)
மனிதன் மட்டுமே                    -      ஆறறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி, நுகர்தல், பார்வை, கேட்டல், பகுத்தறிவு)

 

மாவும் மாக்களும் அய்யறிவினவே
மக்கள் தாமே ஆறறிவுயிரே” 
                 (தொல்காப்பியம்)

 

சிந்தித்துச் செயல்படுவது என்பது ஆறாவது அறிவு. அது மனிதனுக்குத்தான் உண்டு. அதிசயமான காரியங்கள் செய்யக்கூடிய உயிர்கள் உண்டு மனிதன் செய்ய முடியாத செயல்களை  ஓர் உயிர் முதல் அய்யறிவு உள்ள உயிர்கள் செய்யும். ஒரு எறும்பை எடுத்துக் கொண்டால் நமக்குத் தெரியாத வாசனை அதற்குத் தெரியும். ஒரு குருவியை எடுத்துக் கொண்டால் மனிதனால்  பறக்க முடியாமல் இருக்கும்போது அது பறக்கும். ஒரு குரங்கை எடுத்துக்கொண்டால் மனிதன்  தாவமுடியாத அளவுக்குத் தாவும். நாய்க்கு மோப்ப ஆற்றல் மனிதனை விட அதிகம். மனிதனுக்கு மேற்பட்ட, மனிதனால் முடியாத சில செயல்கள் மற்ற அறிவுள்ள உயிர்களுக்கு உண்டு. சிந்தித்து, வளர்ச்சிக்கேற்ற வண்ணம் தன்னுடைய வாழ்வு நிறைவு பெறும் வண்ணம் பயன்படுத்துகிற அளவு மனிதனுக்குத்தான் உண்டு. வேறு உயிர்களுக்கு இல்லை. பசி, பருவம், முதுமை, மரணம் என்ற நான்கும் மனித இனத்துக்குப் பொதுவானவை.

 

மனிதர்கள் சிந்திக்கிறார்கள்! மற்ற உயிரினங்கள் சிந்திப்பதில்லை! மனிதர்களுக்கு மட்டுமே பகுத்தறிவு உண்டு! மற்ற உயிரினங்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி கிடையாது! பகுத்தறிவைப் யாரும் போதிப்பதில்லை. காரணம் அது மதம் அல்ல. பகுத்தறிவைப் பற்றிப் பேசுகிறோம், எழுதுகிறோம். அதில் உண்மை இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் தள்ளிவிட வேண்டும் மதவாதிகள் போல ஏற்றுக்கொண்டால் சுவர்க்கம் தள்ளிவிட்டால் நரகம் என்று பகுத்தறிவுவாதிகள் யாரையும் பயமுறுத்துவதில்லை.

 

மனிதன் பகுத்தறிவுள்ள பிராணி மனிதன் எதையும் தீர ஆராயும் இயல்பினால் மற்ற விலங்குகளிருந்து வேறுபடுகின்றான். சிந்தனையாற்றலின் பயனாக அவன் மற்றெல்லா உயிரினங்களுக்கும் தலைவனாக விளங்குகிறான். சிந்தனை ஒன்றைத் தவிர வேறு வகைகளில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடில்லை. அவற்றைப் போலவே அவனும் உண்பதுவும் உறங்குவதும் சூழல் நிலைகளால் பாதிக்கப்படுவதுமாக இருக்கின்றான். விலங்குகள் வெறும் இச்சையினால் மட்டும் உந்தப்பட்டுச் செயல் படுகின்றன. ஆனால் மனிதன் எண்ணித் துணிந்து செயல்படுகின்றான். தன் நடைத்தையின் விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றான். அவனுடைய ஆற்றலெல்லாம் இந்தச் சிந்தனையில் தான் அடங்கியுள்ளது. அதன் மூலமாகத் தான் அவன் தன்னைக்காட்டிலும் உடல் வலுவுடையப் பிராணிகளையும் இயற்கையையும் வெற்றி கொள்ள முடிந்தது. சிந்தனைதான் பல கலைகளாகவும் அறிவியலாகவும் தத்துவமாகவும் பரிணமித்துள்ளது. (குடியரசு - மனிதனும் மிருகமும்)

உலக வரலாற்றில் முதல்முறையாக - 2550 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களைப் பார்த்துச் சிந்திக்கச் சொன்ன பகுத்தறிவுவாதி புத்தர் ஆவார். பிற்காலத்தில் அவரைப்பற்றிப் புனைகதைகள், இதிகாசங்கள் இயற்றி அவைரைக் கடவுளாக்கி விட்டார்கள் என்பது வேறு கதை.

மகானால் உபதேசிக்கப்பட்டது என்பதற்காகவோ, பழைய சாத்திரங்களில் எழுதப்பட்டது என்பதற்காகவோ, பழங்காலம் முதல் பலராலும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது என்பதற்காகவோ எதையும் நம்ப வேண்டியதில்லை. நாமே நேரில் பலவிதமாய்ச் சோதனை செய்து அய்யங்கள் தீர்ந்த பிறகே எந்த தர்ம மார்க்கத்தையும் நம்பிப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னவர் புத்தர்.

 

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும் புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின்ற்குக் காரணம் எனக்  கூறினார்.

 

மனிதனுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அதைப் போற்றி வணங்க வேண்டுமென்றும் பிராமணர்கள் சொல்லித் திரிகிறார்களே’’ என்று சிலர் கேட்டபோது புத்தர் சொன்னது,

 

'வாதத்திற்காக அதை ஏற்றுக் கொள்ளுவோம். பிக்குவே, நீ ஓர் ஆற்றைக் கடக்கவேண்டியுள்ளது. அதைக் கடப்பதற்கு அருகிலுள்ள வேலுவனத்தில் வேல்களை (மூங்கில் காட்டில் மூங்கில்களை) வெட்டித் துண்டுகள் செய்து, அவைகளை இணைத்துப் பாசத்தால் (கயிற்றால்) கட்டித் தெப்பம் செய்து, அதனைக் கொண்டு ஆற்றைக் கடக்கின்றாய். ஆற்றைக் கடக்கத் துணையாக இருந்த அத்தெப்பத்தை எடுத்துக் கரையில் வைத்து விட்டு 'என்னை ஆற்றின் அக்கரையிலிருந்து இக்கரை சேர்த்த வேலனே (மூங்கிலே)’’ என்று போற்றுவாயா? வேண்டுமானால் வேறு எவருக்காவது அது பயன்படட்டும் என்று நினைத்துக் கரையிலுள்ள ஒரு மரத்தில் அக்கட்டு மரத்தைக் கட்டி வைத்து விட்டுச் செல்லலாம். அதுவே அறிவுடைமை;. பிறர் நலம் பேணுவதாகும்.’’

புத்தருக்குப் பின்னர் தமிழ்நாடு கண்ட ஒரு பகுத்தறிவுவாதி திருவள்ளுவர்.

 

எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.  (அதிகாரம் 43- அறிவுடமை, குறள் 428)

எப் பொருள் எத்தன்மைத்தாயினும்
அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு
(அதிகாரம் 36 மெய் உணர்தல், குறள் 355)

 

என்று மெய்யறிவுக்கு இலக்கணம் சொன்னார். அறிவுடையார் எல்லாம் உடையார் என்றார். அவரே,

 

இரந்தும் உயிர் வாழவேண்டின்
பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்
. (அதிகாரம் 107 இரவு அச்சம் குறள் 1062)

இந்த உலகத்தைப் படைத்தவன் உலக மக்கள் இரந்து உயிர் வாழ வேண்டும் என்று விதித்திருந்தால் அந்தக் கொடியவன் இரப்பவரைப் போலவே எங்கும் அலைந்து கெட வேண்டும் எனத் திட்டியவர் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு இருந்த துணிவு இன்று இல்லை

நட்ட கல்லைத் தெய்வமென்று
நாலு புட்பம் சாற்றியே
சுற்றிவந்து மொணமொணென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ?

என்று காட்டமாகக் கேட்ட சிவவாக்கியர் ஒரு தலைசிறந்த சித்தர் மட்டுமல்ல பகுத்தறிவுவாதியும் ஆவார்

பகுத்தறிவு பற்றிப் பெரியாரே தெளிவு படுத்தியுள்ளார். “இராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே என்று மட்டுமல்ல, தன்னைப் புரிந்துகொண்டவர்கள் தனது கருத்துக்கள் தேவையில்லை என்று நினைக்கும்போது தன்னைத் தனது சிந்தனைகளை நிராகரித்துச் செல்லலாம் என்ற மாபெரும் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படையாகச் சொன்னவர் பெரியார் ஒருவரே!

பகுத்தறிவுவாதிகள் காது குத்தல், மொட்டையடித்தல், பச்சை குத்துதல், சுன்னத் செய்தல், அரைஞான் கயிறு கட்டுதல், தாலி, மெட்டி, மோதிரம் தலைக்கட்டு, நாமம், விபூதிப்பட்டை, உருத்திராட்சக் கொட்டை  போன்ற எல்லா குறிகளும் மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட குழுக்குறிகள். சில சிறுபான்மையினரிடமும் சில பொதுவாக பெரும்பான்மையினரிடமும் காணப்படலாம். இவற்றை செய்யாமல் விட்டுவிடுவதால் மருத்துவ அடிப்படையில் எந்தக் குறையும் இல்லை. செய்து கொள்வதால் எந்தப் பலனும் இல்லை. இதே போல் அருச்சனை, அபிசேகம், தேர், தீா்த்தம், திருவிழா, கிரக பரிகாரம், சாந்தி, விளக்குப்  பூசை, படையல் போன்றவற்றாலும் எள்முனைப் பலனும் இல்லை.

 

 கலையுரைத்த கற்பனையை  நிலையெனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போக" என்றெல்லாம் இராமலிங்க அடிகளார் முழங்கினார்.

 

"புராண இதிகாசங்களின் மூலம் தரப்படும் கருத்துக்களும் சமூகத்தின் பொதுத் தரத்தை உயர்த்த வில்லை என்பதாற்றான் நாம் அவைகளைக் குறை கூறுகிறோம்" என்றார் அறிஞர் அண்ணா. 

 

எனவே மூடநம்பிக்கைகளைக் களைந்து பகுத்தறிவோடு சிந்தித்து தன்னம்பிக்கையோடு இந்த உலகிலேயே வாழ்வாங்கு வாழப் பழகுவோம்.

 


 

ஜெயலலிதாவின் துக்ளக் ஆட்சியில் தமிழர்களின் அறிவுப் பசியின் மீது தாக்குதல்

நக்கீரன்

சங்க காலத்தில் கல்வி பரவலாக இல்லை.  ஆனால் அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.    ஆண்களைப் போலவே பெண்களும் கல்வி கற்றார்கள். கடைச் சங்க காலத்தில் ஆண் புலவர்களுக்கு இணையாக பெண் புலவர்கள் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்.

 நல்லிசைப் புலமை மெல்லியார், வெள்ளி வீதியார், ஒக்கூர் மாச்சாத்தியார், அவ்வையார், காவற்பெண்டு, காக்கைபாடினியார், காமக்கணிப் பசலையார் என 50 க்கும் மேற்பட்ட பெண்புலவர்கள்  பாடல் பாடியுள்ளார்கள்.

கல்வி கற்றவன் மதிக்கப்பெற்ற செய்தியைப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் படிய பாடல் செப்புகிறது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம்திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே
               (புறம் 183)

 சங்கம் மருவிய காலத்தில் கல்விக்கு மிகவும் சிறப்புத் தரப்படுகின்றது.   நீதி இலக்கியங்களில் கல்வி வலியுறுத்தப்படுகின்றது.  கற்றார், கல்லாதார் என்ற பாகுபாடு சொல்லப்படுகின்றது. திருவள்ளுவர் தாம் எழுதிய திருக்குறளில் கல்வியின் சிறப்பை கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடமை என நான்கு அதிகாரங்களில் எடுத்துரைக்கிறார்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
.                          (திருக்குறள்  392)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
                           (திருக்குறள்  393)

கல்வியின் சிறப்பினையும் பெருமையினையும் இன்றியமையாமையையும் கூறும் திருவள்ளுவர், கருத்து முதல் வாதத்தின் அடிப்படையிலும் பொருள் முதல் வாதத்தின் அடிப்படையிலும் பேசுகின்றார்.  கருத்து முதல் வாதத்தினை அடிப்படையாக வைத்து,

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
.                               (திருக்குறள்  398)

என்கிறார்.   அடுத்துப் பொருள் முதல் வாதத்தினை அடிப்படையாக வைத்து,

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
.                                       (திருக்குறள், 400)

என்கிறார்.   மேலும் கல்லாதவரை விலங்கு எனத் திட்டுகிறார்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
.                                             (திருக்குறள், 410)

சங்கம் மருவிய காலத்தில் பெண் கல்வி குறைந்தது.  அதற்குச் சமண மதம் தழைத் தோங்கியது காரணமாக இருக்கலாம்.  வேத சமயம் போலவே சமணம் பெண்களுக்கு ஒத்துரிமை கொடுக்கவில்லை.

தொல்காப்பியர் சமணர்,  நாலடியார் பாடல்களைப் பாடியவர்கள் சமண முனிவர்கள்.  இப்படிச் சமண மதத்தைச் சார்ந்தவர்கள் பலர் இருந்தார்கள்.  அதனால் பெண்களுக்குப் பல சமூகக் கட்டுப்பாடுகள் இருந்தன.

பல்லவர் காலத்தில் நால் வருணப் பாகுபாடு மிகுதியானது.  அந்தக் காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டவில்லை.  டிமட்ட உழைக்கும் மக்களிடத்தில் கல்வி எந்த அளவுக்கு இருந்தது என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை.  பக்தி  இலக்கியங்களில் பொது மக்களைப் பற்றிய கருத்துக்கள் மிகக் குறைவு.

சங்க இலக்கியத்திலும் காப்பியங்களிலும் பொருள் முதல் வாதமே மிகுதியாகப் பேசப்படுகின்றது.  பக்தி இலக்கியத்தில் கருத்து முதல் வாதமே பேசப்படுகின்றது.  சங்கம் மருவிய இலக்கிய மாகிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் விழுமிய வாழ்க்கைக்கான கருத்து முதல் வாதமும் பொருள் முதல் வாதமும் பேசப்படுகின்றன.

எண் எழுத்து இகழேல்               (ஒளவையார், ஆத்திசூடி 7)

இளமையில் கல்                        (ஒளவையார், ஆத்திசூடி, 29)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்       (கொன்றை வேந்தன்  7)

என்றெல்லாம் இடைக்கால இலக்கியங்கள் கல்வியின் அவசியம், பெருமை இவற்றைக் கூறினாலும் பெண் கல்வி பற்றிப் பேசவில்லை.  மாறாக, தையல்சொல் கேளேல்  (ஒளவையார், ஆத்திசூடி  63)   என்றெல்லாம் கூறப்படுகிறது.  

இடைக்கால சோழர்  ஆட்சியில் பள்ளிகூடங்கள் இருந்தன. ஆனால் அவை வேதப் பள்ளிகள்.  அங்கு பிராமணர்கள் வேதம் கற்றார்கள். ஏனைய மக்களுக்கு பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்ட செய்தி எதுவும் இல்லை.

ஆங்கிலேயர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களது விழுக்காடு ஆண்களுக்கு 2  ஆகவும் பெண்களுக்கு அதைவிடக் குறைவாகவும் காணப்பட்டது.

யாழ்ப்பாண இராச்சியத்தில் அரசகுமாரிகளும் கோயிலில் நடனமாடும் நடனப் பெண்களுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள்!

ஆங்கிலேயர் ஆட்சியில்தான் முதன் முதலாகக் கல்விக் கூடங்கள் அரசு சார்பில் நிறுவப்பட்டன.     மேல்தட்டு மக்களுக்கும் தனி மனிதர்களுக்கும் சொந்தமாக இருந்த கல்வியை ஆங்கிலேயர்கள் அனைவருக்கும் பொதுவுடைமையாக ஆக்கினார்கள்.   அது காலவரை கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு  நவீன அறிவியல், மருத்துவம்,  கணிதம், வரலாறு,  புவியியல் போன்ற பாடங்கள் கல்லுாரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் படிப்பிக்கப்பட்டன.   அவ்வாறு பொது நிறுவனங்களாக கல்விக்  கூடங்கள் இருந்த  போதும்  சமுதாயத்தில் நிலவிய நால் வருணப் பாகுபாடு எல்லோரும் கல்வி கற்கத் தடையாக இருந்தது.

ஆங்கிலேயர் வராதுவிட்டிருந்தால் திண்ணைப் பள்ளிகள் தொடர்ந்திருக்கும்.  பாரதம், இராமாயணம், நிகண்டு, கூட்டல் கழித்தல் பாடங்கள் படிப்பதோடு கல்வி முடிந்திருக்கும்.

இந்தப் பின்னணியிலேயே உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவ மனையாக மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவை அவர் மீளாய்வு செய்ய வேண்டும்.  

கெடுகுடி சொற்கேளாது    என்பார்கள். அண்ணா நுாலகத்தை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவு தவறானது. தமிழ் உணர்வாளர்களை அவமதிக்கும் செயல். நூலகத்திற்காக அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பை எவ்வாறு மருத்துவமனையாக பயன்படுத்த முடியும் என்பது தெரியவில்லை.

கடந்த மே மாதம் தேர்தலி்ல் வென்று பதவிக்கு வந்ததும் வராததுமாக சமசீர் கல்வியை தடை செய்தார்.  அந்தத் தடைக்கு கட்சி அரசியலுக்கு (அதிமுக நீங்கலாக)  அப்பால் எதிர்ப்பு எழுந்த போதும் ஜெயலலிதா மசியவில்லை. உச்ச நீதிமன்றம் அவரது தலையில் குட்டிய பிறகே வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக சமச்சீர்க் கல்வியைச்  செயல்படுத்தினார்.  அதிலிருந்து பாடம் படிக்காத ஜெயலலிதா இப்போது அண்ணா நுாலகத்தை மூடுவதில் தனது கைவரிசையைக்  காட்டியுள்ளார்.

அண்ணாவின் பெயரைக் கட்சியிலும் அண்ணாவின் படத்தை கொடியிலும் வைத்திருக்கும் ஜெயலலிதா அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனை ஆக்க தீர்மானிப்பது அண்ணாவுக்குச் செய்யும் பச்சை இரண்டகமாகும்.  இது அதிமுக இல் உட்கட்சி சனநாயகம் என்பது மருந்துக்கும் இல்லை என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டு.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் ஜெயலலிதா செயல்படுவது ஒன்றும் புதிதல்ல.  காரணம் ஜெயலலிதாவே பொதுக்குழு, செயல்குழு, கட்சி எல்லாம். அவருக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அமைச்சர்கள் கை கட்டி, வாய்பொத்தி நிற்கிறார்கள்.  வாய் திறந்தால் பதவி போய்விடும்.  முதல்வர்  ஜெயலலிதா ுக்ளக் சோ வைத் தவிர வேறு  எவரது ஆலோசனைகளையும் செவியில் போட்டுக் கொள்வதில்லை!

அண்ணா நுாலகத்தைக்  குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்ற முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவு  முன்னாள் முதல்வர் கருணாநிதியை   அரசியல் காழ்ப்புணர்ச்சி  காரணமாகப் பழிவாங்கும் அரசியல் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.    அப்படி ஒரு குறுக்கிய கண்ணோட்டத்தில்  பார்த்துவிடக் கூடாது.  ட்டுமொத்த மிழினத்தின் அறிவு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் எதிரான போர் அறிவித்தல் என்றே கருதப்பட வேண்டும். 

தமிழர்களது ொழி,  அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம்,  எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே முதல்வர் ஜெயலலிதா இந்த முடிவை எடுத்துள்ளார்.  

 இந்திய மைய அரசின் கீழ் செயல்படும் செம்மொழி மையம் தமிழக அரசுக்குச் சொந்தமான பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்தது.  முதல்வர் ஜெயலலிதா அதில் பொதுப்பணித்துறை அமைச்சரை குடியேற்றி செம்மொழி மையத்தை ஒரு சிறு பகுதியில் செயல்படும் நிலைக்கு முடக்கிவிட்டார்.  செம்மொழி மையத்தை சிறுமைப்படுத்தி விட்டார். 

தஞ்சைத்  தமிழ்ப் பல்கலைக் கழகத்தையும் ஜெயலலிதா விட்டு வைக்கவில்லை. அந்தப்  பல்கலைக் கழகத்தை எம்ஜிஆர்  உருவாக்கியபோது அதன் விரிவாக்கத்திற்கு என ஆயிரம் ஏக்கர் நிலத்தை  ஒதுக்கினார். ஏற்கனவே அவ்வளாகத்தில் வீடுகள் கட்டப்பட்டு தனியாருக்கு விற்று விட்டார்கள். இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கட்ட அதிமுக  அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழர்களின் அறிவு வளரக் கூடாது என்பதில் முதல்வர் ஜெயலலி்தா குறியாக இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மக்கள் அறிவு வளர்ச்சி பெற்றால் அவரது வாக்கு வங்கி அரசியலுக்கும் துக்ளக் ட்சிப் போக்கிற்கும் இடையூறாக இருந்து விடும் என வர் அச்சப்படுகிறார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம்மாற்றம் செய்யும் தமிழக அரசின் முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப்பாகும் எனத் தமிழறிஞர்கள் அவ்வை நடரான், சிலம்பொலி சு. செல்லப்பன், க.ப. அறவாணன், பொன். கோதண்டராமன், மு.பி. பாலசுப்பிரமணியன், இரா. குமாரவேலன், மு. தங்கராசு, தி. இராசகோபாலன், பா. வளன் அரசு, இராம. குருநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திமுக, பொவுடமைக் கட்சிகள், பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஜெயலலிதாவின் தான்தோன்றித்தனமான முடிவைக் கண்டித்துள்ளன. நாம் தமிழர் இயக்கம் மட்டும் மவுனம் சாதிப்பது வியப்பை அளிக்கிறது. 

அண்ணா நுாற்றாண்டு நுாலகம் கடந்த திமுக ஆட்சியில் 8 ஏக்கர் நிலப்பரப்பில்  180 கோடி ரூபா  செலவில் 9 மாடிகளைக் கொண்ட நூலகத்துக்கு என்றே வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளது.   கட்டிடத்தின் பரப்பளவு 333,140 ச.அடி ஆகும்.  பன்னிரண்டு  இலட்சம் புத்தகங்களை வைக்கத்தக்க கொள்ளவு கொண்டது. தற்சமயம் 550,000 நுால்கள் வைக்கப்பட்டுள்ளன.  இது ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நுாலகம். ஆகும்.

நுழைவாசலில் அறிஞர் அண்ணாவின் 5 அடி உயர செப்பாலான சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த நுாலகம் மிகச்சிறந்த அரங்குகள், உணவகம் ஆகியவைகளை உள்ளடக்கியது.    பழைய ஓலைச்சுவடிகளை கூட ஆய்வுக்காக சிறப்பாகப் பாதுகாத்துப் பயன்படுத்தும் வசதிகளை உள்ளடக்கியது.  ஒரே நேரத்தில் 1250  பேர் அமர்ந்து படிக்கக் கூடிய வசதிகள் உண்டு. 50,000 ச.அடி கொண்ட உள் அரங்கு, சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு,  30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. நவீன கணினி தொழில் நுட்பங்களைக் கையாண்டும் மாற்றுத் திறனாளிகள் கூட வசதியாக அமர்ந்து படிக்கும் வண்ணமும் குழந்தைகள் உட்படத் தனித்தனிப் பகுதிகளைக் கொண்ட நவீன நூலகம் என்ற தனிச் சிறப்புடையது. ஒரு நாளில் 2,700  பேர் இந்த நுாலகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.  இருநுாறு ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள்.

இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டு அங்கே உரையாற்றிய போது ஆசியா கண்டத்திலேயே மிகச் சிறந்த நூலகமாக இது அமைந்திருக்கிறது எனப் பாராட்டினார்.

சுருங்கச் சொன்னால் இரு ஒரு அறிவாலயம்.  கல்வியாளர்களின் கனவுக் கட்டிடம்.  தமிழினத்துக்கு பெருமை தேடித்தரும் அழகுப் பெட்டகம்.

முந்தைய திமுக அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் ஜெயலலி்தா நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.  இரண்டு இனங்களுக்கு இடையிலான வரலாற்றுப் போர் தொடர்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலே கூறியது போல குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை தேவையென்றால் அதற்கென வடிவு அமைக்கப்பட்டுக் கட்டப்பட வேண்டும்.   அதனை யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் சிறப்பு மருத்துவ மனையாக  மாற்ற நினைப்பது துக்ளக் ஆட்சி நடத்தும் ஜெயலலி்தா  தமிழர்களின் அறிவுத் தாகத்துக்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதல் என்றே எண்ணப்படும்.  வரலாற்றில் இருந்து பாடம் படிக்க மறுத்தால் முதல்வர் ஜெயலலிதா அதற்கான விலையை அடுத்த தேர்தலில் கொடுக்க வேண்டி வரும்.  (முழக்கம்  - November 27, 2011)

 



 

 

வடக்கில் ஆக்கிரமிப்பு இராணுவம் இருக்கு மட்டும் தமிழ்மக்களுக்குப் பாதுகாப்பில்லை நிம்மதி இல்லை சுதந்திரம் இல்லை

நக்கீரன்

நேற்று திங்கட்கிழமை (15 நொவெம்பர், 2011)  பரந்தன் பகுதியில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்தும் முல்லைத்தீவு தனியார் பேருந்தும் சிறிய விபத்தில் சிக்கியிருந்தது. இது தொடர்பில் இரண்டு பேருந்துகளினதும் சாரதிகள் தமக்குள் இணக்கம் கண்டு சமாளித்துச் செல்ல முற்பட்டபோது, அங்கு வந்த படையினர் தனியார் பேருந்து நடத்துனர் ஓட்டினர் உரிமையாளர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த பேருந்தை சிங்கள இராணுவம் அங்கிருந்து கொண்டு சென்றுவிட்டது.  ஆனால் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர், மற்றும் உரிமையாளர் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டு காயங்களுடன் காவல்துறையினர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 

 

சிங்கள இராணுவத்தினர் தமிழ்மக்கள் மீது தாக்குதல் நடத்துவது இதுதான் முதல் தடவை என்று கூறமுடியாது.  கடந்த யூன் மாதம் யாழ்ப்பாணம் அளவெட்டி சைவ மகாஜன சபை மண்டபத்தில் நடந்த ததேகூ வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திடீரென அத்து மீறி நுழைந்த சீருடை அணிந்த சிங்கள இராணுவத்தினர்  இரும்புக் கம்பிகள், மண் வெட்டிப் பிடிகளைப் போன்ற குண்டாந்தடிகளால் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றிக் கடுமையாகத் தாக்கினார்கள். 

 

மேடையில் கூட்டத்துக்கு தலைமை வகித்த தமிழரசுக்கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிச் செயலாளர் சுகிர்தனின் உடலைப் படையினரின் கொட்டன்கள் பதம் பார்த்தன. மேடையில் மட்டுமல்லாது கீழே அமர்ந்திருந்தவர்கள் மீதும் கொட்டன்களும் இரும்புக்கம்பிகளும் தாறுமாறாக விளையாடின. எவருமே படையினருடன் நியாயம் கதைக்கவோ அல்லது அவர்களிடம் கருணை கிடைக்குமென்று எதிர்பார்க்கவோ முற்படவில்லை. அங்கு வருகை தந்திருந்த  5  ததேகூ  நா.உறுப்பினர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். அவர்களது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மெய்காப்பாளர்களே அவர்கள் மீது விழ வேண்டிய அடிகளைத் தாங்கிக் கொண்டார்கள். இரு மெய்பாதுகாப்பாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார்கள்.

 

கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இரவு நாவாந்துறையில் நடமாடிய கிறிஸ் மனிதனை மக்கள் மடக்கிப்பிடிக்க முயன்ற போது அவன் நாவந்துறையிலுள்ள இராணுவ காவலரணுக்குள் ஓடி ஒளிந்ததாக மக்கள் குற்றஞ்சாட்டினர். அதனைத் தொடர்ந்து மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.  காவல்துறையினரது வண்டிகளைப் பொதுமக்கள் அடித்து  நொருக்கியதாகக் கூறி அங்கு உறங்கிக் கொண்டிருந்த மக்களை கேட்டுக் கேள்வியின்றி, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பூட்டியிருந்த வீடுகளை உடைத்து வீட்டில் இருந்த அனைவரையும் தற தறவென்று இழுத்துச் சென்று மிகக் கடுமையாகத் தாக்கினர். இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்குப் பெண்கள், சிறுவர்கள் நோயாளர்கள் என எவரும் தப்பவில்லை.  நித்திரையிலிருந்த பொது மக்களை மதுவெறியும் இனவெறியும் தலைக்கேறிய  காவல்துறையிரும்  இராணுவமும்   பொல்லுகளால்  அடித்தும் காலணிகளால் உதைத்தும்  ஊழித்தாண்டவம் ஆடினர்.

 

தமது பிள்ளைகளை - கணவனை கண்முன்னே அடித்து உதைத்து இழுத்துச் செல்வதைத் தடுக்க முயன்ற பெண்களும் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டனர். யார் எவரென்றில்லாமல் வயது வேறுபாடின்றி மக்களைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தாக்கப்பட்டவர்களை கிட்டத்தட்ட 8 மணித்தியாலயங்களுக்கு மேல் தண்ணீர் கூடக் கொடுக்காமல்  மருத்துவ ஏற்பாடுகள் எதுவுமில்லாமல் சிங்களப் படையினர் தடுத்து வைத்திருந்தனர்.

 

சுமார் 150 க்கும் மேற்பட்ட ஆண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களில் 30 பேருக்கு மேற்பட்டவர்கள் பொது இடத்தில் வைத்து கை கால்கள் முறிக்கப்பட்டனர். ஏனைய இடங்களில் மர்ம மனிதர்களைப் பிடித்தவர்கள் அல்லது எதிர்த்தவர்களே படையினரின் தாக்குதல்களுக்கு இலக்கானார்கள். ஆனால் இங்கே ஒட்டு மொத்த கிராமமே பாதிப்புக்குள்ளானது.

 

கைது செய்யப்பட்டு காவல்துறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட மக்கள் தம்மிடம் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலங்களில் கையொப்பத்தை பெற்றுக்கொண்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.

 

மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்தமாதிரி இராணுவம் மற்றும் காவல்துறை கை, கால் மற்றும் உடல் முழுவதும் தாக்கப்பட்ட நாவாந்துறை மக்கள் இராணுவ முகாமைத் தாக்கினார்கள் என்று குற்றஞ்சுமத்தி 100 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

மறுபுறம் சிறீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையும் பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்பாக 61 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகள் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இது தொடர்பான வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் டிசம்பர் 13 ஆம் நாளுக்குத் தள்ளிப் போட்டுள்ளது.

 

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக ஒவ்வொரு  வழக்கு முறைப்பாட்டாளரும் தலைக்கு ரூபா 10 இலட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

எதிர்வாதிகளாகப்  பாதுகாப்புச் செயலர் கோத்தபா இராசபக்சே, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசுரிய, பாதுகாப்புப் படைகளின் யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத் துருசிங்க காவல்துறை மா அதிபர் என். இலங்கக்கோன், இராணுவத்தின் 51 ஆவது படையணித் தளபதி வெல்கம, 512 ஆவது பயைணியின் தளபதி அஜித் பள்ளவெல, துணை காவல்துறை  அதிபர் நீல் தலுவத்த மூத்த காவல்துறை அத்தியட்சகர், நெவில் பத்மதேவா, உதவிப் காவல் அத்தியட்சகர் ஏ.எம்.சி.ஏ. பண்டார, யாழ்ப்பாண காவல்துறை தலைமையகப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, பெண் காவலர்  நதீகா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.

 

வழக்கம் போல் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக நாவாந்துறையில் வெடித்த குழப்ப நிலையை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் என்பதற்காக யாழ்ப்பாண காவல்நிலையத் தலைமைக் காவல் அதிகாரி சமன் சிகேரா காவல்துறை அதிபர் காமினி சில்வா அவர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 

நாவாந்துறையில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குல்களை நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் பாடமொன்றைப் புகட்டுவதற்கு  சிங்களப் படைகள் மேற்கொண்ட  நர வேட்டை எனக் கொள்ளலாம்.

 

இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம்  சிங்கள அடக்குமுறை இராணுவம் நாவாந்துறையில் நடந்தது, இனி எங்கும் நடக்கலாம் எங்கென்றாலும் தமிழர்கள் அடங்கித் தான் ஆகவேண்டும். மாறாக ஆடினீர்கள் என்றால் இது தான் நடக்கும் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது.

 

அளவெட்டி, நாவாந்துறை, பரந்தன் என இராணுவ பயங்கரவாதம் தொடரும் போது இராசபக்சே அரசு அவற்றைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. 

 

சிங்கள இராணுவமும் சிங்கள காவல்படையும் ஏன் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறது?

 

1) நாங்கள் ஆளும் இனம் நீங்கள்  ஆளப்படும் இனம் எனவே நீங்கள் வாய்பொத்தி கை கட்டி வாழப் பழக வேண்டும்.

2) நாங்கள் எசமானர்கள் நீங்கள் கொத்தடிமைகள். எனவே நாங்கள் வைத்ததுதான் சட்டம்.

3) நாங்கள் தமிழர்களுக்கு எதிரான போரில் வென்று விட்டோம். எனவே நாங்கள்தான் வரலாற்றை எழுதுவோம். எழுதுகிறோம்.

4) நாங்கள் முதல்தர குடிமக்கள் நீங்கள் மூன்றாந்தரக் குடிமக்கள் என்பதை கனவிலும் மறந்துவிடக் கூடாது.

5) நாங்கள் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நீங்கள்  யாராக இருந்தாலும் உங்களைப் பயங்கரவாதிகளாகவே பார்ப்போம்.

6) நாங்கள் எது செய்தாலும் யாரும் தட்டிக் கேட்க முடியாது.  நாங்கள் சட்ட திட்டத்திற்கு அப்பால் பட்டவர்கள் என்பது நினைவிருக்கட்டும்.

7) மனிதவுரிமை ஆணையத்திடம் முறைப்பாடு செய்கிறீர்களா? அங்கேயும் நம்மாள்தான் இருக்கிறார்கள்.

8) உயர் அல்லது உச்ச நீதி மன்றத்துக்கு நீதி கேட்டுப் போகிறீர்களா? அங்கேயும் நம்மாள்தான் இருக்கிறார்கள். உங்களுக்கு நீதி கிடையாது.

 

தொடர்ந்து வடக்கில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.  சிங்கள இராணுவமும் காவல்துறையும் அவர்களை தங்கள் எதிரிகளாகவே பார்க்கின்றன.

ஆனால் சிறீலங்காவில் எதுவுமே நடக்கவில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர், தமிழர்களுக்கு எதுவிதமான சிக்கல்களே இல்லை. சிங்கள அரசு தமிழ் மக்களுடன் நல்லுறவை - இணக்கத்தைப் பேணி வருகிறது. வடக்கில் வசந்தம் வீசுகிறது கிழக்கில் உதயம் உதித்துள்ளது  என்ற தொனியில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அண்மையில் நடந்த ஜெனிவா மாநாட்டில் பேசியிருந்தது நினைவிருக்காலம்.

மடியில் பூனையை வைத்துக் கொண்டு சகுனம் பார்த்தால் எப்படி வடக்கை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத்தை (Sinhala occuption army) அகற்ற வேண்டும்.

 

இல்லையென்றால்  ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கில் குடிகொண்டிருக்கு மட்டும் தமிழ்மக்களுக்குப் பாதுகாப்பில்லை. நிம்மதி இல்லை. சுதந்திரம் இல்லை என்ற நிலைப்பாடே தொடரும்.  (November 15, 2011)

 


 

 

தமிழக உறவுகளே

 

சுண்டைக்காய் நாட்டு ஆட்சித் தலைவரான மகிந்த இராசபக்சே பாரத நாட்டுப் பிரதமரை தனது மாளிகையின் கூர்க்கா போல் நடத்துகிறார். தமிழக மீனவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என்று இராசபக்சே உறுதியளிப்பது இது நுாறாவது தடவை. இதுவரை காலமும் நிறுத்தப்படாத தாக்குதல்கள் இனிமேல் மட்டும் தாக்குதல் நிறுத்தப்படும் என எப்படி எதிர்பார்க்கலாம்? சிங்கள அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு  அரசியல்வாதிகளைப் பார்த்து கோமாளிகள் எனச் சொல்கிறார்கள்.  முகாம்களில் இன்னமும் ஏழாயிரம் பேர் மட்டுமே உள்ளதாகவும் அவர்களும் வரும் டிசெம்பர் மாதத்திற்குள் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்றும்  இராசபக்சே கூறுவது  சுத்தப் பொய். அண்ணளவாக  மூன்று இலட்சம் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படவில்லை. அவர்கள் இடைத்தங்கு முகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியமர்த்த இராசபக்சே மறுக்கிறார். காரணம் அவர்களது காணிகளை படையினருக்கு தளங்கள், குடியிருப்புக்கள் கட்ட இராசபக்சே கையகப்படுத்திவிட்டார். இன்று தமிழர்களது தாயகத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. வட - கிழக்கு மாகாண ஆளுநர் பதவியில் ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகள் அமர்த்தப்பட்டுள்ளார்கள். மாகாண இராணுவ தளபதிகளும் சிங்களவர்களே. இந்த இராணுவ தளபதிகளே தங்கள் விருப்பப்படி நிருவாகம் செய்கிறார்கள்.  சிவில் ஊழியர்கள் அவர்களிடம்  இருந்து பெறும் கட்டளைகளை நிறைவேற்ற கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். மறுத்தால் வேலை போய்விடும்.  அண்மையில் முற்றிலும் தமிழர்கள் வாழும் முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு அதிபர்களாக இருந்த தமிழர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களது இடத்தில் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்! சுருங்கச் சொன்னால் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. தமிழர்கள் மூச்சுவிடவே திணறுகிறார்கள். இராசபக்சே கூலிக்கு மாரடிக்கும் சுதர்சனா நாச்சியப்பன் போன்ற போலித்  தமிழர்களை வரவழைத்து எல்லாமே நன்றாக இருக்கிறது என்று சான்றிதழ் வாங்கி அதனை உலக நாடுகளிடம் காட்டுகிறார்.

