திருக்குறளில் வேளாண்மை


விவசாய (வேளாண்மை) திருக்குறள்கள்


உணவு உற்பத்தி செய்யும் பயிர்த் தொழில் உழவு அதன் சிறப்பும் செய்முறைவும்!!


எங்கு சுற்றிப் பார்த்தாலும் உலகம் ஏரின் பின்னால் நின்றாக வேண்டும். அதனால் துன்பம் தருவதாக இருந்தாலும் உழவே தழையானது. இப்போது குறளை படியுங்கள்.

’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை’’
1031.

உழவுத் தொழிலைச் செய்து அதனால் விளையும் பொருளை உண்டு உயிர் வாழ்கிறவர்களே வாழ்பவர்கள். மற்றவர்கள் எல்லாம் பிறரை வணங்கி அவர் கொடுப்பதை உண்டு ஏவல் செய்து ப்ழைக்கும் அடிமைகள் ஆவார்கள். இப்போது குறளை படியுங்கள்.

’உழுது உண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுது உண்டு பின்செல் பவர்
‘’                                            – 1033

உழவன் என்பவன் யார்? தன் கையால் உழைத்து உண்பவன், இவன் பிச்சை எடுத்து உண்ண மாட்டான், பிச்சை எடுப்பார்க்கு ஒளித்து வைக்காது கொடுப்பான். இப்போது குறளை படியுங்கள்.

’’இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவார் காவாது
கைசெய்தூண் மாலையவர்’’                                                 
    
– 1035

ஆசைபடுவதையும் துறந்துவிடும் துறவிக்கும் உடல் வேண்டும். உடலுக்கு உணவும் வேண்டும். உழவனது கை முடங்கிப் போகுமானால் துறவின் உணவுக்கும் வழியில்லை. அதாவது இல்லறத்தானுக்கும் வாழ்வு இல்லை, துறவறத்தானுக்கும் வாழ்வு இல்லை. இப்போது குறளை படியுங்கள்.

’’உழவினார் கை மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை’’  
                                             
 – 1036

உழுது உண்டு வாழ்வது எவ்வளவு சிறப்புடையதாயினும் தண்ணிர் இல்லாமல் அது சாத்தியம் இல்லை. உணவை உற்பத்தி செய்யவும் உற்பத்தியானதை உணவாக்கவும் தண்ணிர் தேவை. அந்தத் தண்ணீரே ஊணவும் ஆகிறது. இப்போது குறளை படியுங்கள்.

’’துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை’’
                                                                    
 – 12

உணவை உண்டாக்கித் தானே உணவும் ஆகின்ற தண்ணீரானது நமக்கு மழை வழியாகக் கிடைக்கிறது. மழை நீர் மண்ணுக்குள் அமிழ்வதால் பூமியில் உயிர் வாழ்க்கை நீடிக்கிறது. அதனால் நீர் அமிழ்தம் (சாவா மருந்து) என்று உணரப்படுகிறது. இப்போது குறளை படியுங்கள்.

’’வான் நின்று உலகம் வழங்கி வருவதால் தான் அமிழ்தம்
என்று உணாற் பாற்று’’                                                      
           
– 11

வானம் மழை பெய்யாது பொய்த்து போகுமானால் கடல் நீர் சூழ்ந்த இந்த உலகத்தில் மக்கள் பசிப்பிணியால் வாடுவார்கள். குறளை படியுங்கள்.

’’விண் நின்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து
உன் நின்று உடற்றும் பசி’’     
                                                  
   – 13

மழைத்துளி விழாமல் பச்சைப் புல்லைக்கூடப் பார்க்க முடியாது. ஆடு, மாடு, மேயக்கூடிய புல்லைக்கூட பார்க்க முடியாது என்றால் மரம், செடி, கொடி எல்லாம் வளர்வது எப்படி? குறளை படியுங்கள்.

’’விசும்பின் துளிவீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும்புல் தலை காண் பரிது’’ 
                                                       – 16


மழை பெய்யாது போனால் உழவர்கள் ஏர் பூட்ட மாட்டார்கள். உழவு நடக்காது. எனவே உணவும் கிடைக்காது.  குறளை படியுங்கள்.

’’ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றிக் கால்’’                                            
        
    - 14

நீரும் நிலமும் கிடைத்து கால்நடையும் கிடைத்து பயிற்சியும் கிடைத்தால் ஏர் பூட்டி உழவு செய்யலாம். ஆனால் பயிர்தொழில் என்பது அது மட்டுமே இல்லை. ஏர் உழுத பிறகு எரு இட வேண்டும். விதை முளைத்து வரும் போது களையை கட்டுப்படுத்த வேண்டும். அதன் பிறகு மழை பெய்ய வேண்டும். அல்லது நீர் பாய்ச்ச வேண்டும். பயிரைப் பாதுகாக்கவும் வேண்டும். குறளை படியுங்கள்.

’ஏரினும் நன்றால் எரு இடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன் காப்பு’
                                              
    - 1038

உழவது முதல் அறுவடை செய்து வீடு சேர்ப்பது முடிய பல பணிகளையும் இடமும் காலமும் அறிந்து செய்ய வேண்டும். அப்படிச் செய்ய முடியுமானால் மாபெரும் வெற்றி நமக்குக் கை கூடும். குறளை படியுங்கள்.

’’ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்’’                                                     
 
- 484

பருவகாலம் அடிக்கடி மாறுபடுகிறது. மழைகாலம் குறுகியும், கோடைகாலம் நீண்டு கொண்டும் வருகிறது. பருவ மழை பொய்த்துப் போகலாம்., எந்த நேரத்திலும் புயலும், வெள்ளமும் வரலாம். பருவகாலத்திற்க்கு இசைவாக நடைமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும். நமது செல்வம் சிதைந்து போகாமல் காத்துக் கொள்வதற்கான் வழி இதுவேயாகும்.
குறளை படியுங்கள்.

’’பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயறு’’                                                     
 – 482

கருவியும், காலமும் அறிந்து செயற்பட்டால் செய்ய முடியாதது என்று ஒன்று இருக்க முடியாது. கருவி குறுகிய காலத்தில் குறைந்த உழைப்பில் பருவத்தே செய்து முடிக்க உதவுகிறது. குறளை படியுங்கள்.

’’அருவினை என்ப உளவோ கருவியால்
காலம் அறிந்து செயின்’’                                                     
   – 483

கருவிகளிலெல்லாம் சிறந்த கருவி அறிவு. மனிதரைத் துன்பங்களில் இருந்து பாதுகாக்கும் கருவி அறிவு. அறிவானது அழிவுகளில் இருந்து காத்து நிற்க்கும் கோட்டை மதில் போன்றது. குறளை படியுங்கள்.
’’அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உன்னழிக்கல் ஆகா அரண்’’ – 421

செய்யக்கூடாததைச் செய்தாலும் கோடு வரும். செய்ய வேண்டியதைச் செய்ய மறுத்தாலும் கோடு வரும். (பச்சைப் பரட்சி, வெள்ளைப் புரட்சி, நீலப் புரட்சி கட்டங்களில் இப்படிதான் கேடு சூழ்ந்தது) குறளை படியுங்கள்.

‘’செய்தக்க அல்ல செய்க் கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்’’
                                                      
   – 466

நிலம் உடையவன் வேறாகவும் உழைப்பவன் வேறாகவும் இருக்க முடியாது. நிலம் என்னும் நல்லான் உழவனுக்கு வாழ்க்கைத் துணைவி. உடையவன் மகனை படிக்க வைக்க என்று பட்டணம் போகக் கூடாது. அப்படிச் சென்றால் நிலம் ஊடல் புரியும், நிலத்தால் கிடைக்கும் பயன் கிட்டாது போகும். மனைவி ஊடி விலகி இருந்தால் அதை இதை செய்து சரி செய்து விடலாம். விளைநிலம் ஊடினால் எதுவும் செய்ய முடியாது. குறளை படியுங்கள்.

’’செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடி விடும்’’
                                                        
  – 1039

வாழ்வதற்கு ஆதரமான் தண்ணீரை வானம் தருவதால் மக்கள் வானத்தை நோக்கியபடி உள்ளார்கள். வானமே பெய்தாலும் மன்னவன் நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டுமென்று அந்தந்த குடிமக்கள் எதிர் நோக்குகிறார்கள். குறளை படியுங்கள்.

’’வான் நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி’’
                                                      
 – 542

தக்க நேரத்தில் களையை நீக்க வேண்டும் இல்லாது போனால் பயிர் வளர்ச்சி குன்றிப் போகும். அதைப் போல கொலைக்கு அஞ்சாத கொடியவர்களை வேந்தன் தண்டிக்க வேண்டும். இல்லையேல் குடிமக்கள் வாழ்க்கை நசித்துப் போகும். குறளை படியுங்கள்.

’’கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களை கட்டத னோடு நேர்’’
                                                          
– 550

களைகளில் எல்லாம் கொடிய களை முள் மரங்கள். அவற்றை சிறியதாயிருக்கும் போதே களைய வேண்டும். அவ்வாறு செய்யாது வளரவிட்டால் பின்பு அதை வெட்டுவேரின் கையை வருத்தும். குறளை படியுங்கள்.

’இளைதாக முள்மரம் கொல்க களையுனர்
கை கொல்லும் காழ்த்த இடத்து’’
                                             
 – 879

நுலறிவும் தொழில் நுட்பமும் அறிந்திருந்தாலும் உலகத்து இயற்கை அறிந்து செயல் பட வேண்டியது அரசனின் கடமை. அரசு அப்படிச் செய்ய மறந்த போது மன்னனுக்கு உலகத்து இயற்கையை அறிவுறுத்த வேண்டியது அமைச்சரின் கடமை. குறளை படியுங்கள்.

’’செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்’’
                                                       
– 637

அரசன் முறை தவறி நடந்து கொண்டான் ’’ஆ’’ பயன் குன்றும். ’’ஆ’’ என்பது பசு. பசு இனத்தால் மனிதர்க்குக் கிட்டும் பயன்கள் கிட்டாது போகும். ஏர் உழுதல், வண்டி இழுத்தல், நீர் இறைத்தல், நிலத்துக்கு எரு தருதல், பால், தயிர், நெய் தருவது நின்று விடும். நூலோர் ஆறு தொழிலையும் மறப்பார்கள். கல்வி கற்றல். பிறருக்கு கல்வி கற்பித்தல், பொதுநலத்துக்காக பெரு முயற்சி செய்தல், அத்தகைய முயற்சிகளுக்கு உதவி செய்தல், அத்தகைய நல்முயற்சிகாகக் கொடுத்தல், கொடுப்பதை வசூலித்தல் ஆகிய ஆறு தொழிலும் நின்று போகும்.. (ஓதல், ஓவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல், என்று குறிப்பது தழிழ் மரபு.) குறளை படியுங்கள்.

’ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்’’                                                        
 – 560

கல்லாரை கொண்டு நடைபெறும் கடுங்கோலாட்சி ஒன்றே பூமிக்குப் பாரமக அமையும். மற்றவர்கள் முன்பே பிணியால் மாய்ந்து போயிருப்பார்கள். குறளை படியுங்கள்.

’’கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலைக்குப் பொறை’’                                           
   – 570


தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.  40
 



 


ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
.

திரு மு.வரதராசனார் உரை

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

திரு மு.கருணாநிதி உரை

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

திரு சாலமன் பாப்பையா உரை

தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.

திரு.பரிமேலழகர் உரை

ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.)

 


 

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.

( குறள் எண் : 186 )

மு. : மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா : அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

Domestic life with those who don’t agree,

Is dwelling in a shed with snake for company.

( Kural No : 890 ) 

Kural Explanation: Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.

 


 

Who on his neighbours’ sins delights to dwell

The story of his sins, culled out with care, the world will tell.  (Kural 186)  

Kural Explanation: The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.

 

 

 

சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

( குறள் எண் : 498 )

படைகுடி கூழ் அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு (381)

மு.வ : சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

சாலமன் பாப்பையா : பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.


Dear Dr.Elias Jeyarajah,

I wish to convey my deepest condolences to you and my family members on the
passing of your beloved mother  at the rype age of 92!

It is  Shakespeare who said:

"All the world's a stage,
And all the men and women merely players:
They have their exits and their entrances;
And one man in his time plays many parts,

Closer home  irukkural, the great poetic work by saint ThiruValluvar, embodies values that are ever relevant and unchanging. 

Valluvar says -

Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.  (Kural 339)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.  (குறள் 339)

He also says = 

Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share. (Kural - 338 )

The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. (குறள் 338)

 உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

 
 

Thangavelu


 


 

Rediscovering a Management and Leadership Manual in Ancient Indian L

Posted by: "க. தில்லைக் thillaikumaran@gmail.com   ka_thillai

Fri Jun 10, 2011 7:14 pm (PDT)

http://knowledge.wharton.upenn.edu/india/article.cfm?articleid=4231

usiness has often looked for guiding principles in ancient literature from various lands, including the sixth-century Chinese military treatise The Art of War, by Sun Tsu, or India's Vedas, including the battlefield epic Bhagvad Gita. Now, a new book brings to a global audience the management and leadership insights contained in the Thirukural, a collection of 1,330 aphorisms written some 2,000 years ago by Tamil poet Thiruvalluvar.

According to V. Srinivasan, author of New Age Management Philosophy from Ancient Indian Wisdom, the aphorisms, or "kurals," form a manual for governments and corporations, and they are a favorite of Indian finance minister P. Chidambaram. Srinivasan is CEO of IT services firm 3i Infotech in Edison, N.J., where he has overseen 27 acquisitions in the last seven years. He spoke about his book and the connection between ancient wisdom and modern management in an interview with India Knowledge@Wharton. An edited version of that conversation follows.

India Knowledge@Wharton: Could you tell us a little about the Thirukural?

Srinivasan: The Thirukural is believed to be about 2,000 years old. It has three parts that deal with wisdom, wealth and affection or love. Several people have analyzed it, and it has been translated into Portuguese and French.

It is considered the "Tamil Veda." (The Vedas are Sanskrit texts of Hindu wisdom.) "Veda" [means] the knowledge, realization and improvement of the self. It comes from the root "vid," meaning "knowledge." With self realization and self introspection, [people] get on a path different from those with just knowledge -- they become leaders like Mahatma Gandhi or Mother Teresa.

While the Thirukural talks of the three qualities of wisdom, wealth and love, Tamil literature talks of a fourth aspect of "veedu," which refers to God, or nirvana. One school of thought is that if you follow every "kural" (aphorism), you will automatically reach "veedu."

The Thirukural talks about how territories maximize their wealth, and how there were princes, ministers and ambassadors. You [can] equate a prince to a CEO, a minister to a COO and an ambassador to a sales and marketing executive -- the qualities prescribed for each of these functions correspond.

India Knowledge@Wharton: What aspects of the Thirukural does your book focus on?

Srinivasan: My book concentrates on the wealth aspect of the Thirukural -- how you derive wealth, protect it and improve it. Management and leadership are closely related to wealth creation.

How does the evolution of leadership take place? From our childhood, we learn a lot of things, including mathematics, physics, chemistry and economics. The next stage is the refinement of our personal qualities. When you don't have [refined] personal qualities, you may be a knowledgeable person but you don't become a leader.

What are those qualities? Courage, conviction, determination, self control, control over anger and emotions and a disciplined way of life. To become greater, you may need to give up certain things such as your ego, or "aham bhava" (arrogance) and the cravings of the five senses.

India Knowledge@Wharton: What insights could one draw upon in the present context of the sweeping changes underway in the Indian economy? What are the key takeaways for management? For example, is the Thirukural consistent with a corporation's focus on maximizing profits for its stakeholders?

Srinivasan: To maximize profits, you need strategies and implementation. Strategy is about what to do, when to do it, how to do it and where to do it. The Thirukural has chapters on each of these.

One chapter is on deliberation before action. Another is on choosing the appropriate time. A third is on choosing the appropriate place. All the ingredients for profit maximization are contained in the Thirukural.

Consider these kurals on decision making and implementation:

"The end of all deliberation is to arrive at a decision; and when a decision is reached, it is wrong to delay its execution."

"Go straight for the goal whenever circumstances permit. When circumstances are against, choose the path of least resistance."

"Five things should be carefully considered in carrying out any action -- the nature of the action, the resources in hand, the instrument, the proper time and the proper place for its execution."

And this one is on goal setting: "Let all your purposes be grand, for even if they fail, your glory will never tarnish."

Even the greatest venture that has the wrong people will not succeed. Take India's IT companies, for example. Some 20 technology companies started operations in India between 1980 and 1985, but Infosys [Technologies] and a few others succeeded; several others vanished. What is the difference? The environment was the same and they were all doing the same kind of IT projects, but leadership made the difference.

Here are two kurals on this subject:

"Men who cannot drive home their point before a learned assembly, even if they are very knowledgeable, are good for nothing."

"Behold the man who is eloquent of speech and knows neither confusion nor fear; it is impossible for anyone to defeat him."

India Knowledge@Wharton: Some of the kurals you cite in your book seem very direct and bold. One advises you against exposing your troubles and weaknesses. They are also ruthless in some places: "Fell down thorn trees when they are young..."

Srinivasan: Leaders of large corporations that become reputable invariably follow these principles. But their people at the second or third level don't know the nuances of these things. Take, for example, premature disclosure. One kural says: "Do not reveal your troubles to men who do not know them. Similarly, do not expose your weakness to your enemies." Or this: "The man of action lets his purpose appear only when the purpose is achieved, for an untimely disclosure may create obstacles that cannot be surmounted."

Even to your board, you need to disclose things only at the appropriate time in significant detail. If you have clearly articulated in your mind the pros and cons of a proposal, you are able to explain it to the board in 15 or 20 minutes and get it passed. If you discuss your proposal prematurely without having thought it out, you risk your board rejecting it.

I have seen CEOs of several midsize companies and even some bigger companies who blame their boards for not getting their proposals passed. It is predominantly because of their inefficient articulation and inability to put forward their ideas in ways [that will] carry their boards with them.

India Knowledge@Wharton: Do you recall an illustration of that?

Srinivasan: Among the people with those qualities I have personally seen are Narayanan Vaghul [chairman of India's largest private bank, ICICI] and K.V. Kamath [CEO of ICICI]. Somehow, even if the board starts out on a negative note, saying that certain proposals are not consistent with the corporation's core competence areas and so forth, they get their proposals approved.

Take, for example, the way ICICI went about its retail banking strategy in the mid-1990s. At that time, it was a predominantly corporate finance institution. Vaghul and Kamath felt the company could not continue to be viable as a project finance institution because the new economic liberalization policies restricted access to inexpensive funds and forced it to tap the public markets like others.

They went about [developing] their retail [services] through a shared vision and ruthless implementation and made it happen, although a lot of people felt ICICI did not possess the implementation capability -- HDFC was strong in housing finance, there was Citibank in auto finance, and so on. That is where Vaghul and Kamath [offered an] articulation of the competition's limitations that ICICI could take advantage of. Without that articulation, it would have been tough to get the board's approval.

India Knowledge@Wharton: What thoughts about leadership does the Thirukural offer for Indian industry, especially now that it faces a talent shortage across the board, attrition, wage inflation, etc.?

Srinivasan: A lot of people think you become a leader by throwing your weight around -- that they need to shout at certain people and [punish them] even for small mistakes. This is particularly true of middle-level managers. Even some of the management schools create the impression that a snobbish attitude is actually helpful for leadership.

To become a leader, you have to command respect or force people to have respect for you by creating awe around yourself. The boss who forces respect is not creating a sense of belonging and togetherness, and employees will leave for better salaries. This is one reason why people complain that they cannot get the right talent; it is an indication of weakness in leadership.

Until five years ago, a strategy of forcing people to respect you worked because employment opportunities in India were scarce and people held on to their jobs like a golden cage -- they could not move out even if their leaders harassed them. Today it is an employee market, and leadership styles have to change.

India Knowledge@Wharton: Your book talks about how the Thirukural advocates an openness to dissent.

Srinivasan: Generally, a leader believes that certain things are right. He may not come to know the details of how his strategy is being implemented, and the people close to him may not reveal everything. In an open forum, even the adverse aspects will come out. But if you start punishing those who point out the adverse aspects, then nobody will give you the right information, and whatever you do will fail. A kural on this is: "A leader should have the virtue to hear the words that are bitter to his ears."

I have personally experienced this. When the second line of people in my company think what I am doing is wrong, in 75% to 80% of the cases I have been able to articulate that what I am doing is right, and they agree. And in 20% of the cases, I have agreed with what they say and changed my approach.

India Knowledge@Wharton: Thiruvalluvar also talks about how one has to be careful with the second tier of your organization's management. He seems to suggest instant sacking of undesirable people.

Srinivasan: He is advocating two things. One refers to the traitors in the camp. They know your strategy and your secrets, and help your rivals. The moment you come to know that somebody is a traitor, or even if you have a suspicion, you must remove that person or exclude him from your camp. The 10 kurals on this subject advocate a zero-tolerance approach.

Secondly, the Thirukural talks about an untrustworthy minister, or your second-in-command. It says, "He is more dangerous than even 700 million enemies."

There are many parallels here in politics and companies. People stage coups in countries because they were not removed at the right time. You will find this true also with badly planned corporate succession strategies.

The kurals talk about the desired qualities in a minister or an ambassador and advocate that the person you select must have the organization's larger objectives in mind.

India Knowledge@Wharton: What can one learn from the Thirukural about financial management?

Srinivasan: This kural is useful in financial management: "It does not matter if the feeder channel is narrow, so long as the draining channel is not wider."

You may also apply the following kural to managing your company's debt: "If you put too many of them, even the peacock's feathers would break the wagon's axle."

India Knowledge@Wharton: M&As are now a popular route for many Indian companies. But many firms are new to the game, and there are concerns about whether they have the relevant experience -- whether they might overpay and so forth.

Srinivasan: A lot of M&As are driven today by concerns that a company may not be able to grow and gain market share unless it acquires or gets acquired. Also, there is a fear among promoters that the value of their stock may fall. One kural says: "Take into consideration the inputs, the wastage, the output and the profit that an undertaking will yield; these are the yardsticks for any new venture."

The Thirukural also says: "There are enterprises that tempt with a great profit but which perish even the capital itself. Wise men will not undertake them." Also: "Before taking up any enterprise, determine first the exertion necessary, the obstacles on the way and the expected profit at the end."

In addition, the kurals encourage you to be pragmatic. For example: "When the territory of the king (market share of a company) declines, leading to a fear in the mind of the king (CEO) that he will not be able to survive the opponent (competition), it is better for him to submit to an alliance with a stronger king (acquiring company)."

Also, consider these kurals on the right time to [acquire]: "Bend down before your adversaries when they are more powerful than yourselves. They can be easily overthrown when you attack them at the moment when their power is on the decline." And: "When the tide is against you, feign inaction like the stork. When the tide is on, strike with swiftness and sure aim."

India Knowledge@Wharton: What does the Thirukural say about corporate governance and social entrepreneurship?

Srinivasan: Basically, corporate governance is openness, transparency and not doing things for private benefit. If you follow the virtues prescribed in the kurals, you will automatically be on the path of good governance. One kural says: "Let the thing you decide to do be above reproach, for the world looks down upon the man who stoops to a thing that is beneath himself."

Another kural could be related to nepotism and playing favorites: "If you choose an unfit person for your job just because you love and you like him, he will lead you to endless follies."

And there are others that could apply to social entrepreneurship, such as: "The prince (CEO) shall know how to develop the resources of his kingdom, how to enrich his treasury, how to preserve his wealth and how to spend it worthily."

India Knowledge@Wharton: You say in your book that 3i Infotech faced many challenges as it grew with acquisitions. How did you use the Thirukural to deal with them?

Srinivasan: At 3i Infotech, I relied on the Thirukural mainly in the selection and removal of a lot of people. For example, the kural [I mentioned earlier] was helpful to me: "The minister that sits in the council and plots the ruin of his prince is more dangerous than 700 million enemies." At the time, I was in India, and a senior company executive started cutting off communication with employees and became unapproachable to them. He began making it appear as if I had authorized some decisions, basing them on half-conversations with me and extracting a "yes" from me on some things.

One day, after I returned to the U.S., I realized he was dangerous to the organization. He had stepped out for lunch and when he returned I dismissed him on the spot.

I had also hired some people without proper checks and had to remove them. Another kural says: "Never trust men without testing them, and after testing them give each one of them the work for which they are fit." These days, I first place [hires] in some relatively less sensitive positions before elevating them.

India Knowledge@Wharton: Are there kurals that seem to go against popular wisdom but are, in fact, worth following?

Srinivasan: Regarding the retention of your good second-level people, one kural says that if a certain person is very good at his work, don't mind the small liberties he takes. It says: "If the king (CEO) is harsh of word and unforgiving, his prosperity, even if it is great, will end quickly." If somebody is good and you pep him up, his ego gets boosted and he may take some small advantages. If you become too tight with the rules, it may hurt him and you may lose some bigger things. That is an unconventional thought.

Another kural encourages you to make friends with your enemy's enemy. If a CEO or a minister converts an enemy's enemy into a friend, half your battle is won because your enemy is weakened -- you become two and he becomes one.

India Knowledge@Wharton: Many other ancient philosophical texts and religious works from different faiths must also have lessons for management and leadership. How is the Thirukural different?

Srinivasan: Compared to the Bhagvad Gita and the Vedas, the Thirukural goes into more detail and nuances rather than the broad philosophy. The Thirukural is more like a manual and has 10 kurals on every aspect; it lays out the procedures and processes. The other works don't talk about the right time and strategy for an enterprise, people management, and so forth.

அன்புடன் (Kind Regards),
க. தில்லைக்குமரன் (Ka. Thillaikumaran)


 

 


 

20-12-2010

 

jkpo;g; gz;ghl;Lf;F Ntyp Nghl;l jpUts;StH

(ef;fPud;)

jkpo;nkhopf;F tuk;G fl;batH njhy;fhg;gpaH. jkpoH gz;ghl;Lf;F Ntyp Nghl;ltH jpUts;StH. 

jkpOf;F 'fjp" fk;guhkhazKk; jpUf;FwSk; vd;W Ngrg;gLtij Nfl;bUf;fpNwhk;. ,yf;fpaf; fz;Nzhl;lj;jpNyNa ,t;thW nrhy;yg;gLfpwJ. fk;guhkhazKk; jpUf;FwSk; jkpopy; cs;s ,izaw;w ,yf;fpar; nry;tq;fs; vd;gjpy; ve;jf; fUj;J NtWghLk; ,y;iy. ,Ue;Jk; ,e;j ,uz;L Ehy;fSk; ntt;NtW ,yf;fpaj; jsj;ijr; rhHe;jit. 

fk;guhkhazk; xU rka fhg;gpak;. fhyj;jhy; gpe;jpaJ. fhrpy; nfhw;wj;J ,uhkd; fijiathy;kPfp tlnkhopapy; Kjypy; ghbdhH. mijj; jOtpNa Mapuk; Mz;Lfs; fopj;J  fy;tpapy; ngupa fk;gH ,uhkfhijia ,aw;wpdhH. vdNt fk;guJ ,uhkfhij topEhy;. ,Ue;Jk; %yEhypy;  fhzg;glhj ,yf;fpa jpl;g El;g moFfs; fk;guJ ,uhkhazj;jpy; fhzg;gLfpwJ. thy;kPfp ,uhkid xU rpwe;j murdhfr; rpj;jupf;f fk;gH mtid mtjhu epiyf;F  caHj;jpdhH. mJNt fk;guJ gyKk; gytPdKk; MFk;. 

jpUf;Fws; xU xOf;f Ehy;. fhyj;jhy; Ke;jpaJ. vy;yhr; rkaj;jtUf;Fk; vy;yhf; fhyj;jpw;Fk; Vw;wjhd nghJ kiw. jkpopy; vOjg;gl;l Kjy; Ehy; vd;w ngUikia cilaJ. 

jpUf;FwSk; xU nkhopngaHg;G Ehy;jhd; vd;W nrhd;dtHfs; xU fhyj;jpy; ,Ue;jhHfs;. jpUf;Fwspd; mwj;Jg;ghy; kDePjpapd; jOty; vd;Wk;> nghUl;ghy; fTby;aupd; mHj;jrhj;jpuj;jpd; nkhopngaHg;G vd;Wk;> fhkj;Jg;ghy; tj;rhdaupd; fhk#j;jpuj;jpd; gpopT vd;Wk;  $wpdhHfs;.   

xy;fhg; Gfo; njhy;fhg;gpaKk; ghzpdpapd; ,yf;fz Ehiyj; jOtp vOjg;gl;l ,yf;fz Ehy; vd;w fUj;Jk; neLq;fhykhf ,Ue;J te;jJ. 

jpUf;Fws;> njhy;fhg;gpak; Nghd;w Ehy;fs; kl;Lky;y>  jkpopy; vOjg;gl;l Ehy;fs; mj;jidAk; nrhe;jkhf vOjg;gl;lit my;y> mit tlnkhop Ehy;fspd; nkhopngaHg;G my;yJ jOty; vd;w khia mz;ikf;; fhyk;tiu tYg; ngw;wpUe;jJ. Vd; jkpo;nkhop cl;gl ,e;jpa nkhopfs; mj;jidf;Fk; tlnkhopNa jha;nkhop vd;w fUj;Jk; epiy nfhz;bUe;jJ.

ey;yfhykhf ,e;jf; fUj;Jf;fs; ,d;W  mbgl;Lg; Ngha;tpl;ld. me;jr; rhjidia rhjpj;j ngUik jkpo; ehl;Lf;F rkak; gug;g te;j fy;Lnty; Iaiur; rhUk;. mtHjhd; jhk; vOjpa ""jpuhtpl nkhopfspd; xg;gpyf;fzk;"" vd;w mupa Ehypy; jkpo;nkhop jdpAaH nrk;nkhop vd;gij jf;f vLj;Jf; fhl;Lf;fSld; epiy ehl;bdhH. 

tlnkhopf;F <lhf my;y tlnkhopia nty;Yk; tz;zk; jkpo;nkhop ,yf;fpa> ,yf;fz tsk; cilaJ vd tl mnkupf;f NgHf;fpyp (Berkley) gy;fiyf; fofj; jkpo;g; NguhrpupaH NahH[; `hl; (George Hart) fUj;Jr; njuptpj;jpUf;fpwhH. gd;nkhop mwpQuhd NahH[; `hl; tlnkhop ,yf;fpa ,yf;fz Ehy;fis tlnkhopapNyNa gbj;jpUg;gjhfr; nrhy;fpwhH.   

jpUf;Fws; jkpopy; vOJg;gl;l Kjy;  Ehy; vd;w ngUik cilaJ vd;W nrhd;Ndhk;. ,dk;> nkhop> rkak;> fhyk; fle;J ts;StH kdpj Fyj;jpd; caHTf;fhf ,e;jg; nghJkiwia mUspdhH. Mdhy;  jpUf;FwSf;F vy;yhr; rpwg;Gk; ,Ue;Jk;  mJ GytHfshy; kl;LNk Nghw;wg;gl;l xU Ehyhf ,Ue;J te;jpUf;fpwJ.  

nghJ kf;fs; kj;jpapy; ghujk;> ,uhkhazk;> gftj;fPij mwpKfkhd mstpw;Fj; jpUf;Fws; jkpo; kf;fs; kj;jpapy; mwpKfkhftpy;iy. Nghw;wg;glTk; ,y;iy.  

tuyhw;iw jpUg;gpg; ghHf;Fk;NghJ jkpofj;ij Mz;l %Nte;jHfNsh>  FWepy kd;dHfNsh jpUf;Fwis Mjupj;jjw;Nfh jpUts;Stiur; rpwg;gpj;jjw;Nfh rhd;Wfs; vJTk; ,y;iy.  

,Ue;Jk; rq;fk;kUtpa fhyj;jpd; gpd; vOjg;gl;l nre;jkpo; Ehy;fs; vy;yhtw;wpYk; jpUts;StH Ml;rp nrYj;JfpwhH. mtuJ fUj;Jf;fs; vLj;J Msg;gl;Ls;sd. irtHfs;> rkzHfs;> itztHfs;> gTj;jHfs;> fpwpj;jtHfs; jq;fSf;F Ntz;batw;iw ms;spf; nfhz;bUf;fpd;wdH. Ik;ngUk; ,yf;fpaq;fshd rpyg;gjpfhuj;jpYk;> kzpNkfiyapYk; jpUf;Fws; fUj;Jf;fs; vLj;jhsg; gl;Ls;sd. 

"nja;tk; njhohms; nfhOed;njhOJ vOths;
 nga;nadg; nga;Ak; ngUkio vd;w
 mg;ngha;apy; Gytd; nghUs; ciu Njwha;" 

vd;gJ rhj;jdhupd; kzpNkfiy. 

"nja;tk; njhoms; nfhOed; njhOthisj;
 nja;tk; njhOk; jifik jpz;zpjhy;"

vd;gJ ,sq;Nfhtbfspd; rpyg;gjpfhuk;.   

,g;NghJjhd; jpUts;StUf;Fk; jpUf;FwSf;Fk; nfhQ;rk; ey;yfhyk; gpwe;jpUf;fpwJ. fle;j Mz;L nghq;fy; ehsd;W jkpof Kjyikr;rH fiyQH fUzhepjp tq;ff; flYk;> mNugpaf; flYk; ,e;J kfhrKj;jpuKk; rq;fkk; MFk; FkupKidapy; jpUts;StUf;F 133 cau mbapy; thd;Kfpiyj; njhLk; fw;rpiy xd;iw gj;Jf; Nfhb &gh nrytpy; vOg;gpdhH. me;jr; rpiyia mtNu jpwe;Jk;  itj;jhH. 

jpUts;StH kpf Kw;Nghf;fhdtH. ey;y rpe;jidahsH. $Hikahd kjpAilatH. rq;f ,yf;fpa> ,yf;fz Ehy;fis Kiwahff; fw;wtH. ve;j rkaj;ijAk; rhuhjtH. vz;Zk; vOj;Jk; kf;fSf;F ,uz;L fz;fs; Nghd;wit vd;W fy;tpiag; Nghw;wpaH> CioAk; kdpj Kaw;rpahy; ntd;Wtplyhk; vd;W vz;zpatH. kidj;jf;f khz;Gila ngz;iz tho;f;ifj; Jizahf tupj;J ,y;ywk; vd;w ey;ywk; Nkw;nfhz;ltH. gFj;Jz;L gy;YapH NgzpatH. ,dpa nkhopapy; NgrpatH. Ntljhupfisg; gopj;jtH. ahiotplTk;> FoiytplTk; ,dpikahd Foe;ijfsJ koiy nkhopiaf; Nfl;L ,d;Gw;wtH.  

xOf;fk; tpOg;ge; juyhy; mjid capupDk; Nkyhfg; Nghw;wp tho;e;jtH. kdj;Jf;fz; khrpyd; Mjy; midj;J mwd; kw;witnay;yhk; ntWk; Muthuk; vd ,bj;Jiuj;jtH.  

RUf;fkhfr; nrhd;dhy; kdpjd; kfpo;r;rpNahL tho;tjw;F vitnait NjitNah mtw;iw vy;yhk; mwptpay; mbg;gilapy; vLj;J tpsf;fpatH. Mdfhuzj;jhy;jhd;-  

       vy;yhg; nghUSk; ,jd;ghy; cs,jd;ghy;
 
     ,y;yhj vg;nghUSk; ,y;iyahy;- nrhy;yhy;
   
   gue;jgh thy;vd; gad;ts;  StdhH
     
 fue;jgh itaj; Jiz.                             (jpUts;Stkhiy 29)   

"gytif Ehy;fshYk; nrhy;yg;gll  vy;yhg; nghUSk; ,e;Ehyfj; jlq;fpapUf;fpd;wd. ,jdplj;J ,y;yhj ahnjhU nghUSk; ve;EhYf;Fk; ,y;iy. Mjyhy; nrhy; mstpdhNy tpupe;j Ehy;fshy; gad; ahJ? jpUts;StuhNy jug;gl;l ,e;Ehnyhd;Nw kz;Zyfj;jjhHf;Fj; Jizahjy; mikAk;"" vd;W kJiuj; jkpo; ehfdhH etpy;fpwhH.  

jpUf;Fws; jkpo; kf;fspilNa mwpKfkhfhjJ kl;Lky;y mg;gb mwpKfk; nra;jtHfSk; ts;Stupd; ikaf; Nfhl;ghLfSf;F CW tpistpj;jhHfs;. ,jpy; vy;NyhUk; cr;rp Nky; itj;J nkr;Rk; gupNkyofH Kjy; Fw;wthspahff; fhzg;gLfpwhH. itjPf Mupaf; fz;Nzhl;lj;NjhL jpUf;FwSf;F ciunaOjpa gupNkyofH jdJ ciug; ghapuj;jpy; mwj;Jf;F ,yf;fzk; $Wk;NghJ>  

"mtw;Ws; mwkhtJ> kD Kjypa Ehy;fspy; tpjpj;jd nra;jYk;> tpyf;fpad xopjYk; Mk;. m/J xOf;fk;> tof;F> jz;lid vd %tifg;gLk;. mtw;Ws; xOf;fkhtJ me;jzH Kjypa tUzj;jhH> jj;jkf;F tpjpf;fg;gl;l gpukrupak; Kjypa epiyfspy; epd;W> mtw;wpw;F Xjpa mwe;fspd; tOthtJ xOFjy;........." vdr; nrhy;fpwhH. 

cz;ik vd;dntd;why; xU Fyj;Jf;F xU ePjp nrhy;Yk; kDitAk; mtH epiyepWj;j tpUk;gpa tUzhr;rpuk rehjd jUkf; Nfhl;ghl;ilAk;  kWj;Jiuf;f te;jtNu jpUts;StH.  ,jid kNdhd;kzpak; Re;judhH jdJ jkpo;j; nja;t tzf;fg;ghlypy; njspthfr; nrhy;ypapUf;fpwhH. 

"ts;StHnra; jpUf;Fwis kWtwed; Fze;NjhHfs;
 cs;StNuh kDthjp nahUFyj;Jf; nfhUePjp"

tUzhrpuk rehjd jUkj;jpd; tPr;Rk;> gug;Gk; ntspg;gilahf ,d;W njupahky; ,Uf;fyhk;. Mdhy; mjd; Mjpf;fk; ,d;Wk; ,Uf;fpwJ. jkpoHfsJ Nfhapy;fspy; jkpo;nkhop Gwf;fzpf;fg;gl;L tlnkhopNa mHr;rid nkhopahf ,Uf;fpwJ. jkpo;nkhop ,iwtDf;F Mfhj nkhop vd;W jkpoHfNs ek;g itf;fg;gl;Ls;shHfs;. mHr;rfj; njhopy;  tUzj;jpy; NkyhdtH vd;W Fwpg;gplg;gLk; xU tFg;ghUf;F kl;LNk VfNghf cupik vd;w ,opepiy njhlHfpwJ. jkpoDf;F #j;jpug;gl;lk; fl;b mtDk; mtdJ nkhopAk; Nfhapy;  fUtiwf;F ntspNa tplg;gl;Ls;shHfs;.  

jkpoH  ehfupfk; NtW. MupaH ehfupfk; NtW. MupauJ ehfupfj;Jf;F gpuhkzH> rj;jpupaH> itrpfH> #j;jpuH vd;w tHzhr;rpuk NtWghL capH ehbahdJ. jkpoH ehfupfj;ij tpsf;Fk; jpUts;StH ,jid kWj;Jiuf;fpwhH. 

gpwg;nghf;Fk; vy;yh capHf;Fk;> rpwg;nght;th
nra;njhopy; Ntw;Wik ahd;.  
                  (Fws; nghUl;ghy;  mjp. 98-972)  

""vy;yh kf;fs; capHf;Fk; gpwg;G xU jd;ikahdJ. MapDk; ngUik rpWik vd;w rpwg;gpay;Gfs;  ey;yd jPad vd;w njhopy;fspd; NtWghl;lhy; xj;jpUf;fh"" vd;gJ ,e;jf; Fwspd; nghUshFk;. 

Mupag; gpuhkzHfSf;F tpjpf;fg;gl;l mWnjhopy;fspy; ahfk; nra;jy; xd;whFk;. ,e;j ahfq;fspy; Ntjfhy nja;tq;fshd ,e;jpud;> tUzd;> Nrhkd; Nghd;Nwhiuj; jpUg;jpnra;a capHg;gyp nfhLf;fg;gl;ld.  Fjpiu> gR> cLk;G Nghd;w thapy;yhg; gpuhzpfs; capNuhL ahfFz;lj;jpy; Nghlg;gl;ld. nte;j mtw;wpd; khkprj;ij ahfk; tsHj;jtHfSk; ahfk; nra;tpj;jtHfSk; cz;L kfpo;e;jhHfs;. Mdhy; ,e;j fhl;Lkpuhz;bj;jdkhd ahfj;ij  ts;StH kWj;Jiuf;fpwhH. 

mtpnrhupe;J Mapuk; Ntl;lypd; xd;wd;
capH nrFj;J cz;zhik ed;W.
                  (mwj;Jg;ghy; mjp. 26- Fws; 259) 

""jPapd; fz; nea; Kjypa mtpfisr; nrhupe;J Mapuk; Nts;tp Ntl;lypDk;> xU tpyq;fpd; capiug; Nghf;fp mjd; Cid cz;zhik ed;W"" vd;gJ ,e;jf; Fwspd; nghUshFk;. 

,g;Nghnjy;yhk; Nfhapy; fl;LtJk;> Fsk; ntl;LtJk;> NjH jPHj;j tpohf;fs; nra;tJk;> nghd; nghUis fhzpf;ifahfr; nrYj;JtJNk ngupa mwkhfTk;> Nkhl;rNyhfj;jpd; fjTfisj; jpwg;gjw;Fupa jpwT NfhyhfTk; fUjg;gLfpwJ. 

gupNkyofH  kD Kjypa  Ehypy; tpjpj;jd nra;jYk; tpyf;fpad xopj;jYk; mwk; vd;fpwhH vd;gij Kd;dH fz;Nlhk;. mjhtJ MupaHfSila 32 mwq;fisNa  mtH mwk; vdr; nrhy;fpwhH.  

Mdhy; ts;StH mwk; vd;w nrhy;Yf;F mwpthHe;j tiutpyf;fzk; tFj;jpUf;fpwhH.  kdj;Jf;fz;  khrpyhjd; midj;J mwk; vd;fpwhH. kdk; Fw;wkpy;yhky;- mOf;fpy;yhky;- jPa Fzq;fs; ,y;yhky; ,Ug;gJjhd; mwk; vd;fpwhH. kf;fSf;F ,d;wpaikahj md;G> xOf;fk;> mUs; Nghd;w Nkyhd Fzeyq;fNs mwk; vd;fpwhH.  

kdj;Jf;fz; khrpyd; Mjy;> midj;jwd;
MFy ePu gpw.  
                       (ghapuk; mwd;typAWj;jy;-Fws; 34)

,t;thW jkpouJ gz;ghL> ehfupfk; Nghd;wtw;iw gpw gz;ghl;Lg; gilnaLg;gpy; ,Ue;J ghJfhf;f jpUts;StH Nghl;l NtypNa jpUf;FwshFk;. Mjpapy; NfhNyhr;rp ghjpapy; tPo;e;Jgl;l jkpopdk; kPz;Lk; jiy Jhf;fp epkpHe;J tho Ntz;Lk; vd;why; jpUf;Fws; jkpoHfsJ kiwahfTk;> tho;f;ifapd; topfhl;bahfTk; Vw;Wf; nfhs;sg;gl Ntz;Lk;. (ek;ehL)     


Ancient Text on Virtue, Wealth & Love

From Manoj Sadasivan, for About.com

Tirukkural, the great poetic work by saint ThiruValluvar, embodies values that are ever relevant and unchanging. The greatest classic of the Tamil language, it dates back anywhere between 2 BC and 8 AD. It comprises two parts, 'Tiru' and 'Kural': 'Tiru' can mean sacred, as well as beautiful, and 'Kural' means concise. Brevity is the charm of this scriptural text with its terse and forcible verses like sutras or aphorisms.

About the Author - ThiruValluvar

ThiruValluvar stands on a high moral pedestal along with Patanjali, Shankara and Buddha. He lived about 2000 years ago in Tamil Nadu, and worked as a weaver to earn his living. According to legends, he was a man of intense cognizance, enlightment, free spirit and hard work.

Universal Ethical Content

The greatest value of Kural is its universal ethical content. The scripture is divided into three books: Virtue, Wealth and Love — consisting of 1330 couplets clustered in 133 chapters elucidating different aspects of human virtues or vices. In the first chapter of Virtue, God is portrayed as Universal in content transcending the marginal line of God being Hindu, Jain, Muslim or Christian. Kural's primary concern is with the whole world and according to ThiruValluvar a man's prosperity and adversity, heaven and hell, and his present and his future are products of his own actions.

On Virtue

"Rage, Envy, Greed and Harsh words
Avoided is virtue." ~ Kural: 35

ThiruValluvar sing the praises of affability, gratitude, self-control, right conduct and faithfulness in the first section of Virtue. Extolling the significance of vegetarianism Valluvar explains:

"How can one be kindly?
If he fattens on other's fat?" ~ Kural: 251

On the Importance of Wealth

ThiruValluvar knew that even though virtue is supremely important, without wealth it was seldom practicable:

"Will that hunger return?
Which nearly killed me yesterday?" ~ Kural: 1048

At the same time, Tiruvalluvar criticizes useless wealth:
"He is poor though a millionaire
Who neither gives nor spends." ~ Kural: 1005

On Politics & Governance

Valluvar has spoken words of wisdom on state administration by lucidly explaining the relationship between the king, his ministers and subjects. He has subtly put forward the importance of learning, friends, agriculture and social service, while condemning corruption and nepotism, the scourge of modern day politics as evil and unwise.

"Punish a sinner by paling him
With a good deed, and forget." ~ Kural: 314

Love and Emotion

The last section of Kural is entirely devoted to love and Valluvar speaks in mystic beauty about this prime emotive feeling of human beings. It is a paean to youthful love and its trials and tribulations.

"A Goddess? A peacock? Or a woman
Decked in jewels? Asks my heart amazed?" ~ Kural: 1081

Spiritual Liberation through Knowledge

ThiruValluvar speaks in length about virtue, wealth and love with righteousness and touch the lives of many generations with his eloquent poetry and innate wisdom.

Valluvar believes that with this knowledge of virtue, wealth and love one can lead the soul to nirvana and salvation. In effect, the fourth and final objective of human existence — 'moksha' or spiritual liberation is left to speak for itself.Valluvar's valuable writings in the Tirukkural guide our actions and thoughts, with a perfect blend of personal character, social conduct and the state's responsibility to build a prosperous and thriving society.


குடிசெயல்வகை

திருக்குறளில் குடிசெயல்வகை என்றொரு அதிகாரம் (103) இருக்கிறது. இதில் காணப்படும் பத்துக்  குறள் மூலம் திருவள்ளுவர் ஒருவன் தான் பிறந்த குடியை  மென்மேலும் உயர்த்தச் செய்தலின் திறம் பற்றிக் கூறுகிறார். இங்கு குடியென்றது சேர, சோழ, பாண்டியர் குடிகளும் சேக்கிழார் குடியும் போலக் கொடிவழியைக் குறிக்கும். இன்று சேர, சோழ, பாண்டிய குடிகள் இல்லை. தமிழினமே உண்டு.  எனவே குடியை மனத்தில் இருத்தாது இனத்தை மனதில் இருத்தி நாம் செயல்படவேண்டும். சிறப்பாக பொதுவாழ்க்கையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் வள்ளுவர் சொல்லும் வழி செயல்பட வேண்டும். மற்றவர்கள் தூற்றுவதைப் பற்றிக் கவலைப்படாமல், உரிய காலத்துக்குக் காத்திராமல் நாள்தோறும் நமது இனத்தை  உயர்வதற்கான செயல் செயதல் வேண்டும். பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள்  தம் மானத்தைக் கருதுவாரானால் இனப் பெருமை கெடும். .

 

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
                               (குறள் எண் : 1021)

மு.வ : குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

கருணாநிதி :உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.

சாலமன் பாப்பையா :வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.


ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
                                             (குறள் எண் : 1022)

மு.வ : முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

கருணாநிதி :ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.

சாலமன் பாப்பையா :முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.


குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.  
             குறள் எண் : 1023)

மு.வ : என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

கருணாநிதி :தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.

சாலமன் பாப்பையா :என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.


சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.                    
(குறள் எண் : 1024)

மு.வ : தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

கருணாநிதி :தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.

சாலமன் பாப்பையா :தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.     
                                            (குறள் எண் : 1025)

மு.வ : குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

கருணாநிதி :குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா :தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.    
                                             (குறள் எண் : 1026)

மு.வ : ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

கருணாநிதி :நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.

சாலமன் பாப்பையா :ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.                                             (குறள் எண் : 1027)

 

மு.வ : போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.

கருணாநிதி :போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.

சாலமன் பாப்பையா :போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.     
                                                  (குறள் எண் : 1028)

மு.வ : குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

கருணாநிதி :தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்.

சாலமன் பாப்பையா :தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

டும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
                   (குறள் எண் : 1029)

மு.வ : தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

கருணாநிதி :தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.

சாலமன் பாப்பையா :தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
                                          (குறள் எண் : 1030)

மு.வ : துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

கருணாநிதி :வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்.

சாலமன் பாப்பையா :துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.


மனுக்குறள்? – 2

நேற்றுப் பார்த்த உதாரணங்களின் தொடர்ச்சியுடன் இன்று ஆரம்பிப்போம். திருவள்ளுவர், சத்திரிய தருமத்தையும் போற்றியிருக்கிறார் என்பது தெரியுமா?

இதற்கு உதாரணம் சொல்ல ஏராளமான குறள்கள் இருந்தாலும், அன்றிலிருந்து தமிழ்மக்களை அடிமையாக்கிய பார்ப்பன – சத்திரிய கூட்டுச் சதிக்கு ஆதாரமான சில குறள்களை மட்டும் பார்ப்போம்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

பரிமேலழகர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது – அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது;

மன்னவன் கோல் – அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல்.

(வேதமானது) அரசர், வணிகர் என்னும் ஏனையோர்க்கும் உரித்தாயினும், தலைமை பற்றி, அந்தணர் நூல் என்றார். ‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்’ (மணிமேகலை 22: 208,9) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு அறம் என்பது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் (சநாதன தர்மம் என்று படிக்க) செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு ஆதி என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிது இல்லை என்பார் நின்றது என்றும் கூறினார்.

காளிங்கர் உரை:
மற்றும் அறநூல் என்று இங்ஙனம் ஒன்று சொல்லாது அந்தணர் நூல் என்றது, அரசர் நெறியாகிய செங்கோலும் நால்வருணத்தார் நடையுள் ஒரு நடை ஆகலானும், அவை யாவையும் பிறவும் துறவுமாகிய அனைத்தினையும் பழுது அற உரைப்பது பார்ப்பார் ஓதியும் ஓதுவித்தும் இங்ஙனம் விளங்க நடைபெற்று வருகின்ற வேதம் ஆகலான்.

கவிராஜபண்டிதர் உரை:
அரசன் நீதியாய் நடத்தினால், வேதமும், சாஸ்திரமும், தருமமும் வர்த்திக்கும்.

அதாவது பார்ப்பனரின் வேதநூலே அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரே நீதிநூல்; அதைக் காப்பாற்ற வேண்டியது அரசனின் கடமை என்கிறார் வள்ளுவர். என்னே ஒரு கூட்டுச்சதி இது!

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்;

ஆபயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்;

அறுதொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.

ஆபயன் – ஆவால் கொள்ளும் பயன்,

அறுதொழில்களாவன (வேதம்) ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.

பசுக்கள் பால் குன்றியவழி அவி இன்மையானும், அது கொடுத்தற்கு உரியார் மந்திரம், கற்பம் என்பன ஓதாமையினும், வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று.

அடப்பாவிகளா! இங்கே அரசன் சரியாக ஆட்சி செய்யாவிட்டால் பொதுமக்களுக்கு நேரும் சிரமம் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை வள்ளுவருக்கு. பார்ப்பனன் தொழில் நடக்காது என்பதுதான் பிரதானமாய் இருக்கிறது!

உலக நாடுகளில் எல்லாம் இன்று மரணதண்டனை தவறு என்றும் அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் விவாதம் எழுந்துள்ளது. ஆனால் கேள்வி ஏதும் கேட்காமல் ‘இவன் கொடியவன், இவன் தலையை வெட்டலாம்’ என்ற உரிமையை மன்னனுக்குக் கொடுத்தது மனு தர்மம். அதனால்தான் மதுரை பற்றி எரிந்தது. அது சத்திரியன் மனு, சத்தியர்களுக்காகவே உருவாக்கிய சிறப்புச்சலுகை.

வள்ளுவர்தான் மனுவாதி ஆயிற்றே! இங்கே அவர் பரிந்துரையும் மனுதர்மப்படியே இருக்கிறது.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

பரிமேலழகர்:
வேந்து கொடியாரை கொலையின் ஒறுத்தல் – அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்,

பைங்கூழ் களை கட்டதனொடு நேர் – உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனொடு ஒக்கும்.

கொடியவர் என்றது தீக்கொளுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவாரென்று இவர் முதலாயினாரை. இவரை வடமொழியில் ஆததாயிகள் என்ப. இப் பெற்றியரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புல் களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதி தருமம் என்பதாயிற்று.

ஆக தன் விருப்பப்படி ஒருவனைக் கொல்வது இங்கே ஒருவன் சாதி தருமம் என்றாகிப் போனது. என்ன கொடுமை இது!

வள்ளுவராவது இதை  ‘மனுதர்மப்படி’ என்று சொல்லாமல் விட்டார். ஆனால், இந்த மனுதர்மத்தை நியாயப்படுத்தி ‘மாபெரும் தமிழ்த்துரோகி’ என்று பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட கம்பன் சொல்வதைப் பாருங்கள்.

நன்றி கொன்றரு நட்பினை நார் அறுத்
தொன்று மெய்ம்மை சிதைத்துரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்
சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய்..
நஞ்சம் அன்னவரை நலிந்தாலது
வஞ்சம் அன்று மனுவழக்கு ஆதலால்..
(கம்பராமாயணம் – கிட்கிந்தை 3,5)

ஆகாதவனைப் போட்டுத்தள்ளுவது மனுதர்மம். இங்கே ஆரிய சத்திரியன் இராமன் இந்த நாட்டின் ஆதிகுடிகளைப் பிரித்தாள்வதற்கு, சகோதரர்களுக்கிடையேயான சண்டையைப் பெரிதுபடுத்தி அண்ணனைக் கொன்று, தம்பியின் ராஜியத்தைத் தன் ஆளுகைக்குக் கொண்டுவந்த குயுக்திக்கும் இதே மனுதர்மம் பயன்பட்டிருக்கிறது. அது எந்த வெட்கமும் இல்லாமல் கம்பன் வாயாலேயே இங்கே உறுதிப்பட்டுள்ளது.

திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் ஆய்ந்தறிந்த பெரியார் அன்றே தெள்ளெனச் சொன்னார்:

கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். இவன் முழுப் பொய்யன். முழுப் பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூடச் சொல்லப் பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். தொல்காப்பியன், வள்ளுவன், கம்பன் இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள்.

வைசியரும், வேளாளரும், குடிப்பிறப்பால் அமையும் குணங்களும்:

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
                                              (குறள் – 120)

என்ற குறளிலே வைசியரைக் குலதர்மப்படி ஒழுகச் சொல்லும் வள்ளுவர், உழவு என்ற அதிகாரத்தில் (104) வைசியர் மற்றும் நான்காம் வர்ணத்தாரின் குலத்தொழிலை உயர்த்திப்பாடுகிறார்.

பரிமேலழகர்:

அஃதாவது சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கும் உரித்தாய உழுதல் தொழில். செய்விக்குங்கால் ஏனையோர்க்கு உரித்து. இது மேல்குடி உயர்வதற்கு ஏது என்ற ஆள்வினை வகையாகலின் குடிசெயல்வகையின் பின்வைக்கப்பட்டது.

உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றெல்லாம் இவரைப் புகழ்ந்து இவர்தம் குலதர்மப்படி ஒழுகச் சொல்வதை இந்த அதிகாரத்தில் காணலாம்.

இப்படி நால்வகை வர்ணத்தில் பிறக்கும் கொடுப்பினை பெற்றவரே குடிப்பிறந்தார். அப்படிப் பிறப்பதால் இயல்பாகவே அமையும் குணங்களை ‘குடிமை’ என்ற அதிகாரத்தில் (96) பட்டியல் போட்டே காட்டுகிறார் இந்த மனுவாதி.

பரிமேலழகர்:

அஃதாவது உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை.

உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகலின், அச்சிறப்புப்பற்றி இது முன்வைக்கப்பட்டது.

மாதிரிக்கு இரண்டு குறள்கள்:

இற்பிறந்தார் கண்அல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.                                       
 (951)

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
                                           (952)

அதாவது நால்வருணத்திலே நல்ல குடியிலே பிறந்தவனுக்கு நடுவுநிலைமை, பழிபாவங்களுக்கு நாணுதல், நல்லொழுக்கம், வாய்மை இதெல்லாம் இயல்பாகவே அமையும் என்று சொல்கிறார்.

சிலர், குடிப்பிறப்பு என்றால் நல்ல குடும்பத்திலே நல்ல தாய் தகப்பனுக்குப் பிறப்பதைச் சொல்வதாகப் புரிந்துகொண்டு உரை எழுதி இருக்கிறார்கள். அது தவறான புரிதல். குடிமை என்ற அதிகாரத்திலேயே, குடி என்பதற்கு மாற்றாகக் குலம் என்றும் (குலம் பற்றி வாழ்தும் – 956, குலத்தின்கண் ஐயப்படும் – 958, குலத்தில் பிறந்தார் – 959) வள்ளுவர் சொல்வதிலிருந்தே அவர் சொல்வது வருணாசிரம அடிப்படையிலான பிறப்பைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

பிறப்பின் அடிப்படையில் அமைவதாக, அமைய வேண்டியதாக வள்ளுவர் தரும் சிறப்புக் குணங்களின் பட்டியல்:

குறள் எண்வாரியாக

951 – குடிப்பிறந்தாரே பண்பாளர்; தீயன செய்ய நாணமும், நடுவு நிலைமையும் (செப்பம்) உடையவர்
952 – ஒழுக்கமும் வாய்மையும் உடையவர்
953 – முகமலர்ச்சியும், ஈகையும் இன்சொல்லும் கொண்டவர்
954 – எத்தனை கோடி கொடுத்தாலும் மானத்தை விடாதவர்
956 – சிறுமையான செயல் செய்ய மாட்டார்
959 – வாய்ச்சொல்லே அவர் சாதி காட்டும்
963 – பெருக்கத்திலும் பணிவுடையவர்; சுருக்கத்திலும் பண்பு மாறாதவர்
992 – அன்பும் பண்பும் நிறைந்தவர்
794 – நட்பை மதித்து நடப்பவர் ஆகவே சாதிபார்த்து நட்பு கொள்ள வேண்டும்.

இந்த வள்ளுவரைத்தான் தமிழ்மக்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, இத்தகைய பிதற்றல்களை உலகப்பொதுமறை என்று கொண்டாடி வருகின்றனர்.

அதுசரி, இப்படிப் பிறப்பு அமையக் கொடுத்து வைக்காத துரதிருஷ்டசாலிகளின் பாடு என்ன? அதை மட்டும் விட்டுவிடுவாரா இந்த மனுவாதி?

வருணாசிரமதருமத்தின் வழக்கப்படி நால்வருணத்தாரும் அவரவர் குலத்தொழிலை விடாமல் தொடர்ந்து அதன்படி ஒழுக வேண்டும். அதை விட்டுவிட்டால் சாதிவிலக்கு ஆகிவிடும். ஒருவன் சாதிவிலக்கம் ஆகிவிட்டால் குடியில்லாதவன் ஆகிவிடுவான். அப்புறம் அவனும் அவன் சந்ததியும் இழிந்த பிறவிகளாகத் தொடர வேண்டியதுதான். இப்படித்தான் பஞ்சமர் என்ற அவர்ணாக்கள் உருவானதும், அவர்கள் மிதியடியாய்ப் பயன்படுத்தப்பட்டதும்.

இதை மிகத்தெளிவாக வள்ளுவம் எடுத்து வைக்கிறது:

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
                                                     
  – 133

பரிமேலழகர்:

ஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலன் உடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் – அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.

இப்படி வருணத்தில் தாழ்ந்தானோ அல்லது விலக்கப்பட்டவனோ (நான்காம் வகுப்பில் இருப்பவன் அதற்குமேல் தாழ்ந்தால் அவர்ணா) அவன் கீழான இழிபிறவியாகிவிடுவான்.

இவர்களுக்குக் ‘கீழ்கள்’ என்று அடைமொழி கொடுத்து ஆண்டைகள் கொடுமைப்படுத்த வள்ளுவர் கொடுக்கும் அதிகாரத்தைப் பாருங்கள்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
                          
1075

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்
                                       
   1078

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
                                      
  1079

கீழானவனை எப்போதும் அச்சுறுத்தி வை! கரும்புபோல் கசக்கிப்பிழி! நீ நன்றாக உடுத்தி, உண்டு, அதை அவன் கண்டு வயிற்றெரிச்சல் படுவான், அது விளங்காமல் போகும். ஆகவே அவனை விலக்கி வை!

இத்தனையும் சொல்பவர் வள்ளுவர்தான்.

இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுவோர் மனு ஸ்மிருதியை நேராகவே படித்து அதில் உள்ள எத்தனை பிற்போக்கான கருத்துக்கள் வள்ளுவரால் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன என்று தாமாகவே அறிந்து கொள்ளலாம்.

பல குறள்கள் மனுஸ்மிருதியிலிருந்து சொல்லுக்குச்சொல் மாறாமல் அப்படியே வள்ளுவரால் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

(நாளை நிறைவுறும்)
 

நேற்றைய பகுதியை இங்கு வாசிக்கலாம்.


வருண வரலாறும் - வள்ளுவரின் குடிமையும் (4)

ஏரோராகிய உழவர் அறுவடைக் காலத்தில், களத்தில் செய்யும் செய்கைகள் என்று, நச்சினார்கினியர் கூறுகிறார். களவழி என்பது, களத்தில் நிகழும் செயல்கள் என்பது இளம்பூரணர் உரையாகும். அடுத்து, பொருளதிகாரத்தில் நாடாளும் மன்னவனைக் குறிப்பிட, வேந்தன், வேந்து என்ற சொற்கள்தான் மிகப் பரவலாக பயன்பட்டுள்ளன (சுமார் 16 இடங்களில் _ சூத்திரர். 951,971,1008,1013,1016,1135,1582 மற்றும் 978, 1006,1008 ஆகியவற்றில் இருமுறை, 1018இல் மும்முறை). ஆனால், நால்வகைப் பகுப்புகளில், நாடாள்வோரைச் சுட்டும் சூத்திரத்தில் (மரபு.72), முன்னர் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட வேந்தர் என்ற சொல் இயல்பாக இடம்பெறாமல், அரசர் என்ற சொல் இடம்பெறுவதும் கருதிப் பார்க்கத்தக்கது. (அந்தணர், அரசர், வைசியர், வேளாளர் என்ற பின்னாளைய முறைமை, இங்கு அப்படியே பதிவு செய்யப்பட்டதாகக் கருதத் தோன்றுகிறது.) மேலும், தொல்காப்பியத்தில் வரும் பார்ப்பார், பிராமணராக இருக்கமுடியாது. ஏனெனில் அந்தப் பார்ப்பார், மக்களில் ஒருவராய் வாழ்ந்து, களவொழுக்கத்தில் தலைவன், தலைவி _ கற்பொழுக்கத்தில் கணவன், மனைவி ஆகியோருக்குத் துணைநின்ற _ அவர்களுக்கிடையில் பொருந்திய அன்பை நிலைபெறச் செய்த வாயிலாக (ஊடமாக) _ ஒருங்கிணைப்பாளராக வாழ்ந்தவர்கள் (சூத்.1123,1124). அதனால்தான், அவர்களைப் பேணுதகு சிறப்பின் பார்ப்பான் என்று தொல்காப்பியம் பெருமைப்படுத்தியது (சூத்திரர் 1446), அவர்கள், வேதம், ஓதுதலையோ, வேள்விகளையோ செய்யாதவர்கள் என்பதும், இந்தச் சூத்திரக் கருத்துகளுடன் இணைத்து, எண்ணிப் பார்க்கத் தக்கதாகும்.

மரபியலில், ஓரறிவு உயிர்முதல் ஆறறிவு உயிர் வரை தொகைப்படுத்தி, அவற்றை வகைப்படுத்தும்போது, ஒன்று முதல் அய்ந்தறிவு உள்ளவற்றின் இளமைப் பெயர்கள், மற்றும் ஆண்பால் _ பெண்பால் பெயர்கள், 1 முதல் 70 முடிய உள்ள சூத்திரங்களில் கூறப்படுகின்றன. திடீரென்று, அவற்றுடன் எவ்விதத் தொடர்புமில்லாத, மேலே சொல்லப்பட்ட 15 சூத்திரங்கள் இடம் பெறுகின்றன (சூத்திரன் 71 முதல் 85 முடிய). இச்சூத்திரங்கள் முடிந்தவுடன், 86 வது சூத்திரத்திலிருந்து, 70 ஆவது சூத்திரத்தின் தொடர்ச்சியாக, ஓரறிவு உயிர்களிடையிலான வேறுபாடுகள் தொடர்கின்றன. எனவே, மரபியல் சூத்திரவரிசையில், முன்பின் தொடர்பு இல்லாமல் _ சூத்திர வைப்புமுறையுடன் ஒட்டாமல், தனித்து நிற்கும் இந்தப் பதினைந்து சூத்திரங்களும், பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச் செருகல் என்று கருதுவதில், நேர்மையான தர்க்க நியாயம் இருக்கிறது. தொல்காப்பியத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, ஆய்வேடு சமர்ப்பித்த பேராசிரியர். இலக்குவனார், மற்றும் வெள்ளைவாரணர், கா.சுப்பிரமணியனார், முனைவர். நா.பாலுசாமி, வ.அய்.சுப்பிரமணியன் போன்ற அறிஞர்கள், இச்சூத்திரங்கள் இடைச்செருகல் என்ற நிலைப்பாட்டில் ஒன்றுபடுகின்றனர். முனைவர். தமிழண்ணல் அவர்கள், அந்தப் பதினைந்து சூத்திரங்களுள் உள்ள செய்திகள் எதுவும், சங்கப் பாடல்களில் காணாதன. முற்காலத்தில் இத்தகைய வருணாசிரம தர்மங்கள் இங்கில்லை. இந்த நூற்பாக்கள் பலரால் எழுதப்பட்டு, இடையிடையே ஏட்டில் சேர்க்கப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று முடிவாகத் துணிகிறார். மாற்றரும் சிறப்பின் மரபு என, மரபிலக்கணம் கூறித் தொடங்ககும் மரபியலில், நூல் _ கரகம் _ கோல் _ மணை என மாற்றமுறும் பொருட்களைக் கூறுதல், மரபொடு பொருந்தாமை வெளிப்படை. மரபு என்பது, மயங்கா மரபினது ஆகும். இவை நோக்க, இப்பகுதி, பிற்காலச் சேர்க்கை என அறியலாம் எனற்று, இலக்கணச் செம்மல். இரா. இளங்குமரனாரும் தெளிவுபடுத்துகிறார். எனவே, மனுவின் நால்வருண தர்மம், தமிழ்நிலத்தில் நிலையாக வேரூன்றிய பின்னாளில், அதைப் போன்றதொரு நால்வகைச் சமூகப்பாகுபாடு, தொல்காப்பியர் காலந்தொட்டே வழங்கிவந்தது என்பதான தோற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, அரங்கேறிய _ உள்நோக்கம் உள்ள இடைச்செருகல்தான், இந்த 15 சூத்திரங்கள் என்ற கருதுகோளை எளிதில் புறந்தள்ள முடியுமா?

இச்சூத்திரங்களை இடைச்செருகல் என்று ஏற்காத புலவர் குழந்தை, சாமி. சிதம்பரனார், முனைவர்.ந.சுப்புரெட்டியார் போன்றவர்கள், தொல்காப்பியம் காட்டும் அந்தணர்கள், தமிழ்மரபு அந்தணர்கள் என்றும் _ அவர்கள் இல்லறத்தை விட்டு விலகாமல், வாழ்நாளின் பிற்பகுதியில், மனதளவில் துறவு மேற்கொண்டு, சமூக அக்கறையுடன், புலவர்களைப் போல நாடெங்கும் சுற்றி வந்தவர்கள் என்றும் கூறுகின்றனர். அந்தணருடன், அரசர் _ வணிகர் _ வேளாளர் ஆகியோர், பிறப்பால் அல்லாமல், தொழில் பிரிவினையால் நால்வகையாகப் பகுக்கப்பட்டாலும், அனைவருமே, சமூக இயக்கத்திற்குத் தமது பங்களிப்பை வழங்கியவர்களாகத் திகழ்ந்தனர்; அவரவர் கடமையை ஆற்றி, தமிழ்ப் பண்பாட்டின் வழி ஒழுகியவர்கள் என, அவர்கள் விளக்குகின்றனர். அகத்திணையியல், புறத்திணையியல் மற்றும் மெய்ப்பாட்டியலுக்குத் தமிழ் மரபில் நின்று உரைகண்ட நாவலர், சோமசுந்தர பாரதியார், தமிழர் வாழ்க்கைமுறை, ஒழுக்கவழக்கம் விளக்கும்.


அ . சமூகப்பரிணாமமும் நீதிநூல்களும்

வியாச மகாபாரதத்தைக் கூர்ந்து வாசிக்கும் வாசகனுக்கு உண்மையில் அது சாதியைப்பற்றி என்னதான் சொல்கிறது என்ற குழப்பம் எழாமலிருக்காது. மகாபாரதக்கதையே பிரம்மாண்டமான குலக்கலப்பின் வரலாறு என்றால் அது மிகையல்ல. அதன் கதைசொல்லியும் குருவம்சபிதாமகருமான மகாவியாசன் கிருஷ்ண துவைபாயனனே குலக்கலப்பில் பிறந்தவர்தான். பராசர முனிவருக்கு காளி என்ற மீனவப்பெண்ணில் பிறந்தவர் அவர். காளி என்றால் கறுப்பி என்று பொருள். கிருஷ்ணன் என்றாலும் கருப்பன்தான். மாறாகவும் நிகழலாம். மதங்க ரிஷி பிராமணப்பெண்ணுக்கு ஒரு சவரக்காரர் உறவில் பிறந்தவர்.

மகாபாரதம் சாந்திபர்வத்தில் நான்குவர்ணங்களையும் ஒருவனின் செயல்களை மட்டுமே வைத்து வரையறுக்கவேண்டும் என்ற குரலை நாம் மீண்டும் மீண்டும் காணலாம். பிறப்பால் எந்த மனிதனையும் சாதியடையாளம் செய்யக்கூடாது என்று பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ‘பிராமணனின் குணமில்லாதவன் பிராமணன் அல்ல. க்ஷத்திரியனின் குணமில்லாதவன் க்ஷத்ரியனல்ல’ [மகாபாரதம் சாந்திபர்வம் 189/8] பிராமணனின் மகனாகப்பிறந்த ஒருவன் தன் இயல்பாலும் சூழலாலும் பிராமணனாக வாழமுடியவில்லை என்றால் அவன் க்ஷத்ரிய குலத்தவனாகி அச்செயலைச்செய்யலாம். அல்லது வைசியகுலத்தவனாகி அச்செயல்களைச் செய்யலாம்’ என்கிறது மகாபாரதம்.

மகாபாரதத்தில் போரிடும் பிராமனர்களை நாம் காண்கிறோம். அரசியல்த்தொழில் செய்பவர்களை நாம் காண்கிறோம். மகாபாரதத்தின் ஒருபகுதியாக விளங்கும் கீதையில் அர்ஜுனன்  அர்ஜுனவிஷாத யோகத்தில் ‘குலக்கலப்பு ஏற்பட்டால் தர்மம் அழியும்’ என்கிறான். ஆனால் அவனே குலக்கலப்பால் பிறந்தவன். அவனுக்கு விளக்கமளிக்கும் கிருஷ்ணன் ‘நான்குவர்ணங்களும் இயல்புகள் செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் படைக்கப்பட்டவை’ என்று சொல்கிறான். கீதையின் வேதாந்தப்பகுதி மகாபாரதத்தைவிட பழமையானது என்பது என் எண்ணம். அர்ஜுனன் வரும் முதல்பகுதி மகாபாரதகாலத்துக்கு நெடுங்காலம் கழித்து உருவானது.

க்ஷத்ரியனாகிய விஸ்வாமித்திரன் பிரம்மரிஷியாக ஆனார். ஒட்டுமொத்தமாக சாதிமாறும் நிகழ்ச்சிகளைக்கூட புராணங்களில் நாம் காணலாம். க்ஷத்ரிய மன்னராகிய ரிஷபதேவரின் நூறு மகன்களில் 81 பேர் பிராமணர்களாக ஆனார்கள் என்று விஷ்ணுபாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. க்ஷத்ரியனாகிய பிரஷாக்னன் சூத்திரனாக ஆனான் என்றும் இன்னும் பலவிதமான வருண,சாதி மாற்றங்களையும் நாம் விஷ்ணுபாகவதத்தில் காணலாம்.

சூத்திரர்கள் வேதம் ஓதலாமென பண்டைய நெறிகள் சொல்லின. மீமாம்சா சூத்திரத்தில் பாதராயணர் அனைவருக்கும் வேதம் ஓதும் உரிமை உண்டு என்று சொல்கிறார்.  அதை சபரர் இன்னும் விரிவாக நிறுவுகிறார். வேள்வியில் அவி அர்ப்பிப்பவன் பிராமணன் என்றால் அவனை ‘ஏஹி’ என்றும், க்ஷத்ரியன் என்றால் அவனை ‘அகோஹி’ என்றும், வைஸியன் என்றால் அவனை ‘ஆத்ரவ’ என்றும், சூத்திரன் என்றால் அவனை ‘ஆதாவ’ என்றும் அழைக்கவேண்டுமென்று சதபதப் பிராமணம் சொல்கிறது. ‘பஞ்ச ஜனா மம ஹோத்ரம் ஜுஷத்வ’ என்று ரிக்வேதமே சொல்கிறது. ஐந்துவகை மக்களும் வேள்வி அர்ப்பிக்கவேண்டும் என்று அச்சொற்களுக்குப் பொருள். பெண்களுக்கும் அவ்வுரிமை இருந்தது.

இந்து சிந்தனை மரபில் சுருதிகள் ஸ்மிருதிகள் என மூல நூல்களை இரண்டுவகையாகப் பிரிப்பதுண்டு என நாம் அறிவோம். சுருதிகள் அடிப்படையான பிரபஞ்ச தரிசனங்களை முன்வைக்கும் நூல்கள். ஸ்மிருதிகள் என்பவை வாழ்க்கைநெறிகளை அறிவுறுத்துபவையும் சமூகச்சட்டங்களை வகுத்துரைப்பவையும் ஆகும். வேதங்கள் உபநிடதங்கள் பிரம்மசூத்ரம் போன்றவை சுருதிகள். பற்பல ஸ்மிருதிகள் இந்திய மரபில் இருந்துள்ளன. மனுஸ்மிருதியின் பெயர் நாம் அனைவரும் அறிந்தது. மனுஸ்மிருதிக்குப் முன்னரே நாரத ஸ்மிருதி, யாக்ஞ வால்கிய ஸ்மிருதி, யமஸ்மிருதி போன்ற பல நூல்கள் இருந்துள்ளன. பராசர ஸ்மிருதி முதலிய சிலநூல்கள் உண்மையில் மனுஸ்மிருதிக்குப் பின்னர் வந்தவை என்று ஆய்வாளர் சொல்வதுண்டு.

இந்துமரபின் கொள்கையின்படி சுருதிகள் முழுமுதன்மையான விஷயங்களை முன்வைப்பவை. ஆகவே அவை காலச்சார்பு கொண்டவை அல்ல. ஆனால் ஸ்மிருதிகள் காலச்சார்பு கொண்டவை. விவாதத்துக்கு உரியவை. ஸ்மிருதிகள் சுருதிகளின் ஞானதரிசனங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கம் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பல நூல்களில் மகாபாரதம், ராமாயணம் என்னும் இரு இதிகாசங்களையும் ஸ்மிருதிகளாக, அதாவது நெறிநூல்களாக, எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் மகாபாரதம் முன்வைக்கும் குலக்கலப்பின் முன்னுதாரணம் என்பது ஒரு நெறியே.

ஆனால் மிக விரைவிலேயே அந்த குலக்கலப்பின் சாத்தியங்களை நெறிநூல்கள் நிராகரிப்பதை நாம் காணமுடிகிறது. ‘பிராமணன் தீயவனானாலும் வழிபாட்டுக்குரியவன். சூத்திரன் முனிவனாக இருந்தாலும் மதிக்கப்பட வேண்டியவனல்ல’ என்று பராசர ஸ்மிருதி வகுக்கிறது.[ பராசர ஸ்மிருதி 8/33] தாழ்ந்த குலத்துக்குரிய செயல்களைச் செய்தாலும் பிராமணன் பிராமணனே என்கிறது மனுஸ்மிருதி. பிராமணனின் அதிகாரம் மன்னனின் அதிகாரத்தைவிட மேலானது, அவனே தன்னிடம் தவறு செய்தவர்களை தண்டிக்கலாம் என்று வகுக்கிறது. [மனுஸ்மிருதி X/32] வேதம் ஓதுவது மட்டுமல்ல காதால் கேட்பதுகூட சூத்திரனுக்கு விலக்கப்படுகிறது மனுவால்.  அதாவது இவ்விரு ஸ்மிருதிகளின் படி பழங்காலத்தின் ரிஷிகளும் மகாபாரத பிதாமகர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்கள்!

இந்த மாற்றம் எப்படி நடந்தது? எந்த ஒரு சமூக மாற்றமும் எளிதாக நடந்துவிடாது என்று நாம் இன்று அறிவோம். சீரான ஒரு பரிணாம மாற்றம் அதற்கு தேவையாகிறது. ஒரு பரிணாம காலகட்டமும் அதற்குத் தேவையாகிறது. ஒரு நீண்ட உரையாடல் மூலமே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்க முடியும். வேதகாலத்தில் இருந்து மனுஸ்மிருதியின் காலம்வரையிலான சமூகநீதியைப்பற்றிய மொத்தக் கருத்துக்களையும் தொகுத்து அவற்றில் இருந்துதான் நாம் அந்த விவாதச்சூழலை இன்று உருவாக்கி பார்க்க முடியும்.

எந்த ஒரு சமூகத்திலும் நீதி ஓர் உரையாடலாகவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீதி என்று வகுத்துச்சொல்லப்படுவதென்பது  அந்த உரையாடலின் சமரசப்புள்ளியாகும். ஒரு பெரும் புனைவுவெளி என்ற வகையில் மகாபாரதம் எல்லாவகையான குரல்களுக்கும் இடமளிக்கும் கருத்துப்பரப்பாகவும் இருக்கிறது. அங்கே நாம் இந்த உரையாடலின் சித்திரத்தை வாசித்தறிய முடியும். ஒருபக்கம் செயல்கள் மூலமே ஒருவனை அடையாளப்படுத்தும் தரப்பு, மறுபக்கம் பிறப்பை மட்டுமே அளவீடாகக் கொள்ளும் இன்னொரு தரப்பு. நடுவே பலநூறு நீதிமுறைகளின் தனிக்குரல்கள்.

நாம் நம்முடைய நீதிநூல்களைப்பற்றிப் பேசும்போது இத்தகைய ஒரு விரிந்த சித்திரத்தை உருவாக்கிக் கொண்டோமென்றால்தான் அவற்றை புரிந்துகொள்ள முடியும். அந்நூல்களை ஓர் ஆசிரியனுடைய, அல்லது ஒரு குழுவினுடைய, அல்லது ஓர் அதிகார மையத்தினுடைய சதிகள் என்று புரிந்துகொள்ளும் தட்டையான நோக்கு நம்மிடையே இருந்ததென்றால் நாம் அடைவது மிகத்திரிபுபட்ட சித்திரத்தைத்தான். நம் அரசியல் தளத்தில் உருவாக்கப்பட்ட சதிக் கோட்பாடு நம் அறிவுத்துறைகளையும் பீடித்திருப்பதை நாம் காண்கிறோம். விரிவான ஓர் வரலாற்றுப்பார்வைக்கு அது பெருந்தடையாக அமைந்து நம் ஆய்வுகளை எல்லாம்  வெற்று கூக்குரல்களாக ஆக்கிவிடிருக்கிறது.

அவ்வகையில் நான் டி.டி.கோஸாம்பியின் மரபைச்சேர்ந்த இந்திய மார்க்ஸிய வரலாற்றாசிரியர்களின் அணுகுமுறையையே பெரிதும் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களின் முன்முடிவுகளும் பிழைகளும் கோட்பாட்டுவிசுவாசமும் எனக்கு உடன்பாடாக அமையாத சந்தர்ப்பங்கள் உண்டு என்றாலும் அவர்கள் ஒவ்வொன்றையும் ஒரு விரிந்த வரலாற்றுப்புலத்தில் வைத்துப்பார்க்க முனைந்ததை இந்திய தத்துவ சிந்தனை வரலாற்றின் பெரும் பாய்ச்சலாகவே எண்ணுகிறேன். மிக விரிவாக ஏற்கனவே இதைப்பற்றிய என் கருத்துக்களை பதிவுசெய்துமிருக்கிறேன்.

நம் நீதியுணர்வில் மேற்குறிப்பிட்ட நகர்வு எப்படி நிகழ்ந்தது? அதற்கான சமூகவியல் காரணங்கள் என்ன? அதற்கான அரசியல் காரணங்கள் என்ன? அதற்கான பொருளியல் காரணங்கள் என்ன? இந்திய வரலாற்றாய்வில் செய்யப்பட்டுள்ள பல்வேறு ஊகங்களுக்குள் செல்ல இப்போது நான் முனையவில்லை, இக்கட்டுரையின் பேசுபொருள் அதுவல்ல. அந்த ஆய்வுமுறையைச் சுட்ட பிரபலமான ஊகத்தை மட்டும் சொல்கிறேன்.

செயல்வழியாக மனிதர்களைப் பகுக்கும் நோக்கானது சிறிய சமூகங்களுக்கே சரியாக இருந்தது. பல்வேறு வகையான மனிதர்களின் கூட்டான ஒத்துழைப்பின் மூலம் இயங்கிய சமூகங்கள் அவை. சுரண்டலின் மூலம் இயங்கும் அதிகார அமைப்புகள் கொண்ட பிரம்மாண்டமான சமூகங்கள் உருவானபோது அது சாத்தியமில்லாமல் ஆயிற்று. காரணம் அந்த முறையில் உள்ள நிலையின்மைதான். பெரும் சமூகங்களுக்கு இன்னும் திட்டவட்டமான உறுதிப்பாடுகள் தேவை. ஆகவே பிறப்பின் அடிப்படையிலான பகுப்பு ஏற்கப்பட்டது. அதில் ஐயங்கள் இல்லை. ஒருவன் சூத்திரனா பிராமணனா என்பதை தீர்மானிப்பதில் சிக்கலே இல்லை.

மேலும் பெரும்சமூகங்களுக்குள் மேலும் மேலும் சிறிய இனக்குழுச்சமூகங்கள் உள்ளிழுத்துக்கொள்ளப்பட்டபடியே இருந்தன. அச்சமூகங்களை எப்படி ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கி ஒரு சமூகக்கட்டமைப்பை உருவாக்குவது என்ற வினா எழுந்தது. அதற்கும் பிறப்பின் அடிப்படையிலான பகுப்பே உதவியாக இருந்தது.

பிறப்பை அடிப்படையாகக் கொண்ட தொழில்பிரிவினையானது உறுதியான மாறாத பொருளாதார அமைப்பை உருவாக்குகிறது. அதன்மூலம் சீரான பொருள்திரட்டல் நிகழ்ந்து விளைவாக வலிமையான மைய அதிகாரம் உருவாகிறது. இதன் விளைவாகவே பேரரசுகள் உருவாயின. இந்திய நிலத்தில் பேரரசுகளின் உருவாக்கத்துக்கும் சாதிமுறையின் உருவாக்கத்துக்கும் நேரடியான தொடர்பு உண்டு என்பதே டி.டி.கோஸாம்பி போன்ற ஆய்வாளர்களின் ஊகம்.  பெரும் கட்டிடங்களுக்கு உறுதியான அடித்தளம் தேவை.

அதாவது மகாபாரதம் பேசும் குலக்கதைகளின் காலத்தில் தொழிலும் இயல்பும் மனிதர்களை தீர்மானித்தன. அந்தப்போரின் காலத்தில் பிறப்பு தீர்மானித்தது — அதை நாம் கர்ணனின் கதையில் தெளிவாகவே காண்கிறோம். மகாபாரதம் சொல்லும் கதைக்களம் என்பது மனுஸ்மிருதியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வரும் ஒரு சமூகத்தின் சித்திரமே.

நாம் நீதியைப்பற்றி பேசும்போது அது ஒரு சமூகக்கருவி என்ற அளவில் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பிப்பதே நேர்மையானது. ஒரு சமூகம் தன்னை தொகுத்துக்கொள்ளவும் திறம்படச் செயல்படச்செய்யவும் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் நெறிகளையும் நம்பிக்கைகளையும்தான் நாம் நீதி என்கிறோம். ஏதோ ஒருவகையில் பயனில்லாத ஒன்றை எச்சமூகமும் ஏற்றுக்கொள்ளாது என்றே கொள்ள வேண்டும்.

சாதிப்பிரிவினையை எடுத்துக்கொண்டால் அதனால் உறுதியான உற்பத்திக்கட்டுமானம் உருவாயிற்று. அந்த உற்பத்தியின் உபரியைச் சுரண்டி மைய அதிகாரம் வலிமைபெற வழி அமைந்தது. அதன் மூலம் பேரரசுகள் உருவாயின. கலைகளும் இலக்கியங்களும் சிந்தனைகளும் உருவாயின. மானுட நாகரீகத்தின் சில உச்சநிலைகள் சாத்தியப்பட்டன. சுரண்டலும் நாகரீகமும் ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாதபடி இணைந்தவை என்கிறார் டி.டி.கோசாம்பி. கூடவே அடிமைமுறை இல்லாமல் கிரேக்க நாகரீகம் இல்லை என்ற மார்க்ஸின் மேற்கோளையும் சுட்டிக் காட்டுகிறார். [பண்டைய இந்தியா]   

இதற்கு இன்னுமொரு கோணம் உண்டு. நாம் மகாபாரதத்திலேயே பார்த்தால்கூட ஏராளமான இனக்குழுச் சமூகங்கள் வருகின்றன. அவையெல்லாமே தங்கள் உதிர அடையாளத்தைப் பேணக்கூடியவையாகவே உள்ளன. உலகமெங்கும் பழங்குடிகளும் இனக்குழுச்சமூகங்களும் அப்படித்தான் இருக்கின்றன. இந்தியச் சாதியமைப்பு என்பது இந்த பல்லாயிரம் இனக்குழுச்சமூகங்கள் மையச்சமூகத்தில் தொடர்ச்சியாக உள்ளிழுக்கப்பட்டு நால்வகை வருணங்களின் படிக்கட்டில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு கட்டப்பட்டதேயாகும்.  நால்வருணப்பிரிவினையை பிறப்படையாளமாக ஆக்கிக் கொண்டாலொழிய இந்த பழங்குடிகளை எல்லாம் உள்ளிழுக்கும் ஓர் மாதிரி அமைப்பை உருவாக்க முடியாது.

ஆகவே நீதி என்பது ஒருவகையில் சமூகம் மெல்ல திரட்டிக்கொள்ளும் ஒரு கருத்துக்கருவிதான்.தொடர்ச்சியான உரையாடல் மூலம்தான்  நீதி அவ்வாறு திரட்டிக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னரும் நீதி ஒரு உரையாடல் தரப்பாகவே இருக்கிறது. வலிமையான தரப்பாக இருக்கலாம், ஒருபோதும் முழுமையாக ஏற்கப்பட்டதாக இருக்காது.

அப்படிப்பார்த்தால் மனுநீதி உள்பட எல்லா நீதிநூல்களும் நம் சமூகத்தின் நீதி சார்ந்த விவாதத்தின் குரல்கள் மட்டுமே. மனுநீதி உட்பட எந்த ஒரு நீதிநூலும் இந்தியாவின் எப்பகுதியிலும் முழுமையாக செயல்படுத்தப்பட்டதில்லை. மனுநீதியை கூர்ந்து கவனித்தாலே அதை அறியலாம். அதில் பிராமணர் உள்ளிட்ட சாதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கைநெறிகள் எப்போதுமே நடைமுறைப்படுத்தச் சாத்தியமல்லாதவை. 

உதாரணமாக பிராமணர்கள் வேதம் ஓதுதல், வேள்விசெய்தல், கற்றல் கற்பித்தல் அல்லாமல் பிற தொழில்கள் எதையும் செய்யலாகாது என்று விலக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு தானமாக செல்வம் அளிக்கப்படும்போது அவர்கள் அவற்றை உடனடியாக மீண்டும் பகிர்ந்தளித்துவிடவேண்டும். இந்தியாவில் எந்த ஊரிலும் எப்போதும் பிராமணர்கள் அப்படி இருந்ததில்லை என நாம் அறிவோம். அதேபோல சூத்திரர்கள் அவர்களால் இயன்றாலும்கூடச் செல்வம் சேர்க்கக் கூடாது என்று மனுஸ்மிருதி தடை விதிக்கிறது. [மனு X/ 129] மகாபாரதத்திலும் சரி கதாசரித சாகரம் போன்ற பிற்கால நூல்களிலும் சரி நாம் செல்வந்தர்களான சூத்திரர்களைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

ஆனால் மனுநீதி போன்ற ஸ்மிருதிகள் சொல்லும் பிறப்புவகைப்பட்ட பகுப்புமுறையானது பின்னர் ஒர் ஓட்டுமொத்தத் தரிசனமாகவே மாறிவிடிருப்பதைக் காண்கிறோம். அதை ஒரு சமூகநெறியாக மட்டும் காணாமல் மொத்தப்பிரபஞ்சத்தையே புரிந்துகொள்ளும் ஒரு வழிமுறையாக அவர்கள் மாற்றிக்கொண்டார்கள். மிருகங்களும் தாவரங்களும் பூச்சிகளும்கூட நான்குவர்ணப்பிரிவினைக்கு ஆளாயின. பிங்களசந்தஸ் சாஸ்திரம் என்ற நூலில் வெள்ளாடு பிராமண வர்ணம் என்றும் செம்மரியாடு க்ஷத்ரியன் என்றும் பசு வைசியன் என்றும் குதிரை சூத்திரன் என்றும் பிரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  

இன்னொன்றும் இங்கே கவனிக்கத்தக்கது. ஒரு நீதிநூலுக்குள்ளேயே உரையாடலும் சமசரமும் இருக்கும். ஒரு நீதிநூல் என்பதேகூட தன்னளவில் நீதி சார்ந்த ஒரு விவாதம்தான். பெரும்பாலான தருணங்களில் பல்வேறு வகையான மக்கள்குழுக்கள் ஒரு சமூகமாகத் திரளும்போது அவர்களின் நெறிகளுக்கு நடுவே ஒரு பொதுத்தளத்தை உருவாக்கும்பொருட்டே நீதிநூல்கள் உருவாகின்றன. அவற்றுக்குள் பல்வேறுவகையான நெறிகள் ஒன்றுடன் ஒன்று சமப்படுத்தப்பட்டும் இணைக்கப்பட்டும் காட்சியளிக்கும்.

மனுஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி போன்றவற்றில் உள்ள குலநெறிகள் புதிதாக உருவாக்கப்பட்டு முன்வைக்கப்பட்டவையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அது சாத்தியமே இல்லை. அவை ஏற்கனவே நடைமுறையில் இருந்த நெறிகளின் தொகுக்கப்பட்ட வடிவமாக்வே இருக்க முடியும். மனுஸ்மிருதி முடிவெட்டிக்கொள்வதைப்பற்றிக்கூட ஆசாரங்களை வகுக்கிறது. அவையெல்லாமே பழக்க வழக்கங்களாக இருந்த¨வையே. இவ்வாறு ஒரு நீதி நூலுக்குள்ளேயே நீதிக்கான ஒரு விவாதம் ஒரு தொகுப்புத்தன்மை செயல்படுகிறது.

இந்த இடத்தில் நம்முடைய மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்களின் ஆய்வுநோக்கைத்தாண்டி அப்பால் செல்லும் ஒரு தளம் திறக்கிறதென நான் எண்ணுகிறேன். நீதி என்பது தேவையிலிருந்து உருவாகிவரும் ஒரு வெறும் கருவி மட்டும்தானா? அது ஒரு அடிப்படையான மானுடக்கனவு அல்லவா? நீதி நூல்கள் முன்வைக்கும் நீதி என்பது நடைமுறைசார்ந்த ஒரு தொகுப்பு மட்டுமல்ல, அவை நீதி பற்றிய ஓர் எதிர்பார்ப்பும்கூடத்தானே? உலகில் மகத்தான நீதிநூல்கள் முன்வைக்கும் நீதியின் பெரும்பகுதி உண்மையில் எப்போதுமே மண்மீது நிலவியிராத ஒன்றுதானே?

ஆம், மண்ணில் மானுடத்தின் சாரமாக திரண்டுவந்திருக்கும் நீதியுணர்வு என்பது ஒரு பெரும் வியப்பு என்றே நான் எண்ணுகிறேன். மனிதனை உருவாக்கிய சக்திகளுக்கு அவன் மீது நம்பிக்கை இருக்கிறதென்பதன் ஆதாரம் அதுவே. நீதி என்பது தேவையிலிருந்து கண்டடையப்படும் ஒரு சாத்தியக்கூறு மட்டும் அல்ல. அது மானுடத்தின் மிகச்சிறந்த மனங்கள் தங்கள் மன எழுச்சியின் உச்சங்களில் கண்டடையும் தரிசனம் ஆகும். அந்த தரிசனங்களில் சிலவற்றை தேவைகருதி  அச்சமூகம் எடுத்து தன் நடைமுறை நீதியாக மாற்றிக்கொள்கிறது.

அதாவது நீதிசார்ந்து ஒரு சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் தீராத விவாதத்தின் முதன்மையான தரப்பென்பது அச்சமூகத்தின் ஆகச்சிறந்த மனங்களின் இலட்சியக்கனவாக இருக்கும் அழியாத நீதி என்னும் தரப்பேயாகும். அப்படி ஒரு ஆன்மீகக்குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் சமூகங்களே முன்னேற்றம் கொள்கின்றன. மேலான தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்ட சமூகங்கள் அல்ல மேலான நீதியை உருவாக்கிக்கொண்ட சமூகங்களே வெற்றி கொள்கின்றன.

அந்த மாபெரும் இலட்சியக்கனவு எப்போதும் ஓர் அகத்தரிசனமே. ஆகவேதான் அது சமூகச்சட்டங்களை உருவாக்கும் நீதியாளர்களாலும் ஆட்சியாளர்களாலும் உருவாக்கப்படுவதில்லை. சமூகத்தின் சராசரித் தளத்தை விட மேலான தளத்தில் இருப்பவர்களால் அது கண்டடையப்படுகிறது. ஆன்மீக ஞானிகளாலும் பேரிலக்கியப்படைப்பாளிகளாலும். அவர்களின் மெய்ஞானமே நீதியாக முதலில் வெளிப்பாடுகொள்கிறது. ஞானக்கூற்றாகவும் கவித்துவமாகவும் அது தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. அதன் பின்னரே அது நீதியாளர்களால் கண்டடையப்படுகிறது.

ஆகவேதான் பண்டைய பெரும் நீதி நூல்கள் பேரிலக்கியங்களாகவும் இருந்தன. பேரிலக்கியங்களில் தரிசனங்களாக ஊறிவந்த நீதியையே பின்னர் சட்டநூல்கள் விதிகளாகத் தொகுத்தன. அடிப்படை மானுடதரிசனங்களை நிகழ்த்தும் சுருதிகள் என்னும் மூலநூல்களுக்கு முதன்மையை அளித்து அவற்றின் வழிநடக்கும்  வழிநூல்களாக மட்டும் நீதி -சட்ட நூல்களை நம் மரபு வகுத்துரைத்தது இதனாலேயே. நம் மரபில் எப்போதுமே ஆன்மீகமும் இலக்கியமும் முதன்மையாக எண்ணப்பட்டன. அவையிரண்டும் வேறுவேறாகக் கருதப்பட்டதுமில்லை.

இதனால்தான் மனுநீதியோ பராசரநீதியோ முன்வைக்கும் நீதிச்சட்டங்களுக்குக் கட்டுப்படாததாக இருக்கிறது மகாபாரதத்தின் நீதியுணர்வு. அது நேரடியாகவே வாழ்க்கையில் இருந்து திரட்டிக்கொண்டதாக இருக்கிறது. மகத்தான மானுட நுண்ணுணர்வால் கண்டடையப்பட்டதாக இருக்கிறது. மகாபாரதத்தில் அரசநீதியும் அதிகார அரசியல் பேசப்படுகிறது, ஆனால் அதற்கு எதிரான சாமானியர்களின் குரலும் ஒலிக்கிறது. சமூகநலம் சார்ந்த நெறிகள் பேசப்படுகின்ற, அதேசமயம் தனிமனிதர்களின் அந்தரங்கக்குரலும் எழுகிறது. ஒரு எளியவனின் குரல்கூட அதில் மறைக்கப்படவில்லை.  

மகாபாரதத்தை ஒரு ஸ்மிருதியாகவும் கொள்ளலாம் என்று சொல்லும் முன்னோர் அதை ஒரு சுருதியாகவும் கொள்ளலாம் என்கிறார்கள். ஏனென்றால் ஒருபக்கம் உள்ளுணர்வின் ஒளியால் முன்னகர்வதாகவும் மறுபக்கம் அந்த உள்ளுணவை நீதியாக வகுத்துச்சொல்ல முயல்வதாகவும் அது உள்ளது. பேரிலக்கியங்களின் இடம் அத்தகையது. நீதி என்பது எப்போதும் பேரிலக்கியங்களின் சிறகுகள் சென்ற வழியில் தன் குளம்படித்தடத்தை பதித்துச் செல்வதாக இருக்கவேண்டும்.

ஒரு நீதிநூல் என்பதை இவ்வாறு வகுத்துக்கொள்ளலாம் என்று நான் எண்ணுகிறேன்.

1. அது ஒரு சமூகத்தில் நிகழும் நீதிசார்ந்த உரையாடலின் ஒரு தரப்பு. ஆகவே அச்சமூகத்தின் வளர்ச்சிப்போக்கின் ஆவணம் அது.

2 அது நீதிசார்ந்த உரையாடலின் சமரசப்புள்ளிகளைத் தொகுத்து வைக்கும் ஒரு தளம். ஆகவே அது ஒரு சமூகத்தின் நெறிகளின் சட்டங்களின் ஆவணம். அச்சமூகத்தின் வாழ்க்கைநோக்கின் ஆவணம் அது.

3. அது நீதிக்கான இலட்சியக்பெருங்கனவை பதிவுசெய்துள்ள ஓர் இலக்கியம். மாபெரும் நீதிநூல் அச்சமூகத்தின் பிரதிபலிப்பு மட்டும் அல்ல, அச்சமூகத்தின் கனவின் பிரதிபலிப்பும்கூட.

29- ஜனவரி௨009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில்  நிகழ்த்திய தமிழ்நாடு மெர்க்கனைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு பகுதி 1

 


 

 

திருக்குறள்

இன்று வரை எம் திராவிட இனத்தை இழிவு படுத்திக் கொண்டிருக்கும் கொண்டிருக்க ஒரு வழிகாட்டியாக...எம் இனத்தை கேவலப் படுத்தி... ... தனது வம்சத்தாருக்குக் கற்றுக் கொடுத்து... அதை நிலை நாட்டி... பகை வளர்த்த புராணங்கள்..இதிகாசங்களை எழுதியவன் ஒருவனா பலரா... அதில் கூறியுள்ளவைகளைப் பின்பற்றி... அவை புனிதமானவை எனக் கூறி வாதாடுபவர்கள் எவராகிலும்... எம் இனப் பகைவரே... பகை அழிப்போம் ... இனம் காப்போம்....

ஆ. குறள் என்னும் நீதிநூல்

கி.பி. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்கும் நடுவே , தமிழகத்தை சமணர்களான களப்பிரர்கள் ஆண்ட காலகட்டத்தில், திருவள்ளுவர் என்று சிறப்புப்பெயரால் குறிப்பிடப்படும் நூலாசிரியரால் இயற்றப்பட்ட திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் நீதிநூல்வரிசையில் முதன்மையானதாக நெடுங்காலமாகவே போற்றப்பட்டு வருகிறது.  தமிழர்களின் முதல்நூலாகவும் தமிழ்ப்பண்பாட்டின் கொடியடையாளமாகவும் குறள் முன்னிறுத்தப்படுகிறது. திருக்குறளைப்போன்ற ஒரு நூலை அவ்வாறு முன்னிறுத்துவது எந்த ஒரு சமூகத்துக்கும் பெருமையளிக்கக்கூடிய ஒன்றே.

மேலே குறிப்பிட்ட விவாதத்தில் குறள் என்ன சொல்கிறது?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்

எல்லா உயிர்களும் பிறப்புசார்ந்து நிகரானவையே. ஆனால் சிறப்பு என்பது அவ்வண்ணம் நிகரானது அல்ல. அது செய்யும் தொழிலால் வேறுபடுகிறது– என்பது இதன் நேரடிப்பொருள்.  இதற்கு பரிதியார் ‘நற்குலத்தாரவர் என்றதால் இழிதொழிலாலே இழிகுலமாவார் என்பதாம்’ என்று விளக்கம் அளிக்கிறார்.

இந்தக்குறளை கீழான தொழிசெய்பவர்கள் கீழானவர்கள் என்றோ கீழான தொழில்செய்யும் சாதிகளில் பிறந்தவர்கள் கீழானவர்கள் என்றோ பொருள்கொள்பவர்கள் சிலர் உண்டு.ஆனால் அடுத்த குறள் இன்னும் தெளிவான விளக்கத்தை இந்த பாடலுக்கு அளிக்கிறது. உண்மையில் இவ்விரு குறள்களையும் பிரிக்காமல்தான் பொருள்கொள்ள வேண்டும்.

மேல் இருந்தும் மேல் அல்லர் கீழ் இருந்தும்
கீழ் அல்லர் கீழ் அல்லவர்

மேன்மைகுணம் இல்லாதவர் சமூகத்தின் மேல்படிகளில் இருந்தாலும் மேலானவர்கள் அல்லர். சமூகத்தின் கீழ்ப்படிகளில் இருந்தாலும் கீழ்மைக்குணம் இல்லாதவர்கள் கீழானவர்கள் அல்லர். 

இக்குறளுக்கு பரிமேலழகர் ‘செயற்கரிய செய்யலாகாது சிறியராயினர் உயர்ந்த அமளி மிசை இருந்தாராயினும் பெரியார் ஆகார். அவைசெய்து பெரியராயினர் தாழ்ந்த வறுநிலத்து இருந்தாராயினும் சிறியார் ஆகார்’ என்று உரைகொள்கிறார். பிற உரையாசிரியர்களும் அவ்வண்ணமே உரைகொள்கிறார்கள்.செயல் மற்றும் தகுதி மூலம் மட்டுமே ஒருவரை மேல் கீழ் என்று அடையாளப்படுத்த முடியும் என்று குறள் தெளிவாகவே சொல்கிறதென்று கூறலாம்.

அதேபோல பிராமணர்களைப்பற்றி அல்லது பிராமணத்தன்மை பற்றி குறள் சொல்வதென்ன என்றும் பார்க்கலாம். அந்தணர் என்று குறள் சொல்வது பிராமணர்களை அல்ல என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. அறவழி நின்றவர் என்ற பொருளில் அது பயின்றுவருவதனாலும் குறளின் பொதுவான கருத்துநிலையாலும் அது அறிவர் என்றும் அறவோர் என்றும் சமணர்களால் சொல்லப்படும் துறவிகளையே குறிக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். குறட்பாக்கள் அதற்குத்தான் பொருந்தி வருகின்றன.

ஆனால் குறள்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்
[ குறள் 560]

என்று சொல்லும் இடத்தில் அது பிராமணர்களையே குறிக்கிறது. இங்கே புராதன ஸ்மிருதிகள் வகுத்த ஆறு தொழில்களையே குறிக்கிறது என்பது தெளிவு. வேதங்களின் விளக்கநூலான சதபத பிராமணத்தில்தான் பிராமணர்களின் ஆறு தொழில்கள் சுட்டப்படிருக்கின்றன. பின்னர் யாக்ஞவல்கிய ஸ்மிருதி பத்துவகையான ஆசாரங்களை அவர்களுக்கு பட்டியலிடுகிறது.  பின்னர் வந்த ஸ்மிருதிகளில் பதினாறு ஆசாரங்களாக அவை மேலும் விரித்துரைக்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்துமே கல்வியையும் வேள்வியையும் மட்டுமே செய்து அதற்குரிய வாழ்க்கைநெறியைக் கடைப்பிடித்து வாழவேண்டியவர்களாக பிராமணர்களை வகுத்துரைப்பவை.

குறள் அறுதொழிலோர் நூல்மறப்பர் என்ற சொல்லாட்சியின் வழியாக பிராமணர்களின் இந்த செயல்சார்ந்த அடையாளத்தையே முன்னிறுத்துகிறது என்று சொல்லலாம். பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களுக்கு வரக்கூடிய மேலிடத்தையோ உரிமைகளயோ அது பொருட்படுத்தவில்லை. ஞானம் மூலமும் ஆசாரங்கள் மூலமும் உருவாகும் முதன்மையையே அது கணக்கில் கொள்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற குறளில் உள்ள செய்தொழில் என்ற சொல்லுடன் இங்குள்ள அறுதொழில் என்ற வரியை இணைத்துக்கொள்ளலாம்.

ஆக, முழுமையாக மனு முதலிய ஸ்மிருதிகளில் இருந்து வேறுபட்டுச் செல்கிறது குறள். இதை குறள் பிற மதிப்பீடுகளைப் பேசும் இடங்களைச் சுட்டிக்காட்டியும் விரிவாக நிறுவ முடியும். ஆனால் குறளுக்கு உரை எழுதும் பரிமேலழகர் தன் உரைப்பாயிரத்தில் ‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும் ஆகும்’ என்று சொல்கிறார். அது ஒழுக்கம் வழக்கு தண்டம் என்ற மூன்று என்று சொல்லும் பரிமேலழகர் ‘ அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரம்மசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றுக்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’ என்று சொல்கிறார். அத்துடன் தண்டம் என்பது ‘நால்வகை நிலத்ததாய் வருணந்தோறும் வேறுபாடு உடையது’ என்கிறார்.

அதாவது குறளின் நீதியிலிருந்து பரிமேலழகரின் நீதி மனு முதலாகிய பிற்கால ஸ்மிருதிகளைநோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த நகர்வு தமிழகத்தின் நீதிப்பிரக்ஞையில் எந்தக்காலத்தில் நிகழ்ந்தது, அதற்கான உரையாடற்களம் எது, அதகான சமூக அரசியல் காரணங்கள் எவையெவை என்பதையே நாம் குறளைப்பற்றிப் பேசும்போது கூர்ந்து அவதானிக்க வேண்டியிருக்கிறது.

குறள் தமிழில் எழுதப்பட்ட சமூகச்சூழல் எது என்ற வினா அதற்கு முன் எழுப்பப்பட வேண்டும். இன்றுவரையிலான குறள் ஆய்வுகளை எடுத்து நோக்கினால் பெரும் கருத்துக்குழப்பத்தையே நாம் அடைய வேண்டியிருக்கும். குறளை ஒரு சைவநூலாகக் காட்டும் பெரும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. குறள் சங்ககாலத்தைச் சேர்ந்த அல்லது அதற்கும் முந்தைய தொல்தமிழ்நூல் என்று வாதிடும் ஆய்வுகளும் பல உள்ளன.

இந்த விவாதங்களின் ஒட்டுமொத்தமாகத் திரண்டு வந்திருக்கும் இன்றைய கருத்துக்களைச் சார்ந்து இந்த ஆய்வை அமைத்துக்கொண்டிருக்கிறேன். குறள் கிபி மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழில் எழுதப்பட்டிருக்கலாம். அக்காலத்தில் தமிழகம் களப்பிரர்களால் ஆளப்பட்டது. அவர்கள் சமண- பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள். அக்காலத்தில் பரவலாக நீதிநூல்கள் எழுதப்பட்டன. அவை பிற்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு என்று தொகுக்கப்பட்டன. ‘திருவள்ளுவர்காலம்’ என்ற தலைப்பில் மா.இராசமாணிக்கனார் எழுதிய ஆய்வுரையில் சொல்லும் இக்கருத்துக்கள் எனக்கு பெரிதும் ஏற்புடையனவாகவே உள்ளன.

திருக்குறளின் ஆசிரியரான திருவள்ளுவர் பிறப்பால் வள்ளுவர் சாதியைச் சேர்ந்தவர். வள்ளுவர் என்ற சாதி முரசறையும் சாதி என்று இராசமாணிக்கனார் சொல்கிறார். வள்ளுவர் என்ற சாதி இன்றும் கேரளத்தில் உள்ளது. இவர்கள் சோதிடம் மற்றும் பூசைத்தொழில்களைச் செய்யும் சாதியினர். மத்தியகேரளம் வள்ளுவநாடு என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. வள்ளுவர்கள் செல்வாக்கான சாதியாக இருந்து பின்னர் பலவாறாக சிதைந்து பரவியிருக்கலாம்.

வள்ளுவர் குறித்து கூறப்படும் தொன்மக்கதைகளை பெரிதும் பொருட்படுத்த முடியாதென்றே ராசமாணிக்கனார் சொல்கிறார். அவர் நெசவாளர் என்றும் வாசுகி என்ற மனைவி அவருக்கு இருந்தார் என்றும் சென்னை அருகே மயிலாப்பூரில் அவர் வாழ்ந்தார் என்றும் சொல்லப்படும் செய்திகளெல்லாம் மிகப்பிற்கால நூல்களான திருவள்ளுவமாலை, ஞானாமிர்தம், கபிலர் அகவல், புலவர் புராணம், தமிழ்நாவலர் சரிதை போன்றவற்றில் உள்ளவை. திருவள்ளுவரை சைவராக காட்டும் திருவள்ளுவநாயனார் புராணமும் உள்ளது.

ஆனால் சமணர்களால் சொல்லப்படும் ஒரு கருத்து அத்தகைய எளிய நிராகரிப்புக்கு உரியதல்ல என்று நான் நினைக்கிறேன். திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்த குந்துகுந்தாச்சாரியார் என்ற சமணத்துறவியால் இயற்றப்பட்டதே திருக்குறள் என்று சில சமண நூல்கள் சொல்கின்றன. சமணமூலநூல்களை ஆராய்ந்து இக்கருத்தை இன்னமும் தெளிவாக விவாதிக்கலாமென்றே படுகிறது.

இந்தத் தளத்தில் மிக முக்கியமானதாக நான் எண்ணும் ஒரு நூல் டாக்டர் ர. விஜயலட்சுமி எழுதி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழகத்தில் ஆசீவகர்கள் என்ற நூலாகும். தமிழகத்தில் சங்ககாலம் முதல் எவ்வாறு ஆசீவகக் கருத்துக்கள் வேரூன்றிருந்தன என்பதை விவரிக்கும் இந்நூல் தமிழகத்தின் சமணத்தின் முன்னோடி மதமாக  ஆசீவகம் இருந்ததை குறிப்பிடுகிறது. ஆசீவகத்துக்கே ற்றிய பல சிறப்புக்கருத்துக்கள் தமிழ்நூல்களில் காணப்படுகின்றன என்பதை விஜயலட்சுமி சுட்டிக்காட்டுகிறார்.

சங்கம் மருவியகாலகட்டத்து நூல் என திருக்குறளை எண்ணுவது பொதுவான வழக்கம். தமிழிலக்கியங்களை வைத்துப்பார்த்தால் சங்க காலம் என்பது பழங்குடி அரசுகளில் இருந்து பெரிய அரசுகள் உருவாகிக்கொண்டிருந்த போராட்ட காலம் என்றே ஊகிக்க முடிகிறது. வேளிர்மன்னர்கள், கடல்சேர்ப்பர்கள், குன்றுகளை ஆண்ட குறவ மன்னர்கள் என பலநூறு மன்னர்களால் அக்கால தமிழகம் ஆளப்பட்டது. இவர்களில் இருந்து உருவான சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் இந்த்ச் சிறுமன்னர்களை வென்று பெரிய அரசுகளை உருவாக்கும் ஓயாத போரில் இருந்தார்கள்.

இந்தக்காலத்தில்தான் தமிழகத்தில் களப்பிரர் ஆதிக்கம் ஏற்பட்டிருக்கிறது. களப்பிரர்கள் தமிழகத்துக்கு வடக்கே உள்ள ஆந்திர – கர்நாடக மையநிலப்பகுதியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். அப்பகுதியில் இருந்து வரலாற்றுக்காலம் முழுக்க தமிழகத்தில் குடியேற்றம் நிக்ழ்ந்தபடியேதான் இருக்கிறது. இங்கிருந்த அரசியல்நிலையின்மை காரணமாக அவர்கள் எளிதில் இப்பகுதியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்தனர். இரண்டு நூற்றாண்டுக்காலம் அவர்களின் ஆட்சி நிகழ்ந்திருக்கலாம். திருக்குறள் உள்பட உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவை.

களப்பிரர் காலத்தில் அத்தனை நீதிநூல்கள் எவ்வாறு உருவாயின? அவற்றுக்கான தேவை எது? விவாதக்களம் எது? இந்த வினாவை எழுப்பிக்கொண்டு பலகாலமாக விடைதேடப்பட்டுள்ளது. களப்பிரர்காலம் இருண்ட காலகட்டம் என்றும் ஆகவே அக்கால தமிழகம் நெறிவழுவிக்கிடந்தது என்றும் அதன்பொருட்டே நீதிநூல்கள் உருவாயின என்றும் ஒரு தரப்பு உண்டு. அது சமூக இயக்கத்தை முற்றிலும் உணராது சொல்லப்படுவது. நூல்கள் அறியாமையில் இருந்து உருவாவன அல்ல, அறிவில் இருந்தே அவை உருவாகின்றன.

டி.டி.கோஸாம்பி இந்தியவரலாற்றுக்கு ஒரு முகவுரை நூலில் இந்தியாவில் பிராமணியம் ஆற்றிய பங்கு குறித்துச் சொல்வதை நான் இங்கே கணக்கில்கொள்கிறேன். இந்தியாவில் எப்படி பிராமணியம் முக்கியமான ஒரு கருத்தியலாகவும் அதிகார அமைப்பாகவும் ஆகியது? சமூக வளர்ச்சியில் அது எத்தகைய பங்கை ஆற்றியதன்மூலம் அந்த இடத்தை அடைந்தது? கோஸாம்பி அளிக்கும் சித்திரம் இது. கங்கைசமவெளி நாகரீகத்தில் ஏராளமான உபரி உருவாகி அதன் வழியாக பெரும் அரசுகள் பிறந்தன. அவ்வரசுகள் சுற்றியுள்ள நிலப்பரப்புகளை வென்றும் ஈர்த்துக்கொண்டும் தங்களுடன் இணைத்துக்கொள்ள ஆரம்பித்தன. மிக மெல்ல பற்பல நூற்றாண்டுகளாக நடந்த இந்த இணைப்புச்செயல் இந்தியப்பண்பாட்டின் உருவாக்கத்தின் அடிப்படை என்கிறார் கோஸாம்பி.

இவ்விணைப்பில் ராணுவ ஆதிக்கம் முடிந்தவரை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. அடர்ந்த காடுகளுக்குள் போக்குவரத்து வசதிகள் எட்டாத தூரங்களில் சிதறிக்கிடந்த ஆயிரக்கணக்கான பழங்குடி, அரைப்பழங்குடி இனக்குழுக்களை வென்று இணைத்துக்கொள்ள ராணுவத்தை அனுப்புவது சாத்தியமாக இல்லை. இந்நிலையில் பேரரசுகளின் ஆதாரக் கருத்தியலாக இருந்த பிராமணியத்தை அப்பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதே சிறந்த வழிமுறையாக இருந்தது. தொலைதூர நாடுகளுக்கு பிராமணகள் சென்றார்கள். அங்கே அவர்கள் பிராமணக்கருத்தியலைப் பரப்பினார்கள்

பிராமணர்கள் மையப்பண்பாட்டின் அறிவுஜீவி வற்கம். அவர்களிடம் மையப்பண்பாடு அடைந்த ஞானம் முழுக்க இருந்தது. அதில் பருவநிலைமாற்றங்கள் குறித்த ஞானம், மொழியிலக்கணம், மருத்துவம், நடைமுறை அறிவியல் ஆகியவை அடங்கும். அவை அவர்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் தேவையானவையாக இருந்தன. ஆகவே அவர்கள் எளிதில் தொலைதூரநிலங்களை ஊடுருவினர். அம்மக்களிடையே தங்கள் கருத்தியலைப் பரப்பினர்.

அக்கருத்தியலின் மையமாக இருந்தது அவர்களுடைய பிரம்மம் என்னும் இறைக் கோட்பாடுதான். பிரபஞ்ச சாரமாக உள்ள அறியமுடியாத ஆற்றல் என்ற தத்துவ உருவகம் அது. பிற  அனைத்து தெய்வங்களும் அந்த பிரம்மத்தின் தோற்றநிலைகளே என்ற கருத்தியல் அனைத்து வழிபாட்டுமுறைகளையும் ஒரே சரடில்கோர்க்க அவர்களுக்கு உதவியது. அனைத்து இனக்குழுக்க¨ளையும் தங்கள் நால் வருணம் என்ணும் கட்டமைப்புக்குள் கொண்டுவரவும் அவர்களால் முடிந்தது. விளைவாக படிப்படியாக இந்திய சமூக உருவாக்கம், அதிகாரமைய உருவாக்கம் நிகழ்ந்தது.

இந்த சட்டகத்தை அப்படியே களப்பிரர் காலத்தில் நீதிநூல்கள் உருவானமைக்குப் போட்டுப்பார்க்கலாம். களப்பிரர் தமிழ் நிலத்தை ராணுவபலத்தால் மட்டுமல்லாமல் கருத்தியலாலும் வெற்றிகொண்டு மேலாதிக்கம்பெற்றனர் என்று கொள்ளலாம். அக்கருத்தியலாதிக்கத்துக்காக உருவானவையே இந்த நீதிநூல்கள் என்று கொள்வதே பொருத்தமானதாகப் படுகிறது. பல்வேறு இனக்குழுக்களும் சிறு அரசுகளும் தமிழ்நாட்டை பகிர்ந்துகொண்டு ஆண்ட அக்காலகட்டத்தில் பொதுவான ஒரு நீதியமைப்பை  உருவாக்குவதே அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கன வழியாக இருந்திருக்கலாம். அதற்கு ஆசீவக, சமண, பௌத்த மதங்களின் பங்களிப்பு அவர்களுக்கு உதவியிருக்கலாம்.

ஆசீவக, சமண, பௌத்த மதங்களை வைசிய எழுச்சியுடன் தொடர்புபடுத்துவது நம் ஆய்வாளர்களின் வழிமுறையாகும். அவை பழங்காலத்திலும் சிரமண மதங்கள் — உழைப்பவர்களின் மதங்கள்– என்று சொல்லப்பட்டன. எப்படி க்ஷத்ரிய எழுச்சியின்போது பிராமணியம் ஒரு கருத்தியல் மேலாதிக்க சக்தியாக பயன்பட்டதோ அதேபோல வைசிய எழுச்சியின் கருத்தியல் மேலாதிக்க சக்தியாக ஆசீவக, பௌத்த, சமண மதங்கள் பயன்பட்டன. இந்தியப்பெருநிலம் வணிகப்பாதைகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டபோது வணிகம் பெருகியது. வணிக குலங்கள் தழைத்தன. அக்காலத்தில் உருவானதே வணிகர்களின் எழுச்சி. அவர்கள் செல்வமும் அதன் விளைவான அதிகாரமும் கொண்ட சமூகப்பிரிவாக ஆனார்கள். அவர்களின் கருத்தியலாக வளர்ந்தன ஆசீவக, சமண, பௌத்த மதங்கள்.

சங்கம்மருவிய காலகட்டத்தில் வணிகர்கள் தமிழகத்தில் பெரும் அதிகார மையங்களாக ஆகிவிட்டிருந்தமையை நாம் காப்பியங்களில் காணலாம். வட இந்திய நகரங்களான மகதம் பாடலிபுத்திரம் போன்றவற்றில் இருந்த பெருவணிகர்களின் ஆதிக்கத்தைப்பற்றி நாம் கதாசரித சாகரம் முதல் சம்ஸ்கிருத நாடகங்கள் வரையிலான இலக்கியங்களில் காணமுடிகிறது. முத்ரா ராட்சஸம் அரசியல் சதிகளில் வணிகர்கள் ஆற்றிய பங்கைப்பற்றிச் சொல்லும் ஆவணமாகும். அர்த்தசாஸ்திரத்தில் வணிகர்களிடமிருந்து அரசர்கள் எப்படியெல்லாம் நயந்தும் பயந்தும் பொருளைக் கவரலாமென்று சாணக்யன் பேசுவதை நாம் காணலாம்.

ஆகவே சங்கம் மருவிய காலகட்டத்தில், ஏற்கனவே வணிகர்கள் ஒரு சக்தியாக இங்கே ஆகிவிட்டிருந்த சூழலில், சிரமண மதங்களாகிய ஆசீவக சமண பௌத்த மதங்கள் இங்கே பரவின. அதைத்தொடர்ந்து களப்பிரர் ஆட்சியும் உருவாயிற்று என்று கொள்ளலாம். அதற்கு முன்னரே தமிழ்நிலத்தில் வைதீகமதமும் பிராமணியக் கருத்தியலும் அறிமுகமாகியிருந்தன என்பதற்கு ஏராளமான இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் போதாமையை அல்லது இடைவெளியை சிரமண மதங்கள் நிரப்பின என்று சொல்லலாம்.

புராதன தமிழகத்தில் பிராமணியம் என்ன பங்கை ஆற்றியிருக்க முடியும்? புறநாநூறில் பிராமணர்களைப்பற்றிய சித்தரிப்புகள் பெரும்பாலும் அவர்களை வேள்விகள் செய்பவர்களாகவும், விரதங்களால் மெலிந்து வெளிறிய உடல்கள் கொண்டவர்களாகவும், போர்களில் தூதுபோய் சமரசங்கள் செய்பவர்களாகவும்தான் காட்டுகின்றன. புறநாநூற்றுப்பாடல் ஒன்று மெலிந்த பார்ப்பனன் போரில் இருந்த நகரத்தில்கூட எந்த விதமான தடையும் இல்லாமல் ‘நில்லாமல் சென்று’ மன்னனைச் சந்தித்ததாகச் சொல்கிறது. இது அவர்களுக்கு இருந்த மரியாதையையும் சமூக இடத்தையும் சுட்டுகிறது.

ஆகவே டி.டி.கோசாம்பி சொல்வதுபோல பார்ப்பனர்கள் அக்கால மன்னர்களுக்கு தேவையாக இருந்த சமூகத்தொகுப்புப்பணியை, சமூக இணக்கப்பணியை செய்யும் கருத்தியல் சக்தியாகவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஆற்றிய பணி என்பது பல்வேறு இனக்குழுச்சமூகங்களை பொதுவான ஒரு கட்டமைப்புக்குள் இருத்தும் செயல்தான். அந்தக் காலகட்டத்துக்கு அடுத்த காலட்டமான வணிகயுகம் கோரிய அதேபோன்ற ஒரு பணியையே சிரமண மதத்தின் அறிவர்களும் துறவியரும் செய்தார்கள் என்று கொள்ளலாம்.

பிராமணர்களைப்போலன்றி சமணர்களுக்கும் பௌத்தர்களுக்கும் மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்முறை இருந்தது. பள்ளி, சங்கம் போன்ற அமைப்புகள் அவர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தன. ஊர்நடுவே பள்ளிகளூம் விகாரங்களும் அமைக்கப்பட்டன. சமண பௌத்த துறவிகள் மொழிக்கல்வியும் அறக்கல்வியும் கற்பித்தார்கள். வணிகம் பரவ ஆரம்பித்த அக்காலகட்டத்தில் பெரிதும் தேவையாக இருந்த அடிப்படைக்கல்விகள் அவை.  வணிகத்துக்கு அவசியமான அடிப்படை அறங்கள் அடிப்படை தொடர்புறுத்தல் ஆகிய இரண்டுமே இதனுடன் தொடர்புகொண்டவை. அத்துடன் அன்று மக்களுக்கு பெரிதும் தேவையாக இருந்த மருத்துவத்திலும் ஈடுபட்டார்கள்.

இதில் சமணத்தைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். சமணம் இந்தியா முழுக்கவே இலக்கண நூல்களையும் மருத்துவநூல்களையும் நீதி நூல்களையும் உருவாக்கியது. சம்ஸ்கிருதத்தில் மட்டுமல்லாமல் பிராந்திய மொழிகளிலும் அதன் பங்களிப்பு அதிகம். தமிழிலும் சமணம் இந்த மூன்று தளங்களிலும்தான் தன் பண்பாட்டுக்கொடையை நிகழ்த்தியிருக்கிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவ்வாறு உருவானவையே என்று கொள்ளத்தான் தமிழக வரலாறு அடிப்படையமைக்கிறது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள் இந்தக் காலகட்டத்தில் இந்த வரலாற்றுச்சூழலில் உருவானதெனக் கொள்வதற்கே வாய்ப்புகள் அதிகம். திருக்குறளை சங்க காலத்துக்கு அல்லது அதற்கும் முன்னால் கொண்டுசெல்லுதல் போன்ற ஊகப்பாய்ச்சல்களுக்கு வேறு உள்நோக்கங்கள் இருக்கலாமென்றே எண்ணத்தோன்றுகிறது. ஆகவேதான் குந்துகுந்தாச்சாரியார் என்ற சமணத்துறவியால் எழுதப்பட்ட சமணநூல்தான் திருக்குறள் என்ற கூற்றை நிராகரித்துவிடமுடியாது என நான் எண்ணுகிறேன்.

இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த நீதிசார்ந்த விவாதக்களத்தை நாம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், அக்காலத்து சமண நெறிநூல்கள், தென்னிந்திய சமண வரலாற்றுக்குறிப்புகள் மற்றும் பொதுவான இந்திய வரலாற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் விரிவாகச் சித்தரித்துக்கொள்வதன் மூலமே குறள் பேசும் நீதியின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முடியும். இதுகாறும் வந்த திருக்குறள் ஆய்வுகளைப் பார்க்கையில் அவை குறளை தமிழ்ப்பண்பாட்டின் தலைநூல் என்ற வகையில் தமிழ்வரலாற்றிலும் தமிழிலக்கிய விவாதக்களத்திலும் மட்டும் வைத்து மதிப்பிடுபவையாகவே உள்ளன. அடுத்த கட்டத்துக்கான நகர்வுக்கான தேவை இன்று உள்ளது.

29 ஜன்வரி 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆற்றியகமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு. பகுதி 2


  1. enjoy what you earn

    வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
    செத்தான் செயக்கிடந்தது இல். 1001.

    வாய் சான்ற = இடம் நிறைந்த ; பெரும்பொருள் = அதிகச்
    செல்வத்தை; அஃதுண்ணான், வைத்தான் = அதை நுகராது,
    சேமிப்பில் கிடத்தினான் ஒருவன்; செத்தான் = அவன்
    இறந்தவனுக்கு ஒத்தவனே; செயக்கிடந்தது = (பின்னர்,
    அப்பொருளைக் கொண்டு ) அவன் செய்தற்கு உள்ளவை; இல்
    =ஒன்றுமில்லை என்றவாறு.

    செத்தான் - செத்தபின்னர் என்றும் உரை கூறுவதுண்டு.

  1. குறள்:

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்.
    பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

    இதில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்கியம்:
    பார்ப்பான் மறப்பினும் ஓத்துக் கொளலாகும் என்பது.

    நூல்களைப் பார்ப்பவ னொருவன், அவற்றில் ஓதற்குரிய ஒன்றை மறந்துவிட்டாலும், அதனை அறிஞர் பொருட்படுத்தமாட்டார்; (காரணம், அதனை யவன் திருத்திக்கொள்ளலாமே!)

    அடுத்த வாக்கியம்: "பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்". இந்த இரண்டாவது வாக்கியத்துக்குப் பார்ப்பான் என்ற சொல்லை மீண்டும் துணைக்கழைக்க வேண்டியதில்லை. குடிக்குரிய ஒழுக்கம்
    என்பது யார்க்கும் உண்டு, ஆதலால்், யாரென்றாலும், குடிக்குரிய ஒழுக்கத்தினின்று திறம்பி நடந்தால், அந்த நடத்தை, திருத்திக் கொள்ள முடியாத பெரும் பேரிடர்களை வாழ்வில்
    விளைத்துவிடும்.

    இதுவே சிறந்த விளக்கம் எனலாம்.

    திருவள்ளுவர் காலத்தில் ";" குறி இல்லை. இப்போது அச்சிடப்பட்டவற்றில் அது இருக்கிறதென்பதை உணர்க. பிறப்பொழுக்கம் என்பது எச்சாதியானுக்கும் உண்டு. ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் ஒரு குடியில் பிறத்தலால், அக்குடிக்குரிய ஒழுக்கமே அந் ந(ண்)பருக்குப் பிறப்பொழுக்கமாகும்.

 

  1. பிறப்பொழுக்கம்

    பிறப்பொழுக்கம் - பிறந்த குடிக்குரிய ஒழுக்கம் என்று பல உரையாசிரியன்மார் உரைத்துள்ளனர். அவர்களை ஒருவகை-
    யில் பின்பற்றியே நானும் " பிறப்பு ஒழுக்கம்" - குடிப்பிறப்புக்குரிய ஒழுக்கம் என்று உரைத்துள்ளேன்.

    இதிலும் நாம் சற்று கருத்தைச் செலுத்தலாம்.

    குடிக்குரிய ஒழுக்கம் என்று தமிழ் நாட்டில் ஓர் ஒழுக்க நெறி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது என்பது நிறுவப்படுதல் வேண்டும்்.

    குடிக்குரிய ஒழுக்கம், சாதிக்குரிய ஒழுக்கம், பிறப்புக்குரிய ஒழுக்கம் என்பவெல்லாம் ஒரு பொருளனவா என்பதும்
    தெளிவுறுத்தப்படுதல் வேண்டும். வள்ளுவர் ஒவ்வொரு சாதிக்கும் அல்லது குடிக்கும் அல்லது பிறப்புக்கும் ஒரு விதந்து கூறத்தக்க
    ஒழுக்கம் இருந்தது என்று நம்பினாரா அல்லது அவ்வாறு இருந்ததா என்பதும் ஆய்ந்து நிறுவப்படுதல் வேண்டும்.

    பிறப்பொக்கும் என்பது வள்ளுவர் கருத்தாகலின், பிறப்பொழுக்கம் என்பது ஏன் ஒத்த பிறப்பினரான மக்களிடையே
    பொதுவாக நிலவிய ஒழுக்க நெறிகளின் தொகுப்பு என்று பொருள் படலாகாது என்பதையும் தெளிவு படுத்தவேண்டும்.
    "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்றதனால், ஏன் சிறப்பொழுக்கம் என்ற தொடர் ஆளப்பெறவில்லை என்றும்
    கடாவ வேண்டும். குடிக்கும் செய்தொழிலுடையோருக்கும் இடையே வழங்கி வரும் ஒழுக்க நெறிகள் எனின் சிறப்பொழுக்கம்
    குன்றக் கெடும் என்று குறளில் ஏனோ வரவில்லை என்றும் குடைய வேண்டும்.

    (குடி என்று இங்கே கூறப்பட்டது ஒரே தொழிலில் அல்லது அக்கறைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு இணைந்தியங்கும்
    குடும்பங்கள் என்று பொருள்படும். )
     

    1. சரியான உரை

      இருவகையில் பொருள் கொள்ளுதல்.

      பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்பதை:

      1. பிறப்பு, ஒழுக்கம் குன்ற, கெடும் அதாவது: பிறப்பானது, ஒழுக்கம் குன்றுமாயின், கெட்டுப் போகும் என்று கொள்ளுதல். இங்கு, பிறப்பு ஒழுக்கம் என்பன தனித்தனியாக நிற்கும்படி பொருள்கொள்ளப்பட்டது. பிறப்பு (எழுவாய்), கெடும் (பயனிலை). எப்போது கெடும்? என்ற கேள்விக்கு, ஒழுக்கம் குன்றினால் கெடுமென்றவாறு. இதைத் தற்கால உரைநடை இலக்கணத்தில், "கிளவியம்" (clause ) என்பர். இங்ஙனம் கொள்ளுங்கால், "பிறப்பொழுக்கம்" என்று ஒன்று விதந்து கூறுவதற்கு இல்லையாயிற்று.

      2. அடுத்து, "பிறப்பொழுக்கம்" என்பதை ஒரு கூட்டுச்சொல்லாகக் கொண்டு, பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் எனக் கொள்ளுதல். இப்படிக் கொண்டால், பிறப்பொழுக்கம் குன்றினால், (எது) கெடும்? என்று கேள்வியை எழுப்பி, அதற்கு உரையாசிரியர் விடை சொல்வார். எது கெடும் என்றால் அவன் குலம் கெட்டுப்போகும், மேற்குலத்தினின்று கீழிறக்கப் பெறுவான்.. என்பார். ஆகவே, குலம் என்பதை வருவித்து உரைகூறுவார். கெடும் என்ற பயனிலை மட்டும் இருக்கிறது, எழுவாய் இல்லை. அதைப்படிப்பவரே வழங்கிக்கொள்ளவேண்டும். இப்படியும் உரை கூறலாம்.

      சரியான உரை என்று எதுவும் இல்லை. சரியில்லாத உரையும் எதுவும் இல்லை. வள்ளுவர் காலத்தின்பின் ஈராயிரம் ஆண்டுகள் ஓடி மறைந்த நிலையில், அவரை முற்றும் அறிந்தவர் யார்? அவரே உரை வகுத்திருந்தால் இத்தகைய தொல்லைகள் இரா. ஆனால் அவரெழுதிய காலத்தில் மொழி நிலை மேம்பட்டு நின்று விளங்கிய காரணத்தால், உரை தேவைப்பட்டிருக்காது. ஈராயிரம் ஆண்டுகளின் பின் வாழும் நமக்குத் தேவைப்படுகிறது. உரையாசிரியர் அனைவருக்கும் நன்றி நவிலும் அதே வேளையில், வேறுபடும் உரைகளில் எது உங்கள் அறிவிற்கும் பொருத்தமாகப் படுகிறதோ, அதையே நீங்கள் மேற்கொள்வது, உங்கள் பொறுப்பும் கடனுமாகும்.

       


     

 

றுதொழிலோர் (ஷட்கர்ம நிரதர்) என தமிழ்,சமஸ்கிருதம் இரண்டிலும்
அழைக்கபடுபவர்கள் பிராமணர்களே.

மேலும் வள்ளுவர் அறுதொழிலோர் நூல்மறப்பர் என தெளிவாக எடுத்துரைக்கிறார்.  பிராமணர்கள் வேதத்தை மறந்தால் நாடு அழியும் என்பது அன்றைய நம்பிக்கை. அத்தகைய
அனர்த்தம் வேறு எந்த வருணம் எந்த நூலை மறந்தாலும் ஏற்படாது.

வள்ளுவர் பலகுறள்களில் முதல்வருணத்தை மட்டும் குறிப்பிட்டு (மறப்பினும் ஒத்துகொள்ளல் ஆகும்) மற்ற வருணங்களை குறிப்பிடாமல் செல்கிறார். (முதல் வருனத்துக்கு சொல்லபடும் விதி மற்ற அனைத்துக்கும் பொருந்தும் என்பதால்)

ஹவிஸ் ஹோமகுண்டத்தில் அளிக்காததால் வானம் பொழியவில்லை என்றா இக்குறளில் உள்ளது?

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல் -

திவாகர நிகண்டு சொல்லும் அறுதொழில்கள்:

“உழவு தொழிலே வரைவு வாணிகம்
விச்சை சிற்பம் என்றித் திறத்து அறு
தொழில் கற்ப நடையது கரும பூமி”

வரைவு - எழுதும் தொழில், கல்வி.
விச்சை - ஆடல், பாடல் போன்ற 64 கலைகள்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

Date: Sunday, 26 Jun 2011 19:47


ஆதியாய் நின்றது மன்னவன் கோல்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
                    (திருக்குறள் –
543)

என்ற குறளில் வரும் ‘ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’ என்ற சொற்றொடர் மிக்க பொருள் பொதிந்தது. பரிமேலழகர் தன் உரையில் ‘ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’ என்பதற்கு வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு “ஆதி” என்றும் அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் “நின்றது” என்றும் கூறினார்” என்று மிக, மிக குழப்பமாகப் பொருள் செய்திருக்கிறார். ஆனால், மணக்குடவர் உரையில் ‘ஆதியாய் நின்றது’ என்பதற்கு முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை’ என்று சிறந்த பொருள் செய்திருக்கிறார். அவற்றையும் ஈண்டு காண்போம்! இது நிற்க!!

“ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” என்பதில் நின்றது என்பது இறந்தக் காலத்தைக் குறித்து நின்றது. அக்குறிப்பை, மணக்குடவர் மிக சரியாய் ‘முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை’ என்று பொருள் செய்து உணர்த்தியிருக்கிறார். ஆதியாய் நின்றது எனும் போது முதலாக நின்றது அல்லது அமைந்தது என்று தான் பொருள் கொள்ளவேண்டும். அதனால், மன்னவனே அந்தணர்களையும், அவர்களின் அறத்தையும் தோற்றுவித்தான் அல்லது அவற்றுக்குக் காரணமாக அமைந்தான் என்றுதான் இந்த குறளுக்குப் பொருள் கொள்ள வேண்டும். என்னை?

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

என்ற குறளில் ’அந்தணர் நூற்கும், அறத்திற்கும்’ என்ற சொற்றொடரை ஆராய்வோம். பெரும்பாலோர், இச்சொற்றொடர் வைதிகப் பிராமணர்களின் வேதத்தையும் அவற்றில் கூறப்பட்ட அறத்தையும் குறிக்கிறது என்றுப் பொருள் கொள்கின்றனர். பிராமணர்களின் வேதங்கள் ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண என்பன.

பொதுவாக, வேதங்கள் அபௌருஷேயம்1 என்று அழைப்பார்கள். அபெளருஷேயம் என்றால் யாராலும் இயற்றப்பட்டதல்ல என்று பொருள். யாராலும் இயற்றப்படவில்லை என்றால் மன்னவன் எவ்வாறு அதற்கு முதலாகயிருந்திருக்க முடியும்? குறள் “ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” என்று அழுத்தம் திருத்தமாகக கூறுகிறது. அப்படியாயின் இங்கு கூறப்பட்ட அந்தணர் நூல் என்பதும் அறம் என்பதும் வேறு பொருளைக் குறிக்கிறது என்பது திண்ணம்! அவற்றையும் பார்ப்போம்!!

பரதச் சக்கரவர்த்தி

சமணச் சரித்திரத்தின் படி, இந்த யுகத்தின் முதல் சக்கரவர்த்தி பரதர் ஆவார். இவர் ஆதி தீர்த்தங்கரரான ஆதிபகவன் என்றழைக்கப்படும் ரிஷபதேவரின் முதல் மகன். இவருடைய பெயராலேயே இப்பூமி (இந்தியா) பரத கண்டம் என்றும் பரத க்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது. இவற்றைப் பற்றியக் குறிப்பு பாகவதப் புராணத்திலும்2 கூறப்பட்டிருக்கிறது.

முதல் சக்கரவர்த்தி

சமணச் சரித்திரத்தின்படி, இந்த பரதரே3 இந்த யுகத்தில் முதல் சக்கரவர்த்தியாவார்.

அந்தணர் என்போர் அறவோர்

சமணச் சரித்திரத்தின்படி, ரிஷபதேவர் தன் காலத்தில் மக்களை அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டு, மூன்று வர்ணமாக க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தியிருந்தார்.
ரிஷபதேவர்க் காலத்திற்கு பின், பரதர் ஆட்சிக்கு வந்தார். இவரே பிராமணர்க்4 குலத்தைத் உருவாக்கி நான்கு வர்ணங்களாக ஆக்கினார். இவர் பிராமணர்களை எவ்வாறு, எந்த வகையினால் உருவாக்கினார் என்பதையும் பார்ப்போம்.

அந்தணர்கள் தோற்றம்5

பரதர், தன் தந்தையான இரிஷபதேவரின் அறவுரைகளை மக்கள் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்று பார்க்க நினைத்தார். அதற்கு, தான் தன்னுடைய நாட்டு மக்களை பார்ப்பதற்கு ஆவலாகயிருப்பதாகவும் அதனால், மக்கள் அனைவரும் தன் அரண்மனைக்கு வரவேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்தார். தன் நான்கு அரண்மணை வாயில்களிலும் வழி நெடுக முளைத்த தானியங்களை இறைத்து வைக்கவும் உத்தரவிட்டிருந்தார். மக்கள் தன் அரசனைப் பார்க்கவும், அந்த பெரிய அரண்மனையைப் பார்க்கவும் நான்கு வாயில்களிலும் வரத் தொடங்கினார்கள். அவர்களுக்கு சிறந்த ஆடை அணிகலன்களைக் கொடுக்கும்படி ஆணைப் பிறப்பித்திருந்தார். இவ்வாறு வெகு நாள்கள், மக்கள் வந்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம், பார்த்துக் கொண்டிருந்த பரத சக்கரவர்த்தி, வாயிற் காவலர்களை அழைத்து, மக்கள் யாவரும் வந்தார்களா என்று வினவினான். அதற்கு அக்காவலர்கள், சிலர் மட்டும் அரண்மணைக்கு வெளியேயே நின்று விட்டு போய்விட்டார்கள் என்பதையறிந்து, அவர்களை தன்னை வேறொரு மாளிகையில் சந்திக்கும்படி சொல்லியனுப்பினான். அவ்வாறே, அவர்களும் அம்மாளிகைக்கு வந்திருந்தார்கள். பரத சக்கரவர்த்தி, ஏன் தன்னை அரண்மணையில் சந்திக்க வரவில்லை என்று அம்மக்களை வினவினார். அதற்கு, அரசே நாங்கள் தங்களை சந்திக்க ஒவ்வொரு நாளும் வரும் போதும் அரண்மணை வாயில்களில் முளைத்த தானியங்கள் இறைந்து கிடப்பதைப் பார்த்தோம். முளைத்தத் தானியங்களுக்கு உயிர் உண்டு என்பதால், அவற்றிற்கு ஊறு விளைவிக்கக்கூடாது என்பதால் தங்களை சந்திக்காமலே திரும்பி விட்டோம் என்று பதில் கூறியதைக் கேட்ட பரத சக்கரவர்த்தி பெரிதும் உவகை கொண்டு, நீங்கள், ஆதிபகவன்/ஆதிநாதர் பகர்ந்த அறத்தை பிறழாமல் கடைப்பிடித்து வருவதனால், இன்று முதல் பிராமணர்கள் என்று அழைக்கப்படுவீர்கள் என்றும் ஆதிபகவனால் அருளப்பட்ட அறத்தை எக்காலமும் கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இவர்களையே, தேவர் பெருமான் (குறளாசிரியர்)

“அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்”
                          – குறள்
(30)

என்று நமக்குக் காட்டியிருக்கிறார்.

முடிபு:

இக்குறளில் வரும் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் என்று வருவது அறவோர்களைக் குறித்தும் மற்றும் அவர்களுடைய செந்தண்மை பூண்டு ஒழுகும் அறத்தையும் குறிக்கிறது என்பது அங்கை நெல்லிக்கனி. இதனால், பரத சக்கரவர்த்தியே ஆதியாய் நின்ற மன்னன் என்பது வெள்ளிடை மலை.

என்னை?

இரா.பானுகுமார்,
சென்னை

அடிக்குறிப்புகள்:
1 - http://www.tamilhindu.com/2008/07/special-feature-vedam/

2 - http://www.krishnamurthys.com/profvk/VK2/SBAB7.html
[..The story of JaDa-Bharata
The history of Priyavrata, the first son of Manu Svayambhuva,
is taken up in the fifth skanda. Privrata’s son was Agnidhra
and his son was Nabhi. Nabhi was a great and devout ruler
and to him was born another avatar of Mahavishnu, by name
Rishabha. Rishabha, also called Rishabhadeva had 100 sons
of whom the eldest was Bharata whose story we are going to
see elaborately.
(Incidentally it is this Bharata after whom this country
was called BhArata-varsha; before that it was called aja-nAbha varsha)…]

3 - http://en.wikipedia.org/wiki/Chakravartin
The list of 12 Chakravartins as per Jainism is as follows:[10]
1. Bharata - Lord Rishabha's son.
2. Sagara - Anscestor of Bhagiratha as per Hindu puranas.
3. Maghavan
4. Sanatkumara
5. Shantinath - (also a Tirthankara)
6. Kunthunath - (also a Tirthankara)
7. Aranath - (also a Tirthankara)
8. Subhauma
9. Padmanabha
10. Harishena
11. Jayasena
12. Brahmadatt
In Jainism, a chakravartin was characterized by possession of
saptaratna, that is, the seven jewels, consisting of, charka,
queen, chariot, jewel, wealth, horse, and elephant.
Additionally, the list also included a prime minister and
a son (navaratna). A chakravartin is considered an ideal
human being endowed with thirty-two major signs of excellence
and many minor signs of excellence.

4 - http://en.wikipedia.org/wiki/Kshatriya (Jaina origin)

5 – ஸ்ரீ புராணம்

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "சமணம், அந்தணர், ..."
 

Date: Monday, 06 Jun 2011 15:13

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
                            - திருக்குறள் – துறவு –
346

இக்குறளில் வரும் “வானோர்க்குயர்ந்த உலகம் புகும்” என்ற தொடர் மிகவும் முக்கியமானது. இத்தொடரில், அண்டவியல் பற்றியக் குறிப்பு வருகிறது. ”வானோர்க்கும் மேலே உள்ள உலகத்தில் புகும்” என்று சொல்லும் போது, வானோர்கள் உலகம் யாது? அவர்களின் உலகத்திற்கும் மேலே உள்ள உலகம் யாது? என்பனப் போன்ற கேள்விகள் எழுவது இயற்கைத்தான். அவற்றுக்கு விடைக் காண வேண்டியது முக்கியம்.

அவற்றைப் பார்க்கும் முன் இக்குறளுக்கு உரையாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்றுப் பார்த்துவிட்டு மேல் செல்லலாம்.

முதலில் பரிமேலழகர்

உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான் அல்லாத உடம்பை யான் என்றும் தன்னோடு இயைபு இல்லாத பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும்.

மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர் பால் பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பயிற்சியானும் அவை ’யான்’, ‘எனது’ அன்மைதெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல் சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இவ் இருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடு உளது என்பது கூறப்பட்டது.

அப்படியே மணக்குடவரையும் படித்துவிடுவோம்,

உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.

பரிமேலழகர் உரைவேறுபாடு

வழக்கம் போலவே இக்குறளிலும் தன் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார் நம்ம பரி. அவர் உரை விரிவாகக் கூறப்பட்டிருப்பதுப் போல் தோன்றினாலும், உண்மை பொருளை மறைத்துக் கூறியிருக்கிறார்.

எவ்வாறெனின்,

“வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும்” என்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் பொருள் சரியாகயிருப்பதுபோலத் தான் தோன்றும் ஆனால், கூர்ந்து நோக்கினால் அதில் அவர் கையாண்ட பொருள் மாற்றம் தெரியவரும்.

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் – இதற்கு வானோர்கள் (தேவர்கள்) வசிக்கும் ”உலகத்திற்கும்” உயர்ந்த உலகம் புகும் என்று தான் பொருள். ”வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகம் எய்தும்” என்று அவர் உரை செய்திருப்பது இங்குப் பொருந்தாது. அவ்வாறு உரைச் செய்யும் போது அவற்றின் நேரான பொருள் மறைந்துப் போய் விடுகிறது. இவற்றை ஆராய்வோம்.

மணக்குடவர் உரை நேரிதன் பொருள் உரைக்கிறது. ” தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்” தேவர்க்கு மேலாகிய – தேவர்கள் உறையும் உலகத்திற்கும் மேலாகிய உள்ள உலகத்தின்
கண்ணே செல்லும். என்பதுதான் சிறப்பான உரை.

சமண அண்டவியல்

சமணக் கோட்பாட்டின்படி, உயிரின் தன்மைகளில், மேல் எழுப்பிச் செல்லும் இயல்பும் ஒன்று. இதை

“வினையற விட்ட போழ்தின் வெடித்த ஏராண்டம் போல
நினைவரும் குணங்கள் எட்டும் நிறைந்து மேல் நோக்கி.. ”

என்று மேருமந்தர புராணம் கூறும்.

உயிரானது தன் வினைக் கட்டுக்களிலிருந்து நீங்கி, தன் சொரூபத்தை உணரும் போது, மூவுலனின் உச்சியாகிய சிலாத்தலம் என்னும் இடத்தில் போய் நீடு வாழும்/ நிலையாக தங்கும். இதை

“முனிவரும் உலகம் மூன்றும் இறைஞ்ச மூவுலகின் உச்சி
கனைகழல் அரசே நிற்றல் கைவலம் ஆகும் கண்டாய்”

என்று மேருமந்தர புராணம் கூறும்.

இச்சிலாத்தலம் வீடு, சித்தசேத்திரம், திருப்பேருலகம். மீளாகதி, சித்தலோகம், அபாதம், லோகாக்ரம், சித்தசிலா, மோட்சத்தளம், உலகுச்சி, நிலமிசை, சிவகதி உறைநிலை போன்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது.

மூன்று உலகம்

சமண அண்டவியல்படி, இந்த அண்டமானது மூன்று உலகங்களைக் கொண்டது.

மேல் உலகம் - ஊர்த்வ லோகம் (பல அடுக்குகள் கொண்ட இந்த இடத்தில் பலதரப்பட்ட வானவர்கள்/தேவர்கல் வசிக்கிறார்கள்)

மத்திய உலகம் – மத்ய லோகம் (மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், ஊர்வன மற்றும் கிருமிகள் வசிக்கும் இடம்)

கீழ் உலகம் – அதோ லோகம் (ஏழு அடுக்குகள் கொண்டது. நரகவாசிகள் – நரகப் பிறப்பெடுத்த உயிர்கள் வசிக்கும் இடம்)

இவற்றின் குறியீடுதான் தீர்த்தங்கரர்களின் படிமத்தின் தலைமேற் காட்டும் முக்குடைகள். மூன்று உலகத்தையும் கடந்து வென்றவர் என்ற நோக்கில் முக்குடைக் காட்டப்படுகிறது.

“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”

என்று சிலப்பதிகாரத்தில் வருவதைக் காண்க.

மேல் உலகம் – ஊர்த்வ லோகம்

மொத்தம் பதினாறு அடுக்குகளைக் கொண்டது இந்த மேலுலகம். இவற்றில் பலவகைப் பட்ட தேவர்கள் வாழ்கிறார்கள். தேவர்களிலும் பலப் பிரிவுகள் சொல்லப்படுகிறது. அதையும் தாண்டி உச்சியை
சிலாத்தலம் என்றும் சித்தசிலை என்று அழைக்கப்படுகிறது. வீடுபேறடைந்த உயிர்கள் சென்றடைவது இங்கேதான். சமண கோட்பாட்டின்படி, வீடுபேறடைந்த உயிர்கள் மறுபடியும் பிறப்பெடுப்பதில்லை.

இவற்றைக் கீழே வரும் பாடல் விளக்கக் காணலாம்.

“நடுவண் எண்புகைக் கொழுப்பாய் நந்தி ஈச்சிறகொத்து ஈற்றிற்
குடை மலர்ந்திருந்ததே போன்று இரண்டரை தீவோடு ஒத்துக்
கடையிலா அறிவு காட்சி உடையவர் கழுமி நின்ற
இடமது உலகத்து உச்சி ஏத்தருந் திறத்ததாமே”

என்று மேருமந்தர புராணம் பகரும்.

உலகுச்சி அல்லது சித்தசிலா அல்லது நிலமிசை உயிரைவிட்டு அனைத்துக் கருமங்களும் நீங்குதல் அல்லது விடுதல் வீடுபேறு எனப்படும். இது மொக்கம், மோக்ஷம், முக்தி, கைவல்யம், சித்தத்துவம், சிவகதி, சிவசுகம், நிர்வாணம், பரிநிர்வாணம், சேமம், சித்தகதி, பஞ்சகதி, திரிதராகதி, அட்டமபுடலி, மீட்சியில் வீட்டுலகம், மீட்சியில் பேரின்பம், இறுதியிலா பேரின்பம், பேர்த்துப் பிறவா பெருமை, மீண்டுவாரா நெறி என பலவாறாகக் கூறப்படுகிறது.

கேவல மடந்தை என்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொனொரு பாக மாகக்
காவலன் தானோர் கூறாக கண்இமை யாது புல்லி
மூவுல குச்சி இன்பக் கடலுனுள் மூழ்கி னானே”
              - சீவக சிந்தாமணி
(3117)

என்றும்,

”அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் பூங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்”                         
- சூளாமணி
(2125)

என்றும்,

”மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”                     
- திருக்குறள் (3)

முடிபு

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் என்பது வானோர்கள்
இருக்கின்ற அல்லது வசிக்கின்ற இடத்திற்கும் உயர்ந்த
உலகமான சிலாத்தலத்தில் தங்கும் என்பதுதான் நேரடையான
பொருள். பரிமேலழகர் தன் உரையில் சிறிது மாற்றிப்
பொருள் தந்திருக்கிறார் என்பது வெள்ளிடை மலை.

இரா.பானுகுமார்,
சென்னை

பி.கு: மேல் தகவலுக்கு கீழேச் சுட்டியைப் பார்க்கவும்!

http://en.wikipedia.org/wiki/Jain_cosmology
http://en.wikipedia.org/wiki/Moksa_(Jainism)

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "வள்ளுவர், சமணம..."
 

Date: Monday, 23 May 2011 14:59

ஓங்காரம் என்னும் பஞ்சபரமேஷ்டி

வித்தியாரம்பக் காலங்களில் ஓம் என்னும் அஷரத்தை சொல்ல, சொல்லிக் குழந்தைகளுக்கு எழுத்தை எழுதச் சொல்லிக் கொடுப்பார்கள் உபாத்தியாயர்கள். சிறுவனாகயிருந்தபோது ஓம் என்பதற்கான முழுப் பொருள் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்து மதத்தவர்களிடையே வளர்ந்ததன் காரணமாக ஓம் என்பது இந்து மத அஷரம் (பதம்) என்றே நினைத்திருந்தேன். திரைப்படங்களில், சடாமுடியுடன் தவசி ஒருவர், சதா ஓம் என்று உச்சரித்துக் கொண்டேயிருப்பது போல் வந்த காட்சிகளும் அப்படி நினைக்க ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஒரு நாள் என் தாத்தாவிடம் விளக்கம் கேட்டதற்கு ஓம் என்பது பஞ்ச பரமேஷ்டிகளின் ஸ்வரூபம் என்றார். ஆனால் அதற்கு மேல் அவர் விளக்கங் சொல்லவில்லை. அப்போது, சிறுவனான எனக்கு புரியாது என்று நினைத்தாரோ என்னவோ!

இன்றைய நிலையில், யாந்தமிழ்ப் பண்டிதனல்லன், ஆகினும் தமிழ்ப் (பா) படித்தால் புரிகிறது. எனினும், சங்கப் பாடல்கள் உரையில்லாமல் புரிவது கடினமாகத்தான் இருக்கிறது. ஓம் என்னும் பதத்தைப் பற்றி (சமணத்தில்) யான் அறிந்ததை இங்கு உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். குறையிருப்பின் தவறாமல் சுட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்!

ஓம் எனும் பிரணவம்

ஓம் என்னும் அசஷரம் ஏறக்குறைய எல்லா இந்திய சமயங்களிலும் காணலாம். அவைகள் ஓம் என்ற பதத்திற்கு தத்தம் கருத்தை விளக்கிச் செல்கின்றன. தற்போது, இந்து சமயம் என்று அறியப்படும் பிரிவுகளில் ஒன்றான சைவச் சமயத்தில் ஓம் என்ற அஷரத்திற்கு கீழ்க் காணும் விளக்கம் தரப்படுகிறது.

“ஓம் எனும் பிரணவம் ஓர் எழுத்துப்போல் தோன்றினாலும் அதில் அ-உ-ம் எனும் மூன்று எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன”1

என்றும்,

”ஆதியில் இறைவனிடத்திலிருந்து தோன்றிய ஒலி நாதமும், பிந்துவுமாகும். நாதமும் பிந்துவும் சேர்ந்ததே ஓங்காரமாகும்.”2

என்றும்,

”பிரணவமே எல்லா மந்திரங்களுக்கும் மூல மந்திரமாகும். ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முதலில் கூறியே எல்லா மந்திரங்களையும் கூறவேண்டுமெனும் நியதி ஏற்பட்டுள்ளது”3 என்று கூறுகிறார் மகாவித்துவான்.கே.ஆறுமுக நாவலர்.

ஓம் என்ற சொல்லாட்சிக்கு, யான் அறிந்தவரை மேல் சொன்ன விளக்கத்தையொட்டியே அவைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. பெளத்தச் சமயத்தில் என்ன சொல்லப்பட்டிருகிறது என்பதை திரு.வினோத் ராஜன் அவர்களிடம் கேட்கவேண்டும். )

ஓம் என்ற சொல்லாட்சி சமணத்திலும் பயின்று வருகிறது. சமணர்களின் மூல மந்திரம் பஞ்ச மந்திரம். அவற்றின் சுருக்கமே ”ஓம்”. ஓம் என்றால் பஞ்ச மந்திரத்தை நமஸ்காரம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

பஞ்ச மந்திரம்

நமோ அரஹந்தாணம் (அருகரை வணங்குகிறேன்)
நமோ சித்தாணம் (சித்தரை அல்லது அசரீரியை வணங்குகிறேன்)
நமோ ஆயிரியாணம் (ஆச்சாரியரை வணங்குகிறேன்)
நமோ உவச்சாயாணம் (உபாத்தியாயரை வணங்குகிறேன்)
நமோ லோயே சவ்வ சாகுணம் (சாதுக்களை அல்லது முனிவர்களை வணங்குகிறேன்)4

இது சமணர்களின் முழுமுதற் மூல மந்திரம். பஞ்ச மந்திரம் எனப்படும். இல்லறத்தாரும், துறவறத்தாரும் ஐந்து வேளையும் உச்சரிக்கவேண்டிய மந்திரம். இந்த மந்திரத்திற்கு பஞ்ச நமஸ்காரம் 5,
ஓங்காரம் 6, நமோங்காரம் , மொழிப்பொருள் தெய்வம்7, ஐந்தெழுத்து மந்திரம் 8, திருமந்திரம் 9, பஞ்ச பரமேஷ்டி மந்திரம்10 என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

“பஞ்ச மந்திரம் பாபநாசனம்”11 என்பது சமணர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. பஞ்ச மந்திரம் உச்சரிப்பால் நல்வினைக் கட்டு ஏற்படும் என்றும் அறச்சிந்தனை ஏற்படும் என்றும் சமணர்களின் நம்பிக்கை.

இதற்கு சாட்சிப் பகரும் வண்ணம்,

“...வைதிக பிராமணர்கள் தங்களுக்கென்று செய்து வைத்த சோற்றை ஒரு நாய் உண்ண, ஆத்திரம் அடைந்த அந்த பிராமணர்கள் அந்நாயைக் கல்லாகும், தடியாலும் அடிக்கிறார்கள். குற்றூயிருமாய், குலையுயிருமாய் இருக்கும் அந்த நாயின் காதில் பஞ்ச நமஸ்கார மந்திரத்தை ஓதுகிறான் சீவக நம்பி. சாகும் தருவாயில் இந்த நமோங்கார மந்திரத்தைக் கேட்டதினால், அந்த நாயானது தேவலோகத்தில் தேவனாகப் பிறந்ததாக”12 சொல்கிறது தமிழ்ச் சமண இலக்கியம்.

மேலும் பாட்டிற்கு அருங்கலமாகும் இந்த பஞ்ச மந்திரம் என்று கீழே வரும் பாட்டு சொல்கிறது.

”பூவுக் கருங்கலம் பொங்குசெந் தாமரை
தேவர்க் கருங்கலம் திங்கள் முக்குடை
பாவுக் கருங்கலம் பஞ்ச மந்திரம்
நாவுக்கு அருங்கலம் நமோஅரஹந் தாணமே13!”

ஓம்

சமணத்தில் ஓம் எனும் அஷரம் பஞ்ச பரமேஷ்டிகளான அரஹந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர் மற்றும் சாதுக்களைக் குறிக்கும்.  பஞ்ச மந்திரத்தில் முதல் எழுத்தைக் கொண்டு அ சி ஆ உ சா என்று சுருக்கமாக ஐந்தெழுத்து மந்திரமாகப் பயன்படுத்துவார்கள். பஞ்ச நமஸ்காரத்தின் முழுப் பலனையும் இந்த ஐந்தெழுத்து மந்திரத்தில் பெறலாம். இவ்வாறு சுருக்கிய ஐந்தெழுத்து மந்திரத்தை மேலும் சுருக்கி ஓம் என்றும் கூறுவர். அவ்வாறு உச்சரிப்பதால் முழு மந்திரமும் சொன்ன பலனும் இந்த ஓம் என்னும் பதத்தை உச்சரிப்பதினால் கிடைக்கும். இதுவே ஓங்காரம்
என்னும் பஞ்ச மந்திரமாம்.

தமிழ் இலக்கியத்திலேயே ஓம் என்பதற்கான விரிவு சமண இலக்கியத்தில்தான் காணமுடிகிறது.

ஓங்காரப் புணர்ச்சி

இனி, பஞ்ச மந்திரத்தில் உள்ள ஐந்தெழுத்துக்கள் எவ்வாறு ஓம் என்று பரிணமிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

எண் பஞ்ச பரமேஷ்டிகள் முதலெழுத்து எழுத்துப் புணர்ச்சி

1 அருகர் அ -
2 அசரீரி அ அ+அ = ஆ
3 ஆசார்ரியார் ஆ ஆ+ஆ = ஆ
4 உபாத்தியாயர் உ ஆ+உ = ஓ
5 முனிகள் (ம்+உ=மு) ம் ஓ+ம் = ஓம்

இவற்றை, சமண இலக்கியங்களில் பயின்று வருவதையுங் காணலாம்.

“அறிவரிய குணத்தருக னசரீரி யாசிரிய னுவாத்தி கோதஞ்
செறிவரிய முனிவரெனுந் திருநாம முதலெழுத்தோரைந்துஞ் சேர்ந்து
பிறிவரிய வோங்கார முன்னுரைப்பர் பின்னுமதன் பெருமை யோரார்
பொறிவழியில் வருநாதர் பொருளில்வரும் பெயர்புனையும் புவனத்தாரே”14

உரை: அறிதற்கு அரிதாகிய குணங்களையுடைய அருகனும், சித்தரும், ஆசாரியனும்,உபாத்தியாயனும் குரோதமானது இல்லாத சாதுக்களும் என்று சொல்லப்படும் திருப்பெயரினுடைய ஆதியெழுத்துக்களைந்தும் கூடிப்பிறிதற்கரிதாகிய ஓங்காரத்தை முன்னே சொல்லுவார்; பின்பும் அவ்வோங்காரத்தினுடைய உற்பத்தியினது மேன்மையைப் பகுத்தறியார், ஐம்பொறியுனுடைய
மார்க்கத்தில் திரிகின்ற தெய்வங்களுக்குப் பொருளில்லாமல் வறுமையாகிய நாமத்தை அலங்கரித்துச் சொல்லும் உலகத்தார் என்றவாறு!

விரிவுரை: இதனால் ஓங்காரம் பஞ்சபரமேஷ்டி ஸ்வரூபம் என்பது கூறப்பட்டது.

மேலும், வடமொழிச் சூத்திரமும்,

“அரஹந்தா அசரீரா ஆயிரியா தஹ உவத்தாயா முனினோ|
படமம் கரணம் பண்ணோ ஓம்கார பஞ்ச பரமேஷ்டி ||15

விளக்குவதைக் காணலாம்.

முடிபு: ஓங்காரம் என்பது பஞ்சபரமேஷ்டிகளின் குறியீடு என்பதும் அவற்றை உச்சரிப்பதால் நம் வினைகள் தொலையும் என்பது திண்ணம்!

இரா.பானுகுமார்,
சென்னை

அடிக்குறிப்பு:
1. இந்துமத இணைப்பு விளக்கம் – பக்கம் 77 (தொண்டன் காரியாலய வெளியீடு)
2. இந்துமத இணைப்பு விளக்கம் – பக்கம் 78 (தொண்டன் காரியாலய வெளியீடு)
3. இந்துமத இணைப்பு விளக்கம் – பக்கம் 79 (தொண்டன் காரியாலய வெளியீடு)
4. கிரியா கலாபம் – பாடல் – 118
”கா ஊண ணமோங்காரம் தஹேவ சித்தாணம்
ஆயிரிய உவச்சா யாணம்
ளோயம்மிய ஸ்வ்வ ஸாஹீணம்”
5. கிரியா கலாபம் – பாடல் - 114
”ஜிந ஸித்த சூரிதேசக
ஸாதுவரா நமலகுண கணோ பேதாந்
பஞ்ச நமஸ்கார பதைஸ் த்ரிசந்த்ய
மபி நெளமி ஸம் ப்ரீத்யா”
6. திருக்கலம்பகப் பாடல்
7. சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் – நாடுகாண் காதை – பாடல் வரி - 100
8. திருமேற்றிசை அந்தாதி – பாடல் – 91
”ஓளிக்கும் பழவினை நாளிடைப் பார்த்து உயிர்கோள் இழைந்து
விளிக்கும் கடுங் கூற்றினும் வெகுளாது மிகைத்து எழுந்து
களிக்கும் பொறிப்பகை ஐந்தும் பொறிப்பணக் காவாணத்தார்
அளிக்கும் பதம் ஐந்தில் ஐந்தெழுத்தே கொண்டு அவித்தனமே”
9. திருமேற்றிசை அந்தாதி – பாடல் – 98
”அழியோம் விரதம் திருமந்திரத்து எழுத்து ஐந்தும் அன்றி
மொழியோம் மறந்தும் பரச துறைமூர்க்கர் சொல் கேட்டு
இழியோம் இழித்தே மறை பழிப் பாரையும் யாம் அழித்துப்
பழியோம் மணி அரங்கப் பணியானைப் பணிந்த பின்னே”
10. பஞ்ச பரமேஸ்டி மந்திரம்
11. கிரியா கலாபம் – பாடல் – 116
”ஏஷ பஞ்ச நமஸ்கார
பாப கர்ம விநாசந
மங்களா நாஞ்ச ஸர்வேஷாம்
ப்ரதமம் மங்களம் பவேத்”
12. சீவக சிந்தாமணிப் பாடல்
13. தோத்திரத் திரட்டு –
14. திருக்கலம்பகம் – பாடல் – 41
15. பதார்த்தசாரம் – உபயோகாதிகாரம்

Date: Tuesday, 01 Feb 2011 11:11

ஆபயன் குன்றும்

என் நண்பர் ஒருவர் (மின்தமிழ்க் குழுமத்தில் இருப்பவர்) கீழேக்
கொடுக்கப்பட்டுள்ள இடுகைகளைத் தனி மடலில் குறித்திருந்தார்.

http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/18677-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/

http://www.jeyamohan.in/?p=1422

http://www.tamilbrahmins.com/general-discussions/5557-enge-brahmanana-3.html

இந்தச் சுட்டிகளில், “ஆபயன் குன்றும்…” என்ற குறளுக்குக்
கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பற்றி என் கருத்தை
பதிய சொன்னார். சமணக் குறளுக்கு அந்தக் குறள் எவ்வாறு
பொருந்தும் என்றும் தனி பதிவிட்டு என் பிளாகில் எழுதுமாறும்
கேட்டிருந்தார்.

இக்குறளை யான் முன்னமே (அகத்தியக் குழுமத்தில்) எதிர்க்
கொண்டிருக்கிறேன். குறள் பற்றிய விவாதத்தில் எவராவது
ஒருவர், இந்தக் குறளுக்கு விளக்கம் சொல்ல போக,
அவற்றை அப்படியே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு,
எல்லா வலைப்பக்கத்திலும் அவற்றையே எழுதத் தொடங்கி
விடுகிறார்கள். குறள் சமணம் சார்ந்தது என்றால், இந்தக்
குறளுக்கு என்ன பொருள் சொல்வார்கள் என்பது மாதிரி
கேட்கவும் தொடங்கிவிடுகிறார்கள். யாரும் அந்த குறளின்
விளக்கம்ப் பொருத்தமாக இருக்கிறதா? என்று தங்கள் அறிவில்
உரசிப் பார்ப்பதில்லை.

”ஆபயன குன்றும்…” என்றக் குறளுக்கு பரிமேலழகர் உரையைப்
பின்பற்றிச் செல்வதேயிதற்கு காரணம்.

இந்தக் குறள் “கொடுங்கோன்மை” என்ற அதிகாரத்தில் வருகிறது.
அதாவது “செங்கோன்மை” என்ற அதிகாரத்திற்குப் பிறகு
வருகிறது என்பது இங்கு முக்கியம். செங்கோன்மை என்பது
ஒரு அரசன் எவ்வாறு சிறப்பாக ஆட்சி தன் நாட்டை
ஆளவேண்டும் என்பதைச் சொல்லும். அவ்வாறே ஒரு
அரசன் எவ்வாறு முறைத் தவறி ஆட்சிச் செய்யக்கூடாது
என்பதை சொல்கிறது “கொடுங்கோமை” என்ற அதிகாரம்.

ஆபயன்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் – திருக்குறள் (560)

என் கருத்தைப் பார்ப்பதற்கு முன் திருக்குறள் அத்தாரிட்டியாகக்
கருதப்படும் பரிமேலழகர் (: என்ன சொல்கிறார் என்றுப் பார்ப்போம்.

பரிமேலழகர் உரை:

காவலன் காவான் எனின் – காத்தற்கரிய அரசன் உயிர்களைக்
காவானாயின்; ஆ பயன் குன்றும் – அறன் இல்லாத அவன்
நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோர் நூல்
மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்து விடுவர்.

ஆபயன்: ஆவாற் கொள்ளும் பயன், அறுதொழிலாவன:
ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்
என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும்,
அது கொடுத்தற்குரியார் மந்திரம், கற்பம் என்பன
ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம்
பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும்
அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.

இந்த உரையிலிருந்து நமக்கு தெரியவரும் கருத்துக்கள்:

அரசன் முறையாக ஆட்சிச் செய்யவில்லையென்றால்,

• ஆவினால் (பசுக்களினால்) கிடைக்கக் கூடியப் பயன்கள் கிடைக்காது,
• அறுதொழில் செய்யும் பிராமணர்களின் வேள்விகள் முறையாக நடக்காதாம்,
• முறையான வேள்விகள் நடக்காமையால், மழை பொழியாதாம், மழைப்
பொழியாததால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுமாம் சொல்கிறார் பரிமேலழகர்.

(மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், இந்த உரை பொருத்தமாயிருக்கிறதா??) :-)

எப்படி உரையைச் சுற்றி வளைத்து, திரித்தெழுதியிருக்கிறார் பாருங்கள். சரி, அந்தக் குறளுக்கு என்னதான் பொருள்?

உண்மை பொருள்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

என்பதற்கு,

காவலன் காவான் எனின் – அரசன் முறையாக ஆட்சி செய்து
மக்களை காப்பாற்றாவிட்டால்;

ஆபயன் குன்றும் – ஆகின்ற பயன்கள் குன்றும்/கிடைக்காது;

அறுதொழிலோர் நூல்மறப்பர் – ஆறு தொழில்கள் செய்வோர் தத்தம் கடமைகள் முறையாக செய்யாமல், நாட்டில் எதுவும் முறைப்படி இயங்காது என்பதாம்!

தெளிவுரை:

அரசன் நேர்மையாக ஆட்சி செய்யவில்லையென்றால், ஆறு தொழில்களான1, வாள், வரைவு, வாணிபம், உழவு, கல்வி மற்றும் சிற்பம் செய்து காக்கும் ஆறு தொழிலோர்
தமது தொழில் தர்மத்திலிருந்து தவறுவார்கள், அதனால் அந்தத் தொழில்கள்லிருந்து ஆக கூடியப் பயன்கள்
சென்றடையாது! என்னை?

ஆபயன் – என்பதற்கு பசுவினால் கிடைக்கும் பயன்கள் என்றுப் பொருள் கொள்ளக் கூடாதா? எனின், ஆப்பயன் என்று வந்திருந்தால் அவ்வாறுப் பொருள் கொள்ளலாம்.
ஆ+பயன் = ஆப்பயன் என்று ஒற்று மிகுதல் வேண்டும் என்பது இலக்கண விதி!

காட்டாக: சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில்,

“..கவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்
ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்..” – (பாடல் வரி: 199 – 120)

ஆப்பயன் என்று வருவது ஈண்டு நினைத்தற்பாலது!

அறுதொழிலோர் – ஆறு தொழிலோர் என்பது பிராமணர்களைத் தானேக் குறிக்கும்? குறிக்காது!. இடத்திற்கு ஏற்றாற் போல் பொருள் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் அவ்வாறுப் பொருள்
கொண்டால், அந்தக் குறளின் சிறப்புக் குன்றிப் போகும்!

எவ்வாறெனின்,

அரசன் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் காக்க வேண்டுமேயன்றி, ஒருசாராரை மட்டும் (பிராமணர்களை) காப்பாற்ற அரசாட்சிச் செய்யமாட்டான். அறுதொழிலோன்
என்றிருந்திருந்தால் அது அப்பட்டமாக பிராமணர்களைக் குறிக்கும் என்று துணிந்துக் கூறலாம். அறுதொழிலோர் என்பது இங்கு ஆறு தொழில்களை செய்வோரைக் குறிக்கும்.
அறுதொழிலோர் எனபதற்கு ஆறு தொழில் செய்வோர் என்றுப் பொருள் கொண்டால், அக்குறளுக்கு சிறப்பாக அமைவதோடு அல்லாமல் நாட்டின் சமூகத்தையும் சேர்த்தே குறித்ததுப் போலாகும்!
என்னை?

மாறாக பரிமேலழகர் உரைக் கூறுவதுபோல் ஒருசாராரை மட்டும் போற்றுவதாக பொருள் கொள்வதை எந்த நடுநிலையாளனும் ஒப்ப மாட்டான்! என்ன யான் சொல்வது சரிதானே!


முடிபு:

இது போன்ற குறள்களை வைத்து குறளாசிரியர் உள்ளம் காண நினைப்பது, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போலவாம். குறளாசிரியர் உள்ளம் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே தெள்ள தெளிவாகத் தெரிந்திருந்தும், இந்த வகையான திரிபு வாதங்கள் மூலம் வாதிப்பது அறிவுடைமையாகாது!


இரா.பா,
சென்னை.
--------------------------------------------------------------

1 -“ஒழியாக் கற்பத்தரு மருங்கி
உலகாம் போகபூ மியிடை
பழியாப் பிணங்கிமா நிலத்தோர்
பணிந்தே நிற்பக்கரந் தருளும்
உழவே தொழில் வணிக வரைவு
உற்ற சிற்பவித் தையினால்
அழியா வகை வந்தாட் கொண்டாய்
அடியோஞ் சிற்றலழி யேலே!
- ஆதிநாதர்ப் பிள்ளைத்தமிழ்

"வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம்
உரைசெய்யும் போகபூமி யொழிவினி லாதிகாலம்
விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினஃதேயம்ம
கருமபூமி என்னும் பேர்கண்ட தொன்றுண்டு நூலில்"
- சூடாமணி நிகண்டு

 

Author: "Banukumar (noreply@blogger.com)"
 

Send by mail Print  Save  Delicious 

 

 

Date: Sunday, 23 Jan 2011 22:18

சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள்

பண்டையத் தமிழ் இலக்கியங்களில் அந்தணன், அந்தணர் என்ற
சொற்கள் விரவி வருவதைக் காணலாம். திருக்குறளில் அறவாழி
அந்தணன் என்று இறைவனை இறைஞ்சுவார் குறளாசிரியரான
தேவர் பெருமான். அந்தணர்/அந்தணன் என்ற சொற்கள் பல
சமய இலக்கியங்களில் பயின்று வந்தாலும் அவைகள் ஒரே
பொருளில் ஆளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிலப்பதிகாரத்தில் அந்தணர்/அந்தணன் என்ற சொல்லாட்சி

இன்றைய காலக் கட்டத்தில் ‘அந்தணன்’ அல்லது “அந்தணர்”
என்ற சொல் வைதீகப் பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்
பட்டு வருகிறது. அந்த சொற்கள் பொதுமையாயினும் சமண,
பெளத்த இலக்கியங்களில் அவைகள் சமண/பெளத்தப்
பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டு
வந்திருப்பதையும்க் காணலாம்.

இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தில் மூன்று வகையான
அந்தணர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

1. மாங்காட்டு மறையோன்
2. கோசிகன்
3. மாடல மறையோன்

1. மாங்காட்டு மறையோன்:

காடுகாண் காதையில், கவுந்தியடிகள், கோவலன் மற்றும்
கண்ணகி ஆகியோர் உறையூரை விட்டு நீங்கி ஒரு சோலையின்னுள்
நுழைகின்றனர். அப்போது அங்கிருந்த மண்டபத்தில் மாங்காட்டு
மறையோன் என்ற வயதான வைதிக பிராமணனைச் சந்திக்க
நேரிடுகிறது. அவரை எதிர்க் கொள்ளும் கோவலம் அவனை
வணங்காமல்,

”மாமது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்ஊர்? ஈங்கென் வரவெனக்?
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்..” 1

என்று சற்று அதிகாரத் தொனியிலேயே கேட்கத் துவங்குகிறான்
கோவலன். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது யாதெனில்,
கோவலன், அந்த வயதான மாமது மறையோனை வணங்குவதாக
காட்டவில்லை இளங்கோவடிகள்.

2. கோசிகன் என்ற மறையோன்

உறையூரை விட்டு நீங்கி வெகு தூரம் நடந்து வந்தக் களைப்பினால்,
ஒரு ஊரின் புறமாக அவர்களை தங்க வைத்துவிட்டு தன் காலை
கடனை முடிக்க நீர் நிலையைத் தேடி செல்கிறான் கோவலன்.
அப்போது, மாதவியின் கடிதத்துடன், கோவலனைத் தேடி
எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வந்த கோசிகன் என்ற
அந்தணன், இவன் கோவலனோ என்று ஐயுற்று வினவ,
அதற்கு மறுமொழிக் கூறும் கோவலன்,

“யாது நீ கூறிய உரையீது?, இங்னெத்..”2

என்று கேட்கிறான். அப்போதும் அவனை வணங்குவதாகக்
காட்டவில்லை இளங்கோவடிகள்.

3. மாடல மறையோன் என்னும் அந்தணன்

அடைக்கலக் காதையில் மாடல மறையோன் என்னும்
அந்தணனைச் சந்திக்கும் கோவலன், உடனே அவன்
அடிப் பணிகிறான்.

“இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடிவணங்க
நாவல் அந்தணன் றானவின் றுரைப்பான்” 3

மற்ற அந்தணர்களை வணங்குவதாகக் காட்டாத
இளங்கோவடிகள், மாடலன் என்ற அந்தணனை,
கோவலன் அடி வணங்குவதாகக் காட்டுகிறார்?

ஏன்? நிற்க!

அறக்கள வேள்வியும் மறக்கள வேள்வியும்

இளங்கோவடிகள் தன் காப்பியத்தில் மூன்றுவித வேள்விகளை
நமக்கு காட்டுகிறார்.

1. மறக்கள வேள்வி
2. மதுக்கொள் வேள்வி
3. அறக்கள வேள்வி

1. மறக்கள வேள்வி

முதல் இரண்டும் வைதிகம் சார்ந்தது. மூன்றாவது அவைதிகச்
சார்பு உடையது. மாடல மறையோன் மூன்றாம் பிரிவினன்.
சேரனுக்கு அறிவுரை வழங்கு மாடலன் அரசே மது,
கொலை உடைய மறக்கள வேள்வி செய்யாதே.
கொலையில்லாத அறக்கள வேள்வி செய் என்று
அறிவுறுத்துகிறான்.

“அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோயாயினை “ 4

என்றும்,

“..அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்..” 5

என்று சேரனுக்கு அறிவுறுத்துகிறான் மாடலன்.

இங்கு சொல்லப்பட்ட அறக்கள வேள்வி யாதுனெனின்,
இது அவைதிகச் சார்புக் கொண்ட வேள்வியாம்.அவைதிகப்
பிரிவினரான சமணர்களுக்கும் வேள்வி உண்டென்றும்,
ஆனால் அது உயிர்ப் பலி மற்றும் மது (சோம பானம்)
இல்லாத வேள்வி என்றும் பெறப்படுகிறது. சமணர்கள்
அந்த வேள்வியை ”ஓமம்” என்று அழைக்கிறார்கள்.
(இன்றும் சமணர்கள் புதுமனை புகுவிழாவில் சாந்திநாத
ஓமம் என்ற வேள்வியைச் செய்கிறார்கள் என்பதைக்
கருதவும்)

மாடலன் மறையோன் சமண அந்தணன்

மூன்று அந்தணர்களைக் குறிக்கும் இளங்கோவடிகள்,
கோவலனை மற்ற இருவரையும் அடிவணங்கச் செய்யாமல்,
மாடலன் மறையோனைக் கண்டவுடன் அடிவணங்கச்
செய்தமை இதன் பொருட்டாம்! என்னை?


நான்மறைகள்

இங்கே வாசகர்களுக்கு ஒரு வினா எழுவது இயல்பே? நான்மறை என்பது வைதிக வேதங்களைத் தானேக்
குறிக்கும்? என்றால்..

இல்லை. அவைகள் சமண வேதங்களையும் குறிக்கும். சமண இலக்கியங்களில் நான்மறை என்றும் வேதம் என்ற பதங்கள் விரவி வருவதைக் காணலாம்.

சமண வேதங்கள் நான்கு!

ஜைன ஆகமங்களை இரண்டு வகையாகப் பிரிப்பர். அவை பூர்வாகமம், அங்காகமம் எனப்படும். பூர்வாகமம் என்பது என்றும் நிலைத்திருப்பது. ஆதி பகவானால் அருளப் பட்டது. அங்காகமம் என்பது மனிதர்களால் எழுதப்பட்டது. ஆதிபகவன் என்று அழைக்கப்படும் ஆதிநாதரால் அருளப்பட்ட அகமங்கள் நான்கு. இவை ஜைன வேதங்கள் அல்லது சதுர் வேதங்கள் அல்லது நான்மறைகள்6 என்றழைக்கப்படுகின்றன. அவைகள்,

1. பிராதமானுயோகம்
2. கரணானுயோகம்
3. சரணானுயோகம்
4. திரவியானுயோகம்

என்பன.

முடிபு:

”அந்தணர் என்போர் அறவோர்”7 என்பது திருக்குறள் வாக்கு.  எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல், எந்த உயிரையும் வேள்விகளில் பலி கொடுக்காமல் இருப்பவர்கள் தான் அந்தணர் என்று திருக்குறள் சொல்வது இங்கு நினைத்தற்பாலது!



இரா.பானுகுமார்,
சென்னை


அடிக்குறிப்பு:

1. சிலப்பதிகாரம், காடுகாண் காதை, பாடல் 31 - 33
2. சிலப்பதிகாரம், புறஞ்சேரி இறுத்த காதை, பாடல்: 54
3. சிலப்பதிகாரம், அடைக்கல காதை, பாடல்: 18 - 20
4. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 131 – 132
5. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 177 – 178
6. பதிணென் கீழ்க்கணக்கு, ஏலாதி- கடவுள் வாழ்த்து
” அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்(கு)
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு” – பாடல் – 1

7. திருக்குறள், நீத்தார் பெருமை, பாடல் - 30

 

Date: Friday, 21 Jan 2011 09:23

எண்ண வரண்ணங்கள்

சமணம் மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களை கொண்டு, வெண்மை, கருமை என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறது. எண்ணத்தின்
தன்மைக்கேற்றவாறு அவற்றை மேலும் விரித்து ஆறு வகைகளாகப் பிரிக்கும்.

1. கிருட்டினலேசியை – அடர்ந்த கருமை
(Dark Black)
2. நீலலேசியை – நீலம் கலந்த கருமை
(Black)
3. கபோதலேசியை – வெண்மை கலந்த கருமை
(Grey)
4. பீதலேசியை – மஞ்சள் கலந்த வெண்மை (
Pale yellow)
5. பத்மலேசியை – மங்கலான வெண்மை (
Pale white)
6. சுக்லலேசியை – தூய வெண்மை
(Pure White)

முதல் மூன்றும் கருமை எண்ணங்களாகும், மற்ற மூன்றும் வெண்மை எண்ணங்களாகும்.

1. மிகுந்த கருமை – சதா சச்சரவு செய்யும் தன்மை, கடின மனயில்பு, பழிவாங்கும் உணர்ச்சி, பெரியவர்கள் பேச்சை ஏற்காமை.

2. கருமை – சோம்பல், அறிவின்மை, சுகங்களில் அதிக நாட்டம்.

3. வெண்மை கலந்த கருமை – எதற்கெடுதாலும் அவசரப்படுதல், பயப்படுதல், மன உறுதியின்மை, காரணமேயின்றி பிறரை வெறுத்தல்.

4. மஞ்சள் கலந்த வெண்மை – நன்மை-தீமைகளை சீர்த்தூக்கிப் பார்த்தல், தயை, பரிவுத் தன்மை, தானம் செய்தல்.

5. மங்கலான வெண்மை – உண்மை, நேர்மை மனத்தினர், தியாக சிந்தனை, மன்னிக்கும் இயல்பு, குருவை மதித்தல்.

6. தூய வெண்மை – சமநோக்கு உடைமை, விறுப்பு, வெறுப்பு இன்மை, கோபம் கொள்ளாமை.

 



[படம்: http://en.wikipedia.org/wiki/Lesya - நன்றி!]

இப்போது சொல்லுங்கள் நீங்கள் எந்த நிறம்? ;-)


இரா.பா,
சென்னை

 

 

 

Date: Thursday, 20 Jan 2011 20:19

சிராவகர் யார்?

சிலப்பதிகாரத்தில் வரும் “சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்” என்ற வரியில் வரும் ”சாவக” என்ற சொல்லுக்கு பொருள் யாது என்பது தான் இங்கு (மின்தமிழ் குழுமம்) விவாதிக்கப்பட்டு வருகிறது. சிராவகர் என்ற வடமொழிச் சொல் தமிழிலும், பிராகிருதத்திலும் சாவகர் என்று வரும். சாவகர் என்பது சமண இல்லறத்தார்களைக் குறிக்கும். அதே சமயம், பெளத்த நூல்களில் அந்த சொல் பெளத்த முனிவர்களைக் குறிக்கப் பயன்படுவதுண்டு. இடத்திற்கேற்றாற் போல் பொருள் கொள்ளவேண்டும். என்னை? :-)

ஜைன துறவறத்தார் சிரமணர் அல்லது சமணர் என்று அழைக்கப்படுவர். (சமணர் என்றால் ஆசிவகரையும் குறிக்கும் என்று சில ‘அறிஞர்கள்” கூறுவதுண்டு. அது பொருந்தாது. ஆதாரத்துடன் நிறுவ முடியும். பிறகு ஒரு நாளில் இங்கு எழுதுவேன்) ஜைன இல்லறத்தார் சிராவகர் அல்லது சாவகர். சமணர் ஏற்பது மகாவிரதம். சிராவகர் ஏற்பது அணுவிரதம். விரதம் இருவருக்கும் பெயரளவில் ஒன்றே ஆனாலும் அவற்றின்
“Magnitude” ல் சிறிய வேறுபாடுண்டு.

சாவக தர்மம் மனையறம் என்று அழைக்கப்படுவது போல், சாவகர்களை இல்லற நோன்பிகள், உலக நோன்பிகள், இல்லற விரதிகள் போன்ற சொற்களாலும் அழைக்கப்படுகிறார்கள்.

விரதம் அல்லது நோன்பு

சிராவகர்கள் ஒழுகவேண்டிய விரதங்கள் பத்தாம். அவற்றுள் முதல் ஐந்தும் ”அணுவிரதம்” என்றழைப்படும். இந்த அணுவிரதத்தை அனைத்து சமண இல்லறத்தார்களும் கடைப்பிடிக்கவேண்டும் என்று சமணம் சொல்லும்.

1. கொல்லாமை (ஓரறிவு உயிர்கள் விலக்கு)
2. பொய்யாமை
3. கள்ளாமை
4. பிறன்மனை விரும்பாமை
5. மிகுபொருள் விரும்பாமை

(இவைகள் அணுவிரதம் என்றழைக்கப்படும்)

6. ஊன் உண்ணாமை
7. கள் உண்ணாமை
8. தேன் உண்ணாமை
9. இரவு உண்ணாமை
10. குரவரை இகழாமை

இவற்றை திருக்கலம்பகம் என்ற நூல் அழகாகத் தொகுத்துரைக்கும்.

“விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார், கொலையினை விழையார்; பொய்
உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை
உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்
கரையால் உணர்வினை அழியார்; அழிதசை
துவ்வார்; விடமென வெவ்வாறும்
புரையார்; நறவினை நுகரார்; இரவுணல்
புகழார்; குரவரை இகழாரே”                                             
– திருக்கலம்பகம் (67)

அணுவிரத்தை அருங்கலச் செப்பு என்ற நூல்,

பெரிய கொலை, பொய், களவொடு, காமம்
பொருளை வரைதலோடு ஐந்து”                    
– அருங்கலச் செப்பு
(66)

மேற்சொன்ன விரதங்களை கடைப்பிடிக்கவேண்டியது சாவகரின் (இல்லறத்தார்) கடமை. எல்லாவற்றையும் கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்று சமணம் எப்போதும் வற்புறுத்தியதில்லை.
தாங்கள், தங்கள் சக்திக்கு ஏற்ப முழு மனத்தோடு கடைப்பிடிக்கவேண்டும் என்று தான் சமணம் சொல்கிறது.



இரா.பா,
சென்னை

 

Date: Thursday, 20 Jan 2011 19:41

இருவினை சேரா இறைவன் - 2

அவர்களது உரையாடல் தொடர்கிறது….

(அன்று மாட்டு பொங்கல். மாலை நேரம். அந்த ஆசிரியர் எதோ எழுதிக் கொண்டியிருக்கிறார்)

மாணவன்: ஐயா, பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

ஆசிரியர்: பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி. பார்த்து நிறைய நாள்கள் ஆகிவிட்டது இல்லையா?

மாணவன்: ஆமாம் ஐயா. அன்றொரு நாள் இருவினைப் பற்றி தாங்கள் கூறியிருந்தீர்கள்? இல்லையா? அந்த கருத்தைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் அதற்கு எதிர்வினையாக சில கேள்விகள் கேட்கிறார்கள்?

ஆசிரியர்: எதிர்வினை இல்லையென்றால் தெளிவுக் கிடைக்காது தம்பி. ஒரு கருத்தை எல்லா தளத்திலிருந்தும் புரிந்துக் கொள்ள அவை உதவும். புரிதல் வசப்படும். ஒவ்வொன்றாக கேள் என்னால் முடிந்தவரை விடைக் காண முயல்கிறேன்!

மாணவன்: ஐயா,

“இருள்சேர் இருவினை சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”

இந்த குறளுக்கு பரிமேலழகர் உரை இவ்வாறு சொல்கிறது.

“இருள் சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.

விரிவுரையில்,

இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின், அவிச்சையை “இருள்” என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையார் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே ‘பொருள்சேர் புகழ்’ எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்.

மணக்குடவரும் இக்குறளுக்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்.

“மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை, தீவினையென்னுமிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிக் சொற்களைப் பொருந்தினர் மாட்டு".

இவ்விரண்டு உரைகளும் ஒரே பொருளை தருவதாக நான் கருதுகிறேன் ஐயா. தாங்கள் விளக்க முடியுமா?

ஆசிரியர்: நன்று தம்பி. எல்லோர் உரையும் படித்திருக்கிறாய் போலியிருக்கிறது. இந்த குறள் என்றில்லை, கடவுள் வாழ்த்தில் உள்ள மற்ற குறளும் எல்லாருக்கும் மயக்கமே தருகிறது.
கடவுள் வாழ்த்தில் உள்ள பத்துக் குறள்களில் கடவுளை நேரடையாக விளிக்கும் சொற்றொடர்களை முதலில்ப் பார்ப்போம்.

1.ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. வேண்டுதல் வேண்டாமை இலான்
5. பொறிவாயில் ஐந்தவித்தான்
6. தனக்குவமை இல்லாதான்
7. அறவாழி அந்தணன்
8. எண்குணத்தான்

மற்ற இரு குறள்களிலும் பொதுவாக இறைவன் என்றேக் கூறப்படுகிறது!

மாணவன்: (குறிக்கிட்டு) ஏன் சொற்றொடர்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்? முழுக் குறளையும் எடுத்துக் கொண்டு ஆராயலாமே, ஐயா?

ஆசிரியர்: பொறுமை தம்பி! முழுக் குறளையும் ஆராய்வோம். நான் சொல்வதைக் கேள். பிறகு உன் கேள்விகளை கேள்? சரியா!

மாணவன்: சரி ஐயா! தாங்கள் தொடருங்கள்.

ஆசிரியர்: எந்த ஒரு நூலாசிரியரும் தான் வழிப்படும் கடவுளைரைத் தான் பாடுவாரேயன்றி, ஒரு பாட்டில் தன் சமயக் கடவுளையும், மற்ற பாட்டுகளில் மற்ற சமயக் கடவுளரை பாடியதாக எங்ஙனமும் அமையவில்லை. அதனால் கடவுள் வாழ்த்தில் கூறப்படுபவர் எந்தக் கடவுள் என்று அந்த சொற்றொடர்களை ஆராய்ந்து, பின் முழுக் குறளையும் பார்க்கலாம்.

அந்தச் சொற்றொடர்களை ஆயும் முன்னர், தமிழ்த் தென்றல். திரு.வி.க அவர்களின் கூற்றை சிறிதுப் படித்துவிட்டு மேற்செல்லலாம். என்னை?

”ஒவ்வொன்றற்கும் புறமும் அகமும் இருத்தல்போலச் சமயத்துக்கும் புறமும் அகமும் இருக்கின்றன. சமயத்தின் புறத்தை நோக்கும்[போது பன்மைக் காட்சியும், அதன் அகத்தை யுணரும்போது ஒருமையுணர்வுந் தோன்றும். புறப் பன்மையைச் சமயவாதிகள் சமயங்கொண்டு கலாம் விளைக்கிறார்கள்”

இங்கே புறம் என்பதை புறச்சான்றுகள்
(External Evidences) என்றும் அகம் என்பதை தத்துவம் (Philosophy) என்றும் எடுத்துக் கொள்ளலாம்.புறச் சான்றுகள் என்ற வகையில், எல்லா சமயங்களுக்கும் (பெளத்தம், சைவம், வைணவம்) பொதுமையுண்டு. இதை வைத்து நாம் எல்லோரும் வாதம், பிரதிவாதம் செய்கிறோம். ஆனால் அகத்தை உணரும்போதுதான் சமயங்களின் ஒருமைத் தன்மை வெளித் தெரிகிறது. இந்தியச் சமயங்களில் புறத் தன்மைகள் ஒன்றுபோலவே அமையும். ஆனால், அவற்றின் அகத் தன்மையில் அவைகள் மாறுப்பட்டேயிருக்கும். காட்டாக, வினைக் கொள்கைகள் எல்லா இந்தியச் சமயங்களுக்கும் பொதுவேயாயினும் அவை சமணத்திற்கே உரிய சிறப்புக் கோட்பாடு.

புறத்தன்மையை
(External Evidences) எடுத்துக் கொண்டாலும் சமண இலக்கியங்களில்தான் மேற்சொன்ன சொற்றோடர்கள் 3:1 என்ற விகிதத்தில் அவைகள் விரவி வருகின்றன. அவ்வகையில் பார்த்தாலும் அவைகள் சமணம் சார்ந்தேயிருக்கின்றன என்பது  உள்ளகை நெல்லிக் கனி. அகத்தன்மைக்குள் புகும் முன் தமிழ்த் தென்றல். திரு.வி.க அவர்கள் சொல்வதைப் பார்த்துவிட்டு முன் செல்வோம்.

”திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஒரிடத்தில் ஒரு திறவு வைத்துள்ளார். அதற்கு அரணாக நூலினுள் பல குறிப்புக்களுண்டு. “பொறிவாயில் ஐந்தவித்தான்:” என்பது அத்திறவு. அத்திறவு கொண்டு கடவுள் வாழ்த்தைத் திறந்து பார்த்தல் வேண்டும்.

பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது ஒருபோது பொறி வாயில் ஐந்துடையானைக் குறித்தல் வெள்ளிடைமலை. முதலில் பொறி வாயில் ஐந்துடையனாயிருந்து, பின்னை அவ்வைந்தவித்த ஒருவனைத் திருவள்ளுவர் “ஆதிபகவன்” என்று போற்றியிருக்கிறாரென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குவ தொன்று. பொறி வாயில் ஐந்துடையனாய்ப் பின்னை அவ்வைந்தவித்த ஒருவனை ஆதிபகவனாகப் போற்றுவது எச்சமயம்?

எங்கும் நீக்கமற நிறைந்து அசைவற்ற ஒன்றை ஜைநம் மறுக்கின்றதில்லை. அவ்வசைவற்ற ஒன்று ஐந்தொழில் புரியா தென்பது ஜைந சித்தாந்தம். “உற்பத்தியு நாசமும் ஒன்றுமில்லாத பரஞ்சுடரே” என்பது ஜைநர் திருநூற்றந்தாதி.

எங்கும் நிறைந்த அசைவற்ற ஒன்றை ஜைநமும் ஏற்கிறது; சைவமும் ஏற்கிறது. ஜைநம் அசைவற்ற ஒன்றிற்கு ஐந்தொழில் கூறுவதில்லை. சைவம் பரம்பொருளுக்கு இருநிலை வகுத்து, ஒன்றற்கு ஐந்தொழிலின்மையும், மற்றதற்குத் தொழிலுண்மையுங் கூறுகிறது. அவ்விருநிலை சொரூபம் தடத்தம் என்பன. பொரூப சிவத்துக்கு ஒன்றுமில்லை. “சிவனரு வுருவுமல்லன் சித்தினோட சித்துமல்லன் – பவமுதற் றெழில்களொன்றும் பண்ணிடுவரனுமல்லன்” (சைவ சாத்திரம்). தடத்த சிவத்துக்கு ஐந்தொழிலுண்டு.

தடத்த சிவத்தைப் “பொறிவாயில் ஐந்தவி ஆதிபகவனாகக் கோடலாகாதோ வெனில், சைவ சாத்திர முறைப்படி கோடலாகா தென்க. பிறவியெடுத்தல், பொறிவாயில் ஐந்து பெறல், பின்னே அவைகளை அவித்தல் முதலியன பசு விலக்கண மெனச் சைவ சாத்திரஞ் சாற்றுகிறது. தடத்த சிவத்தையும் பசு வர்க்கத்தில் சைவ சாத்திரஞ் சேர்த்ததில்லை. ஆதலால் திருவள்ளுவர் வழுத்திய ஆதிபகவனைத் தடத்த சிவமாகக் கோடற்கு மிடமில்லை யென்க. கடவுளியலில் ஜைநமும் சைவமும் பிரியுமிடமிதுவாகும்.”

இவ்வாறு அகத் தன்மையில் பார்த்தாலும் மேற்சொன்ன சொற்றொடர்கள் சமண சமயத்திற்கு இயைந்தேயிருக்கின்றன!. என்னை?

பொறிவாயில் ஐந்தவித்தான் சிவனை, திருமாலைக் குறிக்கும் என்று வாதிட்டு போர்த்துறை நண்ணுவது மடமையாம். என்னை?

கடவுள் வாழ்த்தில் கூறப்பட்டுள்ள சொற்றொடர்கள் மனிதனாகப் பிறந்து, பின்னை இறைவனாக உயர்ந்த ஆன்மாவைக் குறித்தே சொல்கிறதேயன்றி எல்லாம் வல்ல பெரும்பொருளை அவைகள் குறிக்காது.

(ஆசிரியர், தன் பேச்சைச் சிறிது நிறுத்துகிறார்)

மாணவன்: ஆகா, நீண்ட விளக்கத்திற்கு நன்றி ஐயா! தற்போது முழுக்குறளையும் விளக்க வேண்டுகிறேன்?

ஆசிரியர்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”.
இதில் ஒன்றை நுணுகியாராய்ந்துப் பார்த்தல் நன்றமையும் தம்பி.

குறளாசிரியர் ”இறைவன் புகழ் புரிந்தார் மாட்டு”, அதாவது “இறைவனுடைய கீர்த்தியை விரும்பினவரிடத்து” என இறைவனது கீர்த்தியைச் சொல்லாமல், இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார்” என விதந்துக் கூறுவதினால், இறைவனால் அருளப்பட்ட அறத்தை விரும்பினவரிடத்து (அவர் வழி சென்றவரிடத்து)காதி, அகாதி வினைகளான இருவினையும் சேராது என்பது அக்குறளின் கருத்து.

இவற்றை ஒட்டியே யசோதர காவியம்,

“இருள்புரி வினைகள் சேரா இறைவன் அறத்தை எய்தின்..”

என்றும்,

“இருள்புரி உலகஞ் சேரா வியநெறி பயந்த பெம்மான்
பொருள்புரி விழவு காண்பார் புண்ணிய உலகங் காண்பார்”

என்றும் வருவதைக் காணலாம்.

மாணவன்: அற்புதமான விளக்கம். நேரம் ஆகிவிட்டதால் பிறிதொரு நாளில் மீண்டும் உரையாடுவோம் ஐயா!

ஆசிரியர்: நன்று தம்பி. அப்படியே ஆகட்டும். சென்று வா!
(மாணவன் விடைபெற்று வீடு திரும்புகிறான்)

தொடரும்…

இரா.பானுகுமார்,
சென்னை

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "Tamiljain, Jainism, Thirukural"
 

Send by mail Print  Save  Delicious 

 

 

Date: Monday, 08 Nov 2010 14:28

இருவினை சேரா இறைவன்!

(தமிழ் ஆசிரியரும், அவரது மாணாக்கரும் உரையாடுவது போல் இக்கட்டுரை அமைகிறது.)

(ஒரு ஞாயிறு காலை நேரம்)

மாணவன்: ஐயா, காலை வணக்கம்!

ஆசிரியர்: காலை வணக்கம். என்ன இவ்வளவு தூரம் தம்பி?

மாணவன்: ஐயா, தங்களிடம் உரையாடலாம் என்று வந்தேன். இன்று விடுமுறையாதலால் தங்களிடம் சில சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் நினைத்தேன். தங்களிடம் முன்னேமே சொல்லாமல் வந்ததற்கு மன்னிக்கவும்.

ஆசிரியர்: பரவாயில்லை தம்பி. இன்று எனக்கு முக்கியமான வேலை எதுவுமில்லை. சரி! உன் சந்தேகங்களைக் கேள்?

மாணவன்: திருக்குறள் படித்துக் கொண்டிருந்தேன். கடவுள் வாழ்த்தில் வரும் ”இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்” என்ற சொற்றொடர் எனக்கு விளங்கவில்லை. எல்லாம் வல்ல இறைவனுக்கு வினைகள் எப்படியிருக்க முடியும்? சிவபெருமான், பிறவாயாக்கை பெரியவன் என்று படித்திருக்கிறேன். ஆனால், திருவள்ளுவர் இருவினை சேரா இறைவன் என்கிறார்? நீங்கள் தான் விளக்க வேண்டும் ஐயா?

ஆசிரியர்: தம்பி, அந்த குறளின் பொருள் புரியவேண்டும் என்றால் வினைப் பற்றி நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மாணவன்: வினையா? தாங்கள் ஊழ்வினையைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!

ஆசிரியர்: நீ நினைப்பது சரிதான். முதலில் இந்தப் பாட்டைக் கேள்!

“பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு”1

நாலடி என்ன சொல்கிறது?

ஒரு கன்றுக்குட்டி பல பசுக்கள் உள்ள கூட்டத்தில் தன் தாய் பசுவைத் தேடி எவ்வாறு சென்றறடைகிறதோ அதுபோல ஒருவன் செய்த வினைகள் அவன் பல பிறப்பெடுத்தாலும் அவனை சென்றடையும். வினை செய்தவன் அவ்வினைப் பயனை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பாடம்.

மாணவன் குறுக்கிட்டு: இதனால் தான், திருவள்ளுவர், “பிறர்க் இன்னா முறபகல் செய்யின் தமக் இன்னா பிற்பகல் தாமே வரும்”2 என்றது இதனால் தானோ?

அப்படி என்றால் நாம் அவ்வினைப் பயனிலிருந்து தப்பிக்க முடியாதா? சம்பந்தர் தன் தேவாரத்தில் “நாளும், கோளும் என்ன செய்யும்” நம்பிரான் இருக்கையிலே”3 என்று சொல்கிறாரே?

ஆசிரியர்: அவசரப்படாதே தம்பி. நான் இன்னும் முடிக்கவில்லை. பிறப்பு என்பது சக்கரம் போன்றது. வினை என்ற மாசு விடுபடும் வரை பிறவிச் சுழற்சி நிற்பதில்லை. நமக்கு நடக்கும் நல்லது, கெட்டது எல்லாம் நம் வினைப் பயன்களேக் காரணம். நமக்கு நடக்கும் நன்மைகளுக்கு நம் நல்வினையும், தீமைகளுக்கு தீவினையும் காரணங்களாக அமைகின்றன. இதனால் நல்வினை, தீயவினை என்ற இரண்டு வினைகள் இருப்பது தெரியவரும். இதனால் தேவர் பெருமான் இருவினை என்றார்.

மாணவன்: ஏதோ தத்துவக் கோட்பாடுபோல் தெரிகிறதே? இது எந்த சமயக் கோட்பாடு? சைவமா? வைணவமா?

ஆசிரியர்: (சிரித்தபடியே) நன்று கேட்டாய் தம்பி. இது வைணவமோ, சைவமோ அல்ல. இது சமணக் கோட்பாடு!

மாணவன்: (ஆச்சரியமாக) சமணமா? மயிலை.சீனி.வேங்கடசாமி, திரு.வி.க போன்றவர்கள் குறள் சமணச் சார்புடையது என்கிறார்களே? இதனால் தானோ?

ஆசிரியர்: இருக்கலாம். ஆனால் நாம் அவர்கள் சொல்வதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டாம். நாமே விளங்கிக் கொள்ளப் பார்ப்போம்!

மாணவன்: ஆனால், சைவத்திலும் வினைக்கோட்பாடுண்டே?

ஆசிரியர்: பொறு! அவசரப்படாதே! சைவத்திலும் வினைப்பற்றி கூறப்பட்டிருந்தாலும்,சிறப்பாக இது சமணத்திற்கே உரிய கோட்பாடு. சமணம் குன்றியக் காலத்தில் இக்கருத்து சைவத்தில் உள்வாங்கப்பட்டது. தேவாரக் காலத்திற்கு முன் சைவத்தில் வினைக் கோட்பாடு இருந்ததாகச் சான்றுகள் இல்லை. பதின்மூன்றாம் நூற்றாண்டு வாக்கில்தான் சைவ கோட்பாடுகள் தொகுத்து எழுதப்பட்டன.4

மாணவன்: அப்படியா? சைவம் தேவாரக் காலத்திற்கு முன்னர் இல்லையா?

ஆசிரியர்: நான் அப்படி சொல்லவில்லையே! சிவன் வழிபாடு இருந்திருக்கிறது. ஆனால் அவை முழுச் சமயமாக பரிணமிக்கவில்லை. கோட்பாடுகள், ஆகமங்கள், வழிபாடு போன்ற கூறுகள் கொண்ட அமைப்பைத் தான் சமயம் என்று கொள்ள முடியும்! இல்லையா?

மேலும், வினைக்கொள்கையில், சைவத்திற்கும், சமணத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. சைவத்தில் சிவபெருமான் தன் ஆணையால் உயிர்களின் வினைப்பயனுக்கு ஏற்ப பிறவி பேதத்தை தருவான் என நம்பப்படுகிறது.5
ஆனால் இதற்கு மாறாக, சமணத்தில் வினைகளை மட்டுறுத்தவென்று யாரும் தேவையில்லை. வினைப்பயன், செய்தவனைத் தானே சென்றடையும். மேலே சொன்ன நாலடியார் பாடல் கூறுவதும் அதுதான். தேவர் பெருமானும் “பிற்பகல் தாமே” என்று கூறுவதால், இங்கே கூறப்படுவதுச் சமண கோட்பாடாகிறது. என்ன புரிகிறதா?

மாணவன்: புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது.

((இருவரும் சிரிக்கிறார்கள்)

ஐயா! என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இருள்சேர் என்று எதனால்?

ஆசிரியர்: நல்வினை, தீவினை பிறப்பிற்கு வித்தாகும். நால்வகை பிறப்புக்கு வழிவகுக்கும். நல்வினைப் பயனால் மனிதப் பிறப்பும், நல்ல குடியும், தேவகதியும், தீவினைப் பயனால் மிருககதியும், நரககதியும் அமையும். பிறப்பறுக்க இந்த இரண்டு வினைகளையும் நீக்க வேண்டும். இவை இரண்டும் பிறப்பிற்கு காரணமாக அமைவதால் தேவர் பெருமான் “இருள்சேர் இருவினை” என்றார்.

”தீவினை, நல்வினை என்று கூறப்படும் இரண்டு வினைகளும் சேராது, மெய்ப் பொருளாய் விளங்கும் இறைவன் புகழை விரும்பிப் போற்றுபவர்களுக்கு.” என்பது அக்குறளின் கருத்து.

மாணவன்: ஐயா, இந்த இடத்தில் ஒரு கேள்வி. இறைவன் புகழைப் போற்றுபவர்களுக்கு இருவினைகளும் சேராது என்றால்? அதாவது இறைவன் நாமத்தை துதித்து வந்தால் வினைகள் சேராது என்று பொருள் கொள்ளலாமா?

ஆசிரியர்: தம்பி, மேலோட்டமாய்ப் பார்த்தால் அவ்வாறு பொருள் கொள்ளலாம். திருக்குறள் உலகோர் எல்லாருக்கும் பொது. ஒரு சாராருக்கு மட்டும் குறள் எழுதப்படவில்லை. குறளாசிரியர் சமணராகயிருந்தாலும் எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில்தான் குறள் யாத்திருக்கிறார்.

“வென்றான் வினையின் தொகையாகி விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும்
சென்றான் திகழும்சுடர் சூழோளி மூர்த்தி யாகி
நின்றான் அடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்”
6

”அடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்” என்பதனால் இறைவனை வணங்கினாலே வினை நீங்கிவிடும் என்று பொருள் கொள்ளமுடியுமா?

”இறைவன் புகழைப் பாடுகின்றவர்கள், இவ்வாறு எல்லாக் கர்மங்களையும் கெடுத்து, ஆன்மாவின் முழுமையான தூய தன்மையை இறுதியில் அடைகின்றனர். சமண சமயக் கருத்துப்படி இவ்வுலக நன்மைகளைப் பெறுவது இறைவனை வணங்குவோரின் கொள்கையன்று. ஆனால், ஆன்மாவின் இயல்பான தூய்மை நிலையைப் பெற்று, தான் வணங்கும் இறைவனைப் போலவே ஆக வேண்டும் என்பதைத்தான் சமண சமயம் வற்புறுத்துகிறது. சமணம் வற்புறுத்தும் இந்தச் சமய நெறி முறை உலகெங்கும் காணப்படும் சமய கண்ணோட்டங்களில் இருந்து வேறுபாடு உடையதாக இருக்கிறது.
ஒருவன் இறைவன் மூலம் அடையும் நன்மைகளுக்குப் பிரதிபலனாகப் படையல்கள் (காணிக்கைகள்) உருவில் அக்கடவுளுக்கு அளிக்கப்படும் வணக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. மற்ற உலக சமயங்களின் கண்ணோட்டம் (அதாவது, கடவுள் அருளும் வரங்கள் மூலம் ஒருவன் நன்மையைப் பெறுகிறான், அவ்வாறு பெறும் நன்மைக்குப் பிரதி உபகாரமாக (கைம்மாறு) அவன் படையல்கள் மூலம் வணங்குகிறான்)

இறைவனிடம் இருந்து ஒன்றைப் பெற்று, அதற்கு ஈடாக வேறொன்றைக் காணிக்கை மூலம் அவருக்குத் திருப்பித் தரும் வாணிக பேரம் (அறவிலை) போல் தோன்றும் இந்தக் கருத்தைச் சமண சமயம் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால் விலக்க வேண்டிய மூன்று மூட நம்பிக்கைகளில் (தேவ மூடம், பாஷாண்ட மூடம், உலக மூடம்) இதுவும் ஒன்று. இறைவன் என்று வணங்கப்படும் மெய்ப் பொருள், ஒருவர் தம் ஆன்மாவை உயர்த்திக் கொள்ள – தம் பண்பில் மேம்பாடு அடைய வேண்டிய குறிக்கோளாக இருக்க வேண்டுமேயன்றி, வணங்குபவர் (பக்தர்) பேரம் பேசுபவராக இருக்கக் கூடாது. இதுவே சமணரின் கடவுட் கொள்கை; வழிப்பாட்டின் நோக்கம்”7

என்று சமண அறிஞர், பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் கூறுவதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம்.

மாணவன்: ஐயா! தங்கள் விளக்கம் என் மனக் கண்ணை திறந்திருக்கிறது. இறைவன் பற்றிய புரிதல் இன்னும் ஆழமாகிறது. திருப்பதியில் ஏன் அவ்வளவுக் கூட்டம்?

ஆசிரியர்: இது அவர்களின் நம்பிக்கை. இதை நாம் குறைக் கூறுதல் ஆகாது. நம் நம்பிக்கை நம்வரையில் இருக்கவேண்டும்.

மாணவன்: ஐயா, இருவினைப் பற்றி சமண இலக்கியங்களில் இருந்து மேலும் விளக்க முடியுமா?

ஆசிரியர்: குறள் கடவுள் வாழ்த்தில் வரும் சொற்றொடர்களும், கருத்துகளும் மற்ற சமய இலக்கியங்களைவிட சமண இலக்கியங்களில் பெரிதும் பயின்று வருகிறது. அவ்வளவையும் இங்கு கூற ஒரு நாள் போதாது, ஆகையால் சிலவற்றை மற்றும் இங்கு கூறுகிறேன்.

“அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய
நல்கிப் பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்”8

என்றும்,

”ஆதியா யுலகியல்பை யளித்தாய் நீயே
அருந்தவனா யறம்பகர்ந்த அறிவ நீயே
காதியா யுருவினையைக் கடிந்தாய் நீயே
……………”9
என்றும் வருவதைப் பார்க்கலாம்.

மேலும், திருக்கலம்பகம், சிந்தாமணி, பெருங்கதை போன்ற சமண இலக்கியங்களில் இருந்து சான்றுகள் காட்டலாம். விரியும் அதனால் இங்கு சொல்லவில்லை.

மாணவன்: நன்றி ஐயா! அருமையான விளக்கங்கள். சமணப் பற்றி அறிய ஆவல் மேலிடுகிறது. ஐயா, நேரம் போனதே தெரியவில்லை. மற்றொரு நாள் சமணம் பற்றி நீங்கள் விளக்கமாக சொல்லவேண்டும். எனக்கு மட்டுமல்லாமல், நிறைய வலைஞர்களுக்கும் அது மிக உதவியாக இருக்கும்.

ஆசிரியர்: நாம் படிக்கும் காலங்களில்,சைவ, வைணவ நூலகள்தான் பெரிதும் கிடைக்கிறது. சமணர்கள் பார்வை
(Jaina View) என்ன என்று தெரியாமல் போய்விடுகிறது. தமிழ்ச் சமணரான திரு.இரா.பானுகுமாரின் வலைப்பதிவு சென்றுப் படித்துப் பார். நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாம். மற்றொரு நாளில் சந்திப்போம். வணக்கம்!


To be Continued!

--------------------------------------------------------------------------

1. நாலடியார் – 101
2. திருக்குறள் – 319
3. தேவாரம் - சம்பந்தர் –
4. Facets of Saiva Siddhanta – சைவசித்தாந்தம்” ஓர் அறிமுகம் – முனைவர் நல்லூர் சா.சரவணன். (பக்கம்: 1)
5. ,,, (பக்கம்: 25,26)
6. சூளாமணி – 1 – கடவுள் வாழ்த்து
7. திருக்குறள் சமயம் – பக்கம்:31
8. யசோதர காவியம் – 300ஆம் பாட்டு
9. ஜீவசம்போதனை – 27ஆம் பாட்டு

Author: "Banukumar (noreply@blogger.com)"
 

Date: Sunday, 22 Aug 2010 22:03

தெய்வம் தெளிமின்

தமிழின் ஆதிகாவியம் என்று போற்றப்படுவது சிலப்பதிகாரம். இதன் சிறப்பை அறிந்து, பாரதியார் “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்றார். காவியங்கள் பொதுவாக அரசனைப் பற்றியோ அல்லது தெய்வத்தைப் பற்றியோ அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிலப்பதிகாரம் தமிழின் முதல் காவியமாக மட்டும் திகழாமல், சாதரண நிலை மாந்தர்களை வைத்து எழுந்த முதல் காவியமும் கூட. அதுவும், பெண் மகளை வைத்துப் பாடபட்ட முதல் காவியமுமாகும். ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இதுவும் ஒன்று. இப்பேற்பட்ட காவியத்தை யாத்தவர் இளங்கோவடிகளாவார்.

சிலப்பதிகாரக் காலம்

இதன் காலம் ஸ்திரமாக சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலான அறிஞர்கள் 2ஆம் நூற்றாண்டு என்று கொள்கின்றனர். “தமிழ்க் காவலர்கள்”  இன்னும் முன்னம் என்று கொள்வர். இக்கால நிர்ணயம் இங்கு தேவையில்லை யாதலால், கட்டுரையின் தலைப்பை நோக்கிச் செல்வோம். ;-)

இளங்கோவடிகளின் அறிவுரை

சிலப்பதிகாரத்தை முடிக்கும் முன்னர், இக்கதையைப் படித்தவர்களுக்கு சில அறிவுரைகள் சொல்லி அவைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்துகிறார். அப்பாட்டு,

”………………………..
என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி
தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி
தெரிவுறத் கேட்ட திருத்தகு நல்வீர்” - வரந்தரு காதை (185)

“பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்ம்மின் தவம்பல தாங்குமின்” - வரந்தரு காதை (190)
“செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்” - வரந்தரு காதை (195)
“அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது” - வரந்தரு காதை (200)
“செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”

என் உரை:

இளங்கொடியாளான கண்ணகியின் கதைக் கேட்ட நல்லவர்களே! கேளுங்கள்!!

1. கவலையும், துன்பமும் விட்டு ஒழியுங்கள்,
2. தெய்வம் எது என்று தெளியுங்கள்,
3. அப்படி தெளிந்து ஏற்றுக்கொண்டவர்களை பின்பற்றுங்கள்,
4. பொய் சொல்லாதீர்கள், புறங்கூறுதலை அகற்றுங்கள்,
5. புலால் உணவை விலக்குங்கள்,
6. பிற உயிர்களைக் கொல்லாதீர்கள், (கொல்லாமை கடைப்பிடியுங்கள்),
7. தானம் செய்யுங்கள்,
8. நோன்புகள் பல ஏற்றுக் கொள்ளுங்கள்,
9. பிறர்ச் செய்த உதவிகளை மறக்காதீர்கள்,
10. தீய நட்பை விலக்குங்கள்,
11. பொய்ச் சாட்சி சொல்லாதீர்கள்,
12. உண்மை மொழியினை விட்டு அகலாதீர்கள்,
13. அறவோர்களை நாடி செல்லுங்கள்,
14. அறவோர் அல்லாதவர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள்,
15. பிறர் மனைவியை தாயாக நினையுங்கள்,
16. நிர்கதியாக இருக்கும் உயிர்களைக் காப்பாற்றுங்கள்,
17. இல்லறத்தைப் போற்றுங்கள்,
18. தீயவைகளைச் செய்யாதீர்கள்,
19. குடியை விட்டுவிடுங்கள்,
20. திருடாதீர்கள்,
21. விலைமாதர்களிடம் செல்லாதீர்கள்,
22. பொய் பேசாதீர்கள்,
23. பயனற்ற பேச்சுகளை பேசாதீர்கள்,
24. இளமை நிலைக்காது,
25. செல்வம் நிலைக்காது,
26. உடம்பும் நிலைக்காது

ஆயுட் காலம் எப்போது முடியும் என்று தெரியாது, மரணமும் தவிர்க்க முடியாதது, அறம் ஒன்றே உய்விக்கும்! அறமே மறுமைக்கும் துணையாக பின் வரும். ஆதலின் அறம் செய்து வாழ்வாங்கு வாழுங்கள்!!

என்று தன் காவியத்தை முடிக்கிறார். மேற்சொன்ன அனைத்து அறிவுரையும் அப்படியே திருக்குறளில் எதிர் ஒலிப்பதையும் ஈண்டு நோக்குக!

தெளிமின்! தெளிந்தோர்ப் பேணுமின்!!

..” தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்”

இந்த வரியில் இளங்கோவடிகளின் உள்ளக் கிடக்கை தெற்றென விளங்குகிறது. என் காவியத்தில், பல கடவுள்களை கூறியிருக்கிறேன், அவர்களில் உண்மையான தெய்வம் யார் என்று தெளியுங்கள். அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களை (தெளிந்தவர்களை) கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

அப்படி இளங்கோவடிகளில் நிறைந்த அந்த தெய்வம் யார்? இளங்கோ தன் காவியத்தில் ஒரு யுக்தியை கையாள்கிறார். கதையில் நிறைய மாந்தர்களை உலவ விட்டிருந்தாலும், தன் மனதில் பிரதிப்பலிப்பாக, கவுந்தியடிகளின் பத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கவுந்தியடிகள் கதாப்பாத்திரத்தை எடுத்துவிட்டுப் பார்த்தாலும் கதைக்கு எந்த பங்கமும் வராது. பின் ஏன் அந்தக் கதாப்பாத்திரம்? தன் சமயக் கொள்கையை கதையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் கவுந்தி என்றப் பாத்திரத்தைப் படைத்துக் கதையை நகர்த்திச் செல்கிறார் இளங்கோவடிகள்.
இறைவாழ்த்தில் இயற்கையைப் பாடியவர், தன் உள்ளக்கிடக்கை சரியான நேரத்தில் கவுந்தியின் மூலமாக உள் நுழைக்கிறார்.

மதுரைக் காண்டம், காடுகாண் காதையில்,

“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்” – (5)

என்று அருகப் பெருமானை வணங்கி, பின் கவுந்தியின் மூலமாக சமணக் கருத்துகளை ஆங்காங்கே தூவிச் செல்கிறார் இளங்கோவடிகள். அத்தொடு அல்லாமல் அப்பிராட்டியின் வாயிலாக,

“..ஒரு மூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா”

என்றும்,

“காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாமம் அல்லது நவிலா தென்னா
ஐவரை வென்றோன் அடிஇணை அல்லது
கைவரக் காணினும் காணா என்கண்
அருளறம் பூண்டோன் திருமெய்க்கு அல்லதென்”

என்றும்,

“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவம் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறா அது”

என்றும்,

“இறுதியில் இன்பத் திறைமொழிக் கல்லது
மறுதர ஓதியென் மனம்புடை பெயராது”

என்று கூறுவதையும் ஈண்டு நோக்குக.

இதனால் சிலப்பதிகார ஆசிரியர் உள்ளம் யாது என்றும் அவர் எந்த தெய்வத்தை தெளிந்திருக்கிறார் என்றும் நாம் உணரலாம். அவரின் வாக்கை நாமும் பின்பற்றி,

”ஆதியில் தோற்றத்து பகவனை, மலர்மிசை நடந்த மன்னவனை, அறவாழி ஏந்திய அந்தணனை, எண்குணத்தானை, வாலறிவனை” வணங்கி ஏத்துவோமாக!

தெய்வம் தெளிமின்!!

அறம் மறவற்க! அறமல்லது துணையில்லை!!
வாழ்க திருவறம்! வளர்க நல்லறம்!!

இரா.பா
சென்னை

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "Jainism, சமணம், இளங்கோ..."
 

Date: Sunday, 08 Aug 2010 14:46

ஆதிபகவன்

மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன் ஆகிய கட்டுரைகள் எழுதும் போதே சில நண்பர்கள் முதல் குறளைப் பற்றியும் எழுதச் சொன்னார்கள். திரு.மஞ்சை வசந்தன் என்பார் முதல் குறளுக்கு எழுதியக் கட்டுரையை இங்கிட்டு என் கருத்தைப் பின்னர் எழுதுகிறேன் என்று சொன்னதோடு சரி. எழுதச் சந்தர்ப்பம் அமையவில்லை.

ஆனால், சமீபத்தில் மின்தமிழ்க் குழுமத்தில் ஆதிபகவன் பற்றிய இழையொன்றில் இரண்டு அறிஞர்களின்
1930ல் எழுதியக் கட்டுரையைக் கொடுத்திருந்தேன். எல்லா குழுமங்களில் நடப்பது போலதான் இங்கும் நடந்தது. இரசத்தை (சாரத்தை) விட்டு சக்கையைப் பிடித்தார் போல் “நடந்தவன்”, ”சென்றவன்” என்பதற்கு மேலே ஏதும் விளங்கிக்க முடியவில்லை. பொதுவாக, குழுமங்களில், அறிவுக்கு (மூளை) பதில் உணர்ச்சிக்கு (இதயம்) இடம் கொடுக்கப்படுகின்றபடியால் அங்கு மேலும் எழுதுவதில் பயனில்லை என்பதால் இங்கு எழுதும் படியாயிற்று! :-)

மேற்கொண்டு எழுதினால், குழுமத்தை கலைக்கிறான்; ஹிந்துத் துரோகி; அது இதுவென்று பொதுமையாய் கூறத் தொடங்கிவிடுவார்கள்.  ஏற்றுக் கொள்ளும் பக்குவம்… ஹூம்…

இங்கு எழுதுவதால், ஒரு செளகரியம்! சிலர் நேரிடையாக பின்னூட்டுக் கொடுத்து மனதில் பட்டதை எழுதுவார்கள். இன்னும் சிலர், கட்டுரைப் படித்தக் கையோடு தனி மடலில் தங்கள் சந்தேகங்களை விளக்கச் சொல்வார்கள். இதனால் புரிதல் விரிவடையும். எனக்கும்தான்!!)

சரி கட்டுரைக்குள் செல்வோமா?

அறிஞர்கள்ப் பட்டியல்!

எனக்கு தெரிந்து தமிழ் இலக்கிய உலகில் சில நூற்றாண்டுகளாக ஆராயப்பட்டுவரும் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். குறளாசிரியர் யாரை தன் இறைவனாக ஏற்கிறார் அல்லது அவர் குறிப்பிடும் அந்த இறைவன் யார் என்ற கேள்வி பல காலமாக நிறைய அறிஞர்களில் மனதில் அரித்துக் கொண்டு வந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது!

பல அறிஞர்கள் அவற்றிற்கு விடைத்தேடி, திருக்குறள் சமணம் என்று ஆய்ந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாரும் சமணரல்லர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. அவ்வறிஞர்களை கீழேக் கொடுத்துள்ளேன்.

1. தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார்
2. மயிலை.சீனி.வேங்கடசாமி
3. வித்துவான். மே.வீ.வேணுகோபால பிள்ளை
4. திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை
5. பதிப்புசெம்மல். திரு.சண்முகம்பிள்ளை
6. திரு.அ.கி.பரந்தாமனார்
7. பன்மொழிப் புலவர். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
8. பன்மொழிப் புலவர். வெங்கடராஜுலு ரெட்டியார்
9. சர். ஆர்.கே.சண்முகம் செட்டியார்
10. பன்மொழிப் புலவர். மு.கு.ஜகந்நாத ராஜா
11. தில்லையம்பூதூர் திரு.வெங்கட்ராம ஐய்யங்கார்
12. கவிராஜபண்டிதர் ஜெகவீரபாண்டியனார்
13. பிஷப் கால்டுவெல் துரை மகனார்
14. பிரான்சிஸ் வைட் எல்லீஸ் துரை மகனார்
15. காஞ்சி. திரு.டி.ஆர்.சீனிவாச்சாரியார்
16. மழபாடி. மகாலிங்க ஐயர்
17. திரு. ஐராவதம்.மகாதேவன்
18. திரு. க.ந.சுப்ரமணியம்
19. கல்வெட்டறிஞர். திரு.இராசு
20. பேரா. க.நாச்சிமுத்து
21. திரு. சிவ.விவேகானந்தன்
22. முனைவர். துளசி.இராமசாமி
23. திரு. மறைந்த எழுத்தாளர் சுஜாதா
24. புலவர். அப்துல் ரஹ்மான்
25. பேரா. ஏகாம்பர நாதன்
26. நாசா. விஞ்ஞானி. நா. கணேசன்
27. பேரா. சந்தரசேகர்
28. திரு. ஜெயமோகன்
29. திரு. மஞ்சை வசந்தன்
30. திரு. அருணன்
31. திரு. பேரறிஞர். அண்ணாதுரை
பட்டியல் நீளும்…………………………..


அகர முதல எழுத்தேல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
                         – திருக்குறள் (1)

விளக்கம்:

உலகம், அகரம் முதலான எழுத்துக்களை எல்லாம் ஆதிபகவனை முதலாகக் கொண்டுள்ளது.

விரிவுரை:

அகர முதல - அகரத்தை முதலாகத் தொடங்கி பின் வரும், எழுத்து என்று பொதுப்பட சொல்லினும், எண்களையும் அவை குறிக்குமாதலின் எழுத்தேல்லாம் என்றார், ஆதிபகவன் - உலகின் கண் ஆதி பகவனிடம் இருந்து தோன்றிற்று. அஃதாவது, ஆதிபகவனாலேயே எண்ணும், எழுத்தும் இவ்வுலகின் கண் தோன்றியது எனபது கருத்து.

ஆதிபகவன் யார்?

ஆதி என்பதற்கு முதல் என்றும் தொன்மை என்றும் பொருள் படும். முதல் பகவன் என்றும் ஆதியில் தோன்றிய பகவன் என்று பொருள் கொள்ளலாம். ஆயினும், இங்கு ஆதி என்பது முதல் என்றே பொருள் கொள்ள வேண்டும். அ (ரகம்) எழுத்து மற்ற எழுத்துகளுக்கு எல்லாம் முதலாக வரும். ஆதிபகவன் மற்ற பகவர்களுக்கெல்லாம் முதலாக இருக்கிறார். மற்ற பகவர்கள் யாவர்? எனின், சமண சமயத்தில் காலந்தோறும் (இறந்த, நிகழ், வருங்காலம்) இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றுவார்கள் என்றும் அவர்கள் மக்களை நல்வழிப் படுத்தி அறம் புகட்டுவார்கள் என்பதும் சமணர்கள் நம்பிக்கை. அவ்வாறே நிகழ் காலத் தீர்த்தங்கரர்கள் இருபத்துநால்வர். அவர்களில் முதலாமவர் இரிஷபதேவர் என்று போற்றப்படும் ஆதி தீர்த்தங்கரர் ஆவார். சமண இலக்கியங்கள் (வடமொழி, தென்மொழி) இவர் திருநாமங்களை இவ்வாறு போற்றும்,

ஆதி, ஆதிபகவன், ஆதிநாதர், ஆதிதேவன், ஆதிமுதல்வன், ஆதிமூர்த்தி, ஆதிமூலர், ஆதிபிரம்மா, ஆதிமுதற் கடவுள், ஆதிநாள் அரசர், ஆதீஸ்வரன், ஆதிசக்கரவர்த்தி, ஆதிபட்டாரகர், ஆதிநாயகன், ஆதிஜினன், ஆதிராஜா, ஆதிபரமேஸ்வரன், ஆதித்தீர்த்தன்,

எனப் போற்றப்படும் ரிஷபநாதர், எண்ணையும், எழுத்தையும் முதன்முதல் உலகின் கண் உருவாக்கினார். நிகண்டுகளில் தலைசிறந்ததாகக் கருதப்படும் சூடாமணி நிகண்டு,

“விருப்புறு பொன்னே யிற்குள் விளங்கவெண் ணெழுத்திரண்டும்
பரப்பிய வாதிமூர்த்தி பங்கயப்பாதம் போற்றி!
                 – (நாலாவது தொகுதி – கடவுள் வணக்கம்)

என்றும், ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் என்னும் நூலில்,

“சசிகளாதித்த ரொருகோடி வந்தோருருக்
கொண்டாடி கண்ட பரமனே
சமவசர ணேசனே இமையவர்களீசனே
சார்ந்தவர்க் கைந்தாருவே
இசையினா லெண்ணெழுந் தியம்புவித்தாயுநீ”

என்றுப் போற்றப்படுவதை நோக்குக. இதனால் அகரம் முதலிய எண்ணும், எழுத்தும் ஆதிபகவனிடம் இருந்து தோன்றியது என்பதைக் காணலாம்.

ஆதிபகவன் என்னும் சொற்றொடர்

ஆதி என்பதற்கு இங்கு முதல் என்பதுதான் பொருந்தும் என்று முன்னமே பார்த்தோம். ஆதிபகவன் என்பது முதல் பகவன் என்று ஆகும். இதனை தமிழ்ச் சமண இலக்கியத்தில் இருந்து சான்றுக் காட்டுவோம்.

“மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளேநீ யொடுக்கினை
ந்ன்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை - எனவாங்கு
ஆதிபகவனை அருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே”
           – திருக்கலம்பகம்

“ஆதிபகவன் அசோக வசலன்
சேதிபமுதல்வன் சினவரந்தியம் பகன்”
       – திருப்பாமாலை

“அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்”
               – தோத்திரத் திரட்டு

”பகவன்” என்பதற்கு அடியாருக்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் கேவல ஞானி என்றே பொருள் உரைத்திருக்கிறார். ”பகவன்” என்ற சொல் பல தமிழ்ச் சமண இலக்கியத்தில் காணலாம். அம்மேற்கோள்களைச் சுட்டுவதால் விரிவடையும் என்று இங்கு கொடுக்கப்படவில்லை.

முடிபு:

தேவர் பெருமான் “ஆதிபகவன் முதற்றே உலகு” என்றது முதல் சமணத் தீர்த்தங்கரரான “ஆதிநாதர்” என்பது உள்ளங்கை நெல்லிக் கனி”. இன்னும்மோற் எடுத்துக்காட்டு கொடுத்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.

சமணரான “அகளங்க தேவர்” என்னும் பன்மொழிப் புலவர் “தத்வார்த்த சூத்திரம்” என்னும் நூலில் 11ஆம் சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் ஆதி சப்தம் அநேகப் பொருள்களையுடைய தெனவும், சில இடங்களில் முதல் என்னும் பொருள் பெற்று வருமென்றும் உரை வரைந்துள்ளார். அதற்கு மேற்கோளாக,

“அகாரா தயோ வர்ணா
ரிஷபா தய்ஸ் தீர்த்தகரா இதி”


என்னும் சுலோகத்தைக் காட்டிப் பின்வருமாறு விரிவுரை எழுதுகிறார்.

“எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன, தீர்த்தங்கரர்கள் ரிஷப தேவரை முதலாக உடையர்” என்பதாகும்.

அவ்வாறே நம் குறளாசிரியரும் அகர வரிசையில் அ முதலாக வருவதுபோல, பின்வரும் பகவர்களுக்கு ஆதிபகவன் முதலாக உள்ளார் என்று கூறுவதை மேற்சொன்ன எடுத்துக்காட்டுடன் ஒப்புமை நோக்க குறளாசிரியன் உள்ளம் எளிதில் புரியும்.

இரா.பானுகுமார், (இரா.பா)
சென்னை
08.08.2010

Date: Tuesday, 06 Jul 2010 10:29

Scientific evidence in Neelakeci, a Tamil literature
R.Banukumar

Preface

Neelakeci one among the five minor kavyas in Tamil literature, the others being Sulamani, Nagakumara Kavya, Uthayanakumara Kavya and Yasothara Kavya. Neelakeci, work based on logical (தர்க்கம்) analysis of the Indian philosophical systems such as the Buddhist school of philosophy, the Ajiika school of philosophy , the Sankaya school of Philosophy, the Veda school of Philosophy, the Vaishadika school of Philosophy and the Buthavada school of Philosophy that were prevalent in ancient India . The author’s name remains unknown. It was assumed by scholars that it was written between the 4th to 5th century CE based on the internal evidences available in the book. The book appears to be a refutation of the Buddhist work called Kundalakeci which is unfortunately lost now. Kundalakeci was included as one among the major kavyas of Tamil literature, the others being Cilapathikaram, Ceevagachintamani, Valaiyapathi & Manimekalai.

The book named is after a shudra woman called Neelakeci who learnt Jain school of Philosophy (Doctrine of Ahimsa – Non-Violence to all living beings) from a Jaina monk Munichandra and took oath to preach the doctrine of Ahimsa throughout the country. Hence she refutes the other schools of philosophies in order to highlight the supremacy of Ahimsa dharma (Jaina school of doctrine).

However, our focus here is to bring out the scientific knowledge among Tamils in those early times. Neelakeci clearly brings out & talks about some of the scientific know how, such as “What causes a Rainbow to appear”, the difference between velocities of Light and sound, the fact that plants do experience sensations and have life, Infinite numbers.

Scientific evidence in Neelakeci

To quote an instance from Neelakeci which clearly illustrates the formation of Rainbow in compliance with the modern science?

First Instance:

In the sixth chapter “Ajivakavada sarkam”, Neelakeci refutes the Ajikava School of philosophy. During the debate the “Puranan”, a leader of this school, argues that his God’s appearance is unintelligible and inexplicable as the rainbow appears in the sky. For this Neelakeci replied:


வானிடு வில்லின் வரவறி யாத வகையனென்பாய்
தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா
மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்
றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே                   -
684 (நீலகேசி)

In this stanza which is important is the line ’மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்’. Let us see the meaning of the phrase of this line.
வானிடு வில் = வானவில்
= Rainbow
சுடரான் = சுடரோன் =
Sun.
கதிர் =
Rays of Sun
வீழ்புயன்மேற் = நீர் மேகத்திற் மேல் =
over the clouds containing water particles.

In translation, it states that a Rainbow is formed when the rays of the sunlight shines over the clouds (நீர்மேகம்) which contain water particles. This is an accepted theory of modern physics.

(Refer: Wikipedia - A rainbow is an optical and meteorological phenomenon that causes a spectrum of light to appear in the sky when the Sun shines onto droplets of moisture in the Earth's atmosphere. They take the form of a multicolored arc, with red on the outer part of the arch and violet on the inner section of the arch. http://en.wikipedia.org/wiki/Rainbow)

Conclusion:

From the above it is clearly evident that, at least during the 4th CE, Tamils were aware of the scientific reasons for the formation of a rainbow. This might be the first written evidence available to us since the modern age.

Date: Monday, 15 Feb 2010 11:43

இந்திரனும் சிறுகுரங்கும்!

நாம் வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம். சிலர் செல்வந்தர்களாகவும், பலர் ஏழ்மையில் உழல்பவராகவும் இருக்க காணுகிறோம். இந்நிலைமை ஏன்?

சிலர் பரம்பரைப் பணக்காரர்களாகவும், சிலர் தன் உழைப்பால் பெரிய நிலைக்கு உயர்ந்தவர்களாகவும், சிலர் பரம்பரைப் பணக்காரர்களாகயிருந்து பின் தாழ்வுற்று வறியவர்களாகவும், சிலர் ஏழ்மையில் பிறந்தாலும், தன் சுயமுயற்சியால் பெரும் பணக்காரர்களாக ஆகுவதையும் நாம் பார்க்கிறோம். ஏன் இந்த நிலை?

சிலர் பெரும் பணக்காரர்களாக இருந்தும் மனத்தளவில் பிச்சைக்காரர்களாக இருப்பதையும், மேலும் சிலர் பிச்சையெடுத்து உண்ணும் நிலைமையிலும், பிறருக்கு ஈந்து மனதளவில் பணக்காரர்களாக திகழ்வதும் கண்கூடு. இதற்கு காரணம் என்ன?

இதற்கெல்லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் காண முடியாது. ஆன்ம வழியில் இதற்கு விளக்கம் தேடமுடியும். அப்படி விளக்கம் காண தேடியதின் விளைவாக எழுந்ததுதான், சமயங்களின் பரிணமிப்புகளும், பலதரப்பட்ட சமயக் கோட்பாடுகளும்.

இதெற்கெல்லாம், கடவுள் காரணம் என்று சுலபமாக சொல்ல முடியாது.  இதேல்லாம், கடவுளின் செயல் என்று சமணமும் ஒப்புக் கொள்வதில்லை. கடவுளின் செயல் என்றால் அதற்கு முழுச் சமாதானம் கூற முடியாது. இது நிற்க!

மேலே கூறியவற்றிக்கு சமாதானம் கூறும் பொருட்டு சமணம் ஊழ்வினை வாதத்தை முன் நிறுத்தியது. ஒருவன் ஒரு பிறவியில் செய்த பாவ, புண்ணியப் பயன்களை வரும் பிறவிகளில் அவன் அனுபவித்தே ஆகவேண்டும். பணக்காரரின் மகனாக பிறப்பவன், தந்தையின் மறைவிற்குப் பிறகு நொடிந்து, வறுமைப் பற்ற பிச்சைக்காரன் ஆகிறான். மற்றொருவனோ, ஏழ்மையில் பிறந்தாலும், பின் செல்வச் செழிப்பிலே திளைக்கிறான். இதற்கு காரணமாக அமைவது ஊழேயாம்.

இவற்றை வெகு அழகாக விளக்குகிறார் திருத்தக்க தேவர் பெருமான்.

“பெரிய இன்பத்து இந்திரனும்
பெட்ட செய்கைச் சிறுகுரங்கும்
உரிய செய்கை வினைப்பயத்தை
உண்ணும் எனவே உணர்ந்து அவனை  .......”           
- சீவக சிந்தாமணி
(2815)

என் உரை:

தேவருலகின் தலைவனான இந்திரன், சுகபோகங்களில் திளைப்பதும், சிறுமைச் செயல்கள் செய்து திரியும் சிறிய குரங்கு அனுபவிப்பதும் தத்தம் நல்வினை, தீவினைப் பயன்களாலேயாம்.

அவர் மேலும் அப்பாட்டை இவ்வாறு முடிக்கிறார்.

”அரியர் என்ன மகிழாது
எளியர் என்ன இகழாது
இருசார் வினையுந் தெளிந்தாரே
இறைவன் நூலும் தெளிந்தாரே”

அதனால், ஆகா இவர் பெரியவர் என்று மகிழாமல், அய்ய.. இவர் சிறியவர் என்று இகழாமல், அவர்களின் நிலைமைக்கு அவர்கள் வினைப்பயன்களே என்று தெளிந்து, நல்வினை/தீவினை அகற்றி இறைவன் நிலையடையுங்கள் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

இதேக் கருத்தை கணியன் பூங்குன்றனார் இவ்வாறு பாடுவதைப் பாருங்கள்.

“..திறவோர் காட்சியிற் தெளிந்தனம் ஆகலின்
மாட்சியிற் பெரியோரை வியத்தகும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே....”



இரா.பானுகுமார்

Date: Friday, 12 Feb 2010 15:48


அண்ணாத்தல் செய்யாது அளரு!


நிறைய அன்பர்கள் கேட்டு விட்டார்கள். ’ஏன் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக எழுதுவதில்லை’. நிறைய எழுதவேண்டும்தான். நேரம் கிடைக்கவில்லை என்று
நேரத்தின்மேல்ப் பழிப்போட விரும்பவில்லை. 

இதோ இப்போது எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இன்று, என் இனிய நண்பர் சுரேஷிடம் பேசிக் கொண்டியிருக்கும் போது திருக்குறளில் ’அண்ணாத்த செய்யுமாம் அலரு’ அப்படி என்று வருமாமே, அதற்கு என்ன பொருள் என்று கேட்டார். திடுதிப்புன்னு கேட்டா என்னாலைச் சொல்ல முடியாது. ஆனா ‘அண்ணாத்தல் செய்யாது அளரு’ என்று புலால் மறுத்தலில் வரும் குறள் அது. கொஞ்சம் டைம் கொடுத்திங்கனா, பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று அப்போதைக்கு நழுவினேன்.

ஆனாலும் புலால் மறுத்தல் அதிகாரத்தில் வரும் அந்தக் குறள் என் மனதில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. வீட்டிற்கு வந்தவுடனே பரிமேலழகரைப் புரட்டினேன்.

”உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளரு”                 
 - திருக்குறள் (255)

பரி என்னா சொல்றார்னா?..

”உயிர் நிலை ஊன் உண்ணமை உள்ளது - ஒரு சார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளரு அண்ணாத்தல் செய்யாது- ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின் அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்தற்கு அங்காவாது”.

அவரே தன் சிறப்புரையில் (விரிவுரை)..

”உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக ஏனைய பலவாய் வருதலின் ’உண்ணாமை உள்ளது உயிர்நிலை’ என்றார். ‘உண்ணின்’ என்பது ‘உண்ண’ எனத் திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் எனபதாம். கொலைப் பாவம் கொன்றார் மேல் நிற்றலின் பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது”.

அவரின், விரிவுரையில் ”உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக ஏனைய பலவாய் வருதலின் ’உண்ணாமை உள்ளது உயிர்நிலை” என்ற வாக்கியத்தை படித்தவுடன் திருக்குறளின் அத்தாரிட்டி என்று போற்றப்படும் ஒரு உரையாசிரியர் எப்படி இவ்வாறு எழுதினார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

என்ன சொல்லவரார்னா? விலங்குகளைக் கொன்று தின்றால் அவற்றின் எண்ணிக்கைகள் குறைந்துக் கொண்டே வருமாம். அதனால், ஊன் உண்ணாமல் இருப்பதே உயிர்நிலை என்று சொல்கிறார். ஊன் உண்ணாமலிருந்தால் அவைகள் பலவாக பெருகுமாம். இது எப்படியிருக்கு பார்த்திங்களா? லாஜிக் உதைக்கிறதே!

குறளின் உரை சரியில்லையே! பின் எப்படி உரை வரும்.

என் பார்வையில்

உயிரின் இயல்புகளில் ஊன் உண்ணாமையும் ஒன்று.
Instinct Characteristics என்பார்களே அதுமாதிரி. ஊன் உண்ணாமை. அஃதாவது, உயிரின் பலப் பண்புகளில் ஊன் உண்ணாமை என்ற இயல்பும் ஒன்று. இது உயிரைப் பற்றிய சமணப் புரிதல்.

’உண்ணாமை யுள்ள துயிர்நிலை’ - ஊன் உண்ணாமையே உயிரின் பண்பு அல்லது நிலை. உயிரின் பண்புக்கு மாறாக ஊன் உண்டால் மிகவும் அஞ்சத்தக்கக் கதியாகிய நரகக் கதிக்கு சென்று அழுந்திவிடுவீர்கள். அப்படி அழுந்தப் பட்ட உயிர் நரகத்தில் இருந்து வெளியே வரமுடியாது. நரகம் வழிவிடாது என்பதுதான் அக்குறளின் கருத்து.

இது இவ்வாறாருயிருக்க, ஊன் உண்டால் உயிர்கள் குறைந்துவிடும் என்று சொல்வது இங்கு பொருந்தாது. எவ்வாறெனின், உயிருக்கு அழிவில்லை. உடல்தான் அழிகிறது. மனித குலம் இப்பூமியின் கண் தோன்றுவதற்கு முன்னமே, டைனாசோர் போன்ற விலங்குகள் இப்பூமியின் கண் இருந்து மறைந்ததாக நாம் அறிவோம். மனிதர்கள் உண்டா அழிந்து போயின? அல்லவே! இயற்கையாய் அவைகள் அழிந்துப்பட்டன.

இதனால், பரிமேலழகர் உரை இக்குறளுக்கு முற்றும் முரண்.


இரா.பானுகுமார்,
சென்னை.

Date: Wednesday, 09 Dec 2009 16:46

தாமரைக் கண்ணான் உலகு

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
                               – திருக்குறள் (1103)

(புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் உள்ளது)

அகத்திய குழுமத்தில் எழுதும் போது இக்குறள் பற்றி விவாதிக்கப்பட்டது. குறளின் சமயத்தை இக்குறளில் ஏன் தேடுகிறார்கள் என்று நினைத்துச் சிரித்ததுண்டு.

நேற்று முன்தினம் நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்து ”தாமரைக் கண்ணான் உலகு” பற்றிச் சொல்ல சொன்னார். ஏதோ ஒரு யாஹீ குழுமத்தில் மடலாடல் நடந்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். அவர் அப்படித்தான்! திடீரென்று கைப்பேசியில் அழைப்பார். ஏதாவது கேட்பார்? எங்காவது எழுதுகிறீர்களா? என்றால் சிரித்துவிட்டு கட் செய்து விடுவார்.


உரையாசிரியர்களின் பார்வை:

மணக்குடவர் உரை:

தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம்.
இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

பரிமேலழகர் உரை:

தாம் வீழ்வார் மென் தோள்துயிலின் இனிதுகொல் – ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு – அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.

ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. இப்பெற்றித்தாய் துயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது என்னும் கருத்தால் “இனிது கொல்” என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.

(அப்பா! எப்படியெல்லாம் மழுப்புகிறார்

சமணம் சார்ந்த உரை

யான் முன்னமே சொல்லியது போல (என் மற்ற கட்டுரையைப் படிக்கவும்) மணக்குடவர் உரை சுருக்கமும், நேரிதின் பொருளும் கொண்டதாகயிருக்கிறது.

இந்திரன் உலகு

சமணக் கொள்கைப்படி, நல்வினைக் கட்டால் தேவகதியை அடைந்த உயிர்கள் தேவலோகத்தில் தேவர்களாகப் பிறந்து பலத்தரப்பட்ட சுகங்களையும் அனுபவிக்கும். அச்சுகங்களை எழுத்தில் சொல்ல முடியாது. இது நிற்க!

புணர்ச்சியில் மகிழும் தலைவன், இவள் உடலைத் தழுவதால் கிட்டும் சுகத்தை விட சுவர்க்கத்தில் கிடைக்கும் சுகம் இனிதாக இருக்க முடியுமோ? முடியாது! என்று நினைக்கிறான்.

இப்போது சொல்லுங்கள் சுவர்க்கம் என்றால் அது இந்திரலோகமா? அல்லது திருமால் உறையும் வைகுண்டமா? நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

வைகுண்டத்தில் ”சுவர்க்கத்துக்கு” இடம் உண்டென்றால், அது தாமரைக் கண்ணான் உலகு தான்!!

உரையின்மையா?

பரிமேலழகர் “தாமரைக் கண்ணான்” என்ற பெயர் இந்திரனுக்கு இல்லை என்ற வாதம் இங்கு நிற்காது? எங்கனமெனின், “எண்குணத்தான்”, ”அறவாழி அந்தணன்” போன்ற பெயர்கள் அருகனைக் குறிப்பதாக எல்லா நிகண்டுகளும் கூறுகின்றன? பரிமேலழகர் கூற்றை ஏற்றுக் கொண்டால், இக்கூற்றையும் தான் ஏற்றாக வேண்டும் இல்லையா?! “எண்குணத்தான்” என்ற பெயர் சிவபிரானுக்கு இன்மையினால் தானே சிவபிழம்பு என்று போற்றப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சூடாமணி நிகண்டை மாற்றி எழுத முயன்றார். சிவன் பெயர் தொகுதியில் “எண்குணத்தான்” என்ற பெயரை சேர்க்க முயன்றார்! இந்த ஒரு சான்றே போதும்!

திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள குறட்ப்பாக்கள் அருகனைக் குறிக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்!

அன்பர்கள் சிந்திக்கவும்!

திரு.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தன் கட்டுரையில் “தாமரைக் கண்ணான்” இந்திரனைக் குறிக்கின்ற சில குறிப்புகளை கொடுத்திருக்கிறார். பார்க்கவும்!

http://www.sishri.org/indran.html



இரா.பானுகுமார்,
சென்னை 44

Date: Sunday, 15 Nov 2009 22:06

http://sivathamiloan.blogspot.com/2009/11/blog-post.html

சிவத்தமிழோன் என்ற நண்பர் தன் வலைப்பதிவில் திருவள்ளுவர் திருவுள்ளம் சைவம் என்று மிக நன்றாகவே எழுதியிருந்தார். படித்தவுடன் ஒவ்வொருக் கருத்துக்கும் என்னுடைய பின்னூட்டை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்,சில பின்னூட்டுக்கள் மற்றும் கொடுத்து அவரின் பதில் எவ்வாறு அமைகிறது என்று பார்க்க நினைத்தேன். பதில்கள் யான் எதிர்ப்பாத்த மாதிரிதான் இருந்தன. அவரிடம் பின்னூட்டு தொடர்வதில் பயன்னில்லை, ஆதலின், என் கருத்தை ஈண்டு பொதுவாக முன் வைக்கிறேன்!

தமிழ்க் குழுமங்களில் நிறைய முறை திருக்குறள் பற்றி அலசியாயிற்று! திருக்குறள் பற்றிய வழி வழி வரும் சில கர்ண கதைகளை முழுமையாக நம்புகிறார்கள். நம்புவதோடு மட்டும் இல்லாமல் அதையே தங்களுக்கு ஆதரவாக குறிக்கவும் செய்கிறார்கள். இதில் சில விதிவிலக்கான அறிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய இணைய தமிழறிஞர்கள் கவனிக்க தவறும் சில கருத்துக்களை சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன்.

திருக்குறள் சமயம் பற்றி ஆராயும் வலைஞர்கள் கவனிக்க வேண்டியவை

1. திருக்குறள் சமயம் அதன் கடவுள் வாழ்த்தில் தான் ஆராய வேண்டும். திருக்குறளில் இந்திரனைப் பற்றி, தாமரைக் கண்ணான் பற்றி, அந்தணர் பற்றி, காமத்துப் பாலை பற்றி சொல்லியிருக்கிறது போன்ற வாதங்கள் ஆராய்ச்சிக்கு எடுபடாது.

2. திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் குறிச்சொற்களான “ஆதிபகவன்”, ”வாலறிவன்”,
“அறவாழி அந்தணன்”, ”ஐந்தவித்தான்”, ”மலர்மிசை ஏகினான்”, “எண்குணத்தான்”, “வேண்டுதல் வேண்டாமையிலான்” போன்ற சொற்றொடர்களுக்கு இலக்கணம் காண முயன்றாலே குறளின் ஆசிரியர் சமயத்தை எளிதில் உள்ளலாம்.

3. கடவுள் வாழ்த்தில் வரும் குறிச் சொற்களைப் பற்றி நிகண்டுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.

4. திருக்குறள் நீதி நூல். அது ஒரு வாழ்வியல் நூலும் கூட. அதில் பலதரப் பட்ட செய்திகள் சொல்லப்பட்டிருக்கும். காட்டாக, ஒரு நாட்டின் மன்னன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் குறளில் (குறள்: 550)மரண தண்டனையைப் பற்றி கூறியிருக்கிறது அதனால், அது சமண நூலாகாது என்று துணிகிறார்கள். இக்குறளில் சமயத்தை ஏன் தேடுகிறார்கள்?

5. தமிழில் தோன்றிய நூற்களில் மிக சிறப்புடைத்து திருக்குறள். அக்குறளை ஏன் சைவத் திருமுறைகளில் ஒன்றாக வைக்கவில்லை என்ற தமிழ்த் தென்றல் திரு.வி.காவின் கேள்விக்கு இதுவரை யாரும் விடைக் கண்டதாகத் தெரியவில்லை. அவரின் கட்டுரையிது.

http://www.treasurehouseofagathiyar.net/37300/37332.htm
http://www.treasurehouseofagathiyar.net/37300/37357.htm

6. சமகால இலக்கியங்கள் குறளின் சமயத்தை ஆராய துணைபுரியும்.


சிவத்தமிழோன் அவரின் கட்டுரைக்கு என் மறுப்புரை


1. அவர்: //பகவன் எனும் சொல் சமணத்துடன் தொடர்பானதாயின் அது சமண நூல் ஆகிவிடுமா என்ன? இன்று வேதம்,வேதாகமம்,வீபூதித் திருநாள் என்பன கிருஷ்தவத்துள் புழக்கத்தில் இருப்பது கண்கூடு!//

என் பதில்: வேதம், வேதாகமம், வீபூதித் திருநாள் போன்ற சொல்லாடல்கள் இன்றைய கிருத்துவர்கள் உபயோகித்தாலும் அவை கிருத்துவ பதங்கள் இல்லை என்ற தங்கள் கருத்தை யான் ஆமோதிக்கிறேன். கிருத்துவ பைபிள் தமிழாக்கம் செய்தவர்கள் சைவத் பெருந்தகையர்கள் என்பதை தாங்கல் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
http://www.treasurehouseofagathiyar.net/27700/27752.htm

இன்று இச்சொற்களை கிருத்துவம் உபயோகித்தாலும் அவைகள் முதன்
முதலிலேயே சைவத் தமிழ் இலக்கியங்களில் விரவி வருவதைக் கொண்டு அவை கிருத்துவ சொற்றொடர்கள் அல்ல என்பதை எளிதில் உள்ளலாம். :-)

அவ்வாறே “ஆதிபகவன்” என்ற சொல்லாட்சி முதன் முதல் சமணத் தமிழ் இலக்கியங்களில் விரவி வந்து பின்னாளில் மற்ற சமயங்கள் எடுத்தாண்டன எனறு யான் சொன்னால் தாங்களும் ஆமோதிப்பீர்கள் என்று கருதுகிறேன். ;-)


2. அவர்: //சமண சமய அறிமுகத்தால் தமிழில் அச்சொல் புழக்கத்தில் இருந்தமையால் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் சமணநூலே திருக்குறள் என்பதற்கு எந்தவித சிந்தனையும் இன்றி இதையே சுட்டுகின்றனர்.//

என் பதில்: அதைத்தான் யானும் கேட்கிறேன். குறளின் கடவுள் அதிகாரத்தில் உள்ள சொற்றொடர்களை ஏன் சைவம் பொன்னேப் போல் எடுத்தாளவில்லை? மாறாக, அவைகள் சமண இலக்கியங்களில் விரவி வருகின்றனவே! ஏன் வரவில்லை என்றால், அவைகள் சமணத் சொற்றொடர்கள்! ஆகையால், சைவ இலக்கியங்களில் விரவி வரவில்லை. என்னை?

3. அவர்: //திருக்குறளுக்கு சமண நூல் எனும் மாயை சூட்டியவர்கள் மறுபிறப்புக் கொள்கையை மறந்துபோனது ஏனென்று விளங்கவே இல்லை.//

யான்: தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. சமணத்தில் “மறுபிறப்பு” இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? மறுபிறப்பில்லை என்றால் ஊழ் இல்லை, சமணக் கோட்பாடே தோன்றியிருக்காது!

4. அவர்: //எண் குணத்தான் என கடவுளை திருக்குறள் கூறுகின்றது.//

யான்: ஆம் கூறுகிறது! தமிழில் தோன்றிய நிகண்டுகளைப் பார்க்கவும். “எண்குணத்தான்” அருகக் கடவுளுக்கே உரியவை என்று அவைகள் பகரும். சிவபிரானுக்கு எண்குணத்தான் என்று யாண்டும் சொல்லப்படவில்லை.

5. அவர்: //சமண, பௌத்தப் புலவர்கள் திருவள்ளுவரையோ அன்றி திருக்குறளையோ போற்றிப் புகழ்ந்ததாக இட்டுக்கட்டிக்கூட காட்டமுடியாது.//

யான்: :-) என்ன ஒரு மறுக்க முடியாத ஆதாரம். தங்களுக்கு சமணத் தமிழ் இலக்கியங்களில் பயிற்சி இல்லை என்பதைத் தான் தங்களின் கூற்று தெரிவிக்கிறது. சொல்ல போனால் நான் கேட்டிருக்கவேண்டிய கேள்வியிது. சமணர்கள் குறளைத் தங்கள் வேதமாகக் கூறியிருக்கிறார்கள். ”எம் ஒத்து”, என்றும் ”தேவர் உரைப்ப தெளிந்தேன்” (காலத்தால் முந்திய ஆதாரம்) என்றும் கூறியிருக்கிறார்கள். மற்ற சமயத்தவர் அவ்வாறு கூறியதாக யான் படித்ததில்லை. அவ்வாறு வரும்மின், சுட்டவும். திருத்திக் கொள்கிறேன் ஐயா!

6. அவர்://பொதுநூலாக எழுத வெளிக்கிட்டபிறகு சிவன் எனும் பெயரை தவிர்த்திருப்பார் வள்ளுவர்.//

யான்: ஆமாம். தாங்கள் சொல்வது சரிதான். ”சிவ” என்ற சொல்லாட்சி முதன் முதல் பயின்று வரும் இலக்கியம் “சிலப்பதிகாரம்”. அந்த சொல்லாட்சியும் ‘அருகப்பதவியைச் சுட்ட” “சிவகதி நாயகன்” என்று இளங்கோவடிகள் கூறியிருக்கிறார். ”பிறவாயாக்கை பெரியோன்” என்று தான் சிவனும் போற்றப்படுகிறாரே தவிர “சிவனுக்கு” சிவன் என்று பயின்று வரவில்லை.

7. அவர்: //எனவே உள்ளீடு இல்லாத சமயங்களின் உரைகளை அச்சமயங்களின் நூல்களை படித்து கேட்டு காலத்தை வீணாக்குவது தவறு என்கின்ற சைவ சித்தாந்த மரபில் திருக்குறளை எடுத்துக்காட்டுகளாக நேரடியாக பயன்படுத்தியிருப்பதில் இருந்து திருக்குறள் சமணநூல் அல்ல என்பதும் சைவநூலே என்பதும் தெளிவாகிறது.//

யான்:
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ பெரிந்தகையான சிவாமிநாத தேசிகர் எழுதிய “இலக்கணக் கொத்து” என்ற நூலைப் படித்திருக்கிறீர்களா?
http://www.treasurehouseofagathiyar.net/27900/27989.htm


8. அவர்: //சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்ற சமயசார்பற்ற தன்மை கொண்டு இதை உறுதிசெய்வர்.//

யான்: அப்படியா? சிலப்பதிகாரம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இளங்கோவடிகள் சைவப் புலவர் எனின், அருகருக்கு ஏன் குறளின் கடவுள் வாழ்த்தில் வரும் குறிச்சொற்களைப் வைத்துப் போற்றிப் புகழ்ந்துப் பாடியிருக்கிறார்?

9. அவர்: //திருக்குறள் ஏனைய சமயங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கொண்டது என்பதையும் சைவ சித்தாந்த நூலே என்பதையும் திருக்குறளை ஆராய்வுசெய்து வாலையானந்த அடிகள் 1926- 27களில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்த திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் நூல் மெய்கண்டதேவரின் குருபூசையன்று மறுபதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது.//

யான்: திருக்குறள் சமண நூலே! சமண தமிழ் நூல்களை பின்னாளில் மாற்ற முயன்ற வரலாறு தமிழ் அறிஞர்கள் நன்கறிவார்கள்.

வாழிய நல்லறம்! வளர்க திருவறம்!!


இரா.பானுகுமார், (இரா.பா)
சென்னை.

Date: Sunday, 11 Oct 2009 19:02

பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
                     - திருக்குறள் (322)

இக்குறள் குறித்து மின்தமிழ் குழுமத்தில் அலசப்படுகிறது. சுட்டியைப்
பார்க்கவும்.
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/d719a8cfe875af3c/fd09d3b0a544fb9c#fd09d3b0a544fb9c


இக்குறளில் “நூலோர்” என்பது யாரைக் குறிக்கிறது என்பது தான் இங்கே விவாதப் பொருள்.

எந்த குறளின் கருத்தையும் அறியும் முன் அக்குறள் எந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இக்குறள்
கொல்லாமை என்னும் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொள்க. இது நிற்க.

"பரஸ்பரப்கிரகோ ஜீவானாம்" - என்பது ஆச்சாரியார் உமாசுவாமி அருளிய "தத்வார்த்த சூத்திரம்”. இப்பாட்டின் பொருள்: பகிர்ந்து உண்டு, எல்லா
உயிர்களையும் காத்தலே உயிரின் நோக்கம். இதன் எதிரொலியே குறளின் “பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்” என்பது.

இன்னுமொரு எ.கா:

”பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம்

நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

மகாவீரர் காலத்திற்கு பிறகு, ஜைன ஆகமங்கள் தொகுக்கப்பட்டன. இருசாரார்க்கும் (இல்லறத்தார், துறவறத்தார்), பொதுவாக “கொல்லாமையே” தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது. “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்ற குறள் இங்கு கருதத்தக்கது.

இக்குறளுக்கு பரிமேலழகர், “அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்” என்று உரை செய்திருக்கிறார். இது பொருந்தாதாம்! இங்கு துறவறத்தார்க்கு சொல்லப்பட்டதாக பொருள் படும்படி, வலிந்து பொருள் கூறுகிறார். இஃது சமணக் கொள்கையை மறைக்கவெனில் வேறில்லை!

இரா.பானுகுமார்,
சென்னை

Date: Monday, 28 Sep 2009 15:44

ஜினவாணி (சரஸ்வதி)

உபாத்தியாயர் மற்றும் ஜினசுருதி

கல்விக்கு ஏற்றம் கொடுத்து இவ்வுலகில் மனிதம் நிலைப் பெற முயன்ற சமயங்களில் சமணம் முதன்மையானது என்றால் அது மிகையாகாது! சமணத்தில் கற்றல், கற்பித்தல் ஆகிய செயல்கள் புண்ணியச் செயல்களாக (நற்கட்டு) கருதப்படுகிறது. சமணகர்கள் தினம் வணங்கவேண்டிய
அரகந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள், ஜின தர்மம், ஜின சுருதம், ஜின சைத்தியம், ஜின சைத்தியாலயம் என்னும் ஒன்பது தேவதைகளுள் உபாத்தியாயர் - கற்பிப்பவர் (வாத்தியார் என்று பின்னாளில் மருவியது) மற்றும் “ஜினசுருதம்” (ஆகமங்களைக் கற்றல்) என்னும் ஜினாகமங்களும் குறிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜினசுருதம், ஜினசுருதி என்ற பெயர்கள் ஜைன ஆகமங்களைக் குறிக்கும்.

ஜினசுருதம்

தீர்த்தங்கரர்கள் வாலறிவு (கேவல ஞானம்) என்னும் முழுதுணர் ஞானத்தை அடைந்தவுடன், தான் பெற்ற வரம்பற்ற அறிவையையும், உயிர்கள்
உய்ய அடைய வேண்டிய அறத்தையும் உரைக்க தேவேந்திரனால் ஏற்படுத்தப்படும் “சமவசரணம்” என்னும் அறஉபதேச மண்டபத்தில் தியான ரூபியாக எழுந்தருளுவார்கள். அப்போது அவரிகளிடமிருந்து திவ்யமயமான ஒலி பிறக்கும். இதுவே “திவ்யதொனி” எனப்படும். தீர்த்தங்கரர்கள் உதடுகள் அசையாமலே இந்த த்வனி பிறக்கின்றன. அவ்வாறு வெளிவரும் ஓசையானது கம்பிரமாகவும்,மனத்திற்கு இனிமையாகவும்,குற்றமற்றதாகவும்,பூவுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கேட்கும்படியாகவும் இருக்கும். இது தீர்த்தங்கரர்களுக்கு ஏற்படும் எண்வகை அதிசயங்களில் ஒன்று! கணதரர்கள் இவற்றின் பயன்களை பின்னர் வரும் சந்ததிகளுக்கும் பயன்படும் வண்ணம் ஆகமங்களாக தொகுத்தார்கள். அப்படித் தொகுத்த திருநாளே “சுருத பஞ்சமி” என்று குறிக்கப்படுகிறது.

சரஸ்வதி அல்லது ஆகமஸ்வரூபி

”திவ்யதொனி” என்பது பெண்பால் ஈற்றுச் சொல்லாகிய இகரத்தில் முடிவதால் ஜினாகமங்களைப் பெண்ணாக உருவகம் செய்து அவற்றுக்கு ”ஜினவாணி” என்றும் ஒலியாக வெளிப்பட்டதால் “வாக்தேவி” எனவும் குறிப்பிட்டார்கள்.மேலும், ஆகமங்ள் கூறும் அறங்கள் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக கருதப்படும் நீருடன் ஒப்புமைப்படுத்தப்பட்டன. எப்படி நீர் மேட்டிலிருந்து கீழ் நோக்கி பயணிக்குமோ, உயர்ந்த உன்னத இடத்தையடைந்த தீர்த்தங்கரர்கள் வாயிலாக எளியநிலையில் உள்ள மனதர்களுக்கு அவைகள் பாய்ந்து வருவதால் அவற்றை நீருடன் ஒப்புமை பெறதக்கவகையில் “சரஸ்வதி” என்றும் அழைக்கப்பட்டது. இவ்வாகமங்கள் மனித வாழ்க்கைக்கு “ஐஸ்வர்யமாக” கருத்தட்டதால் இவை “ஜினஐஸ்வரயம்” என்றும் அழைக்கப்பட்டது.

பெண்ணாக உருவகித்தல்

நிகழ்க்கால தீர்த்தங்கரர்களில் முதல்வராகக் கருதப்படுபவர் “ஆதிநாதர்” என்று அழைக்கப்படும் “ஆதிபகவ”னாவார். இவரே முதன் முதல் எண்களையும், எழுத்துக்களையும் முறையே தம் மகள்களான பிராம்மி, சுந்தரி என்பவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். (இன்றும் கல்வெட்டில் எழுதப்படுகிற எழுத்துக்கு “பிராம்மி” என அழைக்கப்படுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது) இதையே “எண்ணோடு எழுத்திரண்டும் இயம்பிய ஆதிமூர்த்தி” என்று சூடாமணி நிகண்டு குறிக்கும். இதனால் சமணம் கல்வியை பெண்ணாக உருவகப்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.

வளரும்....


இரா.பானுகுமார்,
சென்னை 44

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "வாக்குதேவி, Tamil Ja..."
 

Date: Thursday, 13 Mar 2008 20:33

ஆதிபகவன் அருகனைக் குறிக்கும்!
- மஞ்சை வசந்தன்

கடவுள் வாழ்த்து என்பது சரியா?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - திருக்குறள் (1)

எழுத்துக்களில் எல்லாம் ‘அ’ என்னும் எழுத்தை முதலாக உடையன. அதுபோல், உலகம் ஆதிபகவனைக் முதலாகவுடையது என்று கடவுள் நம்பிக்கையாளர்கள் கருத்துக் கூறுகிறார்கள். ஆதிபகவன் என்பதற்கு கடவுள் என்று சிலரும், இறைவன் என்று சிலரும் பொருள் கூறி முறையே, கடவுள் வாழ்த்து என்றும் இறை வாழ்த்து என்றும் இந்த அதிகாரத்திற்குத் தலைப்பு சூட்டியுள்ளனர்.

ஆனால், இவ்வதிகாரத்திலுள்ள குறட்பாக்களை நுட்பமாக ஆய்வு செய்தால், இவ்வாறு பொருள் கொள்வது சரியன்று என்பது தெளிவாக விளங்கும்.

இதே அதிகாரத்தில்,

“தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது - திருக்குறள் (7)

தனக்கு உவமை இல்லாதது கடவுள் (இறை) என்றால் உவமையில்லாத கடவுளுக்கு “அ” எழுத்தை உவமை சொல்லி, முதல் குறள் எப்படி அமைக்கப்பட்டிருக்க முடியும்? அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பின் அது மேற்கண்ட குறளுக்கு முரண் அல்லவா? அப்படியென்றால், உவமையில்லாத கடவுளுக்கு உவமை கூறி, முதல் குறள் அமைக்கப்பட்டிருக்க முடியாது என்பது உறுதியாகிறது.

அதன்படி நோக்கின் முதல் குறளுக்கு உண்மையான வேறு பொருள் இருக்க வேண்டும். அந்த உண்மைப் பொருள் என்னவாக இருக்கும்? அதை அறிய, ஆதிபகவன் கடவுளைக் குறிப்பதா? அல்லது வரலாற்றில் வாழ்ந்த தலைவரைக் குறிப்பதா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளவேண்டும். வரலாற்றுச் சான்றுகளின் படியும், ஆதிபகவன் என்பவர் முதலாம் தீர்த்தங்கரராகிய அருகதேவர் (இடபதேவர்) ஆவார். அவருக்குப் பின் 23 தீர்த்தங்கரர்கள் இருந்தமையால், முதல் தீர்த்தங்கரர் ஆகிய இடபதேவருக்கு “ஆதிபகவன்” என்று பெயர் வந்தது. இது வரலாற்று உண்மை.

இவர்தான் முதன் முதலில் உலகுக்கு எழுத்துக்களைக் கற்பித்தார் என்பது சமணக் கொள்கை. அதன்படி நோக்கின், ‘அ’ என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட அனைத்து எழுத்துக்களும், ஆதி பகவனை மூலமாகக் கொண்டவை என்பது பொருள்.

அதாவது ‘அ’ முதலிய எழுத்துக்கள் எல்லாம் ஆதிபகவனை முதலாக உடையன “ஆதி பகவனிடமிருந்து வந்தவை) என்பதுதான் இக்குறளுக்குப் பொருள். இதுவே சரியான பொருள். அப்படிப் பொருள் கொள்ளும் போது, முரண் ஏதும் இல்லாத, வரலாற்றுக்கிசைந்த, சான்றுகளுடன் கூடிய பொருளாக அது அமையும். இங்கு ஏழாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆக, இக்குறளுக்கு உலகில் அகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஆதிபகவனிடம் தோன்றியது என்பதே சரியான பொருள் ஆகும். அதாவது, உலகுக்கு அறிவை வழங்கியவர் ஆதிபகவன் என்பது இக்குறளின் நுண்பொருள்.

எழுத்துக்களையும், எண்களையும், உழவித் தொழிலையும், உலகுக்குக் கொடுத்தவர் (கற்பித்தவர்) ஆதிபகவன் என்பது சமணர் கொள்கை. இம்மூன்றும் அவரே மூலகர்த்தாவாகக் கொள்ளப்பட்டார். அவரே எண்ணின் மூலம், அவரே எழுத்தின் மூலம். அவரே உழவின் மூலம் என சமணர்களால் போற்றப்பட்டவர் என்பதை ஆய்வில் கொள்ளவேண்டும்.

பரிமேலழகர் போன்ற உரையாளர் இக்குறளுக்கு உரை எழுதும் போது, ஏனைய எழுத்துக்களுக்கெல்லாம் ‘அ’ எழுத்தே அடிப்படை; அதிலிருந்தே மற்றய எழுத்துக்கள் பிறக்கின்றன. அதுபோல், கடவுள் உலகத் தோற்றத்திற்கு அடிப்படை என்று பொருள் கொள்கின்றனர். இவ்வாறு பொருள் கொள்வது முற்றிலும் சரியன்று.

காரணம், எழுத்துக்களின் முதல் எழுத்துத் தான் ‘அ’ எழுத்தே தவிர, மற்ற எழுத்துக்களின் தோற்றத்திற்கு ‘அ’ எழுத்து அடிப்படையானதன்று.‘உ’ என்ற எழுத்துக்கு ‘அ’ எழுத்து எப்படி அடிப்படையாக அமைய முடியும். ‘உ’ எழுத்து தோன்ற ‘அ’ எழுத்து அடிப்படையாக அமைவதில்லை.

“அகரம் ஏனைய எல்லா எழுத்துக்களோடும் நுண்ணியதாக கலந்தும், எல்லா மெய் எழுத்துக்களையும் இயக்கியும் நிற்றல் போல், இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராயும், உயிரற்ற பொருட்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன்” என்பது இக்குறளின் பொருள் என்கிறார். பாவாணரின் இக்கருத்து முற்றிலும் சரியன்று.

‘உ’ எழுத்தில் ‘அ’ எழுத்து எங்ஙனம் நுண்ணியதாகக் கலந்திருக்க முடியும்?
‘அ’ என்பதும் உயிர் எழுத்து.
‘உ’ என்பதும் உயிர் எழுத்து.

இரண்டும் தனித்து நிற்கவல்லன. அதன் காரணம் பற்றியே அவை உயிர் எழுத்து எனப்பெயர் பெற்றன. ஒர் உயிர் இன்னொரு உயிருடன் கலவாது. உயிர் மெய்யுடன் மட்டுமே கலக்கும். ஒவ்வொரு உயிரும் மெய்யெழுதுடன் சேர்ந்து உயிர் மெய்யெழுத்தை உருவாக்கும். அப்படியிருக்க ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கொள்வதும்; கூறுவதும் எப்படிச் சரியாகும்?

‘இ’ என்ற எழுத்தை எப்படி உச்சரித்தாலும் ‘அ’ ஒலி நுண்ணியதாய்க் கலப்பதை; கலந்திருப்பதை அறிய முடியவில்லையே.
க்+அ=க என்று சொல்லும்பொழுது ‘க’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளது வெளிப்படும். ஆனால், ‘இ’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளதை எவ்வாறு புலப்படுத்த இயலும்? அல்லது எவ்வாறு புரிந்துக் கொள்ள இயலும்?

எந்தவொரு எழுத்தையும் உச்சரிக்கும் போது வாய் திறந்திருக்கிறோம். வாய்த் திறந்தாலே அங்கு ‘அ’ என்பது நுண்ணியமாய் ஒலிக்கும். எனவே, எல்லா எழுத்துக்களிலும் ‘அ’ நுண்மையாகக் கலந்துள்ளது என்று கூறலாம் எனச் சிலர் கருதுவர். அங்காந்த வாயே அகரத்தின் இடமாயினும் (தொல்காப்பியப்படி), வாய்ந்திறந்தாலே ‘அ’ ஒலிப்பதாகத் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல. எழுத்தை நினையாது வாய்த்திறந்து பார்த்தால், ‘அ’ ஒலிப்பதைத் தோன்றிய தோற்றங்கூட இருக்காது.
வாய்த்திறப்பதால் ஒலி எழுவதில்லை. அணு அளவாவது ஒலிப்பதற்குரிய முயற்சி மேற்கொண்டால் தான் ஓசை எழும். இல்லையேல் எழாது என்பதே உண்மை. வாய்த்திறந்து ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மையை அறியலாம்.

“நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்டம் உச்ச
மூக்கற் றிதழ்நா பல்வணத் தொழியின்
வெவ்வேறு எழுத்தொலியாய் வரங்பிறப்பே” 
- நன்னூல்

எனவே, ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கூறுவது சரியன்று.

அதன் வழி நோக்கின், ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களுக்கும் மூலமாக அமைவதாய்ப் பொருள் கூறுவது பொருந்தாது. அதேபோல் ஆதிபகவன் என்பதை இரு பெயரெட்டுப் பண்புத் தொகை என்று பரிமேலழகர் கொள்வதும் சரியன்று. அதாவது, ஆதி எனினும் கடவுள், பகவன் எனினும் கடவுள் எனவே, கடவுளைக் குறிக்கும் ‘ஆதி’ என்ற பெயரும் பகவன் என்ற பெயரும் ஒட்டி ஆதிபகவன் ஆயிற்று எனப்து பரிமேலழகர் விளக்கம்.

இது பெயரொட்டுப் பண்புத்தொகை என்பது ஒரே பண்பை கொண்ட இரு சொற்கள் ஒட்டி இருந்தால் மட்டுமே பொருந்தும்.
எடுத்துக்காட்டாக ‘சாரைப்பாம்பு’ சாரையென்றாலும் பாம்பு என்றாலும் ஒன்றேயாகும். இங்கு சாரை, பாம்பு என்று சொற்கள் ஒட்டி இரு பெயரொட்டு பண்புத்தொகை ஆகும்.

ஆனால், ‘ஆதிபகவன்’ எனபதில் ஆதி என்பதும் பகவன் என்பதும் வெவ்வேறு சொற்கள். ஆதிமூலம் இரு பெயரொட்டு பண்புத்தொகையாகின்றன. ஆனால், ஆதிபகவன் என்பதில் ஆதி என்பதற்குப் பொருள் வேறு. பகவன் என்பதற்குப் பொருள் வேறு.ஆதியாகிய பகவன் என்று அது விரியாது. காரணம், ஆதிபகவன் என்பது காரண இடுகுறிப் பெயராய் அமைந்து, ஒரு பெயராய் ஆனதாகும்.

மேலும் பரிமேலழகர், பதவுரை கூறும்போது ஆதி பகவனாகிய என்று விரித்துப் பண்புத் தொகையாக்குகிறார். கருத்துக் கூறும்போது ஆதியாகிய பகவன் என்று விரித்து இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாக்குகிறார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இவ்வாறு ஏன் அவர் செய்கிறார் என்றால், ‘ஆதி பகவன்’ என்பதை இரு பெயரொட்டு பண்புத்தொகையாக்குவதன் மூலம், ஆதிபகவன் என்ற சொல்லைக் கடவுளுக்குப் பொருத்திக் காட்டலாம் என்பதற்காகவே, அதாவது, ஆதி என்றாலும் கடவுள், பகவன் என்றாலும் கடவுள், கடவுளைக் குறிக்கும் இவ்விருப் பெயர்களும் ஒட்டி ஆதிபகவன் ஆயிற்று என்று கூறுவதன் மூலம், இக்குறளைக் கடவுள் மயமாக்கிவிடலாம் என்ற முயற்சிதான். ஆனால், இது தவறு என்பதை விளக்குவதற்காகத்தான் மேலே விரிவாக விளக்கினேன்.

இருபெயரொட்டுப் பண்புத் தொகையென்றால் ஆதிப்பகவன் என்று இருக்கவேண்டும். காரணம் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லெழுத்து மிகும். ஆனால், குறளில் ஆதிபகவன் என்றெ உள்ளது. ஆகவே, அது இருபெயரொட்டுப் பண்புத்தொகை அல்ல என்பது உறுதி செய்யப்படுவதை அறிய வேண்டும்.

ஆதிபகவன் என்றால் வாழ்ந்த தலைவர்களுள் ஆதியானவர் என்பது மட்டுந்தான் பொருளேயன்றி, அவர் உலகத்திற்கு மூலமானவர் அல்ல.எனவே, ஆதிபகவன் என்பது வரலாற்றில் வாழ்ந்த அருகதேவருக்குப் பொருந்துவதேயன்றி, புலனாகாத கடவுளுக்குப் பொருந்துவதன்று.

மேலும், எழுத்துக்கள் உருவானது அருக தேவனாகிய ஆதிபகவனிடம் என்று பொருள் கொள்ள ஆதாரங்கள் உள்ளன.

“விறுப்புறு பொன்எயிற்குள்
விளங்குவெண் ணெழுத்திரண்டும்
பரப்பிய ஆதிமூர்த்தி”

என்று மண்டல புருடர் தம் “சூடாமணி நிகண்டில்” 4ஆவது தொகுதியிலும்,

“கோதில்வருகன் திகம்பரம் எண்குணன் முக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்”

என்று கயாதர நிகண்டிலும், அருகதேவரே ஆதிபகவன் என்பதும், அவரே எழுத்துக்களை உலகிற்குக் கற்பித்தார் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி, முதல் அதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ள ‘எண்குணன்’, ‘ஆதிபகவன்’, ‘அறவாழி அந்தணன்’ என்பவை அருகதேவரையே குறிப்பன என்பதையும் மேற்கண்டவர்கள் உறுதி செய்கின்றனர்.

மேலும், “ஆதிபகவனை அருகனை” என திருக்கலம்பகம் (செய்யுள் 109) சுட்டுகிறது. எனவே ஆதிபகவன் என்பது அருகதேவரையே குறிக்கிறது என்பது அய்யத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது.

எனவே முதல் குறளுக்கு, உலகில் அகரத்தை முதலாகவுடைய எழுத்துக்கள் எல்லாம் ஆதிபகவனிடமிருந்து தோன்றியவை என்பதே பொருள். அறிவை உலகிற்குத் தந்தவர் ஆதிபகவன் என்பதே அதன் உட்பொருள்.

முற்றும்.


(இக்குறளுளைப் பற்றிய என் பார்வையைப் பிறகு எழுதுகிறேன்)


இரா.பானுகுமார்,
சென்னை.

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "தமிழ்ச்சமணம், ��..."
 

Date: Saturday, 16 Feb 2008 22:11

அறவாழி அந்தணன்

மலர்மிசை ஏகினான் என்ற கட்டுரையை எழுதிய போது தனிப்பட்ட மடல்கள் நிறைய வந்தன. சில பாராட்டியும் சில எதிர்த்தும் வந்தன. ஒரு அன்பர் அறவாழி அந்தணன் என்ற தொடர் அருகனுக்கு எவ்வாறு பொருந்தும் என்று எதிர்க் கேள்வி கேட்டிருந்தார். திருக்குறளில் ஒரு சில குறட்பாக்கள் சமணத்தைக் குறித்திருந்தாலும் சில குறட்கள் சமணத்துக்கு பொருந்துவதாக இல்லையே? என்று தமது மடலில் குறித்திருந்தார். அவர் மேலும் ‘அறவாழி அந்தணன்” என்ற சொற்றொடரில் இருக்கும் “அந்தணன்” என்ற சொல் எப்படி அருகனைக் குறிக்கும்? என்று வினவியிருந்தார். அவருக்கு பதில் மடல் எழுதியக் கையோடு எழுத ஆரம்பித்தக் கட்டுரைத் தான் இது!

அறவாழி

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது” - திருக்குறள் (8)

மேலே கூறப்பட்ட குறளில் வரும் “அறவாழி அந்தணன்” என்றத் தொடர்தான் இங்கு விவாதப் பொருளாக்கப்பட்டு வந்திருக்கிறது. இச்சொற்றொடருக்கு பொருள் என்ன?

1. அறவாழி அந்தணன் - அறக் கடலாகிய அந்தணன் என்று ஒன்றும்,
2. அறவாழி அந்தணன் - அறச் சக்கரத்தை உடைய அந்தணன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.

ஆனாலும் மேலே சொன்ன குறளுக்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பொருத்தே அந்த குறளின் முழுப் பொருளையும் உணர்ந்துக் கொள்ள முடியும்.
முதலாவது எடுத்துக்கொள்வோம். அறவாழி = அறக்கடல் என்று பொருள் கொண்டால்; அறக்குணத்தைக் கொண்ட அந்தணனை (கடவுளை) பற்றினால் (புணை) பிற (மற்ற) கடல்களை நீந்துதல் எளிது. இதையே புரியும்படி எழுதுகிறேன்.
“ அறக்கடலாகிய அந்தணனனை பற்றினால் பிறத்தலாகிய கடலைக் கடக்கலாம் என்றும் அப்படி பற்றாதவர்க்கு பிறவு ஆழியைக் கடப்பதன்பது அரிதாம்’.

இது பொருந்தாதாம் எப்படி?

அந்தணனை (கடவுளை) அறக்கடலாக உருவகித்தால் அவர் பாதத்தை எப்படி புணையாக அல்லது தெப்பமாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கடலை உருவகித்து கடலைக் கடக்கச் சொல்வது என்பது பொருள் குற்றம். பொருந்தாது என்னை?

சரி. இரண்டாவதுப் பொருளை எடுத்துக்கொள்வோம். அறவாழி = அற சக்கரம் என்று பொருள் கொண்டால்; அற சக்கரத்தை உடைய அந்தணனை (கடவுளை) பற்றினால் பிறவிக் கடலைக் கடக்கலாம். அஃதாவது,

“தர்ம சக்கரத்தையுடைய அந்தணனின் தாள் பற்றினால், பிறவிக் கடலைக் கடக்கலாம் என்றும் அப்படி பற்றாதவர்களுக்கு அக்கடலைக் கடக்க முடியாது என்பதாம்”

இங்கே அற சக்கரத்தையுடைய அந்தணனின் தாள் புணையாக உருவகித்தால், பிறவாழி; பிறவியாகிய கடலை நீந்திக் கரையேரலாம் என்பது பொருத்தமாக இருக்குமன்றோ!

இது நிற்க!

அந்தணன்

இக்குறளில் உள்ள அந்தணன் என்ற சொல் யாரைக் குறிக்கும்?
அந்தணன் என்ற சொல் வைதீக வேதியர்களைக் குறிக்கிறது என்று பலர் தவறாகப் பொருள் கொள்கிறார்கள். அப்படித்தான் அந்த அன்பரும் பொருள் கொண்டு என்னோடு மடலாடினார். அவர் மட்டுமன்று தமிழ்க் கற்ற பெரியோர்களையும் அச்சொல் மயக்கியே வந்திருக்கிறது.

அந்தணர் என்போர் அறவோர்

திருக்குறளில் நீத்தார் பெருமையென்னும் அதிகாரத்தில் 30ஆவது குறள்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்”

அறவோரே அந்தணர்; அத்தோடு இல்லாமல் எந்த உயிருக்கும் ஒரு தீங்கும் செய்யாதவரே அந்தணர் என்று அழுத்தம் திருத்தமாக குறள் குறித்திருக்கிறது. அஃதாவது, யாரொருவர் எந்த உயிர்களுக்கு தீங்கு செய்யாமல், அவற்றை யாதொன்றையும் கருதிக் கொல்லாமல் இருக்கிறாரோ அவரே அந்தணர் என்றுப் போற்றப்படுகிறார். இது யான் சொல்லவில்லை. அந்தக் குறள் அப்படித்தான் அந்தணருக்கு இலக்கணம் வகுத்திருக்கிறது. என்னை?

இதனால் அந்தணர்கள் எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாதவர்கள் என்பது அங்கை நெல்லிக்கனி!

அந்தணர் என்ற சொல் அக்காலத்தில் (குறள் எழுந்தக் காலக்கட்டத்தில்) நிச்சயம் வைதீக பிராமணர்களைக் குறித்திருக்காது என்பது நிதர்சனம். அக்கால வைதிகர்கள் வேத யாகங்களில் மிருகங்களை பலியிட்டிருக்கிறார்கள்.(பார்க்க: நீலகேசி) இதனால் அந்தணன் என்ற சொல் அவர்களைக் குறிக்கவில்லை என்பது பெறப்படுகிறது.

ஈண்டு முக்கியமான ஒன்றை குறித்துக் கொள்ளவேண்டுகிறேன். அந்தணன் என்றால் அது வைதிக பிராமணனைத் தான் குறிக்கும் என்று எடுத்துக் கொண்டால், அப்பகுப்பு முறை ( வருண வேறுபாடு) மனிதர்களுக்கு மட்டுமே உரியது. இறைவன் எல்லாவற்றையும் கடந்தவர். அவரை அந்தணரோடுத் தொடர்புப்படுத்த முடியாது. இல்லையா?

அறவாழி அந்தணன்

அற சக்கரத்தையுடைய அல்லது தரும சக்கரத்தையுடைய அருகக் கடவுளின் தாளை பாதத்தை பற்றாதவர்களுக்கு பிறவியாகிய கடலை (சம்சார கடலை) கடப்பதன்பது அரிது. இதுவே நேரிதன் உரை. உண்மையான பொருளும் கூட.
இங்கே தர்ம சக்கரத்தை உடைய அருகனின் பாதத்தை புணையாக உருவகித்து, பிறவியைக் கடலாக உருவகித்தால் அந்தக் குறளின் பொருளை நன்கு பருகலாம்.

தர்ம சக்கரம் (அறவாழி)

அருகப் பெருமான் எண்வகை சிறப்பை உடையவர்.

1. அசோக மரம் (பிண்டி)
2. தேவரின் மலர் பொழிவு (மலர் துவுதல்)
3. திவ்வியத் தொனி ( உதடுகள் அசையாமல் வரும் ஒலி)
4. சாமரம்
5. சிம்மாசனம் (அரியாசனம்)
6. தருமச் சக்கரம்
7. ஒளி மண்டலம்
8. முக்குடை

மேலே சொல்லப் பட்ட எட்டு சிறப்புகளில் தருமச் சக்கரமும் ஒன்று. (புத்தபிரானுக்கும் இக்குறள் பொருந்தும்)

இலக்கிய ஆதாரங்கள்

“தூண்டுதிண் டேருருள் போலச் சுழன்றுதொல் யோனிகட்கே
மீண்கொண் டேகுமவ் வெவ்வினைக் கஞ்சிநின் மெய்ச்சரணம்
பூண்டு கொண்டேனினிப் போகவொட் டேன்பொரு ளாகவென்னை
யாண்டுகொண் டாயற வாழிகொண் டேவென்ற வந்தணனே”
- திருநூற்றந்தாதி (27)

“ஆதியங் கட்விள் அறவாழி அந்தணன்
அரியணைச் செல்வன் அருளாழி வேந்தன்”
- திவாகர நிகண்டு

“அருகன் எண்குணன் நிச்சிந்தன்
அறவாழி வேந்தன் வாமன்..”
- சூடாமணி நிகண்டு

“அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்..”
- பிங்கல நிகண்டு

“மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி* கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே”
- திருக்கலம்பகம் (25)

(இப்பாடலின் பொருள் புரியவில்லை என்றால் கேளுங்கள் எழுதுகிறேன். ஏன்னென்றால், இப்பாடல் திருக்குறள் ஆராய்வோருக்கு மிக முக்கியமான ஒன்று. (* நேமி என்றால் சக்கரம்)

“களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர்
அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்
விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே”
- சீவக சிந்தாமணி (1611)


இவ்வாறு நிறைய இலக்கிய சான்றுகள் காட்டலாம். முடிபாக, யான் நிறைய முறை சொன்னாற்போல் அருக பகவான், நம்மை போல் பிறந்து, உலக மக்கள் உய்ய நல்லறம் பகர்ந்தார். அவரே கொல்லாமை முதலிய அறங்களை பகர்ந்தார், ஆதலில் அந்தணன் என்ற சொல் அருகக் கடவுளைத் தவிர வேறு கடவுளுக்கு பொருந்தாது. ஆராய்ச்சி அறிஞர் மயிலையார் சொல்வார், அறவாழி அந்தணன் என்ற தொடர் மற்ற கடவுளர்களை, ஏன் திருமாலையும் குறிக்காது என்று சான்றுக் காட்டி எழுதியிருக்கிறார். அக்கட்டுரையைக் கீழே உள்ள வலைச்சுட்டியில் படிக்கவும்.


http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww--?cq=1&p;=11
http://www.treasurehouseofagathiyar.net/27800/27809.htm
http://www.treasurehouseofagathiyar.net/27900/27927.htm


இரா.பானுகுமார்,
சென்னை

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "Tamil Jains, Jainism, Thirukural, சம..."
 

தங்கள் நிபுணத்துவம் இழப்பர்.


 

Date: Monday, 06 Jun 2011 15:13

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்
- திருக்குறள் – துறவு – 346

இக்குறளில் வரும் “வானோர்க்குயர்ந்த உலகம் புகும்” என்ற
தொடர் மிகவும் முக்கியமானது. இத்தொடரில், அண்டவியல்
பற்றியக் குறிப்பு வருகிறது. ”வானோர்க்கும் மேலே உள்ள
உலகத்தில் புகும்” என்று சொல்லும் போது, வானோர்கள்
உலகம் யாது? அவர்களின் உலகத்திற்கும் மேலே உள்ள
உலகம் யாது? என்பனப் போன்ற கேள்விகள் எழுவது
இயற்கைத்தான். அவற்றுக்கு விடைக் காண வேண்டியது
முக்கியம்.

அவற்றைப் பார்க்கும் முன் இக்குறளுக்கு உரையாசிரியர்கள்
என்ன சொல்கிறார்கள் என்றுப் பார்த்துவிட்டு மேல் செல்லலாம்.

முதலில் பரிமேலழகர்

உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான்
அல்லாத உடம்பை யான் என்றும் தன்னோடு இயைபு இல்லாத
பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச்
செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய
வீட்டுலகத்தை எய்தும்.

மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர் பால்
பெற்ற உறுதிமொழிகளானும் யோகப் பயிற்சியானும் அவை
’யான்’, ‘எனது’ அன்மைதெளிந்து, அவற்றின்கண் பற்றை
விடுதல் சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான்
இவ் இருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடு உளது
என்பது கூறப்பட்டது.

அப்படியே மணக்குடவரையும் படித்துவிடுவோம்,

உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை
அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.

பரிமேலழகர் உரைவேறுபாடு

வழக்கம் போலவே இக்குறளிலும் தன் கைவண்ணத்தைக்
காட்டியிருக்கிறார் நம்ம பரி. அவர் உரை விரிவாகக் கூறப்பட்டிருப்பதுப்
போல் தோன்றினாலும், உண்மை பொருளை மறைத்துக் கூறியிருக்கிறார்.

எவ்வாறெனின்,

“வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு
அரிய வீட்டுலகத்தை எய்தும்” என்கிறார். மேலோட்டமாகப்
பார்த்தால் பொருள் சரியாகயிருப்பதுபோலத் தான் தோன்றும்
ஆனால், கூர்ந்து நோக்கினால் அதில் அவர் கையாண்ட பொருள்
மாற்றம் தெரியவரும்.

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் – இதற்கு வானோர்கள்
(தேவர்கள்) வசிக்கும் ”உலகத்திற்கும்” உயர்ந்த உலகம் புகும்
என்று தான் பொருள். ”வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகம்
எய்தும்” என்று அவர் உரை செய்திருப்பது இங்குப் பொருந்தாது.
அவ்வாறு உரைச் செய்யும் போது அவற்றின் நேரான பொருள்
மறைந்துப் போய் விடுகிறது. இவற்றை ஆராய்வோம்.

மணக்குடவர் உரை நேரிதன் பொருள் உரைக்கிறது. ” தேவர்க்கு
மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்” தேவர்க்கு மேலாகிய –
தேவர்கள் உறையும் உலகத்திற்கும் மேலாகிய உள்ள உலகத்தின்
கண்ணே செல்லும். என்பதுதான் சிறப்பான உரை.

சமண அண்டவியல்

சமணக் கோட்பாட்டின்படி, உயரின் தன்மைகளில், மேல் எழுப்பிச்
செல்லும் இயல்பும் ஒன்று. இதை

“வினையற விட்ட போழ்தின் வெடித்த ஏராண்டம் போல
நினைவரும் குணங்கள் எட்டும் நிறைந்து மேல் நோக்கி.. ”

என்று மேருமந்தர புராணம் கூறும்.

உயிரானது தன் வினைக் கட்டுக்களிலிருந்து நீங்கி, தன் சொரூபத்தை
உணரும் போது, மூவுலனின் உச்சியாகிய சிலாத்தலம் என்னும்
இடத்தில் போய் நீடு வாழும்/ நிலையாக தங்கும். இதை

“முனிவரும் உலகம் மூன்றும் இறைஞ்ச மூவுலகின் உச்சி
கனைகழல் அரசே நிற்றல் கைவலம் ஆகும் கண்டாய்”

என்று மேருமந்தர புராணம் கூறும்.

இச்சிலாத்தலம் வீடு, சித்தசேத்திரம், திருப்பேருலகம். மீளாகதி,
சித்தலோகம், அபாதம், லோகாக்ரம், சித்தசிலா, மோட்சத்தளம்,
உலகுச்சி, நிலமிசை, சிவகதி உறைநிலை போன்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது.

மூன்று உலகம்

சமண அண்டவியல்படி, இந்த அண்டமானது மூன்று உலகங்களைக்
கொண்டது.

மேல் உலகம் - ஊர்த்வ லோகம் (பல அடுக்குகள் கொண்ட இந்த
இடத்தில் பலதரப்பட்ட வானவர்கள்/தேவர்கல் வசிக்கிறார்கள்)

மத்திய உலகம் – மத்ய லோகம் (மனிதர்கள், மிருகங்கள்,
பறவைகள், ஊர்வன மற்றும் கிருமிகள் வசிக்கும் இடம்)

கீழ் உலகம் – அதோ லோகம் (ஏழு அடுக்குகள் கொண்டது.
நரகவாசிகள் – நரகப் பிறப்பெடுத்த உயிர்கள் வசிக்கும் இடம்)

இவற்றின் குறியீடுதான் தீர்த்தங்கரர்களின் படிமத்தின் தலைமேற்க்
காட்டும் முக்குடைகள். மூன்று உலகத்தையும் கடந்து வென்றவர்
என்ற நோக்கில் முக்குடைக் காட்டப்படுகிறது.

“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”

என்று சிலப்பதிகாரத்தில் வருவதைக் காண்க.

மேல் உலகம் – ஊர்த்வ லோகம்

மொத்தம் பதினாறு அடுக்குகளைக் கொண்டது இந்த மேலுலகம்.
இவற்றில் பலவகைப் பட்ட தேவர்கள் வாழ்கிறார்கள். தேவர்களிலும்
பலப் பிரிவுகள் சொல்லப்படுகிறது. அதையும் தாண்டி உச்சியை
சிலாத்தலம் என்றும் சித்தசிலை என்று அழைக்கப்படுகிறது.
வீடுபேறடைந்த உயிர்கள் சென்றடைவது இங்கேதான். சமண
கோட்பாட்டின்படி, வீடுபேறடைந்த உயிர்கள் மறுபடியும்
பிறப்பெடுப்பதில்லை.

இவற்றைக் கீழே வரும் பாடல் விளக்கக் காணலாம்.

“நடுவண் எண்புகைக் கொழுப்பாய் நந்தி ஈச்சிறகொத்து ஈற்றிற்
குடை மலர்ந்திருந்ததே போன்று இரண்டரை தீவோடு ஒத்துக்
கடையிலா அறிவு காட்சி உடையவர் கழுமி நின்ற
இடமது உலகத்து உச்சி ஏத்தருந் திறத்ததாமே”

என்று மேருமந்தர புராணம் பகரும்.

உலகுச்சி அல்லது சித்தசிலா அல்லது நிலமிசை

உயிரைவிட்டு அனைத்துக் கருமங்களும் நீங்குதல் அல்லது
விடுதல் வீடுபேறு எனப்படும். இது மொக்கம், மோக்ஷம்,
முக்தி, கைவல்யம், சித்தத்துவம், சிவகதி, சிவசுகம்,
நிர்வாணம், பரிநிர்வாணம், சேமம், சித்தகதி, பஞ்சகதி,
திரிதராகதி, அட்டமபுடலி, மீட்சியில் வீட்டுலகம், மீட்சியில்
பேரின்பம், இறுதியிலா பேரின்பம், பேர்த்துப் பிறவா பெருமை,
மீண்டுவாரா நெறி என பலவாறாகக் கூறப்படுகிறது.

“கேவல மடந்தை என்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொனொரு பாக மாகக்
காவலன் தானோர் கூறாக கண்இமை யாது புல்லி
மூவுல குச்சி இன்பக் கடலுனுள் மூழ்கி னானே”
- சீவக சிந்தாமணி (3117)

என்றும்,

”அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் பூங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்”
- சூளாமணி (2125)

என்றும்,

”மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
- திருக்குறள் (3)

முடிபு

வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் என்பது வானோர்கள்
இருக்கின்ற அல்லது வசிக்கின்ற இடத்திற்கும் உயர்ந்த
உலகமான சிலாத்தலத்தில் தங்கும் என்பதுதான் நேரடையான
பொருள். பரிமேலழகர் தன் உரையில் சிறிது மாற்றிப்
பொருள் தந்திருக்கிறார் என்பது வெள்ளிடை மலை.

இரா.பானுகுமார்,
சென்னை

பி.கு: மேல் தகவலுக்கு கீழேச் சுட்டியைப் பார்க்கவும்!

http://en.wikipedia.org/wiki/Jain_cosmology
http://en.wikipedia.org/wiki/Moksa_(Jainism)

 

 

Date: Sunday, 23 Jan 2011 22:18

சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள்

பண்டையத் தமிழ் இலக்கியங்களில் அந்தணன், அந்தணர் என்ற
சொற்கள் விரவி வருவதைக் காணலாம். திருக்குறளில் அறவாழி
அந்தணன் என்று இறைவனை இறைஞ்சுவார் குறளாசிரியரான
தேவர் பெருமான். அந்தணர்/அந்தணன் என்ற சொற்கள் பல
சமய இலக்கியங்களில் பயின்று வந்தாலும் அவைகள் ஒரே
பொருளில் ஆளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிலப்பதிகாரத்தில் அந்தணர்/அந்தணன் என்ற சொல்லாட்சி

இன்றைய காலக் கட்டத்தில் ‘அந்தணன்’ அல்லது “அந்தணர்”
என்ற சொல் வைதீகப் பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்
பட்டு வருகிறது. அந்த சொற்கள் பொதுமையாயினும் சமண,
பெளத்த இலக்கியங்களில் அவைகள் சமண/பெளத்தப்
பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டு
வந்திருப்பதையும்க் காணலாம்.

இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தில் மூன்று வகையான
அந்தணர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

1. மாங்காட்டு மறையோன்
2. கோசிகன்
3. மாடல மறையோன்

1. மாங்காட்டு மறையோன்:

காடுகாண் காதையில், கவுந்தியடிகள், கோவலன் மற்றும்
கண்ணகி ஆகியோர் உறையூரை விட்டு நீங்கி ஒரு சோலையின்னுள்
நுழைகின்றனர். அப்போது அங்கிருந்த மண்டபத்தில் மாங்காட்டு
மறையோன் என்ற வயதான வைதிக பிராமணனைச் சந்திக்க
நேரிடுகிறது. அவரை எதிர்க் கொள்ளும் கோவலம் அவனை
வணங்காமல்,

”மாமது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்ஊர்? ஈங்கென் வரவெனக்?
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்..” 1

என்று சற்று அதிகாரத் தொனியிலேயே கேட்கத் துவங்குகிறான்
கோவலன். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது யாதெனில்,
கோவலன், அந்த வயதான மாமது மறையோனை வணங்குவதாக
காட்டவில்லை இளங்கோவடிகள்.

2. கோசிகன் என்ற மறையோன்

உறையூரை விட்டு நீங்கி வெகு தூரம் நடந்து வந்தக் களைப்பினால்,
ஒரு ஊரின் புறமாக அவர்களை தங்க வைத்துவிட்டு தன் காலை
கடனை முடிக்க நீர் நிலையைத் தேடி செல்கிறான் கோவலன்.
அப்போது, மாதவியின் கடிதத்துடன், கோவலனைத் தேடி
எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வந்த கோசிகன் என்ற
அந்தணன், இவன் கோவலனோ என்று ஐயுற்று வினவ,
அதற்கு மறுமொழிக் கூறும் கோவலன்,

“யாது நீ கூறிய உரையீது?, இங்னெத்..”2

என்று கேட்கிறான். அப்போதும் அவனை வணங்குவதாகக்
காட்டவில்லை இளங்கோவடிகள்.

3. மாடல மறையோன் என்னும் அந்தணன்

அடைக்கலக் காதையில் மாடல மறையோன் என்னும்
அந்தணனைச் சந்திக்கும் கோவலன், உடனே அவன்
அடிப் பணிகிறான்.

“இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடிவணங்க
நாவல் அந்தணன் றானவின் றுரைப்பான்” 3

மற்ற அந்தணர்களை வணங்குவதாகக் காட்டாத
இளங்கோவடிகள், மாடலன் என்ற அந்தணனை,
கோவலன் அடி வணங்குவதாகக் காட்டுகிறார்?

ஏன்? நிற்க!

அறக்கள வேள்வியும் மறக்கள வேள்வியும்

இளங்கோவடிகள் தன் காப்பியத்தில் மூன்றுவித வேள்விகளை
நமக்கு காட்டுகிறார்.

1. மறக்கள வேள்வி
2. மதுக்கொள் வேள்வி
3. அறக்கள வேள்வி

1. மறக்கள வேள்வி

முதல் இரண்டும் வைதிகம் சார்ந்தது. மூன்றாவது அவைதிகச்
சார்பு உடையது. மாடல மறையோன் மூன்றாம் பிரிவினன்.
சேரனுக்கு அறிவுரை வழங்கு மாடலன் அரசே மது,
கொலை உடைய மறக்கள வேள்வி செய்யாதே.
கொலையில்லாத அறக்கள வேள்வி செய் என்று
அறிவுறுத்துகிறான்.

“அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோயாயினை “ 4

என்றும்,

“..அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்..” 5

என்று சேரனுக்கு அறிவுறுத்துகிறான் மாடலன்.

இங்கு சொல்லப்பட்ட அறக்கள வேள்வி யாதுனெனின்,
இது அவைதிகச் சார்புக் கொண்ட வேள்வியாம்.அவைதிகப்
பிரிவினரான சமணர்களுக்கும் வேள்வி உண்டென்றும்,
ஆனால் அது உயிர்ப் பலி மற்றும் மது (சோம பானம்)
இல்லாத வேள்வி என்றும் பெறப்படுகிறது. சமணர்கள்
அந்த வேள்வியை ”ஓமம்” என்று அழைக்கிறார்கள்.
(இன்றும் சமணர்கள் புதுமனை புகுவிழாவில் சாந்திநாத
ஓமம் என்ற வேள்வியைச் செய்கிறார்கள் என்பதைக்
கருதவும்)

மாடலன் மறையோன் சமண அந்தணன்

மூன்று அந்தணர்களைக் குறிக்கும் இளங்கோவடிகள்,
கோவலனை மற்ற இருவரையும் அடிவணங்கச் செய்யாமல்,
மாடலன் மறையோனைக் கண்டவுடன் அடிவணங்கச்
செய்தமை இதன் பொருட்டாம்! என்னை?


நான்மறைகள்

இங்கே வாசகர்களுக்கு ஒரு வினா எழுவது இயல்பே?.
நான்மறை என்பது வைதிக வேதங்களைத் தானேக்
குறிக்கும்? என்றால்..

இல்லை. அவைகள் சமண வேதங்களையும் குறிக்கும்.
சமண இலக்கியங்களில் நான்மறை என்றும் வேதம்
என்ற பதங்கள் விரவி வருவதைக் காணலாம்.

சமண வேதங்கள் நான்கு!

ஜைன ஆகமங்களை இரண்டு வகையாகப் பிரிப்பர்.
அவை பூர்வாகமம், அங்காகமம் எனப்படும். பூர்வாகமம்
என்பது என்றும் நிலைத்திருப்பது. ஆதி பகவானால்
அருளப் பட்டது. அங்காகமம் என்பது மனிதர்களால்
எழுதப்பட்டது. ஆதிபகவன் என்று அழைக்கப்படும்
ஆதிநாதரால் அருளப்பட்ட அகமங்கள் நான்கு. இவை
ஜைன வேதங்கள் அல்லது சதுர் வேதங்கள் அல்லது
நான்மறைகள்6 என்றழைக்கப்படுகின்றன. அவைகள்,

1. பிராதமானுயோகம்
2. கரணானுயோகம்
3. சரணானுயோகம்
4. திரவியானுயோகம்

என்பன.

முடிபு:

”அந்தணர் என்போர் அறவோர்”7 என்பது திருக்குறள் வாக்கு.
எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல், எந்த உயிரையும்
வேள்விகளில் பலி கொடுக்காமல் இருப்பவர்கள் தான்
அந்தணர் என்று திருக்குறள் சொல்வது இங்கு
நினைத்தற்பாலது!



இரா.பானுகுமார்,
சென்னை






அடிக்குறிப்பு:

1. சிலப்பதிகாரம், காடுகாண் காதை, பாடல் 31 - 33
2. சிலப்பதிகாரம், புறஞ்சேரி இறுத்த காதை, பாடல்: 54
3. சிலப்பதிகாரம், அடைக்கல காதை, பாடல்: 18 - 20
4. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 131 – 132
5. சிலப்பதிகாரம், நடுகற் காதை, பாடல்: 177 – 178
6. பதிணென் கீழ்க்கணக்கு, ஏலாதி- கடவுள் வாழ்த்து
” அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்(கு)
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு” – பாடல் – 1

7. திருக்குறள், நீத்தார் பெருமை, பாடல் - 30

 

Author: "Banukumar (noreply@blogger.com)"
 

Send by mail Print  Save  Delicious 

 

 

Date: Friday, 21 Jan 2011 09:23

எண்ண வரண்ணங்கள்

சமணம் மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களை கொண்டு, வெண்மை,
கருமை என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறது. எண்ணத்தின்
தன்மைக்கேற்றவாறு அவற்றை மேலும் விரித்து ஆறு வகைகளாகப் பிரிக்கும்.

1. கிருட்டினலேசியை – அடர்ந்த கருமை (Dark Black)
2. நீலலேசியை – நீலம் கலந்த கருமை (Black)
3. கபோதலேசியை – வெண்மை கலந்த கருமை (Grey)
4. பீதலேசியை – மஞ்சள் கலந்த வெண்மை (Pale yellow)
5. பத்மலேசியை – மங்கலான வெண்மை (Pale white)
6. சுக்லலேசியை – தூய வெண்மை (Pure White)

முதல் மூன்றும் கருமை எண்ணங்களாகும், மற்ற மூன்றும் வெண்மை
எண்ணங்களாகும்.

1. மிகுந்த கருமை – சதா சச்சரவு செய்யும் தன்மை, கடின மனயில்பு,
பழிவாங்கும் உணர்ச்சி, பெரியவர்கள் பேச்சை ஏற்காமை.

2. கருமை – சோம்பல், அறிவின்மை, சுகங்களில் அதிக நாட்டம்.

3. வெண்மை கலந்த கருமை – எதற்கெடுதாலும் அவசரப்படுதல்,
பயப்படுதல், மன உறுதியின்மை, காரணமேயின்றி பிறரை வெறுத்தல்.

4. மஞ்சள் கலந்த வெண்மை – நன்மை-தீமைகளை சீர்த்தூக்கிப் பார்த்தல்,
தயை, பரிவுத் தன்மை, தானம் செய்தல்.

5. மங்கலான வெண்மை – உண்மை, நேர்மை மனத்தினர், தியாக
சிந்தனை, மன்னிக்கும் இயல்பு, குருவை மதித்தல்.

6. தூய வெண்மை – சமநோக்கு உடைமை, விறுப்பு, வெறுப்பு
இன்மை, கோபம் கொள்ளாமை.

 

[படம்: http://en.wikipedia.org/wiki/Lesya - நன்றி!]

இப்போது சொல்லுங்கள் நீங்கள் எந்த நிறம்? ;-)


இரா.பா,
சென்னை

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "தமிழ்ச்சமணம், ��..."
 

 

 

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "Tamiljain, Jainism, Thirukural"
 

Date: Monday, 08 Nov 2010 14:28

இருவினை சேரா இறைவன்!

(தமிழ் ஆசிரியரும், அவரது மாணாக்கரும் உரையாடுவது போல் இக்கட்டுரை அமைகிறது.)

(ஒரு ஞாயிறு காலை நேரம்)

மாணவன்: ஐயா, காலை வணக்கம்!

ஆசிரியர்: காலை வணக்கம். என்ன இவ்வளவு தூரம் தம்பி?

மாணவன்: ஐயா, தங்களிடம் உரையாடலாம் என்று வந்தேன். இன்று விடுமுறையாதலால் தங்களிடம் சில சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் நினைத்தேன். தங்களிடம் முன்னேமே சொல்லாமல் வந்ததற்கு மன்னிக்கவும்.

ஆசிரியர்: பரவாயில்லை தம்பி. இன்று எனக்கு முக்கியமான வேலை எதுவுமில்லை. சரி! உன் சந்தேகங்களைக் கேள்?

மாணவன்: திருக்குறள் படித்துக் கொண்டிருந்தேன். கடவுள் வாழ்த்தில் வரும் ”இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்” என்ற சொற்றொடர் எனக்கு விளங்கவில்லை. எல்லாம் வல்ல இறைவனுக்கு வினைகள் எப்படியிருக்க முடியும்? சிவபெருமான், பிறவாயாக்கை பெரியவன் என்று படித்திருக்கிறேன். ஆனால், திருவள்ளுவர் இருவினை சேரா இறைவன் என்கிறார்? நீங்கள் தான் விளக்க வேண்டும் ஐயா?

ஆசிரியர்: தம்பி, அந்த குறளின் பொருள் புரியவேண்டும் என்றால் வினைப் பற்றி நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மாணவன்: வினையா? தாங்கள் ஊழ்வினையைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!

ஆசிரியர்: நீ நினைப்பது சரிதான். முதலில் இந்தப் பாட்டைக் கேள்!

“பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு”1

நாலடி என்ன சொல்கிறது?

ஒரு கன்றுக்குட்டி பல பசுக்கள் உள்ள கூட்டத்தில் தன் தாய் பசுவைத் தேடி எவ்வாறு சென்றறடைகிறதோ அதுபோல ஒருவன் செய்த வினைகள் அவன் பல பிறப்பெடுத்தாலும் அவனை சென்றடையும். வினை செய்தவன் அவ்வினைப் பயனை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பாடம்.

மாணவன் குறுக்கிட்டு: இதனால் தான், திருவள்ளுவர், “பிறர்க் இன்னா முறபகல் செய்யின் தமக் இன்னா பிற்பகல் தாமே வரும்”2 என்றது இதனால் தானோ?

அப்படி என்றால் நாம் அவ்வினைப் பயனிலிருந்து தப்பிக்க முடியாதா? சம்பந்தர் தன் தேவாரத்தில் “நாளும், கோளும் என்ன செய்யும்” நம்பிரான் இருக்கையிலே”3 என்று சொல்கிறாரே?

ஆசிரியர்: அவசரப்படாதே தம்பி. நான் இன்னும் முடிக்கவில்லை. பிறப்பு என்பது சக்கரம் போன்றது. வினை என்ற மாசு விடுபடும் வரை பிறவிச் சுழற்சி நிற்பதில்லை. நமக்கு நடக்கும் நல்லது, கெட்டது எல்லாம் நம் வினைப் பயன்களேக் காரணம். நமக்கு நடக்கும் நன்மைகளுக்கு நம் நல்வினையும், தீமைகளுக்கு தீவினையும் காரணங்களாக அமைகின்றன. இதனால் நல்வினை, தீயவினை என்ற இரண்டு வினைகள் இருப்பது தெரியவரும். இதனால் தேவர் பெருமான் இருவினை என்றார்.

மாணவன்: ஏதோ தத்துவக் கோட்பாடுபோல் தெரிகிறதே? இது எந்த சமயக் கோட்பாடு? சைவமா? வைணவமா?

ஆசிரியர்: (சிரித்தபடியே) நன்று கேட்டாய் தம்பி. இது வைணவமோ, சைவமோ அல்ல. இது சமணக் கோட்பாடு!

மாணவன்: (ஆச்சரியமாக) சமணமா? மயிலை.சீனி.வேங்கடசாமி, திரு.வி.க போன்றவர்கள் குறள் சமணச் சார்புடையது என்கிறார்களே? இதனால் தானோ?

ஆசிரியர்: இருக்கலாம். ஆனால் நாம் அவர்கள் சொல்வதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டாம். நாமே விளங்கிக் கொள்ளப் பார்ப்போம்!

மாணவன்: ஆனால், சைவத்திலும் வினைக்கோட்பாடுண்டே?

ஆசிரியர்: பொறு! அவசரப்படாதே! சைவத்திலும் வினைப்பற்றி கூறப்பட்டிருந்தாலும்,சிறப்பாக இது சமணத்திற்கே உரிய கோட்பாடு. சமணம் குன்றியக் காலத்தில் இக்கருத்து சைவத்தில் உள்வாங்கப்பட்டது. தேவாரக் காலத்திற்கு முன் சைவத்தில் வினைக் கோட்பாடு இருந்ததாகச் சான்றுகள் இல்லை. பதின்மூன்றாம் நூற்றாண்டு வாக்கில்தான் சைவ கோட்பாடுகள் தொகுத்து எழுதப்பட்டன.4

மாணவன்: அப்படியா? சைவம் தேவாரக் காலத்திற்கு முன்னர் இல்லையா?

ஆசிரியர்: நான் அப்படி சொல்லவில்லையே! சிவன் வழிபாடு இருந்திருக்கிறது. ஆனால் அவை முழுச் சமயமாக பரிணமிக்கவில்லை. கோட்பாடுகள், ஆகமங்கள், வழிபாடு போன்ற கூறுகள் கொண்ட அமைப்பைத் தான் சமயம் என்று கொள்ள முடியும்! இல்லையா?

மேலும், வினைக்கொள்கையில், சைவத்திற்கும், சமணத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. சைவத்தில் சிவபெருமான் தன் ஆணையால் உயிர்களின் வினைப்பயனுக்கு ஏற்ப பிறவி பேதத்தை தருவான் என நம்பப்படுகிறது.5
ஆனால் இதற்கு மாறாக, சமணத்தில் வினைகளை மட்டுறுத்தவென்று யாரும் தேவையில்லை. வினைப்பயன், செய்தவனைத் தானே சென்றடையும். மேலே சொன்ன நாலடியார் பாடல் கூறுவதும் அதுதான். தேவர் பெருமானும் “பிற்பகல் தாமே” என்று கூறுவதால், இங்கே கூறப்படுவதுச் சமண கோட்பாடாகிறது. என்ன புரிகிறதா?

மாணவன்: புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது.

((இருவரும் சிரிக்கிறார்கள்)

ஐயா! என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இருள்சேர் என்று எதனால்?

ஆசிரியர்: நல்வினை, தீவினை பிறப்பிற்கு வித்தாகும். நால்வகை பிறப்புக்கு வழிவகுக்கும். நல்வினைப் பயனால் மனிதப் பிறப்பும், நல்ல குடியும், தேவகதியும், தீவினைப் பயனால் மிருககதியும், நரககதியும் அமையும். பிறப்பறுக்க இந்த இரண்டு வினைகளையும் நீக்க வேண்டும். இவை இரண்டும் பிறப்பிற்கு காரணமாக அமைவதால் தேவர் பெருமான் “இருள்சேர் இருவினை” என்றார்.

”தீவினை, நல்வினை என்று கூறப்படும் இரண்டு வினைகளும் சேராது, மெய்ப் பொருளாய் விளங்கும் இறைவன் புகழை விரும்பிப் போற்றுபவர்களுக்கு.” என்பது அக்குறளின் கருத்து.

மாணவன்: ஐயா, இந்த இடத்தில் ஒரு கேள்வி. இறைவன் புகழைப் போற்றுபவர்களுக்கு இருவினைகளும் சேராது என்றால்? அதா இறைவன் நாமத்தை துதித்து வந்தால் வினைகள் சேராது என்று பொருள் கொள்ளலாமா?

ஆசிரியர்: தம்பி, மேலோட்டமாய்ப் பார்த்தால் அவ்வாறு பொருள் கொள்ளலாம். திருக்குறள் உலகோர் எல்லாருக்கும் பொது. ஒரு சாராருக்கு மட்டும் குறள் எழுதப்படவில்லை. குறளாசிரியர் சமணராகயிருந்தாலும் எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில்தான் குறள் யாத்திருக்கிறார்.

“வென்றான் வினையின் தொகையாகி விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும்
சென்றான் திகழும்சுடர் சூழோளி மூர்த்தி யாகி
நின்றான் அடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்”6

”அடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்” என்பதனால் இறைவனை வணங்கினாலே வினை நீங்கிவிடும் என்று பொருள் கொள்ளமுடியுமா?

”இறைவன் புகழைப் பாடுகின்றவர்கள், இவ்வாறு எல்லாக் கர்மங்களையும் கெடுத்து, ஆன்மாவின் முழுமையான தூய தன்மையை இறுதியில் அடைகின்றனர். சமண சமயக் கருத்துப்படி இவ்வுலக நன்மைகளைப் பெறுவது இறைவனை வணங்குவோரின் கொள்கையன்று. ஆனால், ஆன்மாவின் இயல்பான தூய்மை நிலையைப் பெற்று, தான் வணங்கும் இறைவனைப் போலவே ஆக வேண்டும் என்பதைத்தான் சமண சமயம் வற்புறுத்துகிறது. சமணம் வற்புறுத்தும் இந்தச் சமய நெறி முறை உலகெங்கும் காணப்படும் சமய கண்ணோட்டங்களில் இருந்து வேறுபாடு உடையதாக இருக்கிறது.
ஒருவன் இறைவன் மூலம் அடையும் நன்மைகளுக்குப் பிரதிபலனாகப் படையல்கள் (காணிக்கைகள்) உருவில் அக்கடவுளுக்கு அளிக்கப்படும் வணக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. மற்ற உலக சமயங்களின் கண்ணோட்டம் (அதாவது, கடவுள் அருளும் வரங்கள் மூலம் ஒருவன் நன்மையைப் பெறுகிறான், அவ்வாறு பெறும் நன்மைக்குப் பிரதி உபகாரமாக (கைம்மாறு) அவன் படையல்கள் மூலம் வணங்குகிறான்)
இறைவனிடம் இருந்து ஒன்றைப் பெற்று, அதற்கு ஈடாக வேறொன்றைக் காணிக்கை மூலம் அவருக்குத் திருப்பித் தரும் வாணிக பேரம் (அறவிலை) போல் தோன்றும் இந்தக் கருத்தைச் சமண சமயம் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால் விலக்க வேண்டிய மூன்று மூட நம்பிக்கைகளில் (தேவ மூடம், பாஷாண்ட மூடம், உலக மூடம்) இதுவும் ஒன்று. இறைவன் என்று வணங்கப்படும் மெய்ப் பொருள், ஒருவர் தம் ஆன்மாவை உயர்த்திக் கொள்ள – தம் பண்பில் மேம்பாடு அடைய வேண்டிய குறிக்கோளாக இருக்க வேண்டுமேயன்றி, வணங்குபவர் (பக்தர்) பேரம் பேசுபவராக இருக்கக் கூடாது. இதுவே சமணரின் கடவுட் கொள்கை; வழிப்பாட்டின் நோக்கம்”7

என்று சமண அறிஞர், பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் கூறுவதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம்.

மாணவன்: ஐயா! தங்கள் விளக்கம் என் மனக் கண்ணை திறந்திருக்கிறது. இறைவன் பற்றிய புரிதல் இன்னும் ஆழமாகிறது. திருப்பதியில் ஏன் அவ்வளவுக் கூட்டம்?

ஆசிரியர்: இது அவர்களின் நம்பிக்கை. இதை நாம் குறைக் கூறுதல் ஆகாது. நம் நம்பிக்கை நம்வரையில் இருக்கவேண்டும்.

மாணவன்: ஐயா, இருவினைப் பற்றி சமண இலக்கியங்களில் இருந்து மேலும் விளக்க முடியுமா?

ஆசிரியர்: குறள் கடவுள் வாழ்த்தில் வரும் சொற்றொடர்களும், கருத்துகளும் மற்ற சமய இலக்கியங்களைவிட சமண இலக்கியங்களில் பெரிதும் பயின்று வருகிறது. அவ்வளவையும் இங்கு கூற ஒரு நாள் போதாது, ஆகையால் சிலவற்றை மற்றும் இங்கு கூறுகிறேன்.

“அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய
நல்கிப் பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்”8

என்றும்,

”ஆதியா யுலகியல்பை யளித்தாய் நீயே
அருந்தவனா யறம்பகர்ந்த அறிவ நீயே
காதியா யுருவினையைக் கடிந்தாய் நீயே
……………”9
என்றும் வருவதைப் பார்க்கலாம்.

மேலும், திருக்கலம்பகம், சிந்தாமணி, பெருங்கதை போன்ற சமண இலக்கியங்களில் இருந்து சான்றுகள் காட்டலாம். விரியும் அதனால் இங்கு சொல்லவில்லை.

மாணவன்: நன்றி ஐயா! அருமையான விளக்கங்கள். சமணப் பற்றி அறிய ஆவல் மேலிடுகிறது. ஐயா, நேரம் போனதே தெரியவில்லை. மற்றொரு நாள் சமணம் பற்றி நீங்கள் விளக்கமாக சொல்லவேண்டும். எனக்கு மட்டுமல்லாமல், நிறைய வலைஞர்களுக்கும் அது மிக உதவியாக இருக்கும்.

ஆசிரியர்: நாம் படிக்கும் காலங்களில்,சைவ, வைணவ நூலகள்தான் பெரிதும் கிடைக்கிறது. சமணர்கள் பார்வை (Jaina View) என்ன என்று தெரியாமல் போய்விடுகிறது. தமிழ்ச் சமணரான திரு.இரா.பானுகுமாரின் வலைப்பதிவு சென்றுப் படித்துப் பார். நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாம். மற்றொரு நாளில் சந்திப்போம். வணக்கம்!


To be Continued!

--------------------------------------------------------------------------

1. நாலடியார் – 101
2. திருக்குறள் – 319
3. தேவாரம் - சம்பந்தர் –
4. Facets of Saiva Siddhanta – சைவசித்தாந்தம்” ஓர் அறிமுகம் – முனைவர் நல்லூர் சா.சரவணன். (பக்கம்: 1)
5. ,,, (பக்கம்: 25,26)
6. சூளாமணி – 1 – கடவுள் வாழ்த்து
7. திருக்குறள் சமயம் – பக்கம்:31
8. யசோதர காவியம் – 300ஆம் பாட்டு
9. ஜீவசம்போதனை – 27ஆம் பாட்டு

Author: "Banukumar (noreply@blogger.com)"
 

Date: Sunday, 22 Aug 2010 22:03

தெய்வம் தெளிமின்

தமிழின் ஆதிகாவியம் என்று போற்றப்படுவது சிலப்பதிகாரம். இதன் சிறப்பை அறிந்து, பாரதியார் “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்றார். காவியங்கள் பொதுவாக அரசனைப் பற்றியோ அல்லது தெய்வத்தைப் பற்றியோ அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிலப்பதிகாரம் தமிழின் முதல் காவியமாக மட்டும் திகழாமல், சாதரண நிலை மாந்தர்களை வைத்து எழுந்த முதல் காவியமும் கூட. அதுவும், பெண் மகளை வைத்துப் பாடபட்ட முதல் காவியமுமாகும். ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இதுவும் ஒன்று. இப்பேற்பட்ட காவியத்தை யாத்தவர் இளங்கோவடிகளாவார்.

சிலப்பதிகாரக் காலம்

இதன் காலம் ஸ்திரமாக சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலான அறிஞர்கள் 2ஆம் நூற்றாண்டு என்று கொள்கின்றனர். “தமிழ்க் காவலர்கள்”  இன்னும் முன்னம் என்று கொள்வர். இக்கால நிர்ணயம் இங்கு தேவையில்லை யாதலால், கட்டுரையின் தலைப்பை நோக்கிச் செல்வோம். ;-)

இளங்கோவடிகளின் அறிவுரை

சிலப்பதிகாரத்தை முடிக்கும் முன்னர், இக்கதையைப் படித்தவர்களுக்கு சில அறிவுரைகள் சொல்லி அவைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்துகிறார். அப்பாட்டு,

”………………………..
என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி
தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி
தெரிவுறத் கேட்ட திருத்தகு நல்வீர்” - வரந்தரு காதை (185)
“பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்ம்மின் தவம்பல தாங்குமின்” - வரந்தரு காதை (190)
“செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்” - வரந்தரு காதை (195)
“அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது” - வரந்தரு காதை (200)
“செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”

என் உரை:

இளங்கொடியாளான கண்ணகியின் கதைக் கேட்ட நல்லவர்களே! கேளுங்கள்!!

1. கவலையும், துன்பமும் விட்டு ஒழியுங்கள்,
2. தெய்வம் எது என்று தெளியுங்கள்,
3. அப்படி தெளிந்து ஏற்றுக்கொண்டவர்களை பின்பற்றுங்கள்,
4. பொய் சொல்லாதீர்கள், புறங்கூறுதலை அகற்றுங்கள்,
5. புலால் உணவை விலக்குங்கள்,
6. பிற உயிர்களைக் கொல்லாதீர்கள், (கொல்லாமை கடைப்பிடியுங்கள்),
7. தானம் செய்யுங்கள்,
8. நோன்புகள் பல ஏற்றுக் கொள்ளுங்கள்,
9. பிறர்ச் செய்த உதவிகளை மறக்காதீர்கள்,
10. தீய நட்பை விலக்குங்கள்,
11. பொய்ச் சாட்சி சொல்லாதீர்கள்,
12. உண்மை மொழியினை விட்டு அகலாதீர்கள்,
13. அறவோர்களை நாடி செல்லுங்கள்,
14. அறவோர் அல்லாதவர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள்,
15. பிறர் மனைவியை தாயாக நினையுங்கள்,
16. நிர்கதியாக இருக்கும் உயிர்களைக் காப்பாற்றுங்கள்,
17. இல்லறத்தைப் போற்றுங்கள்,
18. தீயவைகளைச் செய்யாதீர்கள்,
19. குடியை விட்டுவிடுங்கள்,
20. திருடாதீர்கள்,
21. விலைமாதர்களிடம் செல்லாதீர்கள்,
22. பொய் பேசாதீர்கள்,
23. பயனற்ற பேச்சுகளை பேசாதீர்கள்,
24. இளமை நிலைக்காது,
25. செல்வம் நிலைக்காது,
26. உடம்பும் நிலைக்காது

ஆயுட் காலம் எப்போது முடியும் என்று தெரியாது, மரணமும் தவிர்க்க முடியாதது, அறம் ஒன்றே உய்விக்கும்! அறமே மறுமைக்கும் துணையாக பின் வரும். ஆதலின் அறம் செய்து வாழ்வாங்கு வாழுங்கள்!!

என்று தன் காவியத்தை முடிக்கிறார். மேற்சொன்ன அனைத்து அறிவுரையும் அப்படியே திருக்குறளில் எதிர் ஒலிப்பதையும் ஈண்டு நோக்குக!

தெளிமின்! தெளிந்தோர்ப் பேணுமின்!!

..” தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்”

இந்த வரியில் இளங்கோவடிகளின் உள்ளக் கிடக்கை தெற்றென விளங்குகிறது. என் காவியத்தில், பல கடவுள்களை கூறியிருக்கிறேன், அவர்களில் உண்மையான தெய்வம் யார் என்று தெளியுங்கள். அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களை (தெளிந்தவர்களை) கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
அப்படி இளங்கோவடிகளில் நிறைந்த அந்த தெய்வம் யார்? இளங்கோ தன் காவியத்தில் ஒரு யுக்தியை கையாள்கிறார். கதையில் நிறைய மாந்தர்களை உலவ விட்டிருந்தாலும், தன் மனதில் பிரதிப்பளிப்பாக, கவுந்தியடிகளின் பத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கவுந்தியடிகள் கதாப்பாத்திரத்தை எடுத்துவிட்டுப் பார்த்தாலும், கதைக்கு எந்த பங்கமும் வராது. பின் ஏன் அந்தக் கதாப்பாத்திரம்? தன் சமயக் கொள்கையை கதையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் கவுந்தி என்றப் பாத்திரத்தைப் படைத்துக் கதையை நகர்த்திச் செல்கிறார் இளங்கோவடிகள்.
இறைவாழ்த்தில் இயற்கையைப் பாடியவர், தன் உள்ளக்கிடக்கை சரியான நேரத்தில் கவுந்தியின் மூலமாக உள் நுழைக்கிறார்.

மதுரைக் காண்டம், காடுகாண் காதையில்,

“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்” – (5)

என்று அருகப் பெருமானை வணங்கி, பின் கவுந்தியின் மூலமாக சமணக் கருத்துகளை ஆங்காங்கே தூவிச் செல்கிறார் இளங்கோவடிகள். அத்தொடு அல்லாமல் அப்பிராட்டியின் வாயிலாக,

“..ஒரு மூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா”

என்றும்,

“காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாமம் அல்லது நவிலா தென்னா
ஐவரை வென்றோன் அடிஇணை அல்லது
கைவரக் காணினும் காணா என்கண்
அருளறம் பூண்டோன் திருமெய்க்கு அல்லதென்”

என்றும்,

“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவம் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறா அது”

என்றும்,

“இறுதியில் இன்பத் திறைமொழிக் கல்லது
மறுதர ஓதியென் மனம்புடை பெயராது”

என்று கூறுவதையும் ஈண்டு நோக்குக.

இதனால் சிலப்பதிகார ஆசிரியர் உள்ளம் யாது என்றும் அவர் எந்த தெய்வத்தை தெளிந்திருக்கிறார் என்றும் நாம் உணரலாம். அவரின் வாக்கை நாமும் பின்பற்றி,

”ஆதியில் தோற்றத்து பகவனை, மலர்மிசை நடந்த மன்னவனை, அறவாழி ஏந்திய அந்தணனை, எண்குணத்தானை, வாலறிவனை” வணங்கி ஏத்துவோமாக!

தெய்வம் தெளிமின்!!

அறம் மறவற்க! அறமல்லது துணையில்லை!!
வாழ்க திருவறம்! வளர்க நல்லறம்!!

இரா.பா
சென்னை

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "Jainism, சமணம், இளங்��..."
 

Date: Sunday, 08 Aug 2010 14:46

ஆதிபகவன்

மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன் ஆகிய கட்டுரைகள் எழுதும் போதே சில நண்பர்கள் முதல் குறளைப் பற்றியும் எழுதச் சொன்னார்கள். திரு.மஞ்சை வசந்தன் என்பார் முதல் குறளுக்கு எழுதியக் கட்டுரையை இங்கிட்டு என் கருத்தைப் பின்னர் எழுதுகிறேன் என்று சொன்னதோடு சரி. எழுதச் சந்தர்ப்பம் அமையவில்லை.

ஆனால், சமீபத்தில் மின்தமிழ்க் குழுமத்தில் ஆதிபகவன் பற்றிய இழையொன்றில் இரண்டு அறிஞர்களின் 1930ல் எழுதியக் கட்டுரையைக் கொடுத்திருந்தேன். எல்லா குழுமங்களில் நடப்பது போலதான் இங்கும் நடந்தது. இரசத்தை (சாரத்தை) விட்டு சக்கையைப் பிடித்தார் போல் “நடந்தவன்”, ”சென்றவன்” என்பதற்கு மேலே ஏதும் விளங்கிக்க முடியவில்லை. பொதுவாக, குழுமங்களில், அறிவுக்கு (மூளை) பதில் உணர்ச்சிக்கு (இதயம்) இடம் கொடுக்கப்படுகின்றபடியால் அங்கு மேலும் எழுதுவதில் பயனில்லை என்பதால் இங்கு எழுதும் படியாயிற்று! :-)

மேற்கொண்டு எழுதினால், குழுமத்தை கலைக்கிறான்; ஹிந்துத் துரோகி; அது இதுவென்று பொதுமையாய் கூறத் தொடங்கிவிடுவார்கள். ;-) ஏற்றுக் கொள்ளும் பக்குவம்… ஹூம்…

இங்கு எழுதுவதால், ஒரு செளகரியம்! சிலர் நேரடையாக பின்னூட்டுக் கொடுத்து மனதில் பட்டதை எழுதுவார்கள். இன்னும் சிலர், கட்டுரைப் படித்தக் கையோடு தனி மடலில் தங்கள் சந்தேகங்களை விளக்கச் சொல்வார்கள். இதனால் புரிதல் விரிவடையும். எனக்கும்தான்!! ;-)

சரி கட்டுரைக்குள் செல்வோமா?

அறிஞர்கள்ப் பட்டியல்!

எனக்கு தெரிந்து தமிழ் இலக்கிய உலகில் சில நூற்றாண்டுகளாக ஆராயப்பட்டுவரும் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். குறளாசிரியர் யாரை தன் இறைவனாக ஏற்கிறார் அல்லது அவர் குறிப்பிடும் அந்த இறைவன் யார் என்ற கேள்வி பல காலமாக நிறைய அறிஞர்களில் மனதில் அரித்துக் கொண்டு வந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது!

பல அறிஞர்கள் அவற்றிற்கு விடைத்தேடி, திருக்குறள் சமணம் என்று ஆய்ந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாரும் சமணரல்லர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. அவ்வறிஞர்களை கீழேக் கொடுத்துள்ளேன்.

1. தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார்
2. மயிலை.சீனி.வேங்கடசாமி
3. வித்துவான். மே.வீ.வேணுகோபால பிள்ளை
4. திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை
5. பதிப்புசெம்மல். திரு.சண்முகம்பிள்ளை
6. திரு.அ.கி.பரந்தாமனார்
7. பன்மொழிப் புலவர். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
8. பன்மொழிப் புலவர். வெங்கடராஜுலு ரெட்டியார்
9. சர். ஆர்.கே.சண்முகம் செட்டியார்
10. பன்மொழிப் புலவர். மு.கு.ஜகந்நாத ராஜா
11. தில்லையம்பூதூர் திரு.வெங்கட்ராம ஐய்யங்கார்
12. கவிராஜபண்டிதர் ஜெகவீரபாண்டியனார்
13. பிஷப் கால்டுவெல் துரை மகனார்
14. பிரான்சிஸ் வைட் எல்லீஸ் துரை மகனார்
15. காஞ்சி. திரு.டி.ஆர்.சீனிவாச்சாரியார்
16. மழபாடி. மகாலிங்க ஐயர்
17. திரு. ஐராவதம்.மகாதேவன்
18. திரு. க.ந.சுப்ரமணியம்
19. கல்வெட்டறிஞர். திரு.இராசு
20. பேரா. க.நாச்சிமுத்து
21. திரு. சிவ.விவேகானந்தன்
22. முனைவர். துளசி.இராமசாமி
23. திரு. மறைந்த எழுத்தாளர் சுஜாதா
24. புலவர். அப்துல் ரஹ்மான்
25. பேரா. ஏகாம்பர நாதன்
26. நாசா. விஞ்ஞானி. நா. கணேசன்
27. பேரா. சந்தரசேகர்
28. திரு. ஜெயமோகன்
29. திரு. மஞ்சை வசந்தன்
30. திரு. அருணன்
31. திரு. பேரறிஞர். அண்ணாதுரை
பட்டியல் நீளும்…………………………..


அகர முதல எழுத்தேல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு – திருக்குறள் (1)

விளக்கம்:
உலகம், அகரம் முதலான எழுத்துக்களை எல்லாம் ஆதிபகவனை முதலாகக் கொண்டுள்ளது.

விரிவுரை:

அகர முதல - அகரத்தை முதலாகத் தொடங்கி பின் வரும், எழுத்து என்று பொதுப்பட சொல்லினும், எண்களையும் அவை குறிக்குமாதலின் எழுத்தேல்லாம் என்றார், ஆதிபகவன் - உலகின் கண் ஆதி பகவனிடம் இருந்து தோன்றிற்று.
அஃதாவது, ஆதிபகவனாலேயே எண்ணும், எழுத்தும் இவ்வுலகின் கண் தோன்றியது எனபது கருத்து.

ஆதிபகவன் யார்?

ஆதி என்பதற்கு முதல் என்றும் தொன்மை என்றும் பொருள் படும். முதல் பகவன் என்றும் ஆதியில் தோன்றிய பகவன் என்று பொருள் கொள்ளலாம். ஆயினும், இங்கு ஆதி என்பது முதல் என்றே பொருள் கொள்ள வேண்டும். அ (ரகம்) எழுத்து மற்ற எழுத்துகளுக்கு எல்லாம் முதலாக வரும். ஆதிபகவன் மற்ற பகவர்களுக்கெல்லாம் முதலாக இருக்கிறார். மற்ற பகவர்கள் யாவர்? எனின், சமண சமயத்தில் காலந்தோறும் (இறந்த, நிகழ், வருங்காலம்) இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றுவார்கள் என்றும், அவர்கள் மக்களை நல்வழிப் படுத்தி அறம் புகட்டுவார்கள் என்பதும் சமணர்கள் நம்பிக்கை. அவ்வாறே நிகழ்க் காலத் தீர்த்தங்கரர்கள் இருபத்துநால்வர். அவர்களில் முதலாமவர் இரிஷபதேவர் என்று போற்றப்படும் ஆதி தீர்த்தங்கரர் ஆவார். சமண இலக்கியங்கள் (வடமொழி, தென்மொழி) இவர் திருநாமங்களை இவ்வாறுப் போற்றும்,

ஆதி, ஆதிபகவன், ஆதிநாதர், ஆதிதேவன், ஆதிமுதல்வன், ஆதிமூர்த்தி, ஆதிமூலர், ஆதிபிரம்மா, ஆதிமுதற் கடவுள், ஆதிநாள் அரசர், ஆதீஸ்வரன், ஆதிசக்கரவர்த்தி, ஆதிபட்டாரகர், ஆதிநாயகன், ஆதிஜினன், ஆதிராஜா, ஆதிபரமேஸ்வரன், ஆதித்தீர்த்தன்,

எனப் போற்றப்படும் ரிஷபநாதர், எண்ணையும், எழுத்தையும் முதன்முதல் உலகின் கண் உருவாக்கினார். நிகண்டுகளில் தலைசிறந்ததாகக் கருதப்படும் சூடாமணி நிகண்டு,

“விருப்புறு பொன்னே யிற்குள் விளங்கவெண் ணெழுத்திரண்டும்
பரப்பிய வாதிமூர்த்தி பங்கயப்பாதம் போற்றி! – (நாலாவது தொகுதி – கடவுள் வணக்கம்)

என்றும், ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் என்னும் நூலில்,

“சசிகளாதித்த ரொருகோடி வந்தோருருக்
கொண்டாடி கண்ட பரமனே
சமவசர ணேசனே இமையவர்களீசனே
சார்ந்தவர்க் கைந்தாருவே
இசையினா லெண்ணெழுந் தியம்புவித்தாயுநீ”

என்றுப் போற்றப்படுவதை நோக்குக. இதனால் அகரம் முதலிய எண்ணும், எழுத்தும் ஆதிபகவனிடம் இருந்துத் தோன்றியது என்பதைக் காணலாம்.

ஆதிபகவன் என்னும் சொற்றொடர்

ஆதி என்பதற்கு இங்கு முதல் என்பதுதான் பொருந்தும் என்று முன்னமே பார்த்தோம். ஆதிபகவன் என்பது முதல் பகவன் என்று ஆகும். இதனை தமிழ்ச் சமண இலக்கியத்தில் இருந்து சான்றுக் காட்டுவோம்.

“மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளேநீ யொடுக்கினை
ந்ன்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை-எனவாங்கு
ஆதிபகவனை அருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே” – திருக்கலம்பகம்

“ஆதிபகவன் அசோக வசலன்
சேதிபமுதல்வன் சினவரந்தியம் பகன்” – திருப்பாமாலை

“அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்” – தோத்திரத் திரட்டு

”பகவன்” என்பதற்கு அடியாருக்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் கேவல ஞானி என்றே பொருள் உரைத்திருக்கிறார். ”பகவன்” என்ற சொல் பல தமிழ்ச் சமண இலக்கியத்தில் காணலாம். அம்மேற்கோள்களைச் சுட்டுவதால் விரிவடையும் என்று இங்கு கொடுக்கப்படவில்லை.


முடிபு:

தேவர் பெருமான் “ஆதிபகவன் முதற்றே உலகு” என்றது முதல் சமணத் தீர்த்தங்கரரான “ஆதிநாதர்” என்பது உள்ளங்கை நெல்லிக் கனி”. இன்னும்மோற் எடுத்துக்காட்டு கொடுத்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.

சமணரான “அகளங்க தேவர்” என்னும் பன்மொழிப் புலவர் “தத்வார்த்த சூத்திரம்” என்னும் நூலில் 11ஆம் சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் ஆதி சப்தம் அநேகப் பொருள்களையுடைய தெனவும், சில இடங்களில் முதல் என்னும் பொருள் பெற்று வருமென்றும் உரை வரைந்துள்ளார். அதற்கு மேற்கோளாக,

“அகாரா தயோ வர்ணா
ரிஷபா தய்ஸ் தீர்த்தகரா இதி”

என்னும் சுலோகத்தைக் காட்டிப் பின்வருமாறு விரிவுரை எழுதுகிறார்.
“எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன, தீர்த்தங்கரர்கள் ரிஷப தேவரை முதலாக உடையர்” என்பதாகும்.

அவ்வாறே நம் குறளாசிரியரும் அகர வரிசையில் அ முதலாக வருவதுபோல, பின்வரும் பகவர்களுக்கு ஆதிபகவன் முதலாக உள்ளார் என்று கூறுவதை மேற்சொன்ன எடுத்துக்காட்டுடன் ஒப்புமை நோக்க குறளாசிரியன் உள்ளம் எளிதில் புரியும்.

இரா.பானுகுமார், (இரா.பா)
சென்னை
08.08.2010

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "Tamil Jains, தமிழ்ச்சம..."
 

Send by mail Print  Save  Delicious 

 

 

Date: Tuesday, 06 Jul 2010 10:29

Scientific evidence in Neelakeci, a Tamil literature
R.Banukumar

Preface

Neelakeci one among the five minor kavyas in Tamil literature, the others being Sulamani, Nagakumara Kavya, Uthayanakumara Kavya and Yasothara Kavya. Neelakeci, work based on logical (தர்க்கம்) analysis of the Indian philosophical systems such as the Buddhist school of philosophy, the Ajiika school of philosophy , the Sankaya school of Philosophy, the Veda school of Philosophy, the Vaishadika school of Philosophy and the Buthavada school of Philosophy that were prevalent in ancient India . The author’s name remains unknown. It was assumed by scholars that it was written between the 4th to 5th century CE based on the internal evidences available in the book. The book appears to be a refutation of the Buddhist work called Kundalakeci which is unfortunately lost now. Kundalakeci was included as one among the major kavyas of Tamil literature, the others being Cilapathikaram, Ceevagachintamani, Valaiyapathi & Manimekalai.

The book named is after a shudra woman called Neelakeci who learnt Jain school of Philosophy (Doctrine of Ahimsa – Non-Violence to all living beings) from a Jaina monk Munichandra and took oath to preach the doctrine of Ahimsa throughout the country. Hence she refutes the other schools of philosophies in order to highlight the supremacy of Ahimsa dharma (Jaina school of doctrine).

However, our focus here is to bring out the scientific knowledge among Tamils in those early times. Neelakeci clearly brings out & talks about some of the scientific know how, such as “What causes a Rainbow to appear”, the difference between velocities of Light and sound, the fact that plants do experience sensations and have life, Infinite numbers.

Scientific evidence in Neelakeci

To quote an instance from Neelakeci which clearly illustrates the formation of Rainbow in compliance with the modern science?

First Instance:

In the sixth chapter “Ajivakavada sarkam”, Neelakeci refutes the Ajikava School of philosophy. During the debate the “Puranan”, a leader of this school, argues that his God’s appearance is unintelligible and inexplicable as the rainbow appears in the sky. For this Neelakeci replied:


வானிடு வில்லின் வரவறி யாத வகையனென்பாய்
தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா
மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்
றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே - 684 (நீலகேசி)

In this stanza which is important is the line ’மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்’. Let us see the meaning of the phrase of this line.
வானிடு வில் = வானவில் = Rainbow
சுடரான் = சுடரோன் = Sun.
கதிர் = Rays of Sun
வீழ்புயன்மேற் = நீர் மேகத்திற் மேல் = over the clouds containing water particles.

In translation, it states that a Rainbow is formed when the rays of the sunlight shines over the clouds (நீர்மேகம்) which contain water particles. This is an accepted theory of modern physics.

(Refer: Wikipedia - A rainbow is an optical and meteorological phenomenon that causes a spectrum of light to appear in the sky when the Sun shines onto droplets of moisture in the Earth's atmosphere. They take the form of a multicolored arc, with red on the outer part of the arch and violet on the inner section of the arch. http://en.wikipedia.org/wiki/Rainbow)

Conclusion:

From the above it is clearly evident that, at least during the 4th CE, Tamils were aware of the scientific reasons for the formation of a rainbow. This might be the first written evidence available to us since the modern age.

 

Author: "Banukumar (noreply@blogger.com)"
 

Date: Monday, 15 Feb 2010 11:43

இந்திரனும் சிறுகுரங்கும்!

நாம் வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம். சிலர்
செல்வந்தர்களாகவும், பலர் ஏழ்மையில் உழல்பவராகவும் இருக்க
காணுகிறோம். இந்நிலைமை ஏன்?

சிலர் பரம்பரைப் பணக்காரர்களாகவும், சிலர் தன் உழைப்பால் பெரிய நிலைக்கு
உயர்ந்தவர்களாகவும், சிலர் பரம்பரைப் பணக்காரர்களாகயிருந்து பின் தாழ்வுற்று
வறியவர்களாகவும், சிலர் ஏழ்மையில் பிறந்தாலும், தன் சுயமுயற்சியால் பெரும் பணக்காரர்களாக ஆகுவதையும் நாம் பார்க்கிறோம். ஏன் இந்த நிலை?

சிலர் பெரும் பணக்காரர்களாக இருந்தும் மனத்தளவில் பிச்சைக்காரர்களாக
இருப்பதையும், மேலும் சிலர் பிச்சையெடுத்து உண்ணும் நிலைமையிலும்,
பிறருக்கு ஈந்து மனதளவில் பணக்காரர்களாக திகழ்வதும் கண்கூடு. இதற்கு
காரணம் என்ன?

இதற்கெல்லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் காண முடியாது. ஆன்ம வழியில்
இதற்கு விளக்கம் தேடமுடியும். அப்படி விளக்கம் காண தேடியதின் விளைவாக
எழுந்ததுதான், சமயங்களின் பரிணமிப்புகளும், பலதரப்பட்ட சமயக் கோட்பாடுகளும்.

இதெற்கெல்லாம், கடவுள் காரணம் என்று சுலபமாக சொல்ல முடியாது.
இதேல்லாம், கடவுளின் செயல் என்று சமணமும் ஒப்புக் கொள்வதில்லை.
கடவுளின் செயல் என்றால் அதற்கு முழுச் சமாதானம் கூற முடியாது. இது நிற்க!

மேலே கூறியவற்றிக்கு சமாதானம் கூறும் பொருட்டு சமணம் ஊழ்வினை வாதத்தை முன் நிறுத்தியது. ஒருவன் ஒரு பிறவியில் செய்த பாவ, புண்ணியப் பயன்களை வரும் பிறவிகளில் அவன் அனுபவித்தே ஆகவேண்டும். பணக்காரரின் மகனாக பிறப்பவன், தந்தையின் மறைவிற்குப் பிறகு நொடிந்து, வறுமைப் பற்ற பிச்சைக்காரன் ஆகிறான். மற்றொருவனோ, ஏழ்மையில் பிறந்தாலும், பின் செல்வச் செழிப்பிலே திளைக்கிறான். இதற்கு காரணமாக அமைவது ஊழேயாம்.

இவற்றை வெகு அழகாக விளக்குகிறார் திருத்தக்க தேவர் பெருமான்.

“பெரிய இன்பத்து இந்திரனும்
பெட்ட செய்கைச் சிறுகுரங்கும்
உரிய செய்கை வினைப்பயத்தை
உண்ணும் எனவே உணர்ந்து அவனை
........”
- சீவக சிந்தாமணி (2815)

என் உரை:

தேவருலகின் தலைவனான இந்திரன், சுகபோகங்களில் திளைப்பதும், சிறுமைச்
செயல்கள் செய்து திரியும் சிறிய குரங்கு அனுபவிப்பதும் தத்தம் நல்வினை,
தீவினைப் பயன்களாலேயாம்.

அவர் மேலும் அப்பாட்டை இவ்வாறு முடிக்கிறார்.

”அரியர் என்ன மகிழாது
எளியர் என்ன இகழாது
இருசார் வினையுந் தெளிந்தாரே
இறைவன் நூலும் தெளிந்தாரே”

அதனால், ஆகா இவர் பெரியவர் என்று மகிழாமல், அய்ய.. இவர் சிறியவர்
என்று இகழாமல், அவர்களின் நிலைமைக்கு அவர்கள் வினைப்பயன்களே
என்று தெளிந்து, நல்வினை/தீவினை அகற்றி இறைவன் நிலையடையுங்கள்
என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

இதேக் கருத்தை கணியன் பூங்குன்றனார் இவ்வாறு பாடுவதைப் பாருங்கள்.

“..திறவோர் காட்சியிற் தெளிந்தனம் ஆகலின்
மாட்சியிற் பெரியோரை வியத்தகும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே....”



இரா.பானுகுமார்

 

Author: "Banukumar (noreply@blogger.com)"
 

Send by mail Print  Save  Delicious 

 

 

Date: Friday, 12 Feb 2010 15:48


அண்ணாத்தல் செய்யாது அளரு!


நிறைய அன்பர்கள் கேட்டு விட்டார்கள். ’ஏன் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக
எழுதுவதில்லை’. நிறைய எழுதவேண்டும்தான். நேரம் கிடைக்கவில்லை என்று
நேரத்தின்மேல்ப் பழிப்போட விரும்பவில்லை. :-)

இதோ இப்போது எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இன்று, என்
இனிய நண்பர் சுரேஷிடம் பேசிக் கொண்டியிருக்கும் போது திருக்குறளில்
’அண்ணாத்த செய்யுமாம் அலரு’ அப்படி என்று வருமாமே, அதற்கு என்ன
பொருள் என்று கேட்டார். திடுதிப்புன்னு கேட்டா என்னாலச் சொல்ல முடியாது.
ஆனா ‘அண்ணாத்தல் செய்யாது அளரு’ என்று புலால் மறுத்தலில் வரும் குறள்
அது. கொஞ்சம் டைம் கொடுத்திங்கனா, பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று
அப்போதைக்கு நழுவினேன்.

ஆனாலும் புலால் மறுத்தல் அதிகாரத்தில் வரும் அந்தக் குறள் என் மனதில்
எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. வீட்டிற்கு வந்தவுடனே பரிமேலழகரைப்
புரட்டினேன்.

”உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளரு” - திருக்குறள் (255)

பரி என்னா சொல்றார்னா?..

”உயிர் நிலை ஊன் உண்ணமை உள்ளது -ஒரு சார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளரு அண்ணாத்தல் செய்யாது- ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின் அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்தற்கு அங்காவாது”.

அவரே தன் சிறப்புரையில் (விரிவுரை)..

”உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக ஏனைய பலவாய் வருதலின் ’உண்ணாமை உள்ளது உயிர்நிலை’ என்றார். ‘உண்ணின்’ என்பது ‘உண்ண’ எனத் திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் எனபதாம். கொலைப் பாவம் கொன்றார் மேல் நிற்றலின் பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது”.

அவரின், விரிவுரையில் ”உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக ஏனைய பலவாய் வருதலின் ’உண்ணாமை உள்ளது உயிர்நிலை” என்ற வாக்கியத்தை படித்தவுடன் திருக்குறளின் அத்தாரிட்டி என்று போற்றப்படும் ஒரு உரையாசிரியர் எப்படி இவ்வாறு எழுதினார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

என்ன சொல்லவரார்னா? விலங்குகளைக் கொன்று தின்றால் அவற்றின் எண்ணிக்கைகள் குறைந்துக் கொண்டே வருமாம். அதனால், ஊன் உண்ணாமல் இருப்பதே உயிர்நிலை என்று சொல்கிறார். ஊன் உண்ணாமலிருந்தால் அவைகள் பலவாக பெருகுமாம். இது எப்படியிருக்கு பார்த்திங்களா? லாஜிக் உதைக்கிறதே!

குறளின் உரை சரியில்லையே! பின் எப்படி உரை வரும்.

என் பார்வையில்

உயிரின் இயல்புகளில் ஊன் உண்ணாமையும் ஒன்று. Instinct Characteristics என்பார்களே அதுமாதிரி. ஊன் உண்ணாமை. அஃதாவது, உயிரின் பலப் பண்புகளில் ஊன் உண்ணாமை என்ற இயல்பும் ஒன்று. இது உயிரைப் பற்றியச் சமணப் புரிதல்.

’உண்ணாமை யுள்ள துயிர்நிலை’ - ஊன் உண்ணாமையே உயிரின் பண்பு அல்லது நிலை. உயிரின் பண்புக்கு மாறாக ஊன் உண்டால் மிகவும் அஞ்சத்தக்கக் கதியாகிய நரகக் கதிக்கு சென்று அழுந்திவிடுவீர்கள். அப்படி அழுந்தப் பட்ட உயிர் நரகத்தில் இருந்து வெளியே வரமுடியாது. நரகம் வழிவிடாது என்பதுதான் அக்குறளின் கருத்து.

இது இவ்வாறாருயிருக்க, ஊன் உண்டால் உயிர்கள் குறைந்துவிடும் என்று சொல்வது இங்கு பொருந்தாது. எவ்வாறெனின், உயிருக்கு அழிவில்லை. உடல்தான் அழிகிறது. மனிதக் குலம் இப்பூமியின் கண் தோன்றுவதற்கு முன்னமே, டைனாசோர் போன்ற விலங்குகள் இப்பூமியின் கண் இருந்து மறைந்ததாக நாம் அறிவோம். மனிதர்கள் உண்டா அழிந்துப் போயின? அல்லவே! இயற்கையாய் அவைகள் அழிந்துப்பட்டன.

இதனால், பரிமேலழகர் உரை இக்குறளுக்கு முற்றும் முரண்.


இரா.பானுகுமார்,
சென்னை.

 

Author: "Banukumar (noreply@blogger.com)"
 

Send by mail Print  Save  Delicious 

 

 

Date: Wednesday, 09 Dec 2009 16:46

தாமரைக் கண்ணான் உலகு



தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு – திருக்குறள் (1103)

(புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் உள்ளது)

அகத்திய குழுமத்தில் எழுதும் போது இக்குறள்ப் பற்றி விவாதிக்கப்பட்டது. குறளின் சமயத்தை இக்குறளில் ஏன் தேடுகிறார்கள் என்று நினைத்துச் சிரித்ததுண்டு :-)

நேற்று முன்தினம் நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்து ”தாமரைக் கண்ணான் உலகு” பற்றிச் சொல்ல சொன்னார். ஏதோ ஒரு யாஹீ குழுமத்தில் மடலாடல் நடந்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். அவர் அப்படித்தான்! திடீரென்று கைப்பேசியில் அழைப்பார். ஏதாவது கேட்பார்? எங்காவது எழுதுகிறீர்களா? என்றால் சிரித்துவிட்டு கட் செய்து விடுவார்.


உரையாசிரியர்களின் பார்வை:

மணக்குடவர் உரை:

தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம்.
இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

பரிமேலழகர் உரை:

தாம் வீழ்வார் மென் தோள்துயிலின் இனிதுகொல் – ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு – அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. இப்பெற்றித்தாய் துயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது என்னும் கருத்தால் “இனிது கொல்” என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.


(அப்பா! எப்படியெல்லாம் மழுப்புகிறார் ;-)

சமணம் சார்ந்த உரை

யான் முன்னமே சொல்லியது போல (என் மற்ற கட்டுரையைப் படிக்கவும்) மணக்குடவர் உரை சுருக்கமும், நேரிதின் பொருளும் கொண்டதாகயிருக்கிறது.

இந்திரன் உலகு


சமணக் கொள்கைப்படி, நல்வினைக்கட்டால் தேவக்கதியை அடைந்த உயிர்கள் தேவலோகத்தில் தேவர்களாக பிறந்து பலத்தரப்பட்ட சுகங்களையும் அனுபவிக்கும். அச்சுகங்களை எழுத்தில் சொல்ல முடியாது. :-) இது நிற்க!

புணர்ச்சியில் மகிழும் தலைவன், இவள் உடலைத் தழுவதால் கிட்டும் சுகத்தை விட சுவர்க்கத்தில் கிடைக்கும் சுகம் இனிதாக இருக்க முடியுமோ? முடியாது! என்று நினைக்கிறான்.


இப்போது சொல்லுங்கள் சுவர்க்கம் என்றால் அது இந்திரலோகமா? அல்லது திருமால் உறையும் வைகுண்டமா? நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

வைகுண்டத்தில் ”சுவர்க்கத்துக்கு” இடம் உண்டென்றால், அது தாமரைக் கண்ணான் உலகு தான்!! ;-)

உரையின்மையா?

பரிமேலழகர் “தாமரைக் கண்ணான்” என்ற பெயர் இந்திரனுக்கு இல்லை என்ற வாதம் இங்கு நிற்காது? எங்கனமெனின், “எண்குணத்தான்”, ”அறவாழி அந்தணன்” போன்ற பெயர்கள் அருகனைக் குறிப்பதாக எல்லா நிகண்டுகளும் கூறுகின்றன? பரிமேலழகர் கூற்றை ஏற்றுக் கொண்டால், இக்கூற்றையும் தான் ஏற்றாக வேண்டும் இல்லையா?! “எண்குணத்தான்” என்ற பெயர் சிவபிரானுக்கு இன்மையினால் தானே சிவபிழம்பு என்று போற்றப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சூடாமணி நிகண்டை மாற்றி எழுத முயன்றார். சிவன் பெயர் தொகுதியில் “எண்குணத்தான்” என்ற பெயரை சேர்க்க முயன்றார்! இந்த ஒரு சான்றே போதும்!
திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள குறட்ப்பாக்கள் அருகனைக் குறிக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்!

அன்பர்கள் சிந்திக்கவும்!

திரு.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தன் கட்டுரையில் “தாமரைக் கண்ணான்” இந்திரனைக் குறிக்கின்ற சில குறிப்புகளை கொடுத்திருக்கிறார். பார்க்கவும்!

http://www.sishri.org/indran.html



இரா.பானுகுமார்,
சென்னை 44

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "Tamil Jains, Jainism, Thirukural, samana..."
 

Send by mail Print  Save  Delicious 

 

 

Date: Sunday, 15 Nov 2009 22:06

http://sivathamiloan.blogspot.com/2009/11/blog-post.html

சிவத்தமிழோன் என்ற நண்பர் தன் வலைப்பதிவில் திருவள்ளுவர் திருவுள்ளம் சைவம் என்று மிக நன்றாகவே எழுதியிருந்தார். படித்தவுடன் ஒவ்வொருக் கருத்துக்கும் என்னுடைய பின்னூட்டை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்,சில பின்னூட்டுக்கள் மற்றும் கொடுத்து அவரின் பதில் எவ்வாறு அமைகிறது என்று பார்க்க நினைத்தேன். பதில்கள் யான் எதிர்ப்பாத்த மாதிரிதான் இருந்தன. அவரிடம் பின்னூட்டு தொடர்வதில் பயன்னில்லை, ஆதலின், என் கருத்தை ஈண்டு பொதுவாக முன் வைக்கிறேன்!

தமிழ்க் குழுமங்களில் நிறைய முறை திருக்குறள் பற்றி அலசியாயிற்று! திருக்குறள் பற்றிய வழி வழி வரும் சில கர்ண கதைகளை முழுமையாக நம்புகிறார்கள். நம்புவதோடு மட்டும் இல்லாமல் அதையே தங்களுக்கு ஆதரவாக குறிக்கவும் செய்கிறார்கள். இதில் சில விதிவிலக்கான அறிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய இணைய தமிழறிஞர்கள் கவனிக்க தவறும் சில கருத்துக்களை சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன்.

திருக்குறள் சமயம் பற்றி ஆராயும் வலைஞர்கள் கவனிக்க வேண்டியவை

1. திருக்குறள் சமயம் அதன் கடவுள் வாழ்த்தில் தான் ஆராய வேண்டும். திருக்குறளில் இந்திரனைப் பற்றி, தாமரைக் கண்ணான் பற்றி, அந்தணர் பற்றி, காமத்துப் பாலை பற்றி சொல்லியிருக்கிறது போன்ற வாதங்கள் ஆராய்ச்சிக்கு எடுபடாது.

2. திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் குறிச்சொற்களான “ஆதிபகவன்”, ”வாலறிவன்”,
“அறவாழி அந்தணன்”, ”ஐந்தவித்தான்”, ”மலர்மிசை ஏகினான்”, “எண்குணத்தான்”, “வேண்டுதல் வேண்டாமையிலான்” போன்ற சொற்றொடர்களுக்கு இலக்கணம் காண முயன்றாலே குறளின் ஆசிரியர் சமயத்தை எளிதில் உள்ளலாம்.

3. கடவுள் வாழ்த்தில் வரும் குறிச் சொற்களைப் பற்றி நிகண்டுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.

4. திருக்குறள் நீதி நூல். அது ஒரு வாழ்வியல் நூலும் கூட. அதில் பலதரப் பட்ட செய்திகள் சொல்லப்பட்டிருக்கும். காட்டாக, ஒரு நாட்டின் மன்னன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் குறளில் (குறள்: 550)மரண தண்டனையைப் பற்றி கூறியிருக்கிறது அதனால், அது சமண நூலாகாது என்று துணிகிறார்கள். இக்குறளில் சமயத்தை ஏன் தேடுகிறார்கள்?

5. தமிழில் தோன்றிய நூற்களில் மிக சிறப்புடைத்து திருக்குறள். அக்குறளை ஏன் சைவத் திருமுறைகளில் ஒன்றாக வைக்கவில்லை என்ற தமிழ்த் தென்றல் திரு.வி.காவின் கேள்விக்கு இதுவரை யாரும் விடைக் கண்டதாகத் தெரியவில்லை. அவரின் கட்டுரையிது.

http://www.treasurehouseofagathiyar.net/37300/37332.htm
http://www.treasurehouseofagathiyar.net/37300/37357.htm

6. சமகால இலக்கியங்கள் குறளின் சமயத்தை ஆராய துணைபுரியும்.


சிவத்தமிழோன் அவரின் கட்டுரைக்கு என் மறுப்புரை


1. அவர்: //பகவன் எனும் சொல் சமணத்துடன் தொடர்பானதாயின் அது சமண நூல் ஆகிவிடுமா என்ன? இன்று வேதம்,வேதாகமம்,வீபூதித் திருநாள் என்பன கிருஷ்தவத்துள் புழக்கத்தில் இருப்பது கண்கூடு!//

என் பதில்: வேதம், வேதாகமம், வீபூதித் திருநாள் போன்ற சொல்லாடல்கள் இன்றைய கிருத்துவர்கள் உபயோகித்தாலும் அவை கிருத்துவ பதங்கள் இல்லை என்ற தங்கள் கருத்தை யான் ஆமோதிக்கிறேன். கிருத்துவ பைபிள் தமிழாக்கம் செய்தவர்கள் சைவத் பெருந்தகையர்கள் என்பதை தாங்கல் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
http://www.treasurehouseofagathiyar.net/27700/27752.htm

இன்று இச்சொற்களை கிருத்துவம் உபயோகித்தாலும் அவைகள் முதன்
முதலிலேயே சைவத் தமிழ் இலக்கியங்களில் விரவி வருவதைக் கொண்டு அவை கிருத்துவ சொற்றொடர்கள் அல்ல என்பதை எளிதில் உள்ளலாம். :-)

அவ்வாறே “ஆதிபகவன்” என்ற சொல்லாட்சி முதன் முதல் சமணத் தமிழ் இலக்கியங்களில் விரவி வந்து பின்னாளில் மற்ற சமயங்கள் எடுத்தாண்டன எனறு யான் சொன்னால் தாங்களும் ஆமோதிப்பீர்கள் என்று கருதுகிறேன். ;-)


2. அவர்: //சமண சமய அறிமுகத்தால் தமிழில் அச்சொல் புழக்கத்தில் இருந்தமையால் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் சமணநூலே திருக்குறள் என்பதற்கு எந்தவித சிந்தனையும் இன்றி இதையே சுட்டுகின்றனர்.//

என் பதில்: அதைத்தான் யானும் கேட்கிறேன். குறளின் கடவுள் அதிகாரத்தில் உள்ள சொற்றொடர்களை ஏன் சைவம் பொன்னேப் போல் எடுத்தாளவில்லை? மாறாக, அவைகள் சமண இலக்கியங்களில் விரவி வருகின்றனவே! ஏன் வரவில்லை என்றால், அவைகள் சமணத் சொற்றொடர்கள்! ஆகையால், சைவ இலக்கியங்களில் விரவி வரவில்லை. என்னை?


3. அவர்: //திருக்குறளுக்கு சமண நூல் எனும் மாயை சூட்டியவர்கள் மறுபிறப்புக் கொள்கையை மறந்துபோனது ஏனென்று விளங்கவே இல்லை.//

யான்: தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. சமணத்தில் “மறுபிறப்பு” இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? மறுபிறப்பில்லை என்றால் ஊழ் இல்லை, சமணக் கோட்பாடே தோன்றியிருக்காது! :-)


4. அவர்: //எண் குணத்தான் என கடவுளை திருக்குறள் கூறுகின்றது.//

யான்: ஆம் கூறுகிறது! தமிழில் தோன்றிய நிகண்டுகளைப் பார்க்கவும். “எண்குணத்தான்” அருகக் கடவுளுக்கே உரியவை என்று அவைகள் பகரும். சிவபிரானுக்கு எண்குணத்தான் என்று யாண்டும் சொல்லப்படவில்லை.


5. அவர்: //சமண, பௌத்தப் புலவர்கள் திருவள்ளுவரையோ அன்றி
திருக்குறளையோ போற்றிப் புகழ்ந்ததாக இட்டுக்கட்டிக்கூட காட்டமுடியாது.//

யான்: :-) என்ன ஒரு மறுக்க முடியாத ஆதாரம். தங்களுக்கு சமணத் தமிழ் இலக்கியங்களில் பயிற்சி இல்லை என்பதைத் தான் தங்களின் கூற்று தெரிவிக்கிறது. சொல்ல போனால் நான் கேட்டிருக்கவேண்டிய கேள்வியிது. ;-) சமணர்கள் குறளைத் தங்கள் வேதமாகக் கூறியிருக்கிறார்கள். ”எம் ஒத்து”, என்றும் ”தேவர் உரைப்ப தெளிந்தேன்” (காலத்தால் முந்திய ஆதாரம்) என்றும் கூறியிருக்கிறார்கள். மற்ற சமயத்தவர் அவ்வாறு கூறியதாக யான் படித்ததில்லை. அவ்வாறு வரும்மின், சுட்டவும். திருத்திக் கொள்கிறேன் ஐயா!


6. அவர்: //பொதுநூலாக எழுத வெளிக்கிட்டபிறகு சிவன் எனும் பெயரை தவிர்த்திருப்பார் வள்ளுவர்.//

யான்: ஆமாம். தாங்கள் சொல்வது சரிதான். ”சிவ” என்ற சொல்லாட்சி முதன் முதல் பயின்று வரும் இலக்கியம் “சிலப்பதிகாரம்”. அந்த சொல்லாட்சியும் ‘அருகப்பதவியைச் சுட்ட” “சிவகதி நாயகன்” என்று இளங்கோவடிகள் கூறியிருக்கிறார். ”பிறவாயாக்கை பெரியோன்” என்று
தான் சிவனும் போற்றப்படுகிறாரே தவிர “சிவனுக்கு” சிவன் என்று பயின்று வரவில்லை. :-)


7. அவர்: //எனவே உள்ளீடு இல்லாத சமயங்களின் உரைகளை அச்சமயங்களின் நூல்களை படித்து கேட்டு காலத்தை வீணாக்குவது தவறு என்கின்ற சைவ சித்தாந்த மரபில் திருக்குறளை எடுத்துக்காட்டுகளாக நேரடியாக பயன்படுத்தியிருப்பதில் இருந்து திருக்குறள் சமணநூல் அல்ல என்பதும் சைவநூலே என்பதும் தெளிவாகிறது.//

யான்: 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ பெரிந்தகையான சிவாமிநாத தேசிகர் எழுதிய “இலக்கணக் கொத்து” என்ற நூலைப் படித்திருக்கிறீர்களா?
http://www.treasurehouseofagathiyar.net/27900/27989.htm


8. அவர்: //சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்ற சமயசார்பற்ற தன்மை கொண்டு இதை உறுதிசெய்வர்.//

யான்: அப்படியா? சிலப்பதிகாரம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இளங்கோவடிகள் சைவப் புலவர் எனின், அருகருக்கு ஏன் குறளின் கடவுள் வாழ்த்தில் வரும் குறிச்சொற்களைப் வைத்துப் போற்றிப் புகழ்ந்துப் பாடியிருக்கிறார்? :-)


9. அவர்: //திருக்குறள் ஏனைய சமயங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கொண்டது என்பதையும் சைவ சித்தாந்த நூலே என்பதையும் திருக்குறளை ஆராய்வுசெய்து வாலையானந்த அடிகள் 1926- 27களில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்த திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் நூல் மெய்கண்டதேவரின் குருபூசையன்று மறுபதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது.//

யான்: திருக்குறள் சமண நூலே! சமண தமிழ் நூட்களை பின்னாளில் மாற்ற முயன்ற வரலாறு தமிழ் அறிஞர்கள் நன்கறிவார்கள்.

வாழிய நல்லறம்! வளர்க திருவறம்!!


இரா.பானுகுமார், (இரா.பா)
சென்னை.

Date: Sunday, 11 Oct 2009 19:02

பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - திருக்குறள் (322)

இக்குறள் குறித்து மின்தமிழ் குழுமத்தில் அலசப்படுகிறது. சுட்டியைப்
பார்க்கவும்.
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/d719a8cfe875af3c/fd09d3b0a544fb9c#fd09d3b0a544fb9c


இக்குறளில் “நூலோர்” என்பது யாரைக் குறிக்கிறது என்பது தான்
இங்கே விவாதப் பொருள்.

எந்த குறளின் கருத்தையும் அறியும் முன் அக்குறள் எந்த அதிகாரத்தில்
கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இக்குறள்
கொல்லாமை என்னும் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதைக்
கருத்தில் கொள்க. இது நிற்க.

"பரஸ்பரப்கிரகோ ஜீவானாம்" - என்பது ஆச்சாரியார் உமாசுவாமி அருளிய
"தத்வார்த்த சூத்திரம்”. இப்பாட்டின் பொருள்: பகிர்ந்து உண்டு, எல்லா
உயிர்களையும் காத்தலே உயிரின் நோக்கம். இதன் எதிரொலியே குறளின்
“பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்” என்பது.

இன்னுமொரு எ.கா:

”பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம்


நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை


மகாவீரர் காலத்திற்கு பிறகு, ஜைன ஆகமங்கள் தொகுக்கப்பட்டன.
இருசாரார்க்கும் (இல்லறத்தார், துறவறத்தார்), பொதுவாக “கொல்லாமையே”
தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது. “ஒன்றாக நல்லது கொல்லாமை”
என்ற குறள் இங்கு கருதத்தக்கது.

இக்குறளுக்கு பரிமேலழகர், “அறநூலை உடையார் துறந்தார்க்குத்
தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்” என்று உரை
செய்திருக்கிறார். இது பொருந்தாதாம்! இங்கு துறவறத்தார்க்கு சொல்லப்பட்டதாக
பொருள் படும்படி, வலிந்து பொருள் கூறுகிறார். இஃது சமணக் கொள்கையை
மறைக்கவெனில் வேறில்லை!

இரா.பானுகுமார்,
சென்னை

 

Author: "Banukumar (noreply@blogger.com)"
 

Send by mail Print  Save  Delicious 

 

 

Date: Monday, 28 Sep 2009 15:44

ஜினவாணி (சரஸ்வதி)

உபாத்தியாயர் மற்றும் ஜினசுருதி

கல்விக்கு ஏற்றம் கொடுத்து இவ்வுலகில் மனிதம் நிலைப் பெற முயன்ற சமயங்களில் சமணம் முதன்மையானது என்றால் அது மிகையாகாது! சமணத்தில் கற்றல், கற்பித்தல் ஆகிய செயல்கள் புண்ணியச் செயல்களாக (நற்கட்டு) கருதப்படுகிறது. சமணகர்கள் தினம் வணங்கவேண்டிய
அரகந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள், ஜின தர்மம், ஜின சுருதம், ஜின சைத்தியம், ஜின சைத்தியாலயம் என்னும் ஒன்பது தேவதைகளுள் உபாத்தியாயர் - கற்பிப்பவர் (வாத்தியார் என்று பின்னாளில் மருவியது) மற்றும் “ஜினசுருதம்” (ஆகமங்களைக் கற்றல்) என்னும் ஜினாகமங்களும் குறிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜினசுருதம், ஜினசுருதி என்ற பெயர்கள் ஜைன ஆகமங்களைக் குறிக்கும்.

ஜினசுருதம்

தீர்த்தங்கரர்கள் வாலறிவு (கேவல ஞானம்) என்னும் முழுதுணர் ஞானத்தை அடைந்தவுடன், தான் பெற்ற வரம்பற்ற அறிவையையும், உயிர்கள்
உய்ய அடைய வேண்டிய அறத்தையும் உரைக்க தேவேந்திரனால் ஏற்படுத்தப்படும் “சமவசரணம்” என்னும் அறஉபதேச மண்டபத்தில் தியான ரூபியாக எழுந்தருளுவார்கள். அப்போது அவரிகளிடமிருந்து திவ்யமயமான ஒலி பிறக்கும். இதுவே “திவ்யதொனி” எனப்படும். தீர்த்தங்கரர்கள் உதடுகள் அசையாமலே இந்த த்வனி பிறக்கின்றன. அவ்வாறு வெளிவரும் ஓசையானது கம்பிரமாகவும்,மனத்திற்கு இனிமையாகவும்,குற்றமற்றதாகவும்,பூவுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கேட்கும்படியாகவும் இருக்கும். இது தீர்த்தங்கரர்களுக்கு ஏற்படும் எண்வகை அதிசயங்களில் ஒன்று! கணதரர்கள் இவற்றின் பயன்களை பின்னர் வரும் சந்ததிகளுக்கும் பயன்படும் வண்ணம் ஆகமங்களாக தொகுத்தார்கள். அப்படித் தொகுத்த திருநாளே “சுருத பஞ்சமி” என்று குறிக்கப்படுகிறது.


சரஸ்வதி அல்லது ஆகமஸ்வரூபி

”திவ்யதொனி” என்பது பெண்பால் ஈற்றுச் சொல்லாகிய இகரத்தில் முடிவதால் ஜினாகமங்களைப் பெண்ணாக உருவகம் செய்து அவற்றுக்கு ”ஜினவாணி” என்றும் ஒலியாக வெளிப்பட்டதால் “வாக்தேவி” எனவும் குறிப்பிட்டார்கள்.மேலும், ஆகமங்ள் கூறும் அறங்கள் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக கருதப்படும் நீருடன் ஒப்புமைப்படுத்தப்பட்டன. எப்படி நீர் மேட்டிலிருந்து கீழ் நோக்கி பயணிக்குமோ, உயர்ந்த உன்னத இடத்தையடைந்த தீர்த்தங்கரர்கள் வாயிலாக எளியநிலையில் உள்ள மனதர்களுக்கு அவைகள் பாய்ந்து வருவதால் அவற்றை நீருடன் ஒப்புமை பெறதக்கவகையில் “சரஸ்வதி” என்றும் அழைக்கப்பட்டது. இவ்வாகமங்கள் மனித வாழ்க்கைக்கு “ஐஸ்வர்யமாக” கருத்தட்டதால் இவை “ஜினஐஸ்வரயம்” என்றும் அழைக்கப்பட்டது.

பெண்ணாக உருவகித்தல்

நிகழ்க்கால தீர்த்தங்கரர்களில் முதல்வராகக் கருதப்படுபவர் “ஆதிநாதர்” என்று அழைக்கப்படும் “ஆதிபகவ”னாவார். இவரே முதன் முதல் எண்களையும், எழுத்துக்களையும் முறையே தம் மகள்களான பிராம்மி, சுந்தரி என்பவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். (இன்றும் கல்வெட்டில் எழுதப்படுகிற எழுத்துக்கு “பிராம்மி” என அழைக்கப்படுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது) இதையே “எண்ணோடு எழுத்திரண்டும் இயம்பிய ஆதிமூர்த்தி” என்று சூடாமணி நிகண்டு குறிக்கும். இதனால் சமணம் கல்வியை பெண்ணாக உருவகப்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.

வளரும்....


இரா.பானுகுமார்,
சென்னை 44

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "வாக்குதேவி, Tamil Ja..."
 

Date: Thursday, 13 Mar 2008 20:33

ஆதிபகவன் அருகனைக் குறிக்கும்!
- மஞ்சை வசந்தன்

கடவுள் வாழ்த்து என்பது சரியா?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - திருக்குறள் (1)

எழுத்துக்களில் எல்லாம் ‘அ’ என்னும் எழுத்தை முதலாக உடையன. அதுபோல், உலகம் ஆதிபகவனைக் முதலாகவுடையது என்று கடவுள் நம்பிக்கையாளர்கள் கருத்துக் கூறுகிறார்கள். ஆதிபகவன் என்பதற்கு கடவுள் என்று சிலரும், இறைவன் என்று சிலரும் பொருள் கூறி முறையே, கடவுள் வாழ்த்து என்றும் இறை வாழ்த்து என்றும் இந்த அதிகாரத்திற்குத் தலைப்பு சூட்டியுள்ளனர்.

ஆனால், இவ்வதிகாரத்திலுள்ள குறட்பாக்களை நுட்பமாக ஆய்வு செய்தால், இவ்வாறு பொருள் கொள்வது சரியன்று என்பது தெளிவாக விளங்கும்.

இதே அதிகாரத்தில்,

“தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது - திருக்குறள் (7)

தனக்கு உவமை இல்லாதது கடவுள் (இறை) என்றால் உவமையில்லாத கடவுளுக்கு “அ” எழுத்தை உவமை சொல்லி, முதல் குறள் எப்படி அமைக்கப்பட்டிருக்க முடியும்? அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பின் அது மேற்கண்ட குறளுக்கு முரண் அல்லவா? அப்படியென்றால், உவமையில்லாத கடவுளுக்கு உவமை கூறி, முதல் குறள் அமைக்கப்பட்டிருக்க முடியாது என்பது உறுதியாகிறது.

அதன்படி நோக்கின் முதல் குறளுக்கு உண்மையான வேறு பொருள் இருக்க வேண்டும். அந்த உண்மைப் பொருள் என்னவாக இருக்கும்? அதை அறிய, ஆதிபகவன் கடவுளைக் குறிப்பதா? அல்லது வரலாற்றில் வாழ்ந்த தலைவரைக் குறிப்பதா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளவேண்டும். வரலாற்றுச் சான்றுகளின் படியும், ஆதிபகவன் என்பவர் முதலாம் தீர்த்தங்கரராகிய அருகதேவர் (இடபதேவர்) ஆவார். அவருக்குப் பின் 23 தீர்த்தங்கரர்கள் இருந்தமையால், முதல் தீர்த்தங்கரர் ஆகிய இடபதேவருக்கு “ஆதிபகவன்” என்று பெயர் வந்தது. இது வரலாற்று உண்மை.

இவர்தான் முதன் முதலில் உலகுக்கு எழுத்துக்களைக் கற்பித்தார் என்பது சமணக் கொள்கை. அதன்படி நோக்கின், ‘அ’ என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட அனைத்து எழுத்துக்களும், ஆதி பகவனை மூலமாகக் கொண்டவை என்பது பொருள்.

அதாவது ‘அ’ முதலிய எழுத்துக்கள் எல்லாம் ஆதிபகவனை முதலாக உடையன “ஆதி பகவனிடமிருந்து வந்தவை) என்பதுதான் இக்குறளுக்குப் பொருள். இதுவே சரியான பொருள். அப்படிப் பொருள் கொள்ளும் போது, முரண் ஏதும் இல்லாத, வரலாற்றுக்கிசைந்த, சான்றுகளுடன் கூடிய பொருளாக அது அமையும். இங்கு ஏழாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆக, இக்குறளுக்கு உலகில் அகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஆதிபகவனிடம் தோன்றியது என்பதே சரியான பொருள் ஆகும். அதாவது, உலகுக்கு அறிவை வழங்கியவர் ஆதிபகவன் என்பது இக்குறளின் நுண்பொருள்.

எழுத்துக்களையும், எண்களையும், உழவித் தொழிலையும், உலகுக்குக் கொடுத்தவர் (கற்பித்தவர்) ஆதிபகவன் என்பது சமணர் கொள்கை. இம்மூன்றும் அவரே மூலகர்த்தாவாகக் கொள்ளப்பட்டார். அவரே எண்ணின் மூலம், அவரே எழுத்தின் மூலம். அவரே உழவின் மூலம் என சமணர்களால் போற்றப்பட்டவர் என்பதை ஆய்வில் கொள்ளவேண்டும்.

பரிமேலழகர் போன்ற உரையாளர் இக்குறளுக்கு உரை எழுதும் போது, ஏனைய எழுத்துக்களுக்கெல்லாம் ‘அ’ எழுத்தே அடிப்படை; அதிலிருந்தே மற்றய எழுத்துக்கள் பிறக்கின்றன. அதுபோல், கடவுள் உலகத் தோற்றத்திற்கு அடிப்படை என்று பொருள் கொள்கின்றனர். இவ்வாறு பொருள் கொள்வது முற்றிலும் சரியன்று.

காரணம், எழுத்துக்களின் முதல் எழுத்துத் தான் ‘அ’ எழுத்தே தவிர, மற்ற எழுத்துக்களின் தோற்றத்திற்கு ‘அ’ எழுத்து அடிப்படையானதன்று.‘உ’ என்ற எழுத்துக்கு ‘அ’ எழுத்து எப்படி அடிப்படையாக அமைய முடியும். ‘உ’ எழுத்து தோன்ற ‘அ’ எழுத்து அடிப்படையாக அமைவதில்லை.

“அகரம் ஏனைய எல்லா எழுத்துக்களோடும் நுண்ணியதாக கலந்தும், எல்லா மெய் எழுத்துக்களையும் இயக்கியும் நிற்றல் போல், இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராயும், உயிரற்ற பொருட்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன்” என்பது இக்குறளின் பொருள் என்கிறார். பாவாணரின் இக்கருத்து முற்றிலும் சரியன்று.

‘உ’ எழுத்தில் ‘அ’ எழுத்து எங்ஙனம் நுண்ணியதாகக் கலந்திருக்க முடியும்?
‘அ’ என்பதும் உயிர் எழுத்து.
‘உ’ என்பதும் உயிர் எழுத்து.

இரண்டும் தனித்து நிற்கவல்லன. அதன் காரணம் பற்றியே அவை உயிர் எழுத்து எனப்பெயர் பெற்றன. ஒர் உயிர் இன்னொரு உயிருடன் கலவாது. உயிர் மெய்யுடன் மட்டுமே கலக்கும். ஒவ்வொரு உயிரும் மெய்யெழுதுடன் சேர்ந்து உயிர் மெய்யெழுத்தை உருவாக்கும். அப்படியிருக்க ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கொள்வதும்; கூறுவதும் எப்படிச் சரியாகும்?

‘இ’ என்ற எழுத்தை எப்படி உச்சரித்தாலும் ‘அ’ ஒலி நுண்ணியதாய்க் கலப்பதை; கலந்திருப்பதை அறிய முடியவில்லையே.
க்+அ=க என்று சொல்லும்பொழுது ‘க’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளது வெளிப்படும். ஆனால், ‘இ’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளதை எவ்வாறு புலப்படுத்த இயலும்? அல்லது எவ்வாறு புரிந்துக் கொள்ள இயலும்?

எந்தவொரு எழுத்தையும் உச்சரிக்கும் போது வாய் திறந்திருக்கிறோம். வாய்த் திறந்தாலே அங்கு ‘அ’ என்பது நுண்ணியமாய் ஒலிக்கும். எனவே, எல்லா எழுத்துக்களிலும் ‘அ’ நுண்மையாகக் கலந்துள்ளது என்று கூறலாம் எனச் சிலர் கருதுவர். அங்காந்த வாயே அகரத்தின் இடமாயினும் (தொல்காப்பியப்படி), வாய்ந்திறந்தாலே ‘அ’ ஒலிப்பதாகத் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல. எழுத்தை நினையாது வாய்த்திறந்து பார்த்தால், ‘அ’ ஒலிப்பதைத் தோன்றிய தோற்றங்கூட இருக்காது.

வாய்த்திறப்பதால் ஒலி எழுவதில்லை. அணு அளவாவது ஒலிப்பதற்குரிய முயற்சி மேற்கொண்டால் தான் ஓசை எழும். இல்லையேல் எழாது என்பதே உண்மை. வாய்த்திறந்து ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மையை அறியலாம்.

“நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்டம் உச்ச
மூக்கற் றிதழ்நா பல்வணத் தொழியின்
வெவ்வேறு எழுத்தொலியாய் வரங்பிறப்பே”
- நன்னூல்

எனவே, ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கூறுவது சரியன்று.

அதன் வழி நோக்கின், ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களுக்கும் மூலமாக அமைவதாய்ப் பொருள் கூறுவது பொருந்தாது.
அதேபோல் ஆதிபகவன் என்பதை இரு பெயரெட்டுப் பண்புத் தொகை என்று பரிமேலழகர் கொள்வதும் சரியன்று.
அதாவது, ஆதி எனினும் கடவுள், பகவன் எனினும் கடவுள் எனவே, கடவுளைக் குறிக்கும் ‘ஆதி’ என்ற பெயரும் பகவன் என்ற பெயரும் ஒட்டி ஆதிபகவன் ஆயிற்று எனப்து பரிமேலழகர் விளக்கம்.

இது பெயரொட்டுப் பண்புத்தொகை என்பது ஒரே பண்பை கொண்ட இரு சொற்கள் ஒட்டி இருந்தால் மட்டுமே பொருந்தும்.
எடுத்துக்காட்டாக ‘சாரைப்பாம்பு’ சாரையன்றாலும் பாம்பு என்றாலும் ஒன்றேயாகும். இங்கு சாரை, பாம்பு என்று சொற்கள் ஒட்டி இரு பெயரொட்டு பண்புத்தொகை ஆகும்.

ஆனால், ‘ஆதிபகவன்’ எனபதில் ஆதி என்பதும் பகவன் என்பதும் வெவ்வேறு சொற்கள். ஆதிமூலம் இரு பெயரொட்டு பண்புத்தொகையாகின்றன. ஆனால், ஆதிபகவன் என்பதில் ஆதி என்பதற்குப் பொருள் வேறு. பகவன் என்பதற்குப் பொருள் வேறு.ஆதியாகிய பகவன் என்று அது விரியாது. காரணம், ஆதிபகவன் என்பது காரண இடுகுறிப் பெயராய் அமைந்து, ஒரு பெயராய் ஆனதாகும்.

மேலும் பரிமேலழகர், பதவுரை கூறும்போது ஆதி பகவனாகிய என்று விரித்துப் பண்புத் தொகையாக்குகிறார். கருத்துக் கூறும்போது ஆதியாகிய பகவன் என்று விரித்து இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாக்குகிறார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இவ்வாறு ஏன் அவர் செய்கிறார் என்றால், ‘ஆதி பகவன்’ என்பதை இரு பெயரொட்டு பண்புத்தொகையாக்குவதன் மூலம், ஆதிபகவன் என்ற சொல்லைக் கடவுளுக்குப் பொருத்திக் காட்டலாம் என்பதற்காகவே, அதாவது, ஆதி என்றாலும் கடவுள், பகவன் என்றாலும் கடவுள், கடவுளைக் குறிக்கும் இவ்விருப் பெயர்களும் ஒட்டி ஆதிபகவன் ஆயிற்று என்று கூறுவதன் மூலம், இக்குறளைக் கடவுள் மயமாக்கிவிடலாம் என்ற முயற்சிதான். ஆனால், இது தவறு என்பதை விளக்குவதற்காகத்தான் மேலே விரிவாக விளக்கினேன்.

இருபெயரொட்டுப் பண்புத் தொகையென்றால் ஆதிப்பகவன் என்று இருக்கவேண்டும். காரணம் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லெழுத்து மிகும். ஆனால், குறளில் ஆதிபகவன் என்றெ உள்ளது. ஆகவே, அது இருபெயரொட்டுப் பண்புத்தொகை அல்ல என்பது உறுதி செய்யப்படுவதை அறிய வேண்டும்.

ஆதிபகவன் என்றால் வாழ்ந்த தலைவர்களுள் ஆதியானவர் என்பது மட்டுந்தான் பொருளேயன்றி, அவர் உலகத்திற்கு மூலமானவர் அல்ல.எனவே, ஆதிபகவன் என்பது வரலாற்றில் வாழ்ந்த அருகதேவருக்குப் பொருந்துவதேயன்றி, புலனாகாத கடவுளுக்குப் பொருந்துவதன்று.

மேலும், எழுத்துக்கள் உருவானது அருக தேவனாகிய ஆதிபகவனிடம் என்று பொருள் கொள்ள ஆதாரங்கள் உள்ளன.

“விறுப்புறு பொன்எயிற்குள்
விளங்குவெண் ணெழுத்திரண்டும்
பரப்பிய ஆதிமூர்த்தி”

என்று மண்டல புருடர் தம் “சூடாமணி நிகண்டில்” 4ஆவது தொகுதியிலும்,

“கோதில்வருகன் திகம்பரம் எண்குணன் முக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்”

என்று கயாதர நிகண்டிலும், அருகதேவரே ஆதிபகவன் என்பதும், அவரே எழுத்துக்களை உலகிற்குக் கற்பித்தார் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி, முதல் அதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ள ‘எண்குணன்’, ‘ஆதிபகவன்’, ‘அறவாழி அந்தணன்’ என்பவை அருகதேவரையே குறிப்பன என்பதையும் மேற்கண்டவர்கள் உறுதி செய்கின்றனர்.

மேலும், “ஆதிபகவனை அருகனை” என திருக்கலம்பகம் (செய்யுள் 109) சுட்டுகிறது. எனவே ஆதிபகவன் என்பது அருகதேவரையே குறிக்கிறது என்பது அய்யத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது.

எனவே முதல் குறளுக்கு, உலகில் அகரத்தை முதலாகவுடைய எழுத்துக்கள் எல்லாம் ஆதிபகவனிடமிருந்து தோன்றியவை என்பதே பொருள். அறிவை உலகிற்குத் தந்தவர் ஆதிபகவன் என்பதே அதன் உட்பொருள்.

முற்றும்.


(இக்குறளுளைப் பற்றிய என் பார்வையைப் பிறகு எழுதுகிறேன்)


இரா.பானுகுமார்,
சென்னை.

 

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "தமிழ்ச்சமணம், ��..."
 

 

Date: Saturday, 16 Feb 2008 22:11

அறவாழி அந்தணன்

மலர்மிசை ஏகினான் என்ற கட்டுரையை எழுதிய போது தனிப்பட்ட மடல்கள் நிறைய வந்தன. சில பாராட்டியும் சில எதிர்த்தும் வந்தன. ஒரு அன்பர் அறவாழி அந்தணன் என்ற தொடர் அருகனுக்கு எவ்வாறு பொருந்தும் என்று எதிர்க் கேள்வி கேட்டிருந்தார். திருக்குறளில் ஒரு சில குறட்பாக்கள் சமணத்தைக் குறித்திருந்தாலும் சில குறட்கள் சமணத்துக்கு பொருந்துவதாக இல்லையே? என்று தமது மடலில் குறித்திருந்தார். அவர் மேலும் ‘அறவாழி அந்தணன்” என்ற சொற்றொடரில் இருக்கும் “அந்தணன்” என்ற சொல் எப்படி அருகனைக் குறிக்கும்? என்று வினவியிருந்தார். அவருக்கு பதில் மடல் எழுதியக் கையோடு எழுத ஆரம்பித்தக் கட்டுரைத் தான் இது!

அறவாழி

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது” - திருக்குறள் (8)

மேலே கூறப்பட்ட குறளில் வரும் “அறவாழி அந்தணன்” என்றத் தொடர்தான் இங்கு விவாதப் பொருளாக்கப்பட்டு வந்திருக்கிறது. இச்சொற்றொடருக்கு பொருள் என்ன?

1. அறவாழி அந்தணன் - அறக் கடலாகிய அந்தணன் என்று ஒன்றும்,
2. அறவாழி அந்தணன் - அறச் சக்கரத்தை உடைய அந்தணன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.

ஆனாலும் மேலே சொன்ன குறளுக்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பொருத்தே அந்த குறளின் முழுப் பொருளையும் உணர்ந்துக் கொள்ள முடியும்.
முதலாவது எடுத்துக்கொள்வோம். அறவாழி = அறக்கடல் என்று பொருள் கொண்டால்; அறக்குணத்தைக் கொண்ட அந்தணனை (கடவுளை) பற்றினால் (புணை) பிற (மற்ற) கடல்களை நீந்துதல் எளிது. இதையே புரியும்படி எழுதுகிறேன்.
“ அறக்கடலாகிய அந்தணனனை பற்றினால் பிறத்தலாகிய கடலைக் கடக்கலாம் என்றும் அப்படி பற்றாதவர்க்கு பிறவு ஆழியைக் கடப்பதன்பது அரிதாம்’.

இது பொருந்தாதாம் எப்படி?

அந்தணனை (கடவுளை) அறக்கடலாக உருவகித்தால் அவர் பாதத்தை எப்படி புணையாக அல்லது தெப்பமாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கடலை உருவகித்து கடலைக் கடக்கச் சொல்வது என்பது பொருள் குற்றம். பொருந்தாது என்னை?

சரி. இரண்டாவதுப் பொருளை எடுத்துக்கொள்வோம். அறவாழி = அற சக்கரம் என்று பொருள் கொண்டால்; அற சக்கரத்தை உடைய அந்தணனை (கடவுளை) பற்றினால் பிறவிக் கடலைக் கடக்கலாம். அஃதாவது,

“தர்ம சக்கரத்தையுடைய அந்தணனின் தாள் பற்றினால், பிறவிக் கடலைக் கடக்கலாம் என்றும் அப்படி பற்றாதவர்களுக்கு அக்கடலைக் கடக்க முடியாது என்பதாம்”

இங்கே அற சக்கரத்தையுடைய அந்தணனின் தாள் புணையாக உருவகித்தால், பிறவாழி; பிறவியாகிய கடலை நீந்திக் கரையேரலாம் என்பது பொருத்தமாக இருக்குமன்றோ!

இது நிற்க!

அந்தணன்

இக்குறளில் உள்ள அந்தணன் என்ற சொல் யாரைக் குறிக்கும்?
அந்தணன் என்ற சொல் வைதீக வேதியர்களைக் குறிக்கிறது என்று பலர் தவறாகப் பொருள் கொள்கிறார்கள். அப்படித்தான் அந்த அன்பரும் பொருள் கொண்டு என்னோடு மடலாடினார். அவர் மட்டுமன்று தமிழ்க் கற்ற பெரியோர்களையும் அச்சொல் மயக்கியே வந்திருக்கிறது.

அந்தணர் என்போர் அறவோர்

திருக்குறளில் நீத்தார் பெருமையென்னும் அதிகாரத்தில் 30ஆவது குறள்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்”

அறவோரே அந்தணர்; அத்தோடு இல்லாமல் எந்த உயிருக்கும் ஒரு தீங்கும் செய்யாதவரே அந்தணர் என்று அழுத்தம் திருத்தமாக குறள் குறித்திருக்கிறது. அஃதாவது, யாரொருவர் எந்த உயிர்களுக்கு தீங்கு செய்யாமல், அவற்றை யாதொன்றையும் கருதிக் கொல்லாமல் இருக்கிறாரோ அவரே அந்தணர் என்றுப் போற்றப்படுகிறார். இது யான் சொல்லவில்லை. அந்தக் குறள் அப்படித்தான் அந்தணருக்கு இலக்கணம் வகுத்திருக்கிறது. என்னை?

இதனால் அந்தணர்கள் எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாதவர்கள் என்பது அங்கை நெல்லிக்கனி!

அந்தணர் என்ற சொல் அக்காலத்தில் (குறள் எழுந்தக் காலக்கட்டத்தில்) நிச்சயம் வைதீக பிராமணர்களைக் குறித்திருக்காது என்பது நிதர்சனம். அக்கால வைதிகர்கள் வேத யாகங்களில் மிருகங்களை பலியிட்டிருக்கிறார்கள்.(பார்க்க: நீலகேசி) இதனால் அந்தணன் என்ற சொல் அவர்களைக் குறிக்கவில்லை என்பது பெறப்படுகிறது.

ஈண்டு முக்கியமான ஒன்றை குறித்துக் கொள்ளவேண்டுகிறேன். அந்தணன் என்றால் அது வைதிக பிராமணனைத் தான் குறிக்கும் என்று எடுத்துக் கொண்டால், அப்பகுப்பு முறை ( வருண வேறுபாடு) மனிதர்களுக்கு மட்டுமே உரியது. இறைவன் எல்லாவற்றையும் கடந்தவர். அவரை அந்தணரோடுத் தொடர்புப்படுத்த முடியாது. இல்லையா?

அறவாழி அந்தணன்

அற சக்கரத்தையுடைய அல்லது தரும சக்கரத்தையுடைய அருகக் கடவுளின் தாளை பாதத்தை பற்றாதவர்களுக்கு பிறவியாகிய கடலை (சம்சார கடலை) கடப்பதன்பது அரிது. இதுவே நேரிதன் உரை. உண்மையான பொருளும் கூட.
இங்கே தர்ம சக்கரத்தை உடைய அருகனின் பாதத்தை புணையாக உருவகித்து, பிறவியைக் கடலாக உருவகித்தால் அந்தக் குறளின் பொருளை நன்கு பருகலாம்.

தர்ம சக்கரம் (அறவாழி)

அருகப் பெருமான் எண்வகை சிறப்பை உடையவர்.

1. அசோக மரம் (பிண்டி)
2. தேவரின் மலர் பொழிவு (மலர் துவுதல்)
3. திவ்வியத் தொனி ( உதடுகள் அசையாமல் வரும் ஒலி)
4. சாமரம்
5. சிம்மாசனம் (அரியாசனம்)
6. தருமச் சக்கரம்
7. ஒளி மண்டலம்
8. முக்குடை

மேலே சொல்லப் பட்ட எட்டு சிறப்புகளில் தருமச் சக்கரமும் ஒன்று. (புத்தபிரானுக்கும் இக்குறள் பொருந்தும்)

இலக்கிய ஆதாரங்கள்

“தூண்டுதிண் டேருருள் போலச் சுழன்றுதொல் யோனிகட்கே
மீண்கொண் டேகுமவ் வெவ்வினைக் கஞ்சிநின் மெய்ச்சரணம்
பூண்டு கொண்டேனினிப் போகவொட் டேன்பொரு ளாகவென்னை
யாண்டுகொண் டாயற வாழிகொண் டேவென்ற வந்தணனே”
- திருநூற்றந்தாதி (27)

“ஆதியங் கட்விள் அறவாழி அந்தணன்
அரியணைச் செல்வன் அருளாழி வேந்தன்”
- திவாகர நிகண்டு

“அருகன் எண்குணன் நிச்சிந்தன்
அறவாழி வேந்தன் வாமன்..”
- சூடாமணி நிகண்டு

“அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்..”
- பிங்கல நிகண்டு

“மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி* கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே”
- திருக்கலம்பகம் (25)

(இப்பாடலின் பொருள் புரியவில்லை என்றால் கேளுங்கள் எழுதுகிறேன். ஏன்னென்றால், இப்பாடல் திருக்குறள் ஆராய்வோருக்கு மிக முக்கியமான ஒன்று. (* நேமி என்றால் சக்கரம்)

“களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர்
அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்
விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே”
- சீவக சிந்தாமணி (1611)

இவ்வாறு நிறைய இலக்கிய சான்றுகள் காட்டலாம். முடிபாக, யான் நிறைய முறை சொன்னாற்போல் அருக பகவான், நம்மை போல் பிறந்து, உலக மக்கள் உய்ய நல்லறம் பகர்ந்தார். அவரே கொல்லாமை முதலிய அறங்களை பகர்ந்தார், ஆதலில் அந்தணன் என்ற சொல் அருகக் கடவுளைத் தவிர வேறு கடவுளுக்கு பொருந்தாது. ஆராய்ச்சி அறிஞர் மயிலையார் சொல்வார், அறவாழி அந்தணன் என்ற தொடர் மற்ற கடவுளர்களை, ஏன் திருமாலையும் குறிக்காது என்று சான்றுக் காட்டி எழுதியிருக்கிறார். அக்கட்டுரையைக் கீழே உள்ள வலைச்சுட்டியில் படிக்கவும்.

http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww--?cq=1&p;=11
http://www.treasurehouseofagathiyar.net/27800/27809.htm
http://www.treasurehouseofagathiyar.net/27900/27927.htm

இரா.பானுகுமார்,
சென்னை

Author: "Banukumar (noreply@blogger.com)" Tags: "Tamil Jains, Jainism, Thirukural, சம..."



 

Rediscovering a Management and Leadership Manual in Ancient Indian Literature

Published: October 18, 2007 in India Knowledge@Wharton 
 

Business has often looked for guiding principles in ancient literature from various lands, including the sixth-century Chinese military treatise The Art of War, by Sun Tsu, or India's Vedas, including the battlefield epic Bhagvad Gita. Now, a new book brings to a global audience the management and leadership insights contained in the Thirukural, a collection of 1,330 aphorisms written some 2,000 years ago by Tamil poet Thiruvalluvar.

According to V. Srinivasan, author of New Age Management Philosophy from Ancient Indian Wisdom, the aphorisms, or "kurals," form a manual for governments and corporations, and they are a favorite of Indian finance minister P. Chidambaram. Srinivasan is CEO of IT services firm 3i Infotech in Edison, N.J., where he has overseen 27 acquisitions in the last seven years. He spoke about his book and the connection between ancient wisdom and modern management in an interview with India Knowledge@Wharton. An edited version of that conversation follows.

India Knowledge@Wharton: Could you tell us a little about the Thirukural?

Srinivasan: The Thirukural is believed to be about 2,000 years old. It has three parts that deal with wisdom, wealth and affection or love. Several people have analyzed it, and it has been translated into Portuguese and French.

It is considered the "Tamil Veda." (The Vedas are Sanskrit texts of Hindu wisdom.) "Veda" [means] the knowledge, realization and improvement of the self. It comes from the root "vid," meaning "knowledge." With self realization and self introspection, [people] get on a path different from those with just knowledge -- they become leaders like Mahatma Gandhi or Mother Teresa.

While the Thirukural talks of the three qualities of wisdom, wealth and love, Tamil literature talks of a fourth aspect of "veedu," which refers to God, or nirvana. One school of thought is that if you follow every "kural" (aphorism), you will automatically reach "veedu."

The Thirukural talks about how territories maximize their wealth, and how there were princes, ministers and ambassadors. You [can] equate a prince to a CEO, a minister to a COO and an ambassador to a sales and marketing executive -- the qualities prescribed for each of these functions correspond.

India Knowledge@Wharton: What aspects of the Thirukural does your book focus on?

Srinivasan: My book concentrates on the wealth aspect of the Thirukural --how you derive wealth, protect it and improve it. Management and leadership are closely related to wealth creation.

How does the evolution of leadership take place? From our childhood, we learn a lot of things, including mathematics, physics, chemistry and economics. The next stage is the refinement of our personal qualities. When you don't have [refined] personal qualities, you may be a knowledgeable person but you don't become a leader.

What are those qualities? Courage, conviction, determination, self control, control over anger and emotions and a disciplined way of life. To become greater, you may need to give up certain things such as your ego, or "aham bhava" (arrogance) and the cravings of the five senses.

India Knowledge@Wharton: What insights could one draw upon in the present context of the sweeping changes underway in the Indian economy? What are the key takeaways for management? For example, is the Thirukuralconsistent with a corporation's focus on maximizing profits for its stakeholders?

Srinivasan: To maximize profits, you need strategies and implementation. Strategy is about what to do, when to do it, how to do it and where to do it. The Thirukural has chapters on each of these.

One chapter is on deliberation before action. Another is on choosing the appropriate time. A third is on choosing the appropriate place. All the ingredients for profit maximization are contained in the Thirukural.

Consider these kurals on decision making and implementation:

"The end of all deliberation is to arrive at a decision; and when a decision is reached, it is wrong to delay its execution."

"Go straight for the goal whenever circumstances permit. When circumstances are against, choose the path of least resistance."

"Five things should be carefully considered in carrying out any action -- the nature of the action, the resources in hand, the instrument, the proper time and the proper place for its execution."

And this one is on goal setting: "Let all your purposes be grand, for even if they fail, your glory will never tarnish."

Even the greatest venture that has the wrong people will not succeed. Take India's IT companies, for example. Some 20 technology companies started operations in India between 1980 and 1985, but Infosys [Technologies] and a few others succeeded; several others vanished. What is the difference? The environment was the same and they were all doing the same kind of IT projects, but leadership made the difference.

Here are two kurals on this subject:

"Men who cannot drive home their point before a learned assembly, even if they are very knowledgeable, are good for nothing."

"Behold the man who is eloquent of speech and knows neither confusion nor fear; it is impossible for anyone to defeat him."

India Knowledge@Wharton: Some of the kurals you cite in your book seem very direct and bold. One advises you against exposing your troubles and weaknesses. They are also ruthless in some places: "Fell down thorn trees when they are young..."

Srinivasan: Leaders of large corporations that become reputable invariably follow these principles. But their people at the second or third level don't know the nuances of these things. Take, for example, premature disclosure. One kural says: "Do not reveal your troubles to men who do not know them. Similarly, do not expose your weakness to your enemies." Or this: "The man of action lets his purpose appear only when the purpose is achieved, for an untimely disclosure may create obstacles that cannot be surmounted."

Even to your board, you need to disclose things only at the appropriate time in significant detail. If you have clearly articulated in your mind the pros and cons of a proposal, you are able to explain it to the board in 15 or 20 minutes and get it passed. If you discuss your proposal prematurely without having thought it out, you risk your board rejecting it.

I have seen CEOs of several midsize companies and even some bigger companies who blame their boards for not getting their proposals passed. It is predominantly because of their inefficient articulation and inability to put forward their ideas in ways [that will] carry their boards with them.

India Knowledge@Wharton: Do you recall an illustration of that?

Srinivasan: Among the people with those qualities I have personally seen are Narayanan Vaghul [chairman of India's largest private bank, ICICI] and K.V. Kamath [CEO of ICICI]. Somehow, even if the board starts out on a negative note, saying that certain proposals are not consistent with the corporation's core competence areas and so forth, they get their proposals approved.

Take, for example, the way ICICI went about its retail banking strategy in the mid-1990s. At that time, it was a predominantly corporate finance institution. Vaghul and Kamath felt the company could not continue to be viable as a project finance institution because the new economic liberalization policies restricted access to inexpensive funds and forced it to tap the public markets like others.

They went about [developing] their retail [services] through a shared vision and ruthless implementation and made it happen, although a lot of people felt ICICI did not possess the implementation capability -- HDFC was strong in housing finance, there was Citibank in auto finance, and so on. That is where Vaghul and Kamath [offered an] articulation of the competition's limitations that ICICI could take advantage of. Without that articulation, it would have been tough to get the board's approval.

India Knowledge@Wharton: What thoughts about leadership does theThirukural offer for Indian industry, especially now that it faces a talent shortage across the board, attrition, wage inflation, etc.?

Srinivasan: A lot of people think you become a leader by throwing your weight around -- that they need to shout at certain people and [punish them] even for small mistakes. This is particularly true of middle-level managers. Even some of the management schools create the impression that a snobbish attitude is actually helpful for leadership.

To become a leader, you have to command respect or force people to have respect for you by creating awe around yourself. The boss who forces respect is not creating a sense of belonging and togetherness, and employees will leave for better salaries. This is one reason why people complain that they cannot get the right talent; it is an indication of weakness in leadership.

Until five years ago, a strategy of forcing people to respect you worked because employment opportunities in India were scarce and people held on to their jobs like a golden cage -- they could not move out even if their leaders harassed them. Today it is an employee market, and leadership styles have to change.

India Knowledge@Wharton: Your book talks about how the Thirukuraladvocates an openness to dissent.

Srinivasan: Generally, a leader believes that certain things are right. He may not come to know the details of how his strategy is being implemented, and the people close to him may not reveal everything. In an open forum, even the adverse aspects will come out. But if you start punishing those who point out the adverse aspects, then nobody will give you the right information, and whatever you do will fail. A kural on this is: "A leader should have the virtue to hear the words that are bitter to his ears."

I have personally experienced this. When the second line of people in my company think what I am doing is wrong, in 75% to 80% of the cases I have been able to articulate that what I am doing is right, and they agree. And in 20% of the cases, I have agreed with what they say and changed my approach.

India Knowledge@Wharton: Thiruvalluvar also talks about how one has to be careful with the second tier of your organization's management. He seems to suggest instant sacking of undesirable people.

Srinivasan: He is advocating two things. One refers to the traitors in the camp. They know your strategy and your secrets, and help your rivals. The moment you come to know that somebody is a traitor, or even if you have a suspicion, you must remove that person or exclude him from your camp. The 10 kurals on this subject advocate a zero-tolerance approach.

Secondly, the Thirukural talks about an untrustworthy minister, or your second-in-command. It says, "He is more dangerous than even 700 million enemies."

There are many parallels here in politics and companies. People stage coups in countries because they were not removed at the right time. You will find this true also with badly planned corporate succession strategies.

The kurals talk about the desired qualities in a minister or an ambassador and advocate that the person you select must have the organization's larger objectives in mind.

India Knowledge@Wharton: What can one learn from the Thirukural about financial management?

Srinivasan: This kural is useful in financial management: "It does not matter if the feeder channel is narrow, so long as the draining channel is not wider."

You may also apply the following kural to managing your company's debt: "If you put too many of them, even the peacock's feathers would break the wagon's axle."

India Knowledge@Wharton: M&As are now a popular route for many Indian companies. But many firms are new to the game, and there are concerns about whether they have the relevant experience -- whether they might overpay and so forth.

Srinivasan: A lot of M&As are driven today by concerns that a company may not be able to grow and gain market share unless it acquires or gets acquired. Also, there is a fear among promoters that the value of their stock may fall. One kural says: "Take into consideration the inputs, the wastage, the output and the profit that an undertaking will yield; these are the yardsticks for any new venture."

The Thirukural also says: "There are enterprises that tempt with a great profit but which perish even the capital itself. Wise men will not undertake them." Also: "Before taking up any enterprise, determine first the exertion necessary, the obstacles on the way and the expected profit at the end."

In addition, the kurals encourage you to be pragmatic. For example: "When the territory of the king (market share of a company) declines, leading to a fear in the mind of the king (CEO) that he will not be able to survive the opponent (competition), it is better for him to submit to an alliance with a stronger king (acquiring company)."

Also, consider these kurals on the right time to [acquire]: "Bend down before your adversaries when they are more powerful than yourselves. They can be easily overthrown when you attack them at the moment when their power is on the decline." And: "When the tide is against you, feign inaction like the stork. When the tide is on, strike with swiftness and sure aim."

India Knowledge@Wharton: What does the Thirukural say about corporate governance and social entrepreneurship?

Srinivasan: Basically, corporate governance is openness, transparency and not doing things for private benefit. If you follow the virtues prescribed in the kurals, you will automatically be on the path of good governance. One kural says: "Let the thing you decide to do be above reproach, for the world looks down upon the man who stoops to a thing that is beneath himself."

Another kural could be related to nepotism and playing favorites: "If you choose an unfit person for your job just because you love and you like him, he will lead you to endless follies."

And there are others that could apply to social entrepreneurship, such as: "The prince (CEO) shall know how to develop the resources of his kingdom, how to enrich his treasury, how to preserve his wealth and how to spend it worthily."

India Knowledge@Wharton: You say in your book that 3i Infotech faced many challenges as it grew with acquisitions. How did you use the Thirukuralto deal with them?

Srinivasan: At 3i Infotech, I relied on the Thirukural mainly in the selection and removal of a lot of people. For example, the kural [I mentioned earlier] was helpful to me: "The minister that sits in the council and plots the ruin of his prince is more dangerous than 700 million enemies." At the time, I was in India, and a senior company executive started cutting off communication with employees and became unapproachable to them. He began making it appear as if I had authorized some decisions, basing them on half-conversations with me and extracting a "yes" from me on some things.

One day, after I returned to the U.S., I realized he was dangerous to the organization. He had stepped out for lunch and when he returned I dismissed him on the spot.

I had also hired some people without proper checks and had to remove them. Another kural says: "Never trust men without testing them, and after testing them give each one of them the work for which they are fit." These days, I first place [hires] in some relatively less sensitive positions before elevating them.

India Knowledge@Wharton: Are there kurals that seem to go against popular wisdom but are, in fact, worth following?

Srinivasan: Regarding the retention of your good second-level people, one kural says that if a certain person is very good at his work, don't mind the small liberties he takes. It says: "If the king (CEO) is harsh of word and unforgiving, his prosperity, even if it is great, will end quickly." If somebody is good and you pep him up, his ego gets boosted and he may take some small advantages. If you become too tight with the rules, it may hurt him and you may lose some bigger things. That is an unconventional thought.

Another kural encourages you to make friends with your enemy's enemy. If a CEO or a minister converts an enemy's enemy into a friend, half your battle is won because your enemy is weakened -- you become two and he becomes one.

India Knowledge@Wharton: Many other ancient philosophical texts and religious works from different faiths must also have lessons for management and leadership. How is the Thirukural different?

Srinivasan: Compared to the Bhagvad Gita and the Vedas, the Thirukuralgoes into more detail and nuances rather than the broad philosophy. TheThirukural is more like a manual and has 10 kurals on every aspect; it lays out the procedures and processes. The other works don't talk about the right time and strategy for an enterprise, people management, and so forth.

Here's what you think...

Total Comments: 3

 

#1    Organizational Wisdom

The Thirukural is great, no doubt. 
It is desirable that it has been made known to many people, especially to decision-makers. 
It would be better still if a system is devised to retrieve the appropriate kural for a context, to enable the decision-maker to make a wise decision. 
If an organizational context is described, with the latest research capability of IT, it must very much be a possibility. 
The decision-maker also would feel satisfied for having considered all aspects and made the decision. 
Mr. Srinivasan must be able to spearhead an effort to install such a search engine in organizational portals.

By: Anbazhagan Sam Venkatesan, Self Employed 
Sent: 05:41 AM Fri Aug.08.2008 - IN

#2    Kurals: Personal and Organizational Wisdom

I liked this interview very much. The thoughts, whatever I could read in this interview, are profound. This ancient worldly wisdom book is ever contemporary. I thank Srinivasan and K@W for bringing this out.

By: Ajit Singh, Netmagic, Sr. Manager 
Sent: 06:52 AM Wed Apr.08.2009 - AU

#3    Ancient Wisdom, Contemporary Strategy

I agree with Sam Venkatesan that we should have these nuggets of wisdom neatly wrapped up in contemporary management strategies and ready to use in appropriate business situations. 
Maybe V. Srinivasan can initiate such a venture. I will be ready to help him with the deskwork, a labor of love.

By: Veera Balaji Kumar Veeraswamy, Soft skills trainer 
Sent: 05:46 AM Thu Jun.04.2009 -


http://knowledge.wharton.upenn.edu/india/article.cfm?articleid=4231

Business has often looked for guiding principles in ancient literature from various lands, including the sixth-century Chinese military treatise The Art of War, by Sun Tsu, or India's Vedas, including the battlefield epic Bhagvad Gita. Now, a new book brings to a global audience the management and leadership insights contained in the Thirukural, a collection of 1,330 aphorisms written some 2,000 years ago by Tamil poet Thiruvalluvar.

According to V. Srinivasan, author of New Age Management Philosophy from Ancient Indian Wisdom, the aphorisms, or "kurals," form a manual for governments and corporations, and they are a favorite of Indian finance minister P. Chidambaram. Srinivasan is CEO of IT services firm 3i Infotech in Edison, N.J., where he has overseen 27 acquisitions in the last seven years. He spoke about his book and the connection between ancient wisdom and modern management in an interview with India Knowledge@Wharton. An edited version of that conversation follows.

India Knowledge@Wharton: Could you tell us a little about the Thirukural?

Srinivasan: The Thirukural is believed to be about 2,000 years old. It has three parts that deal with wisdom, wealth and affection or love. Several people have analyzed it, and it has been translated into Portuguese and French.

It is considered the "Tamil Veda." (The Vedas are Sanskrit texts of Hindu wisdom.) "Veda" [means] the knowledge, realization and improvement of the self. It comes from the root "vid," meaning "knowledge." With self realization and self introspection, [people] get on a path different from those with just knowledge -- they become leaders like Mahatma Gandhi or Mother Teresa.

While the Thirukural talks of the three qualities of wisdom, wealth and love, Tamil literature talks of a fourth aspect of "veedu," which refers to God, or nirvana. One school of thought is that if you follow every "kural" (aphorism), you will automatically reach "veedu."

The Thirukural talks about how territories maximize their wealth, and how there were princes, ministers and ambassadors. You [can] equate a prince to a CEO, a minister to a COO and an ambassador to a sales and marketing executive -- the qualities prescribed for each of these functions correspond.

India Knowledge@Wharton: What aspects of the Thirukural does your book focus on?

Srinivasan: My book concentrates on the wealth aspect of the Thirukural -- how you derive wealth, protect it and improve it. Management and leadership are closely related to wealth creation.

How does the evolution of leadership take place? From our childhood, we learn a lot of things, including mathematics, physics, chemistry and economics. The next stage is the refinement of our personal qualities. When you don't have [refined] personal qualities, you may be a knowledgeable person but you don't become a leader.

What are those qualities? Courage, conviction, determination, self control, control over anger and emotions and a disciplined way of life. To become greater, you may need to give up certain things such as your ego, or "aham bhava" (arrogance) and the cravings of the five senses.

India Knowledge@Wharton: What insights could one draw upon in the present context of the sweeping changes underway in the Indian economy? What are the key takeaways for management? For example, is the Thirukural consistent with a corporation's focus on maximizing profits for its stakeholders?

Srinivasan: To maximize profits, you need strategies and implementation. Strategy is about what to do, when to do it, how to do it and where to do it. The Thirukural has chapters on each of these.

One chapter is on deliberation before action. Another is on choosing the appropriate time. A third is on choosing the appropriate place. All the ingredients for profit maximization are contained in the Thirukural.

Consider these kurals on decision making and implementation:

"The end of all deliberation is to arrive at a decision; and when a decision is reached, it is wrong to delay its execution."

"Go straight for the goal whenever circumstances permit. When circumstances are against, choose the path of least resistance."

"Five things should be carefully considered in carrying out any action -- the nature of the action, the resources in hand, the instrument, the proper time and the proper place for its execution."

And this one is on goal setting: "Let all your purposes be grand, for even if they fail, your glory will never tarnish."

Even the greatest venture that has the wrong people will not succeed. Take India's IT companies, for example. Some 20 technology companies started operations in India between 1980 and 1985, but Infosys [Technologies] and a few others succeeded; several others vanished. What is the difference? The environment was the same and they were all doing the same kind of IT projects, but leadership made the difference.

Here are two kurals on this subject:

"Men who cannot drive home their point before a learned assembly, even if they are very knowledgeable, are good for nothing."

"Behold the man who is eloquent of speech and knows neither confusion nor fear; it is impossible for anyone to defeat him."

India Knowledge@Wharton: Some of the kurals you cite in your book seem very direct and bold. One advises you against exposing your troubles and weaknesses. They are also ruthless in some places: "Fell down thorn trees when they are young..."

Srinivasan: Leaders of large corporations that become reputable invariably follow these principles. But their people at the second or third level don't know the nuances of these things. Take, for example, premature disclosure. One kural says: "Do not reveal your troubles to men who do not know them. Similarly, do not expose your weakness to your enemies." Or this: "The man of action lets his purpose appear only when the purpose is achieved, for an untimely disclosure may create obstacles that cannot be surmounted."

Even to your board, you need to disclose things only at the appropriate time in significant detail. If you have clearly articulated in your mind the pros and cons of a proposal, you are able to explain it to the board in 15 or 20 minutes and get it passed. If you discuss your proposal prematurely without having thought it out, you risk your board rejecting it.

I have seen CEOs of several midsize companies and even some bigger companies who blame their boards for not getting their proposals passed. It is predominantly because of their inefficient articulation and inability to put forward their ideas in ways [that will] carry their boards with them.

India Knowledge@Wharton: Do you recall an illustration of that?

Srinivasan: Among the people with those qualities I have personally seen are Narayanan Vaghul [chairman of India's largest private bank, ICICI] and K.V. Kamath [CEO of ICICI]. Somehow, even if the board starts out on a negative note, saying that certain proposals are not consistent with the corporation's core competence areas and so forth, they get their proposals approved.

Take, for example, the way ICICI went about its retail banking strategy in the mid-1990s. At that time, it was a predominantly corporate finance institution. Vaghul and Kamath felt the company could not continue to be viable as a project finance institution because the new economic liberalization policies restricted access to inexpensive funds and forced it to tap the public markets like others.

They went about [developing] their retail [services] through a shared vision and ruthless implementation and made it happen, although a lot of people felt ICICI did not possess the implementation capability -- HDFC was strong in housing finance, there was Citibank in auto finance, and so on. That is where Vaghul and Kamath [offered an] articulation of the competition's limitations that ICICI could take advantage of. Without that articulation, it would have been tough to get the board's approval.

India Knowledge@Wharton: What thoughts about leadership does the Thirukural offer for Indian industry, especially now that it faces a talent shortage across the board, attrition, wage inflation, etc.?

Srinivasan: A lot of people think you become a leader by throwing your weight around -- that they need to shout at certain people and [punish them] even for small mistakes. This is particularly true of middle-level managers. Even some of the management schools create the impression that a snobbish attitude is actually helpful for leadership.

To become a leader, you have to command respect or force people to have respect for you by creating awe around yourself. The boss who forces respect is not creating a sense of belonging and togetherness, and employees will leave for better salaries. This is one reason why people complain that they cannot get the right talent; it is an indication of weakness in leadership.

Until five years ago, a strategy of forcing people to respect you worked because employment opportunities in India were scarce and people held on to their jobs like a golden cage -- they could not move out even if their leaders harassed them. Today it is an employee market, and leadership styles have to change.

India Knowledge@Wharton: Your book talks about how the Thirukural advocates an openness to dissent.

Srinivasan: Generally, a leader believes that certain things are right. He may not come to know the details of how his strategy is being implemented, and the people close to him may not reveal everything. In an open forum, even the adverse aspects will come out. But if you start punishing those who point out the adverse aspects, then nobody will give you the right information, and whatever you do will fail. A kural on this is: "A leader should have the virtue to hear the words that are bitter to his ears."

I have personally experienced this. When the second line of people in my company think what I am doing is wrong, in 75% to 80% of the cases I have been able to articulate that what I am doing is right, and they agree. And in 20% of the cases, I have agreed with what they say and changed my approach.

India Knowledge@Wharton: Thiruvalluvar also talks about how one has to be careful with the second tier of your organization's management. He seems to suggest instant sacking of undesirable people.

Srinivasan: He is advocating two things. One refers to the traitors in the camp. They know your strategy and your secrets, and help your rivals. The moment you come to know that somebody is a traitor, or even if you have a suspicion, you must remove that person or exclude him from your camp. The 10 kurals on this subject advocate a zero-tolerance approach.

Secondly, the Thirukural talks about an untrustworthy minister, or your second-in-command. It says, "He is more dangerous than even 700 million enemies."

There are many parallels here in politics and companies. People stage coups in countries because they were not removed at the right time. You will find this true also with badly planned corporate succession strategies.

The kurals talk about the desired qualities in a minister or an ambassador and advocate that the person you select must have the organization's larger objectives in mind.

India Knowledge@Wharton: What can one learn from the Thirukural about financial management?

Srinivasan: This kural is useful in financial management: "It does not matter if the feeder channel is narrow, so long as the draining channel is not wider."

You may also apply the following kural to managing your company's debt: "If you put too many of them, even the peacock's feathers would break the wagon's axle."

India Knowledge@Wharton: M&As are now a popular route for many Indian companies. But many firms are new to the game, and there are concerns about whether they have the relevant experience -- whether they might overpay and so forth.

Srinivasan: A lot of M&As are driven today by concerns that a company may not be able to grow and gain market share unless it acquires or gets acquired. Also, there is a fear among promoters that the value of their stock may fall. One kural says: "Take into consideration the inputs, the wastage, the output and the profit that an undertaking will yield; these are the yardsticks for any new venture."

The Thirukural also says: "There are enterprises that tempt with a great profit but which perish even the capital itself. Wise men will not undertake them." Also: "Before taking up any enterprise, determine first the exertion necessary, the obstacles on the way and the expected profit at the end."

In addition, the kurals encourage you to be pragmatic. For example: "When the territory of the king (market share of a company) declines, leading to a fear in the mind of the king (CEO) that he will not be able to survive the opponent (competition), it is better for him to submit to an alliance with a stronger king (acquiring company)."

Also, consider these kurals on the right time to [acquire]: "Bend down before your adversaries when they are more powerful than yourselves. They can be easily overthrown when you attack them at the moment when their power is on the decline." And: "When the tide is against you, feign inaction like the stork. When the tide is on, strike with swiftness and sure aim."

India Knowledge@Wharton: What does the Thirukural say about corporate governance and social entrepreneurship?

Srinivasan: Basically, corporate governance is openness, transparency and not doing things for private benefit. If you follow the virtues prescribed in the kurals, you will automatically be on the path of good governance. One kural says: "Let the thing you decide to do be above reproach, for the world looks down upon the man who stoops to a thing that is beneath himself."

Another kural could be related to nepotism and playing favorites: "If you choose an unfit person for your job just because you love and you like him, he will lead you to endless follies."

And there are others that could apply to social entrepreneurship, such as: "The prince (CEO) shall know how to develop the resources of his kingdom, how to enrich his treasury, how to preserve his wealth and how to spend it worthily."

India Knowledge@Wharton: You say in your book that 3i Infotech faced many challenges as it grew with acquisitions. How did you use the Thirukural to deal with them?

Srinivasan: At 3i Infotech, I relied on the Thirukural mainly in the selection and removal of a lot of people. For example, the kural [I mentioned earlier] was helpful to me: "The minister that sits in the council and plots the ruin of his prince is more dangerous than 700 million enemies." At the time, I was in India, and a senior company executive started cutting off communication with employees and became unapproachable to them. He began making it appear as if I had authorized some decisions, basing them on half-conversations with me and extracting a "yes" from me on some things.

One day, after I returned to the U.S., I realized he was dangerous to the organization. He had stepped out for lunch and when he returned I dismissed him on the spot.

I had also hired some people without proper checks and had to remove them. Another kural says: "Never trust men without testing them, and after testing them give each one of them the work for which they are fit." These days, I first place [hires] in some relatively less sensitive positions before elevating them.

India Knowledge@Wharton: Are there kurals that seem to go against popular wisdom but are, in fact, worth following?

Srinivasan: Regarding the retention of your good second-level people, one kural says that if a certain person is very good at his work, don't mind the small liberties he takes. It says: "If the king (CEO) is harsh of word and unforgiving, his prosperity, even if it is great, will end quickly." If somebody is good and you pep him up, his ego gets boosted and he may take some small advantages. If you become too tight with the rules, it may hurt him and you may lose some bigger things. That is an unconventional thought.

Another kural encourages you to make friends with your enemy's enemy. If a CEO or a minister converts an enemy's enemy into a friend, half your battle is won because your enemy is weakened -- you become two and he becomes one.

India Knowledge@Wharton: Many other ancient philosophical texts and religious works from different faiths must also have lessons for management and leadership. How is the Thirukural different?

Srinivasan: Compared to the Bhagvad Gita and the Vedas, the Thirukural goes into more detail and nuances rather than the broad philosophy. The Thirukural is more like a manual and has 10 kurals on every aspect; it lays out the procedures and processes. The other works don't talk about the right time and strategy for an enterprise, people management, and so forth.

அன்புடன் (Kind Regards),
க. தில்லைக்குமரன் (Ka. Thillaikumaran)