Critical estimate of Anna’s contribution to Tamil and the Tamils
Annadurai’s 102end birthday that falls on September 15th. 2010
Mr.C.N. Annadurai the beloved disciple of Periyar owes a lot to Periyar to
have shaped his multifarious career. If is not for Periyar, Annadurai may
not have attained this unique position. Periyar’s language was blunt and
down to earth. The illiterate masses believed in meaningless superstitions
and succumbed to Bramanical domination. To quote, Swami Vivekananda,
“superstition is bad but bigotry is worse. Tamils as a whole in a blind
folded manner fell a prey to superstition, bigotry, and indulged meaningless
and metaphysical arguments on ceremonies. The word ‘Sathi’ (caste) is an
alien Sanskrit term, but the Tamils consciously and unconsciously believed
in a caste system that brought their own ruination. Periyar who did not have
a formal education but posseded immense commensense. He rightly thought that
unless he was downright in his approach, he cannot bring in the desired
revolutionary changes in the people’s mind. The revolution Periyar carried
out was not a bloody revolution but a bloodless revolution. His struggle
lasted nearly sixty years. Weather he achieved his desired goal may be
debatable, but a visible change in the people’s thinking cannot be denied.
ANNADURAI’S APPROACH
Annadurai with his academic background did approve the approach of Periyar to revolutionize people’s thinking. The people were behaving like dump driven cattle. But while appreciating Periyars approach in the social, Political and economic fields he felt there was a need to use the mellowed language to win over the people. He felt that his bloodless revolution should be brought through Tamil youths and students of colleges and universities. He sowed the seed of revolution by attracting the youth’s mind and heart by using alliteration,similies, and metaphor in his speeches and writings. He addressed series of meeting at Pachaiyappan College,Presidency College and other universities especially at the Annamalai University and the impact was permanent. His lively debates with Tamils scholars raised the debating standard and literaly criticism entered a new
phase. His criticism of Kammban’s Ramayanam and other religious works was an eye opener to the Tamils. He was not denying the literaly acumen of the great poet Kamban. But the contents of Kamban’s work consciously or unconsciously paved the path to worship Rama and Seetha as divine beings which in turned let to Aryan domination. Following these debates the literary scene inTtamilnadu under went a sea change. Anna was a master of the English language too. The literary criticisms that he studied in the English literature helped him to view things in a dispassionate manner. Though he honoured great poets,did not want to encourage personality cults.
ANNA WAS EMBODIMENT OF GRATITUDE
Canchipuram Natarajan Annadurai was born into a humble family in Canchipuram, Taminadu on the 15th of September 1909. His father was Nadarajan mudaliar and his mother was Pangaruamma. Though his mother was living, his younger days were shaped by his mother’s younger sister. In Tamil mother’s younger sister is addressed as Chinnamma. He was deeply attached to her. He completed his masters degree at Pachaiyappan College offering economics as his major. In his young days, he was very unassuming but developed strong friendship with his colleagues. Even during his school and college days, his debating talent and oratorical skills were a well known factor. Though he was brought up and nurtured by Periyar He was originally in the Justice Party and later joined with the Thiravidar kalagam (Dravidian party) led by Periyar. He parted company in 1949 Periyar in the latter days and formed the DMK (Dravida Munnetra Kalaagam) September 17th in 1949. Though he parted company with Periyar, his love, respect and attachment to him remained undiminished. As a respect for his guru, though the DMK was formed, the post of the presidency was kept vacant and Anna functioned only as the general secretary of the movement. When the DMK came to power in 1967, the first thing he did was to go to Periyar and sought his blessings. That speaks volumes of his gratitude to Periyar. He made an open declaration that all the social reforms that Periyar envisaged will be implemented. As promised, the DMK implemented the policies and programs of Periyar.
NNA AT THE RAJASABHA DEMANDED TAMIL AS A OFFICE LANGUAGE OF THE UNION
Annadurai love for his language and the desire to give it’s duplates was openly pronounced by him at the Rajasaba sessions on 05-05-1963. This what he said,
“I will say that of all the languages, barring Sanskrite which has come a dead language, Tamil has a literary tradition that goes back to five thousand years, I may tell, Madam Deputy chairman, for the information of the House that the President is going over to our part of the country to release the English edition of the ancient Tamil work tholkappiam. Tholkappiam is grammatical work written more than three thousand years ago. We possess such an inheritance.
We are very proud people as far as language is concerned. We think that no language can stand comparison of Tamil.
D.L Senguptha(Wes Bengal) Except Bengali.
Anna: Along with Bengali….I can never forget that I have got a hoary language in which my forefathers spoke, in which my poets have given sermons and scriptures, in which we have got classics and literature of inexhaustible knowledge, I will never be content till that day when Tamil takes its due place as one of the official languages in the Union.(04-03-1965).
It is unfortunate though years are rolled down his dream and demand remains unfulfilled. I sincerely believe that in the very near future Tamil will be declared an official language of Union of India. Let us remember “that the eternal Vigilance is a price we pay for liberty” The above excerpts are from the Raja Sabha speeches of Anna. They clearly point out two distinct features. The richness and the Hoary past of Tamil have been clearly explained and there for it was a solid foundation laid by him toward declaring Tamil as a classical language. Of course, let us remember that Parithimal Kalaignar for the first person to pronounce the Tamil is a classical language. The contribution by Maraimalai Adigal, Thiru Ve.Ka, Devenaye Pavanar and Mu.Va also paved the path for the Tamils to be conscious of their richness of their language. Their researches was also added factor to make Tamil as a classical language. But, to the eternal credit of Anna it was he that declared Tamil as a classical language in the highest legislatures forum of India.
I WAS A WITNESS TO ANNA’S PRONOUNCEMENT
I was privileged to attend the second International Tamil conference of Tamil Nadu at Chennai in the year 1968. Annadurai in his extempore speech which he addressed to the Tamils and the foreign audience in English said about the attachments of the Tamils to the Tamil language in this moving words. In his speech is spoke of the ancient heritage of the Tamil language is richness it’s flexibility, it’s adaptability, its amenability and that’s why the Tamil language to able to survive down the ages, in spite of repeated on slaughts by different notations. “Tamils by nature are lethargic and indifferent on all issues, but when they know there is a danger to the Tamil language God forbid at to what they would do”. His statement is pregnant in its meaning.
ANNA’S WRITINGS
Anna start his career as a journalist in the year 1934 his writings covered on politics, short stories, fictions drama’s one act place and parodies . Within the short period of 34 years the volume of works written by him it’s amazing. Words fail to describe his multifarious talents. Epistles to his Tambi (Brother) or more than 290 and these letters covers more than 3000 pages when printed. His writings excel in quality & quantity. He proved that pen is mightier than the sword. Even his political opponents like Kalki could not resist to pay a tribute to Anna’s dramatical talent. His one night drama “ஓரிரவு” was compared to Bernard Shaw’s artistic out burst.
IMPACT OF THE PURE TAMIL MOVEMENT ON ANNA
Emimant scholars Marai malai adikal thiru Ve. Ka, R.P.Sethupillai, Pavanur, and Bharathi’ dasan’s poetry paved the path for the pure Tamil movement in Tamil Nadu. Mr.Annadurai though conscious of the pure Tamil movement and its impact in the society he could not adapt the same pure Tamil style because he was dealing with the masses. But his tributes to Maraimali adikal, and Thiru Ve.Ka it is a clear Vindication of his love to preserve the purity of the Tamil language. His alliterating, allusions subtle satires pungent and criticisms was a treat to the literates and to the illiterates.
HE DETHRONED SANSKRIT
During his period sanskrit dominated in the field of education, religion, politics and social spears. With determine calculated move he dethrone sanskirit. He passed legislation to conduct self respect marriages and saw that marriages were conducted in Tamil to up lift the Tamil masses and make them feel proud of their language.
RENAMED MADRAS AS TAMIL NADU
He pleaded in Tamil nadu and also in Raja Sabha that Madras be renamed as Tamil Nadu. He to start with he faced opposition but he won over the opposition. When one member asked him to what satisfaction he has by renaming Madras state to Tamil Nadu?’ Typical of Anna he retorted in this manner. “What we gain, its, we gain sentimental satisfaction and status for our ancient Tamil Nadu. If in Madras we change the name of china bazaar in to Netaji Subash Chandra Bose Road, Nothing is changed in the street, but something is changed in our thinking, in our soul and in our fibre.”
With this same enthusiasm and vigour Anna introduce the Bill for renaming in the Madras Legislative Assembly and it was passed with a thundering applause. Then he echoed “ Tamil Naadu” and the members responded “Vazhga! This emotional outburst was a unique scence in the entire history of our Tamil Nadu.
Really this was a historical event and the entire Taiml Nadu is proud of it even now and it will be so for centuries together. This was the climax of his career. But,unfortunately for him and for us he couldn’t live long to enjoy the fruits of his labor.
HIS OPPOSITION OF HINDI
Though Tamil was the made the language of curriculum; sanskirit continued to occupy a key place bye the Pro Sanskrit lobby. Added to this factor, Hindi imposition was gaining foot hold from 1938.
The Indian constitution came in to vogue in 1950 in according to its bill, after the lapse of fifteen years Hindi was to replace English in the administrative field. This let to the anti Hindi agitation by Anna during 1964. Chief Minister Bakthavathsalam stood like a rock and dealt with situation with iron hands and took away numerous precious lives. This was a turning point in the political scenario of Tamil Nadu. The people of Tamil Nadu felt the danger they were facing due to Hindi domination and decided to hand over power to the DMK headed by Anna. Some section express fear the Central Government might bring down the Tamil Nadu Government but Annadurai in a fearless manner pronounced I have done “what I can! Let Delhi do what its wants!” This fearless clear cut pronouncement was a challenge to Delhi. At this convocation address delivered at Annamalai University , he satirically remarked.
“ The Governement of Tamil Nadu, as stated in unmistakable tener that Tamil and English can server all our purposes, the former the official languages of state and the latter as the link language. What serves us to link with the outside world is certainly capable of rendering the same service inside India as well. To plead for two link languages is like boring a smaller hole for kitten while there is a bigger one for that cat”
CHAIR FOR THIRUKURAL
The International forum of Tamil studies conducted in Madrass in 1968 focussed world attention on the antiquity and greatness of the Tamil language. He was also conscious of the greatness of the unique personality of the saint, sage philosopher – Valluvar. Valluvar is considered as a bard of the universal and hence he created a chair of Thirukural for Valluvar in the Madras University Annamalai university and Madurai University.
ANNA’S LASTING CONTRIBUTION TO THE EELAM TAMIL CAUSE WILL BE REMEMBERED BY POSTERLITY
In 1958, he focused the Eelam Tamil problems in two fronts. First, he did his best to draw attention to the Delhi government. At the time, Nehru was a prime minister and Kamaraj was a chief minister both turned deaf ear and blind eye to the Eelam tamil problem. He got a cartoon drawn in the Homeland paper to show the indifference of these two personalities. In 1958 June 22nd he declared Ceylon Tamil’s a freedom day and conducted demonstration and mass meetings. At the meeting he conducted the Nepier Park, thousands assembled and the resolution passed focussed our problem and its considered as a historic event in the Annals of Tamil freedom.
WORLD ATTENTION FOCUSED
In 1961 when Tamils demonstrated against Singala implementation in the northern and the eastern provinces in Srilanka opposite the “kacheris(Secretariets) in a open expression of sympathy for Eelam Tamils there was a mass meeting on the 13th of March 1961 at Mareena Beech. The gathering of the masses and the resolution passed was a turning point in our freedom struggles. His articles in Thiravidar nadu in Tamil and Homeland in English focused world attention.
In 1958, in his Homeland dated June 15th he described the atrocities committed bye the Srilankan Arm forces in a very strong language. He described the plight of the Eelam Tamils as “Cinderallas in Ceylon”. On June 29th 1958 Homeland issue he brought out, articles and photos describing in a moving manner the suffering of the Eelam Tamils. Again on July 22nd 1958 the Homeland issue covered his letters addressed to the world forum appealing to their attention.
In 1958 on August 10th he appealed to the Tamils to rally round to make Bandaranayaka feel guilty of his conduct. In his Homeland, in thick letters he wrote the following para:
“That does not necessarily mean, demanding a Tamil Raj comprising Tamil Nad and that portion of Ceylon wherein Tamilans are in a majority ..The task immediately ahead is to focus public attention on the problem. World opinion should be harnessed to the cause for justice and fair play. The plight of the Tamilains in Ceylon should be placed before the discerning public all over the world.
ANNA’S REACTION TO KRISHNA MENON
In conclusion, let me state as to what Anna said “to V.K.Krishna Menon theN defence minister. Krishna Menon in keeping with his position said to Anna, “ His interference in the internal affairs in Sri Lanka is embarrassment to India. He said ‘ Srilanka is a loving close neighbors of ours and a little island, we cannot afford to offend its feelings. Typical of Anna, anna retorted by saying the Krishna Menon is a political giant, with rich experience in politics and that he is not a match to him;but he asked the questions “ if I see my neighbor hugging and kissing his wife I shall not look on but out of shyness I will look the other side but If my neighbor under the protext that he is the husband and tyring to knife her to death and she cries in agony Am I to watch on? Nor I have to go to her rescue . The Plight of the Eelam Tamils is the same. I cannot to watch on when they are dying I have to go to their rescue. This statement of his silenced Krishna Menon and he didn’t say anything after that. This is where Anna’s excels in the beautiful art of diplomacy. What his diplomacy is to say the worst things in the best form.
KARUNANITHY THE BETRAYOR OF THE TAMILS
Unfortunately, for us the so called the disciples of Anna, especially Muthuvelu Karunanithy the present chief minister of Tamil Nadu doing the very negation of what Anna stood for. Much against our wish, Honorable. Karunanithy will go down in history as a greatest betrayer of Eelam Tamils. The verdict of history cannot be easily be altered.
Published on: Feb 05, 2011 13:58:01 GMT
பேரறிஞர் அண்ணா தமிழுக்கு மலர்ச்சியும்
தமிழினத்துக்குப் புகழும் தேடித்தந்தவர்
நக்கீரன்
பேரறிஞர் அண்ணாவின் 101 ஆவது பிறந்த நாளையொட்டி இக்கட்டுரை வெளியாகிறது)
தமிழகத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் தங்கள் பெயரை தடம்பதித்து மறைந்த அரசர்கள்,
புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் பலர் இருக்கிறார்கள்.
இவர்களில் அறிஞர் அண்ணா குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர். அவர் ஈட்டிய சாதனைகள் எழுத்தில் அடங்கா. ஒரு துறையில் மட்டுமல்ல பல் துறைகளிலும் அவர் முத்திரை பதித்துள்ளார்.
அண்ணா ஒருவர்தான் முழுநேர அரசியல்வாதியாக அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதிலும் படைப்பு இலக்கியத்தில் புகழ்க் கொடி நாட்டியவர். அவர் தொடாத துறை என்று எதுவும் இருக்கவில்லை.
இலக்கியத்தில் சிறுகதை, நெடுங்கதை, வராலாற்று நெடுங்கதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், திரைப்படங்கள், உரையாடல்கள், கடிதங்கள் என எல்லாவற்றையும் மாற்றாரும் போற்றும் வண்ணம் படைத்தார்.
பண்டிதர்கள் மத்தியில் இருந்த கவிதையை எப்படி பாரதி மக்கள்
மன்றத்துக்கு இழுத்து வந்தாரோ அதே போல் மேடைத் தமிழை முதன்முதலில் கேட்டார்ப்
பிணிக்கும் தகையவாய் பொதுமக்கள் வேட்பவும் கொண்டு வந்தவர் அறிஞர் அண்ணாதான்.
அண்ணாதான் முதன் முதலில் செய்யுள் அணிகளில் காணப்பட்ட எதுகை மோனை என்ற
அடுக்குமொழியை தமிழ்ப் பேச்சிலும் எழுத்திலும் கையாண்டவர்.
தமிழகத்தில் சிறந்த மேடைச் சொற்பொழிவாளராகத் திகழ்ந்தவர் திரு.வி.
கல்யாணசுந்தரனார். அவரே அண்ணாவை பாராட்டுகிறபோது “இனி திரு.வி.க நடை என்பது
மறைந்து அண்ணாத்துரை நடை என வழங்கும்” எனவும்; “ஆயிரம் மேடை ஏறிய அறிஞர்.
பல்லாயிரம் மக்களின் உள்ளத்தை ஒருங்கே கவரும் சீரிய கூரிய சொல்லாளர். கண்ணின்று
கண்ணறச் சொல்லும் திண்ணியர்” எனப் பாராட்டினார்.
அண்ணாவுக்கு மேலுமொரு சிறப்பு உண்டு அண்ணாதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த சொற்பொழிவாளாராக விளங்கியவர். சொற்பொழிவுகளைக் கட்டணம் செலுத்தி மக்கள் கேட்டது தமிழகத்தில் முதன்முதலில் அண்ணாவின் சொற்பொழிவைத்தான்.
அண்ணாதான் தமிழகத்தில் 1938 இல் காங்கிரஸ் ஆட்சி கட்டாய
இந்தியைத் திணித்த போது அதனை எதிர்த்துச் சிறை சென்ற முதல் மொழிப் போராளி.
அகநானூற்றைக் கரைத்துக் குடித்த புலவர்கள், புறநானூற்றைப் புரட்டி எடுத்த தமிழ்
ஆசிரியர்கள், கற்றோர் போற்றும் கலித்தொகையைக் கற்றவர்கள், சங்கத் தமிழில்
கரைகண்டவர்கள், இந்தி மேலாண்மையால் தமிழுக்கு ஆபத்து வந்த போதெல்லாம்
அதுகுறித்துக் கவலைப்படாமல் சுயநலச் சூறாவளியில் சிக்குண்டு மொழியுணர்வும்
இனவுணர்வும் இழந்திருந்த நேரத்தில் அண்ணாதான் “எப்பக்கம் வந்திடும் இந்தி அது
எத்தனை பட்டாளம் கூட்டிவரும்” எனப் பரணி பாடி மதுரையை எரித்த கண்ணகி போல்
ஆதிக்க இந்திக்கு மணிமகுடம் சூட்டும் அரசியல் சட்டப் பிரிவைத் தீயிட்டுப்
பொசுக்கினார்!
தமிழில் கடைச் சங்க காலத்து நாடகத் தமிழ் நூல்கள் பல இறந்துபட்டுவிட்டன. சயந்தம்,
செயிற்றியம், முறுவல், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து,
செயன்முறை, குணநூல், நன்நூல், கூத்த நூல் என்னும் பெயர்களை மட்டுமே அறிய
முடிகின்றது. அவை அனைத்துமே நாட்டியம் பற்றியும் நாடகம் பற்றியும் இலக்கண
முறையில் விளக்கம் கூறும் நூல்கள் ஆகும்.; அடியார்க்கு நல்லார் தரும் உரை
விளக்கங்களில் செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல்களை மேற்கோள் காட்டுவதால்
அத்தகைய நூல்கள் அவர் காலத்தில் இருந்துள்ளன என்பதை உறுதி செய்ய முடிகின்றது.
இன்று கூத்த நூல் என்னும் பெயருடைய நாடகத் தமிழ் இலக்கண நூல் பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து எடுத்து அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. அவ்வாறே கடைச் சங்க காலத்து அறிவனார் இயற்றியுள்ள பஞ்சமரபு என்னும் நூல் இன்று கிடைத்துள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை (கிபி 1855 – 1897) அவர்களால் இயற்றப்பட்ட மனோன்மணியம் சிறந்த நாடக நூல் ஆகும். இந்த நூலிலேயே ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்’ என்ற தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் இடம்பெற்றுள்ளது. அது போலவே ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்ற வைர வரிகள் இந்த நூலிலேயே இடம்பெற்றுள்ளது.
மனோன்மணியம் டுழசன டுவைவழn (19 ஆம் நூற்றாண்டு) என்ற ஆங்கிலக் கவிஞர் இயற்றிய ‘வுhந டுழளவ வுயநள ழக ஆடைடநவரள’ அல்லது ‘வுhந ளுநஉசநவ றுயல’ என்ற சிறு காவியத்தின் தழுவலாகும்.
ஆனால் நாடகத்துறையில் ஒரு பெரிய புரட்சியை – திருப்புமுனையை – ஏற்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவையே சாரும்.
அண்ணா எழுதிய முதல் நாடகம் சந்திரோதயம் (1934) ஆகும். அடுத்து
அண்ணா ஓர் இரவு, வேலைக்காரி (1945) நீதிதேவன் மயக்கம், சந்திரமோகன் அல்லது
சிவாஜி கண்ட இந்து இராச்சியம், குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியின்
குறிப்புக்கள் (1940) என்ற நாடகங்களை எழுதினார். இந்த நாடகங்கள் அதுவரை இருந்த
நாடகத்தின் கட்டுமானத்தை முற்றாக மாற்றி அமைத்தன. சிறந்த நாடகப் படைப்பாளிகளாக
விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல்சம்பந்த முதலியார் போன்றவர்கள்
கருத்துக்களைவிட பயிற்சிக்கும் தொழில் நுட்பத்துக்கும் முக்கியத்துவம்
கொடுத்தார்கள். அண்ணாவோ கருத்துக்கு முதலிடம் கொடுத்தார்.
அண்ணா நாடக நூல்களைப் படைத்ததோடு நிற்கவில்லை. தான் எழுதிய சந்திரோதயம் எனும்
சமூக நாடகத்தில் தானே மூன்று வேடங்களில் நடித்து இயக்கித் தன் பணிமனைத்
தோழர்களையே நடிக்க வைத்தார்.
அண்ணா எழுதிய வேலைக்காரி மூன்று ஆண்டுகள் கழித்து அதே பெயரில் திரைப்படமாக வெளிவந்த போது திரையுலக வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதப்பட்டது. ஒரு நாடகத்தில் முதன்முதலில் வழக்கு மன்றக் காட்சிகளை அமைத்தவர் அண்ணாதான். வேலைக்காரி திரைப்படத்தின் மூலம் புதுமைக் கருத்துக்களைச் சொன்னார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் வாக்கை அறிவுறுத்தினார்.
அண்ணா தீட்டிய ஓர் இரவு நாடகத்தில் முதன் முதலாக இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிய காட்சிகளாக (கடயளா டியஉம) அமைத்தார். முதன்முதலில் அண்ணாதான் ஓர் இரவு திரைப்படத்திற்கு ரூ.20,000 ஊதியமாக வாங்கியவர். இயக்குநர் பெயரை விட கதை வசனம் எழுதிய அண்ணாவின் பெயருக்கு திரையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
கல்கி கிருட்டிணமூர்த்தி ஓர் இரவு நாடகத்தைப் பார்த்துவிட்டு “இதோ ஒரு பெர்னாட்சா, இதோ ஓர் இப்சன் என்று” என்று பாராட்டினார்.
அண்ணா கம்பராமாயணம், பெரிய புராணம் போன்றவற்றைத் துறையறக் கற்றவர். அவர் எழுதிய கம்பரசம் முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் செய்யப்பட்ட சிறப்பான இலக்கியத் திறனாய்வு நூலாகும். அது தொடர்ச்சியாக திராவிட நாடு இதழில் வெளிவந்த போது அதனை மறுக்கப் படித்த பண்டிதர்களோ, புலவர்களோ இலக்கியவாதிகளோ, தமிழறிஞர்களோ முன்வரவில்லை. மாற்றுக் கருத்துள்ளவர்களும் மறுக்க முடியாத ஏதுக்களை எடுத்து வைத்து அண்ணா வாதிட்டிருந்தார்.
அன்றாட வழக்கில், நடைமுறையில் இருந்த வடமொழிச் சொற்களை நீக்கி, தமிழ்ச் சொற்களை புகுத்தியவர் அண்ணாதான். நமஸ்காரம், அக்ராசனர், சபாநாயகர் என்ற வடமொழிச் சொற்களை மாற்றி வணக்கம், தலைவர், பேரவைத் தலைவர் என்ற தூயதமிழ்ச் சொற்களைச் சலங்கை கட்டி நடமாடவிட்டவர் அண்ணா! முடநாற்றம் வீசும் மூடத்தனத்தை முறியடித்துப் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பியவர் அண்ணா!
இவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் உரிய அறிஞர் அண்ணா ஈழத் தமிழர்களை மறந்தாரில்லை.
கடல் நீர் ஏன் கரிக்கிறது என்று கேட்டுவிட்டு அது தமிழன் விட்ட கண்ணீர் காரணம் என அண்ணா சொன்னார். ஈழத்தமிழருக்காக அன்றே ஓங்கிக் குரல் கொடுத்தவர். இனச் சிக்கலை இட்டு ஆழமாக அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் அறிந்திருந்தார்.
1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் திணிக்கப்பட்டபோது அதை
எதிர்த்து ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக அறவழியில் போரிட்டபோது வெறிகொண்ட சிங்களக்
காடையர்கள் தமிழ் மக்களைத் தாக்கினார்கள். தமிழ்மக்களது வீடு வாசல்கள், கடை
கண்ணிகள் நாசமாக்கப்பட்டன. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக குரலெழுப்பியவர் அண்ணா.
ஈழத் தமிழர் சார்பில் சட்டமன்றத்திலும் தில்லி மாநில அவையிலும் வாய்ப்புக்
கிடைக்கும் போதெல்லாம் அண்ணா பேசினார். இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்களைக்
கடுமையாகக் கண்டித்தார். ஈழத்தமிழர் சார்பில் உலக அய்யன்னா அவைக்கு அறிக்கைகளை
அனுப்பி ஈழத்தமிழர்களது மொழியுரிமை, வாழ்வுரிமை பறிக்கப்பட்டதை அனைத்துலகச்
சிக்கலாக மாற்றினார்.
மலையகக் காடுகளை வியர்வை சிந்தித் திருத்தி பொன் கொழிக்கும் தேயிலைத்
தோட்டங்களாக மாற்றிய மலையகத் தமிழர்களின் குடியுரிமை, வாக்குரிமை 1948-1949
களில் பறிக்கப்பட்டு அரசியல் ஏதிலிகளாக்கப்பட்டபோது சிங்கள அரசின் இனவெறிப்
போக்கினை அண்ணா கடுமையாகச் சாடினார்.
சிறிமாவோ - சாஸ்திரி உடன்பாடு என்பது இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த
975,000
இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர்காலம்
தொடர்பாக அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும்
இந்தியப் பிரதமராக இருந்து லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஒக்தோபர்
30
இல் கையெழுத்தான உடன்பாட்டைக் குறிக்கும். இதன்
கீழ் மேற் குறிப்பிட்டவர்களில்
525,000 பேரை இந்தியா
ஏற்றுக்கொள்வதெனவும் 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும்
முடிவானது. மீதி 150,000 பேர் பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என
தீர்மானிக்கப்பட்டது. இந்த உடன்பாட்டை அண்ணா மிகக் கடுமையாகக் கண்டித்தார்.
“சாத்துக்குடிப் பழத்தின் சாற்றினைப் பிழிந்த பின்பு தூக்கி எறிவது போலவே
இம்மக்கள் தூக்கி எறியப்பட்டுள்ளார்கள்” என்று தன் மனிதாபிமான உணர்வினையும் தன்
தமிழின உரிமை வேட்கையையும் வெளிப்படுத்தினார் அண்ணா.
அண்ணா நடத்திய திராவிட நாடு இதழிலும் Homeland
(1957)
Homerule
(1966)
இதழிலும் தம்பிக்கு எழுதிய கடிதங்களிலும் தலைப்புச் செய்திகளிலும் ஆசிரியர்
தலையங்களிலும் சிங்களத் தலைவர்களுக்கு இடித்துரைக்கும் முறையில் எடுத்துச்
சொன்னார்.
ஒரு முறை ஈழத்தமிழர் சார்பாக மாநிலங்கள் அவையில் அண்ணா குரலெழுப்பியபோது,
அப்போது பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய வி. கே. கிருஷ்ணமேனன் இலங்கையின்
உள்நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவது முறையல்ல என்று கூறினார்.
அதற்கு அறிஞர் அண்ணா தனக்கே உரிய பாணியில் பொடி போடும் முறையில் பேசினார்.
“கிருஷ்ணமேனன் பெரிய அரசியல் அறிஞர் என்பதை நான் ஏற்கின்றேன்” என்று கூறிய அண்ணா
“என் வீட்டின் அயலவன் தன் மனைவியை இறுக அணைத்து முத்தம் சொரிகின்ற போது நான்
பார்க்க மாட்டேன். மாறாக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு வேறு இடம்
சென்று விடுவேன். ஆனால், அதே அயலவன் தான் கணவன் என்ற உரிமையில் தன் மனைவி-யின்
கழுத்தில் கத்தி வைக்கின்ற போது, அவள் அய்யோ என்று அலறுகின்ற போது, நான்
பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அது போன்று தான் என் தமிழன் இலங்கையில்
கொலைக்கு ஆளாகின்ற போது நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று அண்ணா
பதிலிறுத்தார். இன்று போல் அன்று அண்ணா ஈழத்தமிழர்களைப் பார்த்து
சிங்களவர்களுக்கு கோபம் வராதவாறு நீக்குப் போக்காக நடந்து கொள்ளுங்கள் என்று
கீதா உபதேசம் செய்யவில்லை. நெஞ்சுரத்தோடும் நேர்மையோடும் தெளிவோடும் துணிவோடும்
ஈழத்தமிழர் அழிவைத் தடுக்க முனைந்தார்.
அண்ணா முத்துமணித் தொட்டில், பவழமணி வட்டில், கனகமணிக் கட்டில் என்றெலாம் வளமும்
வனப்பும் வாய்ப்பும் வசதியும் பூத்துக் குலுங்கிய குடும்பத்தில் பிறந்தவர்
அல்லர். மிகச் சாதாரணமான எளிய குடும்பத்தில் பிறந்தவர். கோடி கோடி எனச்
சேர்க்காமல் கோடான கோடி மக்களின் இதயத் தாமரையில் இடம் பிடித்தவர்.
‘அண்ணா துரையென்னும் அண்ணல்
தமிழ்நாட்டு வண்ணான் அழுக்கெடுப்பில்
வாய்மொழியில் பண்ணாவான்
சிற்பன் எழுத்தோவியத்தில்
செவ்வரசு நாவான்
அற்புதம் சூழ்மாலுமி என்றாடு’
என்று போற்றுப்பட்ட பேரறிஞர் அண்ணா தமிழ்மொழிக்கு மறுமலர்ச்சியையும்
தமிழினத்துக்குப் புகழையும் தேடித்தந்தவர். அவர் நினைவு கடலும் மலையும் நிலவும்
வானும் திங்களும் ஞாயிறும் இருக்கும் காலம் வரை நீடித்து இருக்கும்.
அண்ணாவின் நோக்கில் தமிழ்த்தேசியம்
தியாகு
தமிழகத்தில் இன்றைய அரசியல் போக்கை வடிவமைத்தவர் அண்ணா. அவருடைய பெயரைச் சொல்லும் தேர்தல் கட்சிகளே இன்றளவும் சட்ட மன்றத்திலும், தமிழகம் சார்பான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொகையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்திய அரசியலில் பங்கெடுத்த அண்ணா இந்தியத் தேசியத்தை மறுத்தார். அது போன்றே மொழிவழித் தமிழ்த் தேசியத்தையும் புறந்தள்ளி திராவிடத் தேசியத்தை உயர்த்திப் பிடித்தார்.
இந்திய ஓர்மையை மறுத்து திராவிடத் தேசியம் பேசிய அறிஞர் அண்ணாவுக்கு மொழி வழித் தேசியம் பற்றித் தெரியுமா? தெரியும். அது குறித்து அண்ணா நன்றாக அறிவார்; அறிந்தும் தமிழ்த் தேசியத்தைக் கையிலெடுக்காததே அண்ணா இழைத்த வரலாற்றுப் பிழை.
மொழிவழித் தேசியம் குறித்த அண்ணாவின் புரிதல் அவருடைய சொற்களிலிருந்தே விளங்கும்:
“இந்தியாவில் ஒரு இனத்தையும் அதற்குரிய தாயகத்தையும் எதைக் கொண்டு நிர்ணயிப்பது? இது முக்கிய விடயமே. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் ஆகியவைகளை உடையோரைத் தனி இனமாகவும், அவர்கள் சேர்ந்தாற்போல் வாழும் பிரதேசத்தை அவர்களுக்குரிய தாயகமாகவும் கொள்வதே சரியான முறை. அதன்படி பார்த்தால் இந்தியாவில் தமிழர், ஆந்திரா, கேரளர், கன்னடர், கூர்ஜரர், வங்காளத்தார், பாஞ்சாலத்தார், மராட்டியர் போன்ற பதினேழு தேசிய இனங்களும் அவற்றின் தாயகங்களும் இருக்கின்றன.
“இந்தப் பதினேழு நாடுகளும் தத்தம் எல்லையில் வேறு எவர் தயவுமின்றி, தனி அரசு புரியக்கூடிய அளவுக்கு மக்கள்தொகை, பொருள்வளம், நீர்வளம் ஆகியவைகளைப் பெற்றிருக்கின்றன.”
(திராவிடநாடு, கடிதம் 55, 24.6.1956; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்- தமிழ் அரசிப் பதிப்பகம், சென்னை,2005, பக்.199)
ஒரு தேசம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அது தேசம்தான்; தமிழ்நாடு சிறியதாக இருந்தாலும் ‘அதன் தகுதி அளவைப் பொறுத்து அல்ல’ என்ற பார்வையும் அண்ணாவுக்கு இருந்தது.
1955இல் தட்சணப் பிரதேசத் திட்டத்தை நேருவின் அரசு கொண்டுவர முயற்சி செய்தது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்காமல் இந்தியாவைப் பிரதேசங்களாக அல்லது மண்டலங்களாகப் பிரித்து விடுவது என்ற வஞ்சகத் திட்டத்தை முன்வைத்தது. இத்திட்டத்தில் நேருவை விழச் செய்ததே இராசகோபாலாச்சாரியார்தான் என்று அண்ணா கூறுகிறார். இந்த தட்சணப்பிரதேசத் திட்டத்தை பெரியாரும் எதிர்த்தார்; அண்ணாவும் எதிர்த்தார். தட்சணப்பிரதேசத் திட்டம் பற்றிக் கூறும் போது, அண்ணா மொழி வழி நாடுகள் பற்றிய தம் புரிதலை வெளிக்காட்டுகிறார்:
“ஆச்சாரியார் ‘தட்சிணப் பிரதேசம்’ கேட்டார்
“தமிழ்நாடு-மிகச் சிறிய அமைப்பு-இந்திய அரசியலிலே இந்தச் சிறிய அமைப்புக்குச் செல்வாக்கு ஏற்படாதுபெரிய அளவில் உள்ள உத்தரப் பிரதேசம் வைத்ததுதான் சட்டமாக இருக்கும் என்ற காரணம் காட்டினார் ஆச்சாரியார்.....
“அப்படியானால், ‘சிறிசு பெரிசு’ பார்த்துத்தான் இந்திய அரசியல் நடந்து கொள்ளுமா? நீதி, நேர்மைக்கு இடமளிக்காதா? தமிழ்நாடு சிறிய அளவாகவும், உத்தரப் பிரதேசம் பெரிய அளவிலும் இருந்தாலென்ன? எல்லாவற்றுக்கும் ‘மேலே’ உள்ள அதிகாரி, நேர்மையுடன் நடந்து கொள்ளக் கூடாதோ? என்று யாரும் கேட்கவில்லை...!
“உலகிலே, பிரிட்டனும் பிரான்சும் அளவிலே சிறிய நாடுகள். விரிந்து பரந்து கிடக்கும் அமெரிக்காவுடன், உலக அரங்கிலே அவை சமமாகத்தான் நடத்தப்படுகின்றன. அது மட்டுமல்ல. மிகப் பெரிய சீனாவுக்கு ஐ.நா.வில் இடமளிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ‘முடிவு’’ காண, இந்த நாடுகளிடம் முத்திரை மோதிரம் இருக்கிறது.
”தனி அரசு நடாத்தும் நாடுகளிலேயே, அளவு பற்றி அல்ல அந்தஸ்து கிடைப்பது என்பதற்கு இது போன்ற ஆயிரத்தெட்டு எடுத்துக்காட்டுகள் உள்ளன.”
(திராவிட நாடு, கடிதம் 32, 1.1.1956; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் , பக்.311)
அண்ணாவின் பார்வைக் குறைவுக்குக் கண்டனம்
இவ்வளவு தெளிவான புரிதல் அண்ணாவுக்கு இருந்த போதிலும் திராவிடத் தேசியம் பேசினார்; திராவிட நாடு விடுதலை கோரினார். அண்ணாவின் வாழ்நாளிலேயே பிற தமிழர் தலைவர்கள் தமிழ்த் தேசியக் கோரிக்கையை வலியுறுத்தினர்; அண்ணாவும் தமிழ்த் தேசிய உரிமைக்குக் குரல் கொடுக்க வற்புறுத்தினார்.
தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தமிழ் முரசு இதழில்(1.5.1947) தமிழ்நாடு என்ற மொழிவழி நாட்டுக் கோரிக்கையை வலியுறுத்தினார்:
“மொழிவழி நாடு என்ற உண்மையை ஆந்திரரும் கேரளரும் கன்னடரும் உணர்ந்திருப்பது போலத் தமிழன் உணரவில்லை. தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ன காண்கிறோம்? என்ன கேட்கிறோம்? தமிழ்நாடு என்றால், “தமிழ்ஸ்தான் - பாகிஸ்தான் என்று கூறி விடுவதிலேயே அறிவின் அறுதியான எல்லை உண்டு என அகமகிழ்வோர் ஒருபுறம்; திராவிட நாடு,இந்திய நாடு எனப் பேசுவதே அரசியல் அறிவொளி வீசுவதாம் எனச் செருக்கித் திரிவோர் ஒருபுறம். ஆந்திர நாடு, கன்னட நாடு, கேரள நாடு எனப் பேசுவது போலத் தமிழ்நாடு என ஒரு முகமாகப் பேசக் காணோமே”.
தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் ‘தமிழர் கழகம்’’ என்ற அமைப்பை நிறுவி, ‘’தமிழர் நாடு’’ என்ற மாத இதழையும் நடத்தி வந்தார். 1940 இல் நீதிக் கட்சியின் 15ஆவது மாநாடு திருவாரூரில் நடைபெற்ற போது, நீதிக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் திராவிட நாடு கோரிக்கையை ஏற்க மறுத்தார். கட்சியின் தலைவர் பெரியாரிடமிருந்து முரண்பட்டு பொதுச் செயலர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். ‘திராவிட நாடு கோரிக்கை தவறானது; தமிழ்நாடு விடுத லைக் கோரிக்கையே சரியானது’ என்ற கருத்தை முன் வைத்து கருத்துப் பரவல் செய்தார். இந்தியாவிலிருந்து அரசியல் ரீதியாக விடுதலை பெற்ற தமிழரசு அமைய வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.
1948இல் அண்ணா பெரியாருடன்தான் இருந்தார். பெரியாரின் உரைக்கு எதிராக கி.ஆ.பெ. விசுவநாதம் வைத்த கேள்வி அண்ணாவுக்கும் உரியதுதான். அக்கேள்வியை அண்ணா சிந்தனைக்கு எடுத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
ஆரியர், வடவர், பார்ப்பனர் மற்றும் மார்வாடி அரசாகிய இந்திய அரசிடமிருந்து விடுதலை பெற திராவிடர்கள் ஓரணியில் நிற்க வேண்டும்; அவ்வாறில்லா விட்டால் தம் போராட்டம் வலுவிழந்து போகும் என்ற பார்வையைப் பெரியார் 1948 இல் கொண்டிருந்தார்.
ஆகவே பெரியார், “தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜ்யம் என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்” என்று கூறினார்.
இத்தகைய சிந்தனைப் போக்கைக் கண்டனம் செய்து கி.ஆ.பெ. விசுவநாதம் எழுப்பிய கேள்வி திராவிட நாடு கோரிக்கை எழுப்பிய அனைவருக்கும் பொதுவானது:
..... தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் அரசு, என்று கூறக் கூடாதென்றும், திராவிடம், திராவிடர், திராவிட நாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு என்றே கூற வேண்டுமென்றும், அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டுப் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம் ஆந்திர, மலையாள, கன்னடிய மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே கூறி வரும் போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும், தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக் கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.”
“ஆந்திர நாட்டுக்குச் சென்று ஆந்திரர், ஆந்திர நாடு என்று சொல்லுபவர்களிடம் அவ்வாறு சொல்லுகிறவர்கள் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இது வரை சொல்லியிருக்கிறாரா? இனியேனும் சொல்லுவாரா?”
(மேற்கோள்: ம.பொ. சிவஞானம், புதிய தமிழகம் படைத்த வரலாறு, பூங்கொடி பதிப்பகம், சென்னை 1986, பக்.105)
இதே காலக்கட்டத்தில் இந்தியக் கூட்டாட்சிக்குள் ‘சுயநிர்ணய உரிமை’ (தன்னுரிமை) யுடன் கூடிய சுதந்திரத் தமிழகம் என்ற இலக்கை முன்வைத்து தமிழரசுக் கழகத்தை நிறுவி (தூக்கி யெறியப்படும் வரை காங்கிரசுக்குள் செயல்படும் கட்சியாக) செயல்பட்டு வந்தார் ம.பொ. சிவஞானம், இந்தியத் தேசியத்தை உயர்த்திப் பிடித்த ம.பொ.சி., ‘தமிழர்களின் உரிமைக்கு எல்லை வேங்கடம் என்றும் உறவுக்கு எல்லை இமயம்’ என்றும் இந்திய ஒருமைப்பாட்டு உணர்ச்சி தமக்கு உடன்பாடே என்றும் கூறிவந்தார். (தமிழ் முரசு, 15.4.1947) ‘ஒன்றுபட்ட இந்தியக் கூட்டாட்சிக்குள் தன்னுரிமையுள்ள தமிழகம்’ என்பது அவருடைய நிலைப்பாடு.
ஆனால் அண்ணா இந்தியத்தை மறுப்பதில் சரியாகவும், இயல்புக்கு மாறுதலான திராவிடத்தை வலியுறுத்துவதன் மூலம் தமிழ்த் தேசிய இன விடுதலை கருத்தியலுக்குத் தடையாகவும் இருந்தார். அண்ணாவின் நாவன்மை திராவிட தேசிய உணர்வைத் தூக்கி நிறுத்தி தமிழ்த் தேசிய உணர்வைப் புறம் தள்ளியது. இதற்குச் சான்றாக ம.பொ.சி. பதிவு செய்துள்ள ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம். மாகாணத் தமிழாசிரியர் மாநாட்டில் (12.3.1947) தமிழ் மாநிலம் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்ச்சியில் அண்ணாவும், ம.பொ.சியும் பங்கேற்றனர். தமிழ் மாகாணக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், திராவிட நாடு பிரிவினைக்கு முதன்மை தந்தும் அண்ணா பேசினார். ம.பொ.சி. இவ்வாறு பதிவு செய்கிறார்:
“தமது திராவிடர் கழகத்தின் திராவிடத் தனிநாட்டுக் கோரிக்கைக்கும், தமிழரசுக் கழகத்தின் தமிழரசுக் கோரிக்கைக்கும் வேற்றுமையில்லை யென்று கூறி (அண்ணா) எங்களிடையே உறவை வளர்ப்பதில் தமக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ‘திராவிடத் தனியரசு ஓரணா போன்றதென்றும், தமிழரசு காலணா போன்றதென்றும் கூறினார். ‘நான் கேட்கும் ஓரணாவில், ம.பொ.சி. கேட்கும் காலணா இருக்கிறது. ஆனால், ம.பொ.சி. கேட்கும் காலணாவில் ஓரணா இல்லை என்றார்.”
மாநாட்டில், ‘இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டுக்குட்பட்ட தமிழரசு’ என்ற கோரிக்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
‘தமிழ்’ என்றும் ‘தமிழினம்’ என்றும் ‘தமிழ்நாடு’ என்றும் பேசுமுன் ம.பொ.சி. குரல் எழுப்புவதும், வாழ்க என்று வாழ்த்துக் குரலை மக்கள் எழுப்புவதும் வழக்கம். ஆனால் அன்று நடந்ததை ம.பொ.சி. இவ்வாறு பதிவு செய்கிறார்:
“ஆனால், தமிழாசிரியர் மாநாட்டிலே, எனக்கு முன் திராவிட இன உணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தந்து அண்ணா பேசி விட்டதால், நான் ‘தமிழினம் வாழ்க’ என்ற போது, மாநாட்டிலே தீவிர திராவிடர் பலர் ‘திராவிட இனம் வாழ்க’ என்றும், நான் ‘தமிழ்நாடு வாழ்க’ என்ற போது ‘திராவிட நாடு வாழ்க’ என்றும் போட்டிக் குரல் எழுப்பினர்.
(ம.பொ.சிவஞானம், புதிய தமிழகம், பக்.101)
கூட்டத்தினரின் இப்போக்குக்குக் காரணம் தமிழினம், தமிழ்நாடு எனப் பேசுவதே இந்தியத்துக்கு உட்பட்டது என்ற பார்வையை நாவன்மை மிக்க அண்ணா உருவாக்கியிருந்ததே ஆகும். இந்தியத்துக்கு உடன்படா நிலையையும். ‘தமிழினம், தமிழ்நாடு விடுதலை’ என்ற கருத்தியலுக்கு முரண்படும் உளநிலையையும் மக்களிடையே அண்ணா உருவாக்கி வந்தார்.
அண்ணாவின் திராவிடம்
திராவிட நாடு விடுதலையை அண்ணா 1940 முதல் 1963 வரை உயர்த்திப் பிடித்தார். திராவிடம் முன்னாளில் தனியாட்சியுடன் இருந்தது என்றும் அதை ஆரியர், வடவர் அடிமைக்காடு ஆக்கி விட்டனர் என்றும் ‘இன்று திராவிடத்தின் தலைவிதி டில்லியில் எழுதப்படுகிறது’ என்றும் டில்லி ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் அண்ணா கருத்துரைத்தார்.
“திராவிட நாடு தனியாக வேண்டும் - தனி அரசாக வேண்டும்.” (அண்ணா ‘இன்பத் திராவிடம்’. பக்.20)
தமிழகம், கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் திராவிடக் கூட்டாட்சி: அவரவர் உரிமை, கலை, மொழி இவைகளில் கை வைக்கப்பட மாட்டாது; ஆங்காங்கே அந்தந்த வட்டார மொழிகள் பயிலப்படும். அகில உலகத் தொடர்பிற்கும் கூட்டாட்சி விவகாரங்களுக்கும் ஆங்கிலம் இருக்கும்”. ( மேலது, பக்.37)
“தமிழ்நாடு தமிழருக்குத்தான் - ஆந்திர நாடு ஆந்திரருக்குத் தான் கேரள நாடு கேரளருக்குத்தான் கர்நாடகம் கர்நாடகருக்கே இவையாவும் கூடிய திராவிட நாடு திராவிடருக்கே ஆரியருக்கல்ல! பனியாவுக்கல்ல! “ (மேலது, பக்.34)
“நாம் நல்ல நிலை அடைய வேண்டுமானால் இன்னின்ன இணைப்புகளிலிருந்து, ஆரியம், ஆங்கிலம், வடநாடு என்னும் பிணைப்புகளிலிருந்து, ஜெபமாலை, துப்பாக்கி, தராசு எனும் கருவிகளைக் கொண்டு நமது வளத்தைக் கருக்கும் தொடர்புகளிலிருந்து விடுபட வேண்டும்...” ( மேலது, பக்.23-24). இதுவே அண்ணாவின் திராவிடம் பற்றிய பார்வை. அண்ணா கூறினார்:
“இந்த மூல நோக்கத்தை ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம். ஏற்றுக் கொள்வதிலே இந்த நால்வருக்கும் நலமிருக்கிறது என்று நம்புகிறோம். அவர்கள் டில்லியுடன் இணைந்து இருப்பதை விட, கூட்டாட்சியாக நம்மோடு இருப்பது நல்லது என்று எண்ணுகிறோம். எடுத்துக் கூறும் அளவுக்கு நமக்கும் அவர்களுக்கும் பாத்தியதை உறவு, ஒரே இனம் என்ற உரிமை இருக்கிற காரணத்தால்.” (மேலது, பக்.24)
ஏன் திராவிட நாடு கோரிக்கையை ஏனைய திராவிடத்தார் ஏற்கவில்லை என்ற கேள்விக்கு அண்ணாவின் விளக்கம் இதுதான்:
“கேரளத்தார் சம்மதம் கிடைக்கவில்லை, இன்னும் கேட்காததால்; கன்னடத்தார் ஒப்புதல் வரவில்லை, அவர்களைக் காணாததால்; ஆந்திரர் ஆதரவு பெறவில்லை, அவர்களை நாம் அணுகாததால். கேட்டு மறுத்ததில்லை ; நாம் சொல்லி எதிர்த்த தில்லை. அப்படியே மறுப்பதாக வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் திராவிட நாடு எல்லை குறையுமே தவிர, பிரச்சினை மறைந்து விடாது.” (மேலது, பக்.56)
ஆனால் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையைச் சென்னை மாகாணத்தில் தமிழ் மாவட்டங்களைத் தாண்டி எவரும் ஏற்கவில்லை.
1938 முதல் 1949 வரை தந்தை பெரியாருடன் அண்ணா இருந்த போதும், பின்னர் 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை உருவாக்கித் தேர்தல் கட்சியாக வளர்த்தெடுத்த காலத்திலும், 1963இல் அதைக் கைவிடும் வரை திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை அண்ணா உயர்த்திப் பிடித்தார்.
தமிழ்த் தலைவர்கள் சிலர் ‘விடுதலை பெற்ற தமிழகம்’ அல்லது ‘இந்தியக் கூட்டாட்சிக்குள் தன்னுரிமை பெற்ற தமிழகம்’ அல்லது தமிழகமும் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளும் சேர்ந்து உருவாக்கப்படும் ‘தமிழப் பேரரசு’ ஆகிய இலக்குகளை வலியுறுத்திய காலத்திலும், அண்ணா திராவிட நாடு விடுதலை பேசினார். 1956க்கு முந்தைய சென்னை மாகாணத்தின் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் பேசப்படும் மாவட்டங்களில் திராவிட நாடு கோரிக்கையைப் பரப்ப எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமலே அண்ணா தொடர்ந்து திராவிட நாடு விடுதலை பற்றிப் பேசினார்.
இந்தியத் துணைக் கண்டத்திலே மொழி இன உணர்வின் வளர்ச்சி
மொழி வழி மாநிலங்கள் அமைப்பதற்கான கோரிக்கைகள் 1920கள் முதலே வலுவடைந்து வருவதை அண்ணா அறிந்திருந்தாலும் திராவிட நாடு கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பினார். 1953இல் ஆந்திரா மொழிவாரி மாநிலமாகப் போராடிப் பிறப்பெடுத்தது.
ஆந்திர மாநிலம் கோரி 1952 அக்டோபர் 19ஆம் நாள் முதல் 58 நாள் பட்டினிப்போர் நடத்தி ‘போத்தி ஸ்ரீராமுலு’ உயிர் ஈகம் செய்ததைத் தொடர்ந்து தெலுங்குப் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதற்கு மேலும் மொழிவாரி மாநிலம் உருவாக்காமல் தாமதிக்க முடியாது என்ற நிலையிலேயே தெலுங்குப் பகுதிகள் ஆந்திரமாக 1953 அக்டோபர் முதல் நாள் அறிவிக்கப்பட்டது. இது அண்ணாவுக்கும் தெரியும்; பெரியாருக்கும் தெரியும்.
போத்தி ஸ்ரீராமுலுவின் உயிர் ஈகமும் அதனால் தெலுங்கர்களுக்குக் கிடைத்த வெற்றியும் கன்னடர்களிடையே புதிய வேகத்தை உருவாக்கியது. ‘அன்னடனப்பா தோத்திமேதி’ என்னும் கன்னடர், ஜக்லி எனும் கிராமத்தில் சாகும் வரை பட்டினிப் போர் தொடங்கினார். கன்னடப் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் பின்னர் மாநிலச் சீரமைப்புக் குழு நியமனம் பற்றி நேரு அறிவித்தார்; கலவரம் நின்றது. 1956 நவம்பர் முதல் நாள் மைசூர் மாநிலம் (கர்நாடகம்), கேரளம், சென்னை உள்ளிட்ட மொழிவழி மாநிலங்கள் பிறந்தன. மொழிவழி மாநிலங்களின் உருவாக்கத்தைத் தடுக்க இயலாமற் போனதாலேயே வேறு வழியில்லாமல் மாநிலச் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தங்கள் மொழிஇன மாநிலங்கள் அமைப்பதில் குறியாக இருந்தனர். தமிழ்ப் பகுதிகளுடன் இணைந்து ஒரே மாகாணமாக இருக்க அவர்கள் விரும்பவில்லை.
தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையும் பெரியாரும்
மொழிவழி மாநிலங்கள் அறிவிக்கப்படும் நிலையில், 1956ஆம்ஆண்டு யூன் மாதமே பெரியார் திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டார். பெரியாரின் கோரிக்கை காலம், களம் இவற்றுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. இலக்கு மட்டும் முழுமையான விடுதலை என்பதிலிருந்து மாற்றம் காணவில்லை. பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தம் விடுதலை இதழில் அச்சிட்டார்; தனித் தமிழ்நாடு கோரினார். மொழிவழி மாநில உருவாக்கம் இந்திய ஆரிய,வடவர் ஆதிக்கத்திலிருந்து தாம் விரும்பும் விடுதலைக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்து விடுமோ என்று சந்தேகக் கண் கொண்டு பார்த்து வந்த பெரியார் 1956இல் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்தார்.
பெரியார் எழுதினார்:
“திராவிட நாடு எது? இதற்குமுன் 1956க்கு முன் இருந்த சென்னை மாகாணந்தான் ‘திராவிடநாடு’ என்று சொன்னேன். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம், பிரிந்திருக்கவில்லை... இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித் தமிழ்நாடாக ஆகி விட்டோம். முன்பு அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால், அவர்கள் பிரிந்து தனியாகப் போவதிலேயே கவனத்தைச் செலுத்திப் பிரிந்து போய் விட்டார்கள்....
“தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் இருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லாமல் காக்கை, கழுகு தூக்கிக் கொண்டா போய் விடும்? பக்கத்தில் இருக்கும் இலங்கையும், பர்மாவும் இருக்கும் பொழுது நாம் மட்டும் இருக்க முடியாதா? நமக்குப் போதுமான வசதி இங்கேயே இருக்கிறது”.
(விடுதலை, 29.8.1956; வே. ஆனைமுத்து, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பக் -732)
1953இல் ஆந்திரா தனித் தெலுங்கு மாநிலமாகப் பிரிந்த உடனேயே பெரியாரிடம் மாற்றம் ஏற்பட்டது. 1955 இல் பெரியார் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வரவேற்றார். அது தம் விடுதலை இலக்கை அடைய உதவும் என்று கருதினார்:
“பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும் மலையாளமும் (கர்நாடகமும் கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் - இவை சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றி விட்டது. என்ன காரணம் என்றால்,
“ஒன்று, கன்னடியனுக்கும் மலையாளிக்கும் இனப்பற்றோ, இனச் சுயமரியாதையோ, பகுத்தறிவுணர்ச்சியோ இல்லை என்பதாகும்....
“இரண்டு, அவர்கள் இருவருக்குமே மத்திய ஆட்சி என்னும் வடவராட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாய் இருப்பது பற்றியும் சிறிதும் கவலையில்லை.... மூன்றாவது இவர்கள் இரு நாட்டவர்களும் பெயரளவில் இருநாட்டவர்களானாலும், அளவில், எஞ்சிய சென்னை இராச்சியம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்களாவார்கள்...
“அப்படி 14இல் ஏழிலொரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3 இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு,இவை கலந்து இருப்பதால் நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூடச் சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
“இதை, நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாகப் பிரிய நேர்ந்து விட்டது. ஆதலால், நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.”
(விடுதலை - அறிக்கை, 11.10.1955; பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் -ய, பக்.730)
மொழிவாரி மாநில உருவாக்கத்தை பெரியார் வரவேற்றதன் காரணம் இதுவே. மொழிவாரி மாநிலப் பிரிவினையை அண்ணாவும் வரவேற்றார்.
தி.மு.க., தமிழரசுக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் 1956 பிப்ரவரி 20 அமைதிப் போராட்டம் அறிவித்தன. அதன் குறிக்கோள்களை அண்ணா இப்படி அறிவித்தார்;
“தட்சிணப் பிரதேச யோசனையை வீழ்த்த - தமிழகம் மொழிவழி அரசாக -
தமிழ்ப்பகுதிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் சேர -
சென்னைக்குத் தமிழ்நாடு என்று பெயர் கிடைக்க -
இத்தனைக்கும் சேர்த்தே பிப்ரவரி 20!”
(திராவிட நாடு, 5.2.1956; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்- தீ , பக். 352)
இந்தக் கூட்டுப் போராட்டத்தில் தமிழ்நாடு விடுதலை கோரிய பெரியார் இல்லை என்பதும், போராட்ட இலக்குகளில் தமிழ்நாடு விடுதலை இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
அண்ணாவின் புதிரான போக்கு
1956 மொழிவழி மாநிலங்கள் உருவான பின்பும் அண்ணா திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை. அண்ணாவிடம் இரண்டு விதப் போக்குகளைக் காணலாம். கட்சித் தொண்டர்களிடம் பேசும் போது மிகை விடுதலை உணர்வு பொங்கப் பேசுவதும், அரசு மற்றும் அதிகார அமைப்புகளிடம் பேசும் போது அதை வரம்புக்கு உட்படுத்திக் கொள்ளுவதுமான போக்கு இருந்தது.
தட்சணப் பிரதேசக் கொள்கையை எதிர்த்தும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கோரியும் 1954ஆம் ஆண்டு மே 3ஆம் நாள், பஸல் அலியைத் தலைவராகக் கொண்ட மாநிலச் சீரமைப்புக் குழுவிடம் அண்ணா ஓர் அறிக்கையை அளித்தார். அதன் உள்ளீடு ஆழ்ந்து பரிசீலிக்கத்தக்கது:
“இந்த நான்கு மொழிவழிப் பிரிவுகளை அமைப்பதுதான் உடனடித் தேவை என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக்காட்ட விரும்புகிறது. இதைச் செய்யும் போது எந்த ஒரு மொழிப் பிரிவும் மற்றொரு மொழிப் பிரிவின் நிலப்பரப்பை அபகரித்துக் கொள்ளாதவாறு அதிகாரத்தில் உள்ளோர் முழுக் கவனம் செலுத்த வேண்டும். விசால ஆந்திரம், சம்யுக்த கர்நாடகம், ஐக்கிய கேரளம், தமிழகம் என்ற பெயரால் உலவும் கோரிக்கைகளை தி.மு.க முழு மனதுடன் வரவேற்பதுடன் ஆதரவளித்தும் வருகிறது. அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும், மொழிவழிப் பிரிவினை வேண்டும் என்ற இரண்டின் சேர்க்கையே திராவிட நாடு கோரிக்கையாகும்.”
(மேற்கோள்: அருணன், அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி? மதுரை, 2005, பக்.46)
மொழிவழி மாநிலங்கள் 1956 நவம்பர் முதல் நாள் அதிகார பூர்வமாகச் செயல்பாட்டுக்கு வந்தன. அண்ணாவின் அறிக்கைப்படி அதிகாரப் பரவல் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனால் அண்ணா தம்பிகளிடம் மீண்டும் திராவிட நாடு விடுதலை பற்றிப் பேசினார். தமிழ்த்தேசியத்தையும், தமிழ்நாடு விடுதலையையும் அண்ணா கையிலெடுக்கவே இல்லை.
தமிழ்த் தேசியத்தை எவர் பேசினாலும் அவர்களைப் பின்னுக்குத் தள்ளினார் அண்ணா. தம் நாவன்மையால் அவர் சரியான திசைவழி வந்த தலைவர்களையயல்லாம் மக்களின் பார்வையில் ஈர்ப்பு இழக்கச் செய்தார். அது ம.பொ.சி. ஆனாலும், கட்சிக்குள் கலகக் குரல் எழுப்பி வெளியேறிய ஈ.வெ.கி. சம்பத் ஆனாலும், அண்ணாவின் பழிப்புரைகளுக்கு ஆளாயினர். தமிழ்த் தேசிய இன மறுப்பு என்பது மட்டுமின்றி, இன்றும் கலைஞர் கருணாநிதி பேசுகின்ற ‘மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர். நாட்டால் இந்தியர்’ என்கிற வகைபடுத்த முடியாக் குழப்பமான தேசிய அடையாளத்தின் தொடக்கப் புள்ளி அறிஞர் அண்ணாவே ஆவார்.
திராவிடராகத் தம்மை அழைத்துக் கொண்ட அண்ணா மறந்தும் தம்மைத் தமிழ்த் தேசிய இனமாகப் பார்க்கவில்லை. 1956 இல் தமிழ் மாவட்டங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு சென்னை மாநிலமாக (தமிழ்நாடு) அமைக்கப்பட்ட பிறகும் கூட அண்ணா திராவிட அடையாளத்தையே உயர்த்திப் பிடிக்கக் காரணம் என்ன?
தந்தை பெரியார் ‘திராவிடர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் பொழுது பார்ப்பனர்கள் ‘தமிழர்கள்’ என்று கூறிக் கொண்டு அமைப்புக்குள் நுழையா வண்ணம் தடுக்க முடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். ஆனால் திமுக.வில் வி.பி. இராமன் போன்ற பார்ப்பனர்கள் நுழைந்து முக்கியத் தலைவர்களாக வர முடிந்தது. அவ்வாறு இருந்தும் அண்ணா ‘திராவிடர்கள்’ என்ற சொல்லையும் ‘திராவிட நாடு’ என்ற சொல்லையும் பயன்பாட்டுக்கு வைத்துக் கொண்டதன் நோக்கம் என்ன?
அண்ணாவின் அரசியலே இதற்குக் காரணம் ஆகும். பெரியாரைப் போலன்றி அண்ணா தேர்தல் அரசியலைத் தம் வழிமுறையாகக் கொண்டார். 1952இல் நடைபெற்ற முதல் தேர்தலில் தி.மு.க போட்டியிட வில்லை. ஆனால் 1957இல் நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 15 சட்டமன்ற இடங்களையும், 1962இல் 50 சட்டமன்ற இடங்களையும் 1967இல் தமிழக ஆட்சி பீடத்தையும் தி.மு.க. கைப்பற்றியது.
தி.மு.கவின் தேர்தல் வெற்றிகளுக்கும் அண்ணா தம்மைத் தமிழ்த் தேசியராகப் பார்க்க மறுத்தமைக்கும் தொடர்பிருக்கிறது. மொழி வாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகும் தமிழகத்தில், அதிலும் குறிப்பாக தமிழக எல்லைப் பகுதி மாவட்டங்களில் பிற மொழியாளர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தம்மைத் தமிழ்த் தேசிய இனத்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டால், பிற மொழியாளர்களின் வாக்குகளைக் கணிசமான அளவில் இழக்க வேண்டியிருக்கும் என்பதை அண்ணா அறிவார். இன்றும் தமிழக எல்லைப் பகுதிகளில், வேலூர் இராணிப் பேட்டை போன்ற பகுதிகளில் தெலுங்கில் மட்டுமே ஆரம்பப் பள்ளிகளில் கல்விபெறும் வாய்ப்பை திமுக அரசு அளித்திருக்கிறது. கடந்த காலத் தேர்தல்களின் போது முரசொலி மாறன் போன்றவர்களே பிறமொழியாளர்களின் குடியிருப்புப் பகுதியில் இந்தியில் வாக்குக் கேட்டனர் என்ற செய்தியை இத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற வாக்குகளைப் பெறும் வகையில் தன் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்வது, கொள்கைகளில் சமரசம் செய்து கொள்வது என்ற போக்கை அண்ணாவே தொடங்கி வைத்தார். இந்திய ஒருமைப்பாட்டுக்கு விசுவாசம் பாராட்டிப் பங்கெடுக்கும் தேர்தல் அரசியலில் திமுக.வை ஈடுபடுத்தியதன் மூலம் இன்றைய திராவிட கட்சிகளின் பிழைப்புவாத அரசியலின் தொடக்கப் புள்ளியை அண்ணாவே அளித்தார். அண்ணா எளிமையானவராகவும் அதிகாரம் செலுத்திய காலத்தில் ஊழலுக்கு அப்பாற்பட்டவராகவும் இருந்திருந்தாலும் அவருடைய அரசியல் வழித்தோன்றல்களின் ஊழல் நிறைந்த பிழைப்புவாத அரசியல் என்பது அண்ணா ஏற்படுத்திக் கொடுத்த தொடக்கத்தின் பரிணாம வளர்ச்சியே என்பதை மறுக்க வியலாது.
தமிழ்த் தேசியக் கோட்பாட்டை முன்னிறுத்தி சரியான திசைவழியை எவர் முன்னெடுத்தாலும் அண்ணா தடைக்கல்லாக நின்று தமிழ்த் தேசிய வளர்ச்சியைக் குன்றச் செய்தார்.
சி.பா. ஆதித்தனாரின் தமிழ்த் தேசியத்துக்கு அண்ணாவின் மறுப்பு
தமிழ்த் தேசிய உணர்வாளரான சி.பா. ஆதித்தனார் உலகத் தமிழர்கள் அனைவரது பாதுகாப்பு பற்றியும் சிந்தித்தவர். 1942இல் தமிழக விடுதலையை இலக்காக் கொண்டு தமிழ் ராஜ்ய (தமிழ் அரசு) கட்சியை உருவாக்கினார். பின்னர் நாம் தமிழர் இயக்கத்தை உருவாக்கினார். தில்லி ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதே ஆதித்தனாரின் அரசியல். 1962 தேர்தலின் போது ஆதித்தனார் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும் என்ற சிந்தனையைப் பரப்புரை செய்தார். ஆதித்தனாரை விமர்சனம் செய்த அண்ணா இவ்வாறு கூறினார்:
“சி.பா. ஆதித்தனார் கேட்கும் தனித் தமிழ்நாடு என்பது ஒரு தொழுநோயாளியின் கையிலிருக்கும் வெண்ணெயைப் போன்றது. அது யாருக்கும் பயன்படாது.”
அண்ணாவின் இந்தக் கடுமையான விமர்சனத்துக்கு ஆதித்தனார் இவ்வாறு பதிலிறுத்தார்:
“மெத்தப் படித்த அண்ணாத்துரை அவர்களே! இன்று இந்தியக் கூட்டாட்சியில் தமிழ்நாடு அடிமைப்பட்டிருப்பதைப் போல, நீங்கள் கேட்கும் திராவிடக் கூட்டாட்சியிலும் தமிழ்நாடு அடிமை நாடாகத்தான் இருக்கும். அதை விட இந்தியக் கூட்டாட்சியிலேயே அடிமை நாடாக இருந்து விடலாமே! அது மட்டுமன்று. ‘திராவிட நாடு’ என்ற குழந்தையைப் பெற்றவர் பெரியார். அதை வளர்த்தவரும் அவரே. பின்னர் அவரே அத்திராவிட நாடு என்ற குழந்தை செத்து விட்டது, அதைக் குழிதோண்டிப் புதைத்து விட்டேன் என்று அறிவித்து விட்டார். இவ்வாறு அவர் அறிவித்த பிறகும் ‘திராவிட நாடு’ பிணத்தைத் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து, ‘திராவிட நாடு திராவிடருக்கே!’ என்று கதறியழுது கொண்டிருப்பதில் பொருளில்லை” (மேற்கோள்: குணா: தமிழின மீட்சி, ஒரு வரலாற்றுப் பார்வை, தமிழக ஆய்வரண், பெங்களூர், 1996, பக்.66)
ஈ.வெ.கி. சம்பத்தின் தமிழ்த் தேசியத்துக்கு அண்ணாவின் மறுப்பு
தி.மு.க.வை விட்டு வெளியேறிய ஈ.வெ.கி. சம்பத் மீதான அண்ணாவின் தாக்குதல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.
தி.மு.க.வுக்குள் 1960 முதல் ஓர் அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருந்தது. 1949இல் கட்சி தொடங்கப்பட்டது முதல் 1955 வரை கட்சியின் பொதுச் செயலாளராக அண்ணாவே இருந்தார். ஒரு மாறுதலுக்காக 1955 முதல் 1960 வரை நாவலர் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக இருந்தார்.1960இல் ஈ.வெ.கி. சம்பத்துக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையிலான பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. இவர்கள் போட்டியை அமைதிப்படுத்த அண்ணாவே மீண்டும் பொதுச் செயலாளர் ஆனார். உண்மையில் கட்சியே கிட்டத்தட்ட சம்பத் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாக அவரது ஆதரவாளர் கண்ணதாசன் ‘வனவாசம்’ என்ற தன் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். சம்பத் அவைத் தலைவர், கருணாநிதி பொருளாளர் என்று அப்போதைக்குப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தது.
சம்பத்தை குத்திக் காட்டும் வகையில் அண்ணா எழுதிய ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வடிவில்) கட்டுரைக்கு எதிர்வினையாக சம்பத் தென்றல் இதழில் எழுதிய ‘அண்ணாவின் மன்னன்’ கட்டுரை மீண்டும் பிரச்சினையை எழுப்பியது.
வேலூரில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்திற்கு (21 -22 சனவரி 1961) முன் நடந்த செயற்குழு கூட்டத்தில் சம்பத் தாக்கப்பட்டார். பிப்ரவரி 1961இல் திருச்சியில் கண்ணதாசன் மீது செருப்பு வீசும் முயற்சி, அதைக் கண்டித்து சம்பத் பட்டினிப் போராட்டம், பிறகு அண்ணா அழுது சமாதானம் செய்தது, (1961) ஏப்ரல் மாதம் சென்னையில் டி.எம். பார்த்தசாரதி எழுதிய திமுக வரலாறு நூல் வெளியீட்டு விழாவிற்கு சம்பத் பேசச் சென்றது. ஆனால் அண்ணா வராமற் போனது - என்ற தொடர் நிகழ்வுகளின் கசப்பு காரணமாக 1961 ஏப்ரல் 9இல் சம்பத் திமுகவை விட்டு வெளியேறினார். ஏப்ரல் 19 அன்று தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கினார். தமிழ்த் தேசியக் கட்சி அரசியல் அறிவியலின் அடிப்படையில் சரியான புரிதலோடு தமிழ்த் தேசிய அரசியலை முன் வைத்தது.
திமுக வில் இருக்கும் போதே, சம்பத் உட்கட்சிச் சீர்கேடுகள் மீது மட்டுமின்றி, ‘திராவிட நாடு பகற்கனவாகி விட்டது’ என்றும் ‘தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு திராவிட நாடு பற்றிப் பேசுவது பைத்தியக்காரத்தனம்’ என்றும் வெளிப்படையான விமர்சனங்களை வைத்தார்.
தமிழ்த் தேசியக் கட்சியின் முதல் மாநாடு 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 -17 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட அரசியல் கொள்கைத் தீர்மானம்:
“மொழி வழி தேசிய இனங்களுக்கு முழுச் சுதந்திரம் அளிப்பதின் மூலம்தான் அவற்றின் தேசிய அபிலாஷைகள் நிறைவேற்றப்பட முடியும். ஒவ்வொருவரின் அறிவுத் திறனும் படைப்பாற்றலும் பூரணமாக வெளிப்பட்டு சமூக நல்வாழ்வு தழைக்க முடியும்.
“ஒவ்வொரு மொழிவழித் தேசிய இனத்திற்கும் தன்னைத் தானே ஆண்டு கொள்ளும் பூரண சுதந்திரம் அளிக்க வேண்டும். அவ்விதம் சுதந்திரம் பெற்ற தேசிய இனங்கள் தம்மிச்சையாக ஒன்று கூடி பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய ஒரு கூட்டமைப்பைக் காண வேண்டும். இதுவே இந்தியாவின் அரசியல் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்று த.தே.க. கருதுகிறது.
“இந்தியக் கூட்டாட்சியில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசியத் தன்னாட்சி காண்பது என்ற கட்சியின் இலட்சியம் இந்த அடிப்படையில் அமைந்ததாகும். எனவே “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற இலட்சிய முழக்கத்தின் வெற்றிக்குப் பாடுபட வாரீர் என்று தமிழக மக்களை இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.”
தமிழ்த் தேசியக் கட்சியின் தீர்மானம் தேசிய இனத் தன்னுரிமையை தன் சாரமாகக் கொண்டிருப்பதை உணரலாம்.
1961இல் சம்பத் முன்வைத்த பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தமிழ்த்தேச இலக்கை கொச்சைப் படுத்திய அறிஞர் அண்ணா, 1957 திமுக தேர்தல் அறிக்கையில் அதே இலக்கைத்தான் தங்கள் குறிக்கோளாகத் தெரிவித்திருக்கிறார்.
திமுக.வின் 1957 தேர்தல் அறிக்கை
சுயநிர்ணய உரிமை வேண்டும்
“இந்திய அரசியல் சட்டம் உரிமை வழங்கும் சாசனமாக அமையாமல், பெரிதும் உரிமையை மறுத்த வடநாட்டு ஏகாதிபத்தியத்திற்கு அரண் செய்யும் சட்டத் தொகுப்பாக உள்ளது. இந்திய யூனியனில் பிணைக்கப்பட்டிருக்கும் எந்த மாநிலமும் வெள்ளையன் வெளியேறிய போது இந்திய யூனியன் என்னும் அமைப்பில் இணைவதற்கான விருப்பு வெறுப்பைத் தெரிவித்துக் கொள்ள வாய்ப்பே பெறவில்லை. அடுத்து யூனியன் அமைப்பிலிருந்து ஏதாவது ஒரு மாநிலம் பிரிந்து செல்ல விரும்பினால், பிரிந்து செல்லும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சம்மதித்தால்தான் பிரிந்து செல்ல முடியும் என்ற விதியினை அரசியல் அமைப்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளது. எனவே, அரசியல் அமைப்பில் செய்யப் படவேண்டிய முதல் மாற்றம், எந்த ஒரு மாநிலமும் எப்போது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையைத் தானே பெற்றிருக்க வழி செய்வதுதான்”.
தமிழ்த் தேசியத்தை சம்பத் முன்னிறுத்திய போது முன்னைவிடவும் பலமாக திராவிட நாடு கோரிக்கையை அண்ணா முழங்கினார். முன்னமே திராவிடநாடு சுடுகாடு அடைந்து விட்ட நிலையில் ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு ‘என்று முழங்கினார்.
சம்பத் முன்வைத்த, அறிவியலின் பாற்பட்ட ‘பிரிந்து போகும் உரிமையோடு கூடிய தமிழகம்’ என்ற, உலகளாவிய தேசிய இனத் தன்னுரிமை ஏற்பளிப்புக்கு உகந்த தமிழின அரசியல் கோட்பாட்டை அண்ணா எதிர்கொண்ட விதம் அறிவின்பாற்பட்டதோ அறிவியலின் பாற்பட்டதோ அல்ல. அண்ணாவின் கேள்விகள் இந்தக் கோணத்தில் அமைந்திருந்தன:
1. திராவிட நாடு கோரிக்கையைத் தமிழ்நாடு என்று மாற்றிக் கொள்வதால் என்ன பெரிய பலன் கிடைத்துவிடப் போகிறது?
2. திராவிட நாடும் கிடைக்கப் போவதில்லை, தமிழ்நாடும் கிடைக்கப் போவதில்லை. இதில் கோரிக்கை எதுவாக இருந்தால் என்ன?
இந்தக் கேள்விகளை அண்ணாவின் நீண்ட வாதங்களின் சாரமாக நாம் கொள்ளலாம். (கேள்விகளின் வடிவம் கட்டுரையாளருடையது.)
3. பிரிந்து போகின்ற உரிமையுடள் கூடிய தமிழ்நாடு என்ற சம்பத்தின் கோரிக்கையை இந்தியாவுடன் சேர்ந்திருப்பதற்கான உத்தியாக அண்ணா சித்திரித்தார். ‘இந்தியர் ஆகின்றனர்’ என்று தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களில் நையாண்டி செய்தார்.
(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் -140 (21.5.1961) கடிதம் 141 (28.5.1961)
திராவிட விடுதலையில் நம்பிக்கை இல்லா அண்ணா
திராவிட நாடு கோரிக்கையில் அண்ணாவுக்கே நம்பிக்கையில்லை ; அது கிடைக்காது என்று அவருக்கே தெரியும். ஆனால் கட்சித் தொண்டர்களுக்கு உணர்வூட்டுவதற்கும், சட்டசபையில் அதிக இடங்கள் பெறுவதன் மூலம் திராவிட நாட்டை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையூட்டி தேர்தல் வெற்றிகளைக் குவிப்பதற்கும் அண்ணா அதைப் பயன்படுத்தினார்.
திராவிட நாடு கோரிக்கையை விமர்சனம் செய்து பிரச்சினையை அதிகமாக்கிக் கொண்டிருந்த சம்பத்துடன் அண்ணா நடத்திய பேச்சுவார்த்தை பற்றிய பதிவு முக்கியமானது. இதைக் கண்ணதாசன் பதிவு செய்திருக்கிறார்:
“அண்ணா அவர்களுடன் இதைப் பற்றிப் பேசுவது என்று முடிவு செய்து வி.பி. ராமன் அவர்களுடைய வீட்டில் அண்ணா அவர்களைச் சந்தித்து திராவிட நாட்டுக் கொள்கையைக் கைவிட்டு விட்டால் கழகத்திற்கு நல்ல எதிர்காலம் என்று சம்பத் அவர்களும் மற்றவர்களும் பேசினார்கள். அதற்கு அண்ணா அவர்கள் கைவிட முடியாது என்று சொல்லவில்லை. அவர் சொன்னது:
காலம் வரும். காலத்தை எதிர்பார்த்துக் காரியம் செய்ய வேண்டும். ஒரு கட்டம் வரும்போது நானே அதை மாநாட்டில் அறிவித்து விடுகிறேன். அதுவரை அதை திடீரென்று வெளியிட்டால் நம்முடைய தோழனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு விடும். அதனால் அதுவரையில் இதைப் பற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம் என்பதே”
(மேற்கோள்: அருணன், அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி?, மதுரை, 2005, பக்.100)
கண்ணதாசனின் சொற்களை அப்படியே நாம் ஏற்கவில்லையென்றாலும் கூட, அதில் உண்மை இருப்பதையும், அப்படி ஒரு கூட்டம் நடைபெற்றதையும் சமகாலத்திய உணர்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். அண்ணா தமது அரசியல் இலக்கைப் பொறுத்த வரை நேர்மையாக இருக்கவில்லை ; திராவிடத் தேசியத்தை அண்ணா உயர்த்திப் பிடித்தது அறிந்தே செய்த தவறு.
அண்ணா திராவிட நாடு கோரிக்கையைத் தம் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் கைவிட்ட திறமையும் விதமும் விரிவாகத் தனி ஆய்வில் பேசத் தக்கவை. 1961இல் ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என்று முழங்கிய அண்ணா, 1962 இல் சீனப் படையயடுப்பைக் காரணம் காட்டி ‘நேருவின் கரத்தை வலுப்படுத்தியே தீருவோம்’ என்று முழங்கினார். 1963இல் இந்திய அரசியல் சட்டத்தில் 16ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் பதவியேற்கும் போது இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று இத்திருத்தம் கூறியது. பிரிவினை கோருபவர்களுக்கு சிறை என்றோ அபராதம் என்றோ ஏதும் கூறாத நிலையிலேயே அண்ணா தம் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். தேர்தலில் போட்டியிட்டுச் சட்ட மன்றம் செல்லும் உரிமையை திமுக காப்பாற்றிக் கொண்டது.
ஆனால், இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் திராவிடர்களுடைய தன்னுரிமைக்காக அண்ணா எடுத்து வைத்த வாதங்களும், எடுத்துக் கொண்ட முயற்சிகளும் பாராட்டத்தக்கவை. தாம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் அப்படியே இருப்பதாக அண்ணா தமிழ்நாடு சட்ட மன்றத்தில் கூறிய சொற்களின் நோக்கும், அதன் வரலாற்றுப் பரிமாணமும் விரிவாக ஆய்வு செய்யத் தக்கவை.
உலகெங்கும் விடுதலை பெற்ற தேசிய இனங்கள் ஆயினும் சரி, விடுதலை கோரிப் போராடும் தேசிய இனங்கள் ஆயினும் சரி, சிந்தனையாளர்களும், தலைவர்களும் சிந்திய விடுதலைச் சிந்தனைகள் வேர்விட்டுத் துளிர்விட்டு பெருமரமாகி உரிமைக் கனிகளைத் தன் நிழலில் தங்கும் அத்தேசிய இனத்தவர்க்கு வழங்கும்.
அண்ணா நட்டு வைத்த திராவிடத் தேசியம் வளர்ந்து விரிந்து தழைத்து மரமாக வில்லை; அது வளர்ப்புள்ள மரமன்று; அது ஏணி மரம் போன்றது. அதை நட்டு வைத்தவர்களைத் தேர்தல் படிகள் மூலம் பதவிப் பரணுக்கு ஏற்றி விட்டது. உயிர்ப்புள்ள தமிழ்த்தேசியத்தை மறுத்த அண்ணாவின் திராவிட தேசியம் வேர் பிடிக்கவில்லை; ஏணி மரம் வேர் விட்டதாக வரலாறு இல்லை.
(சமூகநீதித் தமிழ்த் தேசம் செப்டம்பர் 2009 இதழில் வெளிவந்த கட்டுரை).