 

நக்கீரன்


 

எமது மக்களது விடிவுக்கான வழிகள்

நக்கீரன்

மிழ்த்  தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களது அமெரிக்க வருகை தமிழீழ அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. ஒரு புதிய தெம்பையும் நம்பிக்கையையும்  தந்திருக்கிறது. அமெரிக்க இராசாங்க திணைக்களம் முதல் முறையாக அமெரிக்க ததேகூ  க்கு அரசமுறையில் அழைப்பிதழ் அனுப்பி பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.   தமிழர் தரப்பு அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை. இந்த அழைப்பை விட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராசாங்க செயலாளர் றொபேட் பிளேக் (United States Assistant Secretary of State for South and Central Asia, Robert Blake)  அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

கடந்த ஒக்தோபர் 26 தொடக்கம் 28 வரை இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடந்து முடிந்தது. ஒவ்வொரு நாளும் காலை தொடங்கி மாலைவரை பேசினார்கள். முதல் நாள்  இராசாங்க கீழ்நிலை அதிகாரிகளோடு பேசிய ததேகூ நா. உறுப்பினர்கள் மறுநாள் றொபேட் பிளேக் அவர்களோடும் பேசினார்கள். இராசாங்க திணைக்கள அதிகாரிகளோடு மட்டும் அல்லாமல் அமெரிக்க மக்களவை (காங்கிரஸ்)  உறுப்பினர்கள்,   மேலவை உறுப்பினர்கள் (செனட்) ஆகியோருடனும் பேசினார்கள்.  அந்தச் சந்திப்புக்களை அமெரிக்க இராசாங்க திணைக்களமே ஒழுங்கு செய்தது.

இந்த மூன்று நாள் சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது  தெரியவில்லை.  ஆனால் தமிழர் தரப்பு தமிழ்மக்கள் எதிர்நோக்கும் அல்லது முகம் கொடுக்கும் சிக்கல்கள் பற்றிப் பேசியிருப்பார்கள்.

போர் முடிந்த பின்னர் உள்நாட்டில் இடம்பெயர்ந்த 280,000 ஆயிரம் மக்களது மீள்குடியேற்றம், மறு வாழ்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்,  உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றல்,  வட - கிழக்கில் இராணுவ பிரசன்னம்,  பவுத்தமதப் பண்பாட்டுப் படையெடுப்பு போன்ற விடயங்கள் பேசப்பட்டிருக்கும் என நம்பலாம்.

பலர் எதிர்பார்த்தற்கு மாறாக அமெரிக்க இராசாங்க செயலாளர் கிலாறி கிளின்டன் அவர்களோடான சந்திப்பு இடம்பெறவில்லை.  கிலாறி கிளின்டன் சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேயை இதுவரை அமெரிக்காவில் வைத்துச் சந்தித்ததில்லை. மேலும் நாடுகள் தமக்கிடையே கடைப்பிடிக்கும் அரசதந்திர வரைமுறை (protocol) அதற்கு இடம்கொடுத்திருக்காது என நினைக்க வேண்டியுள்ளது.

அமெரிக்க இராசாங்க திணைக்கள அதிகாரிகளோடு என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு ”நாங்கள் எதிர்பார்த்ததை விட பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது” என்று மட்டும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார்.

கடந்த நொவெம்பர் 01 ஆம் நாள் அய்யன்னா அவையில் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களை ததேகூ  சந்திப்பதாக இருந்தது. அய்யன்னா  அலுவலகமே ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களோடு தொடர்பு கொண்டு பான் கி மூன் அவரைச் சந்திக்க விரும்புகிறார் என்று நாளும் நேரமும் குறிக்கப்பட்டது. அதன் காரணமாகவே  கனடாவுக்கு 29 ஒக்தோபர் இரவு வருகை தந்த திரு. சம்பந்தனும் திரு. எம்.ஏ. சுமந்திரனும் மீண்டும் நொவெம்பர் முதல் நாள் காலை அமெரிக்கா செல்ல ஏற்பாடாகி இருந்தது.  இருந்தும் திரு. சம்பந்தனும் திரு.சுமந்திரனும் அய்யன்னா அவையின் Under-Secretary-General for Political Affairs B. Lynn Pascoe  வர்களைச் சந்தித்துப் பேசினர்.  லின் பஸ்கோவை  இந்தப் பதவிக்கு பான் கி மூன் அவர்களே மார்ச்சு 2007 இல் நியமனம் செய்திருந்தார். இவர்  இந்தோனிசிய நாட்டுக்கு அமெரிக்கத் துாதுவராக (2004 - 2007) கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கி மூனை திரு. சம்பந்தன் சந்திக்கத் தவறியதற்கு முக்கிய காரணம் இந்தச் சந்திப்புப் பற்றிய செய்தி ஊடகங்களில் முந்திக் கொண்டு வந்ததே.  அந்தச் செய்தியை ஆர்வக் கோளாறு காரணமாகவோ என்னவோ ஊடகங்களுக்கு ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்களே சொன்னார்கள்.

இந்தச் சந்திப்புப் பற்றிய முதல் செய்தி ஒக்தோபர் 18 ஆம் நாள்  செய்தித்தாள்களில் வெளிவந்தது. மீண்டும் ஒக்தோபர் 22 ஆம் நாள் செய்தித்தாள்களில் வெளிவந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அய்யன்னா பொதுச்செயலர் பான் கி மூனைச் சந்திப்பதை அறிந்துகொண்ட சிறீலங்கா அரசு அதனைத் தடுக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இந்தச் சந்திப்பைப் பற்றி சிறீலங்காவின் மனிதவுரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்கா ”அய்யன்னா அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பார்கள் என்றால் ஏனைய தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் சந்திக்க வேண்டி வரும்” எனக் கூறினார்.   மேலும் ததேகூ னர்  தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இல்லை என்பதையும் எடுத்துக் கூறினார். இது தொடர்பாக கீழ்க்கண்ட செய்தியை கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளேடு வெளியிட்டிருந்தது.

”நியுயோர்க்கிலுள்ள எமது நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹணவிடமிருந்து கிடைத்திருக்கும் தகவல்களின் பிரகாரம் அய்யன்னா செயலாளர் நாயகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கவில்லை என்றே தெரிகிறது” என்று கூறினார். இது பற்றி அவர் மேலும் விளக்கமளிக்கையில்-

”நான் அண்மையில் அய்யன்னா அதிகாரிகளைச் சந்தித்த போது இவ்விடயம் பற்றிப் பேசினேன். அய்யன்னா செயலாளர் நாயகத்துடனான சந்திப்பின் போது இது பற்றிக் கதைக்கவில்லை. எனினும் அவருக்கு அடுத்தடுத்த நிலை அதிகாரிகளான அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அய்யன்னா உதவி செயலாளர் நாயகம் லீன் பெஸ்கோ மற்றும் அய்யன்னா செயலாளர் நாயகத்தின் அலுவலக தலைமை அதிகாரி விஜே நம்பியார் உள்ளிட்டோரைச் சந்தித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விவகாரம் பற்றிப் பேசினேன்.

அய்யன்னா அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து பேசுவதென்றால் அவர்கள் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் சந்தித்துப் பேசத் தயாராக இருக்க வேண்டுமென்று சுட்டிக் காட்டினேன். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் இல்லை என்பதையும் வடக்கு, கிழக்கிலிருந்து தெரிவான ஏனைய கட்சிகளும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதையும் எடுத்துக் கூறினேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அத்துடன் ஏனைய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மாறுபட்ட கொள்கைகளை கொண்டவை என்பதையும் அய்யன்னா அதிகாரிகளிடம் எடுத்துரைத்தேன்.
அய்யன்னா அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பார்கள் என்றால் ஏனைய தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் சந்திக்க வேண்டி வரும். முரளிதரன் போன்றோரும் இருக்கின்றனர். அதுமட்டுமல்ல ஜாதிக ஹெல உறுமயவும் சில நேரங்களில் தங்களது கருத்துகளை முன்வைக்கச் சந்திப்புக் கோருவர்” என்று கூறினார்.  (தினக்குரல் - நொவெம்பர் 02, 2011)

கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஒக்தோபர் 30, 2011) மாலை அய்யப்பன் கோயில் மண்டபத்தில் நடந்த பொதுக் கூட்டத்திலும் அதனை அடுத்து அதே நாள் இரவு நடந்த விருந்தோம்பலிலும்  பேசிய ததேகூ தலைவர் திரு.சம்பந்தன், பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சமகால அரசியல் பற்றியும் நாட்டிலே மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார நெருக்கடி பற்றியும் அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு பற்றியும்  அரசோடான பேச்சுவார்த்தை பற்றியும் விரிவாகப் பேசினார்கள். மக்கள் மனதிலே இருந்த பல கேள்விகளுக்கு  அவர்களது பேச்சு விடையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக  பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா இரவு விருந்தில் பேசிய பேச்சு சுருக்கமாகவும் கருத்தாளம் மிக்கதாகவும்  இருந்தது.  அதன் முக்கிய பகுதிகள் கீழே தரப்படுகின்றன.

(1) இன்று இலங்கை மண்ணில்  சொந்தக்காரர்களாக இருக்கின்ற தமிழர்கள்,  தமிழர்கள் என்ற அடையாளத்தை இழந்துவிடக் கூடிய நிலை இருக்கிறது.     அதனைத் தனது நிகழச்சி நிரலாக ஆக்கிக் கொண்டு   -  இராணுவத்தினுடைய  கட்டளையின் அடிப்படையில் -  அரசாங்கம்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்களுடைய அடையாளம் அழிக்கப்படுகின்றது.  தமிழர்களுடைய நிலத்தினுடைய  அடையாளம் அழிக்கப்படுகிறது.

(2) கனடா நாடு பல இனங்களைக் கொண்ட ஒரு நாடு.  மிகச் சிறந்த ஒரு இணைப்பாட்சி அரசியல் அமைப்பை கொண்டவர்களாக கனடியர்கள் இருக்கிறார்கள்.

(2) ஒரு காலத்திலே  அழிக்கப்படுகிற  இனமாக இருந்த யூதர்களுடைய  தலைவராக இருந்த பென் குரியன்  ஒரு அழைப்பு விடுத்தார்.  எங்கெங்கு யூதர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் எல்லாம் தங்களுடையது உழைப்பையும் தங்களது உப்பையும்  ஒன்றுதிரட்டி ஒரு நாட்டை  ஆள்பவர்களாக இருப்பதற்குப் போராட வேண்டும் என்று சொன்னது போல இன்றைக்கு எமது மக்கள் நாட்டிலே நடக்கின்ற விடுதலைப் போராட்டத்தோடு ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.   விடுதலையோடு,  சுதந்திரத்தோடு தங்களைத் தாங்களே ஆளுகின்ற ஒரு நாள் நிச்சயம் மலரும் எனகிற நம்பிக்கையோடு   எமது மக்கள் இருக்கிறார்கள்.

(3) எமது மக்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.   அவர்களுக்கு  நீங்கள் பரிபூரணமாக ஒத்தழைப்பை வழங்க வேண்டும்.  ஆதரவற்று அநாதரவாக இருக்கின்ற பெண்கள் குழந்தைகளுக்கு இஸ்ரேலிய நாட்டின் தந்தை என்று அழைக்கப்பட்ட பென்குரியன் அவர்கள்  பொருளாதார நிதியங்களை திரட்டி  தங்களுடைய தேசத்துக்குச் செல்பர்களுக்கு வாழ்விடத்தை அமைப்பதற்கும்  அவர்களுடைய அரசியல்  அதிகாரத்தை உருவாக்குவதற்கும்  அந்தந்த நாடுகளில் எப்படி உழைத்தார்களோ அது போல  (புலம்பெயர்)  தமிழர்களும்  உழைப்பாற்றல்  கொண்டவர்கள்.    அறிவு  படைத்தவர்கள். எதிர்காலத்தில் தங்களது ஆற்றைலையும் அறிவையும் இலங்கையில் வாழுகின்ற தமிழர்களுக்கும் தமிழர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும்    பயன் படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.  அதனை அவர்கள் நிச்சயமாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

(4) இன்றைக்கு இலங்கையில் தமிழர்களுடைய நிலத்திலே தமிழர்கள் வாழமுடியாமல் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள். பல இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள்.  இலட்சக்கணக்கான மக்கள்  கூடாரங்களுக்குள்ளும்  கொட்டகைக்குள்ளும்  நண்பர்களது வீடுகளுக்குள்ளும் வாழ்கிறார்கள். அவர்களை  அவர்களது மண்ணில் மீளக் குடியேற அனுமதிக்காமல்  தென்னிலங்கையில் இருந்து சிங்களைவர்களை  அழைத்து  வந்து மீன்பிடிப்பதற்கும் வளங்களைப் பயன்படுத்துவதற்கும்  அதே நேரத்தில் விவசாய நிலங்களில் விவசாயத்தைச்  செய்வதற்கும்  இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைள் மிகவும் கொடூரமான செயலாக அங்கே நிலைநாட்டப்பட்டு  வருகின்றது.

(5) எங்கள் இனப்  பரிமாணத்தை இனச் செறிவை - தமிழர்கள்  எங்கெங்கு பலமாக இருக்கிறமோ அந்தச்   செறிவைக் குலைத்து  தமிழர்களுடைய பலத்தைக் குறைத்து நாடு முழுதும் சிங்கள பவுத்த  அரசாக -  நாடாக மாற்றுவதைத்தான் அவர்கள் தங்களது நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருக்கிறார்கள்.  ஆகவே  எங்களுடைய மக்கள் தங்களது நில உரிமையை எங்கள் மண்ணில் நிலைநாட்ட வேண்டியர்வகளாக அங்கே இருக்கிறார்கள்.   அரசாங்கம்  இப்பொழுது தமிழ்மக்கள் தங்கள்  நிலங்களைப் பதிய வேண்டும் என்று புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளார்கள். அப்படி நீங்கள் பதியாது விட்டால் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலின் படி  அந்த நிலங்களை எடுத்து விடுவார்கள்.

(6) அதே நேரத்தில் இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறதென்றால்  அவர்கள்  விரும்பிய நிலத்தை அவர்கள் அரசாங்க அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டு எந்தச் சட்டதிட்டங்களையுயும் பின்பற்றாமல் அவர்கள் அந்த நிலங்களை எடுத்து அந்த நிலங்களிலே  இராணுவ முகாம்களை  மட்டுமல்ல  சீன அரசின்  உதவியுடன் குடியிருப்புக்களை கட்டிக் கொண்டு  தென் இலங்கையில் இருந்து  சிங்களவர்களைக் கொண்டு வந்து   குடியேற்றுகிறது.  இது  மிகவும் ஒரு அபாயகரமான ஒரு  சூழ்நிலை. 

(7) எங்களது நிலத்தை நாம் ஆளுவதற்கும் வாழ்வதற்கும் எமக்கு  சுயநிர்ணய உரிமை இருக்கிறது. அந்த உரிமையை  நிலைநாட்ட  வேண்டும் என்றால் எமக்குத் தொடர்ச்சியான  நிலப்பரப்பு இருக்க வேண்டும். இது நமது  தந்தை செல்வநாயகம்  சொல்லித்தந்த தத்துவம்.  தொடர்ச்சியான நிலப்பரப்பு  இருக்க வேண்டும் என்ற  அந்த சுயநிர்ணய கோட்பாட்டுக்குரிய தத்துவம் -  எங்களுக்கு   பாரம்பரியமான மொழி, வரலாறு,  கலை, கலாசாரம் இருக்கிறது என்ற அந்தத் தத்துவம் எல்லாம்  -   இன்றைக்கு நாசமாக்கப்பட்டு அடியோடு அகற்றப்பட்டு வருகிறது. இன்று தமிழ்மக்கள்   நிலத் தொடர்ச்சி அற்றவர்களாக மாற்றப்பட்டு எல்லாம் அழிக்கப்பட்டு எங்களது பாரம்பரிய நிலத்தை இல்லாமல் செய்து -  நிலம் இருந்தது என்பதை அடியோடு அழித்துவிட்டு - இன அடையாளத்தை அழித்து விட்டால்  அந்த சுயநிர்ணய தத்துவமே எங்களுக்கு இல்லை என்ற நிலைமை  உருவாக்குவதற்கு  இன்று அரசாங்கம்  திட்மிட்டுச் செயல்பட்டு வருகின்றது.

(8) நாங்கள் வெறுமையாக  சில   சொல்லாட்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு  எங்களுக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதனால்    எந்த விதமான பயனும் ஏற்படப் போவலில்லை.  எந்தத் தத்துவத்தினால் எந்த சுயநிர்ணயக் கோட்பாட்டினால் எங்களுடைய  நிலத்தில் நாம் ஆளுகின்ற உரிமை இருக்கிறது என்று நாம் வந்தோ  அந்த அடிப்படையையே  அத்திவாரங்களையே அகற்றி  விடுவதற்கு இன்றைக்கு இருக்கிற அரசாங்கம்  தொடர்ச்சியான  வேலைகளைச் செய்து கொண்டு வருவதை நாம் ஒரு பொழுதும் அனுமதிக்க முடியாது.  நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டுச் செயல்படுவதுதான் அதை மாற்றி அமைப்பதற்கு  எமக்கு இருக்கிற  ஒரேயொரு வழியாக அமையும் என நான்  நம்புகிறேன்.

(9) நாங்கள் எங்களுடைய தேசத்தினுடைய  விடிவிற்காக எங்கெங்கு எங்களுடைய  புலம்பெயர்ந்த மக்கள் வாழ்கிறார்களோ எங்கெங்கு அமைப்புக்களாகக் கொண்டிருக்கிறார்களோ அவர்களோடு எல்லாம் நாம் பேசுகிறோம் பேச  விரும்புகிறோம்.

(10) கனடாவிலும் ஏனைய நாடுகளிலும்  வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் எண்ணிக்கை எங்களுடைய எதிர்கால விடுதலைக்கு ஒரு பலம் வாய்ந்த சக்தியாக எமது மக்களுக்கு இருப்பதை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம்.

(11) நாங்கள் இந்த அரசாங்கத்துடன் நம்பிக்கை வைத்துக் கொண்டு பேசவில்லை. ஆனால்  சர்வதேசத்தினுடைய பலத்தை ஆதரவை  எங்கள் பக்கம் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம். அந்த ஆதரவு எங்களுக்குத் தேவையாக இருக்கிறது.   கனிந்து வருகின்ற அந்த இராசதந்திர போரில் எங்கள் மக்களுக்கு இருக்கின்ற அனுதாபத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய ஆலோசனையின் அடிப்படையிலும் கூட நாங்கள் இந்த அரசாங்கத்துடன் பேச வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம்.  அப்படி அவர்களுடைய கருத்தின் அடிப்படையில் மட்டுமல்ல எங்களது கொள்கை கோட்பாட்டின் அடிப்படையிலும் நாங்கள் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு  நாங்கள் திடசங்கற்பம் பூண்டவர்களாக எமது மக்கள் தந்த ஆணைக்கு இணங்க அரசுடன் பேசி வருகிறோம். 

(12) தமிழ்மக்கள் கொடுத்துள்ள  அந்த ஆணைக்குத்  தூய்மையாக நேர்மையாக வேலை செய்வதற்கு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.  அதைத் தமிழ்மக்கள் அளித்துள்ள அந்தத்  தீர்ப்பை தமிழ் மக்கள் எங்களுக்குக் கொடுத்துள்ள அந்த ஆணையை சனநாயத்தின் பேரால்   ஆட்சி செய்கின்றவர்கள்  - நாங்கள்   ஒப்புக் கொள்ளாவிட்டாலும் - சனநாயகத்தின் பேரால் ஆட்சி செய்கின்ற அரசு தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கொடுத்த அந்த ஆணையை ஏற்று நடைமுறையில் இருக்கிற இந்த அரசு ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்.

(13) முன் வைக்கத் தவறுமேயானால்  நாங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போலவும் எங்களுடைய கட்சி எண்ணம் கொண்டிருப்பது போலவும் எங்களுக்கு வேறு வழியில்லாமல் போனால் நாங்கள் ஒரு  அறவழியில் அகிம்சை வழியில் சனநாயக வழியில் தெளிவாக எங்கள்  மக்களை அணிதிரட்டி நாங்கள் அங்கே ஒரு இயக்கத்தைத் தொடங்கும் போது வெளிநாடுகளில் இருக்கின்ற எமது  இலட்சக்கணக்கான மக்களும் அந்தந்த நாடுகளின் அரசுகள் எங்களுக்கு ஆதரவு வழங்கக் கூடியதாக தங்கள் இயக்கத்தை நடத்த வேண்டும்.    அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நீங்கள் உங்களது உறவுகளை கைவிட மாட்டீர்கள்  என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. ஆகவே இதுதான் எங்களுடைய  இலக்கு என்பதையும் அந்த இலக்கை அடைய நாமெல்லாம் ஒன்று பட்டு உழைப்போம் எனச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பன்னிரண்டு தடவை பேசியாகி விட்டது பலன் ஒன்றும் இல்லை, அரசு காலம் கடத்துகிறது, ஒரு புறம் பேச்சுவார்த்தை என்று மாய்மாலம் செய்து கொண்டு மறுபுறம் எங்களது மண்ணை கொள்ளை அடிக்கிறது ஏன் என்ற கேள்விகளுக்கு பதில் அனைத்துலக சமூகம் ததேகூ பை  சிறீலங்கா அரசோடு பேசச் சொல்கிறது.  எனவே ததேகூ அரசோடு பேசித்தான் ஆக வேண்டும்.

எமக்கு இன்று இருக்கும் பலம் நான்கு தளங்களில் உள்ளன. ஒன்று தாய்நிலத்தில் உள்ள எமது மக்கள். இரண்டு புலத்தில் உள்ள எமது மக்கள்.  மூன்று தமிழ்நாட்டில் உள்ள எமது ஏழு கோடி உறவுகள். நான்கு மேற்குலக நாடுகளின் ஆதரவு.  இவையே எமது மக்களது விடிவுக்கான வழி! (உலகத்தமிழர் - நொவெம்பர் 04,2011)


அதிமுக பக்கம் வீசிய தேர்தல் அலை ஓயவில்லை

நக்கீரன்

மிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. மேலும் 89 நகராட்சிகள், 287 பேரூராட்சிகளும் அக்கட்சியின் வசமாயின.

23 நகராட்சிகள், 121 பேரூராட்சிகளில் திமுக வெற்றி பெற்றது. மற்ற கட்சிகளுக்கு மிகக்குறைந்த இடங்களே கிடைத்தன.

தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடவில்லை. விஜயகாந்தின் தேமுதிக,  இரண்டு பொதுவுடமைக் கட்சிகள், மக்கள் மனிதநேயக் கட்சி,  புதிய தமிழகம் போன்ற கட்சிகளோடு கூட்டணி வைத்துத்தான் அதிமுக போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது அதிமுக தனிப் பெரும்பான்மையோடு வெற்றிபெற்றது.  அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிட்டு 147 தொகுதிகளில் வென்றது. திமுக 119 தொகுதிகளில் போட்டியிட்டு 23 தொகுதிகளில் மட்டும்  வெற்றிபெற்றது. முதல்முறையாக  சட்டசபையில் எதிர்க்கட்சி என்ற தகைமையையும் இழந்தது.

                                                                                                    சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2011 - 2006

 

  2011 2006
கட்சி தொகுதிகள் வெற்றி வாக்குகள் விழுக்காடு தொகுதிகள் வெற்றி வாக்குகள் விழுக்காடு
அதிமுக 160 147 1,43,81,820   39.08 135 68 1,07,68,559    32.64
திமுக 119 23    82,34,300 22.38 131 96 87,28,716    26.46
காங்கிரஸ் 63 5 34,26,247 9.30 48 35 27,65,768 8.38
தேமுதிக 41 27 29,02,813 7.88 232 1 27,64,233 8.38
பாமக 30 3 19,27,260 5.23 31 18 18,63,749 5.65
மார்க்சிஸ்டு 12 10 8,88,364 2.41 13 9 8,72,674 2.65
பா.ஜனதா 212 0 8,23,489 2.24   0 6,66,823 2.20
இ.கம்யூனிஸ்ட் 10 9 7,27,394 1.97 10 6 5,31,740 1.61
ஏனையவை அதிமுக 10 7     18 9    
ஏனையவை திமுக 22 0     14 1    
அதிமுக கூட்டணி 234 203     234 70    
திமுக கூட்டணி 234 31     234 163    

ஜெயலலிதா  தனித்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்து  உள்ளாட்சி சபைகளுக்கான அதிமுக வேட்பாளர்களை அறிவித்தபோது பலரது புருவங்களும் உயர்ந்தன. தனித்து அதிமுக தேர்தல் ஆற்றை நீந்திக் கரைசேருமா?  என்ற கேள்விக்குச் சேருவது வில்லங்கம்  என்றே பலரும் நம்பினர். தேர்தல் முடிவுகள் அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கிவிட்டது.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தான் தனது கூட்டணிக் கட்சிகளை கரை சேர்த்தது என்ற உண்மை  தெளிவாகியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டங்களையும் சேர்த்து பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 78.5  விழுக்காடாகும்.  முதல் கட்டத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 85 விழுக்காடும் வாக்குகள் பதிவாகின. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை சென்னை குறைவான அளவாக 51.63 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாயின. வேலூர் மாநகராட்சியில் தான் அதிகபட்சமாக 71  விழுக்காடு வாக்குகள் பதிவாயின.

பொதுவாக சென்னையைத் தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் 70-80 விழுக்காடு வரையான மக்கள் ஓட்டளித்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் நலப்பணிகள் நடக்க வேண்டும், குடிநீர், நல்வாழ்வு சுகாதாரம் போன்ற அடிப்படை சிக்கல்கள்  தீர்க்கப்பட வேண்டும் என்ற ஆசையின் காரணமாகத்தான் அதிகளவு வாக்கு  பதிவாகியுள்ளது. கடந்த ஆட்சியின் போது உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல், கையூட்டு,  கட்டைப் பஞ்சாயத்து போன்றவை தலைவிரித்தாடின.

தமிழ்நாடு  உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - 2011

 

கட்சி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மாவட்ட ஊராட்சி வட்டார உறுப்பினர் கிராம ஊராட்சிகள் உறுப்பினர் மொத்தம் வாக்கு விழுக்காடு
மேயர் உறுப்பினர் தலைவர் உறுப்பினர் தலைவர் வட்டார உறுப்பினர்
அதிமுக 10 584 89 1681 285 2852 602 3864 9967 39.03
திமுக 0 130 23 964 121 1820 30 1008 4096 26.10
சுயேட்சை 0 55 5 552 64 1995 0 670 3339 9.46
தேமுதிக 0 8 2 120 3 392 5 338 868 10.10
காங்கிரஸ் 0 17 0 166 24 381 5 156 749 5.71
பாமக 0 2 0 60 2 108 3 227 402 3.55
பாஜக 0 4 2 37 13 181 2 30 269 1.35
மதிமுக 0 11 1 49 7 82 2 45 197 1.70
சிபிஅய்(மா)) 0 3 2 20 5 101 2 26 159 1.02
சிபிஅய் 0 4 0 10 2 33 4 46 99 0.71
ஏனையோர் 0 0 0 14 0 29 0 3 45  
வி.சிறுத்தைகள் 0 1 0 13 0 12 0 10 36 0.51
புதிய தமிழகம் 0 0 0 0 0 7 0 9 16  
ஏனைய கட்சிகள் 0 0 0 3 0 15 0 6 27  
Total 10 819 124 3689 526 8008 655 6438 20269  
 

Source - Tamil Nadu State Election Commission (Updated as 22.38 pm on October 25, 2011)

சென்னை உட்பட  தனித்துப் போட்டியிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக தோல்வி அடைந்துள்ளது. திமுக 23 நகராட்சிகளிலும் 121 பேரூராட்சிகளிலும் மட்டுமே வென்றிருக்கிறது.

சென்னையில் கடந்த 5 ஆண்டு காலம் மேயராக இருந்தவர்  திமுகவைச் சேர்ந்த மா. சுப்பிரமணியன் 5,19,747 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் சைதை துரைசாமியிடம் தோல்வியைத்  தழுவியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு 39.02 விழுக்காடு வாக்குகளும் திமுகவுக்கு 26.09 விழுக்காடு வாக்குகளும் கிடைத்துள்ளன.

சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் 200 வட்டாரங்களுக்காக நடந்த தேர்தலில், அதிமுக, சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் 168 வார்டுகளை கைப்பற்றியது. திமுக,  மதிமுக, தேமுதிக,  மற்றும் சுயேச்சைகள் சேர்ந்து சென்னை மாநகராட்சியின் 32  வட்டாரங்களில் வெற்றி பெற்றன.

சட்டசபைத் தேர்தலில்  மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக இம்முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இருந்தும் திமுக தலைமை தோல்விக்கான காரண காரியங்களை அலசிப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் பெரும் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது. பல்லடம் மற்றும் கூடலூர் நகராட்சிகளை அது கைப்பற்றியிருந்தாலும் மற்ற உள்ளாட்சிகளில் மிகக்குறைவான இடங்களிலேயே அது வெற்றி பெற்றுள்ளது. தேமுதிகவின் வாக்கு வங்கி ஏறக்குறைய அப்படியே உள்ளது. அக்கட்சிக்கு இந்தத் தேர்தலில் 10.11 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதிமுக வை விமர்ச்சிக்க  விஜயகாந்த் ஆறு மாதம் அவகாசம் கேட்டதை  மக்கள் இரசிக்கவில்லை. சட்டசபைக்கு அவர் ஒழுங்காகப் போவதில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிலை உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாகிவிட்டது.  அக்கட்சிக்கு 5.71 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. பேரூராட்சித் தலைவர் பதவியை 24 இடங்களில் மட்டும் காங்கிரஸ் வென்றிருக்கிறது.  தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சியைக் கொண்டுவரப் போவதாக பறைசாற்றறிய காங்கிரஸ் கனவு கலைந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டு 5 இடங்களில் வென்ற காங்கிரஸ், தனித்துப் போட்டியிட்டு ஒரு நகராட்சியைக் கூட வெல்லமுடியவில்லை. இதனால் இதுவரை வாக்குப் பலத்தில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக நினைக்கப்பட்ட காங்கிரஸ் இப்போது அய்ந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த முடிவுகள் அதற்கு அபாயச் சங்கு ஊதியதுபோல் காணப்படுகிறது. 

திமுக ஆட்சிக் காலத்தில் திமுக அமைச்சர்கள் நிலப்பறிப்புப் போன்ற ஊழல்கள் செய்தார்கள் என்பதை வாக்காளர்கள் நம்பிவிட்டதாகத் தெரிகிறது.  இரண்டாவதாக  திமுக    கருணாநிதி  குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது என்ற  குற்றச்சாட்டையும் மக்கள் நம்புகிறார்கள்.  இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லாமல் இல்லை. அப்பா தலைவர், மகன் பொருளாளர்.  மகள்  மாநிலங்கள் அவை உறுப்பினர்.  இன்னொரு மகன் அழகிரி மத்திய அமைச்சர்.  அவரே தென்மண்டலத்தின் குறுநில மன்னராகவும் திகழ்கிறார்.  அதனால்  திமுக இரண்டாம் நிலைத் தலைவர்கள் ஸ்டாலின் - அழகிரி அணிகளாகப் பிரிந்து செயல்படுகிறார்கள்.  திமுக வின் தோல்விக்கு இந்த அண்ணன் தம்பி சண்டையும் ஒரு காரணமாகும்.

2006 முதல், 2011 மே மாதம் வரை ஏறும் மேடைகளில் எல்லாம், "அதிமுக அடுத்த தேர்தலோடு காணமல் போய்விடும்"  என முழங்கி வந்த அழகிரியின் தலையையே வெளியே காணோம்.  அழகிரியின் தளமான மதுரையிலும் மற்ற தென் மாவட்டங்களிலுள்ள மாநகராட்சிகள், பேரூராட்சிகள் அனைத்திலும் அதிமுக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்குத்தான் சொல்கிறது அரசியலில் துணிவு மட்டுமல்ல பணிவும் வேண்டும் என்று.

திமுகவின்  இளைஞர் அணிக்கு தாத்தாகப் போய்விட்ட ஸ்டாலினை தலைவராக நியமித்துள்ளதை யாராலும் நியாயப்படுத்த முடியாது. 62 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட திமுக வில் இந்தப் பதவிக்கு வேறு  தகுதியான ஒருவர் இல்லையா?

2009 ஆண்டு இறுதிப் போரில் திமுக அரசு ஈழத்தமிழர் கதறி அழுத போது அவர்கள் கொல்லப்பட்ட போது கருணாநிதி மனிதசங்கிலிப் போராட்டம், விலகல் கடிதங்கள், நான்கு மணி உண்ணா  நோன்பு என்று நாடகமாடினார். அதன் பலனை இப்போது அறுவடை செய்கிறார்.

ஈழத் தமிழர்களுக்காக இரண்டுமுறை ஆட்சியை இழந்துள்ளேன் என்று சொல்லி ஆட்சியைத் துறக்க  மறுத்த கலைஞர் கருணாநிதி ஓர் ஆண்டு கழித்து ஆட்சியை இழந்தார். ஈழத்தமிழர்களுக்காக இரண்டுமுறை தான் ஆட்சியை இழக்க முடியும் என்று ஏதாவது விதி இருக்கிறதா? அன்று ஆட்சியை ஈழத்தழர்களுக்காக இழந்திருந்தால் அவர் மீண்டும் முதல்வராக வந்திருக்கலாம்.  மருத்துவர் இராமதாஸ்,  வைகோ, செந்தமிழன் சீமான் போன்றவர்கள் அவருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்திருப்பார்கள்.

பாரதீய ஜனதா மேட்டுப்பாளையம், மற்றும் நாகர்கோவில் நகராட்சித் தலைவர் பதவிகளை வென்றிருக்கிறது, பேரூராட்சிகள் 13 லும் அந்தக் கட்சி வென்றிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி விட்டு கூட்டணி தாவி வந்த இந்தக் கட்சியை இந்த முறை திமுகவும் அதிமுகவும் கழற்றிவிட்டு தனியே நிற்க வைத்தன. இதையடுத்து இரு திராவிடக் கட்சிகளையும் ஒழிப்பேன் என்று புதிய முழக்கத்தோடு தேர்தல் களத்தில் குதித்தார்.  பாமக வன்னியர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கூட  தோல்வியை சந்தித்திருக்கிறது.  இருந்தும்  60 நகராட்சி மன்ற உறுப்பினர்கள், 2 பேரூராட்சி தலைவர்கள், 108 பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு இடங்களைப் பிடித்துள்ளது.  பாமக இன் தோல்விக்கு மருத்துவர் இராமதாஸ் அடிக்கடி அணி மாறுவது, தனது மகனுக்கு மாநிலங்கள் அவை நா.உறுப்பினர் பதவி கேட்டு திமுக விடம் ஒருமுறைக்கு மூன்றுமுறை தூது போனது  போன்றவற்றை வாக்காளர்கள் இரசிக்கவில்லை.

இந்த தேர்தலில் பெரிய கட்சிகளாக கூறிக் கொண்ட தேமுதிக,  பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், மதிமுக  தனித்துக் களம் இறங்கி 868 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியிருப்பது   மதிமுக வுக்கு அடிமட்டத்தில் இன்னும் செல்வாக்கு உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. அக்கட்சியினருக்கு  ஒளிமயமான எதிர்காலத்தை காட்டாவிட்டாலும் சற்றே  நம்பிக்கை அளிப்பதாயிருக்கிறது. டந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய மதிமுக  இந்த உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்கத் தவறின்  அக்கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கும்.

தமிழ்த் தேசியத்தை தீவிரமாக ஆதரிக்கும் தேமுதிக, மதிமுக, பாமக, சிறுத்தைகள், புதிய தமிழகம், இரண்டு பொதுவுடமைக் கட்சிகள்  ஆகியன ஒரு குறைந்து பட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒன்றுபட்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும். காரணம் இந்தக் கட்சிகளுக்கு 18.56  விழுக்காடு வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
 


களங்களும்  பாதைகளும்  வெவ்வேறாக இருந்தாலும் இலக்கு ஒன்றாக இருக்கட்டும்!

நக்கீரன்

சிறீலங்கா அரசுக்கு எதிரான அழுத்தங்கள்  அனைத்துலக மட்டத்தில் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் அழைப்பில் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் அமெரிக்க பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே எல்லோராலும் கருதப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க அரசின் அழைப்பில் வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் தரப்பு அரசமுறையில் அமெரிக்க இராசாங்க திணைக்களத்துடன்   பேசுவது இதுவே முதல் தடவையாகும்.

கடந்த  செப்தெம்பர் 12 ஆம் நாள் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராசாங்க செயலாளர் றொபேட் பிளேக் (United States Assistant Secretary of State for South and Central Asia, Robert Blake) சிறிலங்கா சென்றிருந்தார். அப்போது கொழும்பில் அவர் சந்தித்த முதல் அரசியல்வாதி ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் ஆவார்.  ஒரு மணித்தியாலம் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் றொபேட் பிளேக் இரா. சம்பந்தனை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றே ததேகூ தலைவர் இரா.சம்பந்தன், நா.உ.  பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, நா.உ.  எம்.ஏ. சுமந்திரன், நா.உ. திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளார்கள்.

செவ்வாய் நள்ளிரவு அமெரிக்காவை வந்தடைந்த ததேகூ தலைவர்கள் முதல் கட்டமாக அமெரிக்க இராசாங்க அதிகாரிகளுடன் நேற்று (புதன்கிழமை) காலை முதல் முழு நாளும் பேசினார்கள். இன்றைய சந்திப்பில் துணை இராசாங்க செயலாளர் றொபேட் பிளேக் உம் கலந்து கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ததேகூ நா. உறுப்பினர்கள் நியூ யோர்க்கில் உள்ள  தமிழ் அமைப்புக்களின் ஆண்டு விழாக்களிலும் பங்கு பற்ற இருக்கிறார்கள். இதனை முடித்துக் கொண்டு வானூர்தி மூலம்  திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் நீங்கலாக  ஏனையவர்கள் கனடாவுக்கு ஒக்தோபர் 29  நள்ளிரவு வருகிறார்கள்.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை காலை ததேகூ நா. உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சந்திக்கிறார்கள். அன்று மாலை 2.30 மணிக்கு  அய்யப்பன் கோயிலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்கள். அதனைத் தொடர்ந்து  ததேகூ தலைவர்களை தமிழினத்துக்கே உரித்தான விருந்தோம்பல் அளித்து சிறப்பான முறையில் வரவேற்பதற்கு ததேகூ (கனடா) ஒழுங்கு செய்துள்ளது.  மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இரவு விருந்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு  சிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அடுத்தநாள் (திங்கட்கிழமை)  காலை ஒட்டாவாவில் கனடிய வெளியுறவு திணைக்கள அதிகாரிகளையும் மாலை கனடிய நா.உறுப்பினர்களையும் சந்திக்கக் கனடிய வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

நொவெம்பர் 01 ஆம் நாள் திரு. இரா சம்பந்தனும் திரு. எம்.ஏ. சுமந்திரனும் அய்யன்னா பொதுச் செயலாளரைச் சந்திக்க மீண்டும் அமெரிக்கா செல்கிறார்கள்.  திரு. மாவை சேனாதிராசா மட்டும் நொவெம்பர் 03 ஆம் நாள் வரை கனடாவில் தங்கி இருப்பார்.  

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், குறிப்பாக 2010 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர்,  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனடா வருவது இதுவே முதல் தடவை.  இந்த வரவுக்கு  கனடிய அரசு இசைவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இராசாங்க திணைக்கள அதிகாரிகளோடான  சந்திப்பில் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் குறுகிய  கால சிக்கல்கள் பற்றியும்  நீண்ட கால அரசியல் தீர்வு பற்றியும் ததேகூ தலைவர்கள் விபரமாக எடுத்துரைப்பார்கள்.

இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் கழித்து ததேகூ உடன் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை  தொடங்கியது.  இந்த ஆண்டு சனவரி மாதம் தொடக்கம்  பத்து சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, உயர்பாதுகாப்பு வலையங்கள் அகற்றப்படுதல், வடகிழக்கில் செயல்படும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைதல், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவை குறித்து பேசப்பட்டது. ஆனால் பத்துச் சுற்றுப் பேச்சுக்களுக்கு பிறகும் பேசப்பட்ட விடயங்களில் எந்தவிதமான பெரிய முன்னேற்றமும் காணப்படவில்லை. அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கொடுத்த ஆலோசனைகள் எதற்கும் அரசிடமிருந்து  எந்தவிதமான பதிலும் வரவில்லை. எனவே அரசியல் தீர்வுச் சிக்கல் பற்றி எந்தவிதமான விவாதமும் நடத்த முடியவில்லை.

 தனால் இருசாராருக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் ஓகஸ்ட் 8 ஆம்  நாளோடு ஒரு முட்டுக்கட்டை நிலையை எட்டியது.   இதனை அடுத்து ஓகஸ்ட் முதல் நாள்  பின்வரும் மூன்று விடயங்களையிட்டு 2 வாரங்களில் அரசு தெளிவான பதில் அளிக்க வேண்டும் என ததேகூ கேட்டுக் கொண்டது. பதில் கிடைத்த பின்னரே தொடர்ந்து ததேகூ பேச்சு வார்த்தை மேசைக்கு வரும் எனவும் சொல்லப்பட்டது.

        1 ஆட்சிமுறை பற்றிய கட்டுமானம் (1. The structure of governance)

        2. மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான விடயங்களையும் பணிகளையும் எப்படி பிரித்துக்கொள்வது. (2. The division of subjects and functions between the centre and the devolved units)

        3.  வரி மற்றும் நிதி பற்றிய அதிகாரங்கள் (3. Fiscal and financial powers, within a period of two weeks, to carry forward any future dialogue.)

 ஓகஸ்ட் 4 அன்று (வியாழன்)  இரவு ததேகூ வெளியிட்ட அறிக்கை ஒன்றில்  சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தைகளை வெளியுலகுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக காட்ட முனையும் அதே வேளையில், உண்மையில் இவை, ஒரு வெளித்தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாகவே இதைத் தாம்  பார்ப்பதாக கூட்டமைப்பு கூறியது.  

இந்தப் பின்னணியிலேயே றொபேட் பிளேக்கின் தலையீடு காரணமாக சிறீலங்கா அரசும் ததேகூ உம்   மீண்டும் பேசத் தொடங்கின.   பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற செய்தியை றொபேட் பிளேக்கே கொழும்பில் வைத்து அறிவித்தார். 

செப்டம்பர் 10 ஆம் நாள் 11 ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் இனச்சிக்கலில் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. இந்நிலையில் 12 ஆவது கட்ட பேச்சுவார்த்தை ஒக்தோபர் 03 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அரசு தரப்பு ஒக்தோபர் 8 ஆம் நாள் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் காட்டி ஒக்தோபர் 3 ஆம் நாளுக்கு பேச்சுவார்த்தையை தள்ளிப் போட்டது. மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறியதால் ததேகூ பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.

        1) வெலி ஓயா முல்லைத்தீவு மாவட்டத்தோடு இணைக்கப் படக்கூடாது.

        2) மன்னார் தமிழ் அரச அதிபரை  மாற்றிவிட்டு  அவருக்குப் பதில் ஒரு சிங்கள அரச அதிபர் நியமிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

       3) வடக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் காணிப் பதிவு நிறுத்தப்பட வேண்டும்.

முன்னைய பட்டறிவின் அடிப்படையில் இம்முறையும் சிறீலங்கா அரசு இவற்றையிட்டு சாதகமான பதிலை இறுக்கப் போவதில்லை.

அமெரிக்க இராசாங்க திணைக்களத்தோடான பேச்சுவார்த்தையின் போது இடம்பெயர்ந்த 280,000 ஆயிரம் மக்களது மீள்குடியேற்றம், மறு வாழ்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்,  உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றல்,  வட - கிழக்கில் இராணுவ பிரசன்னம்,  பவுத்தமதப் பண்பாட்டுப் படையெடுப்பு போன்ற விடயங்கள் பேசப்படுகிறது.  இராசாங்க செயலாளர் கிலாரி கிளின்டன் அவர்களோடான சந்திப்பு இடம்பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால் நொவெம்பர் 01 ஆம் நாள் அய்யன்னா அவையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களோடான சந்திப்பு இடம்பெறும்.

வட - கிழக்கில் நிதி, காணி, காவல்துறை  போன்ற  குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட  கட்டமைப்பு  உருவாக்கப்பட வேண்டும். அல்லா  விட்டால் எமது இனம்  தனது அடையாளங்களையும் தனித்தன்மையையும்  இழக்கும் அபாயம் அதிகரிக்கும்.   சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னருமான திட்டமிட்ட சிங்களக்  குடியேற்றம் காரணமாக கிழக்கு மாகாணம் பறிபோய்விட்டது. அங்கு 40 ஆண்டுகளில் தமிழர்கள் சிறுபான்மை ஆகிவிட்டார்கள்.  இப்போது அரசின் பார்வை வடக்கில் படிந்துள்ளது.  வடக்கில் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றம்,  பண்பாட்டுச் சிதைவுகள்,  இராணுவ மயப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் மொத்தமாகவே  தமிழ் மக்களின் அடையாளங்களை வாழ்வியலை பாரதூரமாக சிதைத்துவிடலாம். எனவே ததேகூ க்கு நிலம், நிதி, காவல்துறை நீதித்துறை அதிகாரங்களைப் போராடிப் பெற வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

போர் நடந்த காலத்தில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கப் போவதாகக் கூறி வந்த மகிந்த இராசபக்சே போர் முடிந்த பின்னர் இலங்கையில் இனச் சிக்கல் இல்லை,  பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாடு இல்லை, எல்லோரும் இந்த நாட்டின் பிள்ளைகள் என்கிறார். கோத்தபாய போரில் சிங்களவர் வென்றுவிட்டதால் இனி அதிகாரப் பரவலாக்கல் தேவையில்லை என்கிறார். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.  போரில் வென்றவர்கள்தான் வரலாற்றை எழுதுகிறார்கள்.   

அரசியல் என்பது அதிகாரப் போட்டிதான். அது ஒரு முடிவற்ற போட்டி.  நாம் செய்யக் கூடியதெல்லாம் எமது நலன்களும்  மேற்குலக நாடுகளது நலன்களும் ஒரு முனையில் இணைய வைக்க வேண்டும்.  இந்த பன்னாட்டு அரசியலை விளங்கிக் கொள்ளும் கெட்டித்தனம்  எமக்குத் தேவை.

புலம்பெயர் தமிழர்கள் ஒரு கற்பனை உலகில் இருந்து கொண்டு எதையும் பேசலாம். பேசுவதில் தவறில்லை.  ஆனால் தாயக அரசியல் பற்றிப் பேசும் போது அரசுகளின் பூகோள அரசியல் நலங்கள்,  வணிக நலன்கள் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு பேச வேண்டும். 

எமது  விடுதலைக்கு நாம் கொடுத்த கூடுதலான விலை,  ததேகூ க்குப் பின்னால் இருக்கும் எமது தாயக  மக்கள் பலம் இந்த இரண்டுமே   பன்னாட்டு சமூகத்தை  எம்மோடு பேச வைத்துள்ளது.    சிறீலங்காவையும் எம்மோடு பேச வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது. 

சுயநிர்ணய உரிமையை ததேகூ கைவிடக் கூடாது, போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்  என புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார்  வற்புறுத்துகிறார்கள். சுயநிர்ணய உரிமையை யாரும் கைவிட வில்லை. ஆனால் அதற்கான கள நிலையை நாம் உருவாக்க வேண்டும்.  இது தொடர்பாக  சுயநிர்ணயம் பற்றிப்   பேராசிரியர் நீல்சன்  ஜெனிவாவில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வில் கூறியதை நாம் எழுத்துக் கூட்டிப் படித்து விளங்கிக் கொள்ள வேண்டும்.  

"நானும் உங்களுடைய தனித்தமிழீழத்திற்கான முறையான கோரிக்கையை இங்கே பதிவு செய்கிறேன். மேலும் தமிழ்மக்களால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரிக்கிறேன். ஆனால், தற்சமயம் இலங்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். தற்சமயம் இருக்கக்கூடிய பெரிய ஆபத்து, தமிழர்களின் நிலப்பரப்பு  குறைக்கப்பட்டு சிறுபான்மையாக மாற்றப்படுவது தான்.

பன்னாட்டுச்  சட்டத்தில், சிறுபான்மையினருக்குத் தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. ஆனால் ஒன்றுபட்ட உரிமைகள் கிடையாது.

உங்கள் சொந்த நாட்டின் நிலப்பகுதியில் நீங்கள் மக்களாக இருக்கும் வரையில் உங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.  இணைந்து வாழ்வதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

சொந்த நாட்டில் போர்க்காலங்களில் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களுடைய சொந்த வாழ்விடங்களுக்கு திரும்புவதை தடுப்பதையும் அப்பகுதிகளில் சிங்கள விவசாயிகளை மக்களை கொண்டு காலனியாதிக்கத்தையும்  இராணுவத்தின் உயர்பாதுகாப்பு மண்டலங்களை ஏற்படுத்தியும் நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை சுற்றுலாவிற்காக எடுத்துக்கொள்வதையும் சிங்கள அரசு 2009 லிருந்து ஒரு கொள்கையாகவே கொண்டுள்ளது.

மக்கள் தொகையிலும் அரசியலிலும் நீங்கள் சிறுபான்மையினராக மாற்றப்பட்டு வருகிறீர்கள் என்பதைதான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. மேலும் மோசமாக, அனைத்து மக்களும் வாழ்கின்ற தொடர்ச்சியான ஒரு பிரதேசமாக காட்டுவதற்காக முயற்சிக்கிறது. இந்த தொடர்சியான நிலப்பரப்பாக மாற்றும் நடவடிக்கையை நீங்கள் தடுக்கவில்லை, முறியடிக்கவில்லை எனில் யூதர்களுக்கு ஏற்பட்டதை போன்றே உங்களுக்கும் எல்லாம் கிடைப்பது போன்று இருக்கும் ஆனால் உங்களுக்கான சுயநிர்ணய உரிமை இருக்காது. தமிழினம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்து இது என்பதை நீங்கள் உணர வேண்டும். 

தற்சமயம் தனிநாட்டிற்கான சுய நிர்ணய உரிமை என்பதை முன்னிறுத்த முடியாத சூழலில் நாம் இருக்கிறோம். இது நமது நீண்ட கால  இலக்கு. புலம்பெயர் தமிழர்களை விட, இலங்கைத் தீவில் வாழும் தமிழ்மக்கள், தங்களுடைய அரசியல்வாதிகள் செய்யக்கூடிய பிழைகளை தடுக்க வேண்டிய சரியான தருணம் இது.

நீங்கள் மேற்குல நாடுகளைப் பற்றி சிந்திப்பதைக் குறைத்துக்கொண்டு, இந்தியாவைப் பற்றியும் சற்று சிந்தியுங்கள். ஏனெனில் அவர்கள்தான் இன்றளவும் இலங்கையில் நடப்பதைத் தீர்மானிக்கும் ஆற்றலாக இருக்கிறார்கள்." சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்,   நிலம் இருந்தால்தான் சுயநிர்ணயம் பற்றிப் பேசலாம். இவைதான் பேராசிரியர் பேராசிரியர் நீலசன்  எமக்குப் படிப்பித்துக் கூறும் அரசியல் பாலபாடமாகும்.  

அய்யன்னா வல்லுநர் குழுவின்  போர்க்குற்ற அறிக்கை அய்யன்னா மனித உரிமை அவைக்கு பொதுச் செயலாளர் பான் கி மூன் அனுப்பி வைத்திருப்பதை ததேகூ வரவேற்றிருக்கிறது. அது பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய ததேகூ  தலைவர் இரா. சம்பந்தன் தாங்கள் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது பேசி வந்ததையே அய்யன்னா  வல்லுநர் அறிக்கை சொல்கிறது எனக் கூறியுள்ளார். போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று ததேகூ  நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசலாம். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசக் கூடடிய அரசியல் வெளி இப்போது அங்கில்லை. இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் கொடுங்கோலர்கள். போர்க் கதாநாயகன், அய்ந்து நட்சத்திர இராணுவ தளபதி, 42 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஆட்சித் தலைவர் வேட்பாளர் சரத் பொன்சேகா இப்போது வெலிக்கடைச் சிறையில் பாயில் படுத்துறங்குகிறார். சாப்பாடும் அலுமினியத் தட்டில்தான்.  பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு வெளியே கேட்டால் ததேகூ நா. உறுப்பியனர்களுக்கும் இந்த மரியாதைதான் கிடைக்கும்.

போர்க்குற்ற விசாரணை என்பது ஒரு தூர இலக்கு.  அதனைப் புலம்பெயர் தமிழர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். மகிந்த இராசபக்சேயை சிறைக்கு அனுப்பினால்  நல்லதுதான்.  அதனால் எமது மக்களுக்கு அரசியல் தீர்வு வரப்போவதில்லை.  மேலும் மகிந்தா போனால் மானல், கோத்தபாய, பசில் என்று நிறையப் பேர் அவரது இடத்தைப் பிடிக்க வரிசையாக நிற்கிறார்கள்.  

வட சுடான் ஆட்சித்தலைவர் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை ஒன்று இருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரைப் பிடிக்க முடியவில்லை. அவர் சுதந்திரமாக உலா வருகிறார்.

எனவே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.   அஞ்ச வேண்டிய இடத்தில் அஞ்சத்தான் வேண்டும்.  அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

களங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் இலக்கு ஒன்றாக இருக்கட்டும்! (Ulagathamilar - 29/10/2011)


 

September 13, 2011

Dr.E.M. Sudersana  Natchiappan, MP

601, Brahamaputra, Dr. B.D. Marg, New Delhi - 10001
Telephone : 23766540, Mobile: 9868181909

 

Email id emsn@sansad.nic.in


Dear Dr. Natchiappan,

Vanakkam. I thank you for taking the initiative to hold a conference  under the auspices of the Parliamentary Forum for Human Rights for Global Development (PFHRGD) of all Thamil parties from 22&23 August, 2011. Sadly,  except for the TNA (TULF, EPLRF, TELO and Federal Party (AITK) the others are just  outfits on paper not representing the Thamil people even at the village level. At least one party the ENDPLF is widely believed to be led by  Indian intelligence outfit the RAW.

I also  watched the long interview you gave to Kumudam TV.  In that interview you sought to emphasize the need for unity among Thamil parties/people.  

The unity is already there as evidenced by the results of the elections held for the local bodies as well as for the parliament in the North and East. Thamils overwhelmingly voted for the TNA. This is particularly true in regard to elections for local bodies. The ruling party was defeated despite the use or misuse of state resources coupled with thuggery and dole outs by the UPFA. 

I have no reservations with the  aims and objectives of the conference. They  are laudable and timely. It was  to provide  an opportunity for the Sri Lankan Tamil leaders to present their consensual views to the Indian Parliamentarians in helping them set out a framework of action required to be taken by the Indian government in its continued endeavour to find a lasting resolution to the Sri Lankan Tamil problem. 

But if one is to judge the conference by what transpired,  it is an unmitigated failure. It was no surprise  the splinter parties  couldn’t arrive at a consensus in almost all matters.  

More than two years since the end of the war, Sri Lanka is further from reconciliation than ever.  A feeling of triumphalism prevails  after its successful “war on terror”  and the government of President Mahinda Rajapakse has refused to acknowledge, let alone address, the Thamil minority’s legitimate grievances against the state. Photographic and video evidence have surfaced  that the Sri Lankan Army  widely  and  routinely followed a policy of executing surrendering LTTE  leaders and cadres  after blindfolding and stripping them naked. Channel 4 video says it all.  

Since the war ended  Sri Lankan government  has increasingly cut minorities and opponents out of decisions on their economic and political futures rather than work towards reconciliation. As power and wealth is concentrated in the Rajapakse family, the risks of renewed conflict are growing again.  There is  increasing authoritarianism, militarism, intolerance,  lack of  transparency and failure to restore  civilian administration in the  North and East. Reconciliation will slip further out of reach if the government  continues  its  genocidal policies. 

Currently the North and Eastern provinces are under military rule by Sinhalese army generals  despite the fact the majority of the people are Thamil speaking. The militarization of Northeast is evidenced by the appointment of high ranking  retd. and serving army generals to key posts. Both the Governors of North (Major G.A.Chandrasri)  and East (Admiral Mohan Wijewickrama) provinces   are Retd. Sinhala Army General/Naval Admiral respectively.  The GA Trincomalee is  Retired Major General Ranjith Silva again  a Sinhalese.  Major General Mahinda Hathrusighe is the Army Commander in charge of Jaffna peninsula.  Thamil civilian officials  have been  directed  to take orders from military officers.

 If the press reports are accurate, you seem to have  put pressure on  the  participants to look for a solution within the parameters of the 13th Amendment. I wish you read that piece of legislation.  If you do,  then you will find out that it is an empty shell. J.R.Jayawardena, the then President took the then Prime Minister Rajiv Gandhi down the garden path  metaphorically and literally. The Provincial Councils created  under the 13th Amendment are glorified municipalities. It is precisely  for this reason TULF  leaders like A.Amirthalingam and M.Sivasithamparam of the TULF rejected the 13th Amendment. The 13th Amendment confers all executive powers in the Governor appointed by the President and not  the Council of Ministers. Hence the lament by the eastern province puppet Chief Minister Pillayan that he has no powers to even appoint a peon for  his office. And the low point is Mahinda Rajapakse has said no to vesting Provincial Council with land and police powers.  

Regrettably, the Congress government is dragging its feet endlessly. It has been repeating ad nauseam for the necessity to find a political solution acceptable to all the  communities before, during and after the war with only deafening silence  from the Sri Lankan government. Gotabhaya Rajapakse, the virtual Defense Minister and sibling of president Mahinda Rajapakse  has said that since the war is over there is no necessity for devolution of power! He means what he says and Mahinda Rajapakse has not contradicted him. 

The truth of the matter is India’s foreign policy formulators in  South block filled with Malayalees and Brahmins  are all  anti- Thamil. The Wiki leaks revelations about M.K. Narayanan says it all.  India played a key role in warding off international pressure on Sri Lanka to halt military operations and hold talks with the LTTE. 

The US embassy noted in a cable in 2005 that 'along with principal secretary (in PMO) T K A Nair, Narayanan constitutes what is now a Keralite mafia active in Prime Minister Manmohan Singh's Office.' Narayanan was not interested in a political solution for the Thamils,  instead he  was more interested in  undermining  the Thamil people's armed struggle for autonomy. Internationally, he played the treacherous and criminal role  in the genocide of 60,000 Tamils  during the final phases of   the war that  ended  on 19 May 2009.  

You as a Congress Party MP may not agree,  but the Congress Party winning the general election in 2005 was the turning point in our history.  Since then the events that occurred in Mullaivaikkal was an Indian engineered genocide. The BJP government, which was in power up to 2005, though observing a ‘hands off policy’ in Sri Lanka, did its best to solve the intractable ethnic problem in Sri Lanka. It did nothing  detrimental to the Thamil Tigers or the Thamils. It did not supply arms and ammunition unlike the Congress government which provided the Sinhalese army  training, arms, radars, warships, intelligence, satellite pictures, finance etc.  

The Forum for Human Rights for Global Development (PFHRGD) may be acting in good faith. But good faith alone is not enough to address the festering problems plaguing the Thamil people.

The Conference has been named  ‘Agony & Solace’,  agony yes but  solace no.

 Yours sincerely

 

 

Veluppillai Thangavelu


முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையைக் கூட்டித் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்!

இருபது ஆண்டு காலத்திற்கு மேலாக ஏறத்தாழ ஆயுள் தண்டனை கைதிகளைப் போல சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்  சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரது தூக்குத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் 8 வாரங்களுக்குத் தள்ளிப்போட்டு கடந்த ஓகஸ்ட் 30 ஆம் நாள் இடைக்காலத் தீர்ப்பளித்தது.  அந்த 8 வாரங்களில் 2 வாரங்கள் கழிந்துவிட்டன.  இன்னும் 6 வாரங்களே எஞ்சியிருக்கின்றன.

முதல் நாள் சட்டசபைக் கூட்டத்தில்  தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் தனக்கு இல்லை எனக் கூறியவர் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்புக் காரணமாக முதல்வர்  ஓகஸ்ட் 30 இல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும் என்ற தீர்மானம்  கொண்டுவந்தார். அந்தத் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது. தூக்குத் தண்டனை என்பது தமிழக மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இத்தீர்மானத்தை கொண்டு வந்ததாகவும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பின் கோரிக்கைகளை ஏற்று இத்தீர்மானத்தைக் கொண்டு வந்ததாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா  சட்டசபையில் கூறினார்.  பேரவைில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. தீர்மானத்தைக் குடியரசுத் தலைவர் ஏற்றால் மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை இல்லாமல் செய்ய  வாய்ப்புள்ளது.

இராசீவ் கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் 1991 இல் கைது செய்யப்பட்டார்கள்.  கடந்த  20 ஆண்டுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.  1998 சனவரியில் தடா சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 26  பேருக்கு மரண தண்டனை விதித்தது.  உச்ச நீதிமன்றம் 1999 மாதம்  19 பேரது மரண தண்டனையை இல்லாமல் செய்து எஞ்சிய 6 பேரில் 4 பேரது தூக்குத் தண்டனையை உறுதி செய்தும் 2 பேரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்தும் தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் போது இராசீவ் கொலை பயங்கரவாதச் செயல் அல்ல அது பழிவாங்கும் செயல் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

தூக்கு  தண்டனைக்கு ஆளான நான்குபேரில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்ற கருத்தினை ஏற்று அவரது மரண தண்டனை  ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஆனால் பேரறிவாளன், சாந்தன், முருகன்   தமிழக ஆளுநருக்கு இருமுறை சமர்ப்பித்த  கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. "நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு வாடி வருகிறோம்" எனத் தங்கள் கருணை மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதன் பின்னர் ஏப்ரில் 26, 2000 இல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்கள்.  அந்த மனு மீது  எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்துக் கடிதம் எழுதினார்கள். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவர்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.  இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும் இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள்.

இப்போது  11 ஆண்டுகளுக்குப் பின் சென்ற மாதம் 12 ஆம் நாள் அவர்களது  கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மரண தண்டனையை உறுதிசெய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,  செப்டம்பர் 9 ஆம் நாள் அவர்களைத்  தூக்கிலிட வேண்டும் என்று நாள் குறிக்கப்பட்டது.  

இருபது ஆண்டுகள்  சிறையில் வாடியவர்களுக்குத் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும்,  அவர்களது  வாழ்வதற்குரிய சட்ட அடிப்படையான அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.

தூக்குத் தண்டனையை  137 நாடுகள் ஒழித்துவிட்டன. அமெரிக்காவில் 13 மாநில அரசுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. இந்தியாவில் கூட கடந்த 7  ஆண்டுகளாக யாரும் தூக்கிலிடப்படவில்லை. 

மத்திய அரசு இவ்வளவு காலமும் நித்திரை கொண்டுவிட்டு இப்போது எப்போதும் இல்லாத அவசரமாகத் திடீரென கருணைமனுக்களை நிராகரித்து தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் துடிப்பது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு கரும்புள்ளி வைத்து தமிழின ஆதரவாளர்களை அவருக்கு எதிராகத் திருப்புவதற்கான முயற்சியா என்ற அய்யம் இயல்பாக எழுகிறது.  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக் குழுவின் தலைவரான தங்கபாலு இந்த இராசீவ் கொலையாளிகள் மூன்று பேருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை நியாயமானது அவர்களைத் தூக்கில் போட வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்பது அதனை உறுதிப்படுத்துகிறது.  தங்கபாலு மட்டுமல்ல இளங்கோவன் போன்ற காங்கிரஸ்காரனும் சாந்தன், முருகன், பேரறிவாளன்  ஆகிய மூவரையும் தூக்கலிட வேண்டும் இல்லையேல் தமிழகத்தில் தீவிரவாதம் தலையெடுக்கும் என அலறுகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி  இன்றைய தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல் - மனித நேயத்தோடு பிரச்சினையை உண்மையிலேயே அணுக வேண்டுமானால் - அதற்குரிய விதிமுறைப்படி ஏற்கனவே திமுக அரசில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைப்படி - உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி அதிலே இந்த மூவரின் தூக்குத் தண்டனையை விலக்கு  செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி - அந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்து அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என அறிக்கை விட்டுள்ளார். அதற்கு தோழர் தியாகு மற்றும் கலியபெருமாள் இருவருக்கும் மன்னிப்பு அளித்து மரணதண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதை மேற்கோள் காட்டியுள்ளார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது ஒருவிதமாகவும் ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கப்பட்டால் வேறுவிதமாகவும் நடந்து கொள்ளும் ஒருவர் என்பது நாடறிந்த உண்மை.  ஆட்சிக் கட்டிலில் இருக்கும் போது இல்லாத தமிழ் உணர்வு ஆட்சிக் கட்டிலை விட்டு இறக்கப்பட்டதும் அது பொங்கி வழியும்.  கண்ணுக்குக் கண் என்பது போல கொலைக்கு மற்றொரு கொலை ஈடாகாது என்ற தத்துவம் வேறு.

இருபது ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன் விடுதலை செய்யுங்கள் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்தார்.   தமிழக அரசு மிகுந்த தாமதத்துக்குப் பிறகு சிறை விதிகளின் படி ஒரு ஆலோசனைக் குழுமத்தை அமைத்தது. அந்த ஆலோசனைக் குழுமத்தில் அனைவரும் கருணாநிதியின் அடிவருடிகளாக இருந்தாலும் மனச்சாட்சி உள்ள சில அதிகாரிகள் நியாயமான அறிக்கையைத் தரவே செய்தார்கள்.

ஆலோசனைக் குழுமத்தின் ஒரு உறுப்பினர்  விடுதலை ஆன பின் நளினி தனது தாயார், தம்பி, மற்றும் தம்பி மனைவி ஆகியோரோடு தங்குவார், அவர் அவ்வாறு தங்குவதால் எவ்வித சிக்கலும் ஏற்படாது என்று யூலை 2009 இல் கொடுத்த தன் அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த அறிக்யைப் பெற்ற பின்னர் கருணாநிதி நளினியை விடுதலை செய்தால் தியாகத்தின் திருவிளக்கு, சொக்கத்தங்கம் சோனியாவின் மனம் கோணும் என்ற அச்சத்தில் இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெறுகிறார்.

அந்த அறிக்கையில்  நளினி விடுதலை பெற்ற பின் இராயப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்குவார். அந்தப் பகுதி, அமெரிக்க தூதரகம் மற்றும்  மிக மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதி ஆதலால் நளினி அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிவித்திருக்கிறார்.

அப்பகுதியில் வசிக்கும் மிக மிக முக்கியப் பிரமுகர் வேறு யாருமல்ல கருணாநிதியேதான்.  நளினையை விடுதலை செய்யக் கூடாது என்று கருணாநிதி சமர்ப்பித்த அரசாணையில் நளினி புரிந்த குற்றம் மிகப் பயங்கரமானது, இராசீவ் கொலையில் முக்கிய குற்றவாளிகளோடு பழகியது மட்டுமல்லாமல் அக்குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றத்தை நளினி செய்திருக்கிறார். இராசீவ் படுகொலைப் பற்றி நளினிக்கு முன்பே தெரியும். நளினியில் கணவர் இக்கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றிருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தொமஸ் தனது தீர்ப்பில் கொலைத் திட்டம் நளினிக்கு மே 21 அன்று ஸ்ரீ பெரும்புதூருக்கு கிளம்பும் போதுதான் தெரியும். முருகன் மீது ஏற்பட்ட காதலால் நளினி இக்குற்றத்தில் தன்னையறியாமல் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார், அவர் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு இக்குற்றத்தில் பங்கெடுத்தார் என்று சொல்ல இயலாது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுருக்கிறார்.  ஆனால் இதையெல்லாம் கருணாநிதி கவனத்தில் எடுக்கவே இல்லை!

அடுத்த காரணம் நளினி சிறையில் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொண்டார் என்பதால் அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்று பொருளல்ல. இப்போது கூட அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்கவில்லை என்கிறது அரச ஆணை. இன்னொரு காரணம்  நளினி விடுதலைக்குப் பின், அவரைத் தங்கவைத்து பாதுகாக்க அவரின் தாயார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். நளினியில் தாயாரும் தம்பியும் இவ்வழக்கில் கைது செய்யப் பட்டு பின்பு விடுதலை செய்யப் பட்டவர்கள். அதனால், நளினியை விடுதலை செய்ய இயலாது. சிறையில் 7, 8 ஆண்டுகள்  சிறையில் கழித்தவர்களை விடுதலை செய்த கருணாநிதி 17  ஆண்டுகள் சிறையில் வாடும் நளினியை விடுதலை செய்ய நெஞ்சில் ஈரம் இருக்கவில்லை.

இதே இராசீவ் கொலை வழக்கில் 26 பேருக்கும் பொடா நீதிமன்ற நீதிபதி ஒட்டுமொத்த மரண தண்டனை விதித்தார். அதனை நீதிபதி கிருஷ்ணன் அய்யர் "இது ஒட்டுமொத்த மரண தண்டனை" (Wholesale Death sentence) என வருணித்தார்.  மேலும் நீதிபதியின் தீர்ப்பு  நீதித்துறையின் பயங்கரவாதம் (Judicial Terrorism) என்றார்!  அந்த 26  பேரில் 19 பேர் விடுதலையாகிப் போனார்கள்.  அவர்கள் விடுதலை செய்யப்பட்டதால் தமிழகத்தில் பிரளயம் ஏற்படவில்லை!

விடுதலையை மறுப்பதற்கு கருணாநிதி  அரசு அடுக்கிய காரணங்கள் எவற்றையுமே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் அடிப்படையில் கருணாநிதி அரசு நளினியை விடுதலை செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை. அவருக்கு இருந்த தமிழின உணர்வு அவ்வளவுதான்.

ஒரு ஆயுள் கைதி 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தால் போதும். அவரை விடுதலை செய்யலாம்.  அப்படித்தான் காந்தியைக் கொலை செய்த கோட்சேயை 14  ஆண்டுகள் கழித்து முடித்த பிறகு மகாராஷ்டிர காங்கிரசு அரசு அவனை விடுதலை செய்தது.

'அ
ஞ்சா நெஞ்சன் அண்ணன்  அழகிரி' கூடத்தான் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அதனால், கருணாநிதி அவர் வீட்டுக்குப் போவதை நிறுத்தி விட்டாரா?  மதுரைப் பக்கம் போகவில்லையா? 

தமிழினத்தலைவர், மூத்த அரசியல்வாதி,  அரசியல் சாணக்கியர், முத்தமிழ் வித்தகர்  என்றெல்லாம் வருணிக்கப்படும் கருணாநிதி போன ஆட்சியில் ஈழத்தமிழினம் எக்கேடு கெட்டாலும் பருவாயில்லை தனது பதவி பறிபோய்விடக் கூடாது என்பதற்காக நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த துரோகத்தோடு ஒப்பிடும்போது இன்றைய முதல்வர் ஜெயலலிதா நூறு மடங்கு மேல் என்றுதான் கூறவேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும் என்று சட்டசபையில்  தீர்மானம்  கொண்டுவந்ததை பாராட்டும் அதே வேளை அமைச்சரவையைக் கூட்டி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றித் தமிழக ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.  இந்த யோசனையை கருணாநிதி சொன்னார் என்பதற்காக புறம்தள்ளிவிடக் கூடாது.  முன்னர் அரசியல் கட்சிகளதும் மக்களதும் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தது போல இப்போதும் மதிப்பளித்து அமைச்சர் அவையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.  இதனைத்தான் ஒட்டுமொத்த தமிழினம் எதிர்பார்க்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது ஓர் அக்கினித் தேர்வு.   அதில் அவர் தேறவேண்டும் என்பதே எமது அவா.  எனவே அவரது அடுத்த கட்ட நடவடிக்கையை உலகத் தமிழினம் உன்னிப்பாகக் கவனிக்கிறது. (September 13, 2011)


யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்….

யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்…. என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு2009 வரை விடை கிடைக்கவில்லை.நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம்

பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, ‘வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. இரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம். குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது. 1993 ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது.

ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் கட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம். இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் ‘முன் ஜோடிப்பு கதைகளை’ போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப் பத்திரிகையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இந்த எதிர்தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின் கடும்வாதம். ஆதார பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திரசேகர், விசேஷ புலனாய்வுத்துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். ‘நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத்துறை காட்டிவிட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்’ என்று கூட சவால் விட்டார். இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத கேள்விகள்:

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை,ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் தா. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.

13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ‘ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார்.’அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?’ என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை?சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். ‘வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

21. சிவராசன், தணு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?

22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

24. ‘விசேஷ’ இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

28. புலிகளின் ‘இந்துத்துவா’ அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?

29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?

30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?

31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் ‘க்யூ’ பிராஞ்ச்,பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.

32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ‘ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை’ என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?

34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?

36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?

37. தணு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?

38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?

39. தணு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?

40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?

42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?

43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு? தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது. கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு விடுவார்கள். மறைந்து நிற்கும் அவர்களால் பலம் வாய்ந்த இந்திய தலைவக்களுக்குத் தான் ஆபத்து. விசேஷப் புலனாய்வுத் துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?’ என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும்

நவம்பர் 19, 1997-ல் தமிழன் எக்ஸ்பிரசில் சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. அந்த கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு.

 


 

போர்க்குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்ப தேர்தல் மூலம் தமிழ்மக்கள் தன் பக்கம் எனக் காட்டத் துடிக்கும் மகிந்த இராசபக்சே!

 

நக்கீரன்

ட - கிழக்கில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 24 மணி நேரமே எஞ்சியுள்ளது.  வட - கிழக்கில் மொத்தம் 26 உள்ளாட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த மார்ச்சு 17 இல் வட - கிழக்கில் உள்ளாட்சி சபைகளுக்கு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட 12 சபைகளிலும் வெற்றிபெற்றது. உள்ளாட்சி சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ்மக்கள் அடித்தள ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்க முடியும்.

வட - கிழக்கில் நடந்து முடிந்த ஆட்சித்தலைவர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் பலத்த தோல்வியைச் சந்தித்த ஆளும் அய்க்கிய சுதந்திர மக்கள் முன்னணி  யூலை 23 இல் நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழ்க் கைக்கூலிகளின் ஆதரவோடு எப்படியும் வென்றுவிட வேண்டும் என சபதம் எடுத்துள்ளது.

 ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே அபிவிருத்தி என்ற போர்வையில்  ஆளும்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக  யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தனது அமைச்சர் பட்டாளத்தோடு சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். 

எமது மக்களின் வேட்டியையம் சேலையையும் உரிந்து அவர்களை அம்மணமாக்கியவர்கள் இப்போது இலவச வேட்டி, சேலை வழங்கி அவர்களது வாக்குகளுக்குக் குருதி தோய்ந்த கைகளுடன் விலை பேசுகிறார்கள்.

யாழ்ப்பாணம்  வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிறு (யூலை 03)   காலை  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பஸில் இராபச்சே "பன்னாட்டுச் சமூகத்துக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் எமது அரசுடன் தான் இணைந்திருக்கின்றார்கள் என்பது தான் அது. இதற்காக நாம் உள்ளாட்சிச் சபைத் தேர்தலில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும்"  எனப் பேசியுள்ளார். எனவே வழக்கத்தைவிட இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி ஆட்பலம்,பணபலம், அதிகார பலம், இராணுவ பலம் ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறது. 

ஆளும் சிங்கள - பவுத்த  பேரினவாதிகளுக்குத் ததேகூ  பெரிய தலையிடியாக இருக்கிறது.  "அரசைக் குழப்பும் கட்சிகளாக தெற்கில் ஜேவிபியும்  வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்" இருக்கிறதாக அமைச்சர் பஸில் இராசபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.

வி.புலிகளுக்கு "இராணுவத்" தீர்வு தமிழ்மக்களுக்கு "அரசியல்" தீர்வு என்று போர்க்காலத்தில் கூறிய மகிந்த இராசபக்சே இப்போது 13 ஆவது சட்ட திருத்தம் வழங்கும் காணி மற்றும் காவல் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளார். அது மட்டுமல்ல 13 ஆவது சட்ட திருத்தத்தைக் கைவிட்டு நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்கப் போவதாக கூறியிருக்கிறார்.  இதன் மூலம் 13 +  சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்தி இனச் சிக்கலைத் தீர்த்துவைக்குமாறு கடும் முயற்சி எடுத்து வந்த இந்தியாவின் முகத்தில் மகிந்த இராபக்சே கரி பூசியுள்ளார்!

"இந்த நாட்டை துண்டு துண்டாக்க விடமாட்டேன். இனச் சிக்கலுக்கு நானே தீர்வு காண்பேன்.  அது வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் அடிமனதில் இருந்து தோன்ற வேண்டும்.  சிலர் பயங்கரவாதிகள் முன்வைத்த கோரிக்கைகளையே மறைமுகமாக வைக்கிறார்கள். அப்படியான கோரிக்கைகள் எந்த அடிப்படையிலும் கொடுக்கப்பட மாட்டாது.  அதில் அயல்நாடுகள் தலையிடக் கூடாது" என மகிந்த இராசபக்சே தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில்   முழங்கினார்.

அப்பாவி மக்கள் பிழையானதும், தவறானதுமான வழியில் செல்லக் கூடாது என்பதுடன் வெளிநாடுகளில் எமது நாட்டைப் பற்றித் தவறான பரப்புரைகளில் சிலர் ஈடுபட்டும் வருகின்றனர். இந்நிலையில் இனம் மதம் மொழி பேதமின்றி எமது சிக்கல்களை நாமே பேசித் தீர்வுகண்டு சகல மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதே தமது விருப்பம் எனச் சுட்டிக்காட்டிய மகிந்த இராசபக்சே நாமே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் அதன் மூலமே எமது நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்தார்.

இதே பல்லவியைத்தான் கடந்த  7 ஆண்டுகளாக நுனிநாக்கில் இனிப்பும் அடி நாக்கில் நஞ்சுமாக மகிந்த இராசபக்சே  சொல்லி வருகிறார். அவர் உலக அபிப்பிராயம் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.  அவரிடம் ஏதாவது தீர்வுத் திட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை. புலிகளோடு இனப்பிரச்சினைத் தீர்வுக்குச் சமாதி கட்டி விட்டதாகவே அவர் நினைக்கிறார். 

வி.புலிகளுக்கு "இராணுவத்"  தீர்வு  தமிழ்மக்களுக்கு "அரசியல்" தீர்வு என்று போர்க்காலத்தில் மார்தட்டிய மகிந்த இராசபக்சே அனைத்துக் கட்சிக் குழு 128 தடவை கூடிப் பேசித் தயாரித்த அறிக்கையை வெட்கமோ  துக்கமோ இன்றிக் குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டார். ததேகூ  ஆன பேச்சுவார்த்தை என்பதும் வெறும் கண்துடைப்பே!  பேச்சுவார்த்தையில் அரசு இதய சுத்தியோடு கலந்து கொள்ளவில்லை எனத்  ததேகூ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று பேசும் மகிந்த இராசபக்சே  வடக்கில் என்ன செய்தார் மாவீரர் துயிலும் இல்லங்களை உழுது இராணுவ தளங்களைக் கட்டியதும் இராணுவத்துக்குக் குடியிருப்புக்களைக் கட்டியதும் பவுத்த விகாரைகளைக் கட்டியதும் கண்ட இடங்களில் எல்லாம் புத்தரின் சிலைகளை நிறுவியதும்   சிங்கள இராணுவத்துக்கு நினைவு தூபிகள் நிறுவியதும் தமிழ் ஊர்களுக்கும் தெருக்களுக்கும் சிங்களப் பெயர்கள்  சூட்டப்படுவதும்,  சிங்களவர்களை அரச செலவில் குடியேற்றியதும் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டதுமே மகிந்த இராசபக்சேயின் சிங்கள - பவுத்த  பேரினவாத  அரசு செய்த சாதனைகள் ஆகும்.

வடக்கின் வசந்தத்தின் கீழ் தமிழர்கள் மீள்குடியமர்த்தப்படுவதற்குப் பதில் தெற்கில் இருந்து  சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். கொக்கச்சான்குளம் என்ற தமிழ் ஊர் நெடுங்கேணி செயலர் பிரிவில் வவுனியா பிரதேச சபையின் கீழ் வருகிறது.  போர்க்காலத்தில் தமிழர்களால் கைவிடப்பட்ட இந்த ஊரின் 300 ஏக்கர் காணியில் தமிழர்கள் கமம் செய்துவந்தார்கள்.  ஆனால்  அதில் சிங்கள அரசு இப்போது 165 சிங்களக் குடும்பங்களை மகாவெலி அதிகாரச சபை இரகசியமாகக் குடியேற்றியுள்ளது. இராணுவம் கமச் செய்கைக்காக பழுதடைந்த குளத்தை ரூபா 4.5 மில்லியன் செலவில் திருத்தியுள்ளது.  மேலும் ரூபா 20 மில்லியன் செலவில் 22 கிமீ தொலைவுள்ள 24 அடி அகலமுள்ள வீதி காடுகள் ஊடாக அமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஊரின் பெயர்  கலபோவசவ  என சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளது. வீதியின் பெயர் மகாகச்சன்கோடி - கலபோவசேவா என அழைக்கப்படுகிறது.  இதுதான் மகிந்த இராசபக்சே குறிப்பிடும் அபிவிருத்தியாகும். வடக்கின் வசந்தம் யார் பக்கம் வீசுகிறது என்பது இப்போது தெரிகிறதா?

இதே போல் சென்ற ஆண்டுக் கடைசியில் 186 சிங்களக் குடும்பங்கள் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான நாவற்குழி காணியில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே, படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய, இராசபக்சே,  அமைச்சர் டக்லஸ் தேவானந்தா ஆகியோரை  வாழ்த்தும் பதாதைகள் அங்கு தொங்கவிடப்பட்டுள்ளன.

இந்தச் சிங்களக் குடியேற்றங்களை நியாயப்படுத்த "இந்த நாடு எல்லோருக்கும் சொந்தம், நாங்கள் எல்லோரும் உடன்பிறப்புக்கள் "என ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே பசப்பு வார்த்தைகளைச் சொல்கிறார்.

அய்யன்னா மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் விடுத்துள்ள அறிக்கையின் படி போர் முடிந்தபின்னர் இடம்பெயர்ந்த 110,652  குடும்பங்கள் (365,082 பேர்) வட மாகாணத்துக்குத் திரும்பியுள்ளன.   இவற்றில்  7,644  (26,009 பேர்)  இன்னமும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றன. 189,221  பேர் உறவினர்களோடு தங்கியிருக்கின்றனர். (The Island - June 27, 2011)

போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான போர்க்குற்றம் ஆகியவற்றில் இருந்து தப்பவும் பன்னாட்டுச் சமூகத்தை ஏமாற்றவுமே மகிந்த இராசபக்சே இந்தப் பேச்சுவார்த்தையையும் உள்ளாட்சித் தேர்தலையும்  கேடயமாகப் பிடிக்கப் பார்க்கிறார்.  இந்தத் தேர்தலில் தப்பித் தவறி ஆளும் கட்சியில் போட்டியிடும் எட்டப்பர்கள் வெற்றிபெற்றால்  ததேகூ, நாகதஅ,  உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழக அரசு, போன்றவற்றின் எந்தக் குரலும் உலகு அரங்கில் எடுபடாது போகும். தேர்தலில் ஆளும்கட்சி தனது அதிகார பலத்தை முறைகேடு செய்து வென்றதை  பன்னாட்டு சமூகம் கண்கில் எடுக்காது! அவர்களுக்குத் தேர்தல்  நடந்தால்  போதும்.

யூலை 23 இல் நடைபெறும் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற மாட்டாதென்றே  பலர்   நினைக்கிறார்கள். அரச ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டப்பட்டுள்ளார்கள்.  சிங்கள இராணவம் வீடுவீடாகச் சென்று ஆளும்கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களைப் பயமுறுத்துகிறது.  ததேகூ வேட்பாளர்களது வீடுகள் கல்லெறிக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.   ததேகூ வேட்பாளரின் நாயின் தலையை வெட்டி அதனைப் படலையில் நட்டு வைத்துள்ளார்கள். இன்னொரு  வேட்பாளரின் வீட்டில் மலசலத்தை கொட்டியுள்ளார்கள்.

கடந்த யூன் மாதம் யாழ்ப்பாணம் அளவெட்டி சைவ மகாஜன சபை மண்டபத்தில் நடந்த ததேகூ வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திடீரென அத்து மீறி நுழைந்த சீருடை அணிந்த சிங்கள இராணுவத்தினர்  இரும்புக் கம்பிகள், மண் வெட்டிப் பிடிகளைப் போன்ற குண்டாந்தடிகளால் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றிக் கடுமையாகத் தாக்கியது.

மேடையில் கூட்டத்துக்கு தலைமை வகித்த தமிழரசுக்கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிச் செயலாளர் சுகிர்தனின் உடலைப் படையினரின் கொட்டன்கள் பதம் பார்த்தன. மேடையில் மட்டுமல்லாது கீழே அமர்ந்திருந்தவர்கள் மீதும் கொட்டன்களும் இரும்புக்கம்பிகளும் தாறுமாறாக விளையாடின. எவருமே படையினருடன் நியாயம் கதைக்கவோ அல்லது அவர்களிடம் கருணை கிடைக்குமென்று எதிர்பார்க்கவோ முற்படவில்லை. அங்கு வருகை தந்திருந்த  5  ததேகூ  நா.உறுப்பினர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். அவர்களது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மெய்காப்பாளர்களே அவர்கள் மீது விழ வேண்டிய அடியைத் தாங்கிக் கொண்டார்கள். இரு மெய்பாதுகாப்பாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார்கள்.

இந்தத் தாக்குதல் பற்றி ததேகூ நா.உறுப்பினர்கள் தெல்லிப்பளைக் காவல்துறையில் முறையிட்டார்கள். தங்களால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்ட முடியும் எனத் தெரிவித்தார்கள்.  ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வட பகுதி இராணுவ தளபதி ஹத்துருசிங்கி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சம்பந்தப்பட்டவர்கள் தயவு தாட்சண்ணமின்றித் தண்டிக்கப்படுவர் எனச் சொன்னார். ஆனால் இதுவரை ஒருநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே கூட்டத்தில் யார் மீதும் தாக்குதல் நடைபெறவில்லை  இராணவத்தினரும் காவல் கடமையில் இருந்த காவல்துறையினருமே  சண்டை பிடித்துக்  கொண்டார்கள் என முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து   விட்டார்.

சாவகச்சேரி ததேகூ முதன்மை வேட்பாளர் அருந்தவபாலன் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுபோய் விசாரிக்கப்படுகிறார். அவரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள் என எழுதப்பட்டதுதான் அவர் செய்த குற்றம்.

தீவுப்பகுதிக்கு ததேகூ நா.உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரைக்குப் போக முடியாத சூழ்நிலை நிலவுகிறது.  அதே நேரம் தீவுப்பகுதி ததேகூ வேட்பாளர்கள் குடாநாட்டுக்கு வரமுடியாத சூழ்நிலை உள்ளது. தீவுப்பகுதி நீண்ட காலமாகவே டக்லஸ் தேவானந்தாவின் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருவது  தெரிந்ததே.

"யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிரணியினரால் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை சுதந்திரமான முறையில் முன்னெடுக்கமுடியாதுள்ளது. அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள் மட்டுமின்றி உள்ளகக் கூட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலைமையே இன்றிருக்கின்றது"  என கபே  (CaFFE) என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது.

இவை யாழ்ப்பாணக் குடாநாடு இனவாத வெறிபிடித்த இராணுவத்தின் இரும்புப் பிடியில் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. அங்கு நிரந்திரமாக நிறுத்தப்பட்டுள்ள 50,000 இராணுவத்தினரின்  ஆட்சியே நடைபெறுகிறது.  நாடாளுமன்ற உறுப்பினர்களை சாதாரண இராணுவ சிப்பாய்கள் தாக்குகிறார்கள். இராணுவத்தின் விருப்பு வெறுப்பின் படியே அங்கு யாரும் எதையும் செய்ய முடியும்.  அங்கு சனநாயகம், சுதந்திரம், இயல்பு வாழ்க்கை என்பதெல்லாம் மருந்துக்கும்  கிடையாது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் மட்டுமல்ல அதற்குப் பின்னரும் சரண் அடைந்த வி.புலித் தளபதிகளும் போராளிகளும் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இராணுவ புலனாய்வுப் பிரிவு மக்களது ஒவ்வொரு அசைவையும்  வேவு பார்க்கிறது. இராணுவ விதானைமார் எல்லா ஊர்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். விளையாட்டு விழாவா? கோயில் திருவிழாவா? திருமண வீடா? எதுவானாலும் இராணுவத்திடம் முன் அனுமதி பெறவேண்டும். இராணுவ தளபதிகளுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டும். வருகிற இராணுவ தளபதிகளுக்கு பூரண கும்ப மாலை மரியாதை செய்யப்பட வேண்டும்.

வட - கிழக்கில் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க வல்ல அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு மகிந்த இராசபக்சே தடை போட்டுள்ளார். வடக்கிலும் கிழக்கிலும் இயங்கிய செஞ்சிலுவைச் சங்கக் கிளைகளும் ஏதிலிகளுக்கான அய்யன்னா முகவர் நிறுவனத்தின்  (UN Refugee Agency - UNHCR) கிளைகளும் மூடப்பட்டுள்ளன.  தானும் தின்னாது மாட்டையும் தின்னவிடாத வைக்கல் பட்டடை நாய்போல் மகிந்த இராசபக்சே நடந்து கொள்கிறார். 

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்கு நிதியில்லை எனக் கைவிரிக்கும் மகிந்த இராசபக்சே அரசு இராணுவ தலைமையகம் கட்ட ரூபா 20 பில்லியனை (ரூபா 2,000 கோடி) யை ஒதுக்கியுள்ளது.  

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பாரம்பரிய பூமி என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உலகிலே மிக உயரமான  522 அடி புத்தர் சிலையை வவுனியாவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.   விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்ற சிறிலங்காப் படையினரைப் போற்றிக் கவுரவிக்கும்  முகமாகவே  இந்தப் புத்தர்சிலை அமைக்கப்படவுள்ளது. இந்தப் புத்தர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு 1000 மில்லியன் (ரூபா 10,000 கோடி)  செலவிடப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் சேனாரத் திசநாயக்கா அறிவித்துள்ளார்.

இப்படியான  பவுத்த மயப்படுத்தல் ஏற்கனவே இராணுவ - சிங்கள மயப்படுத்தப்படும் திட்டமிட்ட முயற்சியின் நீட்சியாகும். 

தேர்தல் பரப்புரைக்கு யாழ்ப்பாணம் சென்ற தலைமை அமைச்சர் டி.எம். ஜெயரத்தின "பவுத்த மதம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இந்துமதம் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இதை நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை"  என யாழ்ப்பாண மக்களைப் பாதுத்துக் கேட்டுள்ளார்.  இது வரலாற்றைத் திரிக்கும் முயற்சியாகும்.

விஜயன் (கிமு 543 - 504) முதற்கொண்டு  மூத்தசிவன் ( கிமு 367-307 )  வரை இலங்கையை ஆண்ட நாக இன மன்னர்கள் இந்துக்கள் என்பதே வரலாறாகும். தேவநம்பிய தீசன் (கிமு 307 -247) என்ற நாக மன்னனே இந்து மதத்தில் இருந்து புத்தமதத்துக்கு மாறியவனாவான்.   புத்தர் கூட இந்துமதத்தில் பிறந்தவரே!

இன்னும் சொல்லப் போனால் இலங்கையின் ஆதிகுடிகள் திராவிடர்களாகிய நாகர் இயக்கர், இராட்சதர், வேடர் ஆகியோரே.  கவுதம புத்தர் மூன்று முறை இலங்கை வந்ததாக மகாவம்சம் கூறுகின்றது. முதன் முறை மஹியங்கன்னை என்னும் இடத்திற்கும் இரண்டாம் முறை நாக தீபத்திற்கும் மூன்றாம் முறை கல்யாணி (இன்றைய களனியா) என்னும் இடத்திற்கும் வந்தார் எனவும் நாகதீபத்திலும் கல்யாணியிலும் நாகர் வசித்தனர் எனவும் நாகதீபத்திலுள்ள அரச குடும்பத்தில் அரசுக் கட்டில் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தை தீர்ப்பதற்காக வந்தார் எனவும் அந்நூல் நவிலும். மேலும் நாக தீபத்திலுள்ள அரச குடும்பத்தின் உறவினர் கல்யாணியிலும் இருந்தனர் எனவும்  மகாவம்சம் கூறுகிறது.

1956 இல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும் கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த அஞ்சல் தலை அமைந்திருந்தது.

அஞ்சல் தலையைப்  பார்த்த சிங்கள - பவுத்த இனவாதிகள்  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும் விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்தத் தபால் தலையை திரும்பப் பெறவேண்டும்'' என்று கூறினார்கள். இதன் காரணமாக, இந்த அஞ்சல் தலையை இலங்கை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த அஞ்சல் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது.

எனவே சிங்கள பேரினவாதம், பவுத்த மதவாதம் கக்கும் மகிந்த இராசபக்சே மற்றும் ஜெயரத்தின போன்றோரது வாயை அடைக்க வேண்டும் என்றால் தமிழ்மக்கள் தங்கள் கையில் இருக்கும் வாக்குப் பலத்தை அவர்களுக்கு எதிராகவும்  ததேகூ க்கு ஆதரவாகவும்  பயன்படுத்தல் வேண்டும்.

பேரினவாதிகளின் கட்சியான அய்க்கிய சுதந்திர மக்கள் முன்னணியின் வெற்றிலைச் சின்னத்துக்கு எதிராக போடும் ஒவ்வொரு வாக்கும் சிங்கள - பவுத்த பேரினவாதிகளது மண்டையில் போடும் சம்மட்டி அடியாக இருக்கும்.

விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று துள்ளும் பேரினவாத அரசு தமிழ்மக்களது வாக்கைக் கண்டு அஞ்சுகிறது. தமிழ்மக்களது காப்பரணாக விளங்கும் ததேகூ கண்டு மகிந்த இராசபக்சே பயப்படுகிறார்.

எனவே  எமது தாயக உறுவுகள் சிங்கள - பவுத்த - இராணுவ மேலாண்மையை ஒழிக்கத்  தங்கள் வாக்குகளை ததேகூ பின் வேட்பாளர்களுக்கு போட்டு தமிழ்த் தேசியத்தின் இருப்பைப் பலப்படுத்து வேண்டும்.

வடக்கும் கிழக்கும் இராணுவ - சிங்கள - பவுத்த மயப்படுத்தல், பண்பாட்டுச் சீரழிவுகள்,  பொருளாதாரச் சிதைவுகள், அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் ததேகூ மட்டுமே குரல் எழுப்பி வருகிறது. அதனை முறியடிக்க சிங்கள அரசு கடுமையாகப் பாடுபடுகிறது.  அதன் வெளிப்பாடாகவே எப்பாடு பட்டும் வடக்கில் ததேகூ  தோற்கடித்து உள்ளாட்சி சபைகளை கைப்பற்றிவிட வேண்டும் என சிங்கள - பவுத்த இனவாத அரசு  வெறித்தனத்தோடு செயற்படுகிறது.  

முன்னைய காலத்தில் சிங்கள - பவுத்த - இராணுவ  மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக வி.புலிகள் காப்பரணாக விளங்கினார்கள். இன்று அந்தப் பொறுப்பு ததேகூ இன் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னர் நடந்த தேர்தல்களில் ததேகூ இன் வெற்றிக்கு புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் குறிப்பாக கனடிய தமிழ்மக்கள் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.

கடந்த தேர்தல்களில் எமது  மக்கள் எந்த இலவசங்களுக்கும் விலை போகாது எந்தப் பயமுறுத்தல்களுக்கும் அடிபணியாது   தங்கள் வாக்குகளைப் போட்டிருக்கிறார்கள்.  இந்தத் தேர்தலிலும் எமது மக்கள் சிங்கள - பவுத்த இனவாதத்தைக் கக்கும்    அசுமமு  க்கும்  போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படும் அதன் தலைவர் மகிந்த இராசபக்சேக்கும் செமபாடம் புகட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

தமிழ்த் தேசியத்தின் இருப்பைப் பலவீனப் படுத்தும் சிங்கள - பவுத்த இனவாத அரசின் முயற்சிகளை முறியடிக்கப் புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும்.  எஞ்சியிருக்கும் நேரத்தில் தாயகத்தில் இருக்கும் அவர்களது சொந்தங்களைத் தொலைபேசியில் அழைத்து ததேகூ வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். தாயகத்தில் தமிழ்த் தேசியத்தின் இருப்புக் கேள்விக் குறியானால் புலம்பெயர் தமிழர்களது போராட்டங்கள் பொருள் அற்றுப் போய்விடும்  என்பது நினைவு கொள்ளத்துக்கது. (July 22, 2011) 

 

 


 

South Sudan walk to freedom

Veluppillai Thangavelu

South Sudan walk to freedom has ended. A  New Nation will be born on July 09, 2011 midight. Republic of South Sundan is now  poised to take its place in the United Nations Organization sooner than anyone thought a  year ago.   South Sudan will be the 193rd  nation to be admitted to UN membership. When UNO  was formed in 1945 following WW11 there were only 51 countries on its roll. Since then membership has increased by leaps and bounds especially after the break  up of the Soviet Union   and Yugoslavia in  the early nineties.  Between 1991 - 1994  membership rose from 166 to  184 an increase of 19 states. The youngest nation to join the UNO was Montenegro (192) which  voted for independence from Serbia in a referendum on May 21, 2006.  Before that East Timor  formally joined the world body in 2002  after centuries of Portuguese rule and years of often brutal Indonesian occupation.

Sudan's centuries of association with Egypt formally ended in 1956, when joint British-Egyptian rule over the country ended. Independence was rapidly overshadowed by unresolved constitutional tensions with the south, which flared up into full-scale civil war that the coup-prone central government was ill-equipped to suppress. The military-led government of President Jaafar Numeiri agreed to autonomy for the south in 1972, but fighting broke out again in 1983. After two years of bargaining, the rebels signed a comprehensive peace deal with the government to end the civil war in January 2005.

 

Decades of fighting have left Sudan's infrastructure in tatters. With the return of millions of displaced southerners, there is a pressing need for reconstruction. The economic dividends of peace could be great. Sudan has large areas of cultivatable land, as well as gold and cotton. Its oil reserves are ripe for further exploitation. Arabic is the official language and Islam is the state religion, but the large non-Arab, non-Muslim minority has rejected attempts by the government in Khartoum to impose Islamic Sharia law on the country as a whole.

 

The referendum to split Sudan into a predominantly Muslim North and a predominantly Christian South, after years of fighting and repression,  was concluded on January 15,2011. The popular mandate catapulted a collective dream towards the much awaited freedom, off the yoke of a presumptively terrorist state Sudan. The referendum came exactly five years after the Comprehensive Peace Agreement was accorded in 2005 between a cornered Government of Sudan and South Sudan’s People’s Liberation Movement. Eelam Thamils  join the South Sudanese people in their moment of rejoice.

Sixty percent out of the 4.5 million  registered voters casted their votes confirming the  turnout  passed the 60 percent mark needed to make the result binding. Almost 99 percent of south Sudanese who voted for independence  in the referendum chose to split away from the north, the first official but incomplete figures published by the referendum commission. This is an indication of a landslide vote for southern independence promised in a 2005 peace deal that ended decades of north-south civil war. The final official figures are expected in February.

The website for the Southern Sudan Referendum Commission (southernsudan2011.com/) showed a 98.6 percent vote for secession, with more than 80 percent of the votes from the south counted, and 100 percent counted in other areas.

International observers gave south Sudan's independence referendum their seal of approval on January 17, 2011  and said  that a vote for secession was now "virtually certain" in their first official judgment on the poll. Early results from last week's plebiscite suggest that people from Sudan's oil-producing south voted overwhelmingly to split away from the north following decades of civil war. Observers from the Carter Center and the European Union both said that the vote had been credible -- an endorsement that moved the region a step closer to independence.

The main political division of Africa was decided at the Berlin Conference in 1884/85. The participating European powers had little information about the people of inland Africa. They had explored the coastline, but their interest was access to the mineral wealth of the continent.

If one looks at  the political boundaries of Africa it becomes clear that no regard was given to the cultural and ethnic diversity of its people. Local people who had little in common were lumped together, and people with a common culture and tradition were separated. The Zulus and the "boers" were the first to offer military resistance to the land- grabbing and mineral interests of colonial powers, but they succumbed to superior military power. Only Abyssinia and Liberia were not "colonised". Bloody ethnic wars in Africa were the result of decisions taken at the 1884/5 conference.

South Sudan was already there during the European scramble for Africa in Berlin. South Sudan was also there during the British Colonialists “Closed District Ordinance.” South Sudan was there in the historical 1947 Juba Conference. South Sudan was there in the historical 1955 Torit mutiny and rebellion. South Sudan was there during 1965 Round-table Conference. South Sudan was there during the initial historical 1982-1983 rebellions.

South Sudan’s sovereignty is  now mere a matter of time. People who fled to distant shores in search of peace are now ecstatic of a peaceful future in their homeland. More than 2000 families have started returning back to the swampy tracts of the White Nile. But the question pops up, can South Sudan ensure, rather sustain peace? Only time will tell.  The new government at Juba has to ensure equal opportunity, democratic representation of all ethnic sects. South Sudan comprises of composite clusters of ethnicity, and hence their respective aspirations, beliefs, customs, languages and seeking in unity in diversity will be the greatest challenge  the leaders of the new government will  face. Southern Sudan shares its borders with Ethiopia, Kenya, Uganda and Congo. Each country poses a unique assortment of threats. Ethiopia’s political instability, insurgences and fast penetrating roots of Islamist terrorism are poised to be the greatest challenges to South Sudan, all the more as the latter is not an Islamic one. Tunisia is a recent example of how a country under the jackboot of a  corrupt dictator backed by the army  could collapse like nine-pins overnight for lack of democracy, transparency  and rule of law.

It shall be H.E. Salva Kiir Mayardit to lower the Sudan flag and raise high  the flag of the Republic of South Sudan on 9th July, 2011 at the Presidential Republican Palace in Juba. He  is going to be the first President of the Republic of South Sudan as already agreed by the political parties of Southern Sudan. It shall be the very GoSS and SPLM/A Flag which is being used now. Dr. Mayardit shall lift up this flag with honour on that greatest First Independent Day of South Sudan.

South Sudan  will  have the ‘Buffalo’ as the “Coat of Arms (Emblem)”   and with “Motto” under its design written: ‘Peace and Prosperity’. The current proposed “National Anthem” shall be amended to remove irrelevant attributes like the Land of Cush, Milk and Black Warriors. South Sudan will issue Ordinary “Black Passport”  save for the diplomatic ones which should be red. Their  “Nationality” shall be ‘South Sudanese’ and have  ‘South Sudanese Pound’ as their  “Currency”.

It is widely expected that recognition of the new government from  other nations around the globe will be swift and decisive.

Russia  has expressed a willingness to recognize an independent state in Southern Sudan if the results of  January 15  referendum are accepted by the two governments north and south according to  the special envoy of the President Dmitry Medvedev to Sudan. On Wednesday, the ruling National Congress Party (NCP) declared recognizing the results of the Southern Sudan referendum on independence.

“If a new independent state appears on Africa’s map as a result of the referendum and this is not accompanied with conflicts, this outcome can be described as a most favourable one,” said Mikhail Margelov special Russian envoy to Sudan. “We act as an honest partner: we have no burden of the colonial past either in Sudan or in neighbouring African countries, nor have we investments running into billions or the mentality of an international policeman. Russia in this case can only show its goodwill,” he stressed.

Margelov said the northern and southern Sudan governments expressed readiness to reach agreement on the pending issues to prevent another civil war. "The political forces of Sudan were able now to reach agreement: they have common interests, and, one would like to hope, not only economic."


An Overview of undivided Sudan

  • Full name: Republic of Sudan

  • Population: 43.2 million (UN, 2010)

  • Capital: Khartoum

  • Area: 2.5 million sq km (966,757 sq miles)

  • Major languages: Arabic, English (official), others

  • Major religions: Islam, Christianity, Animism

  • Life expectancy: 58 years (men), 61 years (women) (UN)

  • Monetary unit: Sudanese pound

  • Main exports: Oil, cotton, sesame, livestock and hides, gum Arabic

  • GNI per capita: US $1,220 (World Bank, 2009)


Last December,  during a visit to Khartoum, the Russian envoy met with the Sudanese First Vice President and head of southern Sudan government to discuss the future relations between Russia and South Sudan. "Russia is interested in its economic presence in Sudan, whether in a unified one, or with the South separated from it," he said. “From the business point of view, (Sudan) offers a multitude of perspective trends - oil, pipelines, energy, water resources and railway transport,” he stressed.

China  is the biggest foreign stakeholder in the Sudanese oil industry, via China National Petroleum Company’s interests in various production and exploration blocks, and it receives approximately three-quarters of Sudan’s oil exports. The oil industry is acutely vulnerable to any conflict because about 75 per cent of Sudan’s proven reserves of 6.3bn barrels are in the south, but the pipeline that carries the oil to export terminals and refineries runs through the north. The south needs Khartoum’s co-operation to sell its oil; the north needs revenues from its neighbour’s resources; and the two sides of the country have yet to agree how they will cooperate to keep the oil flowing after independence.

There is an adage that behind every man's success there lies a woman. The same is true of nations which freed themselves from tyranny and slavery. East Timor independence was backed by Portugal its former colony. Kosovo shook off Serbia's yoke with the help of  European Union and the NATO forces. South Sudan had the  backing of a majority of Christian organizations which wield considerable political clout in US politics.

Freedom don't come easily. South Sudan paid a price. More than 2 million people died during the civil war which  began in 1983.   Sudan's holocaust, includes village raids, massacres, refugees and slavery. Civil war in Darfur region is seen as "one of the worst nightmares in recent history".

The birth of South Sudan after a painful and destructive civil war gives hope to other national minorities like the Palestinians, Chechens, Kashmiris, Kurds and  Eelam Thamils fighting for their own freedom. The borders of countries are not cast in  stone. Adding another ten members to the UN  will not cause the sky to fall!

Sudan Peoples’ Liberation Movement (SPLM) has invited Transnational Government of Tamil Eelam (TGTE) to visit Southern Sudan in the immediate aftermath of the vote for an independent state. TGTE is sending a delegation to participate in the celebrations and to discuss possibilities of assisting Southern Sudan in their development efforts through Tamil Diaspora expertise in selected fields. TGTE delegation will be received by the SPLM officials and will stay as guests of SPLM. This is  a  giant  step in our struggle for statehood.  There are many similarities between the South Sudanese people  liberation struggle and the Eelam Thamils. Both faced  persecution and a genocidal war. Sudanese President Bashir has been indicted for genocide and the Sri Lankan President Rajapaksa is to be indicted for genocide at some point in time. World leaders must recognize the legitimate struggle of Eelam Thamils to restore and reconstitute the sovereign state of Thamil Eelam. An independent Thamil Eelam is good for Thamils, but better for the Sinhalese and the world at large!


 

         இன்று தென் சூடான், நாளை தமிழீழ விடுதலையை எதிர்பார்க்கலாம் - அனலை நிதிஸ் ச. குமாரன்

 இரத்தம் சிந்தாமல், துன்பங்களை சந்திக்காமல் கிடைப்பது அல்ல விடுதலை. இப்பாரிய போராட்டங்களின் பின்னர் கிடைப்பதுவே உண்மையான விடுதலை. இழப்புக்களை சந்திக்காமல், இழப்புக்களின் வலியை உணராமல் விடுதலை பெறும் மக்கள் எத்தனை காலமாகினாலும் வாழ்வில் எந்தவித மாற்றத்தையும் காண முடியாது.

இவர்கள் இருண்ட வாழ்க்கையையே நடாத்திக்கொண்டிருப்பார்கள். பல போராட்டங்கள் செய்து விடுதலை பெறும் மக்கள், தாம் பட்ட துன்பங்கள் தமது எதிர்கால சந்ததிக்கு வந்துவிடக் கூடாதென்கிற நோக்குடன் துணிச்சலுடன் செயலாற்றி தம்மையும், தமது தேசத்தையும் உயர்த்துவதற்காக கடினமாக உழைப்பார்கள்.

இப்புதிய ஆண்டில் ஆபிரிக்க கண்டத்தில் உருவாகப்போகும் தென் சூடான் என்கிற புதியநாடு, விடுதலை வேண்டி நிற்கும் தேசங்களுக்கெல்லாம் புதுத்தென்பைக் கொடுத்து வரலாற்றில் நிலைபெற்றிருக்கப் போகின்றது.

விடுதலைக்காக போராடிய தேசங்களின் வரிசையில் இன்று தென் சூடான் விடுதலை பெறுகிறது. நாளை விடுதலை பெறப்போகும் தேசங்களில் தமிழீழமே முன்னிடத்தில் உள்ளது.

பிரித்தானியர்களினதும் எகிப்தியர்களினதும் காலனித்துவ நாடாகவிருந்த சூடான், ஜனவரி 1, 1956-இல் விடுதலை பெற்றது. ஏறத்தாழ 43 மில்லியன் சனத்தொகையைக்கொண்ட நாடு. இதன் பரப்பளவு ஏறத்தாழ 2.5 மில்லியன் சதுர கிலோமீற்றர். தென் பகுதியில் கிறிஸ்தவர்களும், வட பகுதியில் முஸ்லிம்களும் வாழ்ந்துவருகின்றார்கள்.

இந்த இரண்டு தேசங்களும் இனரீதியாகவும், மதரீதியாகவும் தனித்துவமானவை. சூடானின் அடக்குமுறை அரசிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த தென் சூடானிய மக்கள், தமது தேசத்திற்கான விடுதலைக்காக சூடான் விடுதலைபெற்ற காலப்பகுதிகளிலிருந்தே ஆரம்பித்த போராட்டம் பல்வேறு கட்டங்களாக பயணித்து, பல்வேறு இராஜதந்திர நகர்வுகள் ஊடாக நகர்ந்து, பல்வேறு சதிவலைகளில் சிக்கியபோதும் எழுந்துநிமிர்ந்துநின்ற தென் சூடானிய தேசத்துமக்களின் விடுதலைக்கான போர், தற்போது அதன் உச்சத்தை தொட்டுள்ளது.

பதினேழு வருடங்கள் தொடர்ந்த முதலாம் கட்டப்போரும், அதனைத் தொடர்ந்த சமாதான உடன்படிக்கையும், அதன்பின்னர் 1983-இல் ஆரம்பித்த இறுதிப்போரும், அதன் தொடர்ச்சியாக வந்த ஒப்பந்தத்தின் பலனாக தற்போது சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்துகின்ற நிலைக்கு இரண்டு தேசங்களும் இணங்கி அதிலும் வெற்றி கண்டார்கள். 1983-இல் ஆரம்பித்த உக்கிரமான போரில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் பல மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

பல ஆண்டுகால பகைமைக்கு பின்னர் வட சூடானை மையமாக கொண்ட மேலாதிக்கவாத அரசு தென் சூடானிய மக்களின் பிரிந்துசெல்வதற்கான உரிமையை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்குலக அரசுகளின் முயற்சியால் தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பாசீர் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையிலுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழரின் போராட்டத்திற்கும், தென் சூடானிய போராட்டத்திற்கும் பல இணக்கப்பாடுகளை காண முடியும். சிறிலங்கா சுதந்திரம் அடைந்த நாள் முதல் 1983 வரை தமிழ் தலைமைகள் பல போராட்டங்களை செய்தது. பல்லாயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இவைகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடி, தமிழீழ சுதந்திர நாட்டை உருவாக்க பிறந்தது பல தமிழ்ப் போராளி அமைப்புக்கள். எப்படி தென் சூடானுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆதரவாக இருந்ததோ, அதைப்போலவே தமிழீழ போராளிகளுக்கும் இந்தியா உதவிக்கரமாக இருந்தது.

எப்படி சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தென் சூடானின் விடுதலைக்காக 1983 ஆண்டில் ஆயுதப்போரை மேற்கொண்டதோ, அதைப்போலவேதான் விடுதலைப்புலிகள் அமைப்பும் அதே ஆண்டில் தமிழீழ விடுதலைக்காக போரை ஆரம்பித்தார்கள். தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பாசீர் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையிலுள்ளாரோ, அதைப்போலவேதான் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவும் போர்க்குற்றம் புரிந்தவராக உலக நாடுகளினால் வர்ணிக்கப்படுகிறார்.

ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் சூடான் தேசத்தில், 4.5 மில்லியன் மக்கள் வாக்களிப்பு தகைமையை கொண்டிருக்கின்றார்கள். ஏறத்தாழ 619,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதுடன், உகண்டா, கென்யா, எதியோப்பியா மற்றும் கொங்கோ நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டதுதான் தென் சூடான்.

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றுக்கும், தென் சூடானிய போராட்ட வரலாற்றுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரு போராட்டங்களும் 1983-ஆம் ஆண்டிலேதான் ஆயுதப் போரின்மூலமேதான் தமது விடுதலையை வென்றெடுக்கலாம் என்கிற சிந்தனையுடன் ஆயுதப் போரை மேற்கொண்டனர். தென் சூடான் மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொள்வதாக 1989-ஆம் ஆண்டு அப்போதைய சூடான் அரச அதிபர் அறிவித்திருந்தார்.

ஆனால் அதே காலத்தில் ஏற்பட்ட இராணுவ சதிப்புரட்சியில் ஆட்சிப் பீடமேறிய இப்போதைய அரசு அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி தொடர்ந்தும் போரில் ஈடுபட்டது. தொடர்ந்த போரும் அழிவுகளும் 2005-ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட சமாதான உடன்படிக்கை மூலம் ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.

ஈழ விடுதலைப் போராளிகளும், சூடான் மக்கள் விடுதலை இயக்கம் போன்றே பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்கள். இவைகள் அனைத்தையும், சிங்கள அரசு ஏற்கவில்லை. நோர்வே அனுசரணையுடன் சூடான் அரசுக்கும் தென் சூடான் அமைப்பிற்கும் இடையில் 2002-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு இடைக்கால ஒழுங்கு பற்றிய உடன்பாடு காணப்பட்டது.

இந்த உடன்பாட்டின்படி தென் சூடான் தனது போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை புனரமைப்பதுடன்இ முக்கிய கட்டமைப்புடன் தென் சூடான் மக்களின் சுய நிர்ணைய உரிமையும் அங்கீகரிக்கப்பட்டது. அதாவது வடக்கு சூடானும் தெற்கு சூடானும் சேர்ந்து வாழ்வதா பிரிந்து செல்வதா என்ற உரிமையினையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதே நோர்வேதான் அதே 2002-ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசிற்கும், புலிகளுக்கும் இடையில் தனது நேரடி மத்தியஸ்தத்தின் கீழான சமாதான ஒப்பந்தத்தை செய்தது.

விடுதலைப்புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அரச திட்டத்தினை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு சர்வதேச நாடுகளின் குறிப்பாக, இணைத்தலைமை நாடுகளின் அசமந்த போக்கும் ஓர் காரணமாக இருந்தது. அத்துடன் இந்தியாவின் தலையீடும் காரணம் என பரவலாக கருதப்பட்டது. ஆனால், சூடானுடைய இடைக்கால திட்டத்தினை சர்வதேசம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்காவும் நோர்வேயும் ஒற்றைக்காலில் நின்றனர். இதனால் வடக்கு சூடான் ஆட்சியாளருக்கு இடைக்கால சபையினை நடைமுறைப்படுத்துவதினைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

சர்வதேசத்தின் ஒருங்கிணைந்த அழுத்தம் காரணமாக இடைக்கால நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதனை விட நடைமுறையில் உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றுதான் கூறவேண்டும். காரணம் வடக்கு சூடானிய ஆட்சியாளர்கள் தென் சூடானிற்கு ஒப்பந்தத்தில் கூறியது போல் எதுவும் செய்யவில்லை. புனர்வாழ்வும் செய்து கொடுக்கவில்லை, அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. மாறாகஇ தெற்கு சூடானியரின் எண்ணெயினை அகழ்ந்து சீனாவிற்கு கொடுத்தவண்ணம் இருந்தது.

எது என்னவாயினும், நோர்வே தலைமையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பிரகாரம் மக்களிடம் வாக்கெடுப்பு நடாத்தி, வாக்களிக்க தகமையுடைய 4.5 மில்லியன் மக்களில் 60 விழுக்காட்டினர் தென் சூடான் பிரிந்து செல்வதை ஏற்று வாக்களித்தால்தான் விடுதலையை பெற முடியும் என்று ஒப்புக்கொண்டார்கள்.

அதன்படியே, ஜனவரி 9-ஆம் நாள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த வாக்கெடுப்பு, ஜனவரி 15-ஆம் திகதி ஏழு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. புலம்பெயர்ந்து வாழும் தென் சூடான் மக்களும் இவ்வாக்களிப்பில் பங்கு கொண்டார்கள் குறிப்பாக அவுஸ்திரேலியா, கனடா, எகிப்து, எதியோப்பியா, கென்யா, உகண்டா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற எட்டு நாடுகளிலிருந்து இத்தேர்தலில் அம்மக்கள் வாக்களித்தார்கள்.

வட சூடானின் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும், தென் சூடான் பிரிந்து செல்லுவதற்கு ஆதரவாக ஏறத்தாள 99 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளார்கள் என கூறினாலும், பெப்ரவரி 14, 2011 அன்றே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். நடைமுறையிலுள்ள ஒப்பந்தப்படி ஆறுமாதங்களுக்கு பின்னர் அதாவது ஜூலை 9-ஆம் திகதியே தென் சூடான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழுவினரால் இந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 9, 2011 முதல் ஐநாவின் 193 ஆவது நாடாக தென் சூடானின் உலக அரங்கில் அதன் தேசியக்கொடி பறக்கவிடப்படும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையெனும் உலக அமைப்பில் 51 நாடுகளே உறுப்பு நாடுகளாக இணைக்கப்பட்டன. 1991-ஆம் ஆண்டிலிருந்து 1994-ஆம் ஆண்டுவரை 166 உறுப்பு நாடுகளை கொண்ட ஐநா, இக்காலப்பகுதியில் 184 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தது குறிப்பாக 19 நாடுகள் குறித்த நான்கு வருடங்களுக்குள் இணைந்தன.

முன்னாள் சோவியத் ஒன்றியம் பிளவுபட்டு பல நாடுகள் உருவாகியதே, பல நாடுகள் உருவாகக் காரணமாக இருந்தது. மோண்ரிநீக்ரோ என்கிற நாடு 192 ஐநாவின் உறுப்பு நாடாக மே 21, 2006-இல் இணைக்கப்பட்டது. செர்பியாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்கிற போராட்டத்தின் விளைவே, மோண்ரிநீக்ரோ நாட்டு மக்களும் தேர்தல் மூலமாக தமது விருப்பை வெளிப்படுத்தி பிரிந்தார்கள். கிழக்கு தீமோரும் இந்தோனேசியாவின் அடக்கு முறைகளிலிருந்து விடுவிக்கப் போராடி, மே, 20, 2002 விடுதலை பெற்றது.

விடுதலைப்புலிகள் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்த வேளையில் பல கட்டுமானப் பணிகளை செய்திருந்தார்கள். எதிரியே மூக்கில் விரலைவைத்து ஏங்குமளவு பல கட்டுமானங்களை செய்திருந்தார்கள். இவைகள் அனைத்தையும் சிங்கள அடக்கு முறை அரச படையினர் அழித்தார்கள். தளம் மாறிச் சென்ற புலிப்படையினர், வன்னியை கைப்பற்றி தமது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளையில் தனி அரசையே நடைமுறையில் வைத்திருந்தார்கள்.

நீதித்துறை முதல் பல அரச அமைப்புக்களை நிர்மாணித்து, அவற்றை வெற்றிகரமாக நடைமுறையில் வைத்திருந்தார்கள். எந்தக்குற்றமும் இல்லையென்று சொல்லுமளவு சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டது தமிழீழ காவல்த்துறையினரால். இப்படியாக இருந்த விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு, ஏதோ பயங்கரவாதத்தை அடியோடு அழிப்பதாக கூறி படையெடுத்து பால்லாயிரம் பொதுமக்களைக் கொன்றும் பல்வேறு அட்டூழியங்களை செய்தது சிங்கள அரசு.

இறுதிப்புலி இருக்கும்வரை தமிழீழ லட்சியம் அழியாது என்று கூறினார் புலிகளின் தலைவர் பிரபாகரன். இன்னுமொரு படிமேல் சென்று சொல்வதேயானால், இறுதித்தமிழன் இருக்கும்வரை தமிழீழம் அடையாமல் இருக்கப் போவதில்லை. அன்று புலிகளின் கட்டுமானத்தை அழித்ததாக பறை சாற்றினார்கள். ஆனால், இன்று புதிதாக உருவாகப் போகும் தென் சூடான் நாட்டிற்கு நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளுக்கு அழைப்பு சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது.

தென் சூடானின் கட்டுமானப்பணிகளிலும் தமிழீழத்தை சேர்ந்த பொறியியலாளர்கள் ஈடுபடவுள்ளார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வழைப்பு தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென்சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும் பொருத்தமான துறைகளில் தென்சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயரதிகாரிகள் வரவேற்பார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்."

தமிழீழ வல்லுனர்களின் செயற்பாடு தென் சூடானில் இடம்பெற இருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்வே. இப்படியான செயல்கள் மூலமாக நாளை மலர இருக்கும் தமிழீழ தேசத்தை கட்டியெழுப்ப இவ்வல்லுனர்களின் அனுபவமே போதும். அத்துடன், தென் சூடானும் தனது விசுவாசத்தை தமிழீழ தேசத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் காண்பித்து, ஒரு வருடம் அல்ல பல்லாயிரம் வருடங்களாக உறவுகளைப் பேணுவதற்கு உறுதுணையாக இருக்கும். ஈழத்தில் இன்று அகலக்கால் பதித்து நிற்கும் சிங்கள அரக்கர்கள் தமிழீழத்தை சிதைக்க எத்தனை நிகழ்வுகளைச் செய்தாலும், தமிழீழ வேங்கைகள் உலக அரங்கிலேயே அகலக் கால் பதித்து வேலைகளை செய்கிறார்கள்.

சூடான் நாட்டின் ஐந்தில் நான்கு பகுதி எண்ணெய் வளம் தென் சூடானிலேயே இருப்பதுடன், கடல் வளம் உள்ள நாடாகவே தென் சூடான் உள்ளது. செங்கடல், சுயெஸ் கால்வாய், இந்து மா கடல் என்பவற்றின் ஊடாக அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாதைகளின் பாதுகாப்பிற்கும் அதை ஒட்டிய வேறு அலுவல்களுக்கும் சூடானின் புவியியல் அமைவிடம் இன்றியமையாதது. 
இவைகளைக் குறிவைத்தே அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள் தென் சூடானின் விடுதலைக்கு ஆதரவாக இணைந்தார்கள் போலும். எது என்னவாக இருந்தாலும், மேற்கத்தைய நாடுகளின் செயல்களினால் ஆத்திரமடைந்த சூடானிய இஸ்லாமிய அரசு (இப்போ வடக்கு சூடான்) தென் சூடானின் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி மேற்குலகத்திற்கு எதிராக சீனாவை பயன்படுத்த திட்டமிட்டு அதன்படி செய்தது.

உண்மையில் ராஜபக்சாவும் இதே பாணியினைத்தான் தனது ஆட்சியில் கையாண்டு வருகின்றார். ஆனால் ராஜபக்சா எண்ணெய்யினை காட்டி சீனாவை வைத்திருக்கவில்லை மாறாக கடற்பிராந்திய போக்குவரத்தினை வைத்தே தனது காய்களை நகர்த்துகின்றார்.

விடுதலைக்கான போராட்டங்களை செய்துவரும் ஈழ, செச்சினிய, பாலஸ்தினிய, குர்திஷ் மற்றும் காஷ்மீரிய தேசங்களும் வெகு சீக்கிரத்தில் விடுதலையை எப்படி தென் சூடான் இன்று பெற்றதோ அதைப்போலவே இத்தேசங்களும் வெற்றிகரமாக விடுதலையை வென்றெடுப்பார்கள்.

விடுதலைக்காக போராடி வரும் தேசங்களின் வரிசையில் அடுத்து தமிழீழத் தேசமே பிறப்பெடுக்கும். இதனை வென்றெடுக்க வேகமாக்க வேண்டிய பொறுப்பு ஈழத்தில் வதியும் மக்களிடம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழர்களின் கைகளிலேயுமே தங்கியுள்ளது.

 நடந்த சம்பவங்களை மனதில் நிறுத்தி, பட்ட துன்பங்களை படிக்கல்லாக மாற்றி தமிழீழத்தை கட்டியெழுப்பி, அதனை பிரசுரிப்பதுவே அனைத்து தமிழர்களின் தலையாய பணி.


ததேகூட்டமைப்பைப் தோற்கடித்துவிட்டால் தமிழ்மக்களை அடக்கி ஆளுவது எளிதாகிவிடும் என சிங்கள - பவுத்த இனவாத அரசு நினைக்கிறது!

நக்கீரன்

சிங்கள அரசினால் தள்ளிவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் எதிர்வரும் யூலை 23 நடைபெற இருக்கிறது. தள்ளிவைக்கப்பட்ட மொத்த 67 உள்ளாட்சி சபைகளில் 64 உள்ளாட்சி சபைகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் 30 இலட்சம் வாக்காளர்கள் கலந்து கொள்ளத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 சபைகள், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 சபைககள், திருகோணமலை மாவட்டத்தில் 4 சபைகள், அம்பாரை மாவட்டத்தில் 2 சபைகள் ஆக மொத்தம் 26 உள்ளாட்சி சபைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்த்தில் 3 நகரசபைகள் (வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி) 13 பிரதேச சபைகள் இருக்கின்றன.

கடந்த மார்ச்சு மாதம் 17 ஆம் நாள் 234  சபைகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் கட்சி 205 சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12 சபைகளிலும் அய்க்கிய தேசியக் கட்சி 7 சபைகளிலும் வெற்றிபெற்றன.

வட - கிழக்கு மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தம் 26 உள்ளாட்சி சபைக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஆளும் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டி போடுகிறது.  வட - கிழக்கில் நடந்து முடிந்த ஆட்சித்தலைவர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் பலத்த அடிவாங்கிய ஆளும் கட்சி இந்தத் தேர்தலில் எப்படியும் வென்றுவிட வேண்டும் என சபதம் எடுத்துள்ளது. வடக்கில் தேர்தல் பரப்புரைக்குத்  தேர்தல் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் சிங்கள அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை அரசு களம் இறக்கியுள்ளது.   பொருளாதார  மேம்பாட்டு  அமைச்சர் பஸில் இராசபக்சே,  நாமல் இராசபக்சே, அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், சுசில்பிரேமஜெயந்த, மைத்திரபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, திஸ்ஸ கரலியத்த, ஜகத் புஸ்பகுமார, மஹிந்தானந்த அளுத்கமகே,  துணை அமைசர்  ஹிஸ்புல்லா ஆகியோருடன் ஆளும் கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்தில் முகாம் இட்டுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்பாண தேர்தல் மாவட்டம் ஆறு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு 19 சபைகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் துணை  அமைச்சர்களும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம்  வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிறு (யூலை 03  காலை  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும்,  ஆட்சித்தலைவர்  மகிந்த இராசபக்சேயின் உடன்பிறப்புமான பஸில் இராபச்சே "பன்னாட்டுச் சமூகத்துக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் எமது அரசுடன் தான் இணைந்திருக்கின்றார்கள் என்பது தான் அது. இதற்காக நாம் உள்ளாட்சிச் சபைத் தேர்தலில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும்"  எனப் பேசியுள்ளார்.

பஸில் இராசபக்சே தொடர்ந்து பேசுகையில் " ஆட்சித்தலைவர்  மகிந்தவின் வெற்றிக்காக வடமாகாண மக்கள் அதிகம் வேலை செய்யவில்லை. அதன் பின்னர் இடம் பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சியால் யாழ்ப்பாண  மாவட்டத்தை வெற்றி கொள்ள முடியாமல் போய்விட்டது. இருப்பினும் ஆட்சித்தலைவர்  வட பகுதி மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றார். பலாலி விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றப்பட இருக்கின்றது. அத்துடன் காங்கேசன்துறைத் துறைமுகம் பன்னாட்டுத் தரத்துக்கு உயர்த்தப்படவுள்ளது" என்றார். அத்தோடு நிறுத்தாமல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் நிறுவப்படும்  யாழ்ப்பாண மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள்,  துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சே  ஏதோ தன் வீட்டுப் பணத்தில் மேம்பாட்டு வேலைகளைச் செய்யப் போகிறார் என்ற மாயையை பஸில் இராசபக்சே விதைக்க முனைந்துள்ளார். பலாலி பன்னாட்டு விமான நிலையமாக மாற்றப்படும் காங்கேசன்துறைத் துறைமுகம் பன்னாட்டுத் தரத்துக்கு உயர்த்தப்படும் என சிங்கள அரசு பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறது.  ஆனால் அது நடந்தபாடாகக் காணோம்.

அமைச்சர் பஸில் இராசபக்சேயிடம் வடமாகாண நிருவாகம் கையளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. அங்கு அவர் வைத்ததே சட்டம். அவர் நினைத்ததே நடக்கும்.  அரசின் எடுபிடி டக்லஸ் தேவானந்தாதான்  யாழ்பாணத்தின் இளவரசர் என ஒருமுறை அவரைப் பாராட்டியுள்ளார்.   அரசுக்கு ஆசைப்பட்டு அண்ணன் இராவணனை இராமனுக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் மாதிரி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு இராசபக்சேக்கு தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து வருபவர் டக்லஸ் தேவானந்தா.   மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் இணைப்பாட்சி அன்றும் என்றும் பிரிக்க முடியாத ஒன்றிணைந்த வட - கிழக்கு என்று தொடை தட்டிய டக்லஸ் தேவனந்தா அவற்றை எல்லாம் கைவிட்டு இன்று தொடைநடுங்கிக் கொண்டு இருக்கிறார்.  தேர்தலில்  தனது சொந்தக் கட்சியில் போட்டியிடக்  கூடாது என்று சிங்கள எசமானர்கள் காலால் இட்ட தடை உத்தரவை தலையால் செய்து முடித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே வழக்கத்தைவிட இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி ஆட்பலம், பணபலம், அதிகார பலம், இராணுவ பலம் ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.

ஆளும் சிங்கள பேரினவாதிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரிய அறைகூவலாக இருக்கிறது.  அதனைப் பஸில் இராசபக்சே ஒளிவுமறைவின்றிச் சொல்லியிருக்கிறார்.  "அரசைக் குழப்பும் கட்சிகளாக தெற்கில் ஜேவிபியும்  வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இருக்கிறதாகவும் அவை இரண்டும் அரசின் செயற்பாடுகளைக் குழப்பியடித்து வருகின்றன.  இவர்கள் எம்மீது ஏதாவது குறைகளைக் கூறிக் கொண்டேயிருப்பார்கள். எதைச் செய்தாலும் செய்யாத ஒன்றை வைத்து சிக்கலை உண்டு பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் என்று தொடங்கிவிடுவார்கள். எனவே, இவர்களையெல்லாம் வீழ்த்தி நாம் இந்தத் தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற்றேயாக வேண்டும் பன்னாட்டு  சமூகத்துக்கு வட பகுதித் தமிழ் மக்கள் எங்களுடன்தான் நிற்கின்றார்கள் என்பதை எடுத்துக் கூறவேண்டும்" என்ற ஆசையை பஸில் இராசபக்சே வெட்கத்தை விட்டுச் சொல்லியிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தின் அளவெட்டி சைவ மகாஜன சபை மண்டபத்தில்  16 ஆம் நாள் உள்ளாட்சித் தேர்தல் பற்றி யோசிக்க ததேகூ ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.  அதில் வரும் யூலை 23 ல் இடம்பெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் வேட்பாளர்கள்  அறிமுகப்படுத்தப்பட இருந்தார்கள்.   யாழ் மாவட்டத்தின் கூட்டமைப்பு  நா.உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சரவணபவன், சிறீதரன், சுமந்திரன் ஆகியோர்  அதில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சரவணபவன் பேசிக்கொண்டு இருக்கும்போது சிங்கள இராணுவத்தினர் ஆயுதங்களோடு திடீரெனப் புகுந்தனர். இராணுவ உடை தரித்த அந்தக் கும்பல் இரும்புக் கம்பிகள், மண் வெட்டிப் பிடிகளைப் போன்ற குண்டாந்தடிகளால் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றிக் கடுமையாகத் தாக்கியது.  நா.உறுப்பினர்களது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். செய்தியாளர்களைத் தாக்கி அவர்களின் அடையாள அட்டைகளைப் பறித்து, புகைப்படக் கருவிகளைப் பிடுங்கி அட்டகாசம் செய்தனர். இந்தத் தாக்குதல் தற்செயலாக நடந்தது அல்ல. முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டது ஆகும்.

யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கா தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவத்தினரே அல்ல என்றார். அப்படியான  நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை என்றார். ஆனால் முதலில்  மறுத்த அரசு இப்போது இராணுவத்துக்கும் காவல்துறைக்கும் இடையில்தான் சிறு மோதல் நடந்தது வேறொன்றும் நடைபெறவில்லை என்று நாடாளும் தலைவர் மகிந்த இராசபக்சே கூறியுள்ளார்.   மக்களால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு இல்லை என்றால்  தமிழ்ப் பொது மக்களைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. 

வடக்கில்  மிதப்பில் இருக்கும் இராணுவத்தினரே சகலவற்றையும் தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.  மக்களது அசைவு ஒவ்வொன்றும் வேவு பார்க்கப்படுகிறது.  விளையாட்டுப் போட்டியாக இருக்கட்டும்,  திருமணமாக இருக்கட்டும், கோயில் திருவிழாவாக இருக்கட்டும்  அவற்றில் இராணுவம் தலையிடுகிறது.  அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் சிங்களத்தில் மட்டுமே தேசிய பாடல் பாடவேண்டும் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய இராசபக்சே கட்டளை பிறப்பித்துள்ளார். இதற்குப் பயந்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் இராணுவத்துக்கு அழைப்பு விடுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. இராணுவத்தின் விருப்பு வெறுப்பின் படியே அங்கு யாரும் எதையும் செய்ய முடியும்.  சனநாயகம், சுதந்திரம், இயல்பு வாழ்வு என்பது கானல் நீராகவே காணப்படுகிறது.

வி.புலிகளுக்கு இராணுவத் தீர்வு தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு என்று போர்க்காலத்தில் கூறிய மகிந்த இராசபக்சே இப்போது 13 ஆவது சட்ட திருத்தம் வழங்கும் காணி மற்றும் காவல் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.

ததேகூட்டமைப்போடு பேசிக்கொண்டே அரசியல் தீர்வு குறித்து ஆராய மகிந்த இராசபக்சே ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்க உள்ளார்.  இரண்டு ஆண்டு காலம் 128 முறை கூடி அனைத்துக் கட்சிக் குழு சமர்ப்பித்த அறிக்கையை அவர் குப்பைத் தொட்டியில் ஏற்கனவே வீசிவிட்டார்.

வடக்கில் வசந்தம் என்பது வெறும் கண்துடைப்பு. அங்கே அனல் காற்றுத்தான் வீசுகிறது. இந்த வடக்கில் வசந்தம் அமைப்பில் இருக்கும் 18 உறுப்பினர்களில் 17 பேர் சிங்களவர். எஞ்சிய ஒருவர் முஸ்லிம்.  இந்த அமைப்பில் வால்பிடி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுக்குக் கூட இடமில்லை என்பது பெரிய சோகம்!

இப்போது அய்யன்னா மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் விடுத்துள்ள அறிக்கையின் படி போர் முடிந்தபின்னர் இடம்பெயர்ந்த 110,652  குடும்பங்கள் (365,082 பேர்) வட மாகாணத்துக்குத் திரும்பியுள்ளன.  இந்தக் குடும்பங்கள்  ஏப்ரில் 2008 க்கு முன்னரும் பின்னரும் இடம்பெயர்ந்தவர்கள்.  ஏப்ரில் 2008 க்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை  45,024 (157,269 பேர்) ஆகும்.  ஏப்ரில் மாதத்துக்குப் பின்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களில் 5,284  குடும்பங்கள் (17,488 பேர்)  இன்னமும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றன. அதே போல் ஏப்ரில் மாதத்துக்கு முன்னர் இடம் பெயர்ந்த 2,360 குடும்பங்கள் (8,521 பேர்)  இன்னமும்  நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றன.  இடம்பெயர்ந்த மொத்தம் 189,221  பேர் உறவினர்களோடு தங்கியிருக்கின்றனர். (The Island - June 27, 2011)

கிளிநொச்சி மாவட்டத்தில் நாளும்  நான்கிற்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர்களில் அதிக அளவிலானோர் கைம்பெண்கள்  மற்றும் கணவன்மார் காணமல் போய்த் தனிமையில் வாழும் பெண்களே என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை உளநல மருத்துவர் மா.ஜெயராசா தெரிவித்துள்ளார். சமூகப் பாதுகாப்பின்மை, பொருளாதார நெருக்கடிகள் இதற்கான முக்கிய காரணிகளாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளை மனநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் கணிசமானளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது 500 வரையான மனநோயளிகள் இருப்பதாகவும் அவர்களில் அதிகமானோர் பெண்கள், சிறார்கள் போன்றோரே. இவர்களில் பலர் யுத்தத்தில் தமக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்கள். வசதிகள் பற்றாக்குறையாக இருக்கின்ற போதும் இயலுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிதுள்ள மருத்துவர் எல்லோரும் ஒன்றிணைந்து இவற்றிற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.  கிளிநொச்சியில்   பள்ளிக்கூடம் பாடசாலை செல்லாத சிறார்களும் அதிகளவில் காணப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில்  போருக்குப்  பின்னர் சமூகவிரோத மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகளும் அதிகரித்துக் காணப்படுவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட  துணை  காவற்றுறை மா அதிபர் நீல் தலுவத்த தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த சமூகச் சிக்கல்கள் காணப்படுவதாகவும் சிறுவர்  கெடுக்கப்படுவது,  குடும்பச் சிக்கல்கள், காணித் தகராறுகள் எனப் பல சிக்கல்கள் காணப்படுவதுடன் நாளுக்குநாள் கிளிநொச்சி மாவட்டத்தில் காவல்துறை நிலையங்களில் பொதுமக்கள் அடிக்கடி சிக்கல்களுடன் வந்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த யூன் மாதம் 26 ஆம் நாள் வலிகாமம்  புத்தூர் பொதுமைதானத்தில் ஒரு இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவர் ஒரு  முன்னாள் போராளி எனத் தெரிவிக்கப்படுகிறது. பாலச்சந்திரன் சற்குருநாதன் (வயது – 30) என்பவரே ஞாயிற்றுக்கிழமை காலை மேற்படி சடலமாக மீட்கப்பட்டவர். மயிலிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் அச்சுவேலி தோப்புப் பகுதியில் இடம்பெயர்ந்து வசித்து வந்ததார்.

இவர் கடத்திச் செல்லப்பட்டு  பின்னர்  படுகொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அவரது கைவிரல் நிகங்கள் புடுங்கப்பட்டுள்ளன.  ஏற்கனவே கடந்த 2  ஆண்களுக்கு முன்னர் இவர் இதே பகுதியில் வைத்துக் கடத்தப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடாநாட்டில் இராணுவத்தினருக்கு எதிராக நடந்த தாக்குதல் சம்பவங்களில் இவர் தொடர்பு பட்டிருந்தார் எனவும் அப்போது இவர் இதே பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட பின்னர் இவர் தப்பிச்சென்று கொழும்பில் மறைந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.

சடலத்தைப் பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி சடலம் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது எனத்  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக வாக்குமூலம் அளித்த இறந்தவரின் தந்தை தனது மகனுக்கு காவல்  குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரால் அச்சுறுத்தல் இருந்தது என்று கூறியுள்ளார்.

இது போலவே  கடந்த மே 22 அன்று முன்னாள் பெண் போராளி ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். புன்னாலைக்கட்டுவான் ஈவினை கிழக்கைச் சேர்ந்த ரி.லாவண்யா (21 வயது) என்ற பெண்பிள்ளையே சடலமாக மீட்கப்பட்டவர்.

அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தில் தற்கொலைகளும் தற்கொலை போன்று மர்மமான முறையில் சடலங்களும் மீட்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதே சமயம் ததேகூட்டமைப்பை   ஆட்சித்தலைவரோ அரசோ தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக எவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை என அய்க்கிய  மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் எதிர்க்கட்சிகள் அச்சம், பயமின்றி சுதந்திரமான முறையில் தேர்தல் பரப்புரைப்  பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் என்று கபே  (Campaign for Free and Fair Elections (CaFFE) என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது. வடக்கில் முன்னெடுக்கப் படுகின்ற தேர்தல்  ரப்புரைத்  தொடர்பிலும் கபே அமைப்பின் கண்காணிப்பு செயற்பாடுகள் குறித்தும் கருத்துத் தெரிவிக்கையிலேயே கபே அமைப்பின் தேசிய இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிரணியினரால் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை சுதந்திரமான முறையில் முன்னெடுக்கமுடியாதுள்ளது. அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள் மட்டுமின்றி உள்ளகக் கூட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலைமையே இன்றிருக்கின்றது.

வழக்கமாக இனவாதம் கக்கும் அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகள் "வடக்கைப் பொறுத்தவரை அந்த மக்களின் சிக்கல்கள்  இன்னமும் தீர்த்து வைக்கப்படவில்லை. எமக்கும் வட பகுதிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நான் அவர்களது குறைபாடுகளைப் பற்றி அறிந்துள்ளேன். அதுபற்றி  நாம் தொடர்ச்சியாக அரசுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.  ஆனால் எமது கருத்துகள் எதையும் அரச தரப்பினர் கேட்பதாக இல்லை. வடக்கு மக்கள் மீது கூடிய  அக்கறை செலுத்தி அந்த மக்களின் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்குமாறு நாம் ஆட்சித்தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு செயற்படாமல் விட்டால் எதிர்காலத்தில் மேலும் சிக்கல்கள் உருவாக இடமுள்ளது. வடக்கில் முன்னைய சூழல் மீண்டும் உருவாகும்" எனக் கூறியுள்ளார்கள். ஆனால் அரசு செவி சாய்ப்பதாக இல்லை.

வடக்கும் கிழக்கும் இராணுமயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல், பண்பாட்டுச் சீரழிவுகள்,  பொருளாதாரச் சிதைவுகள், அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் ததேகூ மட்டுமே குரல் எழுப்பி வருகிறது. அதனை முறியடிக்க சிங்கள அரசு கடுமையாகப் பாடுபடுகிறது.  அதன் வெளிப்பாடாகவே எப்பாடு பட்டும் வடக்கில் ததேகூட்டமைப்பை தோற்கடித்து உள்ளாட்சி சபைகளை கைப்பற்றிவிட வேண்டும் என சிங்கள - பவுத்த இனவாத அரசு தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

ததேகூட்டமைப்பைப் தோற்கடித்துவிட்டால் தமிழ்மக்களை அடக்கி ஆளுவது எளிதாகிவிடும் என சிங்கள - பவுத்த இனவாத அரசு நினைக்கிறது!

கடந்த தேர்தல்களில் எமது மக்கள் எதற்கும் விலை போக மாட்டார்கள்,  எந்தப் பயமுறுத்தலுக்கும் அடிபணிய மாட்டார்கள் என்பதைத் துலாம்பரமாகக் காட்டியுள்ளார்கள். இந்தத் தேர்தலிலும் எமது மக்கள் சிங்கள - பவத்த இனவாதத்தைக் கக்கும் மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படும் அதன் தலைவர் மகிந்த இராசபக்சேக்கும் செமபாடம் புகட்டுவார்கள் என்பதில் அய்யமில்லை. (June,2011)

 


 

June 06, 2011

 

Toronto

 

Hon. Rathika Sitsabeisan, MP.

Scarborough Roughe –River riding,

Ottawa.

 

UN Experts Panel has concluded that credible allegations that Sri Lankan government committed serious international human rights and humanitarian law

 

Dear Hon. Rathika,

 

I am a member of your constituency living in 56, Littles Road, Scarborough, Ontario.

 

I am a Canadian citizen and a social and human rights activist in the Tamil community with close links to Sri Lanka. I have kith and kin  there and I am deeply troubled by recent events in that  country. In light of this, I wanted to raise with you the issue of the United Nations Panel of Experts report on Sri Lanka and to ask   you  to raise this subject  in Parliament on my behalf.

Government forces declared victory over the rebel LTTE in May 2009 after a conflict that had raged on and off for nearly three decades and killed thousands of people. The conflict ended with about 320,000  Thamils living as internally displaced persons (IDPs), especially in Vanni north of the island country.

The panel found credible allegations that comprise five core categories of potential serious violations committed by the Government in the final stages of the conflict, including killing of civilians through widespread shelling and the denial of humanitarian assistance.

The panel’s first recommendation is that the Government of Sri Lanka should respond to the serious allegations by initiating an effective accountability process beginning with genuine investigations.

“The Secretary-General has consistently held the view that Sri Lanka should, first and foremost, assume responsibility for ensuring accountability for the alleged violations,” said the statement, adding that he encourages the Government to respond constructively to the recommendations made by the panel.

Significantly during the 17th Session of the Human Rights Council currently taking place in Geneva, extended footage of the execution video obtained by Channel 4 News UK has been analysed by the UN Special Rapporteur on extra-judicial killings, Christof Heyns, who has stated that this evidence amounts to “definitive war crimes”.

 

A Channel 4 news television documentary, Sri Lanka’s Killing Fields, will be broadcast on the 14th June at 11:05pm (BST) in the UK. The one-hour programme looks set to include footage not previously broadcast, as well as a shocking video of summary execution and rape-murder which Channel 4 News has already aired (the video was denounced by the Sri Lankan government as a fake, and later authenticated by UN experts). The film was screened in Geneva on the 3rd June at an event hosted by Amnesty International. The video further intensifies the need for truth and justice in Sri Lanka.

 

The UN Panel’s report published in April 2011 states that tens of thousands of innocent civilians lost their lives, during the final months of Sri Lanka’s civil war in 2009 (a link to the full report can be found here: http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf). The Panel’s recommendation to the UN Secretary General, Ban Ki-moon, was to immediately proceed to establish an independent international accountability mechanism in Sri Lanka.

 

Accountability for crimes against humanity is a duty under international law. Given that the Sri Lankan Government  is in a denial mode dismissing the UN report as “fundamentally flawed”,  and Channel 4 News as “illegible” I do not believe that a proper process of accountability will be forthcoming from within Sri Lanka.

 

Therefore, I would be very grateful if you, as my  Member of Parliament, will raise these issues with the Canadian government and the Prime Minister during question time.  I believe Canadian parliamentarians and the Canadian Government can  play a crucial role in ensuring truth, justice and, ultimately reconciliation in Sri Lanka.  Thank you for your help on this matter and I look forward to hearing from you.

 

Yours sincerely,

 

 

 

 

Veluppillai Thangavelu


யானை இருந்தாலும் ஆயிரம் பொன்  செத்தாலும் ஆயிரம் பொன்

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தப் பழமொழி பொருந்தும்.

நடந்து முடிந்த தேர்தலில் நூறுக்கும் அதிகமான உறுப்பினர்கள் தோற்றுப்போனார்கள். பாவம் அவர்கள் நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள் என்று யாரும் நினைத்தால் அது தப்பு. இருக்கவே இருக்கிறது அவர்களுக்கே சொந்தமான ஓய்வு ஊதியம்.

புளக் கியூபெக்வா தலைவர் கில்ஸ் டுசெப்பே (63) தனது லோறியர் சென்ட் மேரி தொகுதியில் தோற்றுப் போனார். பருவாயில்லை அவருக்கு ஆண்டொன்றுக்கு 140,765 டொலர் ஓய்வூதியம் இருக்கவே இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு மாலோகமாக வாழலாம்.

எக்லின்டன் - லோறன்ஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோ வோல்ப்பே (63) யின் ஓய்வூதியம் 119,320 டொலர். வாழ்நாள் ஓய்வூதியம் 3.30 மில்லியன் டொலர்.

பீட்டர் மிலிக்கன் (64) ஆண்டு ஓய்வூதியம் 102,392 டொலர். வாழ்நாள் ஓய்வூதியம் 3.88 மில்லியன்.

கேயித் மாட்டின் (50) ஆண்டு ஓய்வூதியம் 120,392 டொலர். வாழ்நாள் ஓய்வூதியம் 2.49 மில்லியன்.

பீட்டர் மிலிக்கன் (64) அவைத்தலைவர் இவரது ஓய்வூதியம் 147,316 டொலர். வாழ்நாள் ஓய்வூதியம் 3 மில்லியன்.

லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்நேட்டிவ்தான் பாவம். அவருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. காரணம் அவர் 6 ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை. அதனால் என்ன? வேலை நீக்கத்துக்கான 116,624  டொலர் வழங்கப்படும்.

தேர்தலில் தோற்றவர்கள் அல்லது தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கினவர்கள் ஆகியோருக்கு ஓய்பவூதியமாக 4.9 மில்லியன் டொலர் கொடுக்கப்படும்.

இந்தத் தேர்தலில் புளக் கியூபெக்குவா கட்சியைச் சேர்ந்த 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோற்றுப் போனார்கள். அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் (சராசரி 80 அகவை) கொடுக்கப்படும் ஓய்வூதியம் 38 மில்லியன் டொலர்!

மத்திய  அரசிலும் மாகாண அரசிலும் உறுப்பினராக இருந்த உஜல் டோசன் ஒட்டாவிடம் இருந்து ஓய்வூதியமாக 40,197 டொலர்களும் மாகாண அரசிடம் இருந்து 35,000 டொலர்களும் ஆண்டுதோறும் பெற்றுக்கொள்வார்.

கனடா ஓய்பவூதியத்துக்கு 30 விழுக்காடு கனடியர்களே தகுதி பெறுகிறார்கள். அவர்கள் பெறும் தொகை? ஆண்டொன்றுக்கு சராசரி 6,000 டொலர் மட்டுமே!

அடியேனுக்குக் கிடைக்கும் ஓய்வூதியம ஆண்டொன்றுக்கு 1,200  டொலர்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஓய்வூதியத்தை தாங்களே தீர்மானிக்கிறார்கள். சம்பளத்தையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். இதில் கட்சி வேறுபாடு இல்லை. எனவே முதலில் தங்களைக் கவனித்துக் கொண்டுதான் மற்றவர்களைக் கவனிக்கிறார்கள்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஆண்டு ஊதியம் 157,731 டொலர். ஆனால் தலைமை அமைச்சர், அமைச்சர், அவைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், கட்சித்தலைவர்கள் போன்றோருக்கு மேலதிக ஊதியம் கொடுக்கப்படுகிறது.

பதவி ஊதியம் மேலதிக ஊதியம் மொத்தம்
நாடாளுமன்ற உறுப்பினர் 157,731   157,731
தலைமை அமைச்சர் 157,731 157,731 315,462
அவைத்தலைவர் 157,731 75,516 233,247
எதிர்க்கட்சித் தலைவர் 157,731 75,516 233,247
அமைச்சர் 157,731 75,516 233,247
துணை அமைச்சர் 157,731 56,637 233,247
கட்சித் தலைவர்கள் 157,731 53,694 211,425
அரச விப் 157,731 28,420 186,151
எதிர்க்கட்சி விப் 157,731 28,420 186,151
ஏனைய கட்சி விப்ஸ் 157,731 11,165 186,151
நிலைக்குழுத் தலைவர் 157,731 11,165 168,896
அரசகட்சிக் குழுத் தலைவர் 157,731 11,165 168,896
எதிர்கட்சிக் குழுத் தலைவர் 157,731 11,165 168,896
ஏனைய கட்சிக் குழுத் தலைவர்கள் 157,731 5684 163,415
       
 

 

கருணாநிதி தேர்தலில் தன்மானத்தோடு மணிமுடியையும் இழந்து கோவணத்தோடு நிற்கிறார்!

நக்கீரன்

 

மிழ்நாட்டில் எந்தவொரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டு வெல்ல முடியாது. 1967 தொடக்கம் முக்கிய கட்சிகளாக விளங்கும் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு வருகின்றன.  எனவே  தேர்தலின் முடிவை பெரும்பாலும் கூட்டணி பலமே தீர்மானிக்கிறது.

மேலும் தேர்தல் முடிவை ஒன்றோ இரண்டோ காரணிகள் தீர்மானிப்பதில்லை. மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளின் அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் பல காரணிகள் தேர்தல் முடிவைப் பாதிக்கலாம் என அடையாளம் காணப்பட்டன. திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தியதாகச் சொல்லப்படும் காரணிகள்!

* 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். அது குறித்த மக்களின் விழிப்புணர்வு.

* படித்தவர்கள் மத்தியில் குடும்ப அரசியல் நடத்தும் கருணாநிதி மீதான வெறுப்பு.

* திரைப்படத்தில் கருணாநிதி குடும்பம் செலுத்தும்  ஆதிக்கம்.

* ஈழச் சிக்கலில் கருணாநிதியின் ஏனோ தானோ என்ற செயல்பாடு.

* ஓயாத மின் வெட்டு.

* ஊழல். பணம் கொடுக்காமல் எதையும் பெறமுடியாது என்ற கையறு நிலை.

* கடுமையான விலைவாசி உயர்வு.

* சட்டம் ஒழுங்கு சீர்குலைவு.  காடையர்களின் அட்டகாசம். ஒரு கொலைக்கு பத்தாயிரம் கொடுத்தாலே போதும். 

* தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இதனால் திருமங்கல சூத்திரம் வேலை செய்யவில்லை.

* தமிழ்த் தேசியவாதிகள்  காங்கிரசைக் கருவறுப்போம் என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியது.  

இப்போது இவை ஒவ்வொன்றையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

2ஜி ஸ்பெக்ரம்

2ஜி ஸ்பெக்ரம் ஊழல் பற்றிய தார்ப்பரியங்கள்  மக்களுக்கு ஆழமாகத் தெரியாவிட்டாலும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருக்கிறது என்பதை நகர வாசிகள் மட்டுமல்ல  ஊர்வாசிகளும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். முன்னர் போல் அல்லாது தொலைக்காட்சி இப்போது சிற்றூர், பேரூர் என்று எங்கும் பரவிவிட்டது. மேலும் படித்தவர்களது விழுக்காடு அதிகரித்து வருகிறது. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வாக்காளர்களைவிட இன்று வாக்காளர்கள் விபரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆ.ராசாவின் ஊழல் நடவடிக்கைகளால் 50 ஆயிரம் கோடி நாட்டுக்கு நட்டம் என்று சிபிஅய் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவிடம் வாக்குமூலம் வழங்கியது. மத்திய அமலாக்கப் பிரிவும் புலனாய்வுத் துறையும், ஆ.ராசா 3000 கோடி கையூட்டு  பெற்றிருப்பதாகக் கண்டுபிடித்தன. முழுத்தேமும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஆழம் கண்டு அதிர்ந்துபோனது. எனவே கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பயன்பெற்ற வடநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வந்த பணம் கையூட்டுப் பணம் என்றே மக்கள் நினைத்தார்கள். முன்னாள் அமைச்சர் ஆ. இராசா பிடிபட்ட போதுதான் அந்தப் பணம் கடனாகப் பெறப்பட்டது என்றும் வட்டி விழுக்காட்டில் முரண்பாடு எழுந்ததால் முதலை வட்டியோடு (31 கோடி) திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கருணாநிதியும் கனிமொழியும் சொன்ன கதையை மக்கள் நம்பவில்லை. எனவே ஊழலில் சிக்கிய கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள்.

குடும்ப அரசியல்

திமுகவின் வீழ்ச்சிக்கு கருணாநிதி நடத்திய குடும்ப அரசியலும் தன் பங்களிப்பைச் செய்தது. கருணாநிதியின் குடும்பம் முழுவதும் தகுதி இல்லாமல் இரவோடு இரவாகப் பிரபலங்கள் ஆனார்கள். கட்சிக்கு ஆண்டுக் கணக்காக உழைத்த பல மூத்த அரசியல்வாதிகள் இருந்தும் திமுக வின் அடிப்படை உறுப்புரிமை வைத்திராத கனிமொழி மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுப்பவர்கள். ஒரு மகனோ அல்லது ஒரு மகளோ வாரிசு அரசியலில் ஈடுபட்டிருந்தால் அதை மக்கள் பெரிதாக எடுத்திருக்க மாட்டார்கள். னால் மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள், மருமகன்கள் என்று எல்லோரும் ஊடக வெளிச்சத்தில் தெரிந்தபோது கருணாநிதி குடும்பத்துக்குப் பெருமையாக இருந்தது.  ஆனால் மு. க. அழகிரி ஒருபுறம், முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் ஒருபுறம், கனிமொழி இன்னொருபுறம் என்று குடும்ப ஆட்சி கொடிகட்டிப் பறந்ததைப் பார்த்த மக்கள் முகம் சுளித்துக்கொண்டார்கள். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரி ஆதரவாளர்கள் என இரு கன்னைகளாகப் பிளவு பட்டிருந்தது கட்சியைப் பலவீனப்படுத்தியது.

மொத்தம் 301  கோடியே 76 இலட்சம் செலவழித்து நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிலும் கருணாநிதி குடும்பமே மையப்படுத்தப்பட்டது.   அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 84 பேர்களுக்கு முன்வரிசை இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.  அதில் கலந்து  கொண்டவர்கள் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் வானளாவப் புகழ்ந்து தள்ளினார்கள்.  கனிமொழி எழுதி வெளியிட்ட கவிதை நூல் பற்றி இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டது.  

கட்டுரை படித்தவர்கள் சரி, கவிதை படித்தவர்கள் சரி எல்லோருமே தமிழைப் பாடாமல் கருணாநிதி புகழ் பாடினார்கள்! செவியிரண்டும் கிழிந்து போகும் அளவுக்கு பலரும் கருணாநிதி போற்றி பாடினார்கள். வைரமுத்து, வாலி, விஜய், தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன், நா.முத்துக்குமார், மு.மேத்தா, பழனிபாரதி, தணிகைச் செல்வன், கயல்விழி, உமா மகேஸ்வரி, தமிழ்தாசன், அப்துல் ரகுமான், வா.மு.சேதுராமன்   எனக்  கூழுக்குப் பாடும் ஒரு கவிஞர் பட்டாளம் கருணாநிதிக்குப் பாமாலை பாடிப் புகழ்மாலை சாத்தியது.  குறிப்பாக  கவிஞர் வைரமுத்து, வாலி, மேத்தா, விஜய் போன்றோர் கருணாநிதியைப் பாராட்டு மழையில் தோய்த்து எடுத்தார்கள்! கலைஞருக்கு தமிழ் உலகம் நன்றி சொல்ல வேண்டும் கலைஞர்தான் மறுபடியும் முதல்வராக வேண்டும்  என்றார்  வைரமுத்து

திரைப்படத்துறையில் குடும்ப ஆதிக்கம்

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரின் சன் படத்தயாரிப்பு நிறுவனம் ஒரு பக்கம், அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் என்று திரைப்படத் தயாரிப்புத் துறையில் எங்கு பார்த்தாலும், முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரின் ஆட்சி தான். இவர்களைத் தாண்டி யாரும் நடிக்க முடியாது, படம் எடுக்க முடியாது போன்ற நிலைமை தமிழகத்தில்  நிலவியது எனலாம். ஆனால் கருணாநிதியோ "என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும் திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ?" என நொந்து கொண்டதோடு அதனை நியாயப்படுத்தினார். ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், ஏ.வி.எம். சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும், சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும், ரஜினி, அவரது மகள் அய்ஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே ஈடுபட்டிருப்பதும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும்  அந்த நெஞ்செரிச்சில்காரர்களுக்குத் தெரியாமல் போனது  வேடிக்கை என்றார்.
 
 ஈழச் சிக்கலில் கருணாநிதி

கருணாநிதி எதைச் செய்தாலும் தனக்கோ தனது கட்சிக்கோ அதனால் என்ன இலாபம்? என்ன இழப்பு? என்பதைக் கணக்குப் பார்த்துத்தான்  செய்வார்.  ஈழச் சிக்கலிலும் இதுதான் நடந்தது. எண்பதுகளில் தமிழீழ ஆதரவு அமைப்பை உருவாக்கி பெரியளவில் மாநாடொன்றை மதுரையில் நடத்திக் காட்டினார். அதில் வாஜ்பாய் உட்பட பல வடநாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஈழச் சிக்கலைக் கையில் தூக்குவதும் ஆளும் கட்சியாக மாறியவுடன் அதனை அமுக்கி விடுவதும் அவரது உத்தியாக இருந்து வந்தது.  ஈழம்பற்றி நேரத்துக்கொரு கதை கருணாநிதி சொல்வார்.  ஒரு நாளைக்கு ஸ்லோவக்கியா - செக் நாடுகள் போல் பிரிவதுதான் ஈழச் சிக்கலுக்குச் சரியான தீர்வு என்பார். அடுத்த நாள் ஈழப் போராட்டம் தோல்வி அடைந்ததற்குச் சகோதர யுத்தம்தான் காரணம் என்பார்.  "நான் ஈழத்தமிழர்களுக்காக இரண்டுமுறை ஆட்சியை இழந்திருக்கிறேன்" என்பார்.  2008 ம் ஆண்டு நொவெம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, அமெரிக்க துணைத் தூதர் ஆண்ட்ரூ சிம்கின் பெயரில் ஒரு கடிதம் போனது. அதில் தயாநிதி  மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் பேசியதைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாகத் தனது கட்சி மத்திய அமைச்சர்கள் விலகுவர்கள் என  கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுச் சிக்கல்  அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்தார் என தயாநிதிமாறன் துணைத் தூதரிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.

 ஓயாத மின் வெட்டு

ஓயாத மின்வெட்டினால் தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், பொதுமக்கள் அவதிப்பட்ட போது திமுக அரசு அவற்றுக்கு உரிய தீர்வு காண எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மின்சக்தி அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியை  மாற்றி இன்னொருவருக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கலாம். அண்டை மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற முயற்சி செய்திருக்கலாம்.  இதில் எதையும் கருணாநிதி அரசு செய்யவில்லை. மாறாக மின் தட்டுப்பாட்டுக்கு முன்னைய அதிமுக தான் காரணம் என்று சொன்னார். இதனை மக்கள் ஒப்பவில்லை.

 கையூட்டுக் கொடுக்காமல் எதையும் பெறமுடியாது என்ற கையறு நிலை

ந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கையூட்டுக் கொடுக்காமல் எதையும் செய்ய முடியாது என்ற கையறு நிலை உள்ளது. அரச அலுவலங்களில் சிறிய  அலுவலை முடிக்க வேண்டும் என்றாலும் அரச ஊழியர்கள் பகிரங்கமாகக் கையூட்டுக் கேட்பது எழுதாத விதியாக இருந்தது. காவல்துறையைக் கேட்கவே வேண்டாம்.  சட்டத்தை மீறி நடப்பவர்களிடம் இருந்து மாதாந்தம் மாமூல் வாங்கும் காவல்துறையினர் அதனை உயர் அதிகாரிகளோடு பங்கு போட்டுக் கொள்கிறார்கள். எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் பணிசெய்தால் அதிகளவு பணத்தைத் தேடலாம் என்று கணக்குப் பண்ணி அந்த மாவட்டம் அந்த ஊருக்கு பணிமாற்றம் எடுத்துக் கொள்வதை எல்லா மட்டத்திலும் உள்ள அரச ஊழியர்கள் வழக்கப்படி வைத்திருக்கிறார்கள். "இலஞ்சம் ஊழலுக்கு நான் நெருப்பு. இது என்னோடு பணிபுரிவர்களுக்குப் புரியும்" என்று வாயளவில் கருணாநிதி  வீரம் பேசினாலும் நடைமுறையில் அவர் கையூட்டு, ஊழல்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

கடுமையான விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு என்பது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது ஓரளவு உண்மைதான். கச்சா எண்ணெய் உலகச் சந்தையில் உயரும் போது உள்ளுரிலும் அதன் விலை உயரும் என்பது விதி. ஆனால் அதுபற்றிக் கருணாநிதி கொடுத்த விளக்கம் மக்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது. "ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறைவு" என்ற விளக்கம் மக்களிடம் எடுபடவில்லை. "வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது. அதனால் பொருட்களின் விலை அதகரித்துள்ளது" என அமைச்சர் ப.சிதம்பரம் கொடுத்த விளக்கம் மக்களது கோபத்தைக் கிளறியது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்பட்டது. கொலை, கொள்ளை சாதாரணமாக நடைபெற்றது. சீமான், தா. பாண்டியன் இருவரது மகிழுந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அதிமுக இலக்கிய அணித் தலைவர் பழ.கருப்பையாவின் வீட்டில் புகுந்த  காடையர்கள் அவரை சரமாரியாக அடித்தார்கள்.  வீட்டில் காணப்பட்ட பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டன. இதனை ஆளும் கட்சிக் குண்டர்கள்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. காவல்துறை விசாரணை நடத்தியதாகவும் தெரியவில்லை. காவல்துறை கருணாநிதியின் கையில் இருந்தும் அவர் பேசாமடந்தையாகவே இருந்தார். சென்னை நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையும் வழக்கறிஞர்களும் பயங்கரமாக மோதிக் கொண்டார்கள். வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. கருணாநிதி என்ன சொன்னார்? "காவல்துறையும் வழக்கறிஞர்களும் திமுக ஆட்சியைப் பொறுத்தளவில் இரு கண்கள் " என்று திரைப்பட வசனம் பேசினார்.  கருணாநிதியை சாணக்கியன் அப்படி இப்படி என்று புகழ்பாடுகிறார்கள். ஆனால் அவரது நிருவாகம் உப்புச் சப்பின்றி  இருந்ததாகவே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.  

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இதனால் திருமங்கல சூத்திரம் வேலை செய்யவில்லை

தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலில் சிறப்பாகச் செயற்பட்டு எல்லோரது பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டது. விதி விலக்கு கருணாநிதி. "தேர்தல் ஆணையம் அவசர காலம் போல் நடந்து கொள்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் நானா அல்லது தேர்தல் ஆணையரா என்ற அய்யம் எழுந்துள்ளது" இவ்வாறு  கருணாநிதி செய்தியாளர்களுக்குச் சொன்னார்.  வாக்காளர்களுக்குக் கொடுக்கக் கொண்டு போன 48 கோடி பணத்தைத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை. தேர்தல் விதிகளை மீறியதாக 55 ஆயிரம் வழக்குகளுமே இதற்குச் சான்று.

தமிழ்த் தேசியவாதிகள்  காங்கிரசைக் கருவறுப்போம் என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கினார்கள்  

ந்தத் தேர்தலில் திமுகவை விட காங்கிரஸ்தான் பலத்த அடி வாங்கியுள்ளது. காங்கிரஸ் சார்பில் 63 நாயன்மார்கள் போட்டியிட்டார்கள். அதில் 5 பேர்தான் கரை சேர்ந்தார்கள். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத ஒரே தேர்தல் இதுதான். இந்த அய்ந்து தொகுதிகளிலும்  இரண்டாவதாக வந்த பாராதிய ஜனதாக கட்சி வாக்குகளைப் பிரித்த காரணத்தாலேயே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைக் குறிவைத்துப் பரப்புரை செய்தது. அதன் காரணமாக கே.வி.தங்கபாலு,  இ.வி.கே.எஸ்.  இளங்கோவன், மணிசங்க அய்யர் தோற்கடிக்கப்பட்டார்கள். அமைச்சர் ப. சிதம்பரம் தோற்றுவிட்டார் என மதியம் அறிவித்துவிட்டு மாலை அவர் 3,000 + வாக்குகளால் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது. இம் முறை காங்கிரசை எதிர்த்து நாம் தமிழர் கட்சியும் களம் இறங்கியது. செந்தமிழன் சீமான் பேசிய கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் திரண்டார்கள்.  

தி
முக இந்தத் தேர்தலில் தோற்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இலவசங்களும், பண பலமும் கட்சியைக் கரைசேர்க்கும் என்றுதான் கட்சித் தலைவர்கள் நினைத்தார்கள்.

கருணாநிதி புகழை விரும்பினார். பாராட்டை விரும்பினார். அதனை அவருக்குக் கூழைக் கும்பிடு போடும் கூட்டம் வஞ்சகம் இல்லாமல் வாரி வழங்கியது.  மகன் அழகிரி 58 தென்மாநில தேர்தல் தொகுதிகளில் ஒன்றுவிடாது வென்று காட்டுவதாக அப்பாவிடம் அடித்துச் சொன்னார். சொன்னது நடக்கவில்லை. 12 தொகுதிகளை மட்டும் பலத்த போராட்டத்தின் பின்னர் பிடிக்க முடிந்தது. தேர்தலில் கருணாநிதி அடைந்த படுதோல்விக்கு இது  ஒரு காரணம். இடித்துச் சொல்ல வேண்டிய தொல். திருமாவளவன், சுப.வீரபாண்டியன், கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் சும்மா இருப்பதே சுகம் என்று இருந்து விட்டார்கள்.

"கருணாநிதி ஒரு சாதனையாளர் ஜெயலலிதா வேதனைகளைச் செய்தவர்' என உள்துறை அமைச்சர் சிதம்பரம் பரப்புரை மேடைகளில் பேசினார். கருணாநிதி செய்த சாதனைகள் என்று அவர் எதை சொல்கிறார்? 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் தட்டுப்பாடு, ஈழத்தமிழர் சிக்கல், காவிரி குடிநீர், முல்லைப் பெரியாறு அணை, சிவகாசி சாயப்பட்டறை கழிவுநீர் சிக்கல், ஆசிரியர்கள் பணி நியமனம், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு என அனைத்திற்கும் தீர்வு கண்டிருந்தால் அதைச் சாதனையாகக் கூறலாம். அதைவிடுத்து இலவசங்களையும் பணத்தையும் கொடுத்து  மீண்டும் ஆட்சியைப் பிடித்தே  தீர வேண்டும் என்பது சாதனை அல்ல.

தமிழகத்தில் அய்ந்துமுறை முதல்வராக இருந்த கருணாநிதி ஆட்சியில்  தமிழக அரசு அலுவலகங்களில்  தமிழில் ஆட்சி இல்லை.  பள்ளிகளில், கல்லூரிகளில் கற்கை மொழி தமிழாக இல்லை. தமிழகத்தில் இறை வழிபாடு தமிழில் இல்லை. நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாகத்  தமிழ் இல்லை.  அங்காடிகளின் பெயர்கள் தமிழில் இல்லை.  ஏன் கருணாநிதியின் பேரன், பேத்தி ஒருவருக்கேனும் தமிழில் பெயர் இல்லை!  

காங்கிரஸை விட மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள  பாமக கட்சி தங்களது எதிர்காலம் என்னவென்றே தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டிருக்கிறது. போட்டியிட்ட இடங்களில் எல்லாம் அது பெரும் அடியை வாங்கியுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் அதாவது வன்னியர் கோட்டை  எனப்படும் தொகுதிகளில் எல்லாம் படு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. வேளச்சேரித் தொகுதியை கடுமையாகப் போராடி வாங்கிய பாமக அங்கு தோல்வியைச் சந்தித்தது.  அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியே தோற்று விட்டார்.

திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்ட கட்சி பாமக வுக்கு கருணாநிதி 30 இடங்களை ஒதுக்கினார். ஆனால் பாமக வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக வைப் போலவே பாமகவும் இராமதாசின்  குடும்பக் கட்சி என்று பெயர்  எடுத்திருந்தது. தனது மகன் மருத்துவர் அன்புமணிக்கு மேலவை நியமனம் கேட்டு இராமதாஸ் திமுகவிடம் தூதுக்கு மேல் தூதுவிட்டது அவருக்குக் கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கவே உதவியது.

வன்னியர்களின் பாமக தலித்துக்களின் விடுதலைச் சிறுத்தைகள், கவுண்டர்களின் கொங்கு நாட்டு முன்னேற்றக் கழகம், தேவர்களின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், நாடார்களின் பெருந்தலைவர் மக்கள் கட்சி,  மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்றவை படுதோல்வி அடைந்துள்ளன. பொதுவாக சாதிக் கட்சிகள் இந்தத் தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது நல்ல அறிகுறியாகும்.

ன்று கருணாநிதி தேர்தலில் தன்மானத்தோடு மணிமுடியையும் இழந்து கோவணத்தோடு நிற்கிறார்.  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த, மறுத்த மகள் கனிமொழியைக் காப்பாற்ற திமுக உயர் நிலைக் குழுவைக் கூட்டுகிறார்.  அமைசர் இராசா கைது செய்யப்பட்ட போது  கூடாத, கூட்டாத, கூட்ட முடியாத உயர் நிலைக் குழு குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்று விட்ட ஒரே காரணத்துக்காக கூட்டப்படுகிறது என்றால் "கழகம் ஒரு குடும்பம்" என்பது நாடறிய மீண்டும் ஒருமுறை எண்பிக்கப்பட்டுள்ளது.  

"புருஷோத்தமர் போரில் புலி வாளெடுத்தால் வையகமே நடுங்கும். அவரா இப்படி நடுங்குகிறார். ம்... போர்க்களத்தில், எதிரியின் வாட்களோடு விளையாடிய கைகள்  இன்று இந்த வஞ்சகியின் விரல்களை அல்லவா வருடிக் கொண்டிருக்கின்றன....' இது மனோகரா திரைப்படத்திற்காக கருணாநிதி எழுதிய வசனம். அரை நூற்றாண்டுக்கு முன்னால் கருணாநிதி எழுதிய வசனம் இன்று அவருக்கே பொருந்தி வருகிறது.  கருணாநிதி நாட்டில் விலைவாசி உயர்ந்தபோதும் மின்வெட்டால் தமிழகமே இருண்டபோதும் நீரின்றிப் பயிர்கள் வாடியபோதும் நாட்டில் வேலை வாய்ப்பு அருகிய போதும் ரோம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோதும் பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னன் போல பெண் சிங்கம், உளியின் ஓசை, பொன்னர் சங்கர் என்று திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தார். "மானாட மயிலாட" என நாட்டிய மணிகளின் நடனங்களை இரசித்துக் கொண்டிருந்தார்.  அதனால் தான், மக்கள்  கதை, வசனம் எழுதவும் நாட்டியத்தை இரசிக்கவும் முதல்வர் பதவி ஒரு தடையாக  இருக்கக் கூடாது என நினைத்து அவருக்கு நிரந்தர ஓய்வு  கொடுத்துவிட்டார்கள்!  (May 24, 2011)


கச்சதீவு

தடியைக் கொடுத்து சிறிலங்காவிடம் அடிவாங்கும் இந்தியா!

 

நக்கீரன்

 

இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசை அய்யன்னா சபை போர்க் குற்றவாளி என அறிவித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதற்கு இந்திய அரசு அய்யன்னா சபையை வற்புறுத்த வேண்டும் என்றும் மேலும் தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய அரசும் அதன் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழக சட்ட மன்றத்தில் முன்மொழிந்து ஒருமனமாக நிறைவேறியிருந்த முதல்வர் ஜெயலலிதா அடுத்ததாக கச்சதீவை 1974 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரால் இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததது தொடர்பான வழக்கில் வருவாய்த்துறையை சேர்க்கச் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.

 

முதல்வர் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து சட்ட சபையில் நீண்ட உரை நிகழ்த்தினார். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்தியஇலங்கை உடன்படிக்கைகள்  மூலம் இலங்கைக்குத் தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவினால் 2008 இல் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்தத் தீர்மானம் அமைந்திருந்தது.

 

இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உடன்படிக்கைகள் வாயிலாக கச்சதீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த உடன்படிக்கைகள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008  ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் இந்திய யாப்பின் 32 ஆவது விதியின் கீழ் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது.

 

தமிழக இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை சிறிலங்காவின் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கு சொந்த நட்புக் காரணமாக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நன்கொடை கொடுத்த காரணத்தாலேயே இன்று இந்திய மீனவர்கள் கச்சதீவையொட்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்க முடியாமல் இருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் முன்னர் இருந்து கடல் எல்லை கச்சதீவு பறிபோனதன் காரணமாக சுருங்கி விட்டது.

 

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கிபி 1450 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பயங்கர கடல் கொந்தளிப்பால் தமிழகத்தின் தென்பகுதி கடலில் மூழ்கின. இப்படித் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட பிரதேசத்தில் கச்சதீவு உட்பட 11 தீவுகள் உருவாகின. இப்படித் தோன்றிய தீவுகள் எல்லாம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன. 1947 இல் நிலக்கிழார் ஒழிப்புச் சட்டம் வரும் வரை இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னரின் ஆட்சியில் இருந்த கச்சதீவு முத்து குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்திருக்கிறது. இங்கே பரவலாகக் காணப்படும், "உமிரி' மற்றும் "சாயா' வேர்களை மருத்துவத் தேவைகளுக்காக இராமநாதபுரம் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இராமநாதபுரச் சேதுபதிகளின் ஆட்சியில் கச்சதீவு இருந்து வந்தது என்பதற்கு 1822 ஆம்  ஆண்டிலிருந்து வரையறையான சான்றுகள் உள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனி 1822 இல் "திமிரர்சனாத்' என்ற ஒப்பந்தத்தால் இராமநாதபுர மன்னரிடமிருந்து கச்சதீவைப் பயன்படுத்திக் கொள்ளும் இசைவைப் பெற்றது. இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கையைப் பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லைகளைப் பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவைக் குறிக்காமலும் இராமநாதபுர அரசரைப் பற்றியவற்றில் கச்சதீவு அவருக்குரியதென்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதை, முன்னாள் இலங்கை அமைச்சரவைச் செயலர் பி.பி.பீரிஸ்  உறுதிப்படுத்தியுள்ளார். 1912 - 1923 வரை அதாவது 15 ஆண்டுகளுக்கு கச்சத்தீவை குத்தகையாக  இந்தியாவிற்கான அரசு செயலர் சேதுபதியிடமிருந்து இசைவு பெற்றதற்கான ஆவணங்கள் உள்ளன.

 

கச்சதீவு சிறிலங்காவிற்கு கையளிக்கப்பட்டதை அப்போது ஆட்சியில் இருந்த திமுக எதிர்த்தது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அனைத்துக் கட்சியையும் கூட்டி தமிழகத்தின் எதிர்ப்பை மைய அரசுக்குத் தெரிவித்தார். ஆனால் ஒப்புக்குச் செய்த அந்த எதிர்ப்பை இந்திரா காந்தியோ அவரது காங்கிரஸ் அரசசோ சட்டை செய்யவே இல்லை.

 

1990 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜெயலலிதாவின் அதிமுக அரசு "தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சதீவை மீட்போம்" என்ற முழகத்தை முன்வைத்தது. 1991 ஆம் ஆண்டு ஆடி மாதம் 14ம் நாள் கோட்டையில் கொடியை ஏற்றிவைத்து விட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கச்சதீவை என்ன விலைகொடுத்தும் மீட்கப் போவதாகச் சபதம் செய்தார்.

 

1991 ஆம் ஆண்டு அய்ப்பசி 4 ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் கச்சதீவை சிறிலங்காவிடம் இருந்து மீட்கக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஒன்றுமே உருப்படியாக நடைபெறவில்லை.

 

நெடுந்தீவுக்கு தெற்கே 9 மைல் தொலைவிலும் இராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 12 மைல் தொலைவிலும் உள்ள பாக்கு நீரணை என்ற பகுதியில் கச்சதீவு அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும் வடக்குத் தெற்காக அரைமைல் தூரமும் கொண்டதாக இருந்தாலும் அதனை அண்டிய கடற்பகுதி நிறைய மீன்வளம் நிறைந்ததாக உள்ளது. ஓய்வெடுப்பதற்கும் வலைகளை உலர வைப்பதற்கும் பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும் மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவைப் பரம்பரை பரம்பரையாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்குத்  தமிழக மீனவர்கள் மற்றும்  தொழுகை நடத்துவதற்காக இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்றுப்  பதிவேடுகள் தெரிவிக்கின்றன. வட இலங்கையில் இருந்தும்  - குறிப்பாக பாசையூர், குருநகர்  - கத்தோலிக்கத் தமிழர்கள் தோணிகள் மூலம் இந்த சமய விழாவுக்குச் சென்றார்கள்.

1972 இல் வெளியிடப்பட்ட இராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி அதற்கு முன் இராஜா இராமராவ் வெளியிட்ட இராமநாதபுர மாவட்ட மானுவல்  1915, 1929 மற்றும் 1933 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு 1899 இல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை இராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.

அதில் இராமேசுவரத்திற்கு வட கிழக்கே 10 மைல் தொலைவில் கச்சதீவு இருக்கிறது என்றும் ஜமீன் ஒழிப்புக்கு முன்னர் இராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்குக் குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும் இந்தத் தீவின் நிலவளவு எண் 1250 பரப்பளவு 285.20 ஏக்கர் (3.75 சதுர மைல்) என்றும் இந்தத் தீவு இராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது.

 

இவையெல்லாம் கச்சதீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த விவரச் சுவடியில் கச்சதீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதில் இருந்த வரைபடத்தில் கச்சதீவு இந்தியாவின் பகுதி என காண்பிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த விவரச் சுவடிக்கு 14.6.1972 இல் முகவுரை எழுதிய அப்போதைய முதல்வர் கருணாநிதி அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல் முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு இருந்த பற்று.

இராமநாதபுரம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள் தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974-ஆம் ஆண்டு முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உடன்பாட்டின் படி கச்சதீவுப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லக்கூடாது, மீன்பிடிக்கவும் கூடாது, கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு யாத்திரியர்கள் போகக் கூடாது என இந்திய அரசு அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

1976 உடன்படிக்கையைத் தொடர்ந்து 1983 தமிழ்நாடு கடல்வள மீனவர் சட்டம் கொண்டுவரப்பட்டபோது கச்சத்தீவு எல்லை மாற்றி அமைக்ககப்பட்டது.  இப்போதைய சங்கடங்களுக்கு இந்தச் சட்டம் இன்னொரு காரணம் ஆகும்.

மாநிலத்தில் திமுக ஆட்சி மத்தியில் திமுக தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த போதும் கச்சதீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோ அப்போதைய திமுக அரசின் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை. கச்சதீவு இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை 500 மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

1960 ஆம் ஆண்டுக்கு முன்பு 1950 களில் மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்குக் கொடுக்க மத்திய அரசு முயன்ற போது அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்படிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

மேற்கு வங்க அரசின் அன்றைய முதல்வர் பி.சி. ராய் அவர்களின் துணிச்சலான  நடவடிக்கை காரணமாக பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விண்ணப்பம்  செய்திருந்தால் கச்சதீவு இன்றும் கூட இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

கச்சதீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு மத்திய அரசு தமிழக அரசிடம் பல முறை விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தெரிகிறது. உண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் இந்திய –- இலங்கை உடன்படிக்கைகை எழுத்துவதற்கு முன்பே சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைக் கருணாநிதி செய்யவில்லை. சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் "வருத்தம் அளிக்கிறது" என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர "எதிர்க்கிறோம்" என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை.

மேலே குறிப்பிட்டது போல கச்சதீவில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்குக் கிடைக்காத நிலையில் 2008 ஆம் ஆண்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய உடன்படிக்கைகள் சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை ஜெயலலிதா தொடுத்திருக்கிறார். இந்த வழக்கில் மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசும் ஒரு பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல் இடப்பட்ட போது மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக  “… uniform stand has to be taken both by the Central and State Governments”  அதாவது மத்திய அரசும் மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து அதற்கு ஒப்புதல் கேட்டு 10.6.2009 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதல்வரின் செயலாளர் 13.7.2009 அன்று திருப்பி விடுகிறார்.

சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும் தமிழக அரசை ஒரு proforma respondent என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து மத்திய அரசின் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா? அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா? என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின் Advocate on Record -க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக் குறிப்பிற்கு 14.8.2009 இல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில் 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விதி எண். 8 இன்படி நாடாளுமன்றத்தின் பின்னேற்பு ஆணை பெறப்படாதது சட்டத்திற்கு சட்டத் திருத்தம் செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை வழங்கிட இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது என்பதே முந்தைய திமுக அரசின் நிலைப்பாடாக இருந்தது.

கச்சதீவை மீட்க வேண்டும் தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருக்குமானால் உச்சநீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான் மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தபின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று கருணாநிதி முடிவெடுத்தார் என்கிறார் ஜெயலலிதா.

1.4.2011 அன்று முன் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. அதில் 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்றும் ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு கச்சதீவு தொடர்பான இரு ஒப்பந்தங்களுக்கும் நாடாளுமன்ற முன் அனுமதி தேவையில்லை என பதிலளித்திருக்கிறது. இருநாடுகளுக்கு இடையில் எழுதப்பட்ட உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக ஒரு நாடு முறிக்க முடியுமா? இல்லை என்கிறது இந்திய மைய அரசு.

 

இலங்கை - இந்தியா இரண்டுக்கும் இடையில் 1987 எழுதப்பட்ட உடன்படிக்கையில் இலங்கைத் தீவின் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. ஆனால் அந்த இணைப்பு இலங்கை யாப்பில் நாடாளுமன்றம் வேண்டி திருத்தத்தைச் செய்யப்படவில்லை எனக் காரணம் காட்டி சிறிலங்கா உச்ச நீதிமன்றம் ஒக்தோபர் 2006 இல் தீர்ப்பளித்தது. எதிர்க்கட்சியான அய்க்கிய தேசியக் கட்சி வட - கிழக்கு இணைப்புக்கு யாப்புத் திருத்தத்துக்கு வேண்டிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தருவதாக அறிவித்திருந்த போதிலும் மகிந்த இராசபக்சே அதனை நிராகரித்து விட்டார். 1987 இல் எழுதப்பட்ட பன்னாட்டு உடன்படிக்கையை இலங்கை மீறியதை இந்தியா கண்டும் காணாமலும் இருந்துவிட்டது. ஒரு பன்னாட்டு உடன்படிக்கையை இலங்கை மீற முடியுமென்றால் இந்தியா ஏன் மீறக் கூடாது என்ற கேள்வி எழுகிறது.

 

முதல்வர் ஜெயலலிதா தொடுத்துள்ள வழக்கில் கச்சதீவை மீளப் பெறமுடியாவிட்டால் கச்சதீவுக் கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டிருக்கிறார். எனவே கச்சதீவை இந்தியா திரும்பிப் பெறும் வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இரண்டு நாடுகளுக்கு இடையில் எழுதப்பட்ட உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக இந்தியா மீறமுடியாது என இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது. இந்திய உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

 

ஒன்று மட்டும் நிச்சயம். இந்தியா தடியைக் கொடுத்து சிறிலங்காவிடம் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. (யூன் 17,2011)

 

 


Scotland  Plans To Stage  Referendum On Independence

 

V.Thangavelu

When  UN was founded in  June 26, 1945 after World War 11  to replace the League of Nations it had only 51 members.  This number has  increased to 192  when Montenegro   joined UN in 2006.  Montenegro has a population of about 680,000 and  13,812 sq.kms of territory. 

Between 1991 - 2006  thirty three (33) countries joined the UN largely due to the collapse of  the Soviet Union in 1990 and Yugoslavia in  1991. All the 15 constituent republics of the Soviet Union and 6  federated states in Yugoslavia declared independence based  essentially on the  right to self-determination.  In  principle  the right self determination allows a people to choose its own political destiny and to determine its own form of economic, cultural and social development.

The  UN was  founded to  stop wars between countries and to provide a platform for dialogue and facilitate cooperation in international law, international security, economic development, social progress, human rights and achievement of world peace. There is no doubt that UN has succeeded in preventing World War 111, but not wars between  some member nations within and without.

Now South Sudan is poised to declare formal independence on July 09, 2011 after a referendum  held in January, 2011 supervised by the UN. The referendum was held following  the signing of the  Naivasha Agreement (2005)  between the Khartorum central government and the Sudan People's Liberation Army/Movement (SPLA/M). On  February 07,  2011, the referendum commission announced that 98.83% voted in favour of independence. It is a matter of time before South Sudan takes its seat  in UN.

An unexpected candidate after South Sudan is Scotland where the Scottish Nationalist Party  (SNP)  has won elections on a plank for independence  for Scotland. On May 05,  2011  general election  to the Scottish parliament  to elect 129 members the SNP won a  historic 69 seats (45.39% of the popular vote) and its leader  Alex Salmond to remain First Minister of Scotland.

The SNP overall majority means that there is sufficient support in the Scottish Parliament to hold a referendum.  The SNP  promised in  its election manifesto to bring forward an independence referendum during the second half of Parliamentary session. The SNP failed to muster enough support for  independence in the last Parliament. 

Leader Alex Salmond said that the SNP would "give Scots an opportunity to decide our nation’s future" adding that opposition parties would "have no choice" but to back a referendum. The Green Party  has endorsed a referendum on Scottish independence.

The election delivered the first majority government since the opening of Holyrood, a remarkable feat as the mixed member proportional representation system is used to elect members and was originally implemented to prevent single party governments as well as produce proportional results in Scotland. The SNP gained 32 constituencies, 22 from the Scottish Labour Party (SLP),  9  from the Scottish Liberal Democrats (SLD)  and one from the Scottish Conservatives(SC). The SLP lost seven seats and was their worst election defeat in Scotland since 1931  and will be the largest opposition party.  The SLD were soundly defeated this time, their popular vote share was cut in half and their seat total reduced from 17 to five.  For SC  the election proved disappointing as their popular vote dropped slightly and their number of seats fell by five.  Below is the detailed results of the election.

 

Scottish general election, 2011

 

Parties

Additional member system

Total seats

 

Constituency

Region

 

Votes

 %

+/−

Seats

+/−

Votes

 %

+/−

Seats

+/−

Total

+/−

 %

 

 

SNP

902,915

45.39

+12.46

53

+32

876,421

44.04

+13.03

16

−9

69

+23

53.49

 

 

Labour

630,461

31.69

−0.45

15

−20

523,559

26.31

−2.85

22

+13

37

−7

28.68

 

 

Conservative

276,652

13.91

−2.69

3

−3

245,967

12.36

−1.55

12

−2

15

−5

11.63

 

 

Liberal Democrats

157,714

7.93

−8.25

2

−9

103,472

5.20

−6.10

3

−3

5

−12

3.88

 

 

Scottish Green

87,060

4.38

+0.33

2

+1

2

+1

1.55

 

 

Independent

12,357

0.62

-0.62

0

±0

22,306

1.12

+0.08

1

±0

1

±0

0.78

 

 

Others

9,123

0

0

0

0

131,081

7

1

0

0

0

0

0

 

 

Total

1,989,222

100

-

73

±0

1,991,051

100

0

56

0

129

0

100

 

During the campaign, the four main party leaders engaged in a series of televised debates, as they had in every previous general election. These key debates were held on  March 29 (STV)  May 01 (BBC) and May 03 (STV). The results of the election were broadcast live on BBC Scotland and STV on the night of the election.

It was the fourth general election  since the devolved parliament was established in 1999 and was held on the same day as elections to the National Assembly for Wales and Northern Ireland Assembly.

The recorded history  of Scotland begins with the expansion  of the Roman Empire  in Britain when the Romans occupied what is now broadly England, Wales and Scotland administering it as a Roman province called Britannia. Because of the geographical orientation of Scotland and its strong reliance on trade routes by sea, the kingdom held close links in the south and east with the Baltic countries and through Ireland with France and the continent of Europe. 

The Kingdom of Scotland  was an independent state from its own unification  in 843 AD. Though it  was largely conquered in 1296 by Edward 1 of England  resistance continued until Scotland regained de facto independence after defeating English forces at the Battle of Banmockburn in 1314 AD.  England finally acknowledged Scottish independence with the signing of the Treaty of Edinburgh - Northampton in 1328.

The crowns of England and Scotland were united by the accession of James VI to the English throne in 1603. However, Scotland remained a sovereign and officially independent state until the Scottish parliament voted on 6 January 1707, by 110 to 69 to adopt the Treaty of Union. It was an  economic union  most of its 25 articles dealt with economic arrangements for the new state known as "Great Britain." It added 45 Scots to the 513 members of the House of Commons and 16 Scots to the 190 members of the House of Lords.  The Acts of Union that put the Treaty into effect provided for the merging of the two nations by means of dissolution of the Parliament of Scotland and the Parliament of England and their replacement by a new Parliament of Great Britain located in Westminster, England. As a result of provisions in the Treaty, as well as much of Scotland's relative isolation, many of Scotland's institutions remained separate and the Scottish national identity has remained strong and distinct.

At the time of the union of the parliaments, the measure was deeply unpopular in both Scotland and England. The Scottish signatories to the treaty were forced to sign the documents in secrecy because of mass rioting and unrest in the Scottish capital, Edinburgh. Scottish nationalists  believe that the loss of independent Scottish representation internationally is detrimental to Scottish interests and that  the British government acts primarily in the interest of the entire United Kingdom and to the  deliberate detriment of specific Scottish interests. Those who oppose Scottish independence and endorse the continuation of a form of union make a distinction between nationalism and patriotism. They argue    that cultural, social, political, diplomatic and economic influence and benefits enjoyed by Scotland as part of a great power without compromising its distinctive national identity, outweighs the loss of fully independent Scottish sovereignty.

Following the Acts of Union which united Scotland with England into the Kingdom of Great Britain and following the industrial revolution Scotland became one of the commercial, intellectual and industrial powerhouses of Europe. Its industrial decline following  World War 11 was particularly marked,  but in recent decades the country has enjoyed something of a political, cultural and economic renaissance fuelled in part by  revenue from  North Sea Oil and gas. And lately by a devolved parliament. 

Scotland has a total population of 5,222, 000 (2010 estimate) covering an area of 78,782 sq kms (30,418 sq mls).

Religion - Christianity (74.9%): primarily Church of Scotland (42.4%) and Roman Catholicism (15.9%), non-religious (27.5%), Islam (0.8%).

Languages: Scottish English, Scots (Doric, Central and Border) and Gaelic.

Ethnic Groups

White: 4,960,334 - 98.19%,  Scottish: 4,459,071 - 88.09%, Other White British: 373,685 - 7.38%, Any other White background: 87,650 - 1.73%, White Irish: 49,428 - 0.98%, Mixed: 12,764 - 0.25%, South Asian: 55,007 - 1.09%.

Through out history people have fought for independence shedding blood and tears. The catalyst was the American War of Independence which declared that three things are obviously true:

·        That all men are created equal

·        That all men have some rights given to them by God

·        That among these rights are life, liberty, and the pursuit of happiness.

So whenever any  state  is getting in the way of these rights, people have the right to change it or get rid of it, and to make a new state  in whatever way seems most likely, peacefully if possible and by violence, if necessary. 

The SNP's historic majority at Holyrood has cleared the way for the party to seek a public vote on whether Scotland should break the union with the UK. The real driving force for a Scottish independence  has been the rising national discontent in Scotland against centralised Westminster rule. However, current polls  have shown that there isn't majority support for independence. Both Labour and the Conservatives have made it clear they will campaign hard to prevent the breakup of the UK, but Westminster wont stop the referendum from taking place.

In the meantime Queen Elizabeth has expressed her anxiety about the SNP’s plan for an independence referendum and its ramifications for their Union.  Palace officials have asked Downing Street to provide a constitutional expert to advise on how the referendum will be staged and the dismantling of the UK in the event of a ‘yes’ vote. She is said to be concerned at the prospect of 304 year-old Union between England and Scotland  being broken up during her reign. In a remark interpreted as criticism of Scotland's quest for independence she told MPs "I cannot forget I was crowned Queen of the United Kingdom."

Notwithstanding Queen's concerns, if the Scottish people do vote for independence like South Sudan it will end in peaceful  and mutual divorce from Britain in 4 years.  Edinburgh Castle, overlooking the Scottish capital, has witnessed fierce battles between the armies of Scotland and England in the past. Today, the Union Jack flies over the Castle, but, if the SNP  has its way, that flag could be replaced by the blue and white Scottish saltire. There is no official national anthem of Scotland, however a number of songs are used as de facto Scottish anthems, most notably Flower of Scotland. (June 02,2011)


நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல் முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம்

நக்கீரன்


“இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தாடல் களத்தில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படியான கருத்தாடல்கள் நாம்  எதிர்நோக்கும் சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் குறைந்தது ஒரு அறிவுசெறிந்த
(Academic) தளத்தில் இருந்து அலசிப் பார்ப்பது நல்லதென்றே நான் நம்புகிறேன்.

இந்தத் தலைப்பில் உள்ள சிறிலங்கா என்ற சொற்பதம் எனக்கு உடன்பாடில்லை. இலங்கைத் தீவு சிங்களத்தில் சிறிலங்கா என்று அழைக்கப்பட்டாலும் தமிழில் இலங்கை என்றே அழைக்கப்படுகிறது. அண்மைக் காலமாக சிறிலங்கா என்ற சொல் சிங்கள தேசத்தையும் தமிழீழம் என்ற சொல் தமிழர்களின் பாரம்பரிய தாயகமான வட- கிழக்கையும் இரண்டும் சேர்ந்தது இலங்கை  என்ற தீவையும் குறிக்கும் பொருளில் கையாளப்பட்டு வருகிறது. இதே போல் தமிழர்கள் சிறுபான்மை இனம் என்பதற்குப் பதிலாக தமிழர்கள் சிறுபான்மைத் தேசிய இனம் என்று அழைக்கப்படுகிறது.  வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் சிங்களவர் - தமிழர் இலங்கைத் தீவின் தொல் இனங்கள் (Founding  Nations)  என அழைக்கப்பட்டார்கள். பிரதேச வாரியான (territorial) பிரதிநித்துவம் ஒழிக்கப்பட்டு ஒருத்தருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் டொனமூர் யாப்பு நடைமுறைக்கு வந்த பின்னர்தான் தமிழர்கள் அரசியல் பலத்தை இழந்து சிறுபான்மையினர் என அழைக்கப்பட்டனர்.

இந்தக் கருத்தாடல் களத்தில் “இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்" என்ற பொருளில் நாம் பேசுவதே கடந்த 2009 மே மாதம் முள்ளிவாயக்காலில் எமது ஆயுதப் போராட்டம் சந்தித்த பேரழிவுதான் காரணமாகும். சிலர் எமது தோல்வியைப் பின்னடைவு என்று சொல்கிறார்கள். அது சரியாகாது. அது சாதாரண தோல்வி அல்ல பாரிய தோல்வி என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

ஈழப்போர் 4 தமிழர்களது இராணுவ கட்டுமானங்களை மட்டுமல்ல அவர்களது அரசியல், சமூக, பண்பாட்டு கட்டுமானங்களையும் தகர்த்து விட்டது என்று கூடச் சொல்லலாம்.  தமிழ்த் தேசிய போராட்டத்தோடு இந்தக் கட்டுமானங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பானவை. அவற்றை அழிப்பதில் சிங்கள அரசு முனைப்போடு இருந்தது. அது வெற்றியும் பெற்றது.

தமிழர் தரப்பு ஆயுத பலத்தை முற்றாகவும், அரசியல் பொருளாதார பலத்தை பேரளவும் இழந்து விட்டது. நான்கு  இலட்சத்துக்கும் மேலான தமிழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றாக இழந்து அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.  மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் இடப்பெயர்வுக்கு உள்ளான மககள் இன்னமும் தகரக் கொட்டைகைக்குள்ளும் பள்ளிக் கூடங்களிலும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள்.  மீள் குடியமர்த்தப்பட்டவர்களிலும் ஒரு தொகை மக்கள் தங்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியமர முடியவில்லை. சிங்கள அரசு தமிழ் மக்களுடைய காணிகளை படைத்தளங்கள் நிர்மாணிப்பதற்கும் இராணுவத்தினருக்கு குடிமனைகள் கட்டுவதற்கும் அபகரிக்கத்துள்ளது.   

சுருக்கமாகச் சொன்னால் தமிழர் தரப்பு இப்போது மீண்டும் தொடங்கின இடத்திலேயே திரும்பவும் வந்து நிற்கிறது.  அறவழியில் அரசியல் போராட்டம், மறவழியில் ஆயுதப் போராட்டம் இன்று மீண்டும் அறவழியில் அரசியல் போராட்டம் என ஒரு சுற்றுச் சுற்றி வந்துவிட்டது.

எமது எதிர்காலத்தை கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் புவிசார் அரசியல் காய் நகர்வுகளையும் புதிய உலக ஒழுங்கையும் மனதில் இறுத்தி முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

எமது அரசியல், பொருளாதார, சமூகநலத்  திட்டங்கள் குறுகியகாலம்,  இடைக்காலம், எதிர்காலம் என மூன்று கால கட்டங்களையும் தாய்நிலம், புலம், தமிழ்நாடு என்ற மூன்று தளங்களையும் மையப்படுத்தி அமைய வேண்டும். அப்படிச் செய்தால் புவிசார் அரசியலில் நாம் செல்வாக்குச் செலுத்துவதற்கு இலகுவாக இருக்கும்.

குறுகிய காலத்தில் வாழ்வாதாரங்களை இழந்து போன எமது மக்களின் வாழ்க்கை மீள் கட்டியெழுப்பப் பட வேண்டும். இதனை சிங்கள அரசு செய்யும் என எதிர்பார்க்க முடியாது. கடந்த இரண்டு ஆண்டு கால அனுபவம் அதைத்தான் காட்டி நிற்கிறது.  இன்று தமிழ்மக்கள்,  குறிப்பாக வன்னி மற்றும் தென்தமிழீழ மக்கள் ஆகியோரது இருப்பிட வசதி,  கல்வி, நல்வாழ்வு தொழில்வாய்ப்பு, வேளாண்மை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

போர்க்காலத்தில் தமிழ்மக்களது பொருளாதார மேம்பாட்டுக்கு புலத்தில் இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகங்களே தோள் கொடுத்தன. சமாதான காலத்தில் தாய்நிலத்தில் இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் 3,000 க்கும் அதிகமான முழுநேர ஊழியர்கள் பணியில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள அரசு த.பு. கழகத்தை தடை செய்த பின்னர் இது தாய்நிலத்தில் இயங்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியது. அது இன்றுவரை நீடிக்கிறது. இதனால் புலத்தில் இயங்கி த.பு. கழகங்களின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.  எனவே த.பு. கழகத்தை ஒத்த ஒரு அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய இப்போது முயற்சி நடைபெறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுவாழ்வு என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை பதிவு செய்யவுள்ளது. த.தே.கூட்டமைப்பின் தலைமை பணிமனையின் மேல்மாடி மறுவாழ்வு அமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கனடாவிலும் அண்மையில் அதே பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இடப்பெயர்வுக்கு ஆளான மக்களுக்கு உதவி செய்ய பல நாடுகளும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும், அய்யன்னா அமைப்புக்களும் அணியமாக இருந்தாலும் சிங்கள அரசு அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது.  சிங்கள அரசு நடந்து கொள்கிற போக்கு வைக்கல்பட்டடை நாய் போன்றதாக இருக்கிறது. தானும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடாது சிங்கள அரசு தடுக்கிறது. அல்லது முட்டுக்கட்டை போடுகிறது.

போரின்போது சிங்கள அரசு வி.புலிகளுக்கு எதிரான போரைப் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றும் அது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை தமிழ்மக்களை வி.புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் என்றும் பரப்புரை செய்தது. ஆனால் போர் முடிந்த பின்னரும் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும்  பொருளாதார, சமூக, பண்பாட்டுச் சிக்கல்கள்  பற்றி சிங்கள அரசு காட்டும் கரிசனை அது மேற்கொண்ட பரப்புரை கலப்படமற்ற பொய் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இன்னும் சொல்லப் போனால் போருக்குப் பின்னர் சிங்கள அரசு வட - கிழக்கை சிங்கள மயப்படுத்துவதிலும் இராணுவ மயப்படுத்துவதிலும் பவுத்தமயப்படுத்தலிலும் தமிழ்மக்களை அடக்கி ஆளுவதிலும் வீச்சாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதனால்  சிங்களத்துக்கும் தமிழர்களும் இடையிலான முரண்பாடு மேலும் கூர்மை அடைந்து வருகிறது.

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் அதற்கான  காரணிகள் அப்படியே தொடர்கின்றன. சிங்களவர் - தமிழர் உறவில் ஏற்கனவே ஏற்பட்ட விரிசலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக இரண்டு இனங்களுக்கு இடையிலான இடைவெளி குறைவதற்குப் பதில் நாளும் பொழுதும் கூடிக் கொண்டே போகிறது.

தற்கான சான்றை அண்மைக்கால  நிகழ்வுகள்  படம்பிடித்துக் காட்டியுள்ள.

சிறிலங்காவின் வெற்றியைக் கொண்டாடத் தெற்கில் சிங்களவா திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் சிறிலங்கா தோற்றபோது கொழும்பில் மயான அமைதி நிலவியது. அதே நேரம் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் இந்தியாவின் வெற்றியை வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள். அப்படி இந்தியாவின்  வெற்றியைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினராலும் காவல்துறையினராலும் தாக்கப்பட்டுள்ளார்கள். வல்வெட்டித்துறையில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புக்களை சிங்களக் காடையர்கள் தாக்கினார்கள்.  இதனால் அட்டன், சமநலகம, கிஜ்ரா புர பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. தாக்குதலுக்குள்ளான இருபது  தமிழ் இளைஞர்கள் டிக்கோயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி நடவடிக்கை எடுக்கத்தவறினால் கடை அடைப்புப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அறிவித்துள்ளார்.

இலண்டனில் கூட குடிவெறியில் இருந்த சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்கியிருக்கிறார்கள். சிறிலங்கா அணி போட்டியில் வென்றிருந்தால் சிங்கள இனவெறியர்களைப் பிடித்திருக்க முடியாது.

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களைத் தங்கள் பிறவி எதிரிகளாகவே பார்க்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவம் வி.புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது. அது போல உலகக் கிண்ணப் போட்டியிலும் சிறிலங்கா அணி இந்திய அணியைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடும். அந்த வெற்றி பிரபாகரனைத் தோற்கடித்தமைக்குச் சமமாகும் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருந்தவாறு கூறியிருக்கிறார்.

சரத் பொன்சேகாவை மிஞ்சும் வண்ணம் அய்யன்னாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா துடுப்பாட்டப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் புலிகளுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த படையினருக்கு அவர்கள் செலுத்தும் காணிக்கை, அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும், அந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கவுரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் எனப் போர் வெறியூட்டும் தோரணையில் கூறி உள்ளார். அப்படியானால், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? அல்லது இந்திய துடுப்பாட்டு வீரர்கள் வி. புலிப் பயங்கரவாதிகளா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த ஈழப் போர் 4 இல் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். சரண் அடைந்த தளபதிகள் போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் அடக்கி ஆளப்பட்டு அழித்தொழிக்கப் படுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் கடந்த ஒரு மாத காலத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளார்கள்.  யாழ்ப்பாணக் குடாநாட்டில்  50,000 இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் நடைபெறுகிறது.

மறுவாழ்வு முகாம்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படும் முன்னாள் வி.புலிப் போராளிகள் தொடர்ந்தும் இராணுவத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அல்லது புலனாய்வுத் துறையில் சேருமாறு கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.  இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையில் உள்ள அவநம்பிக்கையையே உறுதிப்படுத்துகிறது.

இலங்கையில் 17 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இதில் 3 தவிர எஞ்சிய 14 பல்கலைக் கழகங்களும் தென்னிலங்கையில் இருக்கின்றன. சிங்கள அரசு தென்னிலங்கையில் உள்ள 14 பல்கலைக் கழகங்களில் 7 பல்கலைக்கழகங்களை பன்னாட்டுத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் வட - கிழக்கில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் தன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக் கழகத்தில் 29.03.2011ம் திகதி அன்று இரவு அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களும் சிக்கல் ஏற்பட்டது.  அந்தச் சிக்கல் ஓரளவு சுமுகமாக பல்கலைக் கழக நிருவாகத்தால் தீர்க்கப்பட்டது.  ஆனால் அதன்பின் நடு இரவு வேளை பல்கலைக் கழக வளாகத்தில் நிலை கொண்டிருந்த காவல்துறை அரணில் இருந்த சிங்கள காவல்துறையினர் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தை நிருவாகம் மூடிவிட்டது.

கடந்த ஆண்டு சிறிலங்கா நிருவாக சேவைக்கு நடத்தப்பட்ட தேர்வில் 250 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை. இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 135 பேர்களில் ஒரேயொரு முஸ்லிம் மட்டும் தெரிவானார்.

முரண்பாடுகளை மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இது போதும் என்று நினைக்கிறேன்.  நான் சொல்ல வருவது என்னவென்றால் இந்த முரண்பாடுகள் நீடிக்கும் வரை தீர்வுக்கு வாய்ப்பில்லை. இந்த அரசு இதுவரை ஆட்சிக்கு வந்த அரசுகளை விட மிகவும் தீவிர சிங்கள -  பவுத்த இனவெறி பிடித்த அரசாகும். இதற்கு மகிந்த இராபக்சே சான்றாக இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் அவர் பேசும் போது அவரது கொச்சைத் தமிழை மக்கள் இரசிக்கவில்லை. உடனே போபம் தலைக்கேறிய இராசபக்சே சொன்னார்  "ஆம் நான் சிங்களவன். இந்த நாடு சிங்கள நாடு. எனவே தெமிழர்கள் (தமிழர்கள்) ஆகிய நீங்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும்." (“Yes, we are Sinhala. The country is also Sinhala. So listen you Demala (Tamil)” President tells the Tamil people in Jaffna. (http://www.lankanewsweb.com/news/EN_2010_04_03_003.html)

சரி நோயை ஒருவாறு சொல்லியாகி விட்டது. எமது விடுதலைக்கான மருந்து என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசும் பேசிக் கொண்டிருக்கின்றன. 13 ஆவது சட்டம் அல்லது அதற்குச் சற்று கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட மாகாணசபையே தீர்வு என சிங்கள அரசு சொல்கிறது. மகிந்த இராசபக்ச மாகாண சபைகளுக்கு காவல் அதிகாரம் கொடுக்கப்பட மாட்டாது எனத் திட்ட வட்டமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறார்.  கடந்த ஏப்ரில் 09 இல் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி சபை தலைவர்கள் துணைத் உபதலைவர்கள் ஆகியோரின் பதவி ஏற்பு விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றுகையில் த.தே.கூ இன் தலைவர் இரா.சம்பந்தன் வடகிழக்கில் தமிழ் மக்கள் அரசியல் சமூக கலாசார உரிமைகளை தாங்களே முடிவு செய்யக்கூடிய அதிகாரப்பரவலாக்கல் கொண்ட அரசியல் தீர்வையே நாம் சிறிலங்கா அரசிடம்  கேட்கிறோம் எனத் தெரிவித்தார். அவரது பேச்சின் முக்கியத்துவம் கருதி அதன் சுருக்கம் கீழே தரப்படுகிறது. 

"நியாயமான நீதியான சம உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்றையே தமிழ் மக்கள் கோரியிருக்கிறார்கள். 1956ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் இதைத்தான் கோரிவந்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் வன்முறையை விரும்பவில்லை. வன்முறை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. சனநாயக அடிப்படையில்  தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவே கடந்த பொதுத்தேர்தலிலும் உள்ளுராட்சிசபை தேர்தலிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை தந்திருக்கிறார்கள். இந்த ஆணையின் அடிப்படையிலேயே நாம் இன்று சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித விட்டுக்கொடுப்புக்களும் இன்றி கவுரவமான முறையிலேயே அரசுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.

தமிழ் மக்களுக்கு நியாயமான நீதியான அரசியல் சமூக பண்பாட்டு  வாழ்வியல் விடயங்களில் தாங்களே நிர்ணயம் செய்யக்கூடிய அதிகாரப்பரவலாக்கல் கொண்ட இணைப்பாட்சித்  தீர்வு ஒன்றையே நாங்கள் கோரியிருக்கிறோம். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும், அவர்களின் வாழ்விடங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவதற்கான காணி அதிகாரங்களை கோரியிருக்கிறோம், கல்வியில் சமவாய்ப்பை கோரியிருக்கிறோம். நடைமுறைச்சாத்தியமான விடயங்களையே நாங்கள் கோரியிருக்கிறோம்.

பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் எவ்வாறு சகல இனங்களும் சமஉரிமைகளுடனும் கவுரவத்துடனும் வாழக்கூடிய இணைப்பாட்சி   இருக்கிறதோ அதேபோன்றதொரு அதிகாரப்பரவலாக்கலையே நாங்கள் கோரியிருக்கிறோம்.

அதிகாரப்பகிர்வு என்பது தமிழ் மக்கள் இந்த நாட்டில் கவுரவமாக வாழ்வதற்கான ஒரு தீர்வு என்பதை அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறியிருக்கிறோம். தமிழ் மக்கள் வன்முறையை விரும்பவில்லை. நீதியான நியாயமான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்குமாக இருந்தால் வன்முறையை நாடவேண்டிய அவசியம் இருக்காது என்பதை இந்த பேச்சுவார்த்தைகளில் நாங்கள் கூறியிருக்கிறோம்.
எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சுக்கள் வெளிப்படை தன்மை கொண்டது. நாம் அரசாங்கத்துடன் என்ன பேசுகிறோம், எதை கோருநிற்கிறோம் என்பதை நாங்கள் வெளிப்படையாக மக்களுக்கு சொல்லி வருகிறோம்.

அதிகாரப்பகிர்வு என்பது தமிழ் மக்கள் கௌரவமாக சுதந்திரமாக தங்கள் வாழ்வியலை தாங்களே நிர்ணயித்து கொள்வதற்காக தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவதற்காகவே அன்றி தனிநாடாக பிரிந்து செல்வதற்காக அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இதை நாம் அரசுக்கு தெளிவு படுத்தியிருக்கிறோம். தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணையிலிருந்து நாம் என்றும் விலகிச்செல்லமாட்டோம்."  (http://m.eelamtimes.com/eelam.php?subaction=showfull&id=1302343061&archive=&start_from=&ucat=6&)

ஆக இணைப்பாட்சி,  சுதந்திரமும் இறைமையும் வாய்ந்த தமிழீழம் எனத் தொடங்கி இப்போது மீண்டும் தொடங்கிய இடத்திற்கு அதாவது இணைப்பாட்சிக்கு வந்திருக்கிறோம்.

முள்ளிவாய்க்காலோடு எமது விடுதலைப் பயணம் முடிந்து விடவில்லை. கடந்த இரண்டு ஆண்டு காலமாக மீண்டும் தாய்நிலத்திலும் புலத்திலும் எழுந்து நிற்க முனைந்துள்ளோம்.

தாய் நிலத்தில் தமிழ்மக்கள் ஆட்சித் தலைவர் தேர்தல்,  நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் மூன்றிலும் பலத்த இராணுவ நெருக்குவாரம், அச்சுறுத்தல்,  ஆசை வார்த்தைகள் மத்தியிலும் துணிச்சலாக த.தே.கூ யை ஆதரித்ததன் மூலம் தமிழ் மக்கள்  தமிழ்த் தேசியத்தின் பால் கொண்டுள்ள பற்றுறுதியை வெளிக்காட்டியுள்ளனர்.  இது அவர்களது அரசியல்  வேட்கையையும் முதிர்ச்சியையும் காட்டுகின்றது. மக்களது இந்தத் தீர்ப்பே த.தே.கூ ஓடு சிங்கள அரசைப் பேச வைத்துள்ளது. தமிழர்களது அரசியல் சிக்கலை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

புலத்தில் 2009 ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான நேரடிவாக்கெடுப்பு (referendum) நா.க.த. அரசுக்கான தேர்தல், மக்கள் அவைகளுக்கான தேர்தல் ஆகியவை எமது போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி மக்களாட்சி முறைமைக்கு அமைந்த கட்டுமானங்களை உருவாக்க உதவியுள்ளது.

எதிர்வரும் யு+லை மாதம் 20 ஆம் நாள் பிறப்பெடுக்கும் சுதந்திர  தென் சூடான் நாட்டின் தொடக்க விழாவுக்கு நா.க.த. அரசு அழைக்கப்பட்டிருப்பதும் அந்த நாட்டில் ஒரு தூதரகத்தைத் தொடக்க அனுமதி வழங்கி இருப்பதும் வரவேற்கத்தக்க நல்ல முன்னேற்றமாகும்.

அமெரிக்கா, பிரித்தானியா, அய்ரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் எமக்குச் சாதகமான அசைவுகள் தென்படுகின்றன.  முள்ளிவாய்க்காலில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மானிட உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் (alleged violations of international human rights and humanitarian law during the final stages of the conflict in Sri Lanka) பற்றி  அய்யன்னாவின் நிபுணர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையும் அவர்கள் சமர்ப்பித்துள்ள 220 பக்க அறிக்கையும் குறிப்பிடலாம். 

என்னைப் பொறுத்தவரையில் எமது மக்களுக்கான தீர்வு தாய்நிலம், புலம்,  ஏழு கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாடு இந்த மூன்றும் ஒரே  நேர்க்கோட்டில் வரும்போதுதான் ஏற்படும்.

வி.புலிகளின் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்கு இந்தியா சிறிலங்கா அரசுக்கு வழங்கிய ஆயுத, புலனாய்வு, நிதி, பயிற்சி போன்றவையே காரணமாகும். எனவே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் அதனைத் தமிழ்நாட்டு மக்களால்தான் செய்ய முடியும்.  தமிழ்நாட்டு அரசினால் மட்டுமே முடியும். இந்தியா என்ற பு+ட்டிற்கான திறவு கோல் தமிழ்நாட்டில்தான் உண்டு.

இந்தியா என்றதும் சன்னதம் கொள்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் இந்தியாவின் ஒத்துழைப்பின்றி, உதவியின்றி எமக்கு எந்தத் தீர்வும் சாத்தியமில்லை.

இந்தியாதான் தெற்காசியாவின் பெரியண்ணன் அல்லது சண்டியன். அந்த உண்மையை ஈழப்போர் 4 இல் கண்டோம்.  வி.புலித் தலைவர்களை முள்ளிவாய்க்காலில் இருந்து பத்திரமாக வெளிக் கொணர்வது, போர் நிறுத்தம் ஒன்றை அறிவிப்பது இந்த இரண்டையும் இந்தியாவே நிராகரித்தது.

எனவே ஆக்கபு+ர்வமாகவும் அறிவுபு+ர்வமாகவும் ஆழமாகச் சிந்தித்து ஒற்றுமையுடன் நாம் செயலாற்ற வேண்டும். எந்தக் கட்டத்திலும் எமது நம்பிக்கையை நாம் இழக்கக் கூடாது.  முள்ளிவாய்க்கால் அழிவை நாம் விடுதலைக்குக் கொடுக்கப்பட்ட விலையாகப் பார்க்க வேண்டும். இரண்டு இலட்சம் மக்களது சாவும் முப்பதினாயிரம் போராளிகளது ஈகையும் வீண் போகக் கூடாது. காலம் ஒரு நாள் கனியும் எமது கவலைகள் யாவும் தீரும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.  அய்ரிஷ் போராட்டம் 120 ஆண்டுகள் நீடித்தது என்பது வரலாறு.  எனவே தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. 

அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். 
                                       (குறள் 611)

 நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.  வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.  (
“இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தாடல் களத்தில் படிக்கப்பட்ட கட்டுரை - ஏப்ரில் 23, 2011)

 


அய்யன்னா நிபுணர் குழுவுக்கு முறைப்பாடுகள் சமர்ப்பிக்க வேண்டிய கெடு முடிய  இன்னும் 22 நாள்களே எஞ்சியிருக்கின்றன

நக்கீரன்

ய்க்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்  போரின் போது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மற்றும்  மானிட உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக (alleged violations of international human rights and humanitarian law)  தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது தெரிந்ததே. இப்படியான ஒரு நிபுணர் குழு அமைக்கப் போவதாக  பான் கீ மூன் முதல் முறையாக மார்ச்சு 05, 2010 இல் அறிவித்திருந்தார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி டாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் இரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிபுணர் குழு கடந்த யூன் 21 ஆம் நாள் நியமிக்கப்பட்து. அப்போது பான் கீ மூன் விடுத்த அறிக்கையில்  பொறுப்புடமை (Accountability) ஒன்றுதான்  சிறீ லங்காவில் நிரந்தர அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் அவசியமான அடித்தளமாக இருக்கிறதாக தான் நம்புவதாகவும் இந்த  நிபுணர் குழு மூலம் அய்யன்னா அதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.

அய்யன்னா நிபுணர் குழுவின் பணிகள் நான்கு மாதங்கள் கழித்து கடந்த செப்தெம்பர் 18 ஆம் நாளே தொடங்கியது. 

இந்த நிபுணர் குழு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்குப் பயணம்  செய்த  அய்க்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் சிறீ லங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே இருவரும் விடுத்த  கூட்டு அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் நடைமுறை தொடர்பாக  ஆராயவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது பன்னாட்டுச் சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும்.

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட முனையும் இந்தக்குழு அதன் பணிகளை நான்கு மாதங்களுக்குள் நிறைவு செய்துகொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ள பேச்சாளர் நெசிர்கி, தேவையேற்படின் இந்தக்குழுவின் காலம் நீடிக்கப்படும் என்றும்  தெரிவிததார்.

இலங்கையில் அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட பான் கீ மூன் நியமித்த இந்த நிபுணர் குழு தனது பங்களிப்பைப் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தக் குழு உண்மை கண்டறியும் குழுவாக இருக்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள அய்யன்னா பேச்சாளர், செயலாளர் நாயகத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆலோசனை வழங்கும் உரிமை மட்டும் இதற்கு உண்டு எனக்  குறிப்பிட்டுள்ளார்.

தமது  அறிக்கையின் எந்த விடயங்களைப் பொதுமக்களுக்கு வெளியிடுவது? எந்த விடயங்களைச் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்குத் தெரிவிப்பது என்பது தொடர்பாக இந்தக்குழுவே தீர்மானிக்கும் எனப்  பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இந்தக்குழு இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட விரும்புகிறது. ஆனால் இலங்கைக்குச் செல்லும் நோக்கம் அதற்கு இல்லை என நெசிர்கி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பாக விசாரணை செய்யவேண்டியது இலங்கையின் பொறுப்பு  என்பதே பான் கீ மூனின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த நிபுணர் குழுவின் பணிகளுக்கான நிதி, பான் கீ மூனின் உடனடி தேவைகளுக்கான நிதியில் இருந்து பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழு அமைக்கப்படுவதைத் தடுக்க  சிறீ லங்கா அரசு பகீரத முயற்சிகள் செய்து   பலத்த எதிர்ப்புக்கள் தெரிவித்த  போதும் அதனை மீறி அய்யன்னா அவையின் செயலாளர் நாயகம் இந்தக் குழுவை அமைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இது இராசதந்திர மட்டத்தில் சிறீ லங்கா அரசுக்குக் கிடைத்த படுதோல்வி ஆகும். தமிழர் தரப்புக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.

 அய்யன்னா நியமித்த நிபுணர் குழுவை எதிர்த்து சிறீ லங்கா அமைச்சர் ஒருவர் கடந்த யூலை மாத முற்பகுதியில் அய்யன்னாவின் கொழும்பு தூதுவராலயத்துக்கு முன் பவுத்த தேரர்கள் புடை சூழ  சாகும்வரை உண்ணா நோன்பு இருந்தார். அவரது ஆதரவாளர்கள் அய்யன்னா தூதுவராலயத்தை நாள்க்கணக்கில் முற்றுகை இட்டு முடக்கினார்கள். இதனால் தூதுவராலய ஊழியர்கள் பாதுகாப்புக் கருதி அங்கிருந்து வெளியேற  நேர்ந்தது.   

இந்தக் குழு அமைக்கப்படுவதற்கு 118 அணிசேரா நாடுகளைக் கொண்ட அணிசேரா அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. பின்னர் அந்த எதிர்ப்பு கைவிடப்பட்டது. இந்த அணிசேரா நாடுகளின் அமைப்பில் சிறீ லங்கா இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிபுணர் குழுவை எதிர்த்து உருசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை விட்டது.  அதில் அய்யன்னா பாதுகாப்பு அவை மற்றும் பொதுச் சபை இரண்டையும் மீறி பான் கீ மூன் செயல்படுவதாக  குற்றம் சாட்டப்பட்டது.

சிறீ லங்கா அரசு நிபுணர் குழு உறுப்பினர்கள் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடைபோட்டுள்ளது.  இந்தக் குழுவுடன் எந்தவொரு  தொடர்பையும் பேணப்போவதில்லை என  சிறீ லங்கா அரசு தெரிவித்துள்ளது.

அணிசேரா நாடுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அய்க்கிய நாடுகள் செயலாளர் நாயகம்  பான் கீ மூன்  அணி சேராநாடுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். இந்தக் குழு, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து தமக்கு அறிவுறுத்தும்  குழு மாத்திரமே என்றும் அதற்கு விசாரணை மேற்கொள்ளும்  அல்லது உண்மையைக் கண்டறியும் (not an investigative or fact-finding panel ) அதிகாரம் கிடையாது  எனப் பான் கீ மூன் விளக்கம் அளித்தார். அத்துடன் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதன் கீழேயே இந்தக்  குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அய்க்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு  நான்கு மாதங்கள் வரை விசாரணைகளை நடத்தும்.  இது தொடர்பாக நிபுணர் குழு விடுத்த அறிக்கையில் பின்வரும் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

        1) முறைப்பாட்டாளர்கள் எழுத்து மூலம் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத முறைப்பாட்டை சமர்ப்பிக்கலாம். ஒருவர் ஒரு முறைப்பாட்டை மட்டும் சமர்ப்பிக்கலாம்.  முறைப்பாட்டில் குறிப்பிடப்படும் சாட்சிகளின் தொடர்பு விபரங்கள் கொடுக்கப்பட வேண்டும். முறைப்பாடு எந்த மொழியில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படாவிட்டாலும் ஆங்கில மொழியில் அனுப்புவதே நல்லது. ஆங்கிலம் தெரியாதோர் தமிழில் எழுதி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்புதல் வேண்டும்.

            2) முறைப்பாடு சிறீ லங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மற்றும்  மானிட உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் (alleged violations of international human rights and humanitarian law during the final stages of the conflict in Sri Lanka) பற்றியதாக இருக்க வேண்டும்.

            3)  யாரும், அவர் எந்த நாட்டையோ இனத்தையோ சார்ந்தவராக இருப்பினும் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம். குறிப்பாக-

                       அ)  நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள்
                    ஆ)  உறவுகள் பாதிக்கப்பட்டவர்கள்
 
                   இ)  மனித உரிமை மீறல், இன அழிப்பு பற்றித் தெரிந்த அனைவரும்
                      ஈ)  அரச சார்பற்ற நாட்டு அல்லது பன்னாட்டு அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
                      உ)
 ஊர்ச் சங்கங்கள்
        ஊ)   மாணவர் அமைப்புகள்
        எ)   தொழில்சார் வல்லுனர்கள்
                     ஏ)
  வணிக வாரியங்கள்
                     ஒ)
 இதர சங்கங்கள்
        ஓ) பிற மொழி நண்பர்கள், அமைப்புகள்,

            4)  ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம்.  அனுப்பவேண்ட்டிய முகவரி:   panelofexpertsregistry@un.org.  இந்த மின்னஞ்சலை    வேறு யாரும் பார்க்க முடியாது.

    5) காலக்கெடு:          டிசெம்பர் 15, 2010 ( December 15, 2010)

        7) முறைப்பாட்டாளர்களின் முறைப்பாடு இரகசியமாக வைக்கப்படும்.

கீழ்க்கண்ட இணைய  தளங்களில் மேலதிக தரவுகள் தரப்பட்டுள்ளன. அதனைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

http://www.facebook.com/group.php?gid=222716130480
http://www.yarl.com/forum3/index.php?showtopic=77243

முறைப்பாட்டாளர்கள் விரும்பின் அந்தந்த நாட்டு தமிழ் அமைப்புகளுக்கு ஒரு படியை அனுப்பலாம். கனடாவைத் தளமாகக் கொண்ட போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்திற்கு ஒரு படியை அனுப்பி (un@cwvhr.org) வைக்கலாம். 

சிறீ லங்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப் பட்டுள்ள இந்தக் குழுவின் முன் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் உறவினர்களும் பொது அமைப்புக்களும் தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்வது அவசியம். இந்தக் குழுவின் அதிகாரங்கள் சிறீ லங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனிதவுரிமை மற்றும் போர் பற்றிய மானிட சட்ட மீறல்கள் பற்றி அய்யன்னா அவையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் என மட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் அதன் பரிந்துரைகள் ஒரு முழு அளவிலான போர்க்  குற்ற விசாரணைக்கு வழிசமைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே உங்கள் சமர்ப்பித்தல்களின் இறுதியில்  நிபுணர் குழு கீழ்க்கண்டவற்றையும் அய்யன்னா அவைச்  செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்கலாம்.

1) சிறீ லங்காவில் இடம்பெற்ற  மனித உரிமை மற்றும்  பன்னாட்டு மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் இழைக்கப்பட்ட  போர்க்குற்றங்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான குழுவை  (The institution of an independent War Crimes Inquiry panel) அமைத்தல்.

2) வட - கிழக்கில் வாழும் தமிழ்மக்களது உண்மையான விருப்பத்தை அறிந்து கொள்ள  அய்யன்னாவின் கண்காணிப்பில் ஒரு நேரடி வாக்கெடுப்பு (UN supervised referendum on  right of self-determination of Thamils in the North and East to asceratain the politicaal aspirations) நடத்தல் வேண்டும். 

எனவே இந்த அரிய வாய்ப்பைத் தமிழ்மக்கள் நழுவ விடக்கூடாது. அய்யன்னா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களால்  நியமிக்கப்பட்ட இந்த நிபுணர் குழுவே தமிழீழ மக்களது விடுதலைப் போராட்டத்தையும் அந்தப் போரில் ஏற்பட்ட உயிர், உடமை இழப்புக்களையும் அனைத்துலக மயப்படுத்தப்பட வழிசமைத்துள்ளது. தாய் தந்தையர்களை, மனைவி பிள்ளைகளை,  உடன் பிறப்புக்களை, உற்றார்  உறவினர்களை இழந்தவர்கள்,  உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக்கப் பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,  சொந்த வீடு வாசல்களை இழந்தவர்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டவர்கள்,  மொத்தமாக சிங்கள ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்ட அனைவரும்  இந்த வாய்பைப் தக்கவாறு பயன்படுத்த வேண்டும்.

அய்ரோப்பா, கனடா, மலேசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா நாடுகளில் வாழ்வோர் அவரவர் நாட்டில் இயங்கும் மக்கள் அமைப்புக்கள் ஊடாக  வேண்டிய  உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பாகச் செயற்படும் உலகத் தமிழர் பேரவை (info@globaltamilforum.org)  பிரித்தானிய பேரவை  அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு (mte.france@gmail.com - 00 33 615 88 4221)  கனடா போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவம் (un@cwvhr.org - 416-628-1408) போன்ற அமைப்புகளோடு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

முறைப்பாடுகள் சமர்ப்பிக்க வேண்டிய கெடு முடிய இன்னும் 22 நாள்களே எஞ்சியிருக்கின்றன என்பதால் விரைந்து வினைசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  (December,  2010)


 

மே 18 முடிவல்ல! மற்றொரு போராட்டத்தின் தொடக்கம்!

 

நக்கீரன்

மே 18 தமிழீழ மக்களது குருதி படிந்த நாள்.  நான்காவது தமிழீழப் போர் முடிவுக்கு வந்த நாள். வரலாற்றில் மறக்க முடியாத வலிகளைச் சுமந்த நாள்.

 

மே 18  தமிழீழ மக்களின் மனதில் ஏற்படுத்திய வலி காலத்தால் துடைக்க முடியாத ஒன்று. எங்களது மக்கள் குண்டு போட்டும் செல் அடித்தும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். ஆண், பெண், குழந்தைகள் என எல்லோருமே கொல்லப்பட்டார்கள். பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த மக்களை சிங்கள இராணுவம்  புல்டோசர் கொண்டு மண்ணால் மூடியது.  இறந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களின் உடல்கள் எங்கும் சிதறுண்டு கிடந்தன. அதனை நாய், நரிகள் சாப்பிட்டன. முள்ளிவாய்க்கால் முழுவதுமே பிணவாடை வீசியது.  சரண் அடைந்தவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் சித்திரவதை செய்யப்படட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

 

முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகள் பீரங்கி கொண்டு தாக்கப்பட்டன. மருந்துவமனைகள் தாக்குதலுக்கான இலக்குகளே என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சே கொக்கரித்தார்.  மக்களுக்கு போதிய உணவு, மருந்து வழங்கப்படவில்லை. அய்யன்னா அதிகாரிகளும் செஞ்சிலுவை ஊழியர்களும் வெளியேற்றப்பட்டார்கள்.

 

சாட்சியமில்லாத இந்த இனப்படுகொலையை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. உலக அமைதிக்காக உருவாக்கப்பட்ட அய்யன்னா மவுனம் காத்தது. அய்யன்னாவின்  செயலாளர் நாயகம் பான் கி மூன் இனப்படுகொலை நடந்து முடிந்த பின்னர் முள்ளிவாய்க்காலை உலங்குவானூர்தியில் மேலே இருந்து சுற்றிப் பார்த்தாரேயொழிய அந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை.

 

மே 25, 2009 அன்று பான் கி - மூன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் இறுதித் தாக்குதல் நடத்திய இடத்தைப் உலங்கு வானூர்தியில் இருந்து பார்வையிட்ட பின்னர்டம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை கவலையளிப்பதாகக் கூறினார்.  " நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பயன்பாடிற்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை. இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலைகண்டு மிகுந்த கவலை அடைந்துள்ளேன். உலகம் முழுவதிலும் உள்ள இதனை ஒத்த பகுதிகளுக்கு நான் பயணம் மேற்கொண்டுள்ளேன், ஆனால் இங்கு (சிறீ லங்கா) கண்டதை போல நான் எங்கும் கண்டதில்லை. பலர் தமது உறவுகளை இழந்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை" என்று பாம்பும் சாக வேண்டும் தடியும் முறியக் கூடாது என்ற பாணியில் திருவாய் மலர்ந்தார்.

 

 போரில் மொத்தம் 1,300 பேர் இறந்தார்கள் என்றும் அவர்கள் எல்லோரும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றும் சிறிலங்கா அரசு கூறியது.  மேலும் இந்தப் போரில் பொதுமக்களில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை (”Zero Tolerance Casualties")  என்றும் கூசாமல் பொய் சொன்னது.  ஆனால் அய்யன்னாவின் அப்போதைய‌ அறிக்கை 7,000 பொதும‌க்க‌ள் இற‌ந்த‌தாகக் கூறிய‌து. பிரித்தானிய,  பிரெஞ்சு  ஊட‌க‌ங்க‌ள் 20,000 பொதும‌க்க‌ள் இற‌ந்த‌தாகக் கூறின‌. போர்க் கால‌க‌ட்ட‌த்தில் அய்யன்னாவின் பிர‌திநிதியாக‌ இல‌ங்கையில் இருந்த‌ கோர்ட‌ன் வைசு 40,000 பொது ம‌க்க‌ள் இந்த‌ப் போரில் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌க் கூறினார்.  அல்ஜ‌சீரா தொலைக்காட்சி 70,000 பொதும‌க்க‌ள் இற‌ந்ததாக‌க்  கூறிய‌து.

 

ச‌ன‌வரி 15,  2010 அன்று ட‌ப்ளின் ம‌க்க‌ள் தீர்ப்பாய‌ம் "இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ இறுதிக் க‌ட்ட‌ப் போரில் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளும் போர்க்குற்ற‌ங்க‌ளும் நிக‌ழ்ந்துள்ள‌ன‌. மேலும் இல‌ங்கையில் இன‌ப்ப‌டுகொலை ந‌டைபெற்ற‌த‌ற்கான‌ சாத்திய‌க்கூறுக‌ள் உள்ள‌ன‌. இதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் தேவை" என்று   மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை கூறியது.

இதனைத் தொடர்ந்து 2010 மார்ச் மாத‌ம் லூயிசு ஆர்ப்ப‌ர் த‌லைமையிலான‌ ப‌ன்னாட்டு நெருக்க‌டி குழும‌ம் (International Crisis  Group) த‌ன‌து அறிக்கையை வெளியிட்ட‌து. அதில் போர்க்குற்ற‌ம் தொட‌ர்பான‌ ஒரு விசார‌ணை தேவை என்ற‌ கோரிக்கை முன்வைக்க‌ப்ப‌ட்ட‌து. இதைத் தொட‌ர்ந்து ம‌னித‌ உரிமை க‌ண்காணிப்ப‌க‌ம், ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமை அமைப்புக‌ள், ப‌ன்னாட்டு ம‌ன்னிப்பு சபை (Amnesty International)  எல்லாம் த‌ங்க‌ளிட‌ம் உள்ள‌ போர்க்குற்ற‌ம் தொட‌ர்பான‌ சாட்சிய‌ங்க‌ளை ஒவ்வொன்றாக‌ வெளியிட்டன. இந்த அழுத்தங்கள் காரணமாக  அய்யனாவின் செயலாளர் நாயகம் பான் கி - மூன் யூன் 3, 2010 அன்று  சிறிலங்கவில் ந‌ட‌ந்த‌ போர்க்குற்ற‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ விசாரிக்க‌  மூன்று பேர் கொண்ட‌ ஒரு வல்லுநர் குழுவை நிய‌மித்தார்.

 

பான் கி-மூன் நியமித்த வல்லுநர் குழு சிறிலங்கா அரசு போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதற்கு  நம்பத்தகுந்த சான்றுகள் உள்ளதாக கூறும் அறிக்கையொன்றினை மார்ச்சு 31 இல் சமர்ப்பித்தது.  இந்தப் போர் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது அதற்கான ஆயத்தங்களை சிறிலங்கா அரசு எப்படிச் செய்தது என்பதை அந்த அறிக்கை புட்டுக்காட்டியுள்ளது.

1) இந்தியாவின் த‌லையீடும், இந்திய‌ க‌ட‌ல்ப‌குதியில் இந்தியா த‌ன‌து போர்க்க‌ப்ப‌ல்க‌ளை நிறுத்திப்  புலிக‌ளைக் க‌ண்காணித்து வ‌ந்த‌தும் செய்ம‌தி மூல‌ம் கிடைக்கும் த‌க‌வ‌ல்க‌ளை சிறிலங்காவுக்குக் கொடுத்து உத‌விய‌து மிக‌ முக்கிய‌மான‌ ஒன்றாகும்.

 

2) ப‌ய‌ங்க‌ரவாத‌த்திற்கு எதிரான‌ போர் என்ற‌ பெய‌ரில் சிறிலங்கா இந்த‌ப் போரைச் செய்த‌தால் உல‌க‌ நாடுக‌ளின் த‌லையீடுக‌ள் இல்லாம‌ல் இருந்த‌து.

 

இலங்கை அர‌சின் இறுதிக‌ட்ட‌ப் போருக்கான‌ த‌யாரிப்பு

 

1) பயங்கரவாத‌த்தை தடுக்கும் ச‌ட்ட‌ம் (Prevention of Terrorism Act)

 

2) அவச‌ர‌காலச் ச‌ட்ட‌ விதிகள்  (Emergency Regulations )

 

3)  ஆட்சித்தலைவரின் அதிகாரத்தின் மூலமாக‌ அவ‌ர‌து குடும்ப‌த்தைச் சேர்ந்த‌ 300 குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் முக்கிய‌மான‌ அர‌ச‌ ப‌த‌விக‌ளில் அம‌ர்த்த‌ப்ப‌ட்டார்க‌ள் (எடுத்துக்காட்டு - கோத்த‌ப‌யா இராச‌ப‌க்சே பாதுகாப்பு அமைச்சுச்  செய‌ல‌ராக‌வும்  ப‌சில் இராச‌ப‌க்சே அதிப‌ரின் ஆலோச‌க‌ராவும் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌து)

 

4) போர் நிறுத்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் 66 ம‌னித‌ உரிமை ஆர்வலர்க‌ள் அர‌ச‌ ப‌டையால் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள்.

 

5) செப்தெம்பர் 8, 2008 அன்று யாருக்கும் பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ முடியாத‌ கார‌ண‌த்தினால் போர் ந‌டைபெறும் ப‌குதியில் இருந்த‌ அனைத்து ம‌னித‌ உரிமை அமைப்புக‌ளும் வ‌ன்னிப்ப‌குதியை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா அர‌சு கட்டாயப்படுத்தியது.

 

அய்யன்னா வல்லுநர்  குழுவின் அறிக்கை இல‌ங்கை அர‌சு ம‌னித‌ குல‌த்திற்கு எதிரான குற்ற‌ங்க‌ளைச் செய்துள்ள‌து என‌ குற்ற‌ம் சாட்டியுள்ள‌து.

    1) அப்பாவி பொதும‌க்க‌ளைக் கொன்றது

    2) வெள்ளைக் கொடி ஏந்தி ச‌ர‌ண‌டைய‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளைச் சுட்டுக்  கொன்ற‌து

    3) கைது செய்த‌ போர்க்குற்ற‌வாளிக‌ளைக் கொன்ற‌து.

 

மேலும்  இல‌ங்கை அர‌சு ப‌ன்னாட்டுப் போர் விதிக‌ளை மீறியுள்ள‌தாக‌வும் அய்யன்னா வல்லுநர் குழு குற்ற‌ம் சாட்டியுள்ள‌து.

    1) இல‌ங்கை அர‌சு ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமை விதிக‌ளையும் மீறியுள்ள‌து. ச‌ன‌வரி 29 வ‌ரை ஐ.நா அதிகாரிக‌ள் இருவ‌ர் போர்ப்ப‌குதியில் இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் இறுதியாக‌ போர்ப்ப‌குதியை விட்டு வெளியேறும் பொழுது நில‌மெங்கும் ம‌க்க‌ளின் பிண‌ங்க‌ள் இருந்த‌தால் வான் நோக்கி பார்த்தவாறே ந‌ட‌ந்து வ‌ந்த‌தாக‌வும், ஆனால் ம‌ர‌ங்க‌ளில் எல்லாம் வெடித்துச் சித‌றிய‌ குழந்தைக‌ளின் உட‌ல் பாக‌ங்க‌ள் இருந்த‌தாக‌வும் அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள்.

 

    2) போரில்லாப் ப‌குதி என்று கூறிய‌ இட‌த்தில் வ‌ந்து குவிந்த‌ ம‌க்க‌ளைக் கொன்ற‌து.

 

    3) பொதும‌க்க‌ள் மீது க‌ன‌ர‌க‌ ஆயுத‌ங்க‌ள் பாவித்த‌து.

 

    4) ம‌ருத்து‌வ‌ம‌னையின் க‌ழிவ‌றை வாயில் முத‌ற்கொண்டு நோயாளிக‌ளால் நிர‌ம்பிய‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளின் மீது குண்டுவீசிய‌து.

 

இறுதிக் கால‌ங்க‌ளில் ம‌ய‌க்க‌ம‌ருந்து கொடுக்க‌ப்ப‌டாம‌ல் 40,000 அறுவை வைத்தியம் அங்கு ந‌டைபெற்ற‌தாக‌வும் கையுறைக‌ள் இல்லாத‌தால் ம‌ருத்துவ‌ர்க‌ள் வெறும் கைக‌ளினாலேயே அறுவை வைத்தியம் செய்த‌தாக‌வும் மேலும் “blade” இல்லாத‌தால் ஒருமுறை ப‌ய‌ன்ப‌டுத்திய‌ “blade” யையே ம‌றுமுறை அவ‌ர்க‌ள் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு ம‌ய‌க்க‌ ம‌ருந்துக‌ளும் சில‌ முக்கிய‌மான‌ ம‌ருந்துக‌ளும் தேவை என‌ அர‌சிட‌ம் கோரிக்கை வைக்க‌ அர‌சோ இவ‌ர்க‌ளுக்கு த‌லைவ‌லிக்கு கொடுக்க‌ப்ப‌டும் சில‌ மாத்திரைக‌ளை ம‌ட்டுமே கொடுத்த‌து. மேலும் ம‌னித‌நேய‌ அடிப்ப‌டையில் ப‌ணிபுரிந்த‌ மூன்று ம‌ருத்துவ‌ர்க‌ளை இல‌ங்கை அர‌சு கைது செய்தது. இவை  எல்லாம் ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமைக‌ளை மீறிய‌ செயல்க‌ளாகும் என‌ அறிக்கை கூறுகின்ற‌து.

 

மே 13, 2009 அன்று அய்யன்னா போர்ப் ப‌குதியில் 1,00,000 ம‌க்க‌ள் ம‌ட்டுமே இருப்ப‌தாக‌ கூறிய‌து. இந்திய‌  நாடாளும‌ன்ற‌த்தில் பிர‌ணாப் முக‌ர்ஜி வெறும் 70,000 ம‌க்க‌ள் ம‌ட்டுமே போர்ப்ப‌குதியில் இருப்ப‌தாக‌க்  கூறினார். இன்னும் ஒரு ப‌டி மேலே போய் இல‌ங்கை அர‌சோ வெறும் 10,000 பேர் ம‌ட்டுமே இருப்ப‌தாகக் கூறிய‌து. ஆனால் ப‌ன்னாட்டு செஞ்சிலுவைச் ச‌ங்க‌மோ காய‌ம‌டைந்து இருந்த‌ 14,000 பொதும‌க்க‌ளைத் த‌ன‌து க‌ப்ப‌ல் மூல‌ம் இல‌ங்கையின் ம‌ற்றொரு ப‌குதிக்கு வைத்தியத்திற்காக‌ கூட்டிச்சென்ற‌தாகக் கூறிய‌து. இவ‌ர்க‌ளில் 5,000 பொதும‌க்க‌ள் காலையோ, கையையோ இழ‌ந்த‌வ‌ர்க‌ளாவ‌ர். மேலும் இவ‌ர்க‌ளை எல்லாம் “போரில்லாப் ப‌குதி” என்று அர‌சு அறிவித்த‌ ப‌குதியில் இருந்தே கொண்டு சென்றோம் என‌ செஞ்சிலுவைச் ச‌ங்க‌ம் கூறிய‌து. உல‌க‌ உண‌வுத் திட்ட‌ அலுவ‌ல‌க‌ம் போர்ப்ப‌குதியில் 4,20,000 பொதும‌க்க‌ள் இருக்கின்றார்க‌ள் என்றும் அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ உண‌வை எடுத்துச் செல்ல‌வும் அர‌சிட‌ம் அனும‌தி கோரிய‌து. ஆனால் அர‌சு 1,00,000 ம‌க்க‌ளுக்கு தேவையான‌ உணவை எடுத்துச் செல்வ‌த‌ற்கு ம‌ட்டுமே அனும‌தி அளித்த‌து. அதாவ‌து ஒருவ‌ருக்குத் தேவையான‌ உண‌வு நான்கு பேருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌னால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் ப‌சியால் இற‌ந்தார்க‌ள்.

ஐ.நா நிபுண‌ர் குழுவின் கோரிக்கைக‌ள்

    1) போர்க்குற்ற‌ம், ம‌னித‌ குல‌த்திற்கு எதிரான‌ குற்ற‌ங்க‌ள் ந‌டைபெற்ற‌த‌ற்கான‌ ஆதார‌ங்க‌ள் கிடைத்துள்ள‌தால் இவை ப‌ற்றி ஒரு சுயேட்சையான‌ ப‌ன்னாட்டு விசார‌ணைக்குழு விசாரிக்க‌ வேண்டும்.

    2) த‌ற்பொழுதும் அங்கு ந‌டைபெற்றுக்கொண்டிருக்கும் வ‌ன்முறைக‌ள் நிறுத்த‌ப்ப‌ட‌வேண்டும்.

    3) விசாரணை ப‌ன்னாட்டு ச‌ட்ட‌ விதிக‌ளின்ப‌டி ந‌டைபெற‌ வேண்டும்.

    4) அய்யன்னாவும் இந்த‌ச் சிக்கலில் சில‌ த‌வ‌றுக‌ளைச் செய்துள்ள‌து.

    5)  மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற வாதம் வலுப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களும் மனித உரிமை அமைப்புக்களும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே பான் கி - மூன் மூவர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்தார். இப்போது அந்தக் குழு கொடுத்த அறிக்கை சிறிலங்கா அரசு போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதாக் குற்றம்சாட்டுகிறது.  அதற்கான சாட்சியம் இருப்பதாகச் சொல்கிறது. ஆனால் அந்த அறிக்கையையிட்டு மேலதிக நடவடிக்கை எடுக்கத் தனக்கு அதிகாரம் இல்லை என்று பான் கி - மூன் கையை விரித்துள்ளார். சிறிலங்கா அரசு, பாதுகாப்பு அவை, பொதுச் சபை,  அய்யன்னாவின் மனித உரிமைக்கான சபை அல்லது பன்னாட்டு அமைப்பு ஆகியவற்றின் சம்மதம் இன்றி ஒரு பன்னாட்டு விசாரணை ஆணயத்தை அமைக்க முடியாது என்கிறார்.

 

சிறிலங்கா பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை  உருவாக்கப்பட்ட அய்யன்னாவின் உடன்பாட்டில் கையெழுத்து இடவில்லை. அதனால் அந்த நீதிமன்றம் பாதுகாப்பு அவை சொன்னால் ஒழிய நடவடிக்கை எடுக்காது. மேலும் பாதுகாப்பு அவையில் உருசியா, சீனா இரண்டு நாடுகளின் வீட்டோ வாக்கு வேறு இருக்கிறது.  (Without consent of Sri Lanka's government or a decision by the U.N. Security Council, General Assembly, Human Rights Council or other international body, Ban will not move to set up a formal investigation of the civilian deaths. Sri Lanka is not a member of the International Criminal Court, which means the Hague-based court would require a referral by the U.N. Security Council to investigate any possible war crimes there. Veto powers Russia and China, as well as India, are among the council members opposed to formal Security Council involvement in the case of Sri Lanka, diplomats told Reuters.)

 

அதே சமயம் பல மனித உரிமை அமைப்புக்கள் ஒரு சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைக்க  பான் கி - மூன் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதாகச் சொல்கின்றன.

 

போரின்போது சிங்கள இராணுவம் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகள், கொத்துக் குண்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், பெண்கள், ஆண்கள் என அகவை,   பால் வேறுபாடின்றி 40,000 தமிழ்மக்களை மூன்று நாட்களில் கொன்றொழித்தது. சரண் அடைந்த தளபதிகளையும் போராளிகளையும் பொதுமக்களையும் சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றது. பெண்போராளிகளும், பெண்களும் கும்பல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.

 

எனவே எதிர்வரும் மே 18 இல் அய்யன்னா தலைமையக முன்றலில் நடைபெற இருக்கும் கவன ஈர்ப்புப் போராட்டம் இரண்டு முக்கிய குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.

    (1) முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாவீரர்களையும் படுகொலை செய்யப்பட்ட மக்களையும்  நினைவு கூர்ந்து அவர்களது கனவுகளை நினைவாக்குவோம் என உறுதிமொழி எடுத்தல்.

    (2) சிறிலங்கா அரசுக்கு எதிராக அய்யன்னா வல்லுநர் குழு அறிக்கையின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும்.  மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்  என அய்யன்னா பாதுகாப்பு அவை, பொதுச் சபை, அய்யன்னாவின் மனித உரிமைக்கான சபை, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம், பன்னாட்டு சமூகம் ஆகியவற்றை வற்புறுத்தல்.

 

தமிழீழ விடுதலைக்கு நாம் பாரிய விலை கொடுத்துள்ளோம். குறிப்பாக முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் கொட்டிய குருதி வீண் போகக் கூடாது.  அவர்களைக் கொன்றவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

 

நாசி இட்லரது ஆட்சியில் 400,000 அப்பாவி யூதமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்குக் கழுவாய் தேடும் வகையில் பன்னாட்டு சமூகம்  இஸ்ரேல் என்ற ஒரு தனிநாட்டை சரியாக  63  ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியது.

பாசீச மகிந்த இராசபக்சே ஆட்சியில் 200,000 அப்பாவி தமிழ்மக்கள் கொல்லபட்டதற்குக் கழுவாய் தேடிட தமிழ்மக்களது நீண்ட நாள் கோரிக்கையான சுதந்திர தமிழீழத்தை மீள் உருவாக்கப் பன்னாட்டு சமூகம் முன் வரவேண்டும்.  

 

னியொரு விதி செய்வோம். நீதியின் கதவுகள் திறக்கு மட்டும் தொடர்ந்து போராடுவோம்.  விடுதலை நெருப்பை ஓயவிடாது வளர்ப்போம்.

மே 18 முடிவல்ல,  மற்றொரு போராட்டத்தின் தொடக்கம்! (May, 2011)


  

திரு அக்னி

 

நான்தான் சொன்னேனே தமிழக ஊடகங்கள் தமிழ் இலக்கணப்படி எழுதுவதில்லை. குறிப்பாக சந்தி இலக்கணத்தை

பின்பற்றுவதில்லை.

ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டல் (spelling) தொல்லை, தமிழில் சந்தித் தொல்லை. ஆங்கிலத்தில் ஒலிப்பது போல் எழுதுவது இல்லை; ஒலிப்பது ஒரு முறையாகவும், எழுதுவது ஒரு முறையாகவும் உள்ளது. தமிழில் சொற்களுக்கு இடையே சில மெய்யெழுத்துகளைச் சேர்த்துச் சேர்த்து எழுதுதல் வேண்டும்; மெய்யெழுத்தை எங்கே சேர்ப்பது, எங்கே சேர்க்கக் கூடாது என்பது தெரிவதில்லை --இது பலரது இடர்ப்பாடு.

 

தமிழில் சந்தி இருப்பதற்குக் காரணம், பழங்காலத்தில் பார்த்துக் கற்ற கல்வி குறைவு; கேட்டுக் கற்ற கல்வியே மிகுதி. பார்த்துக் கற்கும் கல்வி மிகுந்துள்ள இக்காலத்தில், சந்தி ஒலிகள் வேண்டாதவையாக உள்ளன. இருப்பினும் பார்க்கும் கண்களுக்கு, சொற்கள் தனித்தனியே தோன்றுமே தவிர, கேட்கும் செவிக்குத் தனித்தனியே ஒலிப்பதில்லை. செவி செல்வம் எனும் இரண்டு சொற்களைத் தனித்தனியே எழுதிப் பார்க்க இயலும்; ஆனால் ஒலிக்கும்போது செவிச் செல்வம் என்று சேர்த்து ஒலிக்காமலிருக்க இயலாது. அது போன்றே சொல்லி கொடுத்தான் எனும் இரு சொற்களையும் ஒலிக்கும்போது சொல்லிக் கொடுத்தான் என்று இடையில் க் சேர்த்தே ஒலிக்க வேண்டும். இத்தகைய மாறுதல்களையே சந்தி இலக்கணம் கூறும்.

 

ஓடி + போனான் = ஓடிப்போனான் என்று வரும்.

இங்கு இரண்டு சொற்கள் சேரும்போது, இரண்டுக்கும்இடையில் ப் என்ற மெய் எழுத்து தோன்றி இருக்கிறது. இவ்வாறுஇரண்டு சொற்கள் சேரும்போது பல வகையான மாற்றங்கள்ஏற்படும்.

இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள்நான்கு வகைகளில் அமையும்.

கதவு + மூடியது = கதவுமூடியது - இயல்பாக இருக்கிறது. 

மாலை + பொழுது = மாலைப்பொழுது - ஒரு மெய்எழுத்துத் தோன்றியது. 

மரம் + நிழல் = மரநிழல் - ஓர் எழுத்துக் கெட்டது(அழிந்தது) 

கல் + சிலை = கற்சிலை - ல் என்ற எழுத்து ற் என்ற எழுத்தாகத் திரிந்தது (மாறியது).

எனவே இரண்டு சொற்கள் சேரும்போது இயல்பாக வருதல்,தோன்றுதல், திரிதல், கெடுதல் ஆகிய நான்கு வகைகளிலும்வரும் என அறியலாம். இங்கு இரண்டு சொற்கள் இருக்கின்றன.முதல் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாம் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். இந்த மாற்றங்கள் நிலைமொழியின் இறுதி எழுத்துக்கும், வருமொழியின் முதல் எழுத்துக்கும் ஏற்ப அமையும். எனவே ஒரு சொல்லின் முதல் எழுத்தையும் இறுதிஎழுத்தையும் பற்றி அறிய வேண்டியது அவசியம் ஆகிறது.

உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகியமூன்று வகை எழுத்துகள் சொற்களில் வரும். சந்திஇலக்கணத்தில் உயிர் எழுத்து, மெய் எழுத்து என்ற இருவகை எழுத்துகளை மட்டுமே கொண்டு இலக்கணம் சொல்லப்படும். உயிர்மெய் எழுத்து, உயிர் எழுத்தும் மெய்எழுத்தும் சேர்ந்து உருவானது ஆகும். அதை மெய் எழுத்து, உயிர் எழுத்து என்றுபிரித்துக்கொண்டு சந்தி இலக்கணத்தில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக ல் என்ற சொல்லின் முதலில் உள்ள ப என்ற உயிர்மெய்எழுத்து,

ப் + அ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது.

பாம்பு என்ற சொல்லின் இறுதியில் உள்ள பு என்ற உயிர்மெய்எழுத்து,

ப் + உ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது.எனவே சொற்களைப் பின்வருமாறு பிரிக்கலாம். டை - உயிர் எழுத்தில் தொடங்கும் சொல். மாடு - மெய் எழுத்தில் தொடங்கும் சொல். பழம் - மெய் எழுத்தில் முடியும் சொல். கிளி - உயிர் எழுத்தில் முடியும் சொல்


 

 

நீங்கள் குறிப்பிடும் கருணாநிதி போர் குற்றவாளி ஜெயலலிதா அந்தவகையானது.

 

தமிழ் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அதன் இலக்கணக் கட்டுப்பாடே காரணம். அதனை மீறுவது

பிழை. தோட்டத்துக்கு வேலி போல மொழிக்கு இலக்கண வரம்பு மிக மிக அவசியம். 

 

 

நக்கீரன்

 

From: M A N I T H A M [mailto:manitham@gmail.com]
Sent: Sunday, July 03, 2011 1:09 PM
To: Thanga
Subject: Re:
மனிதம் வெளியீடு - அச்சாகி வரும் புத்தகத்தின் முன் அட்டைப் பக்கம் - உங்களின் பார்வைக்காக மட்டும்.....

 

அய்யா, தமிழ் இலக்கனப்படி நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கும். ஆனால், பல்வேறு இணைய தள செய்திகளை பார்க்கும் போது, நமது புத்தக தலைப்பை "போர் குற்றவாளி" என  விட்டு விடலாமா என எண்ணத் தோன்றுகிறது. கீழே பி.பி.சி. யின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பார்க்கவும்.


கருணாநிதி போர் குற்றவாளி -ஜெயலலிதா

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/100701_jayasayskauriscriminal.shtml

கருணாநிதி ஒரு போர் குற்றவாளி”: ஜெயலலிதா

http://www.tamilwin.com/view.php?2bb269z1b2ecFJpgA00eccGmjp20cd315Lso3cd332IX944b42PTQc84a4eIQGZjdd0ee3D2cid0

அமெரிக்காவை போர் குற்றவாளி என்கிறது சிறிலங்கா அரசு!

http://www.thinakkathir.com/?p=2688

அக்னி

2011/7/3 Thanga <athangav@sympatico.ca>

நான் ஆங்கில மொழியில்தான் கற்றேன். தமிழை ஒரு பாடமாகத்தான் படித்தேன்.

தமிழ் தாய்மொழி என்ற காரணத்தால் பின் நானாகவே நிறைய வாசித்து எழுதப் பேசப் பழகினேன்.

 

ஆங்கிலத்தில் எழுதுவதைவிட தமிழில் என்னால் எனக்கே உரிய தனிநடையில் எழுதமுடிகிறது.

 

தமிழை விட ஆங்கிலம் கடினமான மொழி. அதன் இலக்கணம் மேலும் கடினமானது. இது எனது பட்டறிவு.

 

என்னிடம் தொல்காப்பியம் தொடங்கி ஆறுமுக நாவலர் எழுதிய இலக்கண நூல்கள் இருக்கிறது.

 

தமிழில் பிழையில்லாது எழுதுவது எப்படி? நல்ல தமிழில் எழுதவேண்டுமா? என்ற நூல்களை அவ்வப்போது

படிக்கிறேன். இவற்றைப் படித்த பின்னர் இலக்கியம் இனிக்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

 

நிலைமொழி இறுதியில் வருமொழி வல்லினத்தில் வந்தால் வலி மிகும் என்பது பொது விதி.

 

விதிவிலக்கு உண்டு. செடிகொடி வேறு  பொருள் செடிக்கொடி வேறு பொருள்.

 

தமிழில் சந்தி இலக்கணம் ஒரு தனிப் பிரிவு. பெரும்பாலானவர்கள் சந்தி இலக்கணப் பிழையோடுதான் எழுதுகிறார்கள்.

 

தமிழக எழுத்தாளர்கள் ர, ற பிழைவிடுகிறார்கள்.

 

நக்கீரன